Jump to content

தமிழில் பெயர் .!


Recommended Posts

புலம்பெயர்த்து வாழும் நாங்கள் தூயதமிழ் எங்கள் பிள்ளைகளுக்கு பெயர் வைக்கிறோமா எம்மில் எத்தினை பேர் அப்படி வைத்து இருக்குறோம் சொல்லுங்கள் சும்மா ஒரு கணிப்புக்கு கேட்கிறேன் .

 

 

பெயருக்கு ஆனா விளக்கம் வேணும் முக்கியம் .!

Link to comment
Share on other sites

நண்பா இதை ஏற்கனவே எம் யாழ்க்கள தளபதி பாஸ் நந்தன் கேட்டுவிட்டார் :) ...சரி நீங்களும் கேட்டுள்ளீர்கள் நல்ல விடயம் .................எனது செல்வங்களுக்கு 
 
தமிழவன் 
தமிழ் நிலா 
Link to comment
Share on other sites

இருவருக்கும் நன்றி அருமையான பெயர் விளக்கமும் கொடுத்தா நல்லம் அண்ணே .

 

தகவலுக்கு நன்றி சூரியன் அண்ணே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிந்த ஒரு பிள்ளையின் பெயர் ப்றேஹா.  இதெப்படியிருக்கு?  நல்ல வடிவான பெயராம் என்று சொன்ன ஒரு பிள்ளைத்தாச்சிப் பிள்ளை தனக்குப் பிறக்கப் போற பிள்ளைக்கு கொஞ்சம் மாத்தி ப்றேஷா எண்டு வைக்கப் போகுதாமெண்டு சொல்லிச்சுது.  வாயில கொஞ்சம் ஸ்டைலா(?)   நழையிற நுழையிற பெயர்களையெல்லாம் வைக்கிறதுதான்இப்ப பாஷன்.  உதாரணமாக, க்ளேமா, ஸ்லேலா, த்றேமா எண்டெல்லாம் பெயர் வைக்கலாம். சமீபத்தில கொஞ்சம் தமிழும் சேர்ந்து இருந்து நான் கேள்விப்பட்ட பெயர் 'இன்படக்ஸன்'.  நல்லாயிருக்குது என்ன!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனோலியா.

Link to comment
Share on other sites

தூய தமிழில் பெயர் வைத்தால் கர்நாடகமாக இருக்கும் என்பது பச்சைப்பொய். ஆங்கில நாடு என்றால் பெயருக்கான எழுத்துக்களை அவர்கள் உச்சரிப்பதற்கு ஏற்றமாதிரி அமைக்க வேண்டும்..

நானும் தமிழில்தான் பெயர் வைத்தேன்.. (சொல்ல விரும்பவில்லை).. ஆனாலும் அந்தப் பெயர் பற்றி பல வேற்றினத்தவர் சொல்லக் கேட்கிறேன்.. "Nice name..!" :D

ஜெனோலியா.

:lol: :lol: :lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூய தமிழில் பெயர் வைத்தால் கர்நாடகமாக இருக்கும் என்பது பச்சைப்பொய். ஆங்கில நாடு என்றால் பெயருக்கான எழுத்துக்களை அவர்கள் உச்சரிப்பதற்கு ஏற்றமாதிரி அமைக்க வேண்டும்..

நானும் தமிழில்தான் பெயர் வைத்தேன்.. (சொல்ல விரும்பவில்லை).. ஆனாலும் அந்தப் பெயர் பற்றி பல வேற்றினத்தவர் சொல்லக் கேட்கிறேன்.. "Nice name..!" :D

 

 

சரியாகச் சொன்னீர்கள் இசை.

நானும்.... எனது பிள்ளைகளுக்கு, ஏழு ஆங்கில எழுத்துக்குள்... அழகிய தமிழ்ப் பெயர் வைத்துள்ளேன்.

கூப்பிடும் வெள்ளைக்காரனும்... நாங்கள் உச்சரிப்பது போலவே... உச்சரிப்பார்கள்.

அவர்களுக்கு "ரங்" சிலிப் பண்ணுவது மாதிரி பெயரை.... வைத்தால்,

அவர்களும் பாவம், எங்களுக்கும் கேட்க ஒரு மாதிரி இருக்கும். :)

Link to comment
Share on other sites

தமிழில பெயர் வைக்கிறது முக்கியமில்லை தமிழ் பற்றை ஊட்டி வளர்க்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில பெயர் வைக்கிறது முக்கியமில்லை தமிழ் பற்றை ஊட்டி வளர்க்க வேண்டும்.

 

கழுதை, சொல்லுறதும்.... சரியாத்தானிருக்கு.

Link to comment
Share on other sites

தமிழில பெயர் வைக்கிறது முக்கியமில்லை தமிழ் பற்றை ஊட்டி வளர்க்க வேண்டும்.

