Jump to content

இந்தியப் படை வருகையும் பனிரண்டு புலித்தலைவர்களின் மறைவும்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியப் படை வருகை

துட்டக்குரங்கினைச் சிட்டுக்குருவிக்குக்

கட்டிவைத்தே பெரும் சாதனையை

எட்டிவிட்டோமுயர் நோபல் பரிசெமக்(கு)

ஏற்புடைத்தாமென எண்ணினரால்

வெட்டிப் பிடுங்கிய வீறாப்பில் எங்களை

வீழ்த்திடலாமென்ற நோக்குடனே

துட்டப் படைகளை ஏவினர் ஈழம்

துயரடைந்தாள் எனில் சோர்வடையாள்

பாரதச் சூதர்கள் வானரசேனை

படுத்திய பாடுகள் ஒன்றிரண்டோ

நேரெதிர் கொண்ட வியாக்கிர சேனை

நிகழ்த்திய சாதனை ஒன்றிரண்டோ

ஆதரவற்ற தமிழினம் மீது

அமைதிப் படையெனும் போர்வையிலே

காதகர் செய்த பழிகளை மீட்பதில்

காண்பதென்ன அதை விட்டிடுவோம்

பன்னிரண்டு புலித்தலைவர்களின் மறைவு (வேறு)

ஆயுதந் தனைக்கொடுத்தே - அந்த

அமைதியைக் கெடுத்திடு;ம் படைகளிடம்

சேய்கள் தம் பணி முடித்தார் - சிலர்

திருமணம் புரிந்து தம் வாழ்வமைத்தார்

ஆயினும் இழி மனத்தோர் - அந்த

அருந்தவப் புதல்வரை பழி முடிக்க

ஆயிரம் சதி புரிந்தார் - அதில்

ஆறிரு வேங்கைகள் உயிர் கொடுத்தார்

வங்கத்துக் கடற் பரப்பில் - அந்த

வரிப்புலிக் குருளைகள்வருகையிலே

சிங்களக் கடற்படையைத் - தம்

சினேகிதரென நினைந்தருகில் வர

இங்கிதம் சிறிதுமிலார் - அந்த

இழி குணத்தோர் தங்கள் பழி முடிக்க

தங்கங்கள் தனைப் பிடித்தார் - தாய்

தமிழவள் கலங்கிட விலங்குமிட்டார்

காடையர் தலைவனவன் - எங்கள்

கண்மணிகள் தனைக் கடத்தித் தன்றன்

நாடதன் தலை நகரில் வதை

நடத்திடு நான்காம் மாடியெனும்

கூடத்தில் கொடுமை செய்ய மனம்

குறித்து விட்டான் இதைக் குறிப்பறிந்தே

தேடினுங் கிடைக்காத - எங்கள்

தேயத்துப் பன்னிரு வன்னியரும்

மாய்வதில் உறுதிகொண்டார் - நச்சு

மருந்தினை அருந்தித்தம் உயிர் துறந்தார்

சேய்களை இழந்து நின்றாள் - அன்னை

திரும்பவும் தலைமுடி அவிழ்த்து நின்றாள்

நாய்தனை நிச்சயித்துத் - தன்றன்

நலன் நிறைவாழ்வுக்குத் தீங்கு செய்த

பேயெனப் பாரதத்தை - அந்தப்

பேதை தன் மனதினில் நினைந்தழுதாள்

ஈழத்தாய் குமுறல் (வேறு)

 

பாதகியே துர்க்குணத்துப்

பார் அதம் செய் நச்சு முலைப்

பூதகியே நீ திரும்பிப்போ - நிலை

ஏதுமற்று வாடுமெமை

ஏய்த்து விட  வந்திருக்கும்

காதகியே நீ திரும்பிப் போ

ஆதரவற்றே யுலகில்

அன்னையென்று உன்னையெண்ண

தீது செய்தாய் நீ திரும்பிப்போ - உயர்

நீதி செய்வாயென்றிருக்க

நீசரோடு கட்டிவைக்கச்

சூது செய்தாய் நீ திரும்பிப்போ

(வேறு)

