Jump to content

நவராத்திரி விரதமும் அதன் மகிமையும்


Recommended Posts

அலைமகள்,

உங்கள் மகளை இந்த தளத்திற்க்கு செல்ல வையுங்கள்:

 

www.hindukidsworld.org

 

 

நன்றி நாதமுனி! இந்த தளத்தையும் மகள் வாசிக்கிறவள்.

Link to comment
Share on other sites

 

சைவமதனோ இல்லையேல் இந்துமதமோ இப்படித்தான் வாழ வேண்டுமென்று வற்புறுத்தியதேயில்லை. மனித ஒழுக்கத்திற்கு வாழ்க்கைக்கு தேவையானதை புராணங்கள்,தேவாரங்கள்,இதிகாச கதைகள் மூலம் நல்லதுகெட்டதை சொல்ல விளைந்தார்களே தவிர மனிதர்களை கட்டுப்படுத்தவேயில்லை. ஞாயிறு,வெள்ளிகளில் சமூகமளிக்கா விட்டால் ஆளனுப்பி விசாரிக்குமளவிற்கு இந்தமதம் என்றுமேயிருந்ததில்லை.
 
ஜெர்மனியில் ஒரு பிரபலமான கட்சி அதுவும் ஆட்சியில் அமர்ந்தகட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முக்கிய பிரச்சாரத்தில் ஒன்று:-  வாரத்தில் ஒருநாள் மச்சம்மாமிசங்களை பகிஸ்கரிப்போம்.
 
 கோபுரத்தின் அழகை கிட்ட நிண்டு பார்த்தால் தெரியாது.....அதின்ரை அழகு தூரத்தை நிண்டு பார்த்தால்த்தான் தெரியும்....அது போலை......எங்கடை சமயத்தின்ரை நல்ல விசயங்கள் வெளிநாட்டவருக்கு தெரிஞ்ச அளவுக்கு எங்கடை சனத்துக்கு பெரிசாய் தெரியாது. ஒத்துக்கொள்ள வேண்டிய விசயம்.
 
டாக்குத்தர்மாரே  மாமிசங்களை  சாப்பிடாதேங்கோ எண்டு சொல்லீனம்.....மரக்கறிதான் பக்கவிளைவுகள் விக்கனமில்லையயெண்டு சொல்லீனம். இரவிலை சாப்பிடாமல் நித்திரை கொண்டால் ஒரு வருத்தமும் அண்டாது எண்டும் சொல்லீனம்.....இதெல்லாம் படிப்பறிவில்லாதகாலத்திலை மதம் மூலமாய் சொல்லியே விட்டினம்.
 
மாட்டுக்கு மாடு சொன்னா கேக்காது....மணிகட்டின மாடு சொன்னால்த்தான் கேக்குமாம்.

 

அருமையான வரிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவர்களாக இருக்கையில் , அவள், சுண்டல், பொங்கல் எல்லாம் ஒரு இனிமையான அனுபவம்.

 

அது அது அந்த அந்த வயதில் செய்ய வேண்டும். வளர்ந்த பின் வேறு பிரச்சனைகள், பகுத்தறிவுகள்: நம்பிக்கை இருக்கும், போகும்.

 

எனது கவலை எல்லாம், நமது மக்களின் ஆன்மிக நம்பிக்கைகளை காசாக்கும், கோவில்கள், இந்த குழந்தைகளின், சமய அறிவூட்டல், ஆன்மிக தேவைகளுக்காக என்ன செய்கின்றன என்பதே ஆகும்..

 

இறுதியில், எதிர்காலத்தில், பராமரிப்பார் இன்றி இந்த கோவில்கள் இழுத்து மூடப்படுமோ?

