Jump to content

புலம்பெயர் சமூகத்தால் புறக்கணிக்கப்பட வேண்டியவர்களா புலம்பெயர்ந்த முன்னாள் போராளிகள் ?


Recommended Posts

அண்மையில் பல முன்னாள் போராளிகள் ஆக்கங்களை யாழில் எழுதத் தொடங்கியிருந்தார்கள். அவர்கள் கடைசி வரையும் போர்க்களத்தில் நின்று வந்தவர்கள். ஆனால் அவர்களது பதிவுகளில் சிலர் தங்கள் ஞாபகங்களையும் பகிர்ந்து சில வரலாற்றுத் தவறுகள் வரக்கூடிய சம்பவங்களால் ஏற்பட்ட விவாதம் பெரும் சர்ச்சையை உண்டுபண்ணியது.

 

களத்தில் பல கருத்தாளர்கள் இந்தப் புதியவர்களை சந்தேகித்தும் இவர்களது வருகையை துரோகம் போலவும் கருத்தெழுதியிருந்தார்கள். இந்த எழுத்து சில போராளிகளை தொடர்ந்து எழுத விடாமல் மௌனமாக்கியுள்ளது.

 

சிலம் மீதுள்ள அதீத அன்பினால் புதிய கருத்தாளர்களை அவமதிப்பது மனங்களை நோகடிப்பது சந்தேகிப்பது அவர்களுக்கு முள்ளிவாய்க்கால் துயரைவிட கடுமையான தண்டனையாகவே இருக்கிறது. இங்கு  இவர்தான் கௌரவத்தக்கு உரியவர் என்ற தகுதி வகுப்பு சரியானதா ?

இல்லை இவர் முள்ளிவாய்க்காலில் இருந்து தப்பி புலம்பெயர்ந்ததால் இங்கு எழுதவோ வரலாறுகளைச் சொல்லவோ தகுதியில்லையென்று புறக்கணித்தல் அவர்களது மனங்களை நோகடித்தல் எவ்வகையில் நியாயமாகும் ?

 

இந்தப் புலம்பெயர்ந்த முள்ளிவாய்க்கால் வரையும் சென்று உயிர் மீண்டிருக்கிற ஒவ்வொரு போராளிக்குள்ளும் ஆயிரம் துயரங்கள் அவர்களோடு பழகுகிறேன். தொடர்புகளோடு இருக்கிறேன். அவர்களது மனநிலமையை புரிந்து கொண்ட வகையில் எனது ஆதங்கத்தை இங்கு வெளிப்படுத்துகிறேன்.

 

தங்கள் துயரைச் சொல்லக்கூட ஆட்களின்றி எத்தனையோ போராளிகள் ஐரோப்பிய வீதிகளிலும் அகதி முகாம்களிலும் அலைகிறார்கள். ஒரு காலம் எங்களால் கதாநாயகர்களாகவும் வீரத்தின் அடையாளமாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் இன்று சந்தேகத்துக்கு உரியவர்களாகவும் இந்த சமூகத்தால் ஏற்றுக் கொள்ள முடியாதவர்களாகவும் இருப்பதற்கான காரணி என்ன ? ஏன் நாங்கள் இப்படியானோம் ?

 

ஆரோக்கியமான கருத்தாடலை இத்தலைப்பில் மேற்கொள்வதன் மூலம் பல முன்னேற்றமான பணிகளையும் செய்ய முடியும் என்பது என் கருத்து.

 

உங்கள் கருத்துக்களை பகிருங்கள். மௌனமாக ஒதுங்கியிருக்கும் போராளிகள் மீளவும் நீங்கள் எழுத வர வேணும்.

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இது போன்று ஒரு ஆதங்கம் அன்றிலிருந்து எனது மனதிலும் ஆறாது உள்ளது சாந்தி.

 

ஆனால் அன்றைய  விவாதம்  சம்பந்தமாக கருத்துக்கூறிய  புதியவர்களின் எழுத்தில்  பெரும் மமதை இருந்தது.

எடுத்தெறிதல் இருந்தது.

ஒருவரை மட்டம் தட்டவேண்டும் என்ற குறியே  பிரதானமாக இருந்தது.

 

இதை நீங்களோ

மற்ற  கருத்தாளர்களோ

ஏன் எழுதிய புதியவர்களோ ஏற்பீர்களா???

 

அதனால்தான்  கடைசியில் எமக்குத்தெரிந்த ஒரு போராளியையாவது காப்பாற்றும்   நோக்கமாக

திரியைப்பூட்டும் படி கேட்டேன்.

உண்மையில் இதை எழுதும் பொது என்  கண்களில்  கண்ணீர்........... :(  :(  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சவுக்கியம் என்பார்கள்...ஒன்றும் பிரச்சினை இல்லை அக்கா.. இதெல்லாம் நீண்ட நாட்கள் நிலைக்க முடியா.. பல முன்னால் போராளிகள் மெதுமெதுவாக தம்மை கட்டி எழுப்பி பொருளாதாரத்தில் நிலையாக தொடங்குகிறகாலம் இது.. புலம்பெயர்ந்த போராளிகள் பலரும் மெதுமெதுவாக விசாகிடைத்து பொருளாதரத்தையும் ஊரில் உள்ள தமது குடும்பங்களையும் ஸ்திரப்படுத்துக்கொண்டிருக்கிறார்கள்..இன்னும் பல புலம்பெயர்ந்த போராளிகள் விசாக்களுக்கும் ஊரில் உள்ளவர்கள் நல்ல வேலைகளுக்கும் காத்திருக்கிறார்கள்.. எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் இரண்டாயிரம்களிலும் வந்து துரோகிப்பட்டம் கொடுக்கும் பல உறவுகளும் இந்த நிலையை தாண்டி வந்துதான் தம்மை பொருளாதாரத்தில் ஸ்திரப்படுத்திக்கொண்டு இப்பொழுது பட்டம் கொடுக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்கள்..காலம் மெதுமெதுவாக மாறும்..இந்த முன்னால் போராளிகளின் கைகளும் பொருளாதாரத்தால் மேம்படும்..காட்சிகள் மாறும்.. தீர்மானிக்கும் சக்திகளும் மாறும்..அதுவரைக்கும் இவைகள் அங்கங்கு மெதுவாக தொடரத்தான் செய்யும்..மெளனமாக ஒதுங்கி இருக்காமல் முன்னால் போராளிகள் தமது எண்ணங்களை எழுதவேண்டும்.. உங்கள் கருத்துக்களை பகிர்வதற்கு முன்னால் போராளிகள் என்பதை சொல்லி முட்டுக்கட்டைகள் வருகின்றன என்றால் அதுவும் ஒரு அடக்குமுறைதான் என்பதை புரிந்துகொண்டால் தொடர்ந்து எழுதுவீர்கள்..(இதை யழை மையப்படுத்தி எழுதவில்லை... யாழில் இப்படியான நிகழ்வுகள் குறைவு என்றுதான் சொல்லவேண்டும்.. ஆனால் வெளியே தமிழ் சமூகத்தில் இவற்றில் சிலதை அவதானித்ததில் எழுதுகிறேன்..)..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது எனக்குச் 'செய்தி' சாந்தி! :o

 

நீங்கள் சொல்லும் போராளிகளுக்கும், அவர்களது பதிவுகளுக்கும் யாழில் மிகுந்த வரவேற்பிருந்தது ! :D

 

அவர்கள் பதிவுகள் குறைந்த போது, அவர்கள் ஏன் தொடர்ந்து எழுதவில்லை எனவும் பல உறவுகள் கேள்வியெழுப்பி இருந்ததையும் கண்டேன்!

 

நீங்கள் கூறுவது போன்ற எதையும் நான் அவதானிக்கவில்லை!

 

இதை ஏன் ஒரு விவாதப் பொருளாக்க வேண்டும் என்றும், என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை!

 

எதற்கும் மற்றைய உறவுகளின் கருத்துக்களையும் பார்ப்போம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் ஒரு சந்தர்ப்பத்தில் யாழில் முன்னாள் போராளிகளின் அதிகரிப்பு சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது என்று எழுதியிருந்தேன் அது யாரையும் குறைசொல்ல அல்லது குற்றம் கண்டுபிடிக்க அல்ல முன்னாள் போராளிகள் என்ற பெயரில் கறுப்பாடுகள் வந்துவிடக் கூடாது

என்பதற்காகத் தான். நான் தெரிந்தோ, தெரியாமலோ எழுதியவை யாரையேனும் காயப்படுத்தியிருந்தால் அதற்காக உளப்பூர்வமான மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

இதற்கு என்ன கருத்து எழுதுவது? ஏற்கெனவே ஒருவன் தன்னைச் சுற்றி ஒரு 'இருப்பை' கட்டி எழுப்பி அகதி என்ற பெயரை மறந்திருக்கும்போது.. புதிதாக வருபவனால் அந்த இருப்புக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற மனோவியாதிதான் இதற்கெல்லாம் காரணம்.

