Jump to content

புலம்பெயர் சமூகத்தால் புறக்கணிக்கப்பட வேண்டியவர்களா புலம்பெயர்ந்த முன்னாள் போராளிகள் ?


Recommended Posts

அண்மையில் பல முன்னாள் போராளிகள் ஆக்கங்களை யாழில் எழுதத் தொடங்கியிருந்தார்கள். அவர்கள் கடைசி வரையும் போர்க்களத்தில் நின்று வந்தவர்கள். ஆனால் அவர்களது பதிவுகளில் சிலர் தங்கள் ஞாபகங்களையும் பகிர்ந்து சில வரலாற்றுத் தவறுகள் வரக்கூடிய சம்பவங்களால் ஏற்பட்ட விவாதம் பெரும் சர்ச்சையை உண்டுபண்ணியது.

 

களத்தில் பல கருத்தாளர்கள் இந்தப் புதியவர்களை சந்தேகித்தும் இவர்களது வருகையை துரோகம் போலவும் கருத்தெழுதியிருந்தார்கள். இந்த எழுத்து சில போராளிகளை தொடர்ந்து எழுத விடாமல் மௌனமாக்கியுள்ளது.

 

சிலம் மீதுள்ள அதீத அன்பினால் புதிய கருத்தாளர்களை அவமதிப்பது மனங்களை நோகடிப்பது சந்தேகிப்பது அவர்களுக்கு முள்ளிவாய்க்கால் துயரைவிட கடுமையான தண்டனையாகவே இருக்கிறது. இங்கு  இவர்தான் கௌரவத்தக்கு உரியவர் என்ற தகுதி வகுப்பு சரியானதா ?

இல்லை இவர் முள்ளிவாய்க்காலில் இருந்து தப்பி புலம்பெயர்ந்ததால் இங்கு எழுதவோ வரலாறுகளைச் சொல்லவோ தகுதியில்லையென்று புறக்கணித்தல் அவர்களது மனங்களை நோகடித்தல் எவ்வகையில் நியாயமாகும் ?

 

இந்தப் புலம்பெயர்ந்த முள்ளிவாய்க்கால் வரையும் சென்று உயிர் மீண்டிருக்கிற ஒவ்வொரு போராளிக்குள்ளும் ஆயிரம் துயரங்கள் அவர்களோடு பழகுகிறேன். தொடர்புகளோடு இருக்கிறேன். அவர்களது மனநிலமையை புரிந்து கொண்ட வகையில் எனது ஆதங்கத்தை இங்கு வெளிப்படுத்துகிறேன்.

 

தங்கள் துயரைச் சொல்லக்கூட ஆட்களின்றி எத்தனையோ போராளிகள் ஐரோப்பிய வீதிகளிலும் அகதி முகாம்களிலும் அலைகிறார்கள். ஒரு காலம் எங்களால் கதாநாயகர்களாகவும் வீரத்தின் அடையாளமாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் இன்று சந்தேகத்துக்கு உரியவர்களாகவும் இந்த சமூகத்தால் ஏற்றுக் கொள்ள முடியாதவர்களாகவும் இருப்பதற்கான காரணி என்ன ? ஏன் நாங்கள் இப்படியானோம் ?

 

ஆரோக்கியமான கருத்தாடலை இத்தலைப்பில் மேற்கொள்வதன் மூலம் பல முன்னேற்றமான பணிகளையும் செய்ய முடியும் என்பது என் கருத்து.

 

உங்கள் கருத்துக்களை பகிருங்கள். மௌனமாக ஒதுங்கியிருக்கும் போராளிகள் மீளவும் நீங்கள் எழுத வர வேணும்.

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இது போன்று ஒரு ஆதங்கம் அன்றிலிருந்து எனது மனதிலும் ஆறாது உள்ளது சாந்தி.

 

ஆனால் அன்றைய  விவாதம்  சம்பந்தமாக கருத்துக்கூறிய  புதியவர்களின் எழுத்தில்  பெரும் மமதை இருந்தது.

எடுத்தெறிதல் இருந்தது.

ஒருவரை மட்டம் தட்டவேண்டும் என்ற குறியே  பிரதானமாக இருந்தது.

 

இதை நீங்களோ

மற்ற  கருத்தாளர்களோ

ஏன் எழுதிய புதியவர்களோ ஏற்பீர்களா???

 

அதனால்தான்  கடைசியில் எமக்குத்தெரிந்த ஒரு போராளியையாவது காப்பாற்றும்   நோக்கமாக

திரியைப்பூட்டும் படி கேட்டேன்.

உண்மையில் இதை எழுதும் பொது என்  கண்களில்  கண்ணீர்........... :(  :(  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சவுக்கியம் என்பார்கள்...ஒன்றும் பிரச்சினை இல்லை அக்கா.. இதெல்லாம் நீண்ட நாட்கள் நிலைக்க முடியா.. பல முன்னால் போராளிகள் மெதுமெதுவாக தம்மை கட்டி எழுப்பி பொருளாதாரத்தில் நிலையாக தொடங்குகிறகாலம் இது.. புலம்பெயர்ந்த போராளிகள் பலரும் மெதுமெதுவாக விசாகிடைத்து பொருளாதரத்தையும் ஊரில் உள்ள தமது குடும்பங்களையும் ஸ்திரப்படுத்துக்கொண்டிருக்கிறார்கள்..இன்னும் பல புலம்பெயர்ந்த போராளிகள் விசாக்களுக்கும் ஊரில் உள்ளவர்கள் நல்ல வேலைகளுக்கும் காத்திருக்கிறார்கள்.. எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் இரண்டாயிரம்களிலும் வந்து துரோகிப்பட்டம் கொடுக்கும் பல உறவுகளும் இந்த நிலையை தாண்டி வந்துதான் தம்மை பொருளாதாரத்தில் ஸ்திரப்படுத்திக்கொண்டு இப்பொழுது பட்டம் கொடுக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்கள்..காலம் மெதுமெதுவாக மாறும்..இந்த முன்னால் போராளிகளின் கைகளும் பொருளாதாரத்தால் மேம்படும்..காட்சிகள் மாறும்.. தீர்மானிக்கும் சக்திகளும் மாறும்..அதுவரைக்கும் இவைகள் அங்கங்கு மெதுவாக தொடரத்தான் செய்யும்..மெளனமாக ஒதுங்கி இருக்காமல் முன்னால் போராளிகள் தமது எண்ணங்களை எழுதவேண்டும்.. உங்கள் கருத்துக்களை பகிர்வதற்கு முன்னால் போராளிகள் என்பதை சொல்லி முட்டுக்கட்டைகள் வருகின்றன என்றால் அதுவும் ஒரு அடக்குமுறைதான் என்பதை புரிந்துகொண்டால் தொடர்ந்து எழுதுவீர்கள்..(இதை யழை மையப்படுத்தி எழுதவில்லை... யாழில் இப்படியான நிகழ்வுகள் குறைவு என்றுதான் சொல்லவேண்டும்.. ஆனால் வெளியே தமிழ் சமூகத்தில் இவற்றில் சிலதை அவதானித்ததில் எழுதுகிறேன்..)..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது எனக்குச் 'செய்தி' சாந்தி! :o

 

நீங்கள் சொல்லும் போராளிகளுக்கும், அவர்களது பதிவுகளுக்கும் யாழில் மிகுந்த வரவேற்பிருந்தது ! :D

 

அவர்கள் பதிவுகள் குறைந்த போது, அவர்கள் ஏன் தொடர்ந்து எழுதவில்லை எனவும் பல உறவுகள் கேள்வியெழுப்பி இருந்ததையும் கண்டேன்!

 

நீங்கள் கூறுவது போன்ற எதையும் நான் அவதானிக்கவில்லை!

 

இதை ஏன் ஒரு விவாதப் பொருளாக்க வேண்டும் என்றும், என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை!

 

எதற்கும் மற்றைய உறவுகளின் கருத்துக்களையும் பார்ப்போம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் ஒரு சந்தர்ப்பத்தில் யாழில் முன்னாள் போராளிகளின் அதிகரிப்பு சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது என்று எழுதியிருந்தேன் அது யாரையும் குறைசொல்ல அல்லது குற்றம் கண்டுபிடிக்க அல்ல முன்னாள் போராளிகள் என்ற பெயரில் கறுப்பாடுகள் வந்துவிடக் கூடாது

என்பதற்காகத் தான். நான் தெரிந்தோ, தெரியாமலோ எழுதியவை யாரையேனும் காயப்படுத்தியிருந்தால் அதற்காக உளப்பூர்வமான மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

இதற்கு என்ன கருத்து எழுதுவது? ஏற்கெனவே ஒருவன் தன்னைச் சுற்றி ஒரு 'இருப்பை' கட்டி எழுப்பி அகதி என்ற பெயரை மறந்திருக்கும்போது.. புதிதாக வருபவனால் அந்த இருப்புக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற மனோவியாதிதான் இதற்கெல்லாம் காரணம்.

