Jump to content

அன்புள்ள மன்னவனே. குறுந்தொடர் - 1


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தரும் குழம்பாதேங்கோ எல்லாரும் நல்லாக் கதை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் தொடர்கள் எழுதிக் கலக்குகிறார்கள் சரி நானும் எழுதிப் பார்ப்போம் என்று வந்திருக்கிறேன். கடியுங்கோ கல்லெறியாதேங்கோ :lol::rolleyes::wub:

 

 

அன்புள்ள மன்னவனே.

குறுந்தொடர்தொடர் 1

 

kg-dreams-diesdas-Fotografia-women-ludzi

 

நரேனினதும் அம்மாவினதும் உரையாடலை கூர்ந்து கேட்டபடி சுமி தன் குழந்தையை அவதானித்துக் கொண்டிருந்தாள். அவள் அவதானிப்பதை கவனியாதவன்போல நரேனும் சுமியின் அம்மா பத்மாவுடன் பேசிக் கொண்டிருந்தான். இயக்க அலுவல்கள் நிமித்தம் கிழக்கு மாகாணத்தில் நின்றிருந்தவன் நீண்ட நாட்களுக்குப்பின்னர் இங்கு வந்திருந்தான்

“அந்தக் கரனைக் கட்ட குடுத்தெல்லோ வச்சிருக்கோணும். நரேன் உங்கட இயக்கத்தில நாலு வருசம் இருந்த ஆட்கள் கல்யாணம் கட்டலாம் என்று சட்டம் இருக்குத்தானே பிறகேன் அந்தக்கரனை விரும்பின பிள்ளை வேற ஆரையோ கல்யாணம் கட்டினதாம்? அப்பாவித்தனமாக அம்மா விடயம் அறியும் ஆவலில் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தாள். அம்மாவின் கேள்விக்கு பாதிக்கு பதில் சொல்வதும் மீதிக்கு மிடறு விழுங்குவதுமாக நரேன் பத்மா அம்மாவுக்குள் சிக்குப்பட்டுக் கொண்டிருந்தான். இவன் ஒழுங்காச் சொல்ல மாட்டான் என்று கருதி ஒன்றரை வருடங்களுக்குப்பின்னர்  வீட்டுக்கு வந்திருக்கும் தனது ஒன்று விட்ட அக்காவின் மகனிடம் வீட்டுப்புதினம் கதைக்கத் தொடங்கிய அம்மா….. சுமிக்கு நடாத்தி வைத்த அவசரக்கல்யாணம் அவ் ஒவ்வாத வாழ்வில் சுமி பட்ட இன்னல்கள் தொடர்ந்து தகர்ந்துபோன வாழ்வும் கைக்குழந்தையுடன் தனிமரமான சுமியின் கதையுடன் அழுகையும் ஆற்றாமையுமாக கண்கள் கலங்கி நாசி நீர் கோர்த்து பொருமியும், துடைத்தும் , சீறியும் அரட்டிக் கொண்டிருந்தவள் சற்று ஆசுவாசப்பட்டுக்கொண்டாள். மனதிற்குள் புழுங்கிய வேதனையை யாரிடமாவது சொல்லித் தீர்த்துவிடவேண்டும்  என்று காத்திருந்தவளுக்கு நரேன் கிடைத்தது நிம்மதியைத் தந்திருக்கவேண்டும். அழுது வீங்கிய முகத்தை அலம்பிக் கொண்டுவர எழுந்து கிணற்றடிப்பக்கம் போனாள். சுமி மௌனமாக இறுகி இருந்தாள். நரேனின் மனச்சாட்சி அவனைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி சாட்டையைச் சொடுக்கிக் கொண்டிருந்தது.

நரேன் மெல்ல தான்’ இருந்த இருக்கையை விட்டு எழுந்து சுமிக்கு அருகில் வந்தான்.

“சுமி”

இறுகிய உணர்வுகளுடன் நரேனை நிமிர்ந்து பார்த்தாள். சுமியை நேராய் பார்க்கும் துணிவின்றி மறுபக்கம் பார்த்தவாறே “அவன் விசரன் மாதிரிப் போய்விட்டான்” என்று முணுமுணுத்தான். நரேனின் முணுமுணுப்பை தெளிவாகப் புரியமுடியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்த சுமியிடம் “என்னை மன்னித்து விடு சுமி. நீ உருக்குலைந்து போய்விட்டாய். அவன் பைத்தியம் மாதிரி தவிக்கின்றான்” சுமிக்குத் தூக்கிவாரிப்போட்டது. நரேன் என்ன சொல்கிறான் மூளைக்குள் அறம்புறமாக நரம்பு மண்டலம் புடைத்தது. சுமியின் பார்வையில் தெரிந்த குழப்பத்தை விளங்கிக் கொண்ட நரேன் “நான் கரனைப்பற்றிச் சொன்னேன்” என்று அழுத்தமாகச் சொன்னான். சுமி ஆடிப்போனாள் அதிர்ச்சியும் , அழுகையும் எவ்வகையில் வெளிப்படுவது என்று தெரியாமல் திணறின.

 

 

தொடரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக நீண்ட காலத்தின் பின்... உங்களது பதிவை வாசிக்க ஆவலாக உள்ளோம்.
தொடருங்கள்.... வல்வை. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் வாசிப்பு இலையான் கொல்லியா!...

 

நன்றி நன்றி :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

TEXT MESSAGE மாதிரி வலு சிக்கனமாக் கிடக்கு, வல்வை! :D

 

நீண்ட காலத்துக்குப் பிறகு வந்திருக்கிற படியால், உங்களிடமிருந்து வேட்டித் துண்டை எதிர்பார்க்கவில்லைத்தான்! ஒரு சால்வைத் துண்டாவது தந்திருக்கலாம்! :o

 

அதுவில்லாமல் லேஞ்சித் துண்டைக்காட்டினால், நாங்கள் என்ன செய்யிறது? :D

 

தொடருங்கள், வல்வை! :icon_idea:

Link to comment
Share on other sites

நன்றாக உள்ளது. தொடருங்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் கதை என்கிறீர்கள் பரவாயில்லை. பயப்பிடாமல் எழுதுங்கோ. கதை முடியும்போது எழுத்தில் தெளிவு வந்துவிடும் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக நீண்ட காலத்தின் பின்... உங்களது பதிவை வாசிக்க ஆவலாக உள்ளோம்.

தொடருங்கள்.... சகோதரி வல்வைசகாரா .  :)

 
ஆனால் இடைவெளி  அதிகம் விட்டு எம்மை வருத்தக்கூடாது
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

TEXT MESSAGE மாதிரி வலு சிக்கனமாக் கிடக்கு, வல்வை! :D

 

நீண்ட காலத்துக்குப் பிறகு வந்திருக்கிற படியால், உங்களிடமிருந்து வேட்டித் துண்டை எதிர்பார்க்கவில்லைத்தான்! ஒரு சால்வைத் துண்டாவது தந்திருக்கலாம்! :o

 

அதுவில்லாமல் லேஞ்சித் துண்டைக்காட்டினால், நாங்கள் என்ன செய்யிறது? :D

 

தொடருங்கள், வல்வை! :icon_idea:

 

கனக்க எழுதினால் வாசிக்கப்பஞ்சிப்படுவார்களே.....ரோமியோ இப்பல்லாம் இதுதான்  பாசன்... :rolleyes:

நன்றாக உள்ளது. தொடருங்கள். :)

 

நன்றி துளசி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் கதை என்கிறீர்கள் பரவாயில்லை. பயப்பிடாமல் எழுதுங்கோ. கதை முடியும்போது எழுத்தில் தெளிவு வந்துவிடும் :D

 

ஆசீர்வாதத்திற்கு நன்றி சுமே :rolleyes:

 

Link to comment
Share on other sites

உங்கள் எழுத்துக்கள் எங்களின் வழிகாட்டியா இருக்கும் அக்கா எழுதுங்கோ முடிவு எப்படி என்று பார்க்க ஆவல் உடன் இருக்குறேன் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன குறுந்தொடர்? ஒரு நெடுந்தொடராகவே எழுதவேண்டியதுதானே வாசிக்க நாங்கள் இருக்கிறோம் தானே :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட விடுமுறைக்கு பின் வந்திருக்கிறேன் எழுதுங்கள் படிக்கும் ஆவலுடன்.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறுந்தொடர் நல்லாயிருக்கு!

 

Spoiler
படத்திலுள்ள பெண்ணின் முகம் காண ஆவல்! :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தொடருங்கள் அக்கா :)
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Thodarai kanavillai enru thiddatheenka my computer has problam dosenot work when i fix it i will write my small story sorry every body

Link to comment
Share on other sites

Thodarai kanavillai enru thiddatheenka my computer has problam dosenot work when i fix it i will write my small story sorry every body

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய தொடரும் அப்பிடித்தான்!! :D

 

இரண்டு பேரும் 

தொடரைத்தொடங்கும்   போதே

எச்சரிக்கை  மணி  அடிக்கப்பட்டுள்ளது என்பதை ஞாபகப்படுத்துகின்றேன் :(  

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களே.

 

உங்கள் பொறுமைக்கு மிகவும் நன்றி...

Link to comment
Share on other sites

நண்பர்களே.

 

உங்கள் பொறுமைக்கு மிகவும் நன்றி...

 

இவ்வளவு பொறுமையா சகாரா உங்களால் மட்டும்தான் முடியும் எங்களை சோதிக்க. :lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு பொறுமையா சகாரா உங்களால் மட்டும்தான் முடியும் எங்களை சோதிக்க. :lol:

 

 

இதனால்தான் தொடர்கள் எழுத விரும்புவதில்லை சாந்தி.

 

இம்முறை கணனி குழப்பி விட்டது.....கணனி ஓகே ஆனபின் நேரம் சோதிக்கிறது....... இப்போதுதான் வேலையால் வந்து ஆறுதலாக நிற்கிறேன் இன்னும் சிறிதுநேரத்தில் சிறியவர்களை இசை வகுப்புகளுக்கு அழைத்துச் செல்லவேண்டும்...திரும்பி வந்து இன்றிரவு எப்படியாவது இந்தக்கதையின் கற்பனை வெளியை சிறிது திறக்கவேண்டும்... :( இனிமேல் இப்படியான தொடர் எழுதுற வேலைக்கு இறங்கக்கூடாது :unsure:

 

எழுதி முடிச்சாத்தான் நிம்மதி :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திறமான படைப்புக்கள் ஆக்கம்பெறக் காத்திருப்பதில் பிரச்சனையில்லை.

இந்த நேரப்பிரச்சனை யாரைத்தான் விட்டது
ஓடிக்கொண்டேயிருக்கும்

 

காத்திருப்போம் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் எழுதேல்லையே ???????

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.