Jump to content

தமிழில் ஓரெழுத்து சொல் 47


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அறிந்துகொள்வோம்: தமிழில் ஓரெழுத்து சொல் 47 ======================================= தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம் அ -----> எட்டு ஆ -----> பசு ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி உ -----> சிவன் ஊ -----> தசை, இறைச்சி ஏ -----> அம்பு ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை கா -----> சோலை, காத்தல் கூ -----> பூமி, கூவுதல் கை -----> கரம், உறுப்பு கோ -----> அரசன், தலைவன், இறைவன் சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல் சீ -----> இகழ்ச்சி, திருமகள் சே -----> எருது, அழிஞ்சில் மரம் சோ -----> மதில் தா -----> கொடு, கேட்பது தீ -----> நெருப்பு து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு தூ -----> வெண்மை, தூய்மை தே -----> நாயகன், தெய்வம் தை -----> மாதம் நா -----> நாக்கு நீ -----> நின்னை நே -----> அன்பு, நேயம் நை -----> வருந்து, நைதல் நொ -----> நொண்டி, துன்பம் நோ -----> நோவு, வருத்தம் நௌ -----> மரக்கலம் பா -----> பாட்டு, நிழல், அழகு பூ -----> மலர் பே -----> மேகம், நுரை, அழகு பை -----> பாம்புப் படம், பசுமை, உறை போ -----> செல் மா -----> மாமரம், பெரிய, விலங்கு மீ -----> ஆகாயம், மேலே, உயரம் மு -----> மூப்பு மூ -----> மூன்று மே -----> மேன்மை, மேல் மை -----> அஞ்சனம், கண்மை, இருள் மோ -----> முகர்தல், மோதல் யா -----> அகலம், மரம் வா -----> அழைத்தல் வீ -----> பறவை, பூ, அழகு வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல் வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பகிர்வு புலவரே. நன்றி

Link to comment
Share on other sites

ஒரேழுத்து சொற்கள் 47 தான் என்று அறுதியிட்டு கூற முடியாது என்று நினைக்கிறேன்.
 
ஒரெழுத்தில் இவைகளையும் சேர்த்துக் கொள்ளலாம் 
 
எ  - வினா எழுத்து, ஏழு என்பதின் தமிழ் வடிவம்
ஒ - ஒழிவு
இ -  அன்பு, ஆச்சரியம், இகழ்ச்சி
ஒள - பூமி, ஆனந்தம்
கு - இருள்
ஞா - பொருத்து, கட்டு
ம -  சந்திரன், எமன் 
 
ள - தமிழெழுத்து நூறு என்பதன் வடிவம் 
ளு - நான்கில் மூன்று பகுதி, முக்கால் என்பதன் வடிவம் 
று -  எட்டில் ஒரு பகுதி அரைக்கால் எனபதன் வடிவம் 
 
Link to comment
Share on other sites

எல்லாவற்றையும் சேர்த்து இணைத்துள்ளேன் 
 
அ -----> எட்டு 
ஆ -----> பசு 
இ ----->  அன்பு, ஆச்சரியம், இகழ்ச்சி
ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி 
உ -----> சிவன் 
ஊ -----> தசை, இறைச்சி 
எ  -----> வினா எழுத்து, ஏழு என்பதின் தமிழ் வடிவம்
ஏ -----> அம்பு 
ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு 
ஒ  -----> ஒழிவு
ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை 
ஒள -----> பூமி, ஆனந்தம்
 
கா -----> சோலை, காத்தல் 
கூ -----> பூமி, கூவுதல்
கு  -----> இருள்
கை -----> கரம், உறுப்பு 
கோ -----> அரசன், தலைவன், இறைவன் 
 
சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ -----> இகழ்ச்சி, திருமகள் 
சே -----> எருது, அழிஞ்சில் மரம் 
சோ -----> மதில் 
 
தா -----> கொடு, கேட்பது 
தீ -----> நெருப்பு 
து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு 
தூ -----> வெண்மை, தூய்மை 
தே -----> நாயகன், தெய்வம் 
தை -----> மாதம் 
 
ஞா  -----> பொருத்து, கட்டு
நா -----> நாக்கு 
நீ -----> நின்னை 
நே -----> அன்பு, நேயம் 
நை -----> வருந்து, நைதல் 
நொ -----> நொண்டி, துன்பம் 
நோ -----> நோவு, வருத்தம் 
நௌ -----> மரக்கலம் 
 
பா -----> பாட்டு, நிழல், அழகு 
பூ -----> மலர் 
பே -----> மேகம், நுரை, அழகு 
பை -----> பாம்புப் படம், பசுமை, உறை 
போ -----> செல் 
 
ம  ----->  சந்திரன், எமன் 
மா -----> மாமரம், பெரிய, விலங்கு 
மீ -----> ஆகாயம், மேலே, உயரம் 
மு -----> மூப்பு 
மூ -----> மூன்று 
மே -----> மேன்மை, மேல் 
மை -----> அஞ்சனம், கண்மை, இருள் 
மோ -----> முகர்தல், மோதல் 
 
யா -----> அகலம், மரம் 
வா -----> அழைத்தல் 
வீ -----> பறவை, பூ, அழகு 
வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல் 
வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல் 
 
ள  -----> தமிழெழுத்து நூறு என்பதன் வடிவம் 
ளு  -----> நான்கில் மூன்று பகுதி, முக்கால் என்பதன் வடிவம் 
று  -----> எட்டில் ஒரு பகுதி அரைக்கால் எனபதன் வடிவம் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பகிர்வு!

 

ரு =  5 என்று வரும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோ என்பது எருதையும் குறிக்கும். கோ மாதா என்றால் பசு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோ என்றால் (கோன்)அரசன்,கடவுள்.பசு என்று பொருள்படும். ஜேர்மன் மொழியில் கூ உன்றால்பசு,கேனிக்(கோன்) என்றால் அரசன்,கோ(ட்) என்றால்கடவுள் ஆங்கிலத்தில் கோ(ட்) கடவுள்,கௌ-பசு,கிங்-அரசன்(ககரவரிசை) மூத்தமொழி தமிழ்ஆகவே மூலமொழியும் தமிழே!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

500px-Arabic_numerals-en.svg.png

 

 

அடக் கடவுளே !  தமிழில் பூஜ்ஜியம் இல்லையா !   அப்பா ஏன்  நான் எடுத்த பரீட்சைகள் எல்லாவற்றிலும் முட்டை,முட்டையாய்  இட்டுத் தள்ளுனவை! :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயிர் மவிலாறுந் தபநவி லைந்துங்
கவசவினாலும்
யவ்விலொன்று
மாகு நெடி நொது வாங்க்குறிலிரண்டோ
டோரெழுத்தியல்பத மாறேழ் சிறப்பின்.
                                                        

நன்னூல்  
 

சே என்பதற்கு சிவப்பு என்றும் பொருள் வரும்
இணைப்பிற்கு நன்று புலவர்

Link to comment
Share on other sites

அடக் கடவுளே !  தமிழில் பூஜ்ஜியம் இல்லையா !   அப்பா ஏன்  நான் எடுத்த பரீட்சைகள் எல்லாவற்றிலும் முட்டை,முட்டையாய்  இட்டுத் தள்ளுனவை! :o

 

 

பழந்தமிழில் பூஜ்ஜியத்துக்கு விசேட குறியீடு இருந்ததாம். "அன்று" என்று உச்சரிக்கப்பட்டதாம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு வாழ்த்துகள். தமிழில் உள்ள ஓர் எழுத்துச் சொற்கள் பற்றி  தொல்காப்பியம் இப்படிச் சொல்கிறது. 

 

 

 

 “ஓரெழுத் தொருமொழி யீரெழுத் தொருமொழி

      இரண்டிறந் திசைக்குந் தொடர்மொழி யுளப்பட
      மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே” (தொல். மொழி. 12)

 

இங்கு மூன்று வகையாச் சொற்களில் ஒன்றாக  ஓர் எழுத்துச் சொற்கள் பற்றி ஆசிரியர் தொல்காப்பியர் சொல்கிறார்.

 

மேலும் நன்னூல் விருத்தியுரையில்...

 

 

உயிர்மவி லாறுந் தபநவி லைந்துங்
கவசவி னாலும் யவ்வி லொன்றும்
ஆகு நெடினொது வாங்குறி லிரண்டோ
டோரெழுத் தியல்பத மாறேழ் சிறப்பின.

 
     எ-னின், மேல் எழுத்துத் தனித்தும் தொடர்ந்தும் ஒரு மொழி ஆம் என்றார்.
அவற்றுள் ஓர் எழுத்து ஒரு மொழி இவை என்பதூஉம் இத்துணைய என்பதூஉம்
உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: உயிர்வருக்கத்தும் மவ்வருக்கத்தும் அவ்வாறும் தவ்வருக்கத்தும
 பவ்வருக்கத்தும் நவ்வருக்கத்தும் ஐவைந்தும் கவ்வருக்கத்தும் வவ்வருக்கத்தும் சவ்-வருக்கத்தும் நந்நான்கும் யவ்வருக்கத்து ஒன்றும் ஆகும் நெட்டெழுத்தான் ஆகிய
மொழி நாற்பதும், நொவ்வும் துவ்வும் ஆகும் குற்றெழுத்தான் ஆகிய மொழி
இரண்டுடனே ஓர் எழுத்தான் ஆகிய மொழி இந்நாற்பத்திரண்டும் சிறப்பினவாம் எ-று.

     உ-ம்: ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ எனவும் மா, மீ, மூ, மே, மை, மோ எனவும் தா, தீ,
தூ, தே, தை எனவும் பா, பூ, பே, பை, போ எனவும் நா, நீ, நே, நை, நோ எனவும்
கா, கூ, கை, கோ எனவும் வா, வீ, வை, வௌ எனவும் சா, சீ, சே, சோ எனவும் யா
எனவும் நொ, து எனவும் வரும்.

     இவற்றுள் ஊ- இறைச்சி; ஓ- மதகுநீர் தாங்கும் பலகை; பே- நுரை; நே- அன்பு;
சோ- அரண். நொ, து என்னும் குறில் இரண்டும் துன்பி, புசி என்னும் ஏவல்.

     இவை, ‘சிறப்பின’ எனவே வகரவீற்றுச் சுட்டுப்பெயர்ப் பொருளை ஒப்புமையான்
உணர்த்தி நிற்றலான் ஒள என்னும் ஓர் எழுத்து ஒரு மொழியும் சுட்டு, வினா,
உவமைப்பொருளைத் தரும் இடைச்சொல் ஆதலால் குற்றுயிர் ஐந்தான் ஆய ஓர் 
எழுத்து ஒரு மொழிகளும் கௌ என்னும் உயிர்மெய்யான் ஆய ஓர் எழுத்து ஒரு 
மொழியும் இவை போல்வன பிறவும் சிறப்பு இல்லன எனக் கொள்க.

 

எனக் கூறியுள்ளார்.

 

ஆறுமுக நாவலரின் இலக்கணச் சுருக்கத்‌தில் தமிழில் நாற்பத்தி இரண்டு எழுத்துக்கள் ஒரெழுத்து ஒரு சொல் உள்ளது எனக் கூறியுள்ளார். அவையாவன...

 

ஆ - பசு 
ஈ - பறவை
ஊ - இறைச்சி
ஏ - கணை
ஐ - தலைவன்
ஓ - வியப்பு
மா - பெரிய
மீ - மேல்
மூ - மூப்பு
மே - மேன்மை
மை - இருள்
மோ - மோதுதல்
தா - கொடு
தீ - நெருப்பு
தூ - தூய்மை
தே - தெய்வம்
தை - மாதம்
சா - சாதல் 
சீ - இலக்குமி
சே - எருது
சோ - மதில்
பா - பாட்டு
பூ - மலர்
பே - நுரை
பை - பசுமை
போ - செல்
நா - நாக்கு
நீ - முன்னால் இருப்பவர்
நே - அருள்
நை - இகழ்ச்சியை குறிப்பத்து
நோ - வலி
கா - பாதுகாப்பு
கூ - வெல்
கை - ஒப்பணை
கோ - அரசன்
வீ - மலர்
வை - வைக்கோல்
வௌ - கைப்பற்றுதல்
யா - கட்டுதல்
நொ - துன்பம்
து - உணவு 

 

 

 

நன்றி

-தியா-

 

Link to comment
Share on other sites

அறிந்துகொள்வோம்: தமிழில் ஓரெழுத்து சொல் 47 ======================================= தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம் அ -----> எட்டு ஆ -----> பசு ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி உ -----> சிவன் ஊ -----> தசை, இறைச்சி ஏ -----> அம்பு ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை கா -----> சோலை, காத்தல் கூ -----> பூமி, கூவுதல் கை -----> கரம், உறுப்பு கோ -----> அரசன், தலைவன், இறைவன் சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல் சீ -----> இகழ்ச்சி, திருமகள் சே -----> எருது, அழிஞ்சில் மரம் சோ -----> மதில் தா -----> கொடு, கேட்பது தீ -----> நெருப்பு து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு தூ -----> வெண்மை, தூய்மை தே -----> நாயகன், தெய்வம் தை -----> மாதம் நா -----> நாக்கு நீ -----> நின்னை நே -----> அன்பு, நேயம் நை -----> வருந்து, நைதல் நொ -----> நொண்டி, துன்பம் நோ -----> நோவு, வருத்தம் நௌ -----> மரக்கலம் பா -----> பாட்டு, நிழல், அழகு பூ -----> மலர் பே -----> மேகம், நுரை, அழகு பை -----> பாம்புப் படம், பசுமை, உறை போ -----> செல் மா -----> மாமரம், பெரிய, விலங்கு மீ -----> ஆகாயம், மேலே, உயரம் மு -----> மூப்பு மூ -----> மூன்று மே -----> மேன்மை, மேல் மை -----> அஞ்சனம், கண்மை, இருள் மோ -----> முகர்தல், மோதல் யா -----> அகலம், மரம் வா -----> அழைத்தல் வீ -----> பறவை, பூ, அழகு வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல் வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல்

 

உங்கள் பதிவின்படி 47 எழுத்துக்கள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால் 46 எழுத்துக்கள் மட்டுமே பதிவிலுள்ளது. 42 எழுத்துக்களுக்கு பொருளுள்ளதாக தெரிவித்துள்ளீர்கள். தொல்காப்பியரும், ஆறுமுகநாவலரும் தெரிவித்துள்ள 42 எழுத்துக்களை விடவும் மேலதிகமாக உங்கள் பதிவிலிருக்கும், அ, உ, நெள, மு என்ற 4 எழுத்துக்களுக்கும் பொருளுள்ளது. ஆதித்தியஇளம்பிறையனும் மேலதிகமாகப் 10 எழுத்துக்களான எ, ஒ, இ, ஔ, கு,ஞா, ம,ள, ளு, று ஆகியனவற்றை இணைத்துள்ளார். ஆகவே தமிழில் ஓரெழுத்து சொற்கள் எத்தனை என்பதை இப்பதிவு உறுதிபடுத்தவில்லை என்ற ஐயமுள்ளது. தமிழ் அகராதியின் துணையோடு, முடிந்தளவு எழுத்துக்களுக்குரிய மேலதிக பொருள்களையும் நிறுவி, இங்கு பின்னூட்டம் செய்துள்ளேன்.