தனியே இதில் மட்டுமல்ல.. பொதுவாக எந்த துறையை எடுத்தாலும் அடிப்படையில் இவ்வாறான மனோவியாதிகள் ஏராளம்.... தாராளம்!!

'வெற்றி வேண்டுமா போட்டுப் பாராடா எதிர்நீச்சல்' என்றவாறு போய்க்கொண்டே இருக்கவேண்டியதுதான்! :)

Link to comment
Share on other sites

சாந்தி அக்காக்கு ஒரு சலூட்  மிக முக்கிய கேள்வி உங்களுடையது ஒரு குறிப்பிட்ட வட்டம் தங்களுக்குள் நில் அல்லது நீ அவன் ஆளே என நோக்குவது வேதனையிலும் வேதனை ஒரு பக்கத்தை மட்டும் போற்றி புகழ்த்து எழுதி அல்லது நீ புறக்கணிக்க படுவாய் என்பதை பலர் மறைமுகமா புத்திசாலித்தனமான கேள்விகள் கேட்கிறோம் என நினைத்து சில விடைசொல்ல முடியா கேள்விகளை எடுத்து முன் வைப்பது எமக்கு பதில் நன்கு தெரிந்தாலும் சொல்ல முடியா சொன்னால் துரோகி ஆக்கபடுவோம் என்பது எமக்கு நன்கு தெரியும் அதனால் நாங்களா விலகவேண்டிய நிர்ப்பந்தம் வரும் என்கிற சூழ்ச்சிமத்தை புரிந்து வைத்து இருக்குறார்கள் என்பதுதான் உண்மை .

 

சிரித்த படி இருக்க புகைப்படம் போல் வாழ்க்கை இல்லை என்பதை அவர்கள் புரிய வேணும்

 

தங்களுக்கு வகுத்து வைத்து இருக்கும் எல்லையை விட்டு வெளியில் வந்து யன்னல் திறந்து பாருங்கள் மாற்றம் கண்கள் ஊடா மனதுக்கு தெரியும் .

 

நன்றி அக்கா உங்கள் முக்கிய பதிவுக்கு மிண்டும் ஒருமுறை . :(


இதற்கு என்ன கருத்து எழுதுவது? ஏற்கெனவே ஒருவன் தன்னைச் சுற்றி ஒரு 'இருப்பை' கட்டி எழுப்பி அகதி என்ற பெயரை மறந்திருக்கும்போது.. புதிதாக வருபவனால் அந்த இருப்புக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற மனோவியாதிதான் இதற்கெல்லாம் காரணம்.

தனியே இதில் மட்டுமல்ல.. பொதுவாக எந்த துறையை எடுத்தாலும் அடிப்படையில் இவ்வாறான மனோவியாதிகள் ஏராளம்.... தாராளம்!!

'வெற்றி வேண்டுமா போட்டுப் பாராடா எதிர்நீச்சல்' என்றவாறு போய்க்கொண்டே இருக்கவேண்டியதுதான்! :)

 

முந்தி வந்த செவியை பிந்தி வந்த கொம்பு மறைக்க கூடாது என்பதில் நாங்கள் தெளிவா இருக்குறம் என்பதே உண்மை .

Link to comment
Share on other sites

இதேபோல 80களில் இருந்து பலவிடயங்களை நான் வசிக்கும் ஜேர்மனியில் பார்த்திருக்கிறேன். இலங்கையில் முறையாக training college ஆசிரியர்களாகக் கடமையாற்றியவவர்ர்களைப் புறம்தள்ளி எவவ்வித ஆசிரியத் தகுதியும் அற்றவர்கள் ஆனா ஆவன்னா தெரியும் என்ற ஒரே காரணத்துக்காக தமிழாலயங்களில் கற்பித்த கற்பிக்கும் கொடுமைகளை எல்லாம் கண்டிருக்கிறேன். இவ்வாறு பலவற்றை கூற முடியும். ஆனால் இவற்றால் எதுவுமே விளையப் போவதில்லை.. எனினும் சில பதிவுகளுக்காகவாவது நான் எழுதும் தொடரில் வரலாம் விரிவாக. :)

Link to comment
Share on other sites

உலகில் விடுதலை வீரர்களையும், போர் வீரர்களையும் மதித்து அவர்களை கதாநாயகர்களாக போற்றி அவர்களுக்கென்றே ஒரு நாளை ஒதுக்கி மரியாதை செய்யும் பழக்க வழக்கம் எங்கும் உள்ளது. அதில் உயிருடன் இருக்கும் முன்னால் வீரர்களை தனியாக கெளரவிக்கும் பண்பாடும் இருக்கின்றது. அதனுடன் ஒப்பிடும் போது, நாம் அந்தளவுக்கு ஒன்றும் செய்வதில்லையே என்ற ஆதங்கம் எனக்குள் அடிக்கடி ஏற்படுவதுண்டு.

 

ஆனால், எனக்கு இதற்கும் அப்பால் ஒரு முக்கிய கேள்வி முன்னாள் போராளிகள் என்று தம்மை அடையாளப் படுத்துகின்றவர்கள் மீது உண்டு.

 

சாந்தி, ஒருவர் வந்து தான் ஒரு முன்னால் போராளி என்று கூறிவிட்டு எழுதும் போது உண்மையிலேயே அவர் முன்னால் போராளியா என்று எவ்வாறு தெளிவாக அறிந்து கொள்வது? சாத்திரி / தயா போன்று தம்மை இன்னார் என்று மிக தெளிவாக இனம்காட்டி எழுதுபவர்கள் மீது இக் கேள்வி வராது, ஆனால் முகம் காட்ட/ அடையாளம் காட்ட முடியாத ஒரு அரசியல் சூழ்நிலையைக் காரணமாகக் காட்டி முகம் மறைத்துக் கொண்டு ஒருவர் தான் முன்னால் போராளி என்று சொல்லும் போது எந்தளவு தூரத்துக்கு அதனை நம்பமுடியும்?

 

என் கேள்வி சில நேரம் உங்களுக்கு கோபத்தினைக் கூட கிளப்பலாம். நீங்கள் குறிப்பிட்ட அந்த திரியினை ஆரம்பத்தில் இருந்தே அனுமதிப்பதில் நான் தயக்கமாக இருந்தேன். ஆனால் ஏனைய நிர்வாக உறுப்பினர்களுக்கு பிரச்சனை இருக்கவில்லை என்பதால் அத் திரி கொஞ்ச நாட்களுக்கு தொடரப்பட்டது. என்னுடைய முக்கிய கேள்வியாக இருந்ததே ஒருவர் முன்னால் போராளி என்று விட்டு ஒரு வரலாற்றினை எழுதும் போது அவர் உண்மையிலேயே முன்னால் போராளி தான் என்று எவ்வாறு நம்புவது என்பதுதான்.  என் சமூகத்தினை நன்கு புரிந்து கொண்டமையால் தான் இந்தக் கேள்வி எழுகின்றது.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் விடுதலை வீரர்களையும், போர் வீரர்களையும் மதித்து அவர்களை கதாநாயகர்களாக போற்றி அவர்களுக்கென்றே ஒரு நாளை ஒதுக்கி மரியாதை செய்யும் பழக்க வழக்கம் எங்கும் உள்ளது. அதில் உயிருடன் இருக்கும் முன்னால் வீரர்களை தனியாக கெளரவிக்கும் பண்பாடும் இருக்கின்றது. அதனுடன் ஒப்பிடும் போது, நாம் அந்தளவுக்கு ஒன்றும் செய்வதில்லையே என்ற ஆதங்கம் எனக்குள் அடிக்கடி ஏற்படுவதுண்டு.

 

ஆனால், எனக்கு இதற்கும் அப்பால் ஒரு முக்கிய கேள்வி முன்னாள் போராளிகள் என்று தம்மை அடையாளப் படுத்துகின்றவர்கள் மீது உண்டு.

