Jump to content

தமிழில் ஓரெழுத்து சொல் 47


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அறிந்துகொள்வோம்: தமிழில் ஓரெழுத்து சொல் 47 ======================================= தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம் அ -----> எட்டு ஆ -----> பசு ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி உ -----> சிவன் ஊ -----> தசை, இறைச்சி ஏ -----> அம்பு ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை கா -----> சோலை, காத்தல் கூ -----> பூமி, கூவுதல் கை -----> கரம், உறுப்பு கோ -----> அரசன், தலைவன், இறைவன் சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல் சீ -----> இகழ்ச்சி, திருமகள் சே -----> எருது, அழிஞ்சில் மரம் சோ -----> மதில் தா -----> கொடு, கேட்பது தீ -----> நெருப்பு து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு தூ -----> வெண்மை, தூய்மை தே -----> நாயகன், தெய்வம் தை -----> மாதம் நா -----> நாக்கு நீ -----> நின்னை நே -----> அன்பு, நேயம் நை -----> வருந்து, நைதல் நொ -----> நொண்டி, துன்பம் நோ -----> நோவு, வருத்தம் நௌ -----> மரக்கலம் பா -----> பாட்டு, நிழல், அழகு பூ -----> மலர் பே -----> மேகம், நுரை, அழகு பை -----> பாம்புப் படம், பசுமை, உறை போ -----> செல் மா -----> மாமரம், பெரிய, விலங்கு மீ -----> ஆகாயம், மேலே, உயரம் மு -----> மூப்பு மூ -----> மூன்று மே -----> மேன்மை, மேல் மை -----> அஞ்சனம், கண்மை, இருள் மோ -----> முகர்தல், மோதல் யா -----> அகலம், மரம் வா -----> அழைத்தல் வீ -----> பறவை, பூ, அழகு வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல் வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பகிர்வு புலவரே. நன்றி

Link to comment
Share on other sites

ஒரேழுத்து சொற்கள் 47 தான் என்று அறுதியிட்டு கூற முடியாது என்று நினைக்கிறேன்.
 
ஒரெழுத்தில் இவைகளையும் சேர்த்துக் கொள்ளலாம் 
 
எ  - வினா எழுத்து, ஏழு என்பதின் தமிழ் வடிவம்
ஒ - ஒழிவு
இ -  அன்பு, ஆச்சரியம், இகழ்ச்சி
ஒள - பூமி, ஆனந்தம்
கு - இருள்
ஞா - பொருத்து, கட்டு
ம -  சந்திரன், எமன் 
 
ள - தமிழெழுத்து நூறு என்பதன் வடிவம் 
ளு - நான்கில் மூன்று பகுதி, முக்கால் என்பதன் வடிவம் 
று -  எட்டில் ஒரு பகுதி அரைக்கால் எனபதன் வடிவம் 
 
Link to comment
Share on other sites

எல்லாவற்றையும் சேர்த்து இணைத்துள்ளேன் 
 
அ -----> எட்டு 
ஆ -----> பசு 
இ ----->  அன்பு, ஆச்சரியம், இகழ்ச்சி
ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி 
உ -----> சிவன் 
ஊ -----> தசை, இறைச்சி 
எ  -----> வினா எழுத்து, ஏழு என்பதின் தமிழ் வடிவம்
ஏ -----> அம்பு 
ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு 
ஒ  -----> ஒழிவு
ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை 
ஒள -----> பூமி, ஆனந்தம்
 
கா -----> சோலை, காத்தல் 
கூ -----> பூமி, கூவுதல்
கு  -----> இருள்
கை -----> கரம், உறுப்பு 
கோ -----> அரசன், தலைவன், இறைவன் 
 
சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ -----> இகழ்ச்சி, திருமகள் 
சே -----> எருது, அழிஞ்சில் மரம் 
சோ -----> மதில் 
 
தா -----> கொடு, கேட்பது 
தீ -----> நெருப்பு 
து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு 
தூ -----> வெண்மை, தூய்மை 
தே -----> நாயகன், தெய்வம் 
தை -----> மாதம் 
 
ஞா  -----> பொருத்து, கட்டு
நா -----> நாக்கு 
நீ -----> நின்னை 
நே -----> அன்பு, நேயம் 
நை -----> வருந்து, நைதல் 
நொ -----> நொண்டி, துன்பம் 
நோ -----> நோவு, வருத்தம் 
நௌ -----> மரக்கலம் 
 
பா -----> பாட்டு, நிழல், அழகு 
பூ -----> மலர் 
பே -----> மேகம், நுரை, அழகு 
பை -----> பாம்புப் படம், பசுமை, உறை 
போ -----> செல் 
 
ம  ----->  சந்திரன், எமன் 
மா -----> மாமரம், பெரிய, விலங்கு 
மீ -----> ஆகாயம், மேலே, உயரம் 
மு -----> மூப்பு 
மூ -----> மூன்று 
மே -----> மேன்மை, மேல் 
மை -----> அஞ்சனம், கண்மை, இருள் 
மோ -----> முகர்தல், மோதல் 
 
யா -----> அகலம், மரம் 
வா -----> அழைத்தல் 
வீ -----> பறவை, பூ, அழகு 
வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல் 
வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல் 
 
ள  -----> தமிழெழுத்து நூறு என்பதன் வடிவம் 
ளு  -----> நான்கில் மூன்று பகுதி, முக்கால் என்பதன் வடிவம் 
று  -----> எட்டில் ஒரு பகுதி அரைக்கால் எனபதன் வடிவம் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பகிர்வு!