 

----->     எட்டு, இன்மை, எதிர்மறை, குறைவு, சம்மதி, சாரியை, அந்த, சுட்டு, தடை, பிறிது, வியப்பு, சுக்கு, திப்பிலி, சிவன், விஷ்ணு, பிரமன். 

----->    பசு, இசை, இரக்கம், பெண்மரை, பெண்ணெருமை, சிவஞானம், வியப்பு,

----->     அன்பு, ஆச்சரியம், இகழ்ச்சி, உண்டி, கேட்டி, குறத்தி, வில்லி, ஊருணி, செவியிலி, எண்ணி.

----->      கொடு, பறக்கும் பூச்சி, அம்பு, அரைநாண், இந்திரவில், இலக்குமி, கொக்கு, சரசுவதி, தாமரையிதழ், பாம்பு, வண்டு.

----->     சிவன், உருக்கம், கட்டளை, கோபம், சம்மதி, செய்து, பிரமன்.

----->    தசை, இறைச்சி, உணவு, சந்திரன், சமாக்கியகலை, சிவன், ஊன்.

----->      வினா எழுத்து, ஏழு என்பதின் தமிழ் வடிவம்,

----->      அம்பு, சிவன், செலுத்துதல், விஷ்ணு, அடே, அம்பு, இகழ்ச்சிக்குறி, இசைநிறை, ஈற்றசை,

----->      ஐந்து, அழகு, தலைவன், வியப்பு, அரசன், ஆசான், கடுகு, சர்க்கரை, சன்னி, தும்பை, துர்க்கை, நுண்மை, மருந்து, பெருவியாதி, இருமல், கடவுள், குரு, கோழை, சிவன், பிதா,

                  வந்தனை.

----->     ஒழிவு,

----->     வினா, மதகு - நீர் தாங்கும் பலகை, அயன், அரன், அழைத்தல், இரக்கம்.

ஒள -----> பூமி, ஆனந்தம், அழைத்தல், வியப்பு, தடை, கடித்தல், பூமி.

கா ----->    சோலை, காத்தல், காவடி, துலை, தோட்சுமை, பூந்தோட்டம், வருத்தம்.

கு ----->      இருள், குற்றம், வருகுதி, சிறுமை, தடை, தொனி, நிந்தை, நன்கு, போக்கு, பூமி.

கூ ----->     பூமி, கூவுதல், மலங்கழித்தல்.

கை ----->  கரம், உறுப்பு, இடம், உடனே, ஒப்பனை, ஒழுக்கம், கடுக்கை, சாமர்த்தியம், சிறுமை, தங்கை, தொனி, பக்கம், படைவகுப்பு, துதிக்கை, வரிசை.

கோ -----> அரசன், தலைவன், இறைவன், அம்பு, ஆகாயம், ஆண்மகன், இடியேறு, இரக்கக்குறிப்பு, இலந்தை, உரோமம், எருது, கண், கிரகணம், சந்திரன், சூரியன், திசை, கோமேதயாகம்,

                  தேவலோகம், நீர், பசு, பூமி, பொறிமலை, மாதா, மேன்மை, வச்சிராயுதம், வாணி, வெளிச்சம்.

சா ----->     இறப்பு, மரணம், பேய், சாதல்.

சீ ----->       இகழ்ச்சி, திருமகள், அடக்கம், இலக்குமி, காந்தி, சம்பத்து, சரச்சுவதி, சீதல், நித்திரை, பார்வதி, பிரகாசம், பெண், விடம், விந்து.

சே ----->    எருது, அழிஞ்சில் மரம், சிவப்பு, சேரான்மரம்.

சோ ----->  மதில், உமை

ஞா ----->   பொருத்து, கட்டு

தா ----->     கொடு, கேட்பது, அழிவு, குற்றம், கேடு, கொடியன், தாண்டுதல், பகை, பாய்தல், பிரமன், வருத்தம், வலி, வியாழம்.

தீ ----->       நெருப்பு, அறிவு, இனிமை, உபாயவழி, கொடுமை, தீமை, நரகம்.

து ----->       கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு, அசைத்தல், அநுபவம், எரித்தல், கெடுத்தல், சேர்மானம், நடத்தல், நிறைத்தல், பிறவினை, விகுதி, வருத்தல், வளர்தல்.

தூ ----->      வெண்மை, தூய்மை, சீ, தசை, பகை, பற்றுக்கோடு, புள்ளிறகு.

தே ----->     நாயகன், தெய்வம், கிருபை.

தை ----->   மாதம், தைத்தல், பூசநாள், மகராசி.

நா ----->      நாக்கு, அயலார், சுவாலை, திறப்பு, நடு, பொலிவு

நீ ----->        நின்னை

நே ----->     அன்பு, நேயம்

நை ----->    வருந்து, நைதல், இகழ்ச்சிக்குறிப்பு

நொ ----->   நொண்டி, துன்பம், நோய், வருத்தம்

நோ ----->   நோவு, வருத்தம், சிதைவு, துக்கம், துன்பம், பலவீனம், வியாதி.

நௌ -----> மரக்கலம்

பா ----->      பாட்டு, நிழல், அழகு, கடிகாரவூசி, கிழங்குப்பா, நிழல், நெசவுபா, பஞ்சிநூல், பரப்பு, பரவுதல், பிரபை, வெண்பா

பூ ----->        மலர், அழகு, இடம், இந்துப்பு, இருக்குதல், இலை, ஓமாக்கினி,ஒருகண்ணோய், ஒருநரகம், கூர்மை, தாமரை, தீப்பொறி, பிறப்பு, புட்பம், பூமி, பொலிவு,

பே ----->     மேகம், நுரை, அழகு

பை ----->    பாம்புப் படம், பசுமை, உறை, அழகு, குடர், சாக்கு, நிறம், பச்சைநிறம்,பொக்கணம், மந்தக்குணம், மெத்தெனவு.

போ ----->   செல், பிரியின்வாழாதென்போ.

----->        சந்திரன், எமன், என்மர், ஒருமந்திரம், காலம், சிவபிரான், நஞ்சு, நேரம், பிரமன், விட்டுனு.

மா ----->     மாமரம், பெரிய, விலங்கு, அழகு, அழைத்தல், அளவு, அறிவு, ஆணி, இடித்தமா, இடை, இலக்குமி, எதிர்மறை, யுபசருக்கம், ஐயவுபசருக்கம், ஓரெண், ஒருமரம், கட்டு, கறுப்பு,

                    சரச்சுவதி, சீலை, செல்வம், தாய், துகள், நஞ்சுக்கொடி, நிறம், பரி, பிரபை, பெரிய, பெருமை, மகதமதுவம், மரணம், மிகுதி, மேன்மை, வண்டு, வயல், வலி, வெறுப்பு.

மீ ----->        ஆகாயம், மேலே, உயரம், மகிமை, மேல், மேற்புரம்.

மு ----->      மூப்பு

மூ ----->      மூன்று, மூப்பு.

மே ----->     மேன்மை, மேல், அன்பு.

மை ----->   அஞ்சனம், கண்மை, இருள், எழுதுமை, கருப்பு, குற்றம், செம்மறியாடு, நீர், மலடி, மலட்டெருமை, மேகம், மேடவிராசி, வெள்ளாடு.

மோ ----->   முகர்தல், மோதல், கேண்மோ.

யா ----->     அகலம், மரம், சந்தேகம், இல்லை, யாபன்னிருவர்.

வா ----->     அழைத்தல்

வீ ----->        பறவை, பூ, அழகு, கருப்பந்தரித்தல், சாவு, சொல்லுதல், நீக்கம், போதல், விரும்புதல்.

