Jump to content

மலையர்கட்டு கிராமமக்களுக்கு ஆயிரம் கோழிக்குஞ்சுகள் வழங்கல் நிகழ்வு.


Recommended Posts

மலையர்கட்டு கிராமமக்களுக்கு ஆயிரம் கோழிக்குஞ்சுகள் வழங்கல் நிகழ்வு.

 

போரால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு எல்லைக்கிராமங்களில் ஒன்றான மாலையர்கட்டில் வறுமைக்கோட்டிற்கு கீட்பட்ட 44குடும்பங்களுக்கான வாழ்வாதார ஊக்குவிப்பாக ஆயிரம் கோழிக்குஞ்சுகள் 01.10.2013 அன்று நேசக்கரம் பிறைட்பியூச்சர் அமைப்பினால் வழங்கி வைக்கப்பட்டது.

 

நேசக்கரம் பிறைட்பியூச்சர் அமைப்பின் அமைப்பாளர் திரு.ஜனனன் , உபதலைவர் டினேஷ் , எமது உப அமைப்பான மீழ்ச்சி அமைப்பின் தலைவர் பொருளாளர் , உறுப்பினர்கள் , மலையர்கட்டு கிராம சேவகர் திரு.குகதாசன் , கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் கயேந்திரன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

 

ஏற்கனவே இக்கிராமத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்காக அடிப்படைத் தேவைகளை எமது அமைப்பு வழங்கியிருந்தது. தொடர்ந்த இக்கிராமத்தின் வாழ்வாதார சுகாதார மனநல ஆதரவினை வழங்க வேண்டிய தேவைகள் இருப்பதனை அவதானித்துள்ளோம். புலம்பெயர் தமிழர்களின் ஆதரவு மட்டுமே இந்த மக்களின் வாழ்வை மாற்ற முடியும்.

 

கோழிக்குஞ்சுகளை வழங்க 150000ரூபா நிதியுதவியினை(ஒன்றரை லட்சரூபா)  வழங்கிய கனடா ரவி ,  சுரேஷ் நண்பர்களுக்கு எமது சிறப்பான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஏற்கனவே 32 குடும்பங்களுக்கான நிலக்கடலை பயிரிடுவதற்காகவும் இவ்விருவரும் உதவியுள்ளனர்.  றவி , சுரேஷ் நண்பர்கள் வழங்கிவரும் ஆதரவானது எமது தொடர்ந்த பணிகளை மேலும் விரிவாக்கம் செய்யவும் பேராதரவாக அமைகிறது.

DSCF5787-150x150.jpg DSCF5790-150x150.jpg DSCF5798-150x150.jpg
DSCF5802-150x150.jpg DSCF5803-150x150.jpg DSCF5809-150x150.jpg
DSCF5812-150x150.jpg DSCF5813-150x150.jpg
DSCF5815-150x150.jpg DSCF5817-150x150.jpg DSCF5818-150x150.jpg
DSCF5823-150x150.jpg DSCF5825-150x150.jpg DSCF5827-150x150.jpg
DSCF5829-150x150.jpg

Chiken-1-744x1024.jpgChiken-2-744x1024.jpg

Chiken-3-744x1024.jpg

Chiken-4-744x1024.jpg

http://nesakkaram.org/ta/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் சமூக சேவக நண்பர்கள் கனடா ரவி மற்றும் சுரேஸ் அவர்களுக்கு நன்றி.

உங்களது திட்டங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள். 

Link to comment
Share on other sites

உதவும் உள்ளங்களுக்கு நன்றி..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் சமூக சேவக நண்பர்கள் கனடா ரவி மற்றும் சுரேஸ் அவர்களுக்கு நன்றி.

உங்களது திட்டங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள். 