 

உண்மை.. வெறும் தமிழ்ப்பெயர் பாதிக்கிணறு தாண்டுவது மாதிரி..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பை ஆரம்பிச்ச,,, அஞ்சரன்,
தனது பிள்ளைகளுக்கும், பேரப் பிள்ளைகளுக்கும் தமிழ்ப் பெயரா... வைத்திருக்கிறார்?
அத... முதல்ல, வெளீல விடுங்கப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol:  :lol:  :lol: .தமிழ் சிறிக்கு டக்கென்று கிளிக் பண்ணிய பெயரா ஜெனோலியா?

 

என்னவோ.... தெரியாது, நுணா....

கள்ளம், கபடமில்லாத... அந்தப் பச்சைப் பிள்ளையின்.. ஞாபகம் அடிக்கடி வருதப்பா... :D  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் வைத்த பெயர் சுரபி.

 

என்ன அமுத சுரபியா இல்லை சும்மா சுரபியா? சும்மா சுரபியென்றால் சுரப்பியென்றாகிவிடும்.

 

Link to comment
Share on other sites

தலைப்பை ஆரம்பிச்ச,,, அஞ்சரன்,

தனது பிள்ளைகளுக்கும், பேரப் பிள்ளைகளுக்கும் தமிழ்ப் பெயரா... வைத்திருக்கிறார்?

அத... முதல்ல, வெளீல விடுங்கப்பு.

 

அண்ணாச்சி நான் எனது பிள்ளைகளுக்கு வைத்த பெயர் மூத்தவர்கள் இரட்டையர் ...அகரன் @அஞ்சரன் ..மூனாவாது ஆள் ஆதிரன் (ஆரம்பம் .....பயம் அறியான் ...பெரியவன் அல்லது வீரன் )ஆங்கிலத்திலும் அழகா எழுதலாம் கூப்பிடலாம் எங்கள் அடையாளம் என்பது பெயரில்தான் தொடங்குது நாம் யார் என்பது தமிழில் பெயரா வைப்பது முக்கியம் .

 

இங்கு வெள்ளைகள் தங்கள் பரம்பரை பெயர் மிஷெல் ...பிலிப் ...இப்படி இருக்கும் அதில் தெரியும் இவர்கள் எந்த நாட்டு குடிமகன் என்று .

Link to comment
Share on other sites

யேர்மானியர்களும், யேர்மானிய குடியுரிமை பெற்றவர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு கண்டபடியெல்லாம் பெயரை வைக்க முடியாது. அவர்களிடம் ஒரு பெரிய பெயர்ப் புத்தகமே உள்ளது, குழந்தைக்கு அஞ்சனா (Anjanna) என்று பெயர் வைத்தபோது, பதிவகம் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. An மற்றும் Janna என்ற பெயர்கள் புத்தகத்தில் இருப்பதை சுட்டிக்காட்டி அஞ்சனாவைப் பிரித்து An Janna எழுதியபோதுதான் ஏற்றுக்கொண்டார்கள்.

 

தமிழர்கள் நாங்கள் கடிவாளம் அற்ற குதிரைகள். எங்களால் தறிகெட்டு எப்படியும் ஓடமுடியும், பெயர் என்ன பெயர் அது எப்படி இருந்தால் என்ன?.

Link to comment
Share on other sites

யேர்மனியில் தமிழில் பெயர் வைத்தவர்கள் இருக்குறார்கள் அது எப்படி .அண்ணே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன பாஞ்ச் ரீல் விடுகிறீர்கள். என் பிள்ளைகளுக்கு என் விருப்பப்படிதான் பெயர் வைத் தேன். யேர்மனியில் பெயர் வைக்க எந்த ஆட்சேபமும் தெரிவிக்க மாட்டார்களே.

என் பிள்ளைகளும் ஜேர்மனியில் பிறந்தவர்கள். தமிழில் பெயர் வைத்தோம். பாஸ்போட் எடுக்கும்போது தாமாகவே விரும்பி தமிழில் கையெழுத்தும் வைத்துள்ளனர். நாம் உணர்வை ஊட்டினால் அவர்கள் தமிழர்களாக வளர்வார்கள்.

இன்னுமொன்று என் மூத்த மகள் கூறினாள் தனக்குப் பிறக்கும் குழந்தைக்குத் தமிழ்ப் பெயர் வைப்பதோடு பெயருடன் சேர்த்து தமிழ் என்றும் பதிவேன் என்று. எம்மிலும் பார்க்க பிள்ளைகள் தெளிவானவர்கள்.
 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

யேர்மனியில் தமிழில் பெயர் வைத்தவர்கள் இருக்குறார்கள் அது எப்படி .அண்ணே .

 

அது எப்படி அண்ணே என்றால் இப்படித்தான் இருக்கமுடியும் அஞ்சரன் அவர்களே!. அடைக்கலம் தேடி வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டார்கள் என்பதெல்லாம் சுத்தப்பொய். <_<  என்னுடைய சிற்றியில் அடக்கலம் தேடி வந்தவர்கள் சிற்றிசனும் எடுத்து புதுவீடும் கட்டி வாழ்கிறார்கள் என்பதுபோல்தான். :(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.