வை ----->    வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல், புல், வையகம்,

வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல்

----->         தமிழெழுத்து நூறு என்பதன் வடிவம்

ளு ----->        நான்கில் மூன்று பகுதி, முக்கால் என்பதன் வடிவம்

று ----->         எட்டில் ஒரு பகுதி அரைக்கால் எனபதன் வடிவம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கத்திற்கு நன்றி.இந்தப் பதிவு பல ஆராய்ச்சிக்கு வித்திட்டது போலுள்ளது.தமிழறிந்தோர் மேலும் மேலும் விளக்கங்களுடன் இன்னும் எழுதுவார்கள் என எதிர்பார்க்கின்றேன்.தமிழ்கடல் போன்றது.அதில் நான் சிறு துளி.

Link to comment
Share on other sites

நாம் இதுவரை குறிப்பிட்ட சொற்கள் எல்லாம் ஒரேழுத்து சொற்களுக்குள் அடங்குமா என்று பார்க்க வேண்டும். ஒரேழுத்து சொற்களுக்கு தொல்காப்பியர் என்ன விளக்கம் கொடுக்கிறார் என்று பார்ப்போம்.

“நெட்டெழுத்தேழே ஓரெழுத் தொருமொழி”
ஓரெழுத்து சொற்கள் அனைத்தும் நெட்டெழுத்துக்களால்(நெடில்) ஆகியவை.

"குற்றெழுத் தைந்தும் மொழிநிறை பிலவே"
குற்றெழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லவாதில்லை.

தொல்காப்பிய இலக்கண விதிப்படி இங்கு இணைக்கப்பட்ட குறில் எழுத்துகள் யாவும் ஓரெழுத்து சொற்களுக்குள் அடங்காது என தெரிய வருகிறது. ஆனால் தியா இணைப்பில், ஆறுமுக நாவலர் கூறிய 42 எழுத்துக்களில் குற்றெழுத்துக்களும் உள்ளது.

நை, கை , பை - > ஏகாரம், ஐகாரம் ஒவ்வொன்றும் இரண்டு மாத்திரையும் ஒரு மாத்திரையும் பெறவல்லன என தொல்காப்பியர் கூறுகிறார். எனவே இவற்றை நெடிலுக்குள் அடக்கி விடலாம் என்றே நினைக்கிறேன்.வாத்தியார் இதற்க்கு நல்ல விளக்கம் கொடுக்க முடியும் என்று எண்ணுகிறேன்.

 நொ’ , ‘து’ எனும் இரு குற்றெழுத்துக்களும் ஓரெழுத்து ஒரு மொழிகள் என்று நான்னூலார் அழைக்கிறார்( ‘நோ’ என்பதின் விகாரவடிவே ‘நொ’ ஆகலானும், ‘துய்’ என்பதன் விகாரவடிவே ‘து’). ஆனால் சில ஆசிரியர்கள் தொல்காப்பிய விதிப்படி 'நொ’ , ‘து’ இரண்டும் ஒரேழுத்து சொல்லாகாது என்கிறார்கள்.

அப்ப குறில் எழுத்துக்கள் ஒரேழுத்து சொற்களுக்குள் அடங்காதா?? ஏன்?? இப்ப சொல் என்றால் என்ன கேள்வி எழக் கூடும்.

சொல் என்றால் என்ன ??
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் இதுவரை குறிப்பிட்ட சொற்கள் எல்லாம் ஒரேழுத்து சொற்களுக்குள் அடங்குமா என்று பார்க்க வேண்டும். ஒரேழுத்து சொற்களுக்கு தொல்காப்பியர் என்ன விளக்கம் கொடுக்கிறார் என்று பார்ப்போம்.

“நெட்டெழுத்தேழே ஓரெழுத் தொருமொழி”

ஓரெழுத்து சொற்கள் அனைத்தும் நெட்டெழுத்துக்களால்(நெடில்) ஆகியவை.

"குற்றெழுத் தைந்தும் மொழிநிறை பிலவே"

குற்றெழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லவாதில்லை.

தொல்காப்பிய இலக்கண விதிப்படி இங்கு இணைக்கப்பட்ட குறில் எழுத்துகள் யாவும் ஓரெழுத்து சொற்களுக்குள் அடங்காது என தெரிய வருகிறது. ஆனால் தியா இணைப்பில், ஆறுமுக நாவலர் கூறிய 42 எழுத்துக்களில் குற்றெழுத்துக்களும் உள்ளது.

நை, கை , பை - > ஏகாரம், ஐகாரம் ஒவ்வொன்றும் இரண்டு மாத்திரையும் ஒரு மாத்திரையும் பெறவல்லன என தொல்காப்பியர் கூறுகிறார். எனவே இவற்றை நெடிலுக்குள் அடக்கி விடலாம் என்றே நினைக்கிறேன்.வாத்தியார் இதற்க்கு நல்ல விளக்கம் கொடுக்க முடியும் என்று எண்ணுகிறேன்.

 நொ’ , ‘து’ எனும் இரு குற்றெழுத்துக்களும் ஓரெழுத்து ஒரு மொழிகள் என்று நான்னூலார் அழைக்கிறார்( ‘நோ’ என்பதின் விகாரவடிவே ‘நொ’ ஆகலானும், ‘துய்’ என்பதன் விகாரவடிவே ‘து’). ஆனால் சில ஆசிரியர்கள் தொல்காப்பிய விதிப்படி 'நொ’ , ‘து’ இரண்டும் ஒரேழுத்து சொல்லாகாது என்கிறார்கள்.

அப்ப குறில் எழுத்துக்கள் ஒரேழுத்து சொற்களுக்குள் அடங்காதா?? ஏன்?? இப்ப சொல் என்றால் என்ன கேள்வி எழக் கூடும்.

சொல் என்றால் என்ன ??

 

ஐ,கை ,மை, பை, தை  என்ற எழுத்துக்கள்  தனியாக உச்சரிக்கப்படும்போது

குறுகாமல் தனது இரண்டு மாத்திரை ஒலி அளவிற்கு ஒலிக்கும் நீண்ட ஒலி அளவைக்கொண்டவை.

 

ஆனால் ஒரு சொல்லின் ஆரம்பத்திலோ நடுவிலோ அல்லது இறுதியிலோ வரும் போது குறுகி ஒரு மாத்திரை அளவில் ஒலிக்கப்படுகின்றது

 

ஓரெழுத்தொரு  மொழியில் நொ து என்ற இரு குறில் எழுத்துக்களே இலக்கணத்தார் முறைப்படி பொருள் தரும் சொற்களாகின்றன. இந்த இரு சொற்களும் வழக்கின் படி தொல்காப்பியரின் காலத்தின் பின்னர் சேர்க்கப்பட்டிருக்கலாம்.

 

நன்னூல் தொல்காப்பியரைத் தழுவி எழுதப்பட்ட நூல்

மக்களின் பேச்சு வழக்கும் எழுத்து வழக்கும் மாறும் போது அவற்றையும் ஏற்றுக்கொள்வது தான் இலக்கணவாதிகளின் இயற்கை வழமை.

 

இன்றைய காலத்தில் வேற்றுமொழிச் சொற்கள் பல கலந்துவிட்ட தமிழ் மொழியில் ஓரெழுத்தைக் கொண்ட சொற்கள் அதிகரித்து வருவதில் ஆச்சரியமில்லை.  

Link to comment
Share on other sites

நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி உறவுகளே! :)

Link to comment
Share on other sites

விளக்கத்திற்கு நன்றி வாத்தியார்.

 

சொல் என்பது வினையையோ அல்லது பொருளையோ குறிக்க வேண்டும்.  அ, இ, உ என்பன சுட்டெழுத்துக்கள் இவை சொற்களுக்குள் அடங்காது, எனவே  அ, இ, உ என்ற ஒரேழுத்து ஒரு சொல்லாக கொள்ளப்பட மாட்டது என்று கூறப்படுகிறது. அப்படியெனில் வினாவெழுத்துக்களை ஒரு சொல்லாக கொள்ளலாமா ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓரெழுத்தில் பல சொற்கள் உண்டு
ஒரு சொல்லிற்குப் பல பொருட்கள் உண்டு
வினாவெழுத்துக்கள் அவை  வரும் இடத்தில் வினாவெழுத்துக்களாகவும்

வேறு பொருள்கோண்டு வருமிடத்தில் வேறு சொற்களாகவும் வரலாம் இல்லையா?
  

