Jump to content

சிறிலங்கா: மறையும் நம்பிக்கைக் கீற்று! - 'தி இந்து' ஆசிரியர் தலையங்கம்


Recommended Posts

புலத்தில் பொயில் சில்லக் என்று காலமும் அவரவர் நாட்டு அரசுகளும் கைவிட்ட சில முன்னாள் பிரபலங்களியோ அல்லது தமிழர் வசிக்கும் பகுதி எம்பி மாரையோ வைத்து நீங்கள் செய்யும் போராட்டங்கள், அந்த நாட்டு வெளியுறவு அமைச்சின் பியூனின் கவனத்துக்கு போவதற்க்குள் சர்மாவும் நம்பியாரும் ஐநா விலும் காமன்வெல்திலும் ஆப்பை அழகாய் இறக்கி அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து விடுவார்கள். இதுதான் உண்மை.

 

 

Francis Boyle செர்பிய இனக்கொலை வழக்கில் வாதாடி வெண்டவராம்.. என்னய்யா நீங்க அவரை முன்னாள் என்கிறீங்க..?  :(  எனக்கு புரிஞ்சிடிச்சு.. :unsure: எல்லாமே புரிஞ்சிடிச்சு.. :( ஒரு சர்தார்ஜீயை யாழ் உறுப்பினராக்கி உங்களுடன் கருத்துப்போர் புரிய ஆவன செய்ய வேணும்.. :icon_idea:

Link to comment
Share on other sites

  • Replies 87
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இப்ப அவர் முன்னாள்தான். அமெரிக்காவின் இருபெரும் கட்சிகளும் இவரை வெகு தொலைவில் தள்ளியே வைதுள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க வேற விக்கு, பாதுகாப்பு சபையில இடம் கிடைக்காமலே இந்த ஆட்டம் ஆடுறாங்க, இடம் கிடைச்சா நம்ம கதி அதோ கதிதான். நம்மை நேபாளத்தை வங்காள தேசை, பூட்டானை அடக்கி காட்டினால் தான் அவர்களுக்கு இன்னும் இமேஜ் எகிறும். பாதுகாப்பு சபை இடமும் கூடி வரும். ஆக சர்மாவும் நம்பியாரும் எப்போதும் தம் நாட்டுக்காவே உழைக்கிறனர்.

நாங்கதான் பவர் ஸ்டார், டீ ஆர், சாம் அண்டர்சன், பிரான்ஸிஸ் போயில் என்று காமெடிக்கூட்டங்களாயே அலயுறம்.

Link to comment
Share on other sites

நிலத்தில் கூட்டமைப்பில் இருப்பவர்கள் காட்டும் துணிவில் 10%கூட இல்லாதபடியால் தான் நாம் புலத்துக்கு ஓடிவந்தோம். இங்கே வந்த்ஹிருந்த்ஹ படி இன்னும் ஆருதலாய் காய் நகர்தல்லாம், இந்திய ஆளும் வர்கத்தை வளைக்களாம் என்று சொல்வது அபத்தம். இந்தியாவின் சவுத் பிளாக் புலத் தமிழர் எவரையும் சீந்தாது, காரணம் அவர்களை பொறுத மட்டில் நீங்கள் பிரிவினைவாதிகள். இந்திய விடுதலையில் 2 ம் உலக யுத்தம் போல ஒரு பெளதீக புறக்காரணி மாற்றம் வரும் வரையில் இந்தியாவின் இலங்கை கொள்கை மாறாது. அதுவரைக்கும் நிலத்தில் மக்கள் காத்துகொண்டிருந்தால் இன்னும் 20 வருட்ச்த்தில் நீங்கள் கொலிடே போகும் யாழ்ப்பாணம், நீர்கொழும்பை போல காட்சி தரும்.

இதைதடுப்பதே கூட்டமப்பின் பிரதான நோக்கம்.

அது சரி...

இப்ப சம்பந்தன் அன் கோவுக்கு இலங்கை சிங்கள பொலீஸ் பாதுக்காப்பு குடுக்கிறது இல்லையா...?? நல்லா சொன்னீங்க பாஸ்...

இந்தியா இந்தியா எண்டுறீங்களே அவுங்க தமிழங்களுக்கு எதிரிங்களா பாஸ்...??? அதுவும் பரம்பரை எதிரியா...?? இலங்கையிலை சிங்களவன் ஒரு 2 கோடி வருமா....?? தமிழ் நாட்டிலை 7 கோடி தமிழன் இருக்கான் பாஸ்... தமிழனா இல்லை இலங்கையா எண்டா இந்தியா என்ன முடிவு எடுக்கும்...??

 

எங்கள பிரிவின வாதி எண்டுறீங்களே  அப்ப நீங்கள் யாரு பாஸ்....??   அப்ப நீங்கள்...??  ஜதார்த்த வாதியா...??   மக்களுக்கு ஏதும் செய்ய நினைக்காத ஆக்களை தான் ஜதார்த்த வாதி எண்டுவீர்களா...??  

 

இல்லை கேக்கிறன்  வாக்கு வாங்கி பதவிக்கு வர வேண்டும் எண்டதுக்காக கூழை கும்பிடு போட்ட கூட்டமைப்பு  இதுவரைக்கும்  என்ன செய்தது...  குறைந்தது  தடுப்பு முகாம்களில் இருந்த மக்களை பார்க்க தன்னும் போனார்களா...?? 

 

Link to comment
Share on other sites

//இந்நிலையில் இருப்பதை காப்பதற்க்கு ஒரேவழி, இந்தியா வை அனுசரித்து, தனி நாட்டை கைவிட்டு, மாகாண சபையில் தொடங்கி சம்ஸ்டி வரை போக எத்தனிபதே. இது நடக்கும் நடக்காமல் போகும் ஆனால் இது மட்டுமே இப்போது ஓரளவுக்கேனும் நடமுறைசாத்தியமானது.//

 

இது நடக்காமால் போனால் என்ன செய்யலாம்? வீட்டை இருந்து புலத்து புண்னாக்குகள் என்று சொல்லி உங்கள மாதிரி சொந்த வேலைகளைப் பார்ப்பதா?

 

//

ஆனால் இப்படி ஒரு காரியத்தை ஏற்றுகொண்ட மக்கள் தலைவர்களை புலத்திலிருந்து கொண்டு நாமே நக்கல் அடிப்பதும், திட்டுவதும், அவர்களுக்கு அப்படி செய் இப்படி செய் எனறு ஓடர் போடுவதும் நல்லயில்லை. இல்லை அநியாயம். அக்கிரமம்.//

 

புலத்தில் இருந்து மட்டும் அல்ல களத்தில் இருந்தும் கூட்டமைப்பைப் பற்றிய விமர்சினம் இங்கே ஏற்கனவே வைக்கப்பட்டுள்ளது. அதற்கான் பதில் தான் என்ன?

 

//இந்தியாவின் சவுத் பிளாக் புலத் தமிழர் எவரையும் சீந்தாது, காரணம் அவர்களை பொறுத மட்டில் நீங்கள் பிரிவினைவாதிகள்.// அது தான் நாச்சியப்பன் டெல்லிக்கு கூப்பிட்டு கூட்டம் வச்சவராக்கும்.

 

 

//இந்திய விடுதலையில் 2 ம் உலக யுத்தம் போல ஒரு பெளதீக புறக்காரணி மாற்றம் வரும் வரையில் இந்தியாவின் இலங்கை கொள்கை மாறாது.//

 

//

யுத்தம் நடக்கத் தேவையில்லை , சீனா வடக்கு தெற்கு என்று எல்லா இடமும் சுற்றி நிக்குது,  இப்ப செய்வதறியாது அமெரிக்காவின் வாலைப் பிடிச்சுக் கொண்டு நிக்கினம். இந்த உலகில் மாறாதது  என்று எதுவும் இல்லை.   