 

சாந்தி, ஒருவர் வந்து தான் ஒரு முன்னால் போராளி என்று கூறிவிட்டு எழுதும் போது உண்மையிலேயே அவர் முன்னால் போராளியா என்று எவ்வாறு தெளிவாக அறிந்து கொள்வது? சாத்திரி / தயா போன்று தம்மை இன்னார் என்று மிக தெளிவாக இனம்காட்டி எழுதுபவர்கள் மீது இக் கேள்வி வராது, ஆனால் முகம் காட்ட/ அடையாளம் காட்ட முடியாத ஒரு அரசியல் சூழ்நிலையைக் காரணமாகக் காட்டி முகம் மறைத்துக் கொண்டு ஒருவர் தான் முன்னால் போராளி என்று சொல்லும் போது எந்தளவு தூரத்துக்கு அதனை நம்பமுடியும்?

 

என் கேள்வி சில நேரம் உங்களுக்கு கோபத்தினைக் கூட கிளப்பலாம். நீங்கள் குறிப்பிட்ட அந்த திரியினை ஆரம்பத்தில் இருந்தே அனுமதிப்பதில் நான் தயக்கமாக இருந்தேன். ஆனால் ஏனைய நிர்வாக உறுப்பினர்களுக்கு பிரச்சனை இருக்கவில்லை என்பதால் அத் திரி கொஞ்ச நாட்களுக்கு தொடரப்பட்டது. என்னுடைய முக்கிய கேள்வியாக இருந்ததே ஒருவர் முன்னால் போராளி என்று விட்டு ஒரு வரலாற்றினை எழுதும் போது அவர் உண்மையிலேயே முன்னால் போராளி தான் என்று எவ்வாறு நம்புவது என்பதுதான்.  என் சமூகத்தினை நன்கு புரிந்து கொண்டமையால் தான் இந்தக் கேள்வி எழுகின்றது.

இது தான்  எனது நிலைப்பாடும்.

அதனாலேயே

தெரிந்த போராளிக்காக திரியைப்பூட்டும்படி கேட்டேன்

அதைத்தான்  இப்படியான சூழலில் எம்மால்  செய்யமுடியும்.

 

நன்றி  நிழலி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாந்தி, ஒருவர் வந்து தான் ஒரு முன்னால் போராளி என்று கூறிவிட்டு எழுதும் போது உண்மையிலேயே அவர் முன்னால் போராளியா என்று எவ்வாறு தெளிவாக அறிந்து கொள்வது? சாத்திரி / தயா போன்று தம்மை இன்னார் என்று மிக தெளிவாக இனம்காட்டி எழுதுபவர்கள் மீது இக் கேள்வி வராது, ஆனால் முகம் காட்ட/ அடையாளம் காட்ட முடியாத ஒரு அரசியல் சூழ்நிலையைக் காரணமாகக் காட்டி முகம் மறைத்துக் கொண்டு ஒருவர் தான் முன்னால் போராளி என்று சொல்லும் போது எந்தளவு தூரத்துக்கு அதனை நம்பமுடியும்?

 

என் கேள்வி சில நேரம் உங்களுக்கு கோபத்தினைக் கூட கிளப்பலாம். என்னுடைய முக்கிய கேள்வியாக இருந்ததே ஒருவர் முன்னால் போராளி என்று விட்டு ஒரு வரலாற்றினை எழுதும் போது அவர் உண்மையிலேயே முன்னால் போராளி தான் என்று எவ்வாறு நம்புவது என்பதுதான்.  என் சமூகத்தினை நன்கு புரிந்து கொண்டமையால் தான் இந்தக் கேள்வி எழுகின்றது.

 

 

எனது கேள்வியும் இதுவே சாந்தி அக்கா.

 

Link to comment
Share on other sites

உலகில் விடுதலை வீரர்களையும், போர் வீரர்களையும் மதித்து அவர்களை கதாநாயகர்களாக போற்றி அவர்களுக்கென்றே ஒரு நாளை ஒதுக்கி மரியாதை செய்யும் பழக்க வழக்கம் எங்கும் உள்ளது. அதில் உயிருடன் இருக்கும் முன்னால் வீரர்களை தனியாக கெளரவிக்கும் பண்பாடும் இருக்கின்றது. அதனுடன் ஒப்பிடும் போது, நாம் அந்தளவுக்கு ஒன்றும் செய்வதில்லையே என்ற ஆதங்கம் எனக்குள் அடிக்கடி ஏற்படுவதுண்டு.

 

ஆனால், எனக்கு இதற்கும் அப்பால் ஒரு முக்கிய கேள்வி முன்னாள் போராளிகள் என்று தம்மை அடையாளப் படுத்துகின்றவர்கள் மீது உண்டு.

 

சாந்தி, ஒருவர் வந்து தான் ஒரு முன்னால் போராளி என்று கூறிவிட்டு எழுதும் போது உண்மையிலேயே அவர் முன்னால் போராளியா என்று எவ்வாறு தெளிவாக அறிந்து கொள்வது? சாத்திரி / தயா போன்று தம்மை இன்னார் என்று மிக தெளிவாக இனம்காட்டி எழுதுபவர்கள் மீது இக் கேள்வி வராது, ஆனால் முகம் காட்ட/ அடையாளம் காட்ட முடியாத ஒரு அரசியல் சூழ்நிலையைக் காரணமாகக் காட்டி முகம் மறைத்துக் கொண்டு ஒருவர் தான் முன்னால் போராளி என்று சொல்லும் போது எந்தளவு தூரத்துக்கு அதனை நம்பமுடியும்?

 

என் கேள்வி சில நேரம் உங்களுக்கு கோபத்தினைக் கூட கிளப்பலாம். நீங்கள் குறிப்பிட்ட அந்த திரியினை ஆரம்பத்தில் இருந்தே அனுமதிப்பதில் நான் தயக்கமாக இருந்தேன். ஆனால் ஏனைய நிர்வாக உறுப்பினர்களுக்கு பிரச்சனை இருக்கவில்லை என்பதால் அத் திரி கொஞ்ச நாட்களுக்கு தொடரப்பட்டது. என்னுடைய முக்கிய கேள்வியாக இருந்ததே ஒருவர் முன்னால் போராளி என்று விட்டு ஒரு வரலாற்றினை எழுதும் போது அவர் உண்மையிலேயே முன்னால் போராளி தான் என்று எவ்வாறு நம்புவது என்பதுதான்.  என் சமூகத்தினை நன்கு புரிந்து கொண்டமையால் தான் இந்தக் கேள்வி எழுகின்றது.

 

முன்னாள் போராளிகள் என்பதுக்கு தகட்டிலக்கம் படையணி சேர்த்த காலம் விலகிய காலம் எல்லாம் ஒரு அறிக்கையா தந்து விட்டு எதை வேணும் என்றாலும் எப்படி யான புனைகதை என்றாலும் எழுதினா அதை இந்த சமூகம் நம்புமா ஏனெனில் வன்னியின் சுழலில் வாழ்த்த அனைவருக்கும் ஆயுதம் பற்றிய அறிவு போரியல் பற்றிய அறிவு சண்டைகள் பற்றிய அறிவு எந்த சண்டையை எந்த தளபதி வழிநடத்தி போனார் என்பது தொடக்கம் அக்குவேறா ஆணி வேறா தெரியும் இதில் பொய்களை உடனம் பிடிப்பார் என்பது மிக பழைய போராளிகளுக்கு தெரியாமல் இருப்பது தான் கவலை .

 

வாதம் அதுவல்ல கருத்தை முறியடிக்க அல்லது தங்களின் கட்டுக்குள் கொண்டுவர இங்கு சிலர் வைக்கும் சொல்லாடல் மிக தவறு அதி உச்ச விசுவாசிகளாக தங்களை காட்டுவதும் மற்றவனை பார்வையாளனா பார்ப்பது நிறுத்த படவேண்டும் .

 

Link to comment
Share on other sites

 

ஆனால், எனக்கு இதற்கும் அப்பால் ஒரு முக்கிய கேள்வி முன்னாள் போராளிகள் என்று தம்மை அடையாளப் படுத்துகின்றவர்கள் மீது உண்டு.