  •  

  •  
Link to comment
Share on other sites

ஒவ்வொருவரின் உதவிகளும் பெரும் பலமாக பாதிக்கப்பட்ட எங்கள் மக்களைச் சென்றடைய ஆதரவு தருகின்றவர்களை பாராட்டி ஊக்குவிக்கும் விவசாயி விக் , விசுகு , இசைக்கலைஞன் , ஆதி பகவான் , பெருமாள் உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

இந்த திட்டத்தை ஒருவரிடமே முதல் இடுவதற்கு எவளவு சிலவாகும்

இட வளம்

உணவு வளம்

மற்றும் இன்ன பிற செலவுகள்

முதல் இடுபவருக்கான லாப வீதம்

வளர்பவருக்கான லாப வீதம் போன்ற விபரங்களை தர முடியுமா சாந்தி அக்கா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திட்டத்தை ஒருவரிடமே முதல் இடுவதற்கு எவளவு சிலவாகும்

இட வளம்

உணவு வளம்

மற்றும் இன்ன பிற செலவுகள்

முதல் இடுபவருக்கான லாப வீதம்

வளர்பவருக்கான லாப வீதம் போன்ற விபரங்களை தர முடியுமா சாந்தி அக்கா ?

 

 

நல்லதொரு  கேள்வியும் முயற்சியும் சுண்டல்

 

பதிலையும் இங்கே பதியுங்கள் சாந்தியக்கா

எல்லோரும் பார்க்கட்டும்

பார்க்கவேண்டும்..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதவும் உள்ளங்களுக்கு நன்றி!

Link to comment
Share on other sites

சுண்டல், விசுகு இருவருக்கும், :-
கோழிவளர்ப்பு பண்ணையொன்று ஆயிரம் கோழிக்குஞ்சு வளர்ப்புத் திட்டத்திற்கான செயற்திட்டம் மேலும் மாதிரிப்பண்ணைகளின் திட்டங்களும் 2014ம் ஆண்டு நேசக்கரத்தால் செயற்படுத்துவதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. நவம்பர் மாதம் இதுபற்றிய செய்தியை வெளியிட இருந்தேன். ஆனால் நீங்கள் இது பற்றி இங்கு கேட்டிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. நாளை கோழிப்பண்ணைக்கான முழுமையான விபரங்களைத் தருகிறேன். பயன் , இலாபம் ,பயனடையும் பயனாளிகள் தொகை , செயற்படுத்தல் முறை யாவும் நாளை தருகிறேன்.

 

மற்றும் கருத்திட்ட Kkaran, நுணாவிலான், சுவியண்ணா ஆகியோருக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

இந்த திட்டத்தை ஒருவரிடமே முதல் இடுவதற்கு எவளவு சிலவாகும்

இட வளம்

உணவு வளம்

மற்றும் இன்ன பிற செலவுகள்

முதல் இடுபவருக்கான லாப வீதம்

வளர்பவருக்கான லாப வீதம் போன்ற விபரங்களை தர முடியுமா சாந்தி அக்கா ?

 

கோழிப்பண்ணை அமைத்தல்.

மாதிரிக்குடியேற்றமாக செய்வது சிறந்தது. போரால் பாதிக்கப்பட்ட விதவைகள் அல்லது ஊனமுற்றவர்களை இத்திட்டத்தில் இணைக்கலாம். அதுவும் நிலம் இல்லாது அவலப்படுவோரை உள்வாங்கி இத்திட்டத்தை செயற்படுத்துவது சிறப்பானது.

 

நிலமொன்றை கொள்வனவு செய்து அதில் குடியேற்றும் குடும்பங்களை வைத்து கோழிப்பண்ணையை நடத்தலாம். இவர்களுக்கு நிதி முதலீட்டை வழங்குவோரும் குறித்த குடும்பங்களும் தொடர்புகளைப் பேணிக்கொள்ளும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்து தேவையான ஒழுங்குகளை நேசக்கரம் செய்து தரும்.

குறித்த குடும்பங்களுக்கு வழங்கப்படும் காணியில் அவர்களது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வசதிகளோடு மரக்கறி வகைகள் பயிரிடுவதற்கான ஒழுங்கினையும் ஏற்படுத்திக் கொடுப்போம்.

பண்ணைக்கான தேவைகள் :-

1)  நிலம் - 300000.00ரூபா (அண்ணளவாக 1800.00€) (சொந்தமாக கொள்வனவு செய்வதற்கான விலை)

(நிலம் குத்தகைக்கு எடுத்து பண்ணையமைக்க வருடத்திற்கு – 75000.00ரூபா)

2) ஆயிரம் கோழிக்குஞ்சுகளை பராமரிக்க 5 குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க முடியும்.

