Jump to content

உன் மாமி காத்து இருக்கா என் அம்மாவா .!


Recommended Posts

என் வீட்டுக்கு வா

வாசலில் கோலம் இல்லை

கண்ணாடியில் பொட்டு இல்லை

காலையில் கால்கொலுசின் ஓசை இல்லை

என் வீட்டுக்கு வா ...

 

நிலா முற்றம் வெற்றிடமா இருக்கு

முற்றத்து மாமர ஊஞ்சல் ஆடாது நிக்கு

குயில் இப்பொழுது எல்லாம் கூவுவது இல்லை

ஒரு கிளிமட்டும் கிளையில் சோகமாய்

என் வீட்டுக்கு வா ...

 

அம்மா எப்பொழுதும் விரதம் ..

கோயிலில் நித்தம் தீபம் ஏற்றியபடி

பூசுமஞ்சள் வாங்கி வைத்து இருக்குறா

சோப்பில் வாசனை கூடியதும் இருக்கு

உன் வரவுக்காய் அடி என்னவளே

என்னோடு வா என் வீட்டுக்கு பெண்ணே ..

 

சீயக்காய் அரைத்து முழுகி உன்

தலைவாரி தூபம் காட்டி பின்னல் இட்டு

அதில் மல்லிகை வைத்து அழகு பார்க்க

உன் மாமி காத்து இருக்கா என் அம்மாவா

என்னோடா வா என் வீட்டுக்கு காதலியே .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னாச்சு அஞ்சயன்

 

அடுத்ததா???

இது தாங்காது சொல்லிப்போட்டன்.......... :D

 

தொடருங்கள்.....

தெளிவில்லாததால்  வாழ்த்துச்சொல்லமுடியவில்லை :lol:

Link to comment
Share on other sites

என்னாச்சு அஞ்சயன்

 

அடுத்ததா???

இது தாங்காது சொல்லிப்போட்டன்.......... :D

 

தொடருங்கள்.....

தெளிவில்லாததால்  வாழ்த்துச்சொல்லமுடியவில்லை :lol:

 

தெளிவா இருந்தா குடும்பம் பிரிச்சிடும் இப்படி இருப்பது நல்லம் :D

 

சும்மா ஒரு பழைய நினைவுக்கு போய்வந்தம் ஆக்கும் :)

 

நன்றி வரவுக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  அஞ்சரன் என்ன விளையாட்டு இது, எழுபதுக்கு முற்பட்ட காலத்து நினைவுகளில் மூழ்கியுள்ளீர்கள் , எழுப்ப மனமில்லை!! :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 நன்றாக வித்தியாசமாக உள்ளது

Link to comment
Share on other sites

சீயக்காய் அரைத்து முழுகி உன்

தலைவாரி தூபம் காட்டி பின்னல் இட்டு

அதில் மல்லிகை வைத்து அழகு பார்க்க

உன் மாமி காத்து இருக்கா என் அம்மாவா

என்னோடா வா என் வீட்டுக்கு காதலியே . ////  அப்பவும் சரி இப்பவும்சரி மாமியார் மருமோளுக்கு சீயாக்காய் அரைச்சு முழுக்காட்டுறது நடைமுறையிலை செரியான கஸ்டம் தம்பி அஞ்சரன்  :D  :D .  ஏதோ ஆசைப்படுறீர் , விக்கினம் இல்லாமல் நல்லாய்  நடக்க வாழ்த்துக்கள் :lol: :lol: .

 

Link to comment
Share on other sites

சீயக்காய் அரைத்து முழுகி உன்

தலைவாரி தூபம் காட்டி பின்னல் இட்டு

அதில் மல்லிகை வைத்து அழகு பார்க்க

உன் மாமி காத்து இருக்கா என் அம்மாவா

என்னோடா வா என் வீட்டுக்கு காதலியே . ////  அப்பவும் சரி இப்பவும்சரி மாமியார் மருமோளுக்கு சீயாக்காய் அரைச்சு முழுக்காட்டுறது நடைமுறையிலை செரியான கஸ்டம் தம்பி அஞ்சரன்  :D  :D .  ஏதோ ஆசைப்படுறீர் , விக்கினம் இல்லாமல் நல்லாய்  நடக்க வாழ்த்துக்கள் :lol: :lol: .

 

இப்படி நடக்கணும் என்கிற எதிர்பார்ப்பு அண்ணே :D

நன்றி வரவுக்கு கோமகன் .

Link to comment
Share on other sites

  அஞ்சரன் என்ன விளையாட்டு இது, எழுபதுக்கு முற்பட்ட காலத்து நினைவுகளில் மூழ்கியுள்ளீர்கள் , எழுப்ப மனமில்லை!! :D  :D

 

எங்க வயதுக்குதனே யோசிக்கலாம் சுவி :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழில் பெரும்பாலும் சொந்தக்காரப் பெண்ணைத்தானே மருமகள் ஆக்கிறவை அதனால் மாமிமார் 'அம்மா போல அன்பு காட்டுவினம்!

 

 

இனிய வரிகள் வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

யாழில் பெரும்பாலும் சொந்தக்காரப் பெண்ணைத்தானே மருமகள் ஆக்கிறவை அதனால் மாமிமார் 'அம்மா போல அன்பு காட்டுவினம்!

 

 

இனிய வரிகள் வாழ்த்துகள்

 

பிறந்தவுடன் உனக்குத்தான் என்று சொல்லி வேற வைப்பினம் பாருங்கோ :D

 

நன்றி வரவுக்கு தங்கை .!

Link to comment
Share on other sites

 நன்றாக வித்தியாசமாக உள்ளது

 

நன்றி அக்கா வரவுக்கு :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.