தனியே இதில் மட்டுமல்ல.. பொதுவாக எந்த துறையை எடுத்தாலும் அடிப்படையில் இவ்வாறான மனோவியாதிகள் ஏராளம்.... தாராளம்!!

'வெற்றி வேண்டுமா போட்டுப் பாராடா எதிர்நீச்சல்' என்றவாறு போய்க்கொண்டே இருக்கவேண்டியதுதான்! :)

Link to comment
Share on other sites

சாந்தி அக்காக்கு ஒரு சலூட்  மிக முக்கிய கேள்வி உங்களுடையது ஒரு குறிப்பிட்ட வட்டம் தங்களுக்குள் நில் அல்லது நீ அவன் ஆளே என நோக்குவது வேதனையிலும் வேதனை ஒரு பக்கத்தை மட்டும் போற்றி புகழ்த்து எழுதி அல்லது நீ புறக்கணிக்க படுவாய் என்பதை பலர் மறைமுகமா புத்திசாலித்தனமான கேள்விகள் கேட்கிறோம் என நினைத்து சில விடைசொல்ல முடியா கேள்விகளை எடுத்து முன் வைப்பது எமக்கு பதில் நன்கு தெரிந்தாலும் சொல்ல முடியா சொன்னால் துரோகி ஆக்கபடுவோம் என்பது எமக்கு நன்கு தெரியும் அதனால் நாங்களா விலகவேண்டிய நிர்ப்பந்தம் வரும் என்கிற சூழ்ச்சிமத்தை புரிந்து வைத்து இருக்குறார்கள் என்பதுதான் உண்மை .

 

சிரித்த படி இருக்க புகைப்படம் போல் வாழ்க்கை இல்லை என்பதை அவர்கள் புரிய வேணும்

 

தங்களுக்கு வகுத்து வைத்து இருக்கும் எல்லையை விட்டு வெளியில் வந்து யன்னல் திறந்து பாருங்கள் மாற்றம் கண்கள் ஊடா மனதுக்கு தெரியும் .

 

நன்றி அக்கா உங்கள் முக்கிய பதிவுக்கு மிண்டும் ஒருமுறை . :(


இதற்கு என்ன கருத்து எழுதுவது? ஏற்கெனவே ஒருவன் தன்னைச் சுற்றி ஒரு 'இருப்பை' கட்டி எழுப்பி அகதி என்ற பெயரை மறந்திருக்கும்போது.. புதிதாக வருபவனால் அந்த இருப்புக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற மனோவியாதிதான் இதற்கெல்லாம் காரணம்.

தனியே இதில் மட்டுமல்ல.. பொதுவாக எந்த துறையை எடுத்தாலும் அடிப்படையில் இவ்வாறான மனோவியாதிகள் ஏராளம்.... தாராளம்!!

'வெற்றி வேண்டுமா போட்டுப் பாராடா எதிர்நீச்சல்' என்றவாறு போய்க்கொண்டே இருக்கவேண்டியதுதான்! :)

 

முந்தி வந்த செவியை பிந்தி வந்த கொம்பு மறைக்க கூடாது என்பதில் நாங்கள் தெளிவா இருக்குறம் என்பதே உண்மை .

Link to comment
Share on other sites

இதேபோல 80களில் இருந்து பலவிடயங்களை நான் வசிக்கும் ஜேர்மனியில் பார்த்திருக்கிறேன். இலங்கையில் முறையாக training college ஆசிரியர்களாகக் கடமையாற்றியவவர்ர்களைப் புறம்தள்ளி எவவ்வித ஆசிரியத் தகுதியும் அற்றவர்கள் ஆனா ஆவன்னா தெரியும் என்ற ஒரே காரணத்துக்காக தமிழாலயங்களில் கற்பித்த கற்பிக்கும் கொடுமைகளை எல்லாம் கண்டிருக்கிறேன். இவ்வாறு பலவற்றை கூற முடியும். ஆனால் இவற்றால் எதுவுமே விளையப் போவதில்லை.. எனினும் சில பதிவுகளுக்காகவாவது நான் எழுதும் தொடரில் வரலாம் விரிவாக. :)

Link to comment
Share on other sites

உலகில் விடுதலை வீரர்களையும், போர் வீரர்களையும் மதித்து அவர்களை கதாநாயகர்களாக போற்றி அவர்களுக்கென்றே ஒரு நாளை ஒதுக்கி மரியாதை செய்யும் பழக்க வழக்கம் எங்கும் உள்ளது. அதில் உயிருடன் இருக்கும் முன்னால் வீரர்களை தனியாக கெளரவிக்கும் பண்பாடும் இருக்கின்றது. அதனுடன் ஒப்பிடும் போது, நாம் அந்தளவுக்கு ஒன்றும் செய்வதில்லையே என்ற ஆதங்கம் எனக்குள் அடிக்கடி ஏற்படுவதுண்டு.

 

ஆனால், எனக்கு இதற்கும் அப்பால் ஒரு முக்கிய கேள்வி முன்னாள் போராளிகள் என்று தம்மை அடையாளப் படுத்துகின்றவர்கள் மீது உண்டு.

 

சாந்தி, ஒருவர் வந்து தான் ஒரு முன்னால் போராளி என்று கூறிவிட்டு எழுதும் போது உண்மையிலேயே அவர் முன்னால் போராளியா என்று எவ்வாறு தெளிவாக அறிந்து கொள்வது? சாத்திரி / தயா போன்று தம்மை இன்னார் என்று மிக தெளிவாக இனம்காட்டி எழுதுபவர்கள் மீது இக் கேள்வி வராது, ஆனால் முகம் காட்ட/ அடையாளம் காட்ட முடியாத ஒரு அரசியல் சூழ்நிலையைக் காரணமாகக் காட்டி முகம் மறைத்துக் கொண்டு ஒருவர் தான் முன்னால் போராளி என்று சொல்லும் போது எந்தளவு தூரத்துக்கு அதனை நம்பமுடியும்?

 

என் கேள்வி சில நேரம் உங்களுக்கு கோபத்தினைக் கூட கிளப்பலாம். நீங்கள் குறிப்பிட்ட அந்த திரியினை ஆரம்பத்தில் இருந்தே அனுமதிப்பதில் நான் தயக்கமாக இருந்தேன். ஆனால் ஏனைய நிர்வாக உறுப்பினர்களுக்கு பிரச்சனை இருக்கவில்லை என்பதால் அத் திரி கொஞ்ச நாட்களுக்கு தொடரப்பட்டது. என்னுடைய முக்கிய கேள்வியாக இருந்ததே ஒருவர் முன்னால் போராளி என்று விட்டு ஒரு வரலாற்றினை எழுதும் போது அவர் உண்மையிலேயே முன்னால் போராளி தான் என்று எவ்வாறு நம்புவது என்பதுதான்.  என் சமூகத்தினை நன்கு புரிந்து கொண்டமையால் தான் இந்தக் கேள்வி எழுகின்றது.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் விடுதலை வீரர்களையும், போர் வீரர்களையும் மதித்து அவர்களை கதாநாயகர்களாக போற்றி அவர்களுக்கென்றே ஒரு நாளை ஒதுக்கி மரியாதை செய்யும் பழக்க வழக்கம் எங்கும் உள்ளது. அதில் உயிருடன் இருக்கும் முன்னால் வீரர்களை தனியாக கெளரவிக்கும் பண்பாடும் இருக்கின்றது. அதனுடன் ஒப்பிடும் போது, நாம் அந்தளவுக்கு ஒன்றும் செய்வதில்லையே என்ற ஆதங்கம் எனக்குள் அடிக்கடி ஏற்படுவதுண்டு.

 

ஆனால், எனக்கு இதற்கும் அப்பால் ஒரு முக்கிய கேள்வி முன்னாள் போராளிகள் என்று தம்மை அடையாளப் படுத்துகின்றவர்கள் மீது உண்டு.