3) 5குடும்பங்களுக்கான தற்காலிக வீடமைக்க – 200000.00ரூபா (அண்ணளவாக 1200€)

4) ஒரு கோழிக்குஞ்சின் விலை – 125ரூபா

1000 குஞ்சுகள் - 125000.00ரூபா ((அண்ணளவாக 750€)

5) கோழித்தீன் - 50000.00ரூபா((அண்ணளவாக 300€)

6) மருந்து – 10000.00ரூபா (அண்ணளவாக 60€)

7) கோழிக்கூடு தயாரிக்க  – 200000.00ரூபா (அண்ணளவாக1200€)

மொத்தம் - 885000.00ரூபா (அண்ணளவாக 5310€)

முட்டைக்கோழி மற்றும் 45நாள் இறைச்சிக்கோழி வளர்ப்பு இரண்டையும் செய்யலாம். முட்டைக்கோழியின் பயன் மூன்றரை மாதத்தில் கிடைக்கும். நாட்டுக்கோழி முட்டை விலை – 15.00ரூபா.

 

பயனடையும் குடும்பத்திற்கான கொடுப்பனவு தவிர்ந்து மூன்றில் இரண்டு பங்கு முதலீட்டாளருக்கு வழங்க முடியும். உங்கள் உதவி மூலம் ஒரு குடும்பத்திற்கான தொழில் வாய்ப்பும் வாழ்வதற்கான சொந்தமான நிலம் தற்காலிக வீடும் கிடைக்கிறது. இந்த தொழில் மூலம் அவர்கள் தங்களுக்கான நிரந்தர வீட்டை அமைத்துக் கொண்டு முன்னேற முடியும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் அக்கா ......

சிலருடன் பேசி பார்கின்றேன்

 

வணக்கம் சுண்டல்

மற்றும் சாந்தியக்கா

 

 

எனக்கு பல நாளாக ஒரு  ஆசையுண்டு

யாழ்கள  உறவுகள் ஒன்றிணைந்து எதாவது செய்யவேண்டும் என்று.

 

அதற்கு இந்த திட்டத்தை பரீட்சித்து பார்த்தால் என்ன??

நான் எதிர்பார்த்த தொகையிலும் சிறிது இது பெரிதாக இருந்தாலும்

சில அடிப்படைகள் ஏற்றுக்கொள்ளப்படுமாயின் இதை  நாம் செய்யமுடியும்.

 

என்னுடைய அபிப்பிராயத்தை பதிகின்றேன்.

மற்றவர்களும் சொல்லுங்கள்

 

பத்து யாழ்கள உறுப்பினர்கள் இதை பொறுப்பெடுப்போம்.

ஆளுக்கு 500 ஈரோக்கள் வருகிறது

உங்களது நெருங்கிய  உறவுகள்  நண்பர்கள் அயலவர்கள் எவராயினும் வசதிக்கேற்ப

 

ஐந்து பேர் சேர்த்தால் ஆளுக்கு 100  ஈரோக்கள்.

10 பேரைச்சேர்த்தால்  ஆளுக்கு 50 ஈரோக்கள்.

 

5 குடும்பத்துக்கு வாழ்வு கொடுத்ததுடன்

அதே முதலீட்டை லாபத்தை நாம் எடுக்காமல் சுழற்சி முறையில்

சாந்தி அக்காவின்   மேற்பார்வையிலேயே  விட்டு விடலாம்.

வேண்டுமென்றால்

யாழ் இணைய  உறவுகளால் செய்யப்பட்டது என ஒரு விளம்பரத்தை அங்கு வைத்துவிடலாம் (மற்றவர்களுக்கு உற்சாகமும் அவர்களும் இதே உதாரணத்தை பின் பற்றி  செய்வதற்கு)

 

நவம்பர்  கடைசிக்குள் 10 பேர் இங்கு உடன்பட்டால்

மார்கழிக்குள் பணத்தை சாந்தியக்காவுக்கு அனுப்பி

தைப்பொங்கலில் செய்து முடித்து

தை பிறந்தால் 5 குடும்பத்துக்கு வழி காட்டலாம்.

வருவீர்களா???

 

 

(குறிப்பு : இத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 5000  ஈரோக்களுக்கும்  சம்மதம் தெரிவித்தால் மட்டுமே சாந்தியக்காவிடம் திட்டம்    கேட்கப்படும்.  ஒருவர் குறைந்தாலும் செய்யமுடியாது போகலாம்)

 

1- விசுகு............................ .அ- விசுகு

                                               ஆ-

                                                இ-

                                                ஈ-

                                                உ-  (ஐந்து பேரை  நான் சேர்த்து 500   ஈரோக்கள் தருகின்றேன்)

 

2-

Link to comment
Share on other sites

நன்றிகள் அக்கா ......