 

* அதை நினைச்சு கவலைப்படாதேங்கோ..........இப்ப இருக்கிற இளந்தாரி ஐயர்மார் தங்கடை பத்துவயது  பிள்ளைக்கும் பூணூல் போட்டு அழகுபாத்திட்டினம்.....இப்பவே திருவிழாக்கள் பெரிய பூசையளிலை எல்லாம் சின்ன ஐயர்மார் வெள்ளோட்டம் விட வெளிக்கிட்டினம்.....மூலஸ்தானத்திலை பெரிய ஐய்யருக்கு பிஸியெண்டால்...........அந்தநேரம் வைரவருக்கு அர்ச்சனை செய்யிறவைக்கு சிமோல் ஐயர் எப்பவும் மணியோடை ரெடி. :D
 
 புலம்பெயர் நாடுகளில் ஐயர்மார் தொழிலை விருத்தி செய்துவிட்டார்கள் :icon_idea: ....  ஆனால் சிகைத்தொழில்தெரிந்தவர்கள் தூரம் போய்விட்டார்களாம். இது எப்பிடியிருக்கு???
Link to comment
Share on other sites

 

சைவமதனோ இல்லையேல் இந்துமதமோ இப்படித்தான் வாழ வேண்டுமென்று வற்புறுத்தியதேயில்லை. மனித ஒழுக்கத்திற்கு வாழ்க்கைக்கு தேவையானதை புராணங்கள்,தேவாரங்கள்,இதிகாச கதைகள் மூலம் நல்லதுகெட்டதை சொல்ல விளைந்தார்களே தவிர மனிதர்களை கட்டுப்படுத்தவேயில்லை. ஞாயிறு,வெள்ளிகளில் சமூகமளிக்கா விட்டால் ஆளனுப்பி விசாரிக்குமளவிற்கு இந்தமதம் என்றுமேயிருந்ததில்லை.
 
ஜெர்மனியில் ஒரு பிரபலமான கட்சி அதுவும் ஆட்சியில் அமர்ந்தகட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முக்கிய பிரச்சாரத்தில் ஒன்று:-  வாரத்தில் ஒருநாள் மச்சம்மாமிசங்களை பகிஸ்கரிப்போம்.
 
 கோபுரத்தின் அழகை கிட்ட நிண்டு பார்த்தால் தெரியாது.....அதின்ரை அழகு தூரத்தை நிண்டு பார்த்தால்த்தான் தெரியும்....அது போலை......எங்கடை சமயத்தின்ரை நல்ல விசயங்கள் வெளிநாட்டவருக்கு தெரிஞ்ச அளவுக்கு எங்கடை சனத்துக்கு பெரிசாய் தெரியாது. ஒத்துக்கொள்ள வேண்டிய விசயம்.
 
டாக்குத்தர்மாரே  மாமிசங்களை  சாப்பிடாதேங்கோ எண்டு சொல்லீனம்.....மரக்கறிதான் பக்கவிளைவுகள் விக்கனமில்லையயெண்டு சொல்லீனம். இரவிலை சாப்பிடாமல் நித்திரை கொண்டால் ஒரு வருத்தமும் அண்டாது எண்டும் சொல்லீனம்.....இதெல்லாம் படிப்பறிவில்லாதகாலத்திலை மதம் மூலமாய் சொல்லியே விட்டினம்.
 
மாட்டுக்கு மாடு சொன்னா கேக்காது....மணிகட்டின மாடு சொன்னால்த்தான் கேக்குமாம்.

 

 

கு.சா அண்ணை,

 

மச்ச மாமிசங்களை தவிர்த்து ஆரோக்கியமாக இருப்பதற்குத் தான் விரதங்களும் பூசைகளும் நாங்கள் செய்கின்றோம் என்ற விடயத்தினை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒவ்வொரு விரதத்தின் பின்னும் மனிதனின் ஆசைகளை நிறைவேற்ற செய்யும் கோரிக்கைகளும் ஆர்வங்களும் தான் நிற்கின்றன.  அந்த ஆசைகளை நிறைவேற்றுவதற்கான ஒரு வழிமுறையாக கடவுளுடன் செய்யும் ஒரு டீலிங்காகத்தான் எம் சமூகத்தில் விரதங்கள் அன்று தொட்டு இன்றுவரைக்கும் இருக்கின்றன. அத்துடன் இந்து சமயத்தில் புலால் மறுப்பு வந்தது ஆரியரின் வருகைக்கு பின்பு தான். எம் குல தெய்வங்கள் மச்சம் சாப்பிட்டு, மது குடித்து அருள் பாலிக்கும் ஊர்க் கடவுள்களாகத்தான் வரலாற்றி இருந்து வந்துள்ளனர்.

