Jump to content

கேட்கிறவன் ...........!


Recommended Posts

ஜனநாயக வழி நின்று நெடுநாள் போராடி

எம் தலையில் காலிமுகத்தில் சாணி பூசி

உருட்டி பிரட்டி எடுத்து எள்ளி நகையாடி

சிங்களம் மகிழ்ந்து இருந்த போது...

 

கேட்க நாதியற்று கேட்பார் எவரும் இன்றி

எம்மை காக்க எவர் வருவார் என

தந்தை செல்வா ஒரு மொழி ஒருஇனம்

என தமிழ்நாடு ஓடி ஐயாமாரை எம் ....

 

நிலை சொல்லி அழ அவரோ தன்னிலை

சொல்லிவிட்ட வரலாறு எம்மிடம் இருக்கு

நானோ இறையாண்மை அடிமை

நீயோ இன்னொரு அடிமை உனக்கு...

 

என்னால் என்ன செய்ய முடியும் என விளக்கம்

சொல்லி கை கழுவி விட்ட கதை நினைவிருக்கு

எமக்கு காலம் கடந்தது வர எமக்கான கனவை

சுமந்த ஒரு வீரன் வர நாம் பட்ட மகிழ்வு அளவில்லை..

 

தம்பியா வந்த அண்ணன் பின் தானை தலைவனாய்

வளர்த்த கரிகாலன் எம் இனத்தின் விடிவெள்ளி

எம்மை ஒரு பாதையில் ஒளியுடன் கூட்டி போன

வழிகாட்டி தான் நேசித்த மண்ணை மக்களை கட்டி

காத்த வரலாற்று நாயகன் ஈழம் என்னும் ஒரு தேசம்..

 

உலக வரைபடத்தில் உருவாக நின்ற ஒரு நாயகன்

மக்களில் இருந்து புலிகளை உருவாக்கி புலிகள்தான்

மக்கள் மக்கள்தான் புலிகள் என முழங்கிய தேசியத்தின்

தலைவனை அவர் பின்னால் சென்ற மக்களை...

 

இன்று 30 வருடம் வராதவன் 3வருடம் முன்வந்தவன்

பூனை என்கிறான் இடத்தை நிரப்ப முடியாது என்கிறான்

ஈழப் பெண்ணை விதைவைப் பெண்ணை மணப்பேன்

இலை மலர ஈழம் மலரும் என்றான் நடந்தது வேறு ...

 

புலித்தடைக்கு அனுமதி கொடுத்த சபாநாயகர்

காளிமுத்து பெண் கைபிடித்து இந்திய..

இறையாண்மைக்கு கட்டுப்பட்டு அரசியல்

நடத்தும் பயல் எம தமிழ் தலைமைகளை....

 

பூனை என்பதா முன்னம் பெரியார் பேரன் என்றார்

இப்போ பெரியார் தெலுங்கன் என்றார் அவரின்

அரசியல் சாசனம் இந்திய இறையாண்மைக்கு

உள் பட்டவேனே கட்சியில் உறுப்பினர் ஆகலாம்..

 

 

என்று இருக்க கனடாவிலும் ஐரோப்பிலும்

கிளை எதுக்கு டொலர்பார்க்க யூரோ பார்க்கவா

சிவத்த துண்டு போட்டு விறைப்பா நின்றால்

எம் தலைவன் ஆகமுடியும் என்கிற நினைப்பா

எம் தலைவன் காட்டி போன கட்சி அவர்...

 

உருவாக்கி போன கூட்டமைப்பு அதை

கேள்வி கேட்கவும் மாற்றி அமைக்கவும்

எமக்கே உரிமை சினிமா கூத்தடிக்கு இல்லை

எம்மை கேள்வி கேட்கும் உரிமை..

 

பொன்சேகா கோமாளிகள் என்றபோது வராத கோவம்

இப்ப ஏன் வருது விக்கி தமிழ்நாட்டு

அரசியலை சொல்ல இவருக்கு ஏன் வருது கோவம்

இவர்  மட்டுமா அங்கே அரசியல் தலைவர் ...

 

புலிபோல் சூடு போட்டு கொண்டாலும் பூனை

புலியாக முடியாது மானே நீதான் எமக்கு

அடுத்த காமடியன் பவரே பதவியும் கதிரையும்

வர நீ நாளை நிப்பா திருமாவளவன் நிலைமையில்..

அரசியல் மாற்றும் மாற்ற பண்ணும்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சூடாத்தான் இருக்கிறியள் :D

Link to comment
Share on other sites

செம கடுப்பு அக்கா :icon_mrgreen:

Link to comment
Share on other sites

தம்பி டோய் அஞ்சரன் உங்களுக்கு அட்டமத்தில சனி பிடிச்சிட்டுது ராசா.

எண்டாலும் கவிதைக்கு நன்றி.

Link to comment
Share on other sites

சாதித்தவன் குருதியை சிந்தியவன் எல்லாம் கசக்கி எறியப்பட்ட வெற்றுத்தாள்போல் இருக்க

கேப்பில ஆட்டோ ஓடியவன் தலவீறாம் வடக்கை நம்பி அழிந்தது போதும் .சாந்தி அக்கா .!