சிலருடன் பேசி பார்கின்றேன்

 

முயற்சி செய்யுங்கள் சுண்டல் வெற்றியளித்தால் நடைமுறைப்படுத்துவோம்.

 

Link to comment
Share on other sites

தனியே கோழிப்பண்ணைய நிர்வகிக்க கட்டாயம் 5 - 8பேர் தேவை. ஆயிரம் கோழிகள் பராமரிப்பு சிலரால் செய்ய முடியாது.  இதையே நாங்கள் நிலம் இல்லாதவர்களுக்கு நிலத்தையும் வழங்கி அவர்களை நிரந்தர முன்னேற்றத்தை நோக்கி வழிகாட்டி விடுவதன் மூலம் அவர்களது வாழ்வாதாரத்தில் மாற்றத்தையும் கொண்டு வரலாம். விசுகு நீங்கள் குறிப்பிட்டது போல இந்தத் திட்டத்தை யாழிணையம் மாதிரிக்கிராமமாகவே செய்ய முடியும். இதனை நாங்கள் தொடர்ந்து பல இடங்களில் நடைமுறைப்படுத்தலாம். இந்த மாதிரிக்கிராம அமைப்பினுள் குடியேற்றப்படும் குடும்பங்களுக்குத் தேவையான யாவையும் செய்து கொடுக்கலாம்.

இந்தக் குடும்பங்களுக்கான நிலத்தை இலவசமாக பெறுவதற்கு காணியைத் தரக்கூடியவர்களை அணுகியுள்ளோம். சிலவேளை எமக்கான நிலம் இலவசமாகவும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

 

அப்ப நிலம் இலவசமாக கிடைத்தால் நிலத்துக்கான 1800€ ரூபா எமக்கு மீதமாகும. காணியைப் பெறுவதற்கான முயற்சி பயனளித்தால் இங்கே அறியத்தருவேன். காணி தவிர்ந்த மீத உதவியை முடிந்தால் கள உறவுகள் தயார்படுத்துங்கள்.

இத்திட்டத்தில் கிடைக்கும் வருமானத்தை மேலும் ஒரு மாதிரிப் பண்ணையை அல்லது நிலத்தை உருவாக்க பயன்படுத்தலாம். இதில் பங்களித்து திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நீங்களே இதன் முழுமையான நிருவாகத்தையும் கொண்டு நடத்தலாம். நேசக்கரம் ஒருங்கணைப்பு கணக்கு வளக்கு செயற்பாட்டை கவனித்து பயனறிக்கைகளை தந்து கொண்டிருக்கும்.

Link to comment
Share on other sites

வணக்கம் சுண்டல்

மற்றும் சாந்தியக்கா

எனக்கு பல நாளாக ஒரு ஆசையுண்டு

யாழ்கள உறவுகள் ஒன்றிணைந்து எதாவது செய்யவேண்டும் என்று.

அதற்கு இந்த திட்டத்தை பரீட்சித்து பார்த்தால் என்ன??

நான் எதிர்பார்த்த தொகையிலும் சிறிது இது பெரிதாக இருந்தாலும்

சில அடிப்படைகள் ஏற்றுக்கொள்ளப்படுமாயின் இதை நாம் செய்யமுடியும்.

என்னுடைய அபிப்பிராயத்தை பதிகின்றேன்.

மற்றவர்களும் சொல்லுங்கள்

பத்து யாழ்கள உறுப்பினர்கள் இதை பொறுப்பெடுப்போம்.

ஆளுக்கு 500 ஈரோக்கள் வருகிறது

உங்களது நெருங்கிய உறவுகள் நண்பர்கள் அயலவர்கள் எவராயினும் வசதிக்கேற்ப

ஐந்து பேர் சேர்த்தால் ஆளுக்கு 100 ஈரோக்கள்.

10 பேரைச்சேர்த்தால் ஆளுக்கு 50 ஈரோக்கள்.