 

//இதில் அவ்ர்கள் வெல்லுவதை விட தோர்க்க தான் சாத்தியக்கூறுகள் அதிகம். ஆனால் இதை விட வேறு வழியில்லை. ஏனென்ரால் நாம் இப்போது இருப்பது கையறு நிலையில்.//

 

தோற்கும் வழியில் செல்ல மக்கள் என்ன முட்டாள்களா? கையறு நிலை என்பது உங்களைப் போன்ற தோல்வி மனநிலையில் இருப்பவர்களுக்கும் அடிமை தாசர்களுக்கும் மட்டுமே பொருந்தும்.

 

இன்றைய ஆசிய வலுச் சமனிலைப் போட்டி, சர்வதேச வலுச் சமநிலைப் போட்டி , இந்திய அரசியல் நிலமைகள் எல்லாமுமே எமக்குச் சாதகமாகவும் , சிறிலங்கா அரசுக்குப் பாதகமாகவுமே இருக்கின்றன. பயங்கரவாதம் என்னும் பூச்சாண்டியும் இப்போது இல்லை. இதனை எப்படி நகர்த்துவது என்பது எமது கையில். கூட்டமைப்பு சமயோசிதமாக இதனைச் செய்வதற்கான ஆற்றல் , கூட்டமைப்புள்ளே இருந்தே வரும். வரலாறு அச் சக்திகளையே முன் தள்ளும்.புலமும் களமும் அப்போது ஒன்றிணையும். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தல,

இந்தியாவுக்கு தமிழரும் வேண்டும் சிங்களவரும் வேண்டும். நீங்க எதிரியும் இல்லை நண்பனும் இல்லை. பகடைகாய். அவ்வளவே. இரண்டுபேரும் எப்போது பிக்கல் பிடுங்களில் நடுவராக இந்த்ஹியாவை நம்பி, வாழணும். தமிழ்ம்நாட்டின் 8 கோடில 7.9 கோடி உங்களை பத்தி நினக்கிறதே இல்ல. நினைக்கவும் இந்தியா விட்டாது. இல்லாட்டி வைகோ இன்னைக்கு முதலமைச்சர்ரயிருந்திருக்கணும். இல்லையே. அதனால அதப்பத்தி அவங்க கவலை படுறதில்லை.

ரவிராஜ், ஜோசப், சந்திரநேரு இன்னும் பலர் இவர்களின் ஆயுதம் தாங்கா வீரத்தை நீங்கள் மறக்கலாம், வரலாறு மறக்காது.

நான் பிழைப்பு வாதி பாஸ். இப்போ நிலத்தில் மக்கள் தக்கணபிழைக்கும் வழியையே பின்பற்றவேணும் என்று நினைக்கிற பிழைப்புவாதி.

கூடமைப்பு என்ன செய்தது எண்டி 80% வாக்குப்போட்ட மக்களை கேளுங்க பாஸ். கூட்டமைபுக்கான எனது ஆதரவு அவர்கள் செய்ததுக்கு மட்டுமில்லை, இனி செய்யாமல் விடப்போவது (தனி நாடு கேட்டல்) கும் சேர்த்துதான்.

Link to comment
Share on other sites

தல,

இந்தியாவுக்கு தமிழரும் வேண்டும் சிங்களவரும் வேண்டும். நீங்க எதிரியும் இல்லை நண்பனும் இல்லை. பகடைகாய். அவ்வளவே. இரண்டுபேரும் எப்போது பிக்கல் பிடுங்களில் நடுவராக இந்த்ஹியாவை நம்பி, வாழணும். தமிழ்ம்நாட்டின் 8 கோடில 7.9 கோடி உங்களை பத்தி நினக்கிறதே இல்ல. நினைக்கவும் இந்தியா விட்டாது. இல்லாட்டி வைகோ இன்னைக்கு முதலமைச்சர்ரயிருந்திருக்கணும். இல்லையே. அதனால அதப்பத்தி அவங்க கவலை படுறதில்லை.

ரவிராஜ், ஜோசப், சந்திரநேரு இன்னும் பலர் இவர்களின் ஆயுதம் தாங்கா வீரத்தை நீங்கள் மறக்கலாம், வரலாறு மறக்காது.

நான் பிழைப்பு வாதி பாஸ். இப்போ நிலத்தில் மக்கள் தக்கணபிழைக்கும் வழியையே பின்பற்றவேணும் என்று நினைக்கிற பிழைப்புவாதி.

கூடமைப்பு என்ன செய்தது எண்டி 80% வாக்குப்போட்ட மக்களை கேளுங்க பாஸ். கூட்டமைபுக்கான எனது ஆதரவு அவர்கள் செய்ததுக்கு மட்டுமில்லை, இனி செய்யாமல் விடப்போவது (தனி நாடு கேட்டல்) கும் சேர்த்துதான்.

 

 

நீங்கள் பிழைப்பு வாதியாக இருக்கிறதிலை எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை... 

 

நீங்கள் பிழைக்க வேண்டும் எண்டால்  தாயகத்திலை மக்களின் வாழ்வு மேம்பட வேண்டும்...   அதுக்காக சிங்களம் உங்களுக்கு எதையும் இனாமாக தரப்போவது இல்லை...  மாநகராச்ச்சியிடம் இருக்கும் கூட்டுறவு செய்வதை கூட மாகானசபையால் மக்களுக்கு செய்ய முடியாது... 

 

வைத்திய சாலைகள்  சாலை போடுறது நுளம்புக்கு மருந்தடிக்கிறது மட்டும் மக்களின் தேவை இல்லை... 

 

அங்கை இதை எல்லாம் விட பல நூறு மடங்கு பிரச்சினை இருக்கு...    மக்களின் அண்றாட வாழ்க்கை இயல்பு நிலைக்கு வரவேண்டும் ,  வாழ்க்கை தரம் உயர வேண்டும் ,  மக்களின் உழைப்பு க்கு சரியான  ஊதியம் வேண்டும்,   இதுக்கு  எல்லாம்  நல்ல முதலீடு வேண்டும்... 

 

முதலீடு எண்ட உடனை  அரசாங்கமோ , தொண்டு நிறுவனங்களோ காசை உங்களுக்கு  இலவசமாக தர மாட்டாது...  அதை தர சரியான இளிச்ச வாயர்கள் புலம்பெயர்ந்த தமிழர்களே....   சொந்த  மண்ணை  வளப்படுத்த  நான் கூட அதில் ஒருவன் ( இதில் பெருமைதான் எனக்கு ) ... 

 

இலங்கை அரசாங்கம் உங்களுக்கு வீதிகளை சீர் படுத்தி  இரயில் பாதைகளை போடுகிறான் எண்டால் உங்கள் மீதான அக்கறையில் இல்லை ...  யாழில் விளையும் பொருட்களையும்  கனிம வளங்களையும் குறைந்த விலைக்கு சுறண்டி கொண்டு இலகுவாக போவதற்குதான்... 

 

தனியாரும் சிங்களவரும்  வந்து சுரண்டி போவதுக்கு குறைந்தது அந்த பொருட்கள் தமிழர்களால் வாங்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டால்  பொருளாதாரமாவது சுற்றி சுளண்டு  தமிழர் பகுதிக்குள் இருக்கும்...   மேலும் அபிவிருத்திக்கு , மீள் முதலீட்டுக்கும்  போதுமானதாக இருக்கும்... 