 

சாந்தி, ஒருவர் வந்து தான் ஒரு முன்னால் போராளி என்று கூறிவிட்டு எழுதும் போது உண்மையிலேயே அவர் முன்னால் போராளியா என்று எவ்வாறு தெளிவாக அறிந்து கொள்வது? சாத்திரி / தயா போன்று தம்மை இன்னார் என்று மிக தெளிவாக இனம்காட்டி எழுதுபவர்கள் மீது இக் கேள்வி வராது, ஆனால் முகம் காட்ட/ அடையாளம் காட்ட முடியாத ஒரு அரசியல் சூழ்நிலையைக் காரணமாகக் காட்டி முகம் மறைத்துக் கொண்டு ஒருவர் தான் முன்னால் போராளி என்று சொல்லும் போது எந்தளவு தூரத்துக்கு அதனை நம்பமுடியும்?

 

என் கேள்வி சில நேரம் உங்களுக்கு கோபத்தினைக் கூட கிளப்பலாம். நீங்கள் குறிப்பிட்ட அந்த திரியினை ஆரம்பத்தில் இருந்தே அனுமதிப்பதில் நான் தயக்கமாக இருந்தேன். ஆனால் ஏனைய நிர்வாக உறுப்பினர்களுக்கு பிரச்சனை இருக்கவில்லை என்பதால் அத் திரி கொஞ்ச நாட்களுக்கு தொடரப்பட்டது. என்னுடைய முக்கிய கேள்வியாக இருந்ததே ஒருவர் முன்னால் போராளி என்று விட்டு ஒரு வரலாற்றினை எழுதும் போது அவர் உண்மையிலேயே முன்னால் போராளி தான் என்று எவ்வாறு நம்புவது என்பதுதான்.  என் சமூகத்தினை நன்கு புரிந்து கொண்டமையால் தான் இந்தக் கேள்வி எழுகின்றது.

இதில் முதலில் நிழலியின் கருத்துக்கு எனது பதில்.

நிழலி இத்திரியை ஆரம்பித்ததன் முதல் நோக்கம் கோவப்படவோ அல்லது கொழுத்தியெரிக்கவோ அல்ல. நிதானமாக கருத்தாடவும் இனிமேலும் நீ முள்ளிவாய்க்காலில் இருந்து எப்பிடி வந்தாய் அதன் வழியென்ன உன்னை எப்படி நம்புவது ? அல்லது ஒரு வரலாற்றுத்தவறை சுட்டிக்காட்டினால் அதற்கு பதில் சொல்லாமல் அந்தச்சமரில் நின்றாயா இந்தச் சமரில் எந்தச் சென்றியில் நின்றாய் என ஒருவரின் கருத்தை முறியடிக்க அல்லது தன்னை நியாயப்படுத்த பழி சுமத்தும் தன்மை இல்லாது போக வேணும். அதற்காகவே இங்கு எழுதுகிறேன்.

 

முதலில் இங்கு நான் பெயர்கள் குறிப்பிடாத போராளிகள் எந்த இடத்திலும் தங்கள் எழுத்துக்கள் தவிர தங்களை முன்னாள் போராளிகள் என்று அடையாளப்படுத்தியதுமில்லை. அந்த கௌரவத்தை யாரிடமும் எதிர்பார்க்கவும் இல்லை.  ஆனால் அவர்கள் பழிவாங்கப்பட்டது போல பல கருத்தாளர்களால் அவமதிக்கப்பட்டார்கள். இந்த அவமதிப்பு அவர்களை ஒரு விரக்தி நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. அதற்கான காரணிகளாக பல கருத்தாளர்கள் இருந்திருக்கிறோம்.

நிழலி நீங்கள் வாழும் வீதியில் ஒரு தழிழர் ஒரு தவறைச் செய்துவிட்டால் அந்த வீதியில் வாழும் உங்களையும் சேர்த்து அந்த வீதியில் வாழும் தமிழர்கள் அப்பிடித்தான் என்ற பார்வையில் உங்களையும் சேர்த்து பழிக்கப்படும் போது உங்களுக்கு இயல்பாக வரும் ஆதங்கமும் விரக்தியுமே இங்கும் என்பதனை புரிந்து கொள்ளுங்கள்.

தங்களை மூச்சுக்கு மூச்சு முன்னாள் போராளிகள் என பிரகடனப்படுத்துவோர் மட்டுமே நம்பிக்கைக்கு உரியவர்கள் என்ற உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ள  முடியவில்லை. ஆனால் மறுத்து நான் இங்கு இன்னொரு தாக்குதல் வாங்க தயாராகவும் இல்லை.

 

சாவடையாதவன் முழுமையான போராளி இல்லையென்று கருத்தை எழுதிக்கொண்டு தானொரு போராளியென்று தன்னை நிறுவுகிற ஒருவர் மீதுள்ள நம்பிக்கையை முகம்காட்ட முடியாத இக்கட்டில் அன்றாட வாழ்வோடு போராடும் ஒரு அகதிப்போராளி அதுவும் கடைசிவரை மண்ணுக்குள் நின்று வந்து இன்று ஏதோ உயிரோடு வந்தாயே என அவர்களை நேசித்தவர்கள் ஆறுதல்படும் நேரத்தில் நீ முன்னாளா எப்படி நம்ப என்ற கேள்விக்கான பதிலை இப்போதைக்கு இந்தப் போராளிகள் யாராலும் தர முடியாது.

காலம் இவர்களுக்கும் ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுக்கும் வரை நான் காத்திருக்கத் தயாராகவே இவர்களை இந்த களத்தில் எழுதுங்கள் என வேண்டுகிறேன்.

 

80களில் , 90களில் துண்டு குடுத்து வெளியேறியவர்கள் 2009 வரையும் கடைசிவரை நடந்தது இதுதான் எனச் சொல்வதையும் எழுதுவதையும் நம்பும் நாங்கள் இறுதிவரை நின்று உயிர்களை மட்டும் கொண்டு வந்து இன்னும் போராட்டம் முடியாமல் தினம் தினம் நோயோடும் பழைய நினைவுகளோடு அல்லாட முடியாத மனஅழுத்தம் இன்ன பிற நோய்களோடும் அவலப்படுகிறவர்களை நீ முன்னாள் போராளியா எப்படி நம்ப உன்னையென்று கேட்டு அவமதிக்காமல் அவர்களையும் சக கருத்தாளராக சக மனிதராக மதித்தால் போதும். அதுவே அவர்களது எதிர்பார்ப்பும்.

 

ஒவ்வொருவராக அழைத்து நான் முன்னாள் போராளி என்னை ஏற்றுக் கொள்ளென்று எந்தப்போராளியும் தன்னை அடையாளம் காட்டி எழுதும் நிலமையை இன்னும் இந்த மேற்குலகமும் கொடுக்கவில்லை. நாங்களும் கொடுக்கவில்லை.

 

Link to comment
Share on other sites

 

 

வாதம் அதுவல்ல கருத்தை முறியடிக்க அல்லது தங்களின் கட்டுக்குள் கொண்டுவர இங்கு சிலர் வைக்கும் சொல்லாடல் மிக தவறு அதி உச்ச விசுவாசிகளாக தங்களை காட்டுவதும் மற்றவனை பார்வையாளனா பார்ப்பது நிறுத்த படவேண்டும் .

இது நீண்ட காலமாக நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது .உண்மைகள் உறங்குவதில்லை .

Link to comment
Share on other sites

இங்கு உதாரணத்துக்கு ஒரு போராளியை சொல்கிறேன். ( என்னையும் நீ காட்டிக் குடுத்திட்டியோ அக்காச்சி என அடிக்க வராதையடா தம்பி பகலவன்)
நகைச்சுவையாக எழுதும் சுவாரசியமான எழுத்துக்களை எழுதும் ஒருவனாகவே பகலவனை இங்கு பலரும் அறிந்திருப்பீர்கள்.பகலவனால் பயிற்றுவிக்கப்பட்டவர்கள் பயிற்சியளிக்கப்பட்டவர்கள் ஒன்றாய் வாழ்ந்தவர்கள் என பலர் ஆனால் யாராலும் பகலவன் அறியப்படாத ஒரு முன்னாள் போராளி.

பகலவன் எந்த இடத்திலும் தன்னை ஒரு முன்னாள் போராளி என அடையாளப்படுத்தவில்லை. ஆனால் அவன் இறுதிவரை சாக்களத்தில் நின்றவன். தன்கையால் சாவுகளை அழைந்தவன் , தனது நேசிப்புக்கு உள்ளான எல்லாத்தையும் எல்லாரையும் இழந்தவன். ஆனால் அவனால் நான் இன்னார் இப்படி இருந்தேன் என அடையாளம் காட்ட முடியாது. அவனை அறிந்தவர்களுக்கு மட்டுமே அவனது கண்ணீரின் கனமும் அவனால் உறங்க முடியாது அந்தரிக்கும் நித்திரையிழப்பையும் அவன் தனக்குள்ளே ஒடுங்கிப் பொவதையும் அறிய முடியும்.

 

எங்களை நியாயப்படுத்துவதற்காக இத்தகையவர்களை காயப்படுத்தாமல் கருத்தாடலை செய்யுங்கள். அது போதும்.


நானும் ஒரு சந்தர்ப்பத்தில் யாழில் முன்னாள் போராளிகளின் அதிகரிப்பு சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது என்று எழுதியிருந்தேன் அது யாரையும் குறைசொல்ல அல்லது குற்றம் கண்டுபிடிக்க அல்ல முன்னாள் போராளிகள் என்ற பெயரில் கறுப்பாடுகள் வந்துவிடக் கூடாது

என்பதற்காகத் தான். நான் தெரிந்தோ, தெரியாமலோ எழுதியவை யாரையேனும் காயப்படுத்தியிருந்தால் அதற்காக உளப்பூர்வமான மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன்.

 

கறுப்பாடுகளை நாங்கள் இராமர்களாக நம்பிவிடுகிறோம். கறுப்பாடுகள் கள்ள மௌனத்தோடு காரியத்தை சாதித்துக் கொண்டு போகிறது. நாங்கள் நேர்மையானவர்களையே திரும்பத்திரும்ப சந்தேகிக்கிறோம்.

 

Link to comment
Share on other sites

இது போன்று ஒரு ஆதங்கம் அன்றிலிருந்து எனது மனதிலும் ஆறாது உள்ளது சாந்தி.

 

ஆனால் அன்றைய  விவாதம்  சம்பந்தமாக கருத்துக்கூறிய  புதியவர்களின் எழுத்தில்  பெரும் மமதை இருந்தது.

எடுத்தெறிதல் இருந்தது.

ஒருவரை மட்டம் தட்டவேண்டும் என்ற குறியே  பிரதானமாக இருந்தது.

 

இதை நீங்களோ

மற்ற  கருத்தாளர்களோ

ஏன் எழுதிய புதியவர்களோ ஏற்பீர்களா???

 

அதனால்தான்  கடைசியில் எமக்குத்தெரிந்த ஒரு போராளியையாவது காப்பாற்றும்   நோக்கமாக

திரியைப்பூட்டும் படி கேட்டேன்.

உண்மையில் இதை எழுதும் பொது என்  கண்களில்  கண்ணீர்........... :(  :(  :(

 

புதியவர்கள் இந்தக் களத்தில் சாய்ந்து போனால் தான் தாங்களும் நிலைக்கலாம் என்ற உண்மையை உணராதவர்கள். அதனால் நேர்மையாக எழுதிய கருத்தை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது போனது. இதைக்கூட மமதை என்று தயவு செய்து கருதிவிடாதீர்கள். மிகைப்படுத்தலையே பார்த்துப்பழகிய கண்களுக்கு யதார்த்தத்தை புரிந்து கொள்ள கடினமாகவே இருக்கும்.

 

அண்ணா நீங்கள் ஒருவரைக் காத்த நிம்தியில் இருக்கிறீர்கள். இங்கு எத்தனையோ பேரை காயப்படுத்தியது மட்டுமன்றி அவர்களை ஒதுங்கவுமல்லவா செய்து விட்டீர்கள்.

 

இங்கு அவமதிக்கப்பட்டு அவர்கள் ஒவ்வொருவரும் வாழ்ந்த வாழ்வை கேள்விக்குள்ளாக்கி சந்தேகித்த கருத்துக்களால் இதெல்லாம் வேண்டாமென ஒதுங்கிப்போனவர்களுக்காக நானும் உங்கள் போல கண்ணீரோடு அவர்களுக்காக இங்கு வாதாடுகிறேன் புரிந்து கொள்ளுங்கள்.

 

இது எனக்குச் 'செய்தி' சாந்தி! :o

 

நீங்கள் சொல்லும் போராளிகளுக்கும், அவர்களது பதிவுகளுக்கும் யாழில் மிகுந்த வரவேற்பிருந்தது ! :D

 

அவர்கள் பதிவுகள் குறைந்த போது, அவர்கள் ஏன் தொடர்ந்து எழுதவில்லை எனவும் பல உறவுகள் கேள்வியெழுப்பி இருந்ததையும் கண்டேன்!

 

நீங்கள் கூறுவது போன்ற எதையும் நான் அவதானிக்கவில்லை!

 

இதை ஏன் ஒரு விவாதப் பொருளாக்க வேண்டும் என்றும், என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை!

 

எதற்கும் மற்றைய உறவுகளின் கருத்துக்களையும் பார்ப்போம்!

 

அடிக்கடி பல திரிகளில் 2009 வரை களத்தில் நின்று வந்த போராளிகள் மீது எழுப்பப்படும் சந்தேகங்கள் பல இடங்களில் விவாதமாகியிருக்கிறது அதற்காகவே இந்தத் திரி புங்கை. உங்கள் கருத்திற்கு நன்றிகள்.

 

Link to comment
Share on other sites

இதில் முதலில் நிழலியின் கருத்துக்கு எனது பதில்.

நிழலி இத்திரியை ஆரம்பித்ததன் முதல் நோக்கம் கோவப்படவோ அல்லது கொழுத்தியெரிக்கவோ அல்ல. நிதானமாக கருத்தாடவும் இனிமேலும் நீ முள்ளிவாய்க்காலில் இருந்து எப்பிடி வந்தாய் அதன் வழியென்ன உன்னை எப்படி நம்புவது ? அல்லது ஒரு வரலாற்றுத்தவறை சுட்டிக்காட்டினால் அதற்கு பதில் சொல்லாமல் அந்தச்சமரில் நின்றாயா இந்தச் சமரில் எந்தச் சென்றியில் நின்றாய் என ஒருவரின் கருத்தை முறியடிக்க அல்லது தன்னை நியாயப்படுத்த பழி சுமத்தும் தன்மை இல்லாது போக வேணும். அதற்காகவே இங்கு எழுதுகிறேன்.

 

முதலில் இங்கு நான் பெயர்கள் குறிப்பிடாத போராளிகள் எந்த இடத்திலும் தங்கள் எழுத்துக்கள் தவிர தங்களை முன்னாள் போராளிகள் என்று அடையாளப்படுத்தியதுமில்லை. அந்த கௌரவத்தை யாரிடமும் எதிர்பார்க்கவும் இல்லை.  ஆனால் அவர்கள் பழிவாங்கப்பட்டது போல பல கருத்தாளர்களால் அவமதிக்கப்பட்டார்கள். இந்த அவமதிப்பு அவர்களை ஒரு விரக்தி நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. அதற்கான காரணிகளாக பல கருத்தாளர்கள் இருந்திருக்கிறோம்.

நிழலி நீங்கள் வாழும் வீதியில் ஒரு தழிழர் ஒரு தவறைச் செய்துவிட்டால் அந்த வீதியில் வாழும் உங்களையும் சேர்த்து அந்த வீதியில் வாழும் தமிழர்கள் அப்பிடித்தான் என்ற பார்வையில் உங்களையும் சேர்த்து பழிக்கப்படும் போது உங்களுக்கு இயல்பாக வரும் ஆதங்கமும் விரக்தியுமே இங்கும் என்பதனை புரிந்து கொள்ளுங்கள்.

தங்களை மூச்சுக்கு மூச்சு முன்னாள் போராளிகள் என பிரகடனப்படுத்துவோர் மட்டுமே நம்பிக்கைக்கு உரியவர்கள் என்ற உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ள  முடியவில்லை. ஆனால் மறுத்து நான் இங்கு இன்னொரு தாக்குதல் வாங்க தயாராகவும் இல்லை.

 

சாவடையாதவன் முழுமையான போராளி இல்லையென்று கருத்தை எழுதிக்கொண்டு தானொரு போராளியென்று தன்னை நிறுவுகிற ஒருவர் மீதுள்ள நம்பிக்கையை முகம்காட்ட முடியாத இக்கட்டில் அன்றாட வாழ்வோடு போராடும் ஒரு அகதிப்போராளி அதுவும் கடைசிவரை மண்ணுக்குள் நின்று வந்து இன்று ஏதோ உயிரோடு வந்தாயே என அவர்களை நேசித்தவர்கள் ஆறுதல்படும் நேரத்தில் நீ முன்னாளா எப்படி நம்ப என்ற கேள்விக்கான பதிலை இப்போதைக்கு இந்தப் போராளிகள் யாராலும் தர முடியாது.