 

எந்த டாக்குத்தர்மாரும்  மாமிசங்களை சாப்பிட வேண்டாம் என்று சொல்வதில்லை. அப்படிச் சொல்பவர் டாக்குத்தரும் இல்லை. நல்ல மருத்துவர் சொல்வது, மாசங்களை உண்பதுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்காது மரக்கறி, பச்சை இலை வகைககளையும் உணவில் சேருங்கள் என்றுதான். இன்றைய உணவு முறைகளில் சிவப்பு இறைச்சி வகைகளை அதிகம் உள்ளெடுக்கும் சூழல் இருப்பதால் சமப்படுத்தப்பட்ட உணவு முறையை பரிந்துரைக்கின்றனர். நான் வாரத்தில் இரண்டு நாட்களாவது வெறும் பச்சை இலைகளையும் பழங்களையும் கொண்ட சலட் (Salad) உணவினை மதியத்துக்கும் இரவுக்கும் உண்டு வருபவன்.

 

எம் பெண்கள் பொதுவாக 45 வயதினை தாண்டியவுடன் நோஞ்சானாக போய் இருப்பதை பல தடவை கண்டுள்ளேன். ஆண்களைப் போன்று வியாதிகள் அவர்களுக்கு வராவிடினும் உடல் ரீதியில் மிகவும் பலவீனமானவர்களாக இருக்கின்றனர். அதற்கு முக்கிய காரணமாக நான் நினைப்பது தன் குடும்பமும், கணவரும் நல்லா இருக்க வேண்டும் என்று பிடிக்கும் ஆயிரத்தெட்டு விரதங்களால் தான் என்று..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா அண்ணை,

எம் பெண்கள் பொதுவாக 45 வயதினை தாண்டியவுடன் நோஞ்சானாக போய் இருப்பதை பல தடவை கண்டுள்ளேன். ஆண்களைப் போன்று வியாதிகள் அவர்களுக்கு வராவிடினும் உடல் ரீதியில் மிகவும் பலவீனமானவர்களாக இருக்கின்றனர். அதற்கு முக்கிய காரணமாக நான் நினைப்பது தன் குடும்பமும், கணவரும் நல்லா இருக்க வேண்டும் என்று பிடிக்கும் ஆயிரத்தெட்டு விரதங்களால் தான் என்று..

இதுக்குள்ளை பிள்ளை பெத்தெடுக்கிற கணக்கு ஏன் வரேல்லை? பிள்ளையளை பிளாஸ்ரிக் பாக்கிலை எங்கையோயிருந்து வாங்கிக்கொண்டு வாறியளாக்கும்? பிள்ளை பெத்தவளுக்குத்தான் தெரியும் அதின்ரை பாரமும் தாக்கமும். தம்பியர் தப்பிக்கிறதுக்கு மனுசியின்ரை விரதம் கை குடுக்குது.

Link to comment
Share on other sites

அந்த ஆசைகளை நிறைவேற்றுவதற்கான ஒரு வழிமுறையாக கடவுளுடன் செய்யும் ஒரு டீலிங்காகத்தான் எம் சமூகத்தில் விரதங்கள் அன்று தொட்டு இன்றுவரைக்கும் இருக்கின்றன. அத்துடன் இந்து சமயத்தில் புலால் மறுப்பு வந்தது ஆரியரின் வருகைக்கு பின்பு தான். எம் குல தெய்வங்கள் மச்சம் சாப்பிட்டு, மது குடித்து அருள் பாலிக்கும் ஊர்க் கடவுள்களாகத்தான் வரலாற்றி இருந்து வந்துள்ளனர்.