Link to comment
Share on other sites

  • 5 years later...

ஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன? 

ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டும் தனித்து வந்து ஒரு பொருளைக் குறிக்குமானால் அதற்கு ஓரெழுத்து ஒரு மொழிச் சொல் என்று பெயர். 

உதாரணம்: தை.. இந்த "தை" என்ற எழுத்தானது தமிழ்மாதங்களில் ஒன்றான மாதத்தின் பெயரைக் குறிக்கும் எழுத்தாகும். இதே எழுத்து "தைத்தல்" "பொருத்துதல்" என்ற பொருளிலும் வரும். இவ்வாறு ஒரே ஒரு எழுத்தானது ஒரு பொருளைத் தரக்கூடிய சொல்லாக வருவதறே ஒரேழுத்து ஒரு மொழியாகும். 

ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்கள் 66 ஆக இருக்கிறது. ஒரெழுத்து ஒரு மொழிச் சொற்களை கீழே பட்டியலிட்டுள்ளேன். படித்துப் பயன்பெறவும்.

ஓரெழுத்து ஒரு மொழிச்  சொற்கள்
 சுட்டெழுத்து, எட்டு, சிவன், விஷ்ணு, பிரம்மா
 பசு(ஆவு), ஆன்மா, இரக்கம், நினைவு, ஆச்சாமரம்
 சுட்டெழுத்து, இரண்டில் ஒரு பங்கு அரை என்பதின் தமிழ் வடிவம்.
 பறக்கும் ஈ, தா, குகை, தேனீ
 சிவன், ஆச்சரியம், சுட்டெழுத்து, இரண்டு என்பதின் தமிழ் வடிவம்
 இறைச்சி, உணவு, ஊன், தசை
 வினா எழுத்து, ஏழு என்பதின் தமிழ் வடிவம்
 அம்பு, உயர்ச்சிமிகுதி
 அழகு, உயர்வு, உரிமை, தலைவன், இறைவன், தந்தை
 மதகு, (நீர் தாங்கும் பலகை)
 பூமி, ஆனந்தம்
 வியங்கோள்  விகுதி
கா
 காத்தல், சோலை
கி
 இரைச்சல் ஒலி
கு
 குவளயம்
கூ
 பூமி, கூவுதல், உலகம்
கை
 உறுப்பு, கரம்
கோ
 அரசன், தந்தை, இறைவன்
கௌ
 கொள்ளு, தீங்கு
சா
 இறத்தல், சாக்காடு
சீ
 லட்சுமி, இகழ்ச்சி, வெறுப்புச் சொல்
சு
 விரட்டடுதல், சுகம், மங்கலம்
சே
 காலை
சை
 அறுவறுப்பு ஒலி, கைப்பொருள்
சோ
 மதில், அரண்
ஞா
  பொருத்து, கட்டு
தா
 கொடு, கேட்பது
தீ
 நெருப்பு , தீமை
து
 உண்
தூ
 வெண்மை, தூய்மை
தே
 கடவுள்
தை
 தமிழ்மாதம், தைத்தல், பொருத்து
நா
 நான், நாக்கு
நி
 இன்பம், அதிகம், விருப்பம்
நீ
 முன்னிலை ஒருமை, நீக்குதல்
நூ
 யானை, ஆபரணம், அணி
நே
 அன்பு, அருள், நேயம்
நை
 வருந்து
நோ
 துன்ப்பபடுதல், நோவு, வருத்தம்
நௌ
 மரக்கலம்
 நூறு
பா
 பாட்டு, கவிதை
பூ
 மலர்
பே
 நுரை, அழகு, அச்சம்
பை
 கைப்பை
போ
 செல், ஏவல்
 சந்திரன், எமன்
மா
 பெரிய, சிறந்த, உயர்ந்த, மரம்
மீ
 மேலே , உயர்ச்சி, உச்சி
மூ
 மூப்பு, முதுமை
மே
 மேல்
மை
 கண்மை (கருமை), அஞ்சனம், இருள்
மோ
 மோதல், முகரதல்
 தமிழ் எழுத்து எனப்தின் வடிவம்
யா
 ஒரு வகை மரம், யாவை, இல்லை
 நாலில் ஒரு பங்கு "கால்" என்பதன் தமிழ் வடிவம்
வா
 வருக, ஏவல்
வி
 அறிவு, நிச்சயம், ஆகாயம்
வீ
 மலர் , அழிவு
வே
 வேம்பு, உளவு
வை
 வைக்கவும், கூர்மை
வௌ
 வவ்வுதல்
நோ
 வருந்து
 தமிழெழுத்து நூறு என்பதன் வடிவம்
ளு
 நான்கில் மூன்று பகுதி, முக்கால் என்பதன் வடிவம்
று
 எட்டில் ஒரு பகுதி அரைக்கால் எனபதன் வடிவம்

 

https://www.tnpscgk.net/2012/08/oreluthu-oru-moli-sol.html

Link to comment
Share on other sites

  • 3 months later...
On 10/5/2013 at 9:32 PM, Paanch said:

 

உங்கள் பதிவின்படி 47 எழுத்துக்கள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால் 46 எழுத்துக்கள் மட்டுமே பதிவிலுள்ளது. 42 எழுத்துக்களுக்கு பொருளுள்ளதாக தெரிவித்துள்ளீர்கள். தொல்காப்பியரும், ஆறுமுகநாவலரும் தெரிவித்துள்ள 42 எழுத்துக்களை விடவும் மேலதிகமாக உங்கள் பதிவிலிருக்கும், அ, உ, நெள, மு என்ற 4 எழுத்துக்களுக்கும் பொருளுள்ளது. ஆதித்தியஇளம்பிறையனும் மேலதிகமாகப் 10 எழுத்துக்களான எ, ஒ, இ, ஔ, கு,ஞா, ம,ள, ளு, று ஆகியனவற்றை இணைத்துள்ளார். ஆகவே தமிழில் ஓரெழுத்து சொற்கள் எத்தனை என்பதை இப்பதிவு உறுதிபடுத்தவில்லை என்ற ஐயமுள்ளது. தமிழ் அகராதியின் துணையோடு, முடிந்தளவு எழுத்துக்களுக்குரிய மேலதிக பொருள்களையும் நிறுவி, இங்கு பின்னூட்டம் செய்துள்ளேன்.

 

----->     எட்டு, இன்மை, எதிர்மறை, குறைவு, சம்மதி, சாரியை, அந்த, சுட்டு, தடை, பிறிது, வியப்பு, சுக்கு, திப்பிலி, சிவன், விஷ்ணு, பிரமன். 

----->    பசு, இசை, இரக்கம், பெண்மரை, பெண்ணெருமை, சிவஞானம், வியப்பு,

----->     அன்பு, ஆச்சரியம், இகழ்ச்சி, உண்டி, கேட்டி, குறத்தி, வில்லி, ஊருணி, செவியிலி, எண்ணி.

----->      கொடு, பறக்கும் பூச்சி, அம்பு, அரைநாண், இந்திரவில், இலக்குமி, கொக்கு, சரசுவதி, தாமரையிதழ், பாம்பு, வண்டு.

----->     சிவன், உருக்கம், கட்டளை, கோபம், சம்மதி, செய்து, பிரமன்.

----->    தசை, இறைச்சி, உணவு, சந்திரன், சமாக்கியகலை, சிவன், ஊன்.