 

இதை ஏன் சொல்கிறன் எண்டால்  தமிழர்களின் தன்னிறைவான அபிவிருத்தியே உலக நாடுகளை தமிழர்களுக்கு சார்பானவர்களாக மாற்றும்....  இதுதான் இண்றைய தமிழர்களின் பலம்...    

 

வடக்கும் கிழக்கும்  செளிப்பாக்குவதே இண்டைய தேவை...  அதுவே நாளைய விடுதலை.... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நரதர்,

சீனா இந்தியா இரண்டும் அடித்துகொள்ளும் அதில் நாம் குளிர்காயலாம் என்பது கற்பனைவாதம். வேண்டுமானால் இலங்கையை மையமாக வைத்து ஒரு பனிபோர் செய்யலாம். அதிலும் இரண்டு மச்சான் மாரை உடைய பெண்போல் இலங்கையை விழுந்து விழுந்து கவனிப்பர்களே தவிர உங்களுக்கு நாடெல்லாம் தர மாட்டார்கள். உங்களுக்கு சீனாவோ இந்தியாவோ உதவினால் இலங்கையின் நிரந்தர பகையை சம்பாதிக்க வே ண்டி வரும். எந்த பலமும், கேந்திர அனுகூலமும் இல்லாத உங்களுக்காக சீனாவோ இந்தியாவோ இலங்கையை பகைக்காது, ஒரு எதிரியை உருவாக்காது.

நீங்கள் சொல்லும்படி பார்த்தாலும் இந்தியா சீன முறுகல் முற்ற இன்னும் ஒரு 20 வருடமாகுமா? அதற்குள் யாழ் ஜம்புகோள ஆகிவிடும். பின் யாருக்காக போராடப்போகிறீகள்?

இது தோற்றவரின் அணுகுமுறைதான். தோற்றுவிட்டோம் என்ற யதார்தத்தை எற் ரபடியால்தான் ஜப்பான்னால் மீண்டும் எழ முடிந்தது.

புலத்தில் இருந்தபடி நாங்கள் தோக்கவில்லை என்று வறட்டு குதர்க்கம் பேசலாம்.

உலகம் மாறும் என்று கற்பனாவாதம் பேசலாம் ஆனால் நிலத்து மக்களால் அது முடியாது. நிலத்தில் இன இருப்பை தக்கவைப்பதற்க்கான களம் மிக குறுகியது. அந்த காலத்தை உங்கள் கற்பனைக்காக இழக்க முடியாது.

Link to comment
Share on other sites

நரதர்,

சீனா இந்தியா இரண்டும் அடித்துகொள்ளும் அதில் நாம் குளிர்காயலாம் என்பது கற்பனைவாதம். வேண்டுமானால் இலங்கையை மையமாக வைத்து ஒரு பனிபோர் செய்யலாம். அதிலும் இரண்டு மச்சான் மாரை உடைய பெண்போல் இலங்கையை விழுந்து விழுந்து கவனிப்பர்களே தவிர உங்களுக்கு நாடெல்லாம் தர மாட்டார்கள். உங்களுக்கு சீனாவோ இந்தியாவோ உதவினால் இலங்கையின் நிரந்தர பகையை சம்பாதிக்க வே ண்டி வரும். எந்த பலமும், கேந்திர அனுகூலமும் இல்லாத உங்களுக்காக சீனாவோ இந்தியாவோ இலங்கையை பகைக்காது, ஒரு எதிரியை உருவாக்காது.

நீங்கள் சொல்லும்படி பார்த்தாலும் இந்தியா சீன முறுகல் முற்ற இன்னும் ஒரு 20 வருடமாகுமா? அதற்குள் யாழ் ஜம்புகோள ஆகிவிடும். பின் யாருக்காக போராடப்போகிறீகள்?

இது தோற்றவரின் அணுகுமுறைதான். தோற்றுவிட்டோம் என்ற யதார்தத்தை எற் ரபடியால்தான் ஜப்பான்னால் மீண்டும் எழ முடிந்தது.

புலத்தில் இருந்தபடி நாங்கள் தோக்கவில்லை என்று வறட்டு குதர்க்கம் பேசலாம்.

உலகம் மாறும் என்று கற்பனாவாதம் பேசலாம் ஆனால் நிலத்து மக்களால் அது முடியாது. நிலத்தில் இன இருப்பை தக்கவைப்பதற்க்கான களம் மிக குறுகியது. அந்த காலத்தை உங்கள் கற்பனைக்காக இழக்க முடியாது.

 

சீன இந்திய பனிப்போரே இராச பக்சேவுக்கு சாதகமாக அமைந்தது.இன்று இந்திய அதிகார வர்க்கத்திற்கான பிரச்சினை அடுத்த ஆட்சி பீடம், அதற்கு தமிழ் நாட்டைத் தயார் செய்தல், அதற்காகவே சில நடவடிக்கைகள் கூட்டமைப்பின் ஊடாக. தேர்தல் முடிந்ததும், கூட்டமைப்பிடம் சொல்லப்படும் நாங்கள் முயற்சித்து விட்டோம் எம்மால் முடியவில்லை என்று. ருசி கண்ட சிலர் அதனையும் ஏற்றுக் கொண்டு ஜீப்புகளில் ஓடித் திரியலாம்.அவர்களுக்கு வெடியும் வைக்கப்படலாம்.வரலாறு மீண்டும் திரும்பலாம்.இதனால் பாதிக்கப்படப் போவது மீண்டும் களத்தில் உள்ள மக்களே.

 

முரண்களைப் பாவிப்பது என்பது கற்பனை வாதாம் அல்ல, அது தான் உலக அரசியல் யதார்த்தம். அடுத்த இந்தியத் தேர்தலை நாம் பாவிக்கப் போகிறோமா , பாவிக்கப்படப் போகிறோம் என்பது கூட்டமைப்பின் கையில் இருக்கிறது.

 

பலம் என்றால் என்ன? கேந்திர பலம் என்றால் என்ன? இவை எங்கனம் வருகின்றன?

 

ஆயுத பலம் , ஆயுதங்களால் வருவது. ஒரு தேசத்தின் ஆயுத பலம் அதன் படைகள். அந்தப் படைகளுக்கான அங்கீகாரம் அரசியல் அமைப்பு யாப்பினூடாக , அப் பிரதேச மக்களின் அரசியல் பிரதினிதிகளினூடாக வருவது. சிறிலங்கா ஒரு பிளவுண்ட தேசம் அங்கு இரு வேறு அரசியல் அபிலாசைகள் உடைய மக்கள் இருக்கிறார்கள் என்பதை உலகம் அறியும்.

இந்த இரு சக்திகளில் ஒன்று அழிந்து விட்டாலோ அழிக்கப்பட்டாலோ , இத் தீவை தமக்கு அமைவாக மாற்றுவது இயலாத காரியம் என்பதை இந்தியா முதற்கொண்டு சீன அமெரிக்கா வரை அறியும். அதனாலேயே இன்று மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா அம்மையாரை வைத்து காலக் கெடு விதித்து உள்ளது. இதில் எல்லோரின் உச்சாடனமும் 'தமிழர் மீதான போர்க் குற்றம் என்பது பற்றியது'. இந்த நிலமை எமக்குச் சாதகமான களத்தை திறந்து விட்டிருக்கிறது.