5 குடும்பத்துக்கு வாழ்வு கொடுத்ததுடன்

அதே முதலீட்டை லாபத்தை நாம் எடுக்காமல் சுழற்சி முறையில்

சாந்தி அக்காவின் மேற்பார்வையிலேயே விட்டு விடலாம்.

வேண்டுமென்றால்

யாழ் இணைய உறவுகளால் செய்யப்பட்டது என ஒரு விளம்பரத்தை அங்கு வைத்துவிடலாம் (மற்றவர்களுக்கு உற்சாகமும் அவர்களும் இதே உதாரணத்தை பின் பற்றி செய்வதற்கு)

நவம்பர் கடைசிக்குள் 10 பேர் இங்கு உடன்பட்டால்

மார்கழிக்குள் பணத்தை சாந்தியக்காவுக்கு அனுப்பி

தைப்பொங்கலில் செய்து முடித்து

தை பிறந்தால் 5 குடும்பத்துக்கு வழி காட்டலாம்.

வருவீர்களா???

(குறிப்பு : இத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 5000 ஈரோக்களுக்கும் சம்மதம் தெரிவித்தால் மட்டுமே சாந்தியக்காவிடம் திட்டம் கேட்கப்படும். ஒருவர் குறைந்தாலும் செய்யமுடியாது போகலாம்)

1- விசுகு............................ .அ- விசுகு

ஆ-

இ-

ஈ-

உ- (ஐந்து பேரை நான் சேர்த்து 500 ஈரோக்கள் தருகின்றேன்)

2-

10 ல 1 பங்கு நானும் எடுக்கிறன்

Link to comment
Share on other sites

இன்னும் எட்டுப்பங்கு. இதனையும் ஒவ்வொருவர் தாங்கள் வாழும் நாடு சார்ந்து பொறுப்பேற்றால் திட்டத்தை நிறைவேற்ற  முடியும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  சுண்டல்

இன்னும் எட்டுப்பங்கு.

இதனையும் ஒவ்வொருவர் தாங்கள் வாழும் நாடு சார்ந்து பொறுப்பேற்றால் திட்டத்தை நிறைவேற்ற  முடியும்.

 

இன்று கார்த்திகை 1

இந்த  மாதம் முடிவதற்குள்
தயவு செய்து எல்லோரும்  முயலுங்கள்  உறவுகளே....
மனமுண்டானால்  நிச்சயம் 
வழியுண்டு
தை பிறந்தால்
வழி  பிறக்கச்செய்வோம்....
Link to comment
Share on other sites

எனக்கும் நிறைய செய்ய வேண்டும் என்று ஆசையிருக்கு ஆனால் நேரப்பற்றாக்குறை, அசட்டு தன்மையால் அதிகமானதை வாசிப்பதோடு போய்விடுவேன். இதில் நானும் 10ல் அல்லது 5இல் ஒருவராக இணைகிறேன். எனது பங்கை கந்தப்புவிடம் திங்கள் கொடுக்கின்றேன். அவர் யாராவது அவுஸ் நண்பர்களை தொடர்பு கொண்டு கொடுக்க இயலுமாயின் கொடுக்கட்டும் அல்லது பணத்தை அனுப்புவதயின் அனுப்பலாம்.

Link to comment
Share on other sites

2ஏக்கர்காணி பார்த்துவிட்டோம். மிகவும் பொருத்தமான இடம். கோழிப்பண்ணை குடும்பங்கள் குடியேற்றம் அத்தோடு ஆயுர்வேத மருத்துவ பயிர்களை பயிரிடவும் அந்த இடத்திலேயே ஆயுர்வேத மருத்துவ நிலையயும் அமைக்க வேலைகள் நடக்கிறது. காணியை ஒருவர் மிகவும் குறைந்த விலையில் எமக்கு தருவதற்கு சம்மதித்துள்ளார்.

 

2ஏக்கரும் ஒருலட்சரூபாய்(600€).