----->      வினா எழுத்து, ஏழு என்பதின் தமிழ் வடிவம்,

----->      அம்பு, சிவன், செலுத்துதல், விஷ்ணு, அடே, அம்பு, இகழ்ச்சிக்குறி, இசைநிறை, ஈற்றசை,

----->      ஐந்து, அழகு, தலைவன், வியப்பு, அரசன், ஆசான், கடுகு, சர்க்கரை, சன்னி, தும்பை, துர்க்கை, நுண்மை, மருந்து, பெருவியாதி, இருமல், கடவுள், குரு, கோழை, சிவன், பிதா,

                  வந்தனை.

----->     ஒழிவு,

----->     வினா, மதகு - நீர் தாங்கும் பலகை, அயன், அரன், அழைத்தல், இரக்கம்.

ஒள -----> பூமி, ஆனந்தம், அழைத்தல், வியப்பு, தடை, கடித்தல், பூமி.

கா ----->    சோலை, காத்தல், காவடி, துலை, தோட்சுமை, பூந்தோட்டம், வருத்தம்.

கு ----->      இருள், குற்றம், வருகுதி, சிறுமை, தடை, தொனி, நிந்தை, நன்கு, போக்கு, பூமி.

கூ ----->     பூமி, கூவுதல், மலங்கழித்தல்.

கை ----->  கரம், உறுப்பு, இடம், உடனே, ஒப்பனை, ஒழுக்கம், கடுக்கை, சாமர்த்தியம், சிறுமை, தங்கை, தொனி, பக்கம், படைவகுப்பு, துதிக்கை, வரிசை.

கோ -----> அரசன், தலைவன், இறைவன், அம்பு, ஆகாயம், ஆண்மகன், இடியேறு, இரக்கக்குறிப்பு, இலந்தை, உரோமம், எருது, கண், கிரகணம், சந்திரன், சூரியன், திசை, கோமேதயாகம்,

                  தேவலோகம், நீர், பசு, பூமி, பொறிமலை, மாதா, மேன்மை, வச்சிராயுதம், வாணி, வெளிச்சம்.

சா ----->     இறப்பு, மரணம், பேய், சாதல்.

சீ ----->       இகழ்ச்சி, திருமகள், அடக்கம், இலக்குமி, காந்தி, சம்பத்து, சரச்சுவதி, சீதல், நித்திரை, பார்வதி, பிரகாசம், பெண், விடம், விந்து.

சே ----->    எருது, அழிஞ்சில் மரம், சிவப்பு, சேரான்மரம்.

சோ ----->  மதில், உமை

ஞா ----->   பொருத்து, கட்டு

தா ----->     கொடு, கேட்பது, அழிவு, குற்றம், கேடு, கொடியன், தாண்டுதல், பகை, பாய்தல், பிரமன், வருத்தம், வலி, வியாழம்.

தீ ----->       நெருப்பு, அறிவு, இனிமை, உபாயவழி, கொடுமை, தீமை, நரகம்.

து ----->       கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு, அசைத்தல், அநுபவம், எரித்தல், கெடுத்தல், சேர்மானம், நடத்தல், நிறைத்தல், பிறவினை, விகுதி, வருத்தல், வளர்தல்.

தூ ----->      வெண்மை, தூய்மை, சீ, தசை, பகை, பற்றுக்கோடு, புள்ளிறகு.

தே ----->     நாயகன், தெய்வம், கிருபை.

தை ----->   மாதம், தைத்தல், பூசநாள், மகராசி.

நா ----->      நாக்கு, அயலார், சுவாலை, திறப்பு, நடு, பொலிவு

நீ ----->        நின்னை

நே ----->     அன்பு, நேயம்

நை ----->    வருந்து, நைதல், இகழ்ச்சிக்குறிப்பு

நொ ----->   நொண்டி, துன்பம், நோய், வருத்தம்

நோ ----->   நோவு, வருத்தம், சிதைவு, துக்கம், துன்பம், பலவீனம், வியாதி.

நௌ -----> மரக்கலம்

பா ----->      பாட்டு, நிழல், அழகு, கடிகாரவூசி, கிழங்குப்பா, நிழல், நெசவுபா, பஞ்சிநூல், பரப்பு, பரவுதல், பிரபை, வெண்பா

பூ ----->        மலர், அழகு, இடம், இந்துப்பு, இருக்குதல், இலை, ஓமாக்கினி,ஒருகண்ணோய், ஒருநரகம், கூர்மை, தாமரை, தீப்பொறி, பிறப்பு, புட்பம், பூமி, பொலிவு,

பே ----->     மேகம், நுரை, அழகு

பை ----->    பாம்புப் படம், பசுமை, உறை, அழகு, குடர், சாக்கு, நிறம், பச்சைநிறம்,பொக்கணம், மந்தக்குணம், மெத்தெனவு.

போ ----->   செல், பிரியின்வாழாதென்போ.

----->        சந்திரன், எமன், என்மர், ஒருமந்திரம், காலம், சிவபிரான், நஞ்சு, நேரம், பிரமன், விட்டுனு.

மா ----->     மாமரம், பெரிய, விலங்கு, அழகு, அழைத்தல், அளவு, அறிவு, ஆணி, இடித்தமா, இடை, இலக்குமி, எதிர்மறை, யுபசருக்கம், ஐயவுபசருக்கம், ஓரெண், ஒருமரம், கட்டு, கறுப்பு,

                    சரச்சுவதி, சீலை, செல்வம், தாய், துகள், நஞ்சுக்கொடி, நிறம், பரி, பிரபை, பெரிய, பெருமை, மகதமதுவம், மரணம், மிகுதி, மேன்மை, வண்டு, வயல், வலி, வெறுப்பு.

மீ ----->        ஆகாயம், மேலே, உயரம், மகிமை, மேல், மேற்புரம்.

மு ----->      மூப்பு

மூ ----->      மூன்று, மூப்பு.

மே ----->     மேன்மை, மேல், அன்பு.

மை ----->   அஞ்சனம், கண்மை, இருள், எழுதுமை, கருப்பு, குற்றம், செம்மறியாடு, நீர், மலடி, மலட்டெருமை, மேகம், மேடவிராசி, வெள்ளாடு.

மோ ----->   முகர்தல், மோதல், கேண்மோ.

யா ----->     அகலம், மரம், சந்தேகம், இல்லை, யாபன்னிருவர்.

வா ----->     அழைத்தல்

வீ ----->        பறவை, பூ, அழகு, கருப்பந்தரித்தல், சாவு, சொல்லுதல், நீக்கம், போதல், விரும்புதல்.

வை ----->    வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல், புல், வையகம்,

வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல்

----->         தமிழெழுத்து நூறு என்பதன் வடிவம்

ளு ----->        நான்கில் மூன்று பகுதி, முக்கால் என்பதன் வடிவம்

று ----->         எட்டில் ஒரு பகுதி அரைக்கால் எனபதன் வடிவம்

 

Link to comment
Share on other sites

வாருங்கள் வீரையா, வணக்கம்.! 