 

எம்மை வைத்து இவர்கள் ஆடும் ஆட்டத்தில் எமக்கான பங்கை நாம் கேட்டு வாங்காமால் யார் வாங்குவது? இந்தியாவா? மாறும் நிலமைகளுக்கு ஏற்ப பலம் மாறும் .அதனைச் சரியாகாப் பயன் படுதுவது எமது திறன். எமக்குப் பலம் ஒன்றும் இல்லை, தாறத வாங்குவம் என்று நாமே சொல்லிக் கொண்டால், நாம் அப்படியே ஆகுவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம் தயா, புகையிலையிலயும், கிரேப்ஸிலயும் நாங்க தன்னிறவு கண்டோனை அதப்பார்த்துட்டு உலகம் ஓடிவந்து எங்களுக்கு தனிநாடு தந்திடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாரதர் உங்கள் பதிவில், மீண்டும் ஜப்பான் ஜீப் ஓடணும், மீண்டும் கூடமைப்புக்கு வெடி வைக்கோணும், மீண்டும் யுத்தம் வரோணும் மீண்டும் மக்கள் அழியோனும் என ரத்த வெறி அப்பட்டமாக தெரிக்கிரது. இதற்கு நீங்கள்ம்கட்டும் சப்பை கட்டுத்தான் இனமானம் தேசியம் எல்லாம்.

சீனாவோ, இந்தியாவோ வேறு நாடுகளோ, இலங்கையோ இல்லை நிலத்து மக்களோ இனி அப்படி ஒரு நிலையை வர விடப்போவதில்லை.

வரலாறு எப்போதாவது தான் திரும்பும். எல்ல நேரமும் திரும்பாது, உதாரணம் கறுப்பின அடிமைவாதம்மொழிக்கப்படது.

Link to comment
Share on other sites

I couldn’t meet MR due to the time factor-Indian PM

Wednesday, 02 October 2013 18:38
emailButton.png printButton.png

Indian Prime Minister Manmohan Singh said he couldn’t meet Sri Lankan President Mahinda Rajapaksa in New York as the dates given were not convenient to him, India Times reported.

“I would have had no hesitation in meeting him. He asked for a meeting on dates which were not convenient to me, because I came to New York only on the 27th and he asked for a meeting between 24th and 27th. So the meeting could not be arranged. There is no other reason,” Dr. Singh told reporters on his flight back home.

Commenting on the 13th Amendment, the Indian Prime Minister said, “Our views are well known as far as the devolution of more powers to the Northern Province is concerned. On an umpteen number of occasions, we have discussed with the Sri Lankan President the need to implement the 13th Amendment. Therefore, our position is fully well known to the Government of Sri Lanka.”

 

இவர் பலமுறை சொல்லியும் கேக்காதவர், இனியும் கேட்பாரா? அப்ப சொல்லுறவர் பின்னால் நிற்கும் கூட்டமைப்பு என்ன துணிவில் இந்த வாக்குறுதிகளை வழங்கியது? காணி பொலிசு என்று ஒண்டும் கிடையாது என்று சிறிலங்காவின் உச்ச நீதி மன்றமே சொல்லிப் போட்டுது. இதில் மிஞ்சி இருப்பது அதிகாரம் இல்லாத அமைச்சுப் பதவியும் கதிரையுமே, கூட்டமைப்பு கதிரைப் பிரச்சினையையே இன்னும் தீர்க்கேல்ல, அதுக்குள்ள காணி பொலிசு அதிகாரமாம். சிரிப்பாக் கிடக்குது இவையின்ர கதையக் கேட்க. 

Link to comment
Share on other sites

நாரதர் உங்கள் பதிவில், மீண்டும் ஜப்பான் ஜீப் ஓடணும், மீண்டும் கூடமைப்புக்கு வெடி வைக்கோணும், மீண்டும் யுத்தம் வரோணும் மீண்டும் மக்கள் அழியோனும் என ரத்த வெறி அப்பட்டமாக தெரிக்கிரது. இதற்கு நீங்கள்ம்கட்டும் சப்பை கட்டுத்தான் இனமானம் தேசியம் எல்லாம்.

சீனாவோ, இந்தியாவோ வேறு நாடுகளோ, இலங்கையோ இல்லை நிலத்து மக்களோ இனி அப்படி ஒரு நிலையை வர விடப்போவதில்லை.

வரலாறு எப்போதாவது தான் திரும்பும். எல்ல நேரமும் திரும்பாது, உதாரணம் கறுப்பின அடிமைவாதம்மொழிக்கப்படது.

 

அப்படி ஒண்டும் நடக்கக் கூடாது எண்டு தான் நான் விரும்புறன் அதற்காகத் தான் எழுதிறன். ஏனெனில் இறுதியில் ஏமாற்றப்படப் போகிறவர்கள் பொங்கி எழுவார்கள்.இதில் உங்களைப் போன்றவர்களின் எழுதுக்களே இவ்வாறான ஒரு நிலமையை உருவாக்கும் என எச்சரிக்கை செய்கிறேன். ஏனெனில் கூட்டணி தேர்தலில் தமீழத்திற்கு வாக்கழியுங்கள் என்று சொல்லிப் போட்டு, பின்னர் ஜேஆரிண்ட மாவட்ட சபயைத் தான் தமீழீழம் எண்டு சொல்லி ஜீப்போடின படியாத் தான் சனம் கூட்டணியை முற்றாக நிராகரிச்சு ஆயுதப் போராட்ட இயக்கங்களின் பின்னால் அணிதிரண்டனர். வரலாற்றில் இருந்து பாடம் படிக்காதவர்களை வரலாறு மன்னிக்காது.

Link to comment
Share on other sites

கறுப்பின அடிமைவாதாம் ஒழிக்கப்பட்டதால் தான் வரலாறு திரும்பவில்லை, ஆனால் சிறிலங்காவில் இன்னும் இனவாதாம் அழிக்கப்படவில்லை, அதனால் வரலாறு நிச்சயம் திரும்பும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பின அடிமைவாதாம் ஒழிக்கப்பட்டதால் தான் வரலாறு திரும்பவில்லை, ஆனால் சிறிலங்காவில் இன்னும் இனவாதாம் அழிக்கப்படவில்லை, அதனால் வரலாறு நிச்சயம் திரும்பும்.

வரலாறு எப்போதும்ம்திரும்பும் என்றால் கறுப்பின அடிம்சிவாதம் மீண்டும் தலைதூக்கி இருக்க வேண்டும். செவ்விந்த்ஹியர் மீண்டும் அமெரிக்கவை ஆளவேண்டும். வரலாறு எப்போதாவது தான் திரும்பும். எப்பொதும்மில்லை.

ஆங்கில சொல்லாடல் கூட "sometimes, history repeats it self" என்பதே தவிர history always repeats itself என்பதல்ல.

இவ்வளவு தெளிவாக எதிர்காலத்தை கணிக்கும் நீங்கள் உங்கள் காலயந்திரத்தை எனக்கும் ஒருகா தர முடியுமா?

Link to comment
Share on other sites

வரலாறு எப்போதும்ம்திரும்பும் என்றால் கறுப்பின அடிம்சிவாதம் மீண்டும் தலைதூக்கி இருக்க வேண்டும். செவ்விந்த்ஹியர் மீண்டும் அமெரிக்கவை ஆளவேண்டும். வரலாறு எப்போதாவது தான் திரும்பும். எப்பொதும்மில்லை.

ஆங்கில சொல்லாடல் கூட "sometimes, history repeats it self" என்பதே தவிர history always repeats itself என்பதல்ல.

இவ்வளவு தெளிவாக எதிர்காலத்தை கணிக்கும் நீங்கள் உங்கள் காலயந்திரத்தை எனக்கும் ஒருகா தர முடியுமா?

 

இவ்வளவு தெளிவாக வரலாறு திரும்பாது என்று நீங்கள் சொல்லும் போது நான் திரும்பும் என்று சொல்வதில் மட்டும் என்ன பிழை இருக்கிறது.