 

சாந்தி, ஒருவர் வந்து தான் ஒரு முன்னால் போராளி என்று கூறிவிட்டு எழுதும் போது உண்மையிலேயே அவர் முன்னால் போராளியா என்று எவ்வாறு தெளிவாக அறிந்து கொள்வது? சாத்திரி / தயா போன்று தம்மை இன்னார் என்று மிக தெளிவாக இனம்காட்டி எழுதுபவர்கள் மீது இக் கேள்வி வராது, ஆனால் முகம் காட்ட/ அடையாளம் காட்ட முடியாத ஒரு அரசியல் சூழ்நிலையைக் காரணமாகக் காட்டி முகம் மறைத்துக் கொண்டு ஒருவர் தான் முன்னால் போராளி என்று சொல்லும் போது எந்தளவு தூரத்துக்கு அதனை நம்பமுடியும்?

 

என் கேள்வி சில நேரம் உங்களுக்கு கோபத்தினைக் கூட கிளப்பலாம். நீங்கள் குறிப்பிட்ட அந்த திரியினை ஆரம்பத்தில் இருந்தே அனுமதிப்பதில் நான் தயக்கமாக இருந்தேன். ஆனால் ஏனைய நிர்வாக உறுப்பினர்களுக்கு பிரச்சனை இருக்கவில்லை என்பதால் அத் திரி கொஞ்ச நாட்களுக்கு தொடரப்பட்டது. என்னுடைய முக்கிய கேள்வியாக இருந்ததே ஒருவர் முன்னால் போராளி என்று விட்டு ஒரு வரலாற்றினை எழுதும் போது அவர் உண்மையிலேயே முன்னால் போராளி தான் என்று எவ்வாறு நம்புவது என்பதுதான்.  என் சமூகத்தினை நன்கு புரிந்து கொண்டமையால் தான் இந்தக் கேள்வி எழுகின்றது.

இது தான்  எனது நிலைப்பாடும்.

அதனாலேயே

தெரிந்த போராளிக்காக திரியைப்பூட்டும்படி கேட்டேன்

அதைத்தான்  இப்படியான சூழலில் எம்மால்  செய்யமுடியும்.

 

நன்றி  நிழலி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாந்தி, ஒருவர் வந்து தான் ஒரு முன்னால் போராளி என்று கூறிவிட்டு எழுதும் போது உண்மையிலேயே அவர் முன்னால் போராளியா என்று எவ்வாறு தெளிவாக அறிந்து கொள்வது? சாத்திரி / தயா போன்று தம்மை இன்னார் என்று மிக தெளிவாக இனம்காட்டி எழுதுபவர்கள் மீது இக் கேள்வி வராது, ஆனால் முகம் காட்ட/ அடையாளம் காட்ட முடியாத ஒரு அரசியல் சூழ்நிலையைக் காரணமாகக் காட்டி முகம் மறைத்துக் கொண்டு ஒருவர் தான் முன்னால் போராளி என்று சொல்லும் போது எந்தளவு தூரத்துக்கு அதனை நம்பமுடியும்?

 

என் கேள்வி சில நேரம் உங்களுக்கு கோபத்தினைக் கூட கிளப்பலாம். என்னுடைய முக்கிய கேள்வியாக இருந்ததே ஒருவர் முன்னால் போராளி என்று விட்டு ஒரு வரலாற்றினை எழுதும் போது அவர் உண்மையிலேயே முன்னால் போராளி தான் என்று எவ்வாறு நம்புவது என்பதுதான்.  என் சமூகத்தினை நன்கு புரிந்து கொண்டமையால் தான் இந்தக் கேள்வி எழுகின்றது.

 

 

எனது கேள்வியும் இதுவே சாந்தி அக்கா.

 

Link to comment
Share on other sites

உலகில் விடுதலை வீரர்களையும், போர் வீரர்களையும் மதித்து அவர்களை கதாநாயகர்களாக போற்றி அவர்களுக்கென்றே ஒரு நாளை ஒதுக்கி மரியாதை செய்யும் பழக்க வழக்கம் எங்கும் உள்ளது. அதில் உயிருடன் இருக்கும் முன்னால் வீரர்களை தனியாக கெளரவிக்கும் பண்பாடும் இருக்கின்றது. அதனுடன் ஒப்பிடும் போது, நாம் அந்தளவுக்கு ஒன்றும் செய்வதில்லையே என்ற ஆதங்கம் எனக்குள் அடிக்கடி ஏற்படுவதுண்டு.

 

ஆனால், எனக்கு இதற்கும் அப்பால் ஒரு முக்கிய கேள்வி முன்னாள் போராளிகள் என்று தம்மை அடையாளப் படுத்துகின்றவர்கள் மீது உண்டு.

 

சாந்தி, ஒருவர் வந்து தான் ஒரு முன்னால் போராளி என்று கூறிவிட்டு எழுதும் போது உண்மையிலேயே அவர் முன்னால் போராளியா என்று எவ்வாறு தெளிவாக அறிந்து கொள்வது? சாத்திரி / தயா போன்று தம்மை இன்னார் என்று மிக தெளிவாக இனம்காட்டி எழுதுபவர்கள் மீது இக் கேள்வி வராது, ஆனால் முகம் காட்ட/ அடையாளம் காட்ட முடியாத ஒரு அரசியல் சூழ்நிலையைக் காரணமாகக் காட்டி முகம் மறைத்துக் கொண்டு ஒருவர் தான் முன்னால் போராளி என்று சொல்லும் போது எந்தளவு தூரத்துக்கு அதனை நம்பமுடியும்?

 

என் கேள்வி சில நேரம் உங்களுக்கு கோபத்தினைக் கூட கிளப்பலாம். நீங்கள் குறிப்பிட்ட அந்த திரியினை ஆரம்பத்தில் இருந்தே அனுமதிப்பதில் நான் தயக்கமாக இருந்தேன். ஆனால் ஏனைய நிர்வாக உறுப்பினர்களுக்கு பிரச்சனை இருக்கவில்லை என்பதால் அத் திரி கொஞ்ச நாட்களுக்கு தொடரப்பட்டது. என்னுடைய முக்கிய கேள்வியாக இருந்ததே ஒருவர் முன்னால் போராளி என்று விட்டு ஒரு வரலாற்றினை எழுதும் போது அவர் உண்மையிலேயே முன்னால் போராளி தான் என்று எவ்வாறு நம்புவது என்பதுதான்.  என் சமூகத்தினை நன்கு புரிந்து கொண்டமையால் தான் இந்தக் கேள்வி எழுகின்றது.

 

முன்னாள் போராளிகள் என்பதுக்கு தகட்டிலக்கம் படையணி சேர்த்த காலம் விலகிய காலம் எல்லாம் ஒரு அறிக்கையா தந்து விட்டு எதை வேணும் என்றாலும் எப்படி யான புனைகதை என்றாலும் எழுதினா அதை இந்த சமூகம் நம்புமா ஏனெனில் வன்னியின் சுழலில் வாழ்த்த அனைவருக்கும் ஆயுதம் பற்றிய அறிவு போரியல் பற்றிய அறிவு சண்டைகள் பற்றிய அறிவு எந்த சண்டையை எந்த தளபதி வழிநடத்தி போனார் என்பது தொடக்கம் அக்குவேறா ஆணி வேறா தெரியும் இதில் பொய்களை உடனம் பிடிப்பார் என்பது மிக பழைய போராளிகளுக்கு தெரியாமல் இருப்பது தான் கவலை .

 

வாதம் அதுவல்ல கருத்தை முறியடிக்க அல்லது தங்களின் கட்டுக்குள் கொண்டுவர இங்கு சிலர் வைக்கும் சொல்லாடல் மிக தவறு அதி உச்ச விசுவாசிகளாக தங்களை காட்டுவதும் மற்றவனை பார்வையாளனா பார்ப்பது நிறுத்த படவேண்டும் .

 

Link to comment
Share on other sites

 

ஆனால், எனக்கு இதற்கும் அப்பால் ஒரு முக்கிய கேள்வி முன்னாள் போராளிகள் என்று தம்மை அடையாளப் படுத்துகின்றவர்கள் மீது உண்டு.