 

இதை நான் இன்றுதான் படிக்கிறேன். ஆனால் இதனை நிழலி எங்கு படித்திருந்தார் என்பது தெரியாது. கந்த ஷஷ்டி என்பது முருகனே விரதம் இருக்கும் நாள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

* அதை நினைச்சு கவலைப்படாதேங்கோ..........இப்ப இருக்கிற இளந்தாரி ஐயர்மார் தங்கடை பத்துவயது  பிள்ளைக்கும் பூணூல் போட்டு அழகுபாத்திட்டினம்.....இப்பவே திருவிழாக்கள் பெரிய பூசையளிலை எல்லாம் சின்ன ஐயர்மார் வெள்ளோட்டம் விட வெளிக்கிட்டினம்.....மூலஸ்தானத்திலை பெரிய ஐய்யருக்கு பிஸியெண்டால்...........அந்தநேரம் வைரவருக்கு அர்ச்சனை செய்யிறவைக்கு சிமோல் ஐயர் எப்பவும் மணியோடை ரெடி. :D
 
 புலம்பெயர் நாடுகளில் ஐயர்மார் தொழிலை விருத்தி செய்துவிட்டார்கள் :icon_idea: ....  ஆனால் சிகைத்தொழில்தெரிந்தவர்கள் தூரம் போய்விட்டார்களாம். இது எப்பிடியிருக்கு???

 

 

நான் சொல்ல வந்தது அது அல்ல!
 
கோவிலுக்கு கும்பிட ஆக்கள் வந்தால் தானே, வருமானமும், ஐயரின் பூசையும்.
 
பிள்ளைகளுக்கு, சமய அறிவு இல்லாவிடில் எப்படி கோவிலுக்கு போகும்?
 

ஐயர் கொட்டாவி விட்டுப் போட்டு, கோவிலை இழுத்துப் பூட்ட வேண்டியது தான்.

 

உங்க லண்டனில, முக்கால்வாசிக் கோவில்கள், நடை பெறுவது இழுத்துப் பூட்டப்படிருந்த வேறு மத வழிபாட்டிடங்களிள் தான்.

 

இதுவே இந்த கோவில்களுக்கும் நடக்கும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் வீட்டில் இன்று ஓரா மீன் கறியும், சூவாப்பாரை மீன் பொரியலும். சரஸ்வதி பூசையில் இருந்து எதுவும் செய்வது இல்லை. ஆனாலும் பிள்ளைகள் தாம் கண்டிப்பாக படிப்பார்கள் என்று நம்புகின்றனர். எந்தவித ஆதாரமில்லாத இப்படியான விரதங்கள், பூசைகளை விட அவர்களுக்கு அந்த நம்பிக்கையை கொடுப்பதுதான் சிறந்த விடயம் என்று நம்புகின்றேன்.

 

இருக்க, ஒவ்வொரு வீடுகளிலும் சரஸ்வதி பூசை செய்த ஈழத் தமிழரின் தாயகத்தில் தான் ஆயிரக்கணக்கான பாடசாலைகள் அழிக்கப்பட்டும், சேதப்படுத்தப்பட்டும், கல்வி வசதிகள் மிக மோசமாக சிதைக்கப்பட்டும் கல்வி அறிவு வீதத்தில் மிகவும் மோசமான நிலைக்கு உள்ளாகி இருக்கின்றனர். சரஸ்வதியும் உதவவில்லை, அழிவுகளில் இருந்து காப்பாற்ற துர்க்கையும் துணியவில்லை. வெறுமனே புலம்பெயர்ந்தவர்களுடன் மட்டும் லக்ஷ்மி உறவு வைத்து இருக்கின்றார்.

 

நிழலி,
 

உங்கள் பகுத்தறிவுக் கருத்துகளை, குழந்தைகள் மீது, அதுவும், மச்சம் சாப்பிட்டோம் என்று statement விடும் அளவுக்கு வீம்பாக, திணிக்காதீர்கள்.

 

ஒவ்வொருவருக்கும் ஆன்மிக தேவை உள்ளது. அதை நீங்கள், மறுத்தால், தமது கருத்துகளை திணிப்பதற்க்கு வெளியில் பலர் உள்ளனர். இப்படி இருந்த பலரின் பிள்ளைகள், வேறு நம்பிக்கைகளினால் கவரப் பட்டு உள்ளனர். அப்போது உள்ளதும் போச்சடா நொள்ளைக் கண்ணா, நிலை தான்.
 