காலம் இவர்களுக்கும் ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுக்கும் வரை நான் காத்திருக்கத் தயாராகவே இவர்களை இந்த களத்தில் எழுதுங்கள் என வேண்டுகிறேன்.

 

80களில் , 90களில் துண்டு குடுத்து வெளியேறியவர்கள் 2009 வரையும் கடைசிவரை நடந்தது இதுதான் எனச் சொல்வதையும் எழுதுவதையும் நம்பும் நாங்கள் இறுதிவரை நின்று உயிர்களை மட்டும் கொண்டு வந்து இன்னும் போராட்டம் முடியாமல் தினம் தினம் நோயோடும் பழைய நினைவுகளோடு அல்லாட முடியாத மனஅழுத்தம் இன்ன பிற நோய்களோடும் அவலப்படுகிறவர்களை நீ முன்னாள் போராளியா எப்படி நம்ப உன்னையென்று கேட்டு அவமதிக்காமல் அவர்களையும் சக கருத்தாளராக சக மனிதராக மதித்தால் போதும். அதுவே அவர்களது எதிர்பார்ப்பும்.

 

ஒவ்வொருவராக அழைத்து நான் முன்னாள் போராளி என்னை ஏற்றுக் கொள்ளென்று எந்தப்போராளியும் தன்னை அடையாளம் காட்டி எழுதும் நிலமையை இன்னும் இந்த மேற்குலகமும் கொடுக்கவில்லை. நாங்களும் கொடுக்கவில்லை.

 

 

சாந்தி,

 

என் பதிலை எழுதியதன் காரணமும் கோபப்படவோ அல்லது கொழித்தியெறிக்கவோ அல்ல.

 

ஒரு புனைகதையையோ, அல்லது புனைவு மிக்க ஒரு கவிதையையோ எழுதும் போது தான் இன்னார் என்பதன் அடையாளத்தினை காட்ட வேண்டிய அவசியம் அந்த ஆக்கத்தினை எழுதியவருக்கு இல்லை. ஆனால், ஒரு வரலாற்றினை எழுத முற்படும் போது, ஒரு போராட்ட இயக்கத்தின் தலைவர் பற்றி எழுத முற்படும் போது எழுதியவர் மீதான நம்பகத்தன்மை கண்டிப்பாக அவசியம். அது ஒரு முன்நிபந்தனையாகவும் வைக்கப்படல் வேண்டும். இல்லாவிடின் எவராலும் தான் - முற்றிலும் சம்பந்தப்படாத ஒருவராலும் கூட - கேட்டுத் தெரிந்த, வாசித்து அறிந்த விடயங்களை வைத்து வரலாறு என்ற போர்வையில் எதனையும் எழுதி செல்ல முடியும்.

 

ஒரு கருத்துக்கு பதில் கருத்து எழுதும் போது கடைப்பிடிக்க வேண்டிய நாகரீகம் பற்றிய புரிதல்கள் இல்லாமைதான் எழுதியவர் மீதான தனிமனித தாக்குதல்களாக, "நீ அது செய்தாயா, அங்கு நின்றாயா" என்று பரிணமிக்கின்றது. இது நம்பகத்தன்மை சார்ந்த விடயம் அல்ல. கருத்துக்கு பதில் கருத்து வைக்கும் நாகரீகம் சம்பந்தமான விடயம்.

 

நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்றால், ஒருவர் தான் முன்னால் போராளி என்று கூறிவிட்டு எழுதியதை அப்படியே நம்ப வேண்டும். அவர் உண்மையிலேயே முன்னால் போராளியா என சரிபார்ப்பது கூட தவறு. எதிர்த்து ஒரு கேள்வியும் கேட்கக் கூடாது என்று. மன்னிக்கவும், ஒருபோதும் என்னால் இந்த வாதத்தினை ஏற்றுக் கொள்ள முடியாது.

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி

 

தங்களது நேரத்தை தொடர்ந்து வீணாக்கவிரும்பவில்லை

 

யாழ்  களம் போன்ற முகமறியாத ஒரு கருத்துக்களத்தில்

முன்பின் எழுதாத ஒருவர்

அல்லது முன்பே பலமுறை தாயகம்  சம்பந்தமாக தாறுமாறாக எழுதப்பட்ட போது

அதை தட்டிக்கேட்காத ஒருவர்

திடீரென ஒரு குறிப்பிட்ட திரியில் மட்டும்

ஒரு குறிப்பிட்ட நபரை மட்டும் குறி  வைத்து

ஒரு வழித்தாக்குதல் மட்டுமே செய்தது சந்தேகத்தக்குள்ளாகியது என்பதே உண்மை.

இதை இங்கு எழுதும் தாயக விரும்பிகள் பலரும் அறிவர்.

 

எனவே அவர்கள்  தொடர்ந்து இங்கு எழுதுவதன் மூலம் தங்களது தாயகம் சம்பந்தமானதும்

தமிழர் தேசியம்  சம்பந்தமானதுமான கருத்துக்களை  பதிவதனூடு மட்டுமே

அவர்களை நாம் புரிந்து கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியும்.

இல்லாது விட்டால்

திடீரென மீண்டும இது போன்று ஒரு திரிக்கு மட்டும் திரும்பி  வரும் போதும் அதேநிலையே  ஏற்படும்

இது தவிர்க்கமுடியாதது.

 


சாந்தி,

 

என் பதிலை எழுதியதன் காரணமும் கோபப்படவோ அல்லது கொழித்தியெறிக்கவோ அல்ல.

 

ஒரு புனைகதையையோ, அல்லது புனைவு மிக்க ஒரு கவிதையையோ எழுதும் போது தான் இன்னார் என்பதன் அடையாளத்தினை காட்ட வேண்டிய அவசியம் அந்த ஆக்கத்தினை எழுதியவருக்கு இல்லை. ஆனால், ஒரு வரலாற்றினை எழுத முற்படும் போது, ஒரு போராட்ட இயக்கத்தின் தலைவர் பற்றி எழுத முற்படும் போது எழுதியவர் மீதான நம்பகத்தன்மை கண்டிப்பாக அவசியம். அது ஒரு முன்நிபந்தனையாகவும் வைக்கப்படல் வேண்டும். இல்லாவிடின் எவராலும் தான் - முற்றிலும் சம்பந்தப்படாத ஒருவராலும் கூட - கேட்டுத் தெரிந்த, வாசித்து அறிந்த விடயங்களை வைத்து வரலாறு என்ற போர்வையில் எதனையும் எழுதி செல்ல முடியும்.

 

ஒரு கருத்துக்கு பதில் கருத்து எழுதும் போது கடைப்பிடிக்க வேண்டிய நாகரீகம் பற்றிய புரிதல்கள் இல்லாமைதான் எழுதியவர் மீதான தனிமனித தாக்குதல்களாக, "நீ அது செய்தாயா, அங்கு நின்றாயா" என்று பரிணமிக்கின்றது. இது நம்பகத்தன்மை சார்ந்த விடயம் அல்ல. கருத்துக்கு பதில் கருத்து வைக்கும் நாகரீகம் சம்பந்தமான விடயம்.

 

நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்றால், ஒருவர் தான் முன்னால் போராளி என்று கூறிவிட்டு எழுதியதை அப்படியே நம்ப வேண்டும். அவர் உண்மையிலேயே முன்னால் போராளியா என சரிபார்ப்பது கூட தவறு. எதிர்த்து ஒரு கேள்வியும் கேட்கக் கூடாது என்று. மன்னிக்கவும், ஒருபோதும் என்னால் இந்த வாதத்தினை ஏற்றுக் கொள்ள முடியாது.

 

 

அத்தனையும்  உண்மை

நன்றி நிழலி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
முதலில் தலைப்பை,திரியை ஆரம்பித்தமைக்காக சாந்தி அக்காவுக்கு ஒரு நன்றியை சொல்லிக் கொண்டு விடயத்திற்குப் போவோம்.
 