முரண்பாடுகளுக்கான அடிப்படைக் காரணிகள் இருக்கும் வரை முரண்பாடுகள் இருக்கும். அடக்கப்படும் மக்கள் அடக்குமுறைக்கு எதிராகப் போரிடவே செய்வர்.

தமிழரின் போராட்ட வரலாறு சங்கிலியனையும், பண்டார வன்னியனையும், பிரபாகரனையும் பிரசவித்துக் கொண்டே இருக்கும். பேராளுமைகள் உருவாகும் கால இடைவெளியில் சிறு ஆளுமைகள் தோன்றி மறைவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூல்டவுன் தல இது பெரிய மட்டர் இல்ல எனக்கு. நீங்க என்ன என்ன வேணாலும் திட்டீட்டு போங்க.

ஆன கூட்டமைப்பு பல்புடுங்கின பற்றி 80% வோட்டு போட்ட மக்கள் அல்லது மார்ட்டின் ரோட் யாழில் உள்ள கூட்டமைப்பு ஒபிசில தான் கேக்கனும். நான் கூட்டமைப்பு க்கு ஆதரவு தர்றது, அவர்களின் கடைசி தேர்தல் விஞ்ஞாபனத்துக்கும், தனிநாட்டை கைவிட்டதாகம்சொன்னதுக்கும்தான்.

நாரதர், கூட்டமைப்பின் வழிபோகவிடில் வடக்கில் இனி ஒரு பேராளுமை எழாது, எழுந்தாலும் அது ஒரு கெப்ப்டிப்பொலவாகவோ அல்லது சபுமல்ம்குமரயவாகவோதான்னிருக்கும். இதுதான் யதார்த்தம்.

Link to comment
Share on other sites

கூல்டவுன் தல இது பெரிய மட்டர் இல்ல எனக்கு. நீங்க என்ன என்ன வேணாலும் திட்டீட்டு போங்க.

ஆன கூட்டமைப்பு பல்புடுங்கின பற்றி 80% வோட்டு போட்ட மக்கள் அல்லது மார்ட்டின் ரோட் யாழில் உள்ள கூட்டமைப்பு ஒபிசில தான் கேக்கனும். நான் கூட்டமைப்பு க்கு ஆதரவு தர்றது, அவர்களின் கடைசி தேர்தல் விஞ்ஞாபனத்துக்கும், தனிநாட்டை கைவிட்டதாகம்சொன்னதுக்கும்தான்.

 

கூட்டமைப்பு செய்து  முதலிலை செய்து காட்டடும்...  !  

 

சிங்களம் என்ன குடுக்கும் எண்டதும்  மாநகரசபைக்கு என்ன அதிகாரம் எண்டதும்  எல்லாருக்குமே...  விக்னேஸ்வரன் உட்பட அனைவருக்கும் தெரியும்...  

 

நாற்காலிக்காக எதையும் செய்து  அதுக்காக அடிபடும் எங்கட அரசியல் வாதிகள் வித்தியாசமானவர்கள் எண்டால் நம்புற மாதிரி இல்லை...    

 

எல்லாத்துக்கும்  முதலிலை அமைச்சு பதவிகளை பிரச்சினை இல்லாமல் முடிவு செய்யட்டும்...  பிறகு பாக்கலாம் கூட்டமைப்பு என்ன செய்யுது எண்டு... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு செய்து முதலிலை செய்து காட்டடும்... !

சிங்களம் என்ன குடுக்கும் எண்டதும் மாநகரசபைக்கு என்ன அதிகாரம் எண்டதும் எல்லாருக்குமே... விக்னேஸ்வரன் உட்பட அனைவருக்கும் தெரியும்...

நாற்காலிக்காக எதையும் செய்து அதுக்காக அடிபடும் எங்கட அரசியல் வாதிகள் வித்தியாசமானவர்கள் எண்டால் நம்புற மாதிரி இல்லை...

எல்லாத்துக்கும் முதலிலை அமைச்சு பதவிகளை பிரச்சினை இல்லாமல் முடிவு செய்யட்டும்... பிறகு பாக்கலாம் கூட்டமைப்பு என்ன செய்யுது எண்டு...

தல ஒரு பிள்ளை அரிவரில தொடங்கி படிப்படியாத்தான் ஓ எல் ஏஏல் யூனி எல்லாம் போகலாம். பிறந்தான்றே என்னடா பிள்ளைக்கு குவாண்டம் மெக்கானிக்ஸ் விளங்குதில்லை என்று கேட்கப்படாது, சின்னப்புள்லமாரி.

கூட்டமைப்பு கொசுக்கு மருந்த்ஹடிக்கும் மாகாணசபையில் தொடங்கி மெதுவா சம்ஸ்டிக்கு போகப்போறதாய் சோலுகினம். பார்பமே. எனக்கும் இது சாத்தியம் போல,தெரியேல்ல. ஆன உள்ளதுக்குள்ள லூசுத்தனமில்லாததெரிவாக இதுதெரிவதால் ஆதரிக்கிறேன்,

Link to comment
Share on other sites

சும்மா உதார் விடாதீங்கப்பா. நீங்கள் 25 நாட்டில் நின்று கூரையில் ஏறி கத்தினாலும் ஒன்றும் ஆகாது. தமிழ் நாட்டில் பூகம்பம் வெடிக்கும் என்பதெல்லாம் சும்மா லுலிலுலா. தமிழ் நாட்டில் சில காலம் வாழ்தவர்கலுக்கு தெரியும் சாதிக்கு கொடுக்கும் மரியாதையை கூட தமிழ்நாட்டுக்காரன் இனத்துக்கு தரதில்லை. ஒருசிலர் தீக்குளிப்பினம் அவளவே.

 

 

 

நான் எழுதியது விள்ங்கவில்லை என்றால் இன்னொரு தடவை.  இதுதான் நான் எழுதியது

 

"பொதுநலவாயம், 25ம் கூட்டத்தொடர் என்று இரண்டு துரும்புகள் இந்தியாவுக்கு வடக்குத் தேர்தலை நடத்த உதவின. இந்த் இரண்டும் 2014 ஆண்டு மத்திய தேர்தலுக்காக சாண்ஸ்ஸெடுத்து இந்தியாவால் பாவிக்கப்பட்ட துரும்புகள். காங்கிரஸ் அரசகுடும்பத்தை இந்த இரண்டிலும் காப்பாற்றினால், இதை வைத்து தானும் தேர்தலில் வென்றால் அதன் பின்னர் தமிழ் நாட்டில் அரசியல் எந்த பக்கம் போகும் என்றதை ஜெயலலிதாவால் நிர்ணையிக்க முடியாமல் போகும். '"

 

காங்கிரஸ் 2014 பதவிக்கு வருமா?  வந்தால் தன்னை  இந்த ஆட்டம் ஆடிய தமிழ்நாட்டை சும்ம போகவிடுமா? டெசோ, சட்டசபை பிரேரணை, .......? ஜெயலலிதா தேர்தல் நடந்த பின்னரும் இன்று போல மத்தியை முரண் முடியுமா? ஆந்திரா சொத்து வழக்கு பகிடிக்காகவா அங்கே ஆரம்பிக்கப்பட்டது? தங்களுக்கு தெரிந்த தீக்குளிப்பை விட அரசியலில் அதிகம் பிரிவுகள் இருக்கு.