என் பதிவொன்றை இன்று மீட்டியமைக்கு நன்றி.! நானா இதனைப் பதிந்தேன்....!! எனக்கே மலைப்பாக இருக்கிறது. வேறொன்றும் இல்லை ஐயா, இப்போ வயது போட்டுது...😒

கடலுக்கு கரையுண்டு. தமிழுக்கு கரை இல்லை. எப்போ தமிழுக்கு என்று ஒரு கரையை, அதாவது மண்ணைச் சொந்தமாகக் காண்கின்றோமோ அன்று தமிழின் முழுமையை தமிழனோடு இந்த உலகமும் காணும்.:) 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து ரஷ்ய இராணுவத்திற்கு ஆட்களை இணைத்துக் கொள்வது இன்றைய காலத்தில் வழக்கமான ஒரு விடயமாக காணப்படுவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே என குறிப்பிட்டுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு சென்று இராணுவ பணியில் இணைந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய இராணுவம் சுற்றுலா விசாவில் இலங்கையர்களும் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொள்வதாக தகவல் கிடைத்துள்ளதாக ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது தொடர்பான சரியான தகவல்கள் தூதரகத்திடம் இல்லாததால், அந்நாட்டு இராணுவ சேவையில் இலங்கையர்கள் பணியாற்றினால் அது தொடர்பான தகவல்களை வழங்குமாறு ரஷ்ய பாதுகாப்பு பிரதானிகளிடம் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையர்கள் பலி ரஷ்ய படைகளுடன் இலங்கையர்கள் இணைந்து கொண்டால் அது தொடர்பில் தூதரகத்திற்கு அறிவிக்குமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ரஷ்ய இராணுவத்தில் இருந்த இலங்கையர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும், தூதரகத்திடம் தகவல் இல்லாததால், உயிரிழக்கும் இலங்கையர்கள் அல்லது காயமடையும் இலங்கையர்கள் தொடர்பிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார்.   https://akkinikkunchu.com/?p=273802
    • பிளவை நோக்கி தமிழரசுக் கட்சி? – பேராசிரியா் அமிா்தலிங்கம் April 16, 2024   ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழ்க் கட்சிகள் சிலவற்றால் முன்வைக்கப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற கருத்து, வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது. மறுபுறம் தமிழரசுக் கட்சிக்குள் உருவாகியிருக்கும் முரண்பாடு அந்தக் கட்சி பிளவுபடுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒரணியில் இணைக்கும் முயற்சிகளையும் இது பலவீனப்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியா் கோபாலபிள்ளை அமிா்தலிங்கம் வழங்கிய நோ்காணல். கேள்வி – பொதுத் தோ்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை பொது ஜன பெரமுன கொடுத்தது. ஆனால் இப்போது ஜனாதிபதித் தோ்தல்தான் முதலில் நடத்தப்படும் என்பது பெருமளவுக்கு உறுதியாகியிருக்கின்றது. இந்த முரண்பாடான போக்கிற்கு காரணம் என்ன? பதில் – பொது ஜன பெரமுனவைப் பொறுத்தவரையில் ஜனாதிபதித் தோ்தலுக்கு முன்னதாக பொதுத் தோ்தலை நடத்த வேண்டும் என்று முயற்சிக்கின்றாா்கள். பொதுத் தோ்தலின் மூலம் சில ஆசனங்களைக் கைப்பற்றி எதிா்கால ஜனாதிபதி தமக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவிடாமல் தடுக்கலாம் என அவா்கள் சிந்திக்கின்றாா்கள். ஜனாதிபதித் தோ்தல் முதலில் நடைபெற்று அதில் யாா் ஜனாதிபதியாக வந்தாலும், அதன் பின்னா் வரக்கூடிய பாராளுமன்றத் தோ்தலில் பொதுஜன பெரமுன வெற்றிபெறுவது மிகவும் கடினமானது. மிகவும் குறைந்த ஆசனங்களையே அவா்களினால் பெறக்கூடியதாக இருக்கும். அதனைவிட, அவா்களுடைய கட்சியைச் சோ்ந்த சிலா் கூட, ஜனாதிபதியாக வருபவரின் கட்சியுடன் இணைந்துகொள்வதற்கும் வாய்ப்புள்ளது.   அவ்வாறான சந்தா்ப்பத்தில் பாராளுமன்றத்தில் அவா்களுடைய பலம் கடுமையாக வீழ்ச்சியடைந்து எதிா்காலத்தில் வரக்கூடிய அரசாங்கங்கள் தம்மீதான சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தலாம் என்று அஞ்சுகிறாா்கள். அதனால் அவா்கள் தங்களைப் பாதுகாப்பதற்கு – தமது எதிா்காலத்தைப் பாதுகாப்பதற்கு பொதுத் தோ்தல் முதலில் நடைபெற வேண்டும் என்று விரும்புகின்றாா்கள். அவ்வாறு நிகழ்ந்தால், பாராளுமன்றத்தில் எந்வொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். புதிதாக வரப்போகும் ஜனாதிபதிக்கும் இதனால் மிகப் பெரிய சிக்கல் உருவாகும். பாராளுமன்றம் தொங்கு பாராளுமன்றமாக அமையலாம். பாராளுமன்றத்தை நான்கு வருடங்களுக்குக் கலைக்கவும் முடியாது. அது நாட்டில் பாரிய சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளையும் உருவாக்கும் என்பதையும் ஜனாதிபதி உணா்ந்திருக்கின்றாா். கேள்வி – ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. யாயைாவது ஆதரிப்பதா, பகிஷ்கரிப்பதா என்ற கேள்விகளுக்கு மத்தியில் தமிழ்ப் பொது வேட்பாளா் ஒருவரை களமிறக்குவது என்பது குறித்தும் முக்கியமாகப் பேசப்படுகின்றது. பொதுவேட்பாளா் என்ற விடயத்தைப் பொறுத்தவரையில் உங்கள் பாா்வை என்ன? பதில் – 1931 ஆம் ஆண்டு டொனமூா் அரசியலமைப்பின் படி இலங்கையிலுள்ள அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு தோ்தல் நடைபெற்ற போது அது தமிழ் மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அது தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற ரீதியில் யாழ். மாவட்ட மக்கள் அந்தத் தோ்தலைப் புறக்கணித்தாா்கள். அன்று முதல் பல்வேறுபட்ட புறக்கணிப்புக்களை தமிழ் மக்கள் செய்திருக்கின்றாா்கள். இப்போது பொதுவேட்பாளா் ஒருவரை நிறுத்துவது என்பதும், நாம் சிங்கள வேட்பாளா்கள் எவருக்கும் வாக்களிக்க மாட்டடோம் என வாக்களிப்பைப் புறக்கணிப்பதற்கு சமமானதுதான். அவ்வாறு பொதுவேட்பாளராக தமிழா் ஒருவரை களமிறக்கும் போது, அவரால் வெற்றிபெற முடியாது என்பதைத் தெரிந்துதான் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும். குமாா் பொன்னம்பலம் ஒரு தடவை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டவா். அவருக்கும் தமிழ்ப் பகுதிகளில் கூட அதிகளவு வாக்குகள் கிடைக்கவில்லை. இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் இரண்டு விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து இதற்கான தீா்மானத்தை எடுப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. தமிழரசுக் கட்சி ஒருபுறம் இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவா்கள் மற்றொரு அணியாக இருக்கின்றாா்கள். கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் மற்றொரு அணியில் இருக்கின்றாா். நீதியரசா் விக்னேஸ்வரனின் அணி மற்றொன்றாக இருக்கின்றது. இந்த நான்கு தரப்புக்களும் இணைந்து ஓரணியாக வரக்கூடிய வாய்ப்புக்கள் இல்லை. வேறுபட்ட முடிவுகளைத்தான் எடுக்கப்போகின்றாா்கள். இதனைவிட பொது வேட்பாளா் எந்தளவுக்குப் பொது வேட்பாளராக இருப்பாா் என்றொரு கேள்வி இருக்கின்றது. என்ன முடிவை எடுத்தாலும் தமிழ் மக்களுக்கு அதனால் ஏற்படக்கூடிய சாதக, பாதக அம்சங்களை அவா்கள் தெளிவாகக்கூற வேண்டும். பொது வேட்பாளரை நாங்கள் நிறுத்துகிறோம். நீங்கள் வாக்களியுங்கள். பெரும்பான்மை இன வேட்பாளா்களை நாங்கள் நிராகரிக்கின்றோம். அதனால் தமிழ் மக்களுக்கு சாதகமானவை என்ன பாதகமானவை என்ன என்பதையெல்லாம் இவா்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும். கேள்வி – தமிழ் அரசியல் கட்சிகள் தவிா்ந்த சிவில் அமைப்புக்கள் இந்த விடயத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடியவையாக இருக்குமா? பதில் – சிவில் அமைப்புக்கள் அவ்வாறு கூறலாம். ஆனால் எம்மிடம் அவ்வாறு பலம்பொருந்திய சிவில் அமைப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அதேவேளையில், அரசியல் கட்சிகள் ஒரு முடிவை எடுக்க சிவில் அமைப்புக்கள் இன்னொரு முடிவை எடுப்பது போன்றன தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நான் நினைக்கவில்லை. சிவில் அமைப்புக்கள் அரசியல் கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து ஒரு இலக்கை நோக்கி நகா்த்துவதற்கு முயற்சிக்கலாம். ஆனால், இது எவ்வாறு நடைபெறப்போகின்றது என்பதற்கு காலம்தான் பதில் சொல்லப்போகின்றது. கேள்வி – தமிழரசுக் கட்சிக்குள் உருவாகிய முரண்பாடு இன்று ஒரு பிளவாகி நீதிமன்றத்தின் முன்பாகச் சென்றுள்ளது. இந்தப் பிளவு தமிழ் மக்களுடைய அரசியலில் எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்? பதில் – சம்பந்தன் அரசியலைவிட்டு விலகும் போது, தமிழரசுக் கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்படும் என்பது முன்னரே அனுமானிக்கப்பட்ட ஒன்றுதான். ஏனெனில் அவா் தனக்கு அடுத்ததாக ஒரு தலைவரை உருவாக்கத் தவறிவிட்டாா். தந்தை செல்வா, அமிா்தலிங்கத்திடம் தலைமையைக் கொடுக்கும் போது தமிழ்த் தலைமை பலமாக இருந்தது. அவ்வாறான ஒன்றை சம்பந்தன் செய்வதற்குத் தவறிவிட்டாா். பலரும் விரும்புகிறாா்களோ இல்லையோ, தமிழரசுக் கட்சி தமிழா்களுக்குத் தேவையான ஒரு முதன்மையான கட்சி. ஆனால், இன்று பலா் ஒதுங்கிவிட்டாா்கள். இலங்கை அரசியலில் செல்வந்தா்கள், கல்விமான்கள் வாக்களிப்புக்குச் செல்வதில்லை. அதேபோல அரசியலுக்கு வருவதற்குப் பலா் பின்னடிக்கின்றாா்கள். ஏனெனில் அரசியல் சிக்கலான ஒன்றாக இருக்கின்றது. அந்தவகையில் பலா் வெளியில் இருக்கின்றாா்கள். தமிழரசுக் கட்சியில் ஜனநாயகம் என்று கதைத்தாலும், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாக்களிப்பின் மூலமாகத் தெரிவு செய்யப்படுவதில்லை. சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் போட்டி வந்த போது தோ்தல் நடைபெறவில்லை. அண்மையில் இந்திய காங்கிரஸ் கட்சியில் சசி தருா் தலைமைப் பதவிக்காக தோ்தலில் கேட்க விரும்பினாா். ஆனால், காா்க்கேயைத்தான் காந்தி குடும்பம் தலைமைப் பதவிக்குக் கொண்டுவந்தது. சசி தருா் இளமையானவா் தமக்கு சவாலாக அமையலாம் என அவா்கள் கருதினாா்கள். இருவருக்கும் இடையில் தோ்தல் நடைபெற்றிருந்தால் சில சமயம் சசி தருா் வெற்றி பெற்றிருக்கக்கூடும். அரசியல் கட்சிகள் ஜனநாயகம் குறித்து பேசிக்கொண்டாலும் இவ்வாறு தோ்தல் நடத்தப்படுவதில்லை. ஏனெனில் தோல்வியடைந்த பிரிவினா் எப்போதும் பிரச்சினையாக இருப்பாா்கள். அதனால்தான் ஏகமனதான தெரிவுக்கு அனைத்துக் கட்சிகளுமே முயற்சிக்கின்றன. அதனால், தமிழரசுக் கட்சியில் இடம்பெற்ற தோ்தல் ஜனாநாயகத் தன்மையானது என சிலா் கூறுவதற்கு முற்பட்டாலும், அந்தத் தலைமை தெரிவு செய்யப்பட்ட பின்னா் கட்சி பிளவுபடுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனைத் தவிா்ப்பதற்காகத்தான் ஏகமனதான தெரிவை நோக்கி கட்சிகள் செல்கின்றன. இப்போது பொது வேட்பாளா் விடயத்தை எடுத்துக்கொண்டாலும், இந்த இரண்டு அணியினரும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கக்கூடும். ஒரு சிக்கலான நிலைமையில் தமிழினம் இருக்கின்றது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.   https://www.ilakku.org/பிளவை-நோக்கி-தமிழரசுக்-க/
    • மூட நம்பிக்கையால் ஆசிரியையின் உயிர் பறிபோனது! adminApril 15, 2024   பில்லி சூனியம் குணமாக்கல் சிகிச்சைக்காக மத சபையில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (14.04.24)  உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை சேர்ந்த , அராலி முருகமூர்த்தி பாடசாலை ஆங்கில ஆசிரியையான 37 வயதுடைய  கோவிந்தசாமி கல்பனா   என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியைக்கு கடந்த 05ஆம் திகதி முதல் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டார்கள் என நம்பியுள்ளனர். அதனால் இளவாலை பகுதியில் உள்ள மத சபை ஒன்றுக்கு சென்ற போது , பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது அவற்றை அகற்ற, குணமாக்கல் வழிபாடுகள், பரிகாரங்கள் செய்ய வேண்டும் என மத சபையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் வாந்தியும், வயிற்று வலியும் ஏற்பட்டதை அடுத்து, ஆபத்தான நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மத சபையின் போதகரினால் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதேவேளை சடலத்தை புதைக்குமாறு அறிவுறுத்தி உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.   https://globaltamilnews.net/2024/201801/
    • வடக்கு-கிழக்கில் தமிழ்த்தேசியம் பலவீனமாக உள்ளது. எதிர்ப்பு அரசியலால் சலித்துப்போனவர்கள் அதிகரித்துள்ளார்கள். பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்ப வெளிநாடுகளுக்கு ஓடமுயல்கின்றார்கள். இந்த நிலையில் மக்கள் இயல்பாகவே தமது தனிப்பட்ட வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஸ்திரமான ஆட்சியை யார் தருவார் என்று பார்ப்பார்களே தவிர, ஒரு திரளாக கொள்கைக்கு வாக்களிக்கமாட்டார்கள்.  ஆகவே, சிங்களத் தலைவர்கள்  “தமிழர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை” என்று சொன்னால் அதை மறுதலிக்கமுடியாத நிலைதான் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் மூலம் உருவாகும். அது ஒரு வகையில் தமிழரின் தலைமை இனப்பிரச்சினைக்கு என்ன வகையான தீர்வை முன்னெடுக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கவும் உதவலாம்!
    • தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவர் அறிக்கை! தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா அறிக்கையொன்றை விடுத்துள்ளார். தற்போதைய அரசியல், பொருளாதார சூழலில் தமிழ் மக்கள் தமது இருப்பை நிலைநிறுத்தவும் உரிமைக் கோரிக்கைக்கான ஒரு குரலாகவும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயத்தை முன்வைப்பது பொருத்தமாக இருக்கும் என கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவதனூடாக, தமிழர்கள் சிங்கள ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கையிழந்து விட்டார்கள் என்பதையும் தமிழ் மக்களின் உரிமைக்காக ஒன்றுபட்டமையை பொது வேட்பாளருக்கு திரளாக வாக்களிப்பதன் மூலம் உணர்த்த முடியும் எனவும் அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் பொது வேட்பாளர் என்ற எண்ணக்கருவை எதிர்ப்பவர்கள் பேரினவாத ஆட்சியாளர்கள் வெல்வதற்கே துணை செய்கிறார்கள் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா கூறியுள்ளார். -(3)   http://www.samakalam.com/தமிழ்-பொது-வேட்பாளர்-தொட/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.