Jump to content

இன்று குயிலினம் பாடமறந்தது..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
இன்று குயிலினம் பாடமறந்தது....எங்களின் வீதிகள் சோபை இழந்தது..  

 

 

15083_241317606019130_545762382_n.jpg

 

உன் நினைவு சுமந்து...எல்லாம் தொலைந்து... நடைப்பிணமாய் நாம்....
 
எல்லா இழப்போடும்
இதுவுமொரு பேரிழப்பே
யார் இட்ட சாபம் இது..? 
 
வீரவணக்கம் அண்ணா..

 

 

http://www.youtube.com/watch?v=hwq83qE93_w

Edited by சுபேஸ்
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு... உண்ணாவிரதம் என்றால் என்ன என்று, இருந்து காட்டிய தியாக தீபம் திலீபனுக்கு வீர வணக்கங்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

644055_595763843802722_876296134_n.jpg

 

ஈழ விடுதலைப் போராட்டமானது தியாகங்களின் சிகரங்களைத் தொட்ட சந்தர்ப்பங்களில், தியாகச் செம்மல் லெப்.கேணல் திலீபனின் தியாகம் மிக முக்கியமானதாகும். தமிழர்களின் விடுதலைப் போராட்டம் பல சந்தர்ப்பங்களில் ஆயுத ரீதியிலான வன்முறை வழியைத் தவிர்த்து அகிம்சை வழியை கடைப்பிடிக்க முனைந்த போதெல்லாம், எதிர்மறையான விளைவுகளையும் ஏமாற்றங்களையுமே பரிசாகப் பெற முடிந்தது.

திலீபனின் மரணம் உணர்த்துவது ஒன்றே ஒன்றுதான் அம்ஹிசை வழி போராட்டத்தை என்றுமே சிங்கள பேரினவாதம் கண்டுகொள்ளாது மாறாக காலில் போட்டு மிதிக்கவே செய்யும். 

"I am confident that our people will, one day, achieve their freedom. It gives me great satisfaction and contentment that I am fulfilling a national responsibility to the nation." - Lt. Col. Thileepan...

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு... உண்ணாவிரதம் என்றால் என்ன என்று, இருந்து காட்டிய தியாக தீபம் திலீபனுக்கு வீர வணக்கங்கள்.

 

 

26-ஆம் ஆண்டில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் மீள் நினைவுகள் ஒரு பார்வை
Link to comment
Share on other sites

வீர வணக்கங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக  வரலாற்றில் ஆயுதப்போராட்டம் என்றாலும்

சாத்வீகம்  என்றால்  என்ன  என்றாலும்

தமிழனுக்கு  அவை அப்பழுக்கற்று தெரியும் என

தன்னை  வருத்தி  கூறிச்சென்றவன்

இவனது  வயிறு சுருங்கியபோது

சுருங்கியது உலகமும்

காந்தி  தேசம் என்று  கர்ச்சித்தவர்களும் தான்

அத்தனை முகங்களையும் காட்டிச்சென்றவன்

 

உன்  பெயர் உலக  வரலாற்றில்  நிச்சயம் பொறிக்கப்படும்

அதற்காக நாம் உழைப்போம்

 

இவன்  காலத்தில்  வாழ்ந்த பெருமை எனக்கு.

திலீபனுக்கு வீர வணக்கங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமக்காக உடல் உருக்கி உயிர் நீத்த வீரனுக்கு வணக்கங்கள்

Link to comment
Share on other sites

எமது இனத்துக்காக உடலை உருக்கி உயிர் நீத்த திலீபன் அண்ணாவுக்கு வீரனுக்கு வணக்கங்கள் !

Link to comment
Share on other sites

1173738_531463916931702_486585196_n.jpg

 

இடிந்தகரையில் தோழர் . திலீபனுக்கு வீரவணக்கம்... 

 

Link to comment
Share on other sites

திலீபன் அண்ணாவின் நினைவு தினம் வரும் ஒவ்வொரு முறையும், அவர் உண்ணாவிரதம் இருந்ததில் இருந்து இந்திய துரோக தேசத்தின் அலட்சியத்தினால் கொல்லப்பட்ட நாட்கள் வரைக்குமான தினங்களின் நினைவுகளும் வந்து போகும்.

 

மக்களே புலிகளாகவும் போராளிகளாகவும், புலிகளே மக்களாகவும் ஒன்றுடன் ஒன்றாக கலந்து இருந்த நாட்கள். ஒவ்வொரு தினமும் திலீபன் அண்ணாவுக்காக மெய்யுருகிப் போய் போராட்ட பணி செய்யும் மாணவர்களாக இருந்த நாட்கள் அவை. துண்டுப் பிரசுரம் அடிக்க வசதி இல்லாத மாணவர் பருவம் என்பதால், கையால் எழுதி எங்கள் ஊர் முழுதும் சின்ன சின்ன சுவரொட்டிகள் செய்த காலம் அது.

 

அண்ணாவின் இறுதி மூச்சும் நின்று விட்ட அறிந்து கோபம் கொண்டு இந்திய அமைதிப் படையினைக் காணும் போதெல்லாம் காறி துப்பித் திரிந்தோம். வாழை மரங்களை ஒவ்வொரு வீதி சந்திகளிலும் தோரணங்களுடன் கட்டி சாத்தி இருந்தோம். ஊரெங்கும் மலர்களாள் அஞ்சலி செலுத்தி கண்ணீர் மல்கிக் கிடந்த காலம் அது.

 

இன்று நினைக்கும் போதும் அன்று அந்த நாட்களில் எம் நாசிக்குள் போயிருந்த சோகம் கலந்த ஒரு வாசனை/ நெடி இன்னும் மறக்காமல் மனசுக்குள் எழுகின்றது. அண்ணாவின் இறுதி மூச்சினை கலந்து வந்த நெடி அது. சாவின் பின்னும் கூட மறக்காது.

 

 

 

 

Link to comment
Share on other sites

இந்த மகாத்மா ,மாவீரர் தனது யாகத்தை முடிக்கும் போது விடுதிச்சாலையில் தங்கியிருந்து கல்வி கற்ற காலம் ....அடிக்கடி நல்லூருக்கு சென்று அவர் முன் தவம் இருந்த நாட்கள் இன்னும் இன்னும் என் கண் முன் நின்று ஊசலாடுகிறது .......அவர் வீரச்சாவை அடந்த தருணம் என்னிடம் என் நண்பன் கேட்டான் ஏண்டா தீலீபன் அண்ணா சாகனும் ...அவன் கேட்ட கேள்விக்கு அன்று விடை எனக்கு தெரியவில்லை . .
 
 
வீரவணக்கம் அண்ணா .
 
[ கள உறவுகள் யாராவது தீலிபன் அண்ணாவிற்காக வரிகளை தாருங்கள் இந்த இனிமையான களத்தினால் பாமாலையாக சமர்ப்பிப்போம் நன்றிகள் ]

 

Link to comment
Share on other sites

லெ.கேணல் தியாகி  திலீபனுக்கு வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திலீபன் அண்ணாவின் ஆத்மா எப்பவோ சாந்தியடைந்திருக்கும்.வீர வணக்கங்கள்
 
தீலிபன் அண்ணாவின் மரணத்திற்கு இந்தியா,இலங்கை அரசுகளோடு புலிகளும்,மக்களாகிய நாங்களும் பதில் சொல்ல கடமைப்பட்டு உள்ளோம்.கடைசி நேரத்தில் தீக்சிட்டோடு,தலைவர் நடத்திய பேச்சு வார்த்தையின் பிறகு அவர்களது[இந்தியாவினது] வாய் மொழி உறுதியை ஏத்து தீலிபன் அண்ணாவை காப்பாற்றி இருக்கலாம்.இந்தியா எப்படியும் ஏமாத்தித் தான் இருக்கும் ஆனால் திலீபன் அண்ணாவைக் காப்பாற்றி இருக்கலாம் என்பது என் கருத்து  
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.