உதவிகள் கிடைக்கும் பட்சத்தில் முதலில் காணியை கொள்வனவு செய்யலாம். மற்றவற்றை படிப்படியாக செய்ய முடியும். உங்கள் ஆலோசனைகள் கருத்துக்களையும் அறியத் தாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்.இங்கு குறிப்பிடப்பட்ட திட்டத்தில் சில விடையங்களில் தெளிவு பெற விரும்புகிறேன்.இது நேசக்கரத்தினுடான ஒரு முதலீடா அல்லது உதவியா.முதலீடு என்றால் சம்பந்தப்ட்ட முதல்(நிலம் கோழிக்குடு போன்றவை) யாருக்கு சொந்தம்.எனக்கு கோழி வழர்ப்பில் ஓரளவு ஆர்வமும் அனுபவமும் இருப்பதால் மேலதிகமான விரிவான தகவல்களை எதிர்பாக்கிறேன்..நன்றி

Link to comment
Share on other sites

சுவைப்பிரியன் வேலைப்பழுவினால் உடன் பதில் போடவில்லை மன்னிக்கவும்.
ஏற்கனவே நாம் மலையர்கட்டு கிராமத்திற்கு வழங்கிய உதவியானது முதலீடு அல்ல. உதவியாக வழங்கப்பட்டது.

இங்கு சுண்டல், விசுகு இருவரின் எண்ணத்தில் உதித்த பண்ணைத்திட்டம். அதனை நாங்கள் ஒரு மாதிரிக்கிராம உருவாக்கத்தின் முதல்படியாக செய்வது நல்லமென தோன்றியது. அதனை யாழிணையம் மாதிரிக்கிராமமாகவே உருவாக்க முடிவெடுத்துள்ளோம்.

 

நிலம் இல்லாதவர்களை குடியிருத்தி அவர்களுக்கான தற்காலி வீட்டையும் அமைத்துக் கொடுத்து அதே நிலத்தில் கோழிவளர்ப்பினை செய்ய நாம் போடும் முதலீட்டை நேசக்கரம் கவனிக்கும். அதாவது அதன் முன்னேற்றம் இலாபம் யாவற்றையும் நேசக்கரமே அவதானித்து இலாபம் தொடக்கம்  பயன்களையும் முதலீட்டாளர்களுக்கு தெரிவிப்போம். பங்கு அடிப்படையில் முதலிடுவோருக்கான இலாபத்திலிருந்து பங்குக்கு உரிய வருமானத்தை வழங்குவோம்.

 

ஆனால் குறித்த குடும்பங்கள் வழங்கப்படும் காணியில் தங்களது தேவைகளை பூர்த்தி செய்யும் மரக்கறி வகைகள் முதல் மரங்கள் நாட்டி வளர்த்தலையும் ஊக்குவிப்போம். இதனால் கிடைக்கும் வருமானம் மூலம் அவர்கள் தங்களுக்கான நிரந்தர வீட்டை அமைக்கவும் முன்னேறவும் அவர்களே முயற்சியெடுக்க வேண்டும். ஆனால் முன்னேற்றத்துக்கான வழிகாட்டியாக நாங்கள் இருப்போம்.

 

கோழிப்பண்ணை பராமரிப்பு யாவும் குறித்த காலத்திற்கான பயிற்சிகள் வழங்கியே நடைமுறைப்படுத்துவோம். காரணம் சரியான அனுபவம் பயிற்சி இல்லாமல் அவர்களால் கோழிவளர்ப்பு செய்ய முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்.

நன்றி உங்கள் பதிவுக்கு.இந்த திரியில் உள்ள திட்டம் ஒரு நல்லதுதான்.அத்துடன் எனது திட்டத்த்தயும் சொல்கிறேன்

நான் ஊரில் கோழிப்பண்ணை தொடங்கும் எண்ணத்தில் உள்ளேன்.அதன் நிர்வாக மற்றும் பராமரிப்பு சம்பந்தமான வருமானத்தை யாரோ கொன்டு செல்வதை விட அதை நேசக்கரம் முலமாக செய்வதன் முலம் நேசக்கரமும் அதனால் தெரிவு செய்யப்படும் பயனார்களும் பயன் பெற முடியும்.சில வேண்டுகோள்கள் ஏற்றுக்கொள்ள படுமாயின் 1000 அல்லது 500 கோழிகள் வளர்க்கும் திட்டத்திற்கு நான் முதலிட தயார்.இது சரி வந்தால் இந்த துறை அல்லது இது சார்ந்த வேறு துறைகளிலும் அக்கறை செலுத்தாலாம்.இதற்க்கு எமது விவாசாயி விக் இடமும் ஆலோசனை பெறலாலம்.தேவை ஏற்படின் இது தொடர்பாக தனிப்படவும் கதைக்கலாம்.

                                          நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.