புலத்தில் பொயில் சில்லக் என்று காலமும் அவரவர் நாட்டு அரசுகளும் கைவிட்ட சில முன்னாள் பிரபலங்களியோ அல்லது தமிழர் வசிக்கும் பகுதி எம்பி மாரையோ வைத்து நீங்கள் செய்யும் போராட்டங்கள், அந்த நாட்டு வெளியுறவு அமைச்சின் பியூனின் கவனத்துக்கு போவதற்க்குள் சர்மாவும் நம்பியாரும் ஐநா விலும் காமன்வெல்திலும் ஆப்பை அழகாய் இறக்கி அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து விடுவார்கள். இதுதான் உண்மை.

 

வெட்டிப்பிடுங்கிய நம்பியாரால் என் ஐ.நா. உள்ளகவிசாரணையை தடுக்க முடியவில்லை. அதில் அவரின் பெயரும் இழுக்கப்பட்டிருக்கிறதே. அவர் மியன்மாருக்கு போவதை நாடுகள் எதிர்த்தனவே. மியன்மாரை நம்பியாரால் இந்தியாவின் கைக்குள் கொண்டுவரமுடியவில்லையே.  சும்மா எல்லாம் எழுத்தப்படாது. இப்போ நம்பியார் என்ன செய்கிறார்? எங்கே ஆள்?

கனடாவின் கன்சேவெடிவ் வை தவிர நீங்கள் வைக்கும் அத்தனை நாடுகளும் அம்பாந்த்ஹோட்டையில் போய் அழகாய் கிரிபத் தின்பார்கள்.

பொதுநலவாயம் கிரிபத் சாப்பிட மட்டும்தான்.  அது வேறு ஒன்றும் செய்வதில்லை. அரச குடும்பம் கட்டி மாள்வதின் காரணம், அம்பாந்தோட்டைக் கட்டிடங்களை கட்டி முடித்து கூட்டம் நடத்தாவிட்டால் சீனா கமிசனைகொடுக்காது. என்ன செய்தாலும் கூட்டம் முடிய கடனும் கட்டி முடிக்க வேண்டும்.  கிரிபத் சாப்பிடத்தான் தான் அங்கே போவதாக இங்கிலாந்து கூறிக் கொண்டிருக்கிறது.  ஒருவரும் இல்லா ஐ.நா. பாதுகாப்புசபையில் பேசுவது மகிந்தாவுக்கு இலகு. அப்படியேதான் பொதுநலவாயமும் இருக்க போகிறது என்று எதிர்வு கூறத்துடிப்பவர்கள் அல்ஜசீராவின் பேட்டியை பார்க்கவில்லை. அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?

ஆக உங்கள் சாமர்தியத்தால் தான் சர்வதேசம் இலங்கையை நெருக்கிரது என்பது காக்காய் இருக்க பனம்பழம் வீழ்ந்த்ஹ கதை.

உங்கள் சாமர்தியத்தால் இந்த்ஹியாவை, உலகின் மிகபெரும் ஜனநாயக நாடாககாட்டிக்கொள்லும் இந்த்ஹியாவை, அமெரிக்காவின் 4 ம் பெரிய சகாவை நீங்கள் உலக அரங்கில் தனிமைப்படுத்தி உங்கள் கோரிக்கையை வெல்வீர்கள் என்பது அக்மார்க் மனப்பால்.

இந்தியாவை பற்றி ஆறுதலாக பேசுவம். அதற்கு முதல் 2014 ல் காங்கிரசின் கதை என்ன என்று சொல்லாமல்?.... முசுக்கொட்டை செடிக்கு விதையை கொண்டு போகும் போதே பட்டுச் சேலை கட்டின சந்தோசப்படாமல் 2014ல் காங்கிரசின் கதை என்ன?

நீங்கள் இப்படியே உங்களின் இயலுமை பற்றிய அதீத கற்பனைகளிலும், 2009 முன்னரான நிலை பற்றிய பழங்கதைகளிலும் நேரத்தை கடத்தலாம் ஏனென்ரால் இது உங்களுக்கு 1000 வருட பிரச்சினை. ஆறப்போட்டு, உங்கள் தலைமுரையிடம் விட்டிஸ் செல்லலாம். சுதந்த்ஹிர வேட்க்கை அழியாது எனறு வீரம் பேசலாம்.

சும்மா சும்மா அதீதக் கற்பனை  இலகங்களை எழுதிக் குவித்துவிட்டால் தங்களை யாரும் பண்டித்தராக நினைக்க மாட்டர்கள். 

ஆனால் நிலத்தவர்க்கு இது உடனடிபிரச்சினை. கொக்கிளாயில், மாதகலில், ம்கிளிநொச்சியில், நாவற்குழியில் நிலம் விழுங்கப்படுகிறது.

நிர்க்கதியாய் நிற்கும் மக்கள் சாதாரண கான்ஸ்டபிள்களாலே அடிமை போல் நடத்த படுகிறனர். விதவைகலின் மீது பாலியல் அழுத்தம். திட்டமிட்ட கலாச்சார சீரழிவு, கல்வியில் வேலைவாய்ப்பில் புறக்கணிப்பு. நிலைமையை இப்படியே விட்டால் இன்னும் 20 வருடத்தில் வடக்கிலேயே தமிழர்கள் சிருபான்மையாகி விடுவர். பின்னர் நீங்கள் எதற்காக போராடிவீர்கள்.

கோட்டால் தடுக்கப்பட்ட காணி அதிகாரம் இல்லாமல் கூட்டமைப்பால் இதில் ஏதாவது  செய்ய முடியுமா?. இந்தியா மொகன் பீரிசுவின் தீர்ப்பை மாற்றுவதாக கூட்டமைப்பிடம் கூறியிருக்கிறதா? பொலிஸ் அதிகாரம் கொடுக்க கூடாது என்று பொலிஸ்மா அதிபர் கூறியிருக்கிறார். ஆனாலும் பொலிஸ் அதிகாரம் உண்மையில் 13ம் திருத்ததில் இல்லை. ஏன் எனில் மாகாண பொலிஸ் அதிபர் பொலிஸ்மா அதிபரின் வேலையாள். இதனால் நீங்கள் சொல்லும் ஆமியின் பாலியல் துன் புறுத்தல்களை எப்படி பொலிஸ்மா அதிபரின் அதிகாரி விசாரிக்க போகிறார். இனிமேல் அவர் அதை செய்வாராயின் இன்று ஏன் அதை பிரதி பொலிஸ்மா அதிபர்கள் செய்கிறார்கள் இல்லை?

மக்களும் நன்றாக களைத்து விட்டார்கள். இல்லை சலித்து விட்டார்கள். குளிரில் சொந்த செலவில் ஜெனிவா போவதே எமக்கு பெரிதாய் தெரியும் போது, அவர்கள் 30 வருடம் உயிரை கொடுத்து வாழ்ந்த்ஹார்கள். அந்த அர்பணிப்பும் ஒரு பயனுமில்லாமல் போனது. ஆக அவர்களும் போராட்டத்தை தொடர விரும்பவில்லை.

 

மக்கள் களைத்தார்களோ இல்லையோ அரசு அவர்களை ஒயவிடவில்லை. அதைத்தான் நீங்கள் மேலே உள்ள பந்தியில் சொல்லியிருக்கிறீர்கள். அரசின் இந்த ஆட்டம் தொடந்தால் இன்னொரு போர்வெடிக்கும் என்று பல சர்வதேச நாடுகள்தான் எதிர்வு கூறுகிறார்கள். தேர்தலில் அரசு பாவித்த அடக்குமுறைகளை மீறித்தான் மக்கள் வெளியே வந்து வாக்களித்தார்கள். 87 ஆயிரம் மக்கள் சலிக்காமல் புலி பிரதிநிதிக்கு வாக்களித்திருக்கிறார்கள். அனந்தி தேர்தல் முடிய அது மாவீரகளின் வெற்றி என்று சொல்லியும்விட்டா. அவவும் கூட்டமைப்பில்தான். 