கனடாவில் இது அதிகமே. பிரான்சில், வேறு மதவாதிகளிடம் சிக்கி, அது குறித்து கடுமையாக ஆட்சேபம் தெரிவித்த சொந்த நிறை மாத அக்காவை, குத்தி கொலை செய்த தம்பியைனையும் கேள்விப் பட்டு உள்ளோமே.
 

இங்கிலாந்து GCSE பரீட்சையில் A* ஒன்றை இலகுவாகப் பெற, Religious Education பாடத்தில், எம்மவர்களே, இஸ்லாமிய பாடத்தினை தெரிவு செய்கின்றனர். ஏனெனில், கேள்வியும் அதற்கான பதிலும், இந்து மத கேள்விகள் போல் இல்லாது, ஒரு வரி தானாம். இலகுவானது என்கின்றனர்.

 

அப்பர் விலாவாரியாக பகுத்தறிவு பேச, பிள்ளை வேறு மதம் படித்து A* எடுக்கும் சில நிலைப்பாடு குறித்து என்ன சொல்ல முடியும்?

 

முள்ளி வாய்காலில் தெய்வம் உதவவில்லை என்கிறீர்கள். அதே தெய்வம் தான், போத்துகேயரின் ஆலய அழிப்பினையும்,சங்கிலியனின் வீழ்ச்சியையும், ஆங்கிலேயரிடம் இருந்து பண்டார வன்னியனையும், கட்டப் பொம்மனையும் காக்கவில்லையே!

 

அதே போத்துக்கேயர்கள், தமது சொந்த நாட்டினை, இழந்து, வரலாறில் சில காலம், கடல் கடந்த போர்த்துகேய முடி அரசு என, பிரேசில் காலனித்துவ பிரதேசத்தினை பிரகடனம் செய்து இருந்தார்கள். 

 

சில விடயங்கள் நடந்தால் தான், மனித வரலாறு அடுத்த நகர்வுக்கு தயாராகும் என்பது உலக நியதி.  முள்ளிவாய்கால் அவ்வாறான ஒன்று தான்.

 

ஹிட்லரின் யூத அழிப்பினையும் இதே முறையில் பார்க்கலாம். 14ம் நூற்றாண்டின் ஐரோப்பிய கொள்ளை நோய் பல மில்லியன் மக்களை பலி கொண்டதை, 18ம் நூற்றாண்டின், ஐரிஷ் பஞ்ச அவலத்தினை, சுனாமி அழிவினையும், முதலாம், இரண்டாம் யுத்தத்தினையும், இறைவன் தடுக்கவில்லை என சொல்ல முடியுமா?

 

அனுராதபுர, பொலநறுவை படையெடுப்பில் சோழர்களும் சிங்கள மக்கள் மீது பெரும் அழிவுகளை செய்தார்கள் என சொல்வோரும் உள்ளனர்.

 

இவை மனித வரலாறில் சகயம் போல் தெரிகிறது. 

 
மூன்று காலனித்துவ வாதிகளிடமும், குறிப்பாகக போர்த்துக்கேயரிடம், பாதுகாத்து, சமயத்தினை எம்மிடம் தந்துள்ள எமது முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல.
 
கடவுளிடம் அதிகமாக எதிர்பார்ப்பதும், கிடைக்காவிடில், பகுத்தறிவு பேசுவதும்......

'சில' மனித இயல்பு. (உங்களை தனிப் பட்ட ரீதியில் சொல்ல வில்லை)

 

நல்லது நடந்தாலும் நன்றி சொல்ல கோவிலுக்குப் போகிறோம், துன்பம் வந்தாலும் அதே கோவிலுக்கு போகிறோம்.

 

இந்த வழி இல்லாவிடில் இருப்பது, தண்ணிப் போத்தலும், போதைப் பொருட்களும் தான்.

 

எமது அடுத்த தலைமுறை அவ்வழியே செல்வது ஏற்புடையதா?

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.