 

ரு =  5 என்று வரும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோ என்பது எருதையும் குறிக்கும். கோ மாதா என்றால் பசு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோ என்றால் (கோன்)அரசன்,கடவுள்.பசு என்று பொருள்படும். ஜேர்மன் மொழியில் கூ உன்றால்பசு,கேனிக்(கோன்) என்றால் அரசன்,கோ(ட்) என்றால்கடவுள் ஆங்கிலத்தில் கோ(ட்) கடவுள்,கௌ-பசு,கிங்-அரசன்(ககரவரிசை) மூத்தமொழி தமிழ்ஆகவே மூலமொழியும் தமிழே!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

500px-Arabic_numerals-en.svg.png

 

 

அடக் கடவுளே !  தமிழில் பூஜ்ஜியம் இல்லையா !   அப்பா ஏன்  நான் எடுத்த பரீட்சைகள் எல்லாவற்றிலும் முட்டை,முட்டையாய்  இட்டுத் தள்ளுனவை! :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயிர் மவிலாறுந் தபநவி லைந்துங்
கவசவினாலும்
யவ்விலொன்று
மாகு நெடி நொது வாங்க்குறிலிரண்டோ
டோரெழுத்தியல்பத மாறேழ் சிறப்பின்.
                                                        

நன்னூல்  
 

சே என்பதற்கு சிவப்பு என்றும் பொருள் வரும்
இணைப்பிற்கு நன்று புலவர்

Link to comment
Share on other sites

அடக் கடவுளே !  தமிழில் பூஜ்ஜியம் இல்லையா !   அப்பா ஏன்  நான் எடுத்த பரீட்சைகள் எல்லாவற்றிலும் முட்டை,முட்டையாய்  இட்டுத் தள்ளுனவை! :o

 

 

பழந்தமிழில் பூஜ்ஜியத்துக்கு விசேட குறியீடு இருந்ததாம். "அன்று" என்று உச்சரிக்கப்பட்டதாம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு வாழ்த்துகள். தமிழில் உள்ள ஓர் எழுத்துச் சொற்கள் பற்றி  தொல்காப்பியம் இப்படிச் சொல்கிறது. 

 

 

 

 “ஓரெழுத் தொருமொழி யீரெழுத் தொருமொழி

      இரண்டிறந் திசைக்குந் தொடர்மொழி யுளப்பட
      மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே” (தொல். மொழி. 12)

 

இங்கு மூன்று வகையாச் சொற்களில் ஒன்றாக  ஓர் எழுத்துச் சொற்கள் பற்றி ஆசிரியர் தொல்காப்பியர் சொல்கிறார்.

 

மேலும் நன்னூல் விருத்தியுரையில்...

 

 

உயிர்மவி லாறுந் தபநவி லைந்துங்
கவசவி னாலும் யவ்வி லொன்றும்
ஆகு நெடினொது வாங்குறி லிரண்டோ
டோரெழுத் தியல்பத மாறேழ் சிறப்பின.

 
     எ-னின், மேல் எழுத்துத் தனித்தும் தொடர்ந்தும் ஒரு மொழி ஆம் என்றார்.
அவற்றுள் ஓர் எழுத்து ஒரு மொழி இவை என்பதூஉம் இத்துணைய என்பதூஉம்
உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: உயிர்வருக்கத்தும் மவ்வருக்கத்தும் அவ்வாறும் தவ்வருக்கத்தும
 பவ்வருக்கத்தும் நவ்வருக்கத்தும் ஐவைந்தும் கவ்வருக்கத்தும் வவ்வருக்கத்தும் சவ்-வருக்கத்தும் நந்நான்கும் யவ்வருக்கத்து ஒன்றும் ஆகும் நெட்டெழுத்தான் ஆகிய
மொழி நாற்பதும், நொவ்வும் துவ்வும் ஆகும் குற்றெழுத்தான் ஆகிய மொழி
இரண்டுடனே ஓர் எழுத்தான் ஆகிய மொழி இந்நாற்பத்திரண்டும் சிறப்பினவாம் எ-று.

     உ-ம்: ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ எனவும் மா, மீ, மூ, மே, மை, மோ எனவும் தா, தீ,
தூ, தே, தை எனவும் பா, பூ, பே, பை, போ எனவும் நா, நீ, நே, நை, நோ எனவும்
கா, கூ, கை, கோ எனவும் வா, வீ, வை, வௌ எனவும் சா, சீ, சே, சோ எனவும் யா
எனவும் நொ, து எனவும் வரும்.

     இவற்றுள் ஊ- இறைச்சி; ஓ- மதகுநீர் தாங்கும் பலகை; பே- நுரை; நே- அன்பு;
சோ- அரண். நொ, து என்னும் குறில் இரண்டும் துன்பி, புசி என்னும் ஏவல்.

     இவை, ‘சிறப்பின’ எனவே வகரவீற்றுச் சுட்டுப்பெயர்ப் பொருளை ஒப்புமையான்
உணர்த்தி நிற்றலான் ஒள என்னும் ஓர் எழுத்து ஒரு மொழியும் சுட்டு, வினா,
உவமைப்பொருளைத் தரும் இடைச்சொல் ஆதலால் குற்றுயிர் ஐந்தான் ஆய ஓர் 
எழுத்து ஒரு மொழிகளும் கௌ என்னும் உயிர்மெய்யான் ஆய ஓர் எழுத்து ஒரு 
மொழியும் இவை போல்வன பிறவும் சிறப்பு இல்லன எனக் கொள்க.

 

எனக் கூறியுள்ளார்.

 

ஆறுமுக நாவலரின் இலக்கணச் சுருக்கத்‌தில் தமிழில் நாற்பத்தி இரண்டு எழுத்துக்கள் ஒரெழுத்து ஒரு சொல் உள்ளது எனக் கூறியுள்ளார். அவையாவன...

 

ஆ - பசு 
ஈ - பறவை
ஊ - இறைச்சி
ஏ - கணை
ஐ - தலைவன்
ஓ - வியப்பு
மா - பெரிய
மீ - மேல்
மூ - மூப்பு
மே - மேன்மை
மை - இருள்
மோ - மோதுதல்
தா - கொடு
தீ - நெருப்பு
தூ - தூய்மை
தே - தெய்வம்
தை - மாதம்
சா - சாதல் 
சீ - இலக்குமி
சே - எருது
சோ - மதில்
பா - பாட்டு
பூ - மலர்
பே - நுரை
பை - பசுமை
போ - செல்
நா - நாக்கு
நீ - முன்னால் இருப்பவர்
நே - அருள்
நை - இகழ்ச்சியை குறிப்பத்து
நோ - வலி
கா - பாதுகாப்பு
கூ - வெல்
கை - ஒப்பணை
கோ - அரசன்
வீ - மலர்
வை - வைக்கோல்
வௌ - கைப்பற்றுதல்
யா - கட்டுதல்
நொ - துன்பம்
து - உணவு 

 

 

 

நன்றி

-தியா-

 

Link to comment
Share on other sites

அறிந்துகொள்வோம்: தமிழில் ஓரெழுத்து சொல் 47 ======================================= தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம் அ -----> எட்டு ஆ -----> பசு ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி உ -----> சிவன் ஊ -----> தசை, இறைச்சி ஏ -----> அம்பு ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை கா -----> சோலை, காத்தல் கூ -----> பூமி, கூவுதல் கை -----> கரம், உறுப்பு கோ -----> அரசன், தலைவன், இறைவன் சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல் சீ -----> இகழ்ச்சி, திருமகள் சே -----> எருது, அழிஞ்சில் மரம் சோ -----> மதில் தா -----> கொடு, கேட்பது தீ -----> நெருப்பு து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு தூ -----> வெண்மை, தூய்மை தே -----> நாயகன், தெய்வம் தை -----> மாதம் நா -----> நாக்கு நீ -----> நின்னை நே -----> அன்பு, நேயம் நை -----> வருந்து, நைதல் நொ -----> நொண்டி, துன்பம் நோ -----> நோவு, வருத்தம் நௌ -----> மரக்கலம் பா -----> பாட்டு, நிழல், அழகு பூ -----> மலர் பே -----> மேகம், நுரை, அழகு பை -----> பாம்புப் படம், பசுமை, உறை போ -----> செல் மா -----> மாமரம், பெரிய, விலங்கு மீ -----> ஆகாயம், மேலே, உயரம் மு -----> மூப்பு மூ -----> மூன்று மே -----> மேன்மை, மேல் மை -----> அஞ்சனம், கண்மை, இருள் மோ -----> முகர்தல், மோதல் யா -----> அகலம், மரம் வா -----> அழைத்தல் வீ -----> பறவை, பூ, அழகு வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல் வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல்

 

உங்கள் பதிவின்படி 47 எழுத்துக்கள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால் 46 எழுத்துக்கள் மட்டுமே பதிவிலுள்ளது. 42 எழுத்துக்களுக்கு பொருளுள்ளதாக தெரிவித்துள்ளீர்கள். தொல்காப்பியரும், ஆறுமுகநாவலரும் தெரிவித்துள்ள 42 எழுத்துக்களை விடவும் மேலதிகமாக உங்கள் பதிவிலிருக்கும், அ, உ, நெள, மு என்ற 4 எழுத்துக்களுக்கும் பொருளுள்ளது. ஆதித்தியஇளம்பிறையனும் மேலதிகமாகப் 10 எழுத்துக்களான எ, ஒ, இ, ஔ, கு,ஞா, ம,ள, ளு, று ஆகியனவற்றை இணைத்துள்ளார். ஆகவே தமிழில் ஓரெழுத்து சொற்கள் எத்தனை என்பதை இப்பதிவு உறுதிபடுத்தவில்லை என்ற ஐயமுள்ளது. தமிழ் அகராதியின் துணையோடு, முடிந்தளவு எழுத்துக்களுக்குரிய மேலதிக பொருள்களையும் நிறுவி, இங்கு பின்னூட்டம் செய்துள்ளேன்.

 

----->     எட்டு, இன்மை, எதிர்மறை, குறைவு, சம்மதி, சாரியை, அந்த, சுட்டு, தடை, பிறிது, வியப்பு, சுக்கு, திப்பிலி, சிவன், விஷ்ணு, பிரமன். 

----->    பசு, இசை, இரக்கம், பெண்மரை, பெண்ணெருமை, சிவஞானம், வியப்பு,

----->     அன்பு, ஆச்சரியம், இகழ்ச்சி, உண்டி, கேட்டி, குறத்தி, வில்லி, ஊருணி, செவியிலி, எண்ணி.

----->      கொடு, பறக்கும் பூச்சி, அம்பு, அரைநாண், இந்திரவில், இலக்குமி, கொக்கு, சரசுவதி, தாமரையிதழ், பாம்பு, வண்டு.

----->     சிவன், உருக்கம், கட்டளை, கோபம், சம்மதி, செய்து, பிரமன்.

----->    தசை, இறைச்சி, உணவு, சந்திரன், சமாக்கியகலை, சிவன், ஊன்.

----->      வினா எழுத்து, ஏழு என்பதின் தமிழ் வடிவம்,

----->      அம்பு, சிவன், செலுத்துதல், விஷ்ணு, அடே, அம்பு, இகழ்ச்சிக்குறி, இசைநிறை, ஈற்றசை,

----->      ஐந்து, அழகு, தலைவன், வியப்பு, அரசன், ஆசான், கடுகு, சர்க்கரை, சன்னி, தும்பை, துர்க்கை, நுண்மை, மருந்து, பெருவியாதி, இருமல், கடவுள், குரு, கோழை, சிவன், பிதா,

                  வந்தனை.

----->     ஒழிவு,

----->     வினா, மதகு - நீர் தாங்கும் பலகை, அயன், அரன், அழைத்தல், இரக்கம்.

ஒள -----> பூமி, ஆனந்தம், அழைத்தல், வியப்பு, தடை, கடித்தல், பூமி.

கா ----->    சோலை, காத்தல், காவடி, துலை, தோட்சுமை, பூந்தோட்டம், வருத்தம்.

கு ----->      இருள், குற்றம், வருகுதி, சிறுமை, தடை, தொனி, நிந்தை, நன்கு, போக்கு, பூமி.

கூ ----->     பூமி, கூவுதல், மலங்கழித்தல்.

கை ----->  கரம், உறுப்பு, இடம், உடனே, ஒப்பனை, ஒழுக்கம், கடுக்கை, சாமர்த்தியம், சிறுமை, தங்கை, தொனி, பக்கம், படைவகுப்பு, துதிக்கை, வரிசை.

கோ -----> அரசன், தலைவன், இறைவன், அம்பு, ஆகாயம், ஆண்மகன், இடியேறு, இரக்கக்குறிப்பு, இலந்தை, உரோமம், எருது, கண், கிரகணம், சந்திரன், சூரியன், திசை, கோமேதயாகம்,

                  தேவலோகம், நீர், பசு, பூமி, பொறிமலை, மாதா, மேன்மை, வச்சிராயுதம், வாணி, வெளிச்சம்.

சா ----->     இறப்பு, மரணம், பேய், சாதல்.

சீ ----->       இகழ்ச்சி, திருமகள், அடக்கம், இலக்குமி, காந்தி, சம்பத்து, சரச்சுவதி, சீதல், நித்திரை, பார்வதி, பிரகாசம், பெண், விடம், விந்து.

சே ----->    எருது, அழிஞ்சில் மரம், சிவப்பு, சேரான்மரம்.

சோ ----->  மதில், உமை

ஞா ----->   பொருத்து, கட்டு

தா ----->     கொடு, கேட்பது, அழிவு, குற்றம், கேடு, கொடியன், தாண்டுதல், பகை, பாய்தல், பிரமன், வருத்தம், வலி, வியாழம்.

தீ ----->       நெருப்பு, அறிவு, இனிமை, உபாயவழி, கொடுமை, தீமை, நரகம்.

து ----->       கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு, அசைத்தல், அநுபவம், எரித்தல், கெடுத்தல், சேர்மானம், நடத்தல், நிறைத்தல், பிறவினை, விகுதி, வருத்தல், வளர்தல்.

தூ ----->      வெண்மை, தூய்மை, சீ, தசை, பகை, பற்றுக்கோடு, புள்ளிறகு.

தே ----->     நாயகன், தெய்வம், கிருபை.

தை ----->   மாதம், தைத்தல், பூசநாள், மகராசி.

நா ----->      நாக்கு, அயலார், சுவாலை, திறப்பு, நடு, பொலிவு

நீ ----->        நின்னை

நே ----->     அன்பு, நேயம்

நை ----->    வருந்து, நைதல், இகழ்ச்சிக்குறிப்பு

நொ ----->   நொண்டி, துன்பம், நோய், வருத்தம்

நோ ----->   நோவு, வருத்தம், சிதைவு, துக்கம், துன்பம், பலவீனம், வியாதி.

நௌ -----> மரக்கலம்

பா ----->      பாட்டு, நிழல், அழகு, கடிகாரவூசி, கிழங்குப்பா, நிழல், நெசவுபா, பஞ்சிநூல், பரப்பு, பரவுதல், பிரபை, வெண்பா

பூ ----->        மலர், அழகு, இடம், இந்துப்பு, இருக்குதல், இலை, ஓமாக்கினி,ஒருகண்ணோய், ஒருநரகம், கூர்மை, தாமரை, தீப்பொறி, பிறப்பு, புட்பம், பூமி, பொலிவு,

பே ----->     மேகம், நுரை, அழகு

பை ----->    பாம்புப் படம், பசுமை, உறை, அழகு, குடர், சாக்கு, நிறம், பச்சைநிறம்,பொக்கணம், மந்தக்குணம், மெத்தெனவு.

போ ----->   செல், பிரியின்வாழாதென்போ.

----->        சந்திரன், எமன், என்மர், ஒருமந்திரம், காலம், சிவபிரான், நஞ்சு, நேரம், பிரமன், விட்டுனு.

மா ----->     மாமரம், பெரிய, விலங்கு, அழகு, அழைத்தல், அளவு, அறிவு, ஆணி, இடித்தமா, இடை, இலக்குமி, எதிர்மறை, யுபசருக்கம், ஐயவுபசருக்கம், ஓரெண், ஒருமரம், கட்டு, கறுப்பு,

                    சரச்சுவதி, சீலை, செல்வம், தாய், துகள், நஞ்சுக்கொடி, நிறம், பரி, பிரபை, பெரிய, பெருமை, மகதமதுவம், மரணம், மிகுதி, மேன்மை, வண்டு, வயல், வலி, வெறுப்பு.

மீ ----->        ஆகாயம், மேலே, உயரம், மகிமை, மேல், மேற்புரம்.

மு ----->      மூப்பு

மூ ----->      மூன்று, மூப்பு.

மே ----->     மேன்மை, மேல், அன்பு.

மை ----->   அஞ்சனம், கண்மை, இருள், எழுதுமை, கருப்பு, குற்றம், செம்மறியாடு, நீர், மலடி, மலட்டெருமை, மேகம், மேடவிராசி, வெள்ளாடு.

மோ ----->   முகர்தல், மோதல், கேண்மோ.

யா ----->     அகலம், மரம், சந்தேகம், இல்லை, யாபன்னிருவர்.

வா ----->     அழைத்தல்

வீ ----->        பறவை, பூ, அழகு, கருப்பந்தரித்தல், சாவு, சொல்லுதல், நீக்கம், போதல், விரும்புதல்.

வை ----->    வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல், புல், வையகம்,

வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல்

----->         தமிழெழுத்து நூறு என்பதன் வடிவம்

ளு ----->        நான்கில் மூன்று பகுதி, முக்கால் என்பதன் வடிவம்

று ----->         எட்டில் ஒரு பகுதி அரைக்கால் எனபதன் வடிவம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கத்திற்கு நன்றி.இந்தப் பதிவு பல ஆராய்ச்சிக்கு வித்திட்டது போலுள்ளது.தமிழறிந்தோர் மேலும் மேலும் விளக்கங்களுடன் இன்னும் எழுதுவார்கள் என எதிர்பார்க்கின்றேன்.தமிழ்கடல் போன்றது.அதில் நான் சிறு துளி.

Link to comment
Share on other sites

நாம் இதுவரை குறிப்பிட்ட சொற்கள் எல்லாம் ஒரேழுத்து சொற்களுக்குள் அடங்குமா என்று பார்க்க வேண்டும். ஒரேழுத்து சொற்களுக்கு தொல்காப்பியர் என்ன விளக்கம் கொடுக்கிறார் என்று பார்ப்போம்.

“நெட்டெழுத்தேழே ஓரெழுத் தொருமொழி”
ஓரெழுத்து சொற்கள் அனைத்தும் நெட்டெழுத்துக்களால்(நெடில்) ஆகியவை.

"குற்றெழுத் தைந்தும் மொழிநிறை பிலவே"
குற்றெழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லவாதில்லை.

தொல்காப்பிய இலக்கண விதிப்படி இங்கு இணைக்கப்பட்ட குறில் எழுத்துகள் யாவும் ஓரெழுத்து சொற்களுக்குள் அடங்காது என தெரிய வருகிறது. ஆனால் தியா இணைப்பில், ஆறுமுக நாவலர் கூறிய 42 எழுத்துக்களில் குற்றெழுத்துக்களும் உள்ளது.

நை, கை , பை - > ஏகாரம், ஐகாரம் ஒவ்வொன்றும் இரண்டு மாத்திரையும் ஒரு மாத்திரையும் பெறவல்லன என தொல்காப்பியர் கூறுகிறார். எனவே இவற்றை நெடிலுக்குள் அடக்கி விடலாம் என்றே நினைக்கிறேன்.வாத்தியார் இதற்க்கு நல்ல விளக்கம் கொடுக்க முடியும் என்று எண்ணுகிறேன்.

 நொ’ , ‘து’ எனும் இரு குற்றெழுத்துக்களும் ஓரெழுத்து ஒரு மொழிகள் என்று நான்னூலார் அழைக்கிறார்( ‘நோ’ என்பதின் விகாரவடிவே ‘நொ’ ஆகலானும், ‘துய்’ என்பதன் விகாரவடிவே ‘து’). ஆனால் சில ஆசிரியர்கள் தொல்காப்பிய விதிப்படி 'நொ’ , ‘து’ இரண்டும் ஒரேழுத்து சொல்லாகாது என்கிறார்கள்.

அப்ப குறில் எழுத்துக்கள் ஒரேழுத்து சொற்களுக்குள் அடங்காதா?? ஏன்?? இப்ப சொல் என்றால் என்ன கேள்வி எழக் கூடும்.

சொல் என்றால் என்ன ??
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் இதுவரை குறிப்பிட்ட சொற்கள் எல்லாம் ஒரேழுத்து சொற்களுக்குள் அடங்குமா என்று பார்க்க வேண்டும். ஒரேழுத்து சொற்களுக்கு தொல்காப்பியர் என்ன விளக்கம் கொடுக்கிறார் என்று பார்ப்போம்.

“நெட்டெழுத்தேழே ஓரெழுத் தொருமொழி”

ஓரெழுத்து சொற்கள் அனைத்தும் நெட்டெழுத்துக்களால்(நெடில்) ஆகியவை.

"குற்றெழுத் தைந்தும் மொழிநிறை பிலவே"

குற்றெழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லவாதில்லை.

தொல்காப்பிய இலக்கண விதிப்படி இங்கு இணைக்கப்பட்ட குறில் எழுத்துகள் யாவும் ஓரெழுத்து சொற்களுக்குள் அடங்காது என தெரிய வருகிறது. ஆனால் தியா இணைப்பில், ஆறுமுக நாவலர் கூறிய 42 எழுத்துக்களில் குற்றெழுத்துக்களும் உள்ளது.

நை, கை , பை - > ஏகாரம், ஐகாரம் ஒவ்வொன்றும் இரண்டு மாத்திரையும் ஒரு மாத்திரையும் பெறவல்லன என தொல்காப்பியர் கூறுகிறார். எனவே இவற்றை நெடிலுக்குள் அடக்கி விடலாம் என்றே நினைக்கிறேன்.வாத்தியார் இதற்க்கு நல்ல விளக்கம் கொடுக்க முடியும் என்று எண்ணுகிறேன்.

 நொ’ , ‘து’ எனும் இரு குற்றெழுத்துக்களும் ஓரெழுத்து ஒரு மொழிகள் என்று நான்னூலார் அழைக்கிறார்( ‘நோ’ என்பதின் விகாரவடிவே ‘நொ’ ஆகலானும், ‘துய்’ என்பதன் விகாரவடிவே ‘து’). ஆனால் சில ஆசிரியர்கள் தொல்காப்பிய விதிப்படி 'நொ’ , ‘து’ இரண்டும் ஒரேழுத்து சொல்லாகாது என்கிறார்கள்.

அப்ப குறில் எழுத்துக்கள் ஒரேழுத்து சொற்களுக்குள் அடங்காதா?? ஏன்?? இப்ப சொல் என்றால் என்ன கேள்வி எழக் கூடும்.

சொல் என்றால் என்ன ??

 

ஐ,கை ,மை, பை, தை  என்ற எழுத்துக்கள்  தனியாக உச்சரிக்கப்படும்போது

குறுகாமல் தனது இரண்டு மாத்திரை ஒலி அளவிற்கு ஒலிக்கும் நீண்ட ஒலி அளவைக்கொண்டவை.

 

ஆனால் ஒரு சொல்லின் ஆரம்பத்திலோ நடுவிலோ அல்லது இறுதியிலோ வரும் போது குறுகி ஒரு மாத்திரை அளவில் ஒலிக்கப்படுகின்றது

 

ஓரெழுத்தொரு  மொழியில் நொ து என்ற இரு குறில் எழுத்துக்களே இலக்கணத்தார் முறைப்படி பொருள் தரும் சொற்களாகின்றன. இந்த இரு சொற்களும் வழக்கின் படி தொல்காப்பியரின் காலத்தின் பின்னர் சேர்க்கப்பட்டிருக்கலாம்.

 

நன்னூல் தொல்காப்பியரைத் தழுவி எழுதப்பட்ட நூல்

மக்களின் பேச்சு வழக்கும் எழுத்து வழக்கும் மாறும் போது அவற்றையும் ஏற்றுக்கொள்வது தான் இலக்கணவாதிகளின் இயற்கை வழமை.

 

இன்றைய காலத்தில் வேற்றுமொழிச் சொற்கள் பல கலந்துவிட்ட தமிழ் மொழியில் ஓரெழுத்தைக் கொண்ட சொற்கள் அதிகரித்து வருவதில் ஆச்சரியமில்லை.  

Link to comment
Share on other sites

நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி உறவுகளே! :)

Link to comment
Share on other sites

விளக்கத்திற்கு நன்றி வாத்தியார்.

 

சொல் என்பது வினையையோ அல்லது பொருளையோ குறிக்க வேண்டும்.  அ, இ, உ என்பன சுட்டெழுத்துக்கள் இவை சொற்களுக்குள் அடங்காது, எனவே  அ, இ, உ என்ற ஒரேழுத்து ஒரு சொல்லாக கொள்ளப்பட மாட்டது என்று கூறப்படுகிறது. அப்படியெனில் வினாவெழுத்துக்களை ஒரு சொல்லாக கொள்ளலாமா ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓரெழுத்தில் பல சொற்கள் உண்டு
ஒரு சொல்லிற்குப் பல பொருட்கள் உண்டு
வினாவெழுத்துக்கள் அவை  வரும் இடத்தில் வினாவெழுத்துக்களாகவும்

வேறு பொருள்கோண்டு வருமிடத்தில் வேறு சொற்களாகவும் வரலாம் இல்லையா?
  

Link to comment
Share on other sites

  • 5 years later...

ஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன? 

ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டும் தனித்து வந்து ஒரு பொருளைக் குறிக்குமானால் அதற்கு ஓரெழுத்து ஒரு மொழிச் சொல் என்று பெயர். 

உதாரணம்: தை.. இந்த "தை" என்ற எழுத்தானது தமிழ்மாதங்களில் ஒன்றான மாதத்தின் பெயரைக் குறிக்கும் எழுத்தாகும். இதே எழுத்து "தைத்தல்" "பொருத்துதல்" என்ற பொருளிலும் வரும். இவ்வாறு ஒரே ஒரு எழுத்தானது ஒரு பொருளைத் தரக்கூடிய சொல்லாக வருவதறே ஒரேழுத்து ஒரு மொழியாகும். 

ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்கள் 66 ஆக இருக்கிறது. ஒரெழுத்து ஒரு மொழிச் சொற்களை கீழே பட்டியலிட்டுள்ளேன். படித்துப் பயன்பெறவும்.

ஓரெழுத்து ஒரு மொழிச்  சொற்கள்
 சுட்டெழுத்து, எட்டு, சிவன், விஷ்ணு, பிரம்மா
 பசு(ஆவு), ஆன்மா, இரக்கம், நினைவு, ஆச்சாமரம்
 சுட்டெழுத்து, இரண்டில் ஒரு பங்கு அரை என்பதின் தமிழ் வடிவம்.
 பறக்கும் ஈ, தா, குகை, தேனீ
 சிவன், ஆச்சரியம், சுட்டெழுத்து, இரண்டு என்பதின் தமிழ் வடிவம்
 இறைச்சி, உணவு, ஊன், தசை
 வினா எழுத்து, ஏழு என்பதின் தமிழ் வடிவம்
 அம்பு, உயர்ச்சிமிகுதி
 அழகு, உயர்வு, உரிமை, தலைவன், இறைவன், தந்தை
 மதகு, (நீர் தாங்கும் பலகை)
 பூமி, ஆனந்தம்
 வியங்கோள்  விகுதி
கா
 காத்தல், சோலை
கி
 இரைச்சல் ஒலி
கு
 குவளயம்
கூ
 பூமி, கூவுதல், உலகம்
கை
 உறுப்பு, கரம்
கோ
 அரசன், தந்தை, இறைவன்
கௌ
 கொள்ளு, தீங்கு
சா
 இறத்தல், சாக்காடு
சீ
 லட்சுமி, இகழ்ச்சி, வெறுப்புச் சொல்
சு
 விரட்டடுதல், சுகம், மங்கலம்
சே
 காலை
சை
 அறுவறுப்பு ஒலி, கைப்பொருள்
சோ
 மதில், அரண்
ஞா
  பொருத்து, கட்டு
தா
 கொடு, கேட்பது
தீ
 நெருப்பு , தீமை
து
 உண்
தூ
 வெண்மை, தூய்மை
தே
 கடவுள்
தை
 தமிழ்மாதம், தைத்தல், பொருத்து
நா
 நான், நாக்கு
நி
 இன்பம், அதிகம், விருப்பம்
நீ
 முன்னிலை ஒருமை, நீக்குதல்
நூ
 யானை, ஆபரணம், அணி
நே
 அன்பு, அருள், நேயம்
நை
 வருந்து
நோ
 துன்ப்பபடுதல், நோவு, வருத்தம்
நௌ
 மரக்கலம்
 நூறு
பா
 பாட்டு, கவிதை
பூ
 மலர்
பே
 நுரை, அழகு, அச்சம்
பை
 கைப்பை
போ
 செல், ஏவல்
 சந்திரன், எமன்
மா
 பெரிய, சிறந்த, உயர்ந்த, மரம்
மீ
 மேலே , உயர்ச்சி, உச்சி
மூ
 மூப்பு, முதுமை
மே
 மேல்
மை
 கண்மை (கருமை), அஞ்சனம், இருள்
மோ
 மோதல், முகரதல்
 தமிழ் எழுத்து எனப்தின் வடிவம்
யா
 ஒரு வகை மரம், யாவை, இல்லை
 நாலில் ஒரு பங்கு "கால்" என்பதன் தமிழ் வடிவம்
வா
 வருக, ஏவல்
வி
 அறிவு, நிச்சயம், ஆகாயம்
வீ
 மலர் , அழிவு
வே
 வேம்பு, உளவு
வை
 வைக்கவும், கூர்மை
வௌ
 வவ்வுதல்
நோ
 வருந்து
 தமிழெழுத்து நூறு என்பதன் வடிவம்
ளு
 நான்கில் மூன்று பகுதி, முக்கால் என்பதன் வடிவம்
று
 எட்டில் ஒரு பகுதி அரைக்கால் எனபதன் வடிவம்

 

https://www.tnpscgk.net/2012/08/oreluthu-oru-moli-sol.html

Link to comment
Share on other sites

  • 3 months later...
On 10/5/2013 at 9:32 PM, Paanch said:

 

உங்கள் பதிவின்படி 47 எழுத்துக்கள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால் 46 எழுத்துக்கள் மட்டுமே பதிவிலுள்ளது. 42 எழுத்துக்களுக்கு பொருளுள்ளதாக தெரிவித்துள்ளீர்கள். தொல்காப்பியரும், ஆறுமுகநாவலரும் தெரிவித்துள்ள 42 எழுத்துக்களை விடவும் மேலதிகமாக உங்கள் பதிவிலிருக்கும், அ, உ, நெள, மு என்ற 4 எழுத்துக்களுக்கும் பொருளுள்ளது. ஆதித்தியஇளம்பிறையனும் மேலதிகமாகப் 10 எழுத்துக்களான எ, ஒ, இ, ஔ, கு,ஞா, ம,ள, ளு, று ஆகியனவற்றை இணைத்துள்ளார். ஆகவே தமிழில் ஓரெழுத்து சொற்கள் எத்தனை என்பதை இப்பதிவு உறுதிபடுத்தவில்லை என்ற ஐயமுள்ளது. தமிழ் அகராதியின் துணையோடு, முடிந்தளவு எழுத்துக்களுக்குரிய மேலதிக பொருள்களையும் நிறுவி, இங்கு பின்னூட்டம் செய்துள்ளேன்.

 

----->     எட்டு, இன்மை, எதிர்மறை, குறைவு, சம்மதி, சாரியை, அந்த, சுட்டு, தடை, பிறிது, வியப்பு, சுக்கு, திப்பிலி, சிவன், விஷ்ணு, பிரமன். 

----->    பசு, இசை, இரக்கம், பெண்மரை, பெண்ணெருமை, சிவஞானம், வியப்பு,

----->     அன்பு, ஆச்சரியம், இகழ்ச்சி, உண்டி, கேட்டி, குறத்தி, வில்லி, ஊருணி, செவியிலி, எண்ணி.

----->      கொடு, பறக்கும் பூச்சி, அம்பு, அரைநாண், இந்திரவில், இலக்குமி, கொக்கு, சரசுவதி, தாமரையிதழ், பாம்பு, வண்டு.

----->     சிவன், உருக்கம், கட்டளை, கோபம், சம்மதி, செய்து, பிரமன்.

----->    தசை, இறைச்சி, உணவு, சந்திரன், சமாக்கியகலை, சிவன், ஊன்.

----->      வினா எழுத்து, ஏழு என்பதின் தமிழ் வடிவம்,

----->      அம்பு, சிவன், செலுத்துதல், விஷ்ணு, அடே, அம்பு, இகழ்ச்சிக்குறி, இசைநிறை, ஈற்றசை,

----->      ஐந்து, அழகு, தலைவன், வியப்பு, அரசன், ஆசான், கடுகு, சர்க்கரை, சன்னி, தும்பை, துர்க்கை, நுண்மை, மருந்து, பெருவியாதி, இருமல், கடவுள், குரு, கோழை, சிவன், பிதா,

                  வந்தனை.

----->     ஒழிவு,

----->     வினா, மதகு - நீர் தாங்கும் பலகை, அயன், அரன், அழைத்தல், இரக்கம்.

ஒள -----> பூமி, ஆனந்தம், அழைத்தல், வியப்பு, தடை, கடித்தல், பூமி.

கா ----->    சோலை, காத்தல், காவடி, துலை, தோட்சுமை, பூந்தோட்டம், வருத்தம்.

கு ----->      இருள், குற்றம், வருகுதி, சிறுமை, தடை, தொனி, நிந்தை, நன்கு, போக்கு, பூமி.

கூ ----->     பூமி, கூவுதல், மலங்கழித்தல்.

கை ----->  கரம், உறுப்பு, இடம், உடனே, ஒப்பனை, ஒழுக்கம், கடுக்கை, சாமர்த்தியம், சிறுமை, தங்கை, தொனி, பக்கம், படைவகுப்பு, துதிக்கை, வரிசை.

கோ -----> அரசன், தலைவன், இறைவன், அம்பு, ஆகாயம், ஆண்மகன், இடியேறு, இரக்கக்குறிப்பு, இலந்தை, உரோமம், எருது, கண், கிரகணம், சந்திரன், சூரியன், திசை, கோமேதயாகம்,

                  தேவலோகம், நீர், பசு, பூமி, பொறிமலை, மாதா, மேன்மை, வச்சிராயுதம், வாணி, வெளிச்சம்.

சா ----->     இறப்பு, மரணம், பேய், சாதல்.

சீ ----->       இகழ்ச்சி, திருமகள், அடக்கம், இலக்குமி, காந்தி, சம்பத்து, சரச்சுவதி, சீதல், நித்திரை, பார்வதி, பிரகாசம், பெண், விடம், விந்து.

சே ----->    எருது, அழிஞ்சில் மரம், சிவப்பு, சேரான்மரம்.

சோ ----->  மதில், உமை

ஞா ----->   பொருத்து, கட்டு

தா ----->     கொடு, கேட்பது, அழிவு, குற்றம், கேடு, கொடியன், தாண்டுதல், பகை, பாய்தல், பிரமன், வருத்தம், வலி, வியாழம்.

தீ ----->       நெருப்பு, அறிவு, இனிமை, உபாயவழி, கொடுமை, தீமை, நரகம்.

து ----->       கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு, அசைத்தல், அநுபவம், எரித்தல், கெடுத்தல், சேர்மானம், நடத்தல், நிறைத்தல், பிறவினை, விகுதி, வருத்தல், வளர்தல்.

தூ ----->      வெண்மை, தூய்மை, சீ, தசை, பகை, பற்றுக்கோடு, புள்ளிறகு.

தே ----->     நாயகன், தெய்வம், கிருபை.

தை ----->   மாதம், தைத்தல், பூசநாள், மகராசி.

நா ----->      நாக்கு, அயலார், சுவாலை, திறப்பு, நடு, பொலிவு

நீ ----->        நின்னை

நே ----->     அன்பு, நேயம்

நை ----->    வருந்து, நைதல், இகழ்ச்சிக்குறிப்பு

நொ ----->   நொண்டி, துன்பம், நோய், வருத்தம்

நோ ----->   நோவு, வருத்தம், சிதைவு, துக்கம், துன்பம், பலவீனம், வியாதி.

நௌ -----> மரக்கலம்

பா ----->      பாட்டு, நிழல், அழகு, கடிகாரவூசி, கிழங்குப்பா, நிழல், நெசவுபா, பஞ்சிநூல், பரப்பு, பரவுதல், பிரபை, வெண்பா

பூ ----->        மலர், அழகு, இடம், இந்துப்பு, இருக்குதல், இலை, ஓமாக்கினி,ஒருகண்ணோய், ஒருநரகம், கூர்மை, தாமரை, தீப்பொறி, பிறப்பு, புட்பம், பூமி, பொலிவு,

பே ----->     மேகம், நுரை, அழகு

பை ----->    பாம்புப் படம், பசுமை, உறை, அழகு, குடர், சாக்கு, நிறம், பச்சைநிறம்,பொக்கணம், மந்தக்குணம், மெத்தெனவு.

போ ----->   செல், பிரியின்வாழாதென்போ.

----->        சந்திரன், எமன், என்மர், ஒருமந்திரம், காலம், சிவபிரான், நஞ்சு, நேரம், பிரமன், விட்டுனு.

மா ----->     மாமரம், பெரிய, விலங்கு, அழகு, அழைத்தல், அளவு, அறிவு, ஆணி, இடித்தமா, இடை, இலக்குமி, எதிர்மறை, யுபசருக்கம், ஐயவுபசருக்கம், ஓரெண், ஒருமரம், கட்டு, கறுப்பு,

                    சரச்சுவதி, சீலை, செல்வம், தாய், துகள், நஞ்சுக்கொடி, நிறம், பரி, பிரபை, பெரிய, பெருமை, மகதமதுவம், மரணம், மிகுதி, மேன்மை, வண்டு, வயல், வலி, வெறுப்பு.

மீ ----->        ஆகாயம், மேலே, உயரம், மகிமை, மேல், மேற்புரம்.

மு ----->      மூப்பு

மூ ----->      மூன்று, மூப்பு.

மே ----->     மேன்மை, மேல், அன்பு.

மை ----->   அஞ்சனம், கண்மை, இருள், எழுதுமை, கருப்பு, குற்றம், செம்மறியாடு, நீர், மலடி, மலட்டெருமை, மேகம், மேடவிராசி, வெள்ளாடு.

மோ ----->   முகர்தல், மோதல், கேண்மோ.

யா ----->     அகலம், மரம், சந்தேகம், இல்லை, யாபன்னிருவர்.

வா ----->     அழைத்தல்

வீ ----->        பறவை, பூ, அழகு, கருப்பந்தரித்தல், சாவு, சொல்லுதல், நீக்கம், போதல், விரும்புதல்.

வை ----->    வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல், புல், வையகம்,

வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல்

----->         தமிழெழுத்து நூறு என்பதன் வடிவம்

ளு ----->        நான்கில் மூன்று பகுதி, முக்கால் என்பதன் வடிவம்

று ----->         எட்டில் ஒரு பகுதி அரைக்கால் எனபதன் வடிவம்

 

Link to comment
Share on other sites

வாருங்கள் வீரையா, வணக்கம்.! 

என் பதிவொன்றை இன்று மீட்டியமைக்கு நன்றி.! நானா இதனைப் பதிந்தேன்....!! எனக்கே மலைப்பாக இருக்கிறது. வேறொன்றும் இல்லை ஐயா, இப்போ வயது போட்டுது...😒

கடலுக்கு கரையுண்டு. தமிழுக்கு கரை இல்லை. எப்போ தமிழுக்கு என்று ஒரு கரையை, அதாவது மண்ணைச் சொந்தமாகக் காண்கின்றோமோ அன்று தமிழின் முழுமையை தமிழனோடு இந்த உலகமும் காணும்.:) 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.