இந்நிலையில் இருப்பதை காப்பதற்க்கு ஒரேவழி, இந்தியா வை அனுசரித்து, தனி நாட்டை கைவிட்டு, மாகாண சபையில் தொடங்கி சம்ஸ்டி வரை போக எத்தனிபதே. இது நடக்கும் நடக்காமல் போகும் ஆனால் இது மட்டுமே இப்போது ஓரளவுக்கேனும் நடமுறைசாத்தியமானது.

 

இதை இந்தியா எப்படி செய்து முடிக்க போகிறது என்பதை விளங்க்கப் படுத்தாத வரைக்கும் இதில் சொல்லப்படுபவவைத்தான் நடை முறை சாத்தியம் இல்லாதவை.

 

ஒவ்வொன்றாக போகலாம். முதலில் இந்தியா உயர் நீதிமன்ற தீர்ப்பை இலங்கை அரசை  அழுத்தி வாபஸ் பண்ண வைக்குமா? அதற்குப் பதில் வந்தால் மற்ற கேள்விகளையும் போடலாம். 

இதைதான் மக்கள் புரிந்து கொண்டு கூட்டமைப்பை அமோகமா ஆதரித்தனர். கூட்டமைப்பும் இதை செய்ய விளையும். ஆறு அவர்களை தடுக்கும், கோமாளிப்பட்டம் கட்டும், நையாண்டி பண்ணும், ஏன் சிறையிலும் இடும்.

ஆனால் இப்படி ஒரு காரியத்தை ஏற்றுகொண்ட மக்கள் தலைவர்களை புலத்திலிருந்து கொண்டு நாமே நக்கல் அடிப்பதும், திட்டுவதும், அவர்களுக்கு அப்படி செய் இப்படி செய் எனறு ஓடர் போடுவதும் நல்லயில்லை. இல்லை அநியாயம். அக்கிரமம்.

 

கூட்டமைப்பு மீதான புலம் பெர்யர் மக்களின் நையாண்டி பல காரணங்களால் எழுகிறது. என்வே அவற்றை எல்லாம் இப்படி ஒட்டு மொத்தமாக போட்டால் பதில் அளிக்க முடியாது. அவற்றை தனிப்பட்ட எடுத்து விவாதிக்கப்பட வேண்டும்.

நிலத்தில் கூட்டமைப்பில் இருப்பவர்கள் காட்டும் துணிவில் 10%கூட இல்லாதபடியால் தான் நாம் புலத்துக்கு ஓடிவந்தோம். இங்கே வந்த்ஹிருந்த்ஹ படி இன்னும் ஆருதலாய் காய் நகர்தல்லாம், இந்திய ஆளும் வர்கத்தை வளைக்களாம் என்று சொல்வது அபத்தம். இந்தியாவின் சவுத் பிளாக் புலத் தமிழர் எவரையும் சீந்தாது, காரணம் அவர்களை பொறுத மட்டில் நீங்கள் பிரிவினைவாதிகள்.

 

தாயகத்தை விட்டு புலம் பெயர்ந்தது பயத்தால் என்பது ஒரு சின்னக்காரணம்.  அதை ஒரு மிக சிறிய கூட்டம் மட்டும்தான் செய்தது. ஆனால் தாயகத்திலும், புலத்திலும் ஆயுதம் தூக்கத்தக்கவர்கள் அரிது என்பது தமிழ் இனத்தில் சிந்து வெளியிலிருந்து கண்டறியப்பட்ட உண்மை. இதற்கும் வீரத்திற்கும் தொடர் கிடையாது. அது பயம் அல்ல.

 

தமிழர் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு மற்றும் தென் மாகாணங்கள் எங்கும்  புலம் பெயர்ந்து சென்று தொழில், வர்த்தகம் செய்ததால்த்தான் 1958 வந்தது. அதன் பின்னரும் இன்றும் அங்கே போகிறார்கள். எனவே உண்மையாக நடை பெறும் புலம் பெயர்வை ஆராய உங்களுக்கு மனத்தகுதி காணது. அதனால் சும்மா திரிக்கிறீர்கள்.

 

பிரிவினை வாதிகளை ஆக்கியது இந்தியாதான்.  இந்தியா மட்டுமே தான். ஆனால் அது ரஜீவ் காந்தியோ அல்லது சோனியா காந்தியோ அல்ல. அதில் இருக்கும் நுணுக்கம் உங்களால் புரிந்து கொள்வது கஸ்டம் என்பத்தால் நீங்கள் இந்தியா பிரிவினைக்கு எதிர் என்று பொதுப்பட எழுதுகிறீர்கள். அதே இந்தியா வங்காள தேசத்தை பிரித்தது. பாலூசிஸ்தானை பிரிக்க முயல்கிறது...

 

இந்திய விடுதலையில் 2 ம் உலக யுத்தம் போல ஒரு பெளதீக புறக்காரணி மாற்றம் வரும் வரையில் இந்தியாவின் இலங்கை கொள்கை மாறாது. அதுவரைக்கும் நிலத்தில் மக்கள் காத்துகொண்டிருந்தால் இன்னும் 20 வருட்ச்த்தில் நீங்கள் கொலிடே போகும் யாழ்ப்பாணம், நீர்கொழும்பை போல காட்சி தரும்.

 

இந்தியா சுதந்திரம் பெற்றது இரண்டாம் உலக போரால் என்று ஒரு புதுக் கற்பனை கதையை நீங்கள் அவிட்டு விடுகிறீர்கள். கிழக்கிந்திய கமபனியிடம் இந்தியாவை  இங்கிலாந்தின் அரசு பொறுப்பெடுக்க வேண்டும் என்பதே சில அங்கத்தவர்கள் இந்தியாவுக்கு அதன் சொந்த அரசை இங்க்கிலாந்து ஏற்படுத்த வேண்டும் என்ற வாதத்தால் விளைந்த ஒன்றே. 1800 களில் இலங்கை வந்த கோல்புறுக்கே இங்கிலாந்து அரசியல் அமைப்பை பின்பற்றி மக்களின் சுதந்திரத்தை நிலை நாட்டத்தான் முயன்றார். அதைத்தான் டொனமூர் முன்னேற்றினார். அதையேதான் இலங்கையில் சோல்பரி முன்னேற்றினார். 1938 ல் வந்த சோல்பரியின் நடவடிக்கைகள் போரால் இடைத்தடங்கல் அடைந்தது. இந்திய  சுதந்திரம் இங்கிலாந்தில் பலகாலம் விவாதிக்கப்பட்ட ஒரு கருப்பொருள்.

 

 

இதைதடுப்பதே கூட்டமப்பின் பிரதான நோக்கம்.

இதில் அவ்ர்கள் வெல்லுவதை விட தோர்க்க தான் சாத்தியக்கூறுகள் அதிகம். ஆனால் இதை விட வேறு வழியில்லை. ஏனென்ரால் நாம் இப்போது இருப்பது கையறு நிலையில்.

 

கூட்டமைப்பு எந்த இடத்திலும் இந்தியா தனது முடிவு என்று கூறவில்லை.  கூட்டமைப்பு காணி, பொலிஸ் அதிகாரத்தை பெற முடியவில்லையாயின் சர்வதேச நாடுகளின் உதவிகள் நாடப்படும் என்று மட்டும்தான் சொல்லியிருக்கு. இந்தியாவின் உதவி நாடப்படும் என்று சொல்லவில்லை.  மன்மோகன் சிங்கால் சில சூழ்நிலைகளை வைத்து தேர்தலை நடத்த முடிந்தது. மிகுதி நடப்பதை பொறுத்தது.