 

சாந்தி, ஒருவர் வந்து தான் ஒரு முன்னால் போராளி என்று கூறிவிட்டு எழுதும் போது உண்மையிலேயே அவர் முன்னால் போராளியா என்று எவ்வாறு தெளிவாக அறிந்து கொள்வது? சாத்திரி / தயா போன்று தம்மை இன்னார் என்று மிக தெளிவாக இனம்காட்டி எழுதுபவர்கள் மீது இக் கேள்வி வராது, ஆனால் முகம் காட்ட/ அடையாளம் காட்ட முடியாத ஒரு அரசியல் சூழ்நிலையைக் காரணமாகக் காட்டி முகம் மறைத்துக் கொண்டு ஒருவர் தான் முன்னால் போராளி என்று சொல்லும் போது எந்தளவு தூரத்துக்கு அதனை நம்பமுடியும்?

 

என் கேள்வி சில நேரம் உங்களுக்கு கோபத்தினைக் கூட கிளப்பலாம். நீங்கள் குறிப்பிட்ட அந்த திரியினை ஆரம்பத்தில் இருந்தே அனுமதிப்பதில் நான் தயக்கமாக இருந்தேன். ஆனால் ஏனைய நிர்வாக உறுப்பினர்களுக்கு பிரச்சனை இருக்கவில்லை என்பதால் அத் திரி கொஞ்ச நாட்களுக்கு தொடரப்பட்டது. என்னுடைய முக்கிய கேள்வியாக இருந்ததே ஒருவர் முன்னால் போராளி என்று விட்டு ஒரு வரலாற்றினை எழுதும் போது அவர் உண்மையிலேயே முன்னால் போராளி தான் என்று எவ்வாறு நம்புவது என்பதுதான்.  என் சமூகத்தினை நன்கு புரிந்து கொண்டமையால் தான் இந்தக் கேள்வி எழுகின்றது.

இதில் முதலில் நிழலியின் கருத்துக்கு எனது பதில்.

நிழலி இத்திரியை ஆரம்பித்ததன் முதல் நோக்கம் கோவப்படவோ அல்லது கொழுத்தியெரிக்கவோ அல்ல. நிதானமாக கருத்தாடவும் இனிமேலும் நீ முள்ளிவாய்க்காலில் இருந்து எப்பிடி வந்தாய் அதன் வழியென்ன உன்னை எப்படி நம்புவது ? அல்லது ஒரு வரலாற்றுத்தவறை சுட்டிக்காட்டினால் அதற்கு பதில் சொல்லாமல் அந்தச்சமரில் நின்றாயா இந்தச் சமரில் எந்தச் சென்றியில் நின்றாய் என ஒருவரின் கருத்தை முறியடிக்க அல்லது தன்னை நியாயப்படுத்த பழி சுமத்தும் தன்மை இல்லாது போக வேணும். அதற்காகவே இங்கு எழுதுகிறேன்.

 

முதலில் இங்கு நான் பெயர்கள் குறிப்பிடாத போராளிகள் எந்த இடத்திலும் தங்கள் எழுத்துக்கள் தவிர தங்களை முன்னாள் போராளிகள் என்று அடையாளப்படுத்தியதுமில்லை. அந்த கௌரவத்தை யாரிடமும் எதிர்பார்க்கவும் இல்லை.  ஆனால் அவர்கள் பழிவாங்கப்பட்டது போல பல கருத்தாளர்களால் அவமதிக்கப்பட்டார்கள். இந்த அவமதிப்பு அவர்களை ஒரு விரக்தி நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. அதற்கான காரணிகளாக பல கருத்தாளர்கள் இருந்திருக்கிறோம்.

நிழலி நீங்கள் வாழும் வீதியில் ஒரு தழிழர் ஒரு தவறைச் செய்துவிட்டால் அந்த வீதியில் வாழும் உங்களையும் சேர்த்து அந்த வீதியில் வாழும் தமிழர்கள் அப்பிடித்தான் என்ற பார்வையில் உங்களையும் சேர்த்து பழிக்கப்படும் போது உங்களுக்கு இயல்பாக வரும் ஆதங்கமும் விரக்தியுமே இங்கும் என்பதனை புரிந்து கொள்ளுங்கள்.

தங்களை மூச்சுக்கு மூச்சு முன்னாள் போராளிகள் என பிரகடனப்படுத்துவோர் மட்டுமே நம்பிக்கைக்கு உரியவர்கள் என்ற உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ள  முடியவில்லை. ஆனால் மறுத்து நான் இங்கு இன்னொரு தாக்குதல் வாங்க தயாராகவும் இல்லை.

 

சாவடையாதவன் முழுமையான போராளி இல்லையென்று கருத்தை எழுதிக்கொண்டு தானொரு போராளியென்று தன்னை நிறுவுகிற ஒருவர் மீதுள்ள நம்பிக்கையை முகம்காட்ட முடியாத இக்கட்டில் அன்றாட வாழ்வோடு போராடும் ஒரு அகதிப்போராளி அதுவும் கடைசிவரை மண்ணுக்குள் நின்று வந்து இன்று ஏதோ உயிரோடு வந்தாயே என அவர்களை நேசித்தவர்கள் ஆறுதல்படும் நேரத்தில் நீ முன்னாளா எப்படி நம்ப என்ற கேள்விக்கான பதிலை இப்போதைக்கு இந்தப் போராளிகள் யாராலும் தர முடியாது.

காலம் இவர்களுக்கும் ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுக்கும் வரை நான் காத்திருக்கத் தயாராகவே இவர்களை இந்த களத்தில் எழுதுங்கள் என வேண்டுகிறேன்.

 

80களில் , 90களில் துண்டு குடுத்து வெளியேறியவர்கள் 2009 வரையும் கடைசிவரை நடந்தது இதுதான் எனச் சொல்வதையும் எழுதுவதையும் நம்பும் நாங்கள் இறுதிவரை நின்று உயிர்களை மட்டும் கொண்டு வந்து இன்னும் போராட்டம் முடியாமல் தினம் தினம் நோயோடும் பழைய நினைவுகளோடு அல்லாட முடியாத மனஅழுத்தம் இன்ன பிற நோய்களோடும் அவலப்படுகிறவர்களை நீ முன்னாள் போராளியா எப்படி நம்ப உன்னையென்று கேட்டு அவமதிக்காமல் அவர்களையும் சக கருத்தாளராக சக மனிதராக மதித்தால் போதும். அதுவே அவர்களது எதிர்பார்ப்பும்.

 

ஒவ்வொருவராக அழைத்து நான் முன்னாள் போராளி என்னை ஏற்றுக் கொள்ளென்று எந்தப்போராளியும் தன்னை அடையாளம் காட்டி எழுதும் நிலமையை இன்னும் இந்த மேற்குலகமும் கொடுக்கவில்லை. நாங்களும் கொடுக்கவில்லை.

 

Link to comment
Share on other sites

 

 

வாதம் அதுவல்ல கருத்தை முறியடிக்க அல்லது தங்களின் கட்டுக்குள் கொண்டுவர இங்கு சிலர் வைக்கும் சொல்லாடல் மிக தவறு அதி உச்ச விசுவாசிகளாக தங்களை காட்டுவதும் மற்றவனை பார்வையாளனா பார்ப்பது நிறுத்த படவேண்டும் .

இது நீண்ட காலமாக நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது .உண்மைகள் உறங்குவதில்லை .

Link to comment
Share on other sites

இங்கு உதாரணத்துக்கு ஒரு போராளியை சொல்கிறேன். ( என்னையும் நீ காட்டிக் குடுத்திட்டியோ அக்காச்சி என அடிக்க வராதையடா தம்பி பகலவன்)
நகைச்சுவையாக எழுதும் சுவாரசியமான எழுத்துக்களை எழுதும் ஒருவனாகவே பகலவனை இங்கு பலரும் அறிந்திருப்பீர்கள்.பகலவனால் பயிற்றுவிக்கப்பட்டவர்கள் பயிற்சியளிக்கப்பட்டவர்கள் ஒன்றாய் வாழ்ந்தவர்கள் என பலர் ஆனால் யாராலும் பகலவன் அறியப்படாத ஒரு முன்னாள் போராளி.

பகலவன் எந்த இடத்திலும் தன்னை ஒரு முன்னாள் போராளி என அடையாளப்படுத்தவில்லை. ஆனால் அவன் இறுதிவரை சாக்களத்தில் நின்றவன். தன்கையால் சாவுகளை அழைந்தவன் , தனது நேசிப்புக்கு உள்ளான எல்லாத்தையும் எல்லாரையும் இழந்தவன். ஆனால் அவனால் நான் இன்னார் இப்படி இருந்தேன் என அடையாளம் காட்ட முடியாது. அவனை அறிந்தவர்களுக்கு மட்டுமே அவனது கண்ணீரின் கனமும் அவனால் உறங்க முடியாது அந்தரிக்கும் நித்திரையிழப்பையும் அவன் தனக்குள்ளே ஒடுங்கிப் பொவதையும் அறிய முடியும்.