உள்ளங் குமுறுதடா - மக்காள்

உடன் செயல் படுவீர்

கள்ளனைக் கட்டு என்றே - என்னைக்

கண்டித்துச் சொல்லுகிறார்

துள்ளித் திரிந்தெனது - மக்காள்

சுதந்திர வாழ்வை

அள்ளி அனுபவிக்க - இவர்

அனுமதியாராம்

கால் கட்டுப் போடுகிறார் - என்றன்

கன்னியழிப் பேனோ

ஆர் கெட்டுப் போனாலும் - நான்

அசைந்திடுவேனோ

சீர் கெட்டு வாழ்விழந்த - அந்தச்

சிறுக்கி மூத்தவள் போல்

பேர் கெட்டுப் போவேனோ - என்

பெற்றி மறப்பேனோ

அப்பன் எனக்களித்த - என்றன்

அரிய சொத்துக்களை

குப்பையில் போடுவனோ - பெருங்

குழியில் வீழ்வேனோ

துப்பிட ஊர் உலகம் - தன்றன்

தூய்மையைத் தானிழந்தே - அவள்

வைப்பாட்டியானது போல்

என்றன் வாழ்வை இழப்பேனோ

துடித்து வாழுகிறார் - என்றன்

சுவாலைக் கண்மணிகள்

நடித்து வாழுகிறார் - அந்த

நர்த்தகியின் புதல்வர்

இடித்து எம்மரபை - அவர்

இங்கிலீஸ் பேசுகிறார்

படித்தும் என் புதல்வர் - தங்கள்

பாசை மறக்கவில்லை

மண்ணை இழந்து விட்டால் - சுய

மாண்பெனக் குண்டாமோ

கண்ணைக் கெடுத்து விட்டே - நான்

காட்சி வரைவதுவோ

பெண்ணைக் கொடுத்து விட்டால் - தம்

பிரச்சினை தீர்ந்ததென்றே

எண்ணினரோ மக்காள் - நாம்

இளித்த வாயர்களோ

என்று துடித்ததடா - நம்

ஈழத்து அன்னையின் வாய்

கன்றெனத் துள்ளி வந்தான் - அந்தக்

கன்னித் தமிழ்ப் புதல்வன்

கொன்றிடும் போர் முனைப்பே - அன்னை

கொள்கையென்றே நினைந்தோர்

அன்று உணர்ந்தனராம் - அவள்

அகிம்சைத்தத்துவத்தை

 

திலீபனின் உண்ணா விரதம்

(வேறு)

தீயிலுடலை எரிக்கவா - கொடுந்

தேளெனைக் கொட்டச் சிரிக்கவா

காயும் வயிற்றில் மரிக்கவா - என்றன்

கண்களைக் குத்திக் கெடுக்கவா

தாயுன்றன் வேதனை தீர்க்கவே - எதும்

தாங்குவன் நானெனக் கூறியே

பாயும் புலி எம் திலீபனும் - பெரும்

பட்டினிப் போரைத் தொடங்கவே

இந்தியச் சூதர்கள் இஃதினை

எதிர்பார்த்திருக்காத நிலைமையால் - தங்கள்;

முந்தைய வாக்குறுதி தனை - விட்டு

மோசங்கள் செய்யத் தொடங்கினர்

சிந்தி இரத்தத்தினால் செய்த - எங்கள்

தேச விடுதலைப் போரினைத் - தங்கள்

சொந்த நலன்களைப் பேணவே

சொதப்பிடலாமென எண்ணினர்

நாட்கள் கடந்தனவாயினும் - எங்கள்

நன்மைகளுக் கொரு காப்பிலை

ஆட்களைக் கொண்டு வந்தெம் நிலம் - தனில்

ஆயிரமாய்க் குடியேற்றலும்

சாக்குச் சமாதானம் கூறலும்

சரிவரும் யாவுமென்றெத்தலும் - எனப்

போக்கினர் காலம் திலீபனோ - தன்றன்

பொன்னுடல் தேயத் தொடங்கினான்

மாய்வதொன்றே தன் கடன் இனி - என்று

மன்னவன் மண்ணின் விடுதலைத்

தீயை விழுங்கிக் கிடந்தனன் - ஈழ

தேசம் அழுது துடித்தனள்

பாயும் புலி பசும் புல்லினை - தன்றன்

பட்டினி போக்கப் புசிக்குமோ - அட

வாயில் வயிற்றில் விடுதலைப் பசி

வாட்டத் துடித்தது அவனுயிர்

காந்தி பிறந்த பெருநிலம் - புத்தன்

கருணை உரைத்த உயர் நிலம் - பச்

சோந்திகளின் புதரானதால் - எங்கள்

சோகத்தை யாரும் மதித்திலர்

ஏந்தல் திலீபன் இறந்திடில் - எமக்(கு)

என்ன எனத் திமிர் கொண்டுமே

சேர்ந்து இலங்கை அரசுடன் - சதி

செய்தனர் எம்மை ஒடுக்கவே

நீருமருந்த மறுத்துமே - கொடு

நீசர்கள் நெஞ்சிலுறுத்தவே - இந்தப்

பாரினில் பட்டினிப் போர் செய்த - எங்கள்

பாலகன் தன்னுயிர் நீத்தனன்

ஊரெங்கும் வேதனை சூழ்ந்தது - கொடி

யோரின் சொரூபம் தெரிந்தது - நெஞ்சில்

ஈரமில்லாதவரோடினிக் - கதை

ஏதென ஈழம் தெளிந்தனள்

அன்னை பூபதி

இன்னுயிர் ஈந்த திலீபனின் - பின்

எதற்கினி வாழ்வெனக் கென்றுமே

தன்னுயிர் நீத்திடு நோக்குடன் - ஒரு

தாய் எழுந்தாள் அந்த நாளிலே

அன்னை அவள் பெயர் பூபதி - தன்

ஐம்பத்தியாறு வயதிலே

உன்னி விடுதலைக் காகவே - தன்

உணவை மறுத்தனள் சாகவே

பூபதி வாழ்வும் முடிந்தது - ஈழ

பூமியிற் சோகம் கவிந்தது

சேய் பதினாயிரம் சேர்ந்திட - புலிச்

சேனை பெருகிச் சிறந்தது

வாபதில் சொல்கிறோம் என்று - இந்திய

வானர சேனையிற் பாய்ந்தது

தாயவள் காளி விழித்தனள் - இந்தத்

தாரணி ஆடச் சிரித்தனள்.

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்று எமக்கு உதவுவது போல எம்மை அழிக்க வந்த இ(ஹி)ந்திய வல்லாதிக்க வெறியர்களை எமது போராளிகள் தங்கள் உயிர் தந்து அடையாளம் காட்டினார்கள். இன்று அதே இந்திய வெறியர்களோடு எம்மவர்கள் விருந்துண்டு மகிழ்கின்றனர்..! இன்று விருந்துண்பவர்கள் அன்றும் அதையே செய்தனர். காலம் தர்மத்திற்கு அளிக்கும் சத்திய சோதனையில்.. அது இன்று மீண்டும் வீழ்ந்து கிடக்கிறது..! :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகிர்வுக்கு

 

மறக்க முடியுமா?

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ். பல்கலைக்கழகத்திலும் அன்னை பூபதியின் நினைவேந்தல் April 20, 2024     இந்தியப் படைகளின் அத்துமீறிய செயற்பாடுகளிற்கு எதிராக உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நினை வேந்தல் நிகழ்வுகளின் போது பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் பங்கு கொண்டு அன்னை பூபதிக்கு தங்கள் புகழ் வணக்கங்களைச் செலுத்தியிருந்தனர்.   https://www.ilakku.org/யாழ்-பல்கலைக்கழகத்திலும/  
    • இல்லை, மீரா. தாம் என்ன செய்கிறோம் என்பதை நன்கு தெரிந்தே செய்கிறார்கள். ஏனென்றால், அதுதான் அவர்களின் தேவை. தேசியமும், விடுதலையும், சுய நிர்ணயமும், அடையாளமும் இல்லாது போகவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஆகவே, அவர்கள் குறித்து உங்கள் நேரத்தையும், சக்தியையும் செலவிடாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்துகொண்டிருங்கள். 
    • வடையை ரூ.800க்கு விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு, உளுந்து வடை மற்றும் தேநீரை 800 ரூபாய்க்கு விற்பனை செய்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  குறித்த சந்தேகநபரை, களுத்துறை நீதவான் நீதிமன்றில்  இன்று (19) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி வெளிநாட்டு சுற்றூலாப் பயணிக்கு சந்தேகநபர், உளுந்து வடை மற்றும் தேநீரை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்டிருந்தார்.    அது தொடர்பில் சுற்றுலாப் பயணி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அவரிடம் சந்தேகநபர் 800 ரூபாயை பெற்றுக்கொண்டுள்ளார்.  இதனையடுத்து,  அதிகூடிய விலைக்கு வடையை விற்பனை செய்தவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த ஓட்டோ சாரதி என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.    பொருள் விலை காட்சிப்படுத்தப்படாமை, பற்றுச்சீட்டு வழங்கப்படாமை மற்றும் நுகர்வோரை ஏமாற்றியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் அவருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையானால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.    இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொத்துரொட்டியை 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவரும் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    https://www.tamilmirror.lk/செய்திகள்/வடையை-ரூ-800க்கு-விற்றவர்-கைது/175-336087
    • அன்புள்ள ஐயா தில்லை  காதலுக்கு இல்லை ஐயா எல்லை  கணனிக் காதலர்க்கு  நீங்கள் ஒரு தொல்லை ........!  😂 நல்லாயிருக்கு நகைச்சுவை .......தொடருங்கள்.......!  👍  
    • என்ன‌ பெரிய‌ப்பா 10பேர் இன்னும் வ‌ர‌ வில்லை என்று ஆத‌ங்க‌ ப‌ட்டினங்க‌ள் இப்ப‌ மொத்த‌ம் 17பேர் க‌ல‌ந்து இருக்கின‌ம்......................உற‌வுக‌ள் நீங்க‌ள் கொடுத்த‌ தேதிக்கு ச‌ரியா க‌ல‌ந்து கொண்டு விட்டின‌ம்.................இன்னொரு உற‌வு தானும் தானும் க‌ல‌ந்து கொள்ளுகிறேன் போட்டியில் என்று சொன்னார் ஆனால் அவ‌ரை சிறு நாட்கள் யாழில் காண‌ வில்லை இந்த‌ முறை நான் தான் க‌ட‌சி இட‌த்தை பிடிப்பேன் ஒரு க‌தைக்கு ந‌ம்ம‌ட‌ அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை முத‌ல் இட‌த்துக்கு வ‌ந்தால் என்னை தூக்கி போட்டு மிதிச்சு போடுவார் ஹா ஹா😂😁🤣....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.