 

Link to comment
Share on other sites

எனக்கென்னமோ நீங்க தேவைக்கு அதிகமா அடிச்சுக்கிரமாதிதான் தெரியுது.

 

தேர்தல் பற்றி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா வியாக்கியானம் செயினம்.

 

சிங்களவன் சொல்லுறான் இது புலம்பெயர் மக்களால் கொடுக்கப்பட்ட அழுத்தமாம்.

 

இந்தியா சொல்லுது தமிழ் மக்களுக்கு ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கையாம்.

 

கூட்டமைப்பு சொல்லுது தங்கள் தேர்தல் அறிக்கையாம்

 

டாங்கர் சொல்லுறார் கூட்டமைப்பு எமாத்திபோட்டுதாம்

 

யாலகலத்திளையும் பலரும் பலவாறு அபிப்பிரம் கொண்டு எழுதுகிறார்கள் 

 

மக்கள் என்னத்துக்கு வாக்களித்தார்கள் என்று யாரும் தனிய இருந்து யோசிக்கமாட்டிங்களா?

 

 

 

யாரைப்போட்டாலும் கூட்ட்டமைப்புக்குத்தான் மக்கள் போடுவார்கள், இம்முறை அதிகமான சனம் வோட்டுப்போட்டது இதுவும் பறிபோனால் அதுக்குப்பிறகு ஒண்டும் இல்லை. 

 

ஏதோ கூட்டமைப்புக்குப்போட்டு தீர்வு வரும் என்று யாரும் முழு நம்பிக்கை வைக்கவில்லை.

 

 

தேர்தல் முடிஞ்சுது இனிமேல் கூட்டமைப்பு நாடுளுமன்ற பிரதிநிதிகள் ஒரு புறம் போராடட்டும். 

 

விக்கி தலைமையில் மாகாணசபை அன்றாட பிரச்னையை சந்திக்கட்டும். 

ஆக மொத்தம் போராட்டம் தொடரும்.

 

புலத்தில நடக்கும் போராட்டம் அதன் வலி தொடரட்டும்.

Link to comment
Share on other sites

கூட்டமைப்புக்கு ‘பொறி’ வைக்கிறது அரசு?

— 

 

02/10/2013 at 11:43 am

 | no comments

 

sampanthan-150x150.jpgஇலங்கையில் விரைவில் மாவட்ட அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒன்பது மாகாணங்களினதும் 25 மாவட்டங்களுக்கும் இவ்வாறு அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகளை மேற்பார்வை செய்வதற்கு இவ்வாறு அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

மாவட்டங்களில் அதி கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டு அமைச்சுப் பதவிகள் எதனையும் பெற்றுக்கொள்ளாத ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறுஇ மாவட்ட அமைச்சர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.
 
வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாணசபையைக் கைப்பற்றியுள்ள நிலையில் அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. வடக்கின் ஐந்து மாவட்டங்களுக்கும் ஐந்து அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளனர். கூடுதல் அதிகாரங்களுடன் மாவடத்தின் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள இவர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செல்வாக்கை வலுவிழக்கச் செய்யும் நோக்கில் இவ்வாறு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படலாம் என..
 
1980களில் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன ஆட்சிக் காலத்தில் மாவட்ட அமைச்சு முறைமை அமுலில் இருந்தது. மாகாணசபைகள் உருவாக்கப்பட்டதனைத் தொடர்ந்து இந்த முறைமை இல்லாதொழிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செல்வாக்கை வலுவிழக்கச் செய்யும் நோக்கில் இவ்வாறு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படலாம் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Link to comment
Share on other sites

இசை,

காந்தி கூட மாறி வரும் சூழலை புரிந்து கடைசி 5 வருசமா தான் தனிநாடு கேட்டவர். அதுக்கு முதல் மாகாண சபையை ஒத்த தீர்வுக்கு அவர் போனவர் எண்டுதான் சுபாஸ் விலகினவர். ஆக காலம் வரும் போது தான் காய் நகர்த்த முடியும். காந்தியே ஆகினும்.

இந்தியா அதற்க்கு முன்னும் கட்டபொம்மன், வேலூர் கலகம் முதல் சிப்பாய் கலகம் என்று பலதை கண்டது, ஆனால் அவை எல்லாம் காலம் தோற்கடித கதை. காலத்தை கணித்து அதற்கேப்ப மாறியதால் காந்தி வெண்டர். உங்கள் கோரிக்கைக்கான காலம் இன்னும் 100 ஆண்டுகளிற்காவது வராது.

இப்போ இருப்பதை காக்க, சமச்டியை கூத்தாடியாவது பெற கூட்டமைப்பே சரி என்பது மக்கள் தெரிவு.

 

 

கடைசி ஐந்து வருடம் என்றால் 1942 இல் இருந்து.. ஆனால் ஜனவரி 26 1930 இல் தன்னிச்சையான சுதந்திரப் பிரகடனத்தை மேற்கொண்டதாக வரலாறு சொல்லுது.. :rolleyes:

 

http://en.wikipedia.org/wiki/Mahatma_Gandhi#Struggle_for_Indian_Independence_.281915.E2.80.9347.29

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைசி ஐந்து வருடம் என்றால் 1942 இல் இருந்து.. ஆனால் ஜனவரி 26 1930 இல் தன்னிச்சையான சுதந்திரப் பிரகடனத்தை மேற்கொண்டதாக வரலாறு சொல்லுது.. :rolleyes:

 

http://en.wikipedia.org/wiki/Mahatma_Gandhi#Struggle_for_Indian_Independence_.281915.E2.80.9347.29

 

 

ம்ம்ம்

நாங்களெல்லாம்  சந்திரமண்டலத்தில் இருந்ததாகவோ

அல்லது

எமது தாயக மற்றும் இந்திய  விடுதலைப்போர் மகாபாரதம் போல்

நாம் அறிந்தது என்றோ  நினைக்கிறார்கள் போலும் :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைசி ஐந்து வருடம் என்றால் 1942 இல் இருந்து.. ஆனால் ஜனவரி 26 1930 இல் தன்னிச்சையான சுதந்திரப் பிரகடனத்தை மேற்கொண்டதாக வரலாறு சொல்லுது.. :rolleyes:

http://en.wikipedia.org/wiki/Mahatma_Gandhi#Struggle_for_Indian_Independence_.281915.E2.80.9347.29

Gandhi took leadership of Congress in 1920 and began a steady escalation of demands (with intermittent compromises or pauses) until on 26 January 1930 the Indian National Congress declared the independence of India. The British did not recognise that and more negotiations ensued, with Congress taking a role in provincial government in the late 1930s. Gandhi and Congress withdrew their support of the Raj when the Viceroy declared war on Germany in September 1939 without consulting anyone. Tensions escalated until Gandhi demanded immediate independence in 1942 and the British responded by imprisoning him and tens of thousands of Congress leaders for the duration.

நீங்க தந்த ஆதாரத்தில இருந்து தான் இது. 1930 சுதந்திர பிரகடனம். பின் அதை கைவிட்டு அதே 1930ல் மாகாண அரசு, பின் self rule கோரிக்கை, இறுதியாக 1942 quit India எனும் சுதந்த்ஹிர போராட்டம்.

இதுதான் வரலாறு.. ஆதாரங்களை கொடுக்கும் முதல் நீங்களே ஒருதரம் வாசிச்சு பாக்கிறது நல்லது.

உங்களை நம்பி விசுகு அண்ணா வேற கிண்டலா கொமெண்ட் போட்டுட்டார். :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.