 

எங்களை நியாயப்படுத்துவதற்காக இத்தகையவர்களை காயப்படுத்தாமல் கருத்தாடலை செய்யுங்கள். அது போதும்.


நானும் ஒரு சந்தர்ப்பத்தில் யாழில் முன்னாள் போராளிகளின் அதிகரிப்பு சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது என்று எழுதியிருந்தேன் அது யாரையும் குறைசொல்ல அல்லது குற்றம் கண்டுபிடிக்க அல்ல முன்னாள் போராளிகள் என்ற பெயரில் கறுப்பாடுகள் வந்துவிடக் கூடாது

என்பதற்காகத் தான். நான் தெரிந்தோ, தெரியாமலோ எழுதியவை யாரையேனும் காயப்படுத்தியிருந்தால் அதற்காக உளப்பூர்வமான மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன்.

 

கறுப்பாடுகளை நாங்கள் இராமர்களாக நம்பிவிடுகிறோம். கறுப்பாடுகள் கள்ள மௌனத்தோடு காரியத்தை சாதித்துக் கொண்டு போகிறது. நாங்கள் நேர்மையானவர்களையே திரும்பத்திரும்ப சந்தேகிக்கிறோம்.

 

Link to comment
Share on other sites

இது போன்று ஒரு ஆதங்கம் அன்றிலிருந்து எனது மனதிலும் ஆறாது உள்ளது சாந்தி.

 

ஆனால் அன்றைய  விவாதம்  சம்பந்தமாக கருத்துக்கூறிய  புதியவர்களின் எழுத்தில்  பெரும் மமதை இருந்தது.

எடுத்தெறிதல் இருந்தது.

ஒருவரை மட்டம் தட்டவேண்டும் என்ற குறியே  பிரதானமாக இருந்தது.

 

இதை நீங்களோ

மற்ற  கருத்தாளர்களோ

ஏன் எழுதிய புதியவர்களோ ஏற்பீர்களா???

 

அதனால்தான்  கடைசியில் எமக்குத்தெரிந்த ஒரு போராளியையாவது காப்பாற்றும்   நோக்கமாக

திரியைப்பூட்டும் படி கேட்டேன்.

உண்மையில் இதை எழுதும் பொது என்  கண்களில்  கண்ணீர்........... :(  :(  :(

 

புதியவர்கள் இந்தக் களத்தில் சாய்ந்து போனால் தான் தாங்களும் நிலைக்கலாம் என்ற உண்மையை உணராதவர்கள். அதனால் நேர்மையாக எழுதிய கருத்தை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது போனது. இதைக்கூட மமதை என்று தயவு செய்து கருதிவிடாதீர்கள். மிகைப்படுத்தலையே பார்த்துப்பழகிய கண்களுக்கு யதார்த்தத்தை புரிந்து கொள்ள கடினமாகவே இருக்கும்.

 

அண்ணா நீங்கள் ஒருவரைக் காத்த நிம்தியில் இருக்கிறீர்கள். இங்கு எத்தனையோ பேரை காயப்படுத்தியது மட்டுமன்றி அவர்களை ஒதுங்கவுமல்லவா செய்து விட்டீர்கள்.

 

இங்கு அவமதிக்கப்பட்டு அவர்கள் ஒவ்வொருவரும் வாழ்ந்த வாழ்வை கேள்விக்குள்ளாக்கி சந்தேகித்த கருத்துக்களால் இதெல்லாம் வேண்டாமென ஒதுங்கிப்போனவர்களுக்காக நானும் உங்கள் போல கண்ணீரோடு அவர்களுக்காக இங்கு வாதாடுகிறேன் புரிந்து கொள்ளுங்கள்.

 

இது எனக்குச் 'செய்தி' சாந்தி! :o

 

நீங்கள் சொல்லும் போராளிகளுக்கும், அவர்களது பதிவுகளுக்கும் யாழில் மிகுந்த வரவேற்பிருந்தது ! :D

 

அவர்கள் பதிவுகள் குறைந்த போது, அவர்கள் ஏன் தொடர்ந்து எழுதவில்லை எனவும் பல உறவுகள் கேள்வியெழுப்பி இருந்ததையும் கண்டேன்!

 

நீங்கள் கூறுவது போன்ற எதையும் நான் அவதானிக்கவில்லை!

 

இதை ஏன் ஒரு விவாதப் பொருளாக்க வேண்டும் என்றும், என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை!

 

எதற்கும் மற்றைய உறவுகளின் கருத்துக்களையும் பார்ப்போம்!

 

அடிக்கடி பல திரிகளில் 2009 வரை களத்தில் நின்று வந்த போராளிகள் மீது எழுப்பப்படும் சந்தேகங்கள் பல இடங்களில் விவாதமாகியிருக்கிறது அதற்காகவே இந்தத் திரி புங்கை. உங்கள் கருத்திற்கு நன்றிகள்.

 

Link to comment
Share on other sites

இதில் முதலில் நிழலியின் கருத்துக்கு எனது பதில்.

நிழலி இத்திரியை ஆரம்பித்ததன் முதல் நோக்கம் கோவப்படவோ அல்லது கொழுத்தியெரிக்கவோ அல்ல. நிதானமாக கருத்தாடவும் இனிமேலும் நீ முள்ளிவாய்க்காலில் இருந்து எப்பிடி வந்தாய் அதன் வழியென்ன உன்னை எப்படி நம்புவது ? அல்லது ஒரு வரலாற்றுத்தவறை சுட்டிக்காட்டினால் அதற்கு பதில் சொல்லாமல் அந்தச்சமரில் நின்றாயா இந்தச் சமரில் எந்தச் சென்றியில் நின்றாய் என ஒருவரின் கருத்தை முறியடிக்க அல்லது தன்னை நியாயப்படுத்த பழி சுமத்தும் தன்மை இல்லாது போக வேணும். அதற்காகவே இங்கு எழுதுகிறேன்.

 

முதலில் இங்கு நான் பெயர்கள் குறிப்பிடாத போராளிகள் எந்த இடத்திலும் தங்கள் எழுத்துக்கள் தவிர தங்களை முன்னாள் போராளிகள் என்று அடையாளப்படுத்தியதுமில்லை. அந்த கௌரவத்தை யாரிடமும் எதிர்பார்க்கவும் இல்லை.  ஆனால் அவர்கள் பழிவாங்கப்பட்டது போல பல கருத்தாளர்களால் அவமதிக்கப்பட்டார்கள். இந்த அவமதிப்பு அவர்களை ஒரு விரக்தி நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. அதற்கான காரணிகளாக பல கருத்தாளர்கள் இருந்திருக்கிறோம்.

நிழலி நீங்கள் வாழும் வீதியில் ஒரு தழிழர் ஒரு தவறைச் செய்துவிட்டால் அந்த வீதியில் வாழும் உங்களையும் சேர்த்து அந்த வீதியில் வாழும் தமிழர்கள் அப்பிடித்தான் என்ற பார்வையில் உங்களையும் சேர்த்து பழிக்கப்படும் போது உங்களுக்கு இயல்பாக வரும் ஆதங்கமும் விரக்தியுமே இங்கும் என்பதனை புரிந்து கொள்ளுங்கள்.

தங்களை மூச்சுக்கு மூச்சு முன்னாள் போராளிகள் என பிரகடனப்படுத்துவோர் மட்டுமே நம்பிக்கைக்கு உரியவர்கள் என்ற உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ள  முடியவில்லை. ஆனால் மறுத்து நான் இங்கு இன்னொரு தாக்குதல் வாங்க தயாராகவும் இல்லை.

 

சாவடையாதவன் முழுமையான போராளி இல்லையென்று கருத்தை எழுதிக்கொண்டு தானொரு போராளியென்று தன்னை நிறுவுகிற ஒருவர் மீதுள்ள நம்பிக்கையை முகம்காட்ட முடியாத இக்கட்டில் அன்றாட வாழ்வோடு போராடும் ஒரு அகதிப்போராளி அதுவும் கடைசிவரை மண்ணுக்குள் நின்று வந்து இன்று ஏதோ உயிரோடு வந்தாயே என அவர்களை நேசித்தவர்கள் ஆறுதல்படும் நேரத்தில் நீ முன்னாளா எப்படி நம்ப என்ற கேள்விக்கான பதிலை இப்போதைக்கு இந்தப் போராளிகள் யாராலும் தர முடியாது.

காலம் இவர்களுக்கும் ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுக்கும் வரை நான் காத்திருக்கத் தயாராகவே இவர்களை இந்த களத்தில் எழுதுங்கள் என வேண்டுகிறேன்.

 

80களில் , 90களில் துண்டு குடுத்து வெளியேறியவர்கள் 2009 வரையும் கடைசிவரை நடந்தது இதுதான் எனச் சொல்வதையும் எழுதுவதையும் நம்பும் நாங்கள் இறுதிவரை நின்று உயிர்களை மட்டும் கொண்டு வந்து இன்னும் போராட்டம் முடியாமல் தினம் தினம் நோயோடும் பழைய நினைவுகளோடு அல்லாட முடியாத மனஅழுத்தம் இன்ன பிற நோய்களோடும் அவலப்படுகிறவர்களை நீ முன்னாள் போராளியா எப்படி நம்ப உன்னையென்று கேட்டு அவமதிக்காமல் அவர்களையும் சக கருத்தாளராக சக மனிதராக மதித்தால் போதும். அதுவே அவர்களது எதிர்பார்ப்பும்.

 

ஒவ்வொருவராக அழைத்து நான் முன்னாள் போராளி என்னை ஏற்றுக் கொள்ளென்று எந்தப்போராளியும் தன்னை அடையாளம் காட்டி எழுதும் நிலமையை இன்னும் இந்த மேற்குலகமும் கொடுக்கவில்லை. நாங்களும் கொடுக்கவில்லை.

 

 

சாந்தி,

 

என் பதிலை எழுதியதன் காரணமும் கோபப்படவோ அல்லது கொழித்தியெறிக்கவோ அல்ல.

 

ஒரு புனைகதையையோ, அல்லது புனைவு மிக்க ஒரு கவிதையையோ எழுதும் போது தான் இன்னார் என்பதன் அடையாளத்தினை காட்ட வேண்டிய அவசியம் அந்த ஆக்கத்தினை எழுதியவருக்கு இல்லை. ஆனால், ஒரு வரலாற்றினை எழுத முற்படும் போது, ஒரு போராட்ட இயக்கத்தின் தலைவர் பற்றி எழுத முற்படும் போது எழுதியவர் மீதான நம்பகத்தன்மை கண்டிப்பாக அவசியம். அது ஒரு முன்நிபந்தனையாகவும் வைக்கப்படல் வேண்டும். இல்லாவிடின் எவராலும் தான் - முற்றிலும் சம்பந்தப்படாத ஒருவராலும் கூட - கேட்டுத் தெரிந்த, வாசித்து அறிந்த விடயங்களை வைத்து வரலாறு என்ற போர்வையில் எதனையும் எழுதி செல்ல முடியும்.

 

ஒரு கருத்துக்கு பதில் கருத்து எழுதும் போது கடைப்பிடிக்க வேண்டிய நாகரீகம் பற்றிய புரிதல்கள் இல்லாமைதான் எழுதியவர் மீதான தனிமனித தாக்குதல்களாக, "நீ அது செய்தாயா, அங்கு நின்றாயா" என்று பரிணமிக்கின்றது. இது நம்பகத்தன்மை சார்ந்த விடயம் அல்ல. கருத்துக்கு பதில் கருத்து வைக்கும் நாகரீகம் சம்பந்தமான விடயம்.

 

நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்றால், ஒருவர் தான் முன்னால் போராளி என்று கூறிவிட்டு எழுதியதை அப்படியே நம்ப வேண்டும். அவர் உண்மையிலேயே முன்னால் போராளியா என சரிபார்ப்பது கூட தவறு. எதிர்த்து ஒரு கேள்வியும் கேட்கக் கூடாது என்று. மன்னிக்கவும், ஒருபோதும் என்னால் இந்த வாதத்தினை ஏற்றுக் கொள்ள முடியாது.

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி

 

தங்களது நேரத்தை தொடர்ந்து வீணாக்கவிரும்பவில்லை

 

யாழ்  களம் போன்ற முகமறியாத ஒரு கருத்துக்களத்தில்

முன்பின் எழுதாத ஒருவர்

அல்லது முன்பே பலமுறை தாயகம்  சம்பந்தமாக தாறுமாறாக எழுதப்பட்ட போது

அதை தட்டிக்கேட்காத ஒருவர்

திடீரென ஒரு குறிப்பிட்ட திரியில் மட்டும்

ஒரு குறிப்பிட்ட நபரை மட்டும் குறி  வைத்து

ஒரு வழித்தாக்குதல் மட்டுமே செய்தது சந்தேகத்தக்குள்ளாகியது என்பதே உண்மை.

இதை இங்கு எழுதும் தாயக விரும்பிகள் பலரும் அறிவர்.

 

எனவே அவர்கள்  தொடர்ந்து இங்கு எழுதுவதன் மூலம் தங்களது தாயகம் சம்பந்தமானதும்

தமிழர் தேசியம்  சம்பந்தமானதுமான கருத்துக்களை  பதிவதனூடு மட்டுமே

அவர்களை நாம் புரிந்து கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியும்.

இல்லாது விட்டால்

திடீரென மீண்டும இது போன்று ஒரு திரிக்கு மட்டும் திரும்பி  வரும் போதும் அதேநிலையே  ஏற்படும்

இது தவிர்க்கமுடியாதது.

 


சாந்தி,

 

என் பதிலை எழுதியதன் காரணமும் கோபப்படவோ அல்லது கொழித்தியெறிக்கவோ அல்ல.

 

ஒரு புனைகதையையோ, அல்லது புனைவு மிக்க ஒரு கவிதையையோ எழுதும் போது தான் இன்னார் என்பதன் அடையாளத்தினை காட்ட வேண்டிய அவசியம் அந்த ஆக்கத்தினை எழுதியவருக்கு இல்லை. ஆனால், ஒரு வரலாற்றினை எழுத முற்படும் போது, ஒரு போராட்ட இயக்கத்தின் தலைவர் பற்றி எழுத முற்படும் போது எழுதியவர் மீதான நம்பகத்தன்மை கண்டிப்பாக அவசியம். அது ஒரு முன்நிபந்தனையாகவும் வைக்கப்படல் வேண்டும். இல்லாவிடின் எவராலும் தான் - முற்றிலும் சம்பந்தப்படாத ஒருவராலும் கூட - கேட்டுத் தெரிந்த, வாசித்து அறிந்த விடயங்களை வைத்து வரலாறு என்ற போர்வையில் எதனையும் எழுதி செல்ல முடியும்.

 

ஒரு கருத்துக்கு பதில் கருத்து எழுதும் போது கடைப்பிடிக்க வேண்டிய நாகரீகம் பற்றிய புரிதல்கள் இல்லாமைதான் எழுதியவர் மீதான தனிமனித தாக்குதல்களாக, "நீ அது செய்தாயா, அங்கு நின்றாயா" என்று பரிணமிக்கின்றது. இது நம்பகத்தன்மை சார்ந்த விடயம் அல்ல. கருத்துக்கு பதில் கருத்து வைக்கும் நாகரீகம் சம்பந்தமான விடயம்.

 

நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்றால், ஒருவர் தான் முன்னால் போராளி என்று கூறிவிட்டு எழுதியதை அப்படியே நம்ப வேண்டும். அவர் உண்மையிலேயே முன்னால் போராளியா என சரிபார்ப்பது கூட தவறு. எதிர்த்து ஒரு கேள்வியும் கேட்கக் கூடாது என்று. மன்னிக்கவும், ஒருபோதும் என்னால் இந்த வாதத்தினை ஏற்றுக் கொள்ள முடியாது.

 

 

அத்தனையும்  உண்மை

நன்றி நிழலி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
முதலில் தலைப்பை,திரியை ஆரம்பித்தமைக்காக சாந்தி அக்காவுக்கு ஒரு நன்றியை சொல்லிக் கொண்டு விடயத்திற்குப் போவோம்.
 
80/90 களுக்கு முதல் வந்த போராளிகளாக இருக்கட்டும் அல்லது மு.வாய்க்காலில் நின்றுட்டு வந்த போராளிகளாக இருக்கட்டும் புலம் பெயர் நாடுகளில் எப்படி அவர்கள் நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்துத் தான் அவர்களை ஏற்க வேண்டுமா அல்லது அல்லது தவிர்க்க வேண்டுமா என்று முடிவு செய்ய வேண்டும்.ஈழத்தில்,தலைவரின் பாசறையில் வளர்ந்தவர்கள் [ஒரு சிலரைத் தவிர]80,90 களில் வந்தவர்களும் ஏன் மு.வாய்க்காலில் இருந்து தப்பி வந்தவர்கள் கூட எவ்வளவு கேவலமாக இங்கு நடந்து கொள்கிறார்கள் என்பதை பார்த்துக் கொண்டு தானே இருக்கிறம்.சுபேஸ் சொன்ன மாதிரி எதுவும் இருக்கும் இடத்தில் இருந்தால் தான் சிறப்பு.
 
சாதரணமாக என்னைப் போன்றவர்கள் பிழை செய்தால் என்ட வளர்ப்பு சரியில்லை என்று சொல்லி என்னுடைய பெற்றோரை திட்டுவினம்.ஆனால் இப்படியான ஒரு கட்டுக்கோப்பான அமைப்பில இருந்திட்டு வந்து ஒருவர் பிழை செய்தால் யாரை திட்டுவினம்.இவர்கள் பிழை செய்வதை என்னால் கொஞ்சம் கூட ஏற்க முடியாது.
 
முன்னால் போராளி என்பதற்காக அவர்கள் சொல்வதை, அது தயா அண்ணாவாக இருக்கட்டும் அல்லது உங்கள் அன்புத் தம்பி பகலவனாக இருக்கட்டும் கண்ணை மூடிக் கொண்டு ஏற்க வேண்டும் இல்லைத் தானே!
 
அந்தத் திரியில் நான் கருத்து எழுதியிருந்தேன்.அதில் தயா அண்ணாவைக் காக்க இங்குள்ள சில பெரிய மனிசர்கள் எவ்வளவு கஸ்டப்பட்டார்கள் என்பதையும் பார்த்தேன்.ஆனால் அதில் தயா அண்ணா என்ட போராளியைக் காப்பாற்ற வேண்டும் என்பதை விட தயா அண்ணா ஒரு பழைய உறுப்பினர்கள்,தங்களோடு சேர்ந்து தேசியத்திற்கு ஆதரவாக எழுதுபவர் என்ட முனைப்பே காணப்பட்டது.இப்படி எத்தனையோ திரிகளில் இந்த பெரிய மனிசர்கள் பக்கச் சார்பாக நடந்து கொண்டுள்ளார்கள்.அவர்களுக்கு பிடித்த உறவு,பிடிக்காத உறவொன்றுக்கு கேவலமாக எழுதினால் கண்டும்,காணமல் இருப்பார்கள்....இது போன்ற கண விடயங்கள் சொல்லிக் கொண்டே போகலாம்.அதுக்கும்,புலிக்கும் சம்மந்தமில்லை என்பது என் கருத்து
 
புலியில் சேர்ந்து போராடப் போகையில் தாங்கள் புலத்திற்கு தப்பி வருவோம் அவர்களை நாங்கள் மதிக்க வேண்டும் அல்லது அவர்கள் கருத்தை ஏற்க வேண்டும் என்று எதிர் பார்த்தா புலியில் சேர்ந்தார்கள் அர்ப்பணிப்புடன் சேர்ந்தவர்கள் இதை எல்லாம் எதிர் பார்க்க மாட்டார்கள்.யாழில் அவர்கள் சொல்வதை மற்றவர்கள் ஏற்கவில்லை,அவர்களுக்கு உரிய இடம் கொடுக்கப்படவில்லை.இதனால் யாழை விட்டு ஒதுங்கி விட்டார்கள் என்று சரியான கருத்தில்லை.
 
ஒரு கருத்தை,தங்கள் அனுபவத்தை,உண்மை சொல்வதற்கு எதற்கு பயப்பட வேண்டும்? அவர்கள் சொல்வதை கருத்தாடும் எதிராளி ஏற்க வேண்டும் என்பதை யாழை வாசிக்கும் உறவுகள் வாசித்து எது உண்மை/பொய் என்று பகுத்தறிந்து கொள்வார்கள்.
 
கடைசியாக ஒரு புதுத் திரியில் வந்து தயா அண்ணாவோ அல்லது சாஸ்திரியோ எதாவது பிழையாக எழுதினால் அது பிழை என்று பல பேர் சொல்ல வருவினம்.அவர்கள் தொடர்ந்து யாழில் எழுதும் ஆட்கள் இல்லை.சந்தர்ப்பத்திற்கேற்ப சரி,பிழைகளை சுட்டிக் காட்ட வருவினம்.
 
புலிகள் இருக்கும் போது அவர்கள் சொல்வதை கண்ணை மூடிக் கொண்டு ஆமாம் போட்டதால் தான் இன்று இந்த நிலை[அதைத் தான் இப்பவும் கொஞ்சப் பேர் யாழில் செய்யினம்].யார் சொல்கிறார்கள் என்று பார்க்காமல் என்ன சொல்கிறார்கள் அது சரியா/பிழையா என்று பார்த்தால் ஒரு பிரச்சனையுமில்லை :)  
 
 
 
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சாந்தி அக்கா

 

நீங்கள் குறிப்பிட்ட அந்த திரியில் நானும் கருத்தை எழுதியிருந்தேன். முடிந்தளவு யாரையும் காயப்படுத்தாமல் எழுதுவதில் கவனம் செலுத்தியிருந்தேன். அதையும் மீறி யாரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னித்துக்கொள்ளும்படி வேண்டுகின்றேன்.

 

இந்த "முன்னாள் போராளி" என்ற வார்த்தையே தவறு என்று நினைக்கின்றேன். இது ஒருவர் முன்னர் தான் போராளி தற்பொழுது அவர் போராளி இல்லை என்பதை தானே குறிக்கின்றது. எனக்கு தெரிந்து பலர் இப்பொழுதும் மனதளவில் போராளியாகவே உள்ளனர். என்ன ஆயுதம் தான் அவர்களிடம் இல்லை. ஆனால் கொள்கையில் சற்றும் மாற்றமில்லை. ஆயுதம் இல்லாவிட்டால் ஒருவன் முன்னாள் போராளியா? 

 

இதில் யாரை குறை சொல்வது யாரை நியாயப்படுத்துவது என்று தெரியவில்லை. முள்ளிவாய்க்காலில் இருந்து தப்பி வந்த போராளிகளிடமும் சரி இங்கு வாழ்கின்ற போராளிகளிடமும் சரி, இருவரிடமுமே ஏமாந்துள்ளேன். அதற்காக என்றும் வருந்தியதும் இல்லை ஒதுங்கியதும் இல்லை. 

 

எத்தனை தடைகள் வந்தாலும் ஒரு போராளி அதனை உடைத்து வெளி வர வேண்டும் என்பது எனது விருப்பம். அவர்கள் ஒதுங்குவதால் அதனை பலர் தங்களின் சுயநலத்திற்காக பயன்படுத்திக்கொள்ள ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கின்றார்கள். இங்கு யாரும் யாருக்கும் துரோகி பட்டம் கொடுக்கும் தகுதியைபெறவில்லை. 

 

இந்த சண்டை போராளிகளிற்குள் மட்டுமல்ல புலம்பெயர்ந்த தேசங்களில் எங்குமே உள்ளது.

 

பொதுச்சேவை என்று சொல்லி புதிய அமைப்புகள் வரும்பொழுது ஏற்கனவே அந்த துறையில் இருக்கும் அமைப்புகள் அவர்களை ஓரங்கட்ட முயற்சிக்கின்றன. 

 

கலைநிகழ்ச்சிகள் என்று இன்று வாரம் ஒன்று நடைபெறுகின்றது. ஏற்கனவே நடத்தியவர்கள் புதியவர்களை துரோகி என்று ஓரங்கட்ட பார்க்கின்றனர் (ஒரு சிலரின் நடவடிக்கைகள் தமிழ்த்தேசியத்திற்கு எதிரான  நடவடிக்கையாக உள்ளது உண்மையே).

 

ந.க.த.அ., அமைப்பு, மன்றம், ஒன்றியம் என்று நாளுக்கொன்று தோன்றுகின்றது. மாறி மாறி குற்றம் சொல்வதிலும் அறிக்கை விடுவதிலும் பலரின் வேலை முடிந்துவிடுகின்றது. 

 

இப்படிக்கு 

முன்னாள் துரோகி

 

(துரோகி பட்டம் வழங்கியவர்களை காணவில்லை. எனவே அவர்கள் வந்து நிரூபிக்கும் வரை நான் ஒரு முன்னனாள் துரோகி தான்) :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இப்படிக்கு 

முன்னாள் துரோகி

 

(துரோகி பட்டம் வழங்கியவர்களை காணவில்லை. எனவே அவர்கள் வந்து நிரூபிக்கும் வரை நான் ஒரு முன்னனாள் துரோகி தான்) :D

 

 

உங்களது முழுக்கருத்துடனும் உடன்படுவேன்.

இந்த வரிகள்  இல்லாதவிடத்து..........

 

முள்ளிவாய்க்காலுக்குப்பின்

இதுவும் ஒரு நடைமுறையாகி  வருகிறது

தனக்குத்தானே துரோகிப்பட்டம்  கொடுத்தபடி தொடங்குவது.

 

மற்றும்படி

நீங்கள்   எழுதியது போல்

உங்களைப்பற்றி  எனக்கொரு கருத்தும் பார்வையும்  உண்டு

அது

நீங்கள்  இங்கு எழுதியவற்றை  வைத்து வந்தது மட்டுமே.

அதை வைத்தே எனது கருத்தை நான்  சொல்லமுடியும்.

அதைத்தவிர வேறு வழி இங்கு (யாழில்) இல்லை.

Link to comment
Share on other sites

நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்றால், ஒருவர் தான் முன்னால் போராளி என்று கூறிவிட்டு எழுதியதை அப்படியே நம்ப வேண்டும். அவர் உண்மையிலேயே முன்னால் போராளியா என சரிபார்ப்பது கூட தவறு. எதிர்த்து ஒரு கேள்வியும் கேட்கக் கூடாது என்று. மன்னிக்கவும், ஒருபோதும் என்னால் இந்த வாதத்தினை ஏற்றுக் கொள்ள முடியாது.

 

நான் சொல்ல வந்தது இதுதான் நிழலி. முன்னாள் போராளியென்றோ அல்லது இன்னாள் போராளியென்றோ ஒருவர் தன்னை அடையாளப்படுத்தாமல் எழுதப்படும் விடயத்தில் கருத்தாளர்களாகிய நானும் நீங்களும் தெளிவோடு அவர்களை புறம் தள்ளாமல் கருத்தாட வேணும். அது இப்போ புதிதாய் வந்தவர்களாகட்டும் பழையவர்களாகட்டும்.

பொதுவாகவே எல்லாப் போராளிகளையும் கொச்சைப்படுத்தும் விதமான கருத்துக்களை அங்கீகரித்தலும் புதிய கருத்தாளர் என்பதற்காக ஒதுக்கி வைப்பதுமே தவிர்க்கப்பட வேணும். இங்கு குறித்த போராளிகளை கண்மூடித்தனமாக துரத்தியடித்ததே இங்கு நடந்தது. எல்லோருக்கும் ஒரே நீதியை நீங்கள் கொடுக்க வேணும். இதையே சொல்ல வந்தேன். சிலவேளை எனது தமிழ் கருத்து மயக்கத்தை தந்ததோ தெரியாது.

 

தங்களை அடையாளப்படுத்தியவர்களை அதாவது உங்களுக்கு தாங்கள் இன்னார் என்று அடையாளப்படுத்தியவர்களைக் கூட அவர்கள் தாங்கள் இவர்கள் என்று சொன்னதைத் தானே நம்பியிருக்கிறீர்கள். நீங்கள் அவர்களை அவர்கள் சொன்ன சமர்க்களங்களில் போய்  நின்று பார்த்து உறுதிப்படுத்திவிட்டு நம்பவில்லைத்தானே ?

 

Link to comment
Share on other sites

சாந்தி

 

தங்களது நேரத்தை தொடர்ந்து வீணாக்கவிரும்பவில்லை

 

யாழ்  களம் போன்ற முகமறியாத ஒரு கருத்துக்களத்தில்

முன்பின் எழுதாத ஒருவர்

அல்லது முன்பே பலமுறை தாயகம்  சம்பந்தமாக தாறுமாறாக எழுதப்பட்ட போது

அதை தட்டிக்கேட்காத ஒருவர்

திடீரென ஒரு குறிப்பிட்ட திரியில் மட்டும்

ஒரு குறிப்பிட்ட நபரை மட்டும் குறி  வைத்து

ஒரு வழித்தாக்குதல் மட்டுமே செய்தது சந்தேகத்தக்குள்ளாகியது என்பதே உண்மை.

இதை இங்கு எழுதும் தாயக விரும்பிகள் பலரும் அறிவர்.

 

 

இங்கு நீங்கள் திடீரென ஒருவர் வந்து எதிர் கருத்து வைத்தார் அதனால் சந்தேகித்தோம் என்கிறீர்கள்.

இதேபொலொருவர் குறித்த கருத்தாளரை திடீரென ஒருவர் புதிய பெயரொன்றில் வந்து தாக்கியடித்ததை நீங்கள் கவனிக்கவில்லையா ? அப்போ அவர் யார் ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நீங்கள் திடீரென ஒருவர் வந்து எதிர் கருத்து வைத்தார் அதனால் சந்தேகித்தோம் என்கிறீர்கள்.

இதேபொலொருவர் குறித்த கருத்தாளரை திடீரென ஒருவர் புதிய பெயரொன்றில் வந்து தாக்கியடித்ததை நீங்கள் கவனிக்கவில்லையா ? அப்போ அவர் யார் ?

 

சாந்தி

நான் நல்லதையே  நினைக்கின்றேன்.

அவர்கள்  எழுதுவதை  வைத்துத்தானே அவர்களது நிலையை  கொள்கையை  ஏன் முகத்தைக்கூட அறிந்து கொள்ளமுடியும்.

 

ஆனால் சிலர் ஏமாற்றலாம்

அது என்  தப்புக்கிடையாது

அவர்களது தப்பு

அவர்கள் தங்களைத்தாங்களே ஏமாற்றிக்கொள்கிறார்கள்  என்பது தான்  உண்மை.

இங்கு முன்னரும்  சிலர்  நடித்திருக்கிறார்கள்

வேசங்கள் கலைந்ததும் ஓடி இருக்கிறார்கள்

இன்றும்  கூட அதே பெயரில் வரமுடியாதுள்ளார்கள்.

பல நாளைக்கு ஒருவர்  நடிக்கவும் முடியாது

ஒழிக்கவும் முடியாது.

முகங்கள்  தெரியும் காலமிது

அது தெரியவந்தே ஆகும்..

அதற்கு அவர்கள்  இங்கு   தொடர்ந்து எழுதணும்.

Link to comment
Share on other sites

 

 

இங்கு யாரும் யாருக்கும் துரோகி பட்டம் கொடுக்கும் தகுதியைபெறவில்லை. 

 

 

நல்ல ஒரு தலைப்பு இன்றைய சூழலுக்கு ஏற்ப ஆரோக்கியமாக விவாதித்து நாம் தெளிவு பெற வேண்டிய முக்கியமான தலைப்பு .இணைப்பிற்கு நன்றிகள் சாந்தி அக்கா ...............
 
இந்த திரியில் உறவுகள் கருத்தாடும் கருத்துகளுக்கு அப்பால் என் மனதில் அன்று தொட்டு இன்று வரை உள்ள உணர்வை இங்கே குறிப்பிடுகிறேன் ..........செங்கதிர் கூறியது போல முன்னாள் போராளிகள்  அல்ல அவர்கள் போராளிகள் ,,,அந்த போராளிகளாய் இருந்தாலும் சரி ,போராளி இல்லாமல் ஆதரவு கொடுப்போராய் இருந்தாலும் சரி எமது இலட்சியத்தை நோக்கி எத்தனை எத்தனை இடையூறுகள் வந்தாலும் தொடர்ந்து பயனிக்கவேண்டும் .இந்த பயணத்திற்கு எம் அர்ப்பணிப்பையும் ,தியாகத்தையும் எப்பவும் எந்த சந்தர்ப்பத்திலும் வழங்க கூடியவராய் இருக்கவேண்டும் .அதற்கு நாம் தயாராகும் பட்சத்தில் அவை நாம் பதிவிடும் கருத்துக்களில் பிரதிபலிக்கும் .............நன்றிகள் 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.