Jump to content

புலம் பெயர் தமிழர்கள் முதலீடுகளை மேற்கொள்ள வட மாகாண சபை ஆவண செய்யவேண்டும் - சந்திரநேரு


Recommended Posts

அதேவேளை அங்கு முதலீடு செய்பவர்கள் இலாபமாக வருவதை மேலும் அங்கு முதலீடு செய்து தாயகப் பொருளாதாரத்தை அதிகரிக்கச் செய்வதை நோக்கமாகக் கொள்ளவேண்டும். அதைவிடுத்து வளங்களையும், உழைப்பையும் சுரண்டிக் கொழுக்கலாம் என்பதை நோக்கமாகக் கொள்ளக்கூடாது என்பதுதான் எனது கருத்து.

 

 

குறிப்பாக உழைப்பை சுரண்டும் எனும் போது ஒண்டை சொல்ல வேண்டும்... 

 

பொருளின் விலையை விவசாயிக்களும்  உற்பத்தியாளரும் தீர்மானிக்க  உரிமையை  கூட்டமைப்பு பெற்று தரவேண்டும்...  இல்லை எண்டால் பொருட்களுக்கான விலை வருடாந்த  தீர்மானம்  மாகானசபை அமைச்சினூடாக தீர்மானிக்க பட வேண்டும்... 

 

ஏன் சொல்லுறன் எண்டால் கொழும்பில் வைத்து ஏற்றுமதி செய்யும் சிங்கள ,முஸ்லீம்  , தமிழ் முதலாளிகளுக்கு இந்த மக்கள் அறாவிலையில் பொருட்களை விற்கும் நிலை வரக்கூடாது... 

Link to comment
Share on other sites

  • Replies 132
  • Created
  • Last Reply

நல்ல வேலை செய்யுறீங்கள் நண்றி... !  

 

இதிலை புலம்பெயந்தவைக்கு உந்த விவசாயத்திலை முதலீடு நேரடியாக இங்கை இருந்து செய்ய நடைமுறை சிக்கல் கனக்க இருக்கு...   அதோடை நேரடியாக கண்காணிக்க வேண்டிய  தேவையும் இருக்கு...  உழைப்பை 100% போட்டால் தான் விவசாயம் கை குடுக்கும் எண்டு நம்புறன்... 

 

எனது மாமனார் (மனைவியின் அப்பா) ஊரில் ஒரு விவசாயி  என்பதால் இதை சொல்கிறேன்...   கூலிக்கு ஆள் பிடிப்பது கூட கடினமான வீடயம் நாளுக்கு 1000 ரூபாவுக்கு கூட யாரும் அறுவடை செய்ய வரவில்லை எண்றார்... ! 

 

அறுவடை செய்யும் இயந்திரங்களுக்கு அங்கு தட்டுப்பாடு...  அதற்க்கு கூட காத்திருந்து மழை வரக்கூடாது எண்று நேர்த்தி வைக்கும் நிலையிலை தான்  தாயகம் இருக்கிறது... 

 

ஆகவே குறை நினைக்காமல்  நேரடியாக 100% கண்காணிக்க தேவை இல்லாத முதலீடுகளை தாங்கோ...   

 

மாடு வழங்கோ :

 

புல்லுக்கு மெசின் இருக்கு : குஜராத்தில் உள்ள கனேடிய நிறுவந்த்திலிர்ந்து அதை வாங்கலாம்..

 

மெசினின் மாதிரி வீடியோ :

 

Link to comment
Share on other sites

மாடு வழங்கோ :

 

புல்லுக்கு மெசின் இருக்கு : குஜராத்தில் உள்ள கனேடிய நிறுவந்த்திலிர்ந்து அதை வாங்கலாம்..

 

மெசினின் மாதிரி வீடியோ :

 

நல்ல யோசினை... 

 

மாடு வாங்குறது சரி வராது...  ஆனால் மாட்டுக்கு புல்லு மெசின் வாங்கி புல்லை தயாரித்து குடுக்கலாம்.. 

 

இந்தியாவில் இருந்து இறக்கப்படும் இயந்திரங்களுக்கு அண்மையில் இருந்து   வரி அதிகம் எண்டுறார்களே...??   உண்மையா...?? 

Link to comment
Share on other sites

நல்ல யோசினை... 

 

மாடு வாங்குறது சரி வராது...  ஆனால் மாட்டுக்கு புல்லு மெசின் வாங்கி புல்லை தயாரித்து குடுக்கலாம்.. 

 

இந்தியாவில் இருந்து இறக்கப்படும் இயந்திரங்களுக்கு அண்மையில் இருந்து   வரி அதிகம் எண்டுறார்களே...??   உண்மையா...?? 

 

விவசாயப் பொருட்கள் தயாரிப்பு பொருட்களுக்கு வரி விலக்குகள் உண்டு....முயற்சி எடுங்கள் எல்லாத்தையும் வாழைப்பழம் போல் உரிச்சித் தரமுடியாது...இவ் விடயங்களை நான் சேகரிக்க எவ்வளவு கஸ்டப்பட்டன்....இருந்தாலும் மக்கள் நலன் கருதி சில விடயங்களைச் சொல்றன்... நீங்களும் முயற்சி எடுங்க.. ... நான் ஐரோப்பாவுக்கு வந்து 5-6 மாதம் தான் ...ஆனால் ஒரு புலம்பெயர் தமிழரும் எனக்கு உதவி செய்யவில்லை... ஆனால் நான் வெல்லுவன் எண்டது மட்டும் நிச்சயம்..

Link to comment
Share on other sites

எனது நண்பர் ஒருவர் கொன்கிரிட் போஸ்ட்  செய்யும் கொம்பனியொன்று புலோலியில்யுத்தம் முடிந்த கையோடையே போய் ஆரம்பித்தார் .இயந்திரங்கள் சீனாவில் இருந்து இறக்கி ஆரம்பித்தார் ,கனடா போல ரைவோல் இல் வீடு கட்டும் வேறு திட்டம் இருக்கு என்றார் .அண்மையில் தொடர்பு கொள்ளவில்லை என்ன நடக்குதோ தெரியாது .

Link to comment
Share on other sites

pullimachine.png

25 ஏக்கரில் விளையும் புல்லை 30 m * 20 m * 10 m இடவசதியில் தயாரிக்க முடியும்... தேவையானவர்கள் என்னை தொடர்புகொள்ளுங்கள் எடுத்துத் தாரன் ஆனால் கட்டாயம் ஒரு கண்டிசன் ..வேலைவாய்ப்பு மாவீரர் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டும்தான்...

Link to comment
Share on other sites

 

25 ஏக்கரில் விளையும் புல்லை 30 m * 20 m * 10 m இடவசதியில் தயாரிக்க முடியும்... தேவையானவர்கள் என்னை தொடர்புகொள்ளுங்கள் எடுத்துத் தாரன் ஆனால் கட்டாயம் ஒரு கண்டிசன் ..வேலைவாய்ப்பு மாவீரர் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டும்தான்...

 

 

வங்கியிலை கடன் எடுத்து ஏதாவது செய்யும் எண்ணம் இருக்கு...  !  ஏற்கனவே எடுத்த கடன் கொஞ்சம் இருப்பதால்  என்னால் இப்போ எடுக்க முடியவில்லை...   ஒரு ஆறு மாதம் களித்து  மீண்டும் முயற்சி செய்து பார்க்க வேணும்... 

 

நண்பர்களை ஊக்குவிக்கும் எண்ணத்தில் தான் உங்களை கேட்டனான்...  

 

தெரியாத விடயங்களை தெரிஞ்சவர்களிடம் கேக்கிறதிலை எனக்கு ஆர்வ கோளாறு கொஞ்சம் அதிகம்...  குறை நினைக்காதேங்கோ...

 

 வேறை ஏதும் சந்தேகம் வந்தாலும் கேக்க கட்டாயம் வருவன்...  

 

( நான் பிரித்தானியாவில் இருக்கிறன்...  நீங்களும் இங்கு இருந்தால்  தேவையானதை கேழுங்கள் நிச்சயமாக உதவி செய்ய முயல்கிறன்.. :D )

Link to comment
Share on other sites

வங்கியிலை கடன் எடுத்து ஏதாவது செய்யும் எண்ணம் இருக்கு...  !  ஏற்கனவே எடுத்த கடன் கொஞ்சம் இருப்பதால்  என்னால் இப்போ எடுக்க முடியவில்லை...   ஒரு ஆறு மாதம் களித்து  மீண்டும் முயற்சி செய்து பார்க்க வேணும்... 

 

நண்பர்களை ஊக்குவிக்கும் எண்ணத்தில் தான் உங்களை கேட்டனான்...  

 

தெரியாத விடயங்களை தெரிஞ்சவர்களிடம் கேக்கிறதிலை எனக்கு ஆர்வ கோளாறு கொஞ்சம் அதிகம்...  குறை நினைக்காதேங்கோ...

 

 வேறை ஏதும் சந்தேகம் வந்தாலும் கேக்க கட்டாயம் வருவன்...  

 

என்றைக்கும் நான் உதவி செய்ய தயாராக இருக்கன்.. தொடர்புகொள்ளுங்கள்... ஒரு புரட்சி செய்வோம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்றைக்கும் நான் உதவி செய்ய தயாராக இருக்கன்.. தொடர்புகொள்ளுங்கள்... ஒரு புரட்சி செய்வோம்...

 

தொடர்ந்து இங்கு பதியுங்கள்.

நிச்சயம் நாலு பேரின் கண்ணில் படும்

நல்லது நடக்கும்

என்னால் ஆனவரை எனது பக்கம்முயற்சிப்பேன்...

Link to comment
Share on other sites

ostrich_fam.jpg

 

 

தென்னாபிரிக்காவில் இதை பசுப்பறவை (கவ் பேர்ட் ) என்றுதான் அழைக்கின்றனர்.அந்தளவுக்கு இதன் பயன் அதிகமானது. ஆனால் பண்டய நமது தமிழ் இலக்கியங்கள் காரப் பசுப்பறவை என்றே இத்தீக்கோழியை குறிப்பிடுகின்றன.பசு ஒரு குறிப்பிட்ட காலத்துக்குத்தான் பால் தரும்.ஆனால் காரப்பசு என்பது என்றுமே நாம் கேட்டதையெல்லாம் சுரந்து கொடுக்கக் கூடியது. யாழிம் காலநிலை,வெப்பசுவாத்தியம் என்பன தீக்கோழிக்கு மிக மிக பொருத்தமானதாகும்.ஒரு சோடிப் பறவைக்கு கால் ஏக்கர் நிலம் தேவை.பசு வருடத்திற்கு ஒரு கன்றுக்குட்டியைத்தான் தரும். ஆனால் தீக்கோழி வருடத்திற்கு60 முட்டையிடும். இதன் குஞ்சுகள் 12 மாதத்தில் வளர்ச்சி அடைவது மட்டுமல்லாமல் சாதாரண எமது புல்லே இதற்கு உணவாக உபயோகிக்கலாம்.

இதன் முட்டையில் கொழுப்புச்சத்து கிடையவே கிடையாது.இதன் இறச்சியிலும் கொழுப்பு குறைவாக கிடைப்பதுடன் உலக மார்கட்டில் மிக அதிக விலையுள்ள இறச்சியும் இதுவே.இதன் தோலில் இருந்து உடைகள்,சப்பாத்துக்கள்,பைகள் எனபனவும் முட்டைக் கோதுகள் ஆபரணங்களாகவும், முட்டைகள் அலங்காரப் பொருளாகவும் உலக சந்தையில் வலம் வருகின்றது.

Link to comment
Share on other sites

ostrich_fam.jpg

 

 

தென்னாபிரிக்காவில் இதை பசுப்பறவை (கவ் பேர்ட் ) என்றுதான் அழைக்கின்றனர்.அந்தளவுக்கு இதன் பயன் அதிகமானது. ஆனால் பண்டய நமது தமிழ் இலக்கியங்கள் காரப் பசுப்பறவை என்றே இத்தீக்கோழியை குறிப்பிடுகின்றன.பசு ஒரு குறிப்பிட்ட காலத்துக்குத்தான் பால் தரும்.ஆனால் காரப்பசு என்பது என்றுமே நாம் கேட்டதையெல்லாம் சுரந்து கொடுக்கக் கூடியது. யாழிம் காலநிலை,வெப்பசுவாத்தியம் என்பன தீக்கோழிக்கு மிக மிக பொருத்தமானதாகும்.ஒரு சோடிப் பறவைக்கு கால் ஏக்கர் நிலம் தேவை.பசு வருடத்திற்கு ஒரு கன்றுக்குட்டியைத்தான் தரும். ஆனால் தீக்கோழி வருடத்திற்கு60 முட்டையிடும். இதன் குஞ்சுகள் 12 மாதத்தில் வளர்ச்சி அடைவது மட்டுமல்லாமல் சாதாரண எமது புல்லே இதற்கு உணவாக உபயோகிக்கலாம்.

இதன் முட்டையில் கொழுப்புச்சத்து கிடையவே கிடையாது.இதன் இறச்சியிலும் கொழுப்பு குறைவாக கிடைப்பதுடன் உலக மார்கட்டில் மிக அதிக விலையுள்ள இறச்சியும் இதுவே.இதன் தோலில் இருந்து உடைகள்,சப்பாத்துக்கள்,பைகள் எனபனவும் முட்டைக் கோதுகள் ஆபரணங்களாகவும், முட்டைகள் அலங்காரப் பொருளாகவும் உலக சந்தையில் வலம் வருகின்றது.

 

சந்தணக் குச்சு தயாரித்து ஊருக்குள் விற்கலாம்.அதனூடாக வேலைவாய்ப்பை உருவாக்கலாம்..(நம்க்கு இலாபம் இல்லாட்டியும் 4 குடும்பம் வாழும்..)... அம்பாரை திருக்கோயிலில் பலர் சத்தமில்லாமல் செய்தி கொண்டு இருக்கிறார்கள்....கொழும்பில் உள்ள கீழ்வரும் முகவரிக்கு சென்றால் அவர்களே நிறைய வழிகாட்டுவார்கள்...

 

தேவையான பொருட்கள் :

பட்டத்தூள் : 1 மடங்கு (5கிலோ)

கரித்தூள் : 2 மடங்கு (10 கிலோ)

பீ.பீ ஒயில் : 2 மடங்கு

மணம் : 1 மடங்கு

குச்சி-  தேவையான அளவு

நயிஸ் தூள் : 5 கிலோ

பொலித்தீன் டியூப் - 10

------------------------------

------------------------------

பொருட்கள் கிடைக்கும் இடம் :

S.H Colour House

27, Dam street,

Colombo-12

Pettah

A.c No : 1276737 (Bank of Ceylon)

Tel no : 011-2422910

Mob: 078-5100725,

Link to comment
Share on other sites

 

சந்தணக் குச்சு தயாரித்து ஊருக்குள் விற்கலாம்.அதனூடாக வேலைவாய்ப்பை உருவாக்கலாம்..(நம்க்கு இலாபம் இல்லாட்டியும் 4 குடும்பம் வாழும்..)... அம்பாரை திருக்கோயிலில் பலர் சத்தமில்லாமல் செய்தி கொண்டு இருக்கிறார்கள்....கொழும்பில் உள்ள கீழ்வரும் முகவரிக்கு சென்றால் அவர்களே நிறைய வழிகாட்டுவார்கள்...

 

தேவையான பொருட்கள் :

பட்டத்தூள் : 1 மடங்கு (5கிலோ)

கரித்தூள் : 2 மடங்கு (10 கிலோ)

பீ.பீ ஒயில் : 2 மடங்கு

மணம் : 1 மடங்கு

குச்சி-  தேவையான அளவு

நயிஸ் தூள் : 5 கிