Jump to content

இழப்பின் துயரிலும் இழக்காத மனவுறுதியோடு...!


shanthy

Recommended Posts

இழப்பின் துயரிலும் இழக்காத மனவுறுதியோடு...!

 
தொலைபேசியழைப்பு வருவதும் தொடர்பு அறுபடுவதுமாக இருந்தது. அந்த அழைப்பு 15வருடங்கள் தொடர்பறுந்து போனவளின் அழைப்பாக இருக்குமென்பதை அறியாத 01.10.2013 இன் தொடக்க நாள்.

நீங்கள் என்னோடை படிச்சனீங்கள் நீங்களும் மேனகாவும் தான் என்னை இயக்கத்துக்கு எடுத்தனீங்கள் என்ரை பேர்.....! இந்த நம்பருக்கு ஒருக்கா எடுங்கோ நான் உங்களோடை கனக்கக் கதைக்க வேணும்.

நானிப்ப வேலையில நிக்கிறேன் இரவு எங்கடை நேரம் 9மணிக்குத்தான் வீட்டை போவன் நாளைக்கு பகல் எடுக்கிறனே....? புறவாயில்லை நான் முளிச்சிருப்பன் மறக்காமல் எடுங்கோ.

அவளது குரலில் பதட்டமும் ஏதோவொரு கதையைச் சொல்லத் துடிப்பது போலவும் அவசரமாகச் சொல்லிவிட்டு தொடர்பை அறுத்தாள். முளிச்சிருப்பேன் என்ற சொல்லுக்குள் ஆயிரமாயிரம் துயரங்கள் புதைந்து கிடந்தது.

குரலில் அவளை யாரென அடையாளம் பிடிபடவில்லை. வேலை முடியும் வரையும் அவள்தான் நினைவில் மாறி மாறி வந்து கொண்டிருந்தாள்.

யாரோ நான் தேடினதுகளில ஒராளா இருக்கும் இவள் நினைத்துக் கொண்டாள். எனினும் ஏதோ ஒரு உறுத்தல் மனசை அலைக்கழித்தது.

வீடு வந்துசேர இரவு 9.40 ஆகியிருந்தது. தோழி மேனகாவை அழைத்தாள்.

எடி எனக்கிண்டைக்கு ஒரு ரெலிபோன் வந்தது...எங்களோடை படிச்ச மருதா போலையிருக்கு. உண்மையாவோடி நாங்ளெல்லோடி அவளை இயக்கத்துக்கு எடுத்தனாங்கள்...? எங்கை நம்பறைத் தா ! மேனகா அவசரப்படுத்தினாள்.

அவளுக்குக் கால் ஏலாதெல்லோடி...? மேனகாதான் ஞாபகப்படுத்தினாள். நான் நெடுக நினைக்கிறனான் நாங்கெல்லாம் வெளிநாடு ஓடியந்திட்டம் எங்களாலைதான் அவளுக்குக் கால் போனது. இவள் சொன்னாள். நானும் உதைத்தானடி நெடுக நினைக்கிறனான்.

சரி நில்லு இப்பிடியே உன்னையும் சேத்து எடுக்கிறேன் கதைப்பம் சரியோ ? மேனகாவையும் ஒரு அழைப்பில் வைத்துக் கொண்டு இவள் தொடர்பை ஏற்படுத்தினாள்.

முதலாவது அழைப்பிலேயே அவள் மறுமுனையில் குரல் தந்தாள். என்னைத் தெரியுமே ஞாபகமிருக்கோ ? அவள் தன்னை இவர்களுக்கு நினைவுபடுத்த முயன்றாள்.

நீங்க மருதாதானே ? மேனகாதான் கேட்டாள். ஓம் என்னை எல்லாரும் மறந்திட்டியள் என அவள் அழத்தொடங்கினாள்.

இதுகும் நான் யாழ்ப்பாணம் போன இடத்தில ஒராள் தான் நம்பரைத் தந்தது. நீங்கள் ரெண்டு பேரும் கதைக்கிறதைக் கேக்க கடவுளாணைச் சொல்றன் நான் கடவுளைத்தான் காணிறன் போலையிருக்கு. அவள் அவர்களது தொடர்பு கிடைத்ததையிட்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தாள்.

மருதாவும் மேனகாவும் இவளும் ஒன்றாகப் படித்தவர்கள். ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். பாலர் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையும் ஊர்ப்பள்ளியில் படித்த வரையும் 3பேருமே ஒன்றாகவே திரிவார்கள். ஆளாளுக்கு அந்த வயசுக்குரிய குறும்புகள் குழப்படி யாவற்றிலும் 3பேரின் பெயரும் அடிவாங்கியது அதிகம்.

86இல் இவள் 5ம் வகுப்பு முடித்து 6ம் வகுப்பிற்கு வெளியூர் பாடசாலைக்குப் போகத் தொடங்க மேனகாவும், மருதாவும் ஊர்ப்பாடசாலையைவிட்டு மாறாமல் அங்கேயே படித்துக் கொண்டிருந்தார்கள். ஆயினும் மாலைநேரங்களில் ஏதாவது சாட்டுப் போக்குச் சொல்லி தோட்ட வெளியில் இவர்கள் விளையாட்டு ஓட்டம் என நட்பு தொடர்ந்து கொண்டேயிருந்தது.

ஊர்களில் வெடிச்சத்தங்கள் கேட்கத் தொடங்க புரியாத அந்த வயதில் இயக்கம் என்றதை இவர்களும் புரிந்து கொண்டார்கள். விடுதலைக்காக பல இயக்கங்கள் திரிந்த அவர்களது ஊரில் இவர்களுக்கு பிடித்த போராட்ட இயக்கம் புலிகள்தான்.

பலாலியை அண்டிய இவர்களது ஊரில் காலையில் உணவு விநியோகத்திற்குச் செல்லும் விமானம் தரையிறங்கச் செல்ல முன்னும் பின்னும் பலாலியிலிருந்து ஏவப்படுகிற குண்டுச் சத்தங்கள் கேட்டே பொழுது தன்னைப் புதுப்பிக்கத் தொடங்கும்.

ஊர்களை உழுது திரிந்த இராணுவம் முகாம்களில் முடங்கிய பின்னர் இத்தகைய வெடியோசைகளே பல உயிர்களை எடுத்துக் கொண்டிருந்தது. இவர்களது ஊரிலும் பலர் காணாமல் போனார்கள்.

தோட்டவெளியில் பயற்றம் தறைகள் மிளகாய் தறைகளில் இருந்தெல்லாம் இவர்கள் போடும் திட்டங்கள் பெரியது. 3பேரும் சேந்து இயக்கத்துக்குப் போக வேணும். ஆமியைக் கொல்ல வேணும் என ஆளாளுக்கு திட்டமிட்டுக் கொண்டேயிருந்தார்கள்.

87இல் இந்திய இராணுவம் வந்திறங்கி சண்டைகள் ஆரம்பித்து 88இன் தொடக்கம் இவர்களது ஊரில் புலிப்போராளிகள் வலம் வரத் தொடங்கினார்கள். இவர்களது வீடுகளுக்கும் போராளிகள் வரத்தொடங்கிய போது அவர்களுடனான அறிமுகம் விடுதலையின் தேவையை அவர்களது உறவு மூலம் கற்றுக் கொண்டார்கள்.

அப்படி வீட்டுக்கு வந்து போகும் ஒரு போராளியண்ணனிடம் தங்கள் 3பேரையும்  இயக்கத்திற்கு எடுக்குமாறு போய் நின்றார்கள்.நீங்க முதல் படியுங்கோ படிச்சு இன்னும் கொஞ்சம் வளந்தாப்பிறகு வாங்கோ இயக்கத்துக்கு...! என அவர்களது விருப்பத்திற்கு முற்று வைக்கப்பட்டது. எனினும் 3பேரும் ஒருநாள் இயக்கத்துக்கு போவது ஆமியைச் சுடுவதென்ற கனவை மட்டும் விடவில்லை.

90களின் தொடக்கம் குழந்தைத்தனம் மாறியதாய் நம்பிய 16 வயதை அடைந்தார்கள். இந்தியப்படைகளின் வெளியேற்றம் ஊர்களில் திரிந்த போராளிகள் வெவ்வேறு இடங்களுக்குப் பிரிந்து போய் நிரந்தரமாய் இவர்களது நெஞ்சங்களிலும் இடம்பிடித்து பலர் 2ம் கட்ட ஈழப்போரில் வீரச்சாவடைந்து போக போராட வேண்டுமென்று எண்ணத்தை மீண்டும் புதுப்பித்துக் கொண்டார்கள்.

2ம் கட்ட ஈழப்போரின் தொடக்கம் மேனகாவும் இவளும் வீட்டைவிட்டு வெளியேறினார்கள். மருதா பயந்தாள். அவளைவிட்டுவிட்டு போராளிகளாகத் தங்களைத் தயார்படுத்தி பயிற்சிக்கென யாழ்ப்பாணத்தில் இருந்த ஒரு பெண்போராளிகள் முகாமிற்குச் சென்றார்கள். சில வாரங்கள் திருநெல்வேலியில் அமைந்த பெண் போராளிகள் முகாமில் இருந்தார்கள். தேடி வந்த வீட்டாரைச் சந்திக்க மறுத்து ஒளித்தார்கள்.

மருதாவையும் சேர்க்கும் முயற்சியில் ஒருநாள் வென்று மருதாவையும் இருவருமே இயக்கத்தில் இணைத்துக் கொண்டார்கள்.

ஒருநாள் அவர்களது களக்கனவுக்கான பயிற்சிக்கான நாளும் வந்தது. பயிற்சிக்கு சென்றவர்களில் ஒருத்தி நோய்வாய்ப்பட்டு வீட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டாள். இன்னொருத்தி கட்டுவன் காவலரணில் கடமைக்குச் சென்றிருந்தாள்.

3பேரும் ஒன்றாகவே போவோம் போராடுவோம் என்றிருந்தவர்களில் ஒருத்தி நோயுற்றாள் , இன்னொருத்தி களத்தில் , மருதாவும் பயிற்சி முடித்துத் தனது முதல் கள அனுபவத்தை ஆனையிறவு ஆகாய கடல்வெளிச் சமரில் சந்தித்தாள்.

ஆயுதப்பயிற்சி இல்லாமலும் தாயகத்துக்கான கடமைகளைச் செய்ய முடியுமென நம்பிக்கை கொடுத்தவர்களின் வழிகாட்டலில் பணிகளில் இணைந்தாள்.நோயுற்று வீடு திரும்பியவள் மீண்டும் தன்னை நாட்டுக்கான பணியில் இணைத்தாள்.

ஆனையிறவுச் சமர்க்காலத்தில்  அகிலன்வெட்டையில்  பங்காளியாய் நின்ற போதுதான் மீண்டும் மருதாவைச் சந்தித்தாள். என்னடி நீயிங்கை ? மருதா இராணுவ மிடுக்கோடு சண்டைக்குப் பொருத்தமானவள் போல அவளது நிமிர்வு இவளுக்கே ஆச்சரியமாயிருந்தது.

களம் யாரையும் எங்கேயும் அழைக்கும். எப்போதும் இலக்கின் வெற்றி தேடிய பயணத்தில் கடமை எல்லோரையும் தனது தேவைக்கேற்ப அழைக்கும் என்பதனை ஆளாளுக்கு வீராப்பாய் கூறிக் கொண்டு பணிகளோடு வேகமாகினர்.

ஆளாளுக்கு பிரிந்து போனார்கள். அவரவரும் தங்களுக்கான பணிகளோடு எப்போதாவது எங்காவது சந்திக்கக் கிடைத்தால் சந்தித்தது மட்டும் தான். பெரும் கனவுகளைச் சிறுவயது முதலே வளர்த்து பெரிய தாக்குதல்களில் பங்கேற்க வேண்டுமென்ற கதைகள் திட்டங்கள் வயது மாற மாற வெவ்வேறு வடிவங்களில் பயணம் தொடங்கியது.

ஓன்றாயே போராடுவோம் என்ற சின்ன வயதுக் கனவை ஒருத்தி ஊடறுத்துக் கொண்டு காரணம் சொல்லாமல் புலம்பெயர்ந்தாள். கடைசியில் மருதா மட்டுமே தொடர்ந்து சொன்னபடி களம் கண்டாள். களமொன்றில் விழுப்பண்ணடைந்து ஒரு காலையும் இழந்தாள்.

காலம் யாரையும் பார்த்துக் காத்திருக்காமல் தன் பயணத்தில் வேகமெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. காலத்தோடு 3பேரின் கனவுகளும் வௌ;வேறாகி விதியென்றும் இதுவே வாழ்வென்றும் திசைக்கொன்றாய் பிரிந்து போனார்கள்.

ஒன்றாய் திரிந்த மருதா  ,மேனகா நினைவுகளில் வந்து போனாலும் அவர்களை மீளவும் சந்திக்கும் கனவோடு இவள் காத்திருந்தாள். எல்லாமே கனவு போல வாழ்வும் மாறிப்போனது வயதும் ஏறியது. ஆனால் சின்ன வயதில் நேசித்த தாயக விடுதலைப்பற்று மட்டும் எப்போதும் போலவே இதயத்தில் சுகமான சுமையாக....!

2000 தொடக்கம் அறுபட்ட தொடர்புகள் கடிதங்களாகத் தேடி வந்து இவளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. புலம்பெயர்ந்தாலும் நிலம் மறக்காதவர்களுக்கான அழைப்பாக அந்த மடல்கள்....!

அந்த நேரம் தாயகத்துக்கான பணிகளைச் செய்யும் கனவோடு இவள் தன்னையும் இணைத்தாள். மௌனமாக செய்ய வேண்டிய பணிகளில் ஈடுபட்டு நிறைவேற்றப்படாத களம் காணும் ஆசையை தற்கால பணிகள் மூலம் ஈடு செய்யலாம் என்ற எண்ணத்தில் நிலம் தாண்டிய புலத்தில்....!

2002 யுத்த நிறுத்த காலத்தில் ஊரை உறவை பழைய நண்பர்களை யாவரையும் காணும் கனவோடு விமானமேறினாள். சில வருட கால இடைவெளி பலவிதமான மாற்றங்கள் இழப்புக்கள் என எத்தனையோ பெரிய வரலாற்றையும் வலிகளையும் சுமந்த ஏ9 நெடுஞ்சாலை வழியே இழந்த கனவுகளை மீளப் பெறும் நினைவோடு போனாள்.

மீண்டும் சந்திக்க விரும்பிய மேனகா, மருதாவை இவள் தேடினாள். மேனகா 1997இல் துண்டு குடுத்து விலகி அரபு நாடொன்றில் இருப்பதாயும் மருதா 1996இல் சண்டையில் காயமடைந்து காலொன்றை முழுதாக இழந்து போனதாகவும் அறிந்தாள்.

மருதா இருப்பதாய் சொல்லப்பட்ட இடங்களிற்கெல்லாம் தேடிப்போனாள். மருதா வேறெங்கோ வேலையில் நிற்பதாகச் சொன்னார்கள். இப்போதைக்கு மருதா நிற்கும் இடத்திலிருந்து வெளியில் சந்திப்பதற்கு வரக்கூடிய சாத்தியம் இல்லையென்று சொன்னார்கள்.

ஆனால் மருதாவை மறக்காத ஒரு தோழி இன்னும் இருக்கிறாள் என்பதனை மட்டும் அவளுக்குத் தெரியப்படுத்தும் வகையில் கடிதம் ஒன்றெழுதி அவள் திரும்பி வந்தால் பணியாற்றும் இடமெனச் சொல்லப்பட்ட இடத்தில் பொறுப்பாயிருந்தவரிடம் கொடுத்துவிட்டு புலம் திரும்பபினாள்.

ஏற்கனவே இருந்த தொடர்புகள் உறவுகளைச் சந்திக்கச் சென்று புலம் திரும்பும் போது மேலும் பலரின் நட்புகளைச் சுமந்து கொண்டு இவள் ஐரோப்பா வந்தாள். மருதா இந்தக்கால இடைவெளியில் எவ்வித தொடர்பும் எடுக்கவில்லை.

காலம் எல்லாக் கனவுகளையும் தின்று முடித்து 2009 எதை நினைக்க எதை மறக்க எவரை நினைக்க எவரை மறக்க ? என மனங்களைச் சோர வைத்த காலத்தில் அவள் நேசித்தவர்களுக்காக புலத்திலிருந்து செய்ய வேண்டிய மனிதாபிமானப் பணியை ஆரம்பித்த போது ஆளாளுக்கு அடித்த நக்கலும் நையாண்டியும் எத்தனையோ பொழுதுகள் அழுது கரைத்திருக்கிறாள். ஆயினும் நிலத்தில் இருந்து வருகிற அழைப்புக்களும் குரல்களும் எல்லாவித அழுத்தங்களையும் உடைத்துக் கொண்டு எழ வைத்துக் கொண்டிருந்தது.

மேனகாவும் திருமணமாகி இவள் வாழும் நாட்டிலேயே வாழ்வதாக அறிந்தாள். மேனகா இவளது தொடர்பிலக்கத்தைத் வானொலியொன்றில் அறிந்து அறுந்து போன தொடர்பை மீண்டும் புதுப்பித்தாள். மருதாவை நினைப்பார்கள் ஆனால் அவள் எவ்வித தொடர்புகளும் இல்லாது போயிருந்தாள்.

பழைய நினைவுகளை மருதாவோடு பகிர்ந்தார்கள். இப்போது தங்கள் குடும்பங்கள் குழந்தைகள் பற்றிய விசாரணையில் வந்து நின்றார்கள்.

இப்ப என்ன நிலமையில இருக்கிறாய் ? அதைச் சொல்லன் மருதா என இவள் கேட்டாள்.

என்ரை பிள்ளையளுக்கு சோறு குடுக்க நான் இஞ்சை ஏறாத படியில்லையடி...! கோவிலுகள் சேச்செண்டு நான் தினமும் இந்த ஒற்றைக்காலை இழுத்துக் கொண்டு ஓடித்திரியிறதை யாருக்குச் சொல்லியழுறதெண்டு தெரியாமல் நான் துடிச்சனடி....!

நான் பட்ட  துன்பத்தை யாரிட்டைச் சொல்லியாறவெண்டு எத்தினை நாள் அழுதிருப்பன் தெரியுமே ? என்ரை பிள்ளையளும் ஏலாததுகளாப் போட்டுதுகள் கடைசிநேரம் விழுந்த எரி குண்டு பட்டு ஒண்டு போட்டுது மற்றதுகளும் காயங்கள் பட்டு ஏலாததுகள்...மனிசனும் காலும் கையும் இழுத்து படுக்கையில என்னாலை சமாளிக்கேலாதாம் ஏதாவது ஏலுமெண்டா உதவுங்கோ ? நான் உங்கள் ரெண்டு பேரையும் மட்டும்தான் உரிமையோடை கேட்கேலும்.

அவள் கண்ணீரால் தனது கடந்தகாலத் துயர்களையும் நிகழ்காலத் துன்பத்தையும் கழுவிக் கொண்டிருந்தாள். அவளது கதைகள் ஆயிரம் ஈட்டிகள் கொண்டு இதயத்தை அறுத்துக் கொண்டிருந்தது.

தாங்கள் மட்டும் கால் கையெல்லாம் குறைவில்லாமல் ஐரோப்பாவில் வாழ தாங்கள் போராளிகளாக இணைத்த மருதாவும் மருதா போன்ற பலரும் துயரங்களோடு வாழ்வது உறுத்தலாகவே இருக்கும். பலமுறை இவளும் மேனகாவும் அடிக்கடி நினைவுபடுத்திக் கதைப்பார்கள்.

ஒருமுறை ஒரு ஊரில் பல பெண்பிள்ளைகளை போராளிகளாக இவர்கள் சேர்த்தார்கள். சிலர் வீட்டார் போய் அழுததும் ஏதோ தங்களை கட்டாயமாக இவர்களே கொண்டு போனது போல வீட்டாருக்கு போட்டுக் கொடுத்த போது பல அம்மாக்கள் மண்ணள்ளியெறிந்து இவளையும் மேனகாவையும் திட்டினார்கள்.

அந்த மண்ணும் திட்டும் அப்போது பெரிதாக எந்தப் பாதிப்பையும் கொடுக்கவில்லை. ஆனால் இப்போது அந்த அம்மாக்களின் கண்ணீரை இவள் நினைத்து மனம் குழம்பிப் போவதுண்டு. அதனை மருதாவுக்கும் சொன்னார்கள். இவள் அழுதுவிட்டாள்.

நானொரு நாளும் உங்கள் ரெண்டு பேரையும் மனம் நொந்ததில்லை...! அண்ணையாணைச் சொல்றன் நீங்கள் கூட்டிக்கொண்டு போனதாலைதான் என்ரை கால் போனதெண்டும் நினைக்கேல்ல என்ரை நாட்டுக்கு என்னாலை முடிஞ்ச எல்லாத்தையும் செய்தன் ஆருக்குத் தெரியும் இப்பிடி முடியுமெண்டு....! அண்ணையிருந்தா நாங்க இந்த நிலமைக்கு வந்திருக்கமாட்டம் இதைத்தான் நெடுக நினைக்கிறனான்.

இந்தா இப்ப நானிருக்கிற காணியில இருந்து 500மீற்றர் தூரத்தில மாவீரர் துயிலுமில்லம் இருந்த நிலம் இருக்கு....நினைச்சா நெஞ்சு வெடிக்கும்...எல்லாத்தையும் அழிச்சுத் துடைச்சு இப்ப குப்பை கூழம் கொட்டுறதும் மண் கொட்டுறதும்....கடவுளே அதுகளை நினைக்கத்தான் தாங்கேலாத வேதனை. யரிட்டைப் போய் கேக்கேலும் எப்பயெண்டாலும் ஒருநாள் வருமெண்ட நம்பிக்கையில இருக்கிறம்....!

மாவீரர்கள் பற்றி அவள் சொல்லத் தொடங்கிய போது குரலெடுத்துக் கத்தியழுதாள். தன்கையால் விதைத்த தோழமைகள் பற்றி அவர்கள் கனவுகள் பற்றியெல்லாம் சொல்லிச் சொல்லியழுதாள்....!

குடும்பம் முழுவதும் காயமுற்று ஊனமாகி அன்றாட உணவுக்கே வழியற்றுப் போன நிலமையிலும் தாயகத்தின் மீதான காதலும் காலம் அழைத்தால் மீண்டும் கடமைக்காக காத்திருக்கிற அவளது உறுதியும் எதிர் முனையில் கேட்டுக் கொண்டிருந்த இவர்களை ஆச்சரியப்பட வைக்கவில்லை. தங்கள் கையறு நிலமையே உறுத்திக் கொண்டிருந்தது.

இரண்டரை மணித்தியாலம் கதைத்தும் முடியாத அவர்களது பல வருடங்களின் நினைவுகள் மருதாவின் இன்றைய நிலமையையே எண்ணிக் கொண்டிருந்தது.

நாட்டுக்காகத் தனது குடும்பத்தையும் ஊனமாக்கி இன்னும் உறுதி தளராத மருதாவுக்காக ஏதாவது செய்ய வேண்டுமென்ற எண்ணமே இருவர் மனசிலும் ஓடத் தொடங்குகிறது.