80/90 களுக்கு முதல் வந்த போராளிகளாக இருக்கட்டும் அல்லது மு.வாய்க்காலில் நின்றுட்டு வந்த போராளிகளாக இருக்கட்டும் புலம் பெயர் நாடுகளில் எப்படி அவர்கள் நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்துத் தான் அவர்களை ஏற்க வேண்டுமா அல்லது அல்லது தவிர்க்க வேண்டுமா என்று முடிவு செய்ய வேண்டும்.ஈழத்தில்,தலைவரின் பாசறையில் வளர்ந்தவர்கள் [ஒரு சிலரைத் தவிர]80,90 களில் வந்தவர்களும் ஏன் மு.வாய்க்காலில் இருந்து தப்பி வந்தவர்கள் கூட எவ்வளவு கேவலமாக இங்கு நடந்து கொள்கிறார்கள் என்பதை பார்த்துக் கொண்டு தானே இருக்கிறம்.சுபேஸ் சொன்ன மாதிரி எதுவும் இருக்கும் இடத்தில் இருந்தால் தான் சிறப்பு.
 
சாதரணமாக என்னைப் போன்றவர்கள் பிழை செய்தால் என்ட வளர்ப்பு சரியில்லை என்று சொல்லி என்னுடைய பெற்றோரை திட்டுவினம்.ஆனால் இப்படியான ஒரு கட்டுக்கோப்பான அமைப்பில இருந்திட்டு வந்து ஒருவர் பிழை செய்தால் யாரை திட்டுவினம்.இவர்கள் பிழை செய்வதை என்னால் கொஞ்சம் கூட ஏற்க முடியாது.
 
முன்னால் போராளி என்பதற்காக அவர்கள் சொல்வதை, அது தயா அண்ணாவாக இருக்கட்டும் அல்லது உங்கள் அன்புத் தம்பி பகலவனாக இருக்கட்டும் கண்ணை மூடிக் கொண்டு ஏற்க வேண்டும் இல்லைத் தானே!
 
அந்தத் திரியில் நான் கருத்து எழுதியிருந்தேன்.அதில் தயா அண்ணாவைக் காக்க இங்குள்ள சில பெரிய மனிசர்கள் எவ்வளவு கஸ்டப்பட்டார்கள் என்பதையும் பார்த்தேன்.ஆனால் அதில் தயா அண்ணா என்ட போராளியைக் காப்பாற்ற வேண்டும் என்பதை விட தயா அண்ணா ஒரு பழைய உறுப்பினர்கள்,தங்களோடு சேர்ந்து தேசியத்திற்கு ஆதரவாக எழுதுபவர் என்ட முனைப்பே காணப்பட்டது.இப்படி எத்தனையோ திரிகளில் இந்த பெரிய மனிசர்கள் பக்கச் சார்பாக நடந்து கொண்டுள்ளார்கள்.அவர்களுக்கு பிடித்த உறவு,பிடிக்காத உறவொன்றுக்கு கேவலமாக எழுதினால் கண்டும்,காணமல் இருப்பார்கள்....இது போன்ற கண விடயங்கள் சொல்லிக் கொண்டே போகலாம்.அதுக்கும்,புலிக்கும் சம்மந்தமில்லை என்பது என் கருத்து
 
புலியில் சேர்ந்து போராடப் போகையில் தாங்கள் புலத்திற்கு தப்பி வருவோம் அவர்களை நாங்கள் மதிக்க வேண்டும் அல்லது அவர்கள் கருத்தை ஏற்க வேண்டும் என்று எதிர் பார்த்தா புலியில் சேர்ந்தார்கள் அர்ப்பணிப்புடன் சேர்ந்தவர்கள் இதை எல்லாம் எதிர் பார்க்க மாட்டார்கள்.யாழில் அவர்கள் சொல்வதை மற்றவர்கள் ஏற்கவில்லை,அவர்களுக்கு உரிய இடம் கொடுக்கப்படவில்லை.இதனால் யாழை விட்டு ஒதுங்கி விட்டார்கள் என்று சரியான கருத்தில்லை.
 
ஒரு கருத்தை,தங்கள் அனுபவத்தை,உண்மை சொல்வதற்கு எதற்கு பயப்பட வேண்டும்? அவர்கள் சொல்வதை கருத்தாடும் எதிராளி ஏற்க வேண்டும் என்பதை யாழை வாசிக்கும் உறவுகள் வாசித்து எது உண்மை/பொய் என்று பகுத்தறிந்து கொள்வார்கள்.
 
கடைசியாக ஒரு புதுத் திரியில் வந்து தயா அண்ணாவோ அல்லது சாஸ்திரியோ எதாவது பிழையாக எழுதினால் அது பிழை என்று பல பேர் சொல்ல வருவினம்.அவர்கள் தொடர்ந்து யாழில் எழுதும் ஆட்கள் இல்லை.சந்தர்ப்பத்திற்கேற்ப சரி,பிழைகளை சுட்டிக் காட்ட வருவினம்.
 
புலிகள் இருக்கும் போது அவர்கள் சொல்வதை கண்ணை மூடிக் கொண்டு ஆமாம் போட்டதால் தான் இன்று இந்த நிலை[அதைத் தான் இப்பவும் கொஞ்சப் பேர் யாழில் செய்யினம்].யார் சொல்கிறார்கள் என்று பார்க்காமல் என்ன சொல்கிறார்கள் அது சரியா/பிழையா என்று பார்த்தால் ஒரு பிரச்சனையுமில்லை :)  
 
 
 
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சாந்தி அக்கா

 

நீங்கள் குறிப்பிட்ட அந்த திரியில் நானும் கருத்தை எழுதியிருந்தேன். முடிந்தளவு யாரையும் காயப்படுத்தாமல் எழுதுவதில் கவனம் செலுத்தியிருந்தேன். அதையும் மீறி யாரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னித்துக்கொள்ளும்படி வேண்டுகின்றேன்.

 

இந்த "முன்னாள் போராளி" என்ற வார்த்தையே தவறு என்று நினைக்கின்றேன். இது ஒருவர் முன்னர் தான் போராளி தற்பொழுது அவர் போராளி இல்லை என்பதை தானே குறிக்கின்றது. எனக்கு தெரிந்து பலர் இப்பொழுதும் மனதளவில் போராளியாகவே உள்ளனர். என்ன ஆயுதம் தான் அவர்களிடம் இல்லை. ஆனால் கொள்கையில் சற்றும் மாற்றமில்லை. ஆயுதம் இல்லாவிட்டால் ஒருவன் முன்னாள் போராளியா? 

 

இதில் யாரை குறை சொல்வது யாரை நியாயப்படுத்துவது என்று தெரியவில்லை. முள்ளிவாய்க்காலில் இருந்து தப்பி வந்த போராளிகளிடமும் சரி இங்கு வாழ்கின்ற போராளிகளிடமும் சரி, இருவரிடமுமே ஏமாந்துள்ளேன். அதற்காக என்றும் வருந்தியதும் இல்லை ஒதுங்கியதும் இல்லை. 

 

எத்தனை தடைகள் வந்தாலும் ஒரு போராளி அதனை உடைத்து வெளி வர வேண்டும் என்பது எனது விருப்பம். அவர்கள் ஒதுங்குவதால் அதனை பலர் தங்களின் சுயநலத்திற்காக பயன்படுத்திக்கொள்ள ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கின்றார்கள். இங்கு யாரும் யாருக்கும் துரோகி பட்டம் கொடுக்கும் தகுதியைபெறவில்லை. 

 

இந்த சண்டை போராளிகளிற்குள் மட்டுமல்ல புலம்பெயர்ந்த தேசங்களில் எங்குமே உள்ளது.

 

பொதுச்சேவை என்று சொல்லி புதிய அமைப்புகள் வரும்பொழுது ஏற்கனவே அந்த துறையில் இருக்கும் அமைப்புகள் அவர்களை ஓரங்கட்ட முயற்சிக்கின்றன. 

 

கலைநிகழ்ச்சிகள் என்று இன்று வாரம் ஒன்று நடைபெறுகின்றது. ஏற்கனவே நடத்தியவர்கள் புதியவர்களை துரோகி என்று ஓரங்கட்ட பார்க்கின்றனர் (ஒரு சிலரின் நடவடிக்கைகள் தமிழ்த்தேசியத்திற்கு எதிரான  நடவடிக்கையாக உள்ளது உண்மையே).

 

ந.க.த.அ., அமைப்பு, மன்றம், ஒன்றியம் என்று நாளுக்கொன்று தோன்றுகின்றது. மாறி மாறி குற்றம் சொல்வதிலும் அறிக்கை விடுவதிலும் பலரின் வேலை முடிந்துவிடுகின்றது. 

 

இப்படிக்கு 

முன்னாள் துரோகி

 

(துரோகி பட்டம் வழங்கியவர்களை காணவில்லை. எனவே அவர்கள் வந்து நிரூபிக்கும் வரை நான் ஒரு முன்னனாள் துரோகி தான்) :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இப்படிக்கு 

முன்னாள் துரோகி

 

(துரோகி பட்டம் வழங்கியவர்களை காணவில்லை. எனவே அவர்கள் வந்து நிரூபிக்கும் வரை நான் ஒரு முன்னனாள் துரோகி தான்) :D

 

 

உங்களது முழுக்கருத்துடனும் உடன்படுவேன்.

இந்த வரிகள்  இல்லாதவிடத்து..........

 

முள்ளிவாய்க்காலுக்குப்பின்

இதுவும் ஒரு நடைமுறையாகி  வருகிறது

தனக்குத்தானே துரோகிப்பட்டம்  கொடுத்தபடி தொடங்குவது.

 

மற்றும்படி

நீங்கள்   எழுதியது போல்

உங்களைப்பற்றி  எனக்கொரு கருத்தும் பார்வையும்  உண்டு

அது

நீங்கள்  இங்கு எழுதியவற்றை  வைத்து வந்தது மட்டுமே.

அதை வைத்தே எனது கருத்தை நான்  சொல்லமுடியும்.

அதைத்தவிர வேறு வழி இங்கு (யாழில்) இல்லை.

Link to comment
Share on other sites

நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்றால், ஒருவர் தான் முன்னால் போராளி என்று கூறிவிட்டு எழுதியதை அப்படியே நம்ப வேண்டும். அவர் உண்மையிலேயே முன்னால் போராளியா என சரிபார்ப்பது கூட தவறு. எதிர்த்து ஒரு கேள்வியும் கேட்கக் கூடாது என்று. மன்னிக்கவும், ஒருபோதும் என்னால் இந்த வாதத்தினை ஏற்றுக் கொள்ள முடியாது.

 

நான் சொல்ல வந்தது இதுதான் நிழலி. முன்னாள் போராளியென்றோ அல்லது இன்னாள் போராளியென்றோ ஒருவர் தன்னை அடையாளப்படுத்தாமல் எழுதப்படும் விடயத்தில் கருத்தாளர்களாகிய நானும் நீங்களும் தெளிவோடு அவர்களை புறம் தள்ளாமல் கருத்தாட வேணும். அது இப்போ புதிதாய் வந்தவர்களாகட்டும் பழையவர்களாகட்டும்.

பொதுவாகவே எல்லாப் போராளிகளையும் கொச்சைப்படுத்தும் விதமான கருத்துக்களை அங்கீகரித்தலும் புதிய கருத்தாளர் என்பதற்காக ஒதுக்கி வைப்பதுமே தவிர்க்கப்பட வேணும். இங்கு குறித்த போராளிகளை கண்மூடித்தனமாக துரத்தியடித்ததே இங்கு நடந்தது. எல்லோருக்கும் ஒரே நீதியை நீங்கள் கொடுக்க வேணும். இதையே சொல்ல வந்தேன். சிலவேளை எனது தமிழ் கருத்து மயக்கத்தை தந்ததோ தெரியாது.

 

தங்களை அடையாளப்படுத்தியவர்களை அதாவது உங்களுக்கு தாங்கள் இன்னார் என்று அடையாளப்படுத்தியவர்களைக் கூட அவர்கள் தாங்கள் இவர்கள் என்று சொன்னதைத் தானே நம்பியிருக்கிறீர்கள். நீங்கள் அவர்களை அவர்கள் சொன்ன சமர்க்களங்களில் போய்  நின்று பார்த்து உறுதிப்படுத்திவிட்டு நம்பவில்லைத்தானே ?

 

Link to comment
Share on other sites

சாந்தி

 

தங்களது நேரத்தை தொடர்ந்து வீணாக்கவிரும்பவில்லை

 

யாழ்  களம் போன்ற முகமறியாத ஒரு கருத்துக்களத்தில்

முன்பின் எழுதாத ஒருவர்

அல்லது முன்பே பலமுறை தாயகம்  சம்பந்தமாக தாறுமாறாக எழுதப்பட்ட போது

அதை தட்டிக்கேட்காத ஒருவர்

திடீரென ஒரு குறிப்பிட்ட திரியில் மட்டும்

ஒரு குறிப்பிட்ட நபரை மட்டும் குறி  வைத்து

ஒரு வழித்தாக்குதல் மட்டுமே செய்தது சந்தேகத்தக்குள்ளாகியது என்பதே உண்மை.

இதை இங்கு எழுதும் தாயக விரும்பிகள் பலரும் அறிவர்.

 

 

இங்கு நீங்கள் திடீரென ஒருவர் வந்து எதிர் கருத்து வைத்தார் அதனால் சந்தேகித்தோம் என்கிறீர்கள்.

இதேபொலொருவர் குறித்த கருத்தாளரை திடீரென ஒருவர் புதிய பெயரொன்றில் வந்து தாக்கியடித்ததை நீங்கள் கவனிக்கவில்லையா ? அப்போ அவர் யார் ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நீங்கள் திடீரென ஒருவர் வந்து எதிர் கருத்து வைத்தார் அதனால் சந்தேகித்தோம் என்கிறீர்கள்.

இதேபொலொருவர் குறித்த கருத்தாளரை திடீரென ஒருவர் புதிய பெயரொன்றில் வந்து தாக்கியடித்ததை நீங்கள் கவனிக்கவில்லையா ? அப்போ அவர் யார் ?

 

சாந்தி

நான் நல்லதையே  நினைக்கின்றேன்.

அவர்கள்  எழுதுவதை  வைத்துத்தானே அவர்களது நிலையை  கொள்கையை  ஏன் முகத்தைக்கூட அறிந்து கொள்ளமுடியும்.

 

ஆனால் சிலர் ஏமாற்றலாம்

அது என்  தப்புக்கிடையாது

அவர்களது தப்பு

அவர்கள் தங்களைத்தாங்களே ஏமாற்றிக்கொள்கிறார்கள்  என்பது தான்  உண்மை.

இங்கு முன்னரும்  சிலர்  நடித்திருக்கிறார்கள்

வேசங்கள் கலைந்ததும் ஓடி இருக்கிறார்கள்

இன்றும்  கூட அதே பெயரில் வரமுடியாதுள்ளார்கள்.

பல நாளைக்கு ஒருவர்  நடிக்கவும் முடியாது

ஒழிக்கவும் முடியாது.

முகங்கள்  தெரியும் காலமிது

அது தெரியவந்தே ஆகும்..

அதற்கு அவர்கள்  இங்கு   தொடர்ந்து எழுதணும்.

Link to comment
Share on other sites

 

 

இங்கு யாரும் யாருக்கும் துரோகி பட்டம் கொடுக்கும் தகுதியைபெறவில்லை. 

 

 

நல்ல ஒரு தலைப்பு இன்றைய சூழலுக்கு ஏற்ப ஆரோக்கியமாக விவாதித்து நாம் தெளிவு பெற வேண்டிய முக்கியமான தலைப்பு .இணைப்பிற்கு நன்றிகள் சாந்தி அக்கா ...............
 
இந்த திரியில் உறவுகள் கருத்தாடும் கருத்துகளுக்கு அப்பால் என் மனதில் அன்று தொட்டு இன்று வரை உள்ள உணர்வை இங்கே குறிப்பிடுகிறேன் ..........செங்கதிர் கூறியது போல முன்னாள் போராளிகள்  அல்ல அவர்கள் போராளிகள் ,,,அந்த போராளிகளாய் இருந்தாலும் சரி ,போராளி இல்லாமல் ஆதரவு கொடுப்போராய் இருந்தாலும் சரி எமது இலட்சியத்தை நோக்கி எத்தனை எத்தனை இடையூறுகள் வந்தாலும் தொடர்ந்து பயனிக்கவேண்டும் .இந்த பயணத்திற்கு எம் அர்ப்பணிப்பையும் ,தியாகத்தையும் எப்பவும் எந்த சந்தர்ப்பத்திலும் வழங்க கூடியவராய் இருக்கவேண்டும் .அதற்கு நாம் தயாராகும் பட்சத்தில் அவை நாம் பதிவிடும் கருத்துக்களில் பிரதிபலிக்கும் .............நன்றிகள் 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.