Link to comment
Share on other sites

வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு வேண்டாம்... கருத்தாளன் வாசகனால் உள்வாங்கப்பட்டால்தான் அவனது கருத்துகளும் உள்வாங்கப்படும் என்பதனை கவனத்தில் எடுங்கள். வாசகனிலிருந்து கருத்தாளனோ அல்லது எழுத்தாளனோ அந்நியப்பட்டால் அவன் என்னதான் நல்ல கருத்தையோ ஆக்கத்தையோ கொடுத்தாலும் வாசகர்கள் அதை ஒரு பொருட்டாகக் கவனிக்கமாட்டார்கள். எனவே கருத்து எதுவாக இருந்தாலும் பாவிக்கும் வார்த்தைகளிலும் அணுகுமுறையிலும் வாசகரைவிட்டு அந்நியப்படாத தன்மையைக் கவனித்துக் கொள்ளுங்கள். :D


தம்பி டோய் அஞ்சரன் உங்களுக்கு அட்டமத்தில சனி பிடிச்சிட்டுது ராசா.

எண்டாலும் கவிதைக்கு நன்றி.

 

ஒருக்கா பஞ்சியைப் பாராம அடுத்த சனிக்கிழமை போய் அவருக்காக எள்ளும் எண்ணையும் எரிச்சுவிடுங்கோ பிள்ளை!! :lol::D
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"இன்று 30 வருடம் வராதவன் 3வருடம் முன்வந்தவன்

பூனை என்கிறான் இடத்தை நிரப்ப முடியாது என்கிறான்

ஈழப் பெண்ணை விதைவைப் பெண்ணை மணப்பேன்

இலை மலர ஈழம் மலரும் என்றான் நடந்தது வேறு ...

 

புலித்தடைக்கு அனுமதி கொடுத்த சபாநாயகர்

காளிமுத்து பெண் கைபிடித்து இந்திய..

இறையாண்மைக்கு கட்டுப்பட்டு அரசியல்

நடத்தும் பயல் எம தமிழ் தலைமைகளை....

 

பூனை என்பதா முன்னம் பெரியார் பேரன் என்றார்

இப்போ பெரியார் தெலுங்கன் என்றார் அவரின்

அரசியல் சாசனம் இந்திய இறையாண்மைக்கு

உள் பட்டவேனே கட்சியில் உறுப்பினர் ஆகலாம்.".

 

 

 

நீங்களும் உங்கள் முகத்தை இடைகிடை  நீட்டிக் காட்டுகின்றீர்கள் 
கவிதைக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

 

ஒருக்கா பஞ்சியைப் பாராம அடுத்த சனிக்கிழமை போய் அவருக்காக எள்ளும் எண்ணையும் எரிச்சுவிடுங்கோ பிள்ளை!! :lol::D

 

 

இப்ப ஒவ்வொரு சனியும் நான் எள்ளெண்ணையில பொரில் செய்து ஏழரையாண்டவருக்கு எள்ளெண்ணையும் எரிக்கிறேன். இந்த முறை அஞ்சரனுக்காக ஒரு பொட்டளி எரிச்சுவிடுறேன். :lol:  இவ்வளவு சோழி சொன்னப்பிறகு விட்டால் தம்பிக்கு பாவமெல்லோ. :mellow:

 

Link to comment
Share on other sites

நன்றி வாத்தியார் ....சோழியன் ..சாந்தியக்கா :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூத்தாடி என்ற சொல்லை அதிகம் பாவிக்கின்றீர்கள் அஞ்சரன். கலைஞர்களை அவமதிக்கும் இந்தச் சொல்லைத் தவிர்த்தால் நல்லது.

சினிமா உலகத்தில் இருந்து வந்தவர்கள்தான் தமிழ்நாட்டைக் காலம் காலமாக ஆண்டு வருகின்றார்கள். அவர்களது ஆட்சியில் தமிழகம் முன்னேற்றப் பாதையில்தான் செல்கின்றது. எனவே சினிமா உலகத்தில் இருந்து வந்தவர்களும் மிகவும் செயல்திறன் உள்ளவர்கள்தான்.

Link to comment
Share on other sites

இப்ப இருக்குற ஒரு சினிமாக்காரன் சொல்லுங்கோ வெளிப்படையா எமக்காக இறங்கியவன் எவனும் இல்லை சங்கங்கள் கட்டளை போட்டா வந்து சுவிங்கம் சாப்பிட்டு போவங்க இதுக்கு அவங்களுக்கு மரியாதையை வேறையா அண்ணா வெளிநாடுகளில் படம் ஓட இப்ப இரண்டு சொல் ஈழம் பற்றி இடையில் போடினம் அதுகூட பிழைப்புதான் பாருங்கோ . 

Link to comment
Share on other sites

அஞ்சரன்.... நீங்கள் சொல்ல வாறது என்னவென்று புரிகிறது.

ஆனால்... அதை புரிந்தும் புரியாதமாதிரி காட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறதே!

சில வேளைகளில் "மெளனம்" என்பதும் சிறந்த பதிலாகவும் செயலாகவும் அமைந்துவிடுகிறது.

அது உங்களுக்கும் ஒருநாள் புரியும். :)

எதுவாயினும்..... வாழ்த்துக்கள் அஞ்சரன்! :)

 

Link to comment
Share on other sites

நன்றி கிருபா அண்ணா கவிதை .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.