01.10.2013

 
Link to comment
Share on other sites

வணக்கம் சாந்தி அக்கா

 

போராட்ட வாழ்க்கையின்  ஒரு காலவொட்டத்தின் நினைவுகளையும் வலிகளையும் சொல்லும் இயல்பான உங்களின் எழுத்து வரிகள் எமக்கான பல நினைவூட்டல்களையும் தருகின்றது.

 

வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப, தம்மை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்ப போராடும் அவர்களின் மனவுறுதிக்கு இருக்கும் ஒரே ஆதரவு புலம்பெயர் சமூகம்.

 

தாயகத்தில் பலர் தங்களுக்குத் தெரிந்த யாராவது ஒருவரின் நம்பர் கிடைக்காதா? என்ற ஏக்கத்துடனும் கிடைத்தால் எப்படியும் பொருளாதார ரீதியாக கட்டியெழுப்பி விடுவோம் என்ற நம்பிக்கையுடன் வாழ்க்கைச் சக்கரத்தை இழுத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

 

அப்படியான பலருக்கு நேரச்கரம் கொடுக்கும் எல்லோருடைய பணியும் மெச்சத்தக்கதாயிருக்கின்றது. 

 

வாருங்கள் வடம் பிடிப்போம் என ஒன்றுசேர்ந்து கைகொடுப்பதே பொருளாதார ஏதிலிகளாக இருக்கும் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த இருக்கும ஒருவழி, செய்யவேண்டிய கடமையும் கூட

 

நன்றி, தொடர்ந்து இது போன்ற பதிவுகளினூடாக எல்லோருடைய சிந்தனைகளிலும் ஒரு பொறி தட்டவைப்பதற்கும் அந்த உணர்வுகளுடன் தொடர்ந்து வைத்திருப்பதற்கும்

 

 

 

 

Link to comment
Share on other sites

கருத்திற்கு நன்றிகள் கரன், வாணன், ஆதிபகவான்.


வணக்கம் சாந்தி அக்கா

 

போராட்ட வாழ்க்கையின்  ஒரு காலவொட்டத்தின் நினைவுகளையும் வலிகளையும் சொல்லும் இயல்பான உங்களின் எழுத்து வரிகள் எமக்கான பல நினைவூட்டல்களையும் தருகின்றது.

 

வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப, தம்மை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்ப போராடும் அவர்களின் மனவுறுதிக்கு இருக்கும் ஒரே ஆதரவு புலம்பெயர் சமூகம்.

 

தாயகத்தில் பலர் தங்களுக்குத் தெரிந்த யாராவது ஒருவரின் நம்பர் கிடைக்காதா? என்ற ஏக்கத்துடனும் கிடைத்தால் எப்படியும் பொருளாதார ரீதியாக கட்டியெழுப்பி விடுவோம் என்ற நம்பிக்கையுடன் வாழ்க்கைச் சக்கரத்தை இழுத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

 

அப்படியான பலருக்கு நேரச்கரம் கொடுக்கும் எல்லோருடைய பணியும் மெச்சத்தக்கதாயிருக்கின்றது. 

 

வாருங்கள் வடம் பிடிப்போம் என ஒன்றுசேர்ந்து கைகொடுப்பதே பொருளாதார ஏதிலிகளாக இருக்கும் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த இருக்கும ஒருவழி, செய்யவேண்டிய கடமையும் கூட

 

நன்றி, தொடர்ந்து இது போன்ற பதிவுகளினூடாக எல்லோருடைய சிந்தனைகளிலும் ஒரு பொறி தட்டவைப்பதற்கும் அந்த உணர்வுகளுடன் தொடர்ந்து வைத்திருப்பதற்கும்

 

புலம்பெயர்ந்தவர்களின் கைகளே அந்த மக்களைக் காக்கவும் கைதூக்கிவிடவும் கூடிய சக்தி படைத்தவை. ஒவ்வொருவரும் தங்கள் கடமைகைள விட்டு ஒதுங்காமல் செய்ய முன் வர வேண்டும்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.