Jump to content

அன்புள்ள மன்னவனே. குறுந்தொடர் - 1


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ள மன்னவனே.

குறுந்தொடர் - 2

 

12835209249673.jpg

 

நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. அந்தக் காவலரனில் நரேனும், கரனும் விழிப்பாக எதிரியை அவதானித்தபடி இருந்தனர். திடீர் திடீரென செல்களும், துப்பாக்கிச் சன்னங்களும் தலைக்கு மேலால் கூவிக்கொண்டு செல்வதும் வெடிப்பதுமாக அந்த இரவு நகர்ந்து கொண்டிருந்தது. நாளாந்தம் இத்தகைய சூழலிலேயே சென்ரியில் நிற்பதால் இருவரிடமும் பதற்றம் இல்லை. ஆனால் கண்கள் மட்டும்  மண்மூடைகளுக்கு இடையிலான சிறிய வெளிகளினூடாக மாறி மாறி நாலாபக்கமும் அந்த இருளை துலாவிக்கொண்டிருந்தன. ஒரு நீண்ட மௌனம் வழமையில்லாமல் இருவருக்கும் இடையில் தங்கியிருந்தது.

 

நரேனுடன் பழகும் எவரும் இயல்பாகவே அவனுடன் மனம் விட்டுப் பேச ஆரம்பித்து விடுவார்கள். அப்படி ஒரு ஈர்ப்பை எப்போதுமே நரேனின் பேச்சும், செயலும் கொண்டிருக்கும். எதிர்காலம் பற்றிய தூரநோக்கும், தெளிவான பேச்சும், இயல்பான தோழமையும் மனக்குழப்பம் கொண்ட பலரை அவன்பால் அணுக வைப்பதும்…., சமூகம், போராட்டம் பற்றிய தெளிவான பதில்களையும், திடமான விளக்கங்களையும் கேட்டு குழப்ப நிலை தீர்த்து தெளிவு பெற்றவர்களின் வெற்றிகளும் அதற்கு சான்று கூறத் தயங்கவில்லை.

 

கரனும் நரேனுக்கு சளைத்தவன் அல்லன். நரேனைப் போல ஆழமான சிந்தனை இல்லாவிட்டாலும் துடிப்பும், குறும்பும், சாதுரியமான பேச்சும், செயலும், எல்லோரையும் சிரிக்கவைக்கும் விகடமும் கரனுக்கான பிரத்தியேக அம்சங்களாகி அவனை எல்லோராலும் விரும்பும் ஒருவனாக உலா வர வைத்தன.

 

இந்த இருவருக்கும் உள்ள தோழமை என்பது காவியங்கள் எழுதவல்லன. சில வருடங்களுக்கு முன்னர் முதன் முதலாக இருவரும் ஒருவரை ஒருவரை ஒருவர் சந்தித்ததே இப்படியான ஒரு காவலரனில்தான். அன்று தொட்டு இன்று வரை அவர்களின் நட்பு தொடர்தே இருப்பினும், காதல் என்னும் கள்ளத்தனம் கரனின் மனதில் பூத்து குலுங்கத்தான் செய்தது அதனை திருட்டுத்தனமாக தனக்குள்ளேயே கோட்டையைக்கட்டி இரசிக்க முற்பட்ட கரனின் செயல்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை நரேன் உணர்ந்தாலும் நண்பன் தானாக கூறாதவரை அவ்விடயம் பற்றி எதுவும் கேட்பதில்லை என்ற கோட்பாடோடு இருந்தான். கரனுக்கு நண்பனுக்கு மறைக்க விருப்பமில்லாவிட்டாலும் தான் யாரை நேசிக்கிறேன் என்பதை நரேனிடம் சொல்ல பெருந்தயக்கம் தடைபோட்டுக்கொண்டே வந்தது. இத்தயக்கமே கரனின் இயல்பான குணநலன்களை நரேனின் முன்னால் முற்றிலும் இல்லாமல் ஆக்கியது. நண்பனிடம் காட்டும் அட்டகாசத்தனங்கள் பவ்வியமாக அடங்கிக் கொண்டன.

 

துடிப்பும், விகடமும் மௌனமாவதும், இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து போவதும் இந்தக் காதல் ஒன்றால்தான்போலும் என்று சிறிது காலமாக பல சந்தர்ப்பங்களில் கரனுடன் இருக்கும்போது நரேன் நினைப்பதுண்டு. எப்போதுமே மிக நெருங்கிய நண்பனாக இருந்தாலும் அவனுடைய அனுமதியின்றி அவனைத் துருவிப்பார்ப்பது, ஆராய முற்படுவது என்பதெல்லாம் நாகரீகமற்ற செயல்கள் என்பதை திடமாக நம்பும் நரேன் கரனாக பேசும்வரை அவனிடம் எதுவும் கேட்கக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தான். கரனின் மனதில் எதையும் கேட்காமல் இருக்கும் தோழன் மரியாதையின் உச்சப்படிகளை எட்டிக் கொண்டிருந்தான். நரேனைப் பார்க்கும் கணங்களெல்லாம் மனதிற்குள் ஒரு குறுகுறுப்பு எழுவதும், அதை இல்லாமல் பண்ண வேண்டும் என்றால் உண்மையை நண்பனிடம் சொல்லவேண்டும் என்ற எண்ணமும் ஓங்கத்தான் செய்தன. மனம் நினைப்பதை சொல்லும் அளவுக்கு நாவுக்குத் துணிச்சல் இல்லை…. அப்படியே நா சொல்ல முற்பட்டால் வார்த்தைப் பஞ்சம் தலைவிரித்தாடி பேச நினைத்த விடயத்தையே திசைமாற்றி சென்றன.

 

இருளின் நீண்ட பொழுதில் முன்னெப்போதும் இல்லாதவாறு கரன் மனதால் தவித்துக் கொண்டிருப்பதை நரேனால் அவதானிக்காமல் இருக்க முடியவில்லை. ஆனால் எல்லைகடந்து ஊடறுத்து உள்நுழைந்து சங்கடப்படுத்துவதையும் விரும்பாததால் இறுக்கமான மௌனத்திற்கு தன்னைத் தாரை வார்த்துவிட்டிருந்தான்.

 

காதலிக்கும்போது இருந்த மகிழ்ச்சி இப்போது எள்ளளவும் இல்லாத சூழலில் சரியா? தவறா என்று மனதிற்குள் எழுந்த கேள்விக்கணைகளால் கரன் காயப்பட்டுக்கொண்டிருந்தான்………

தொடரும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர் நல்லா இருக்கும்போல.... :D  :D

தொடருங்கள் வல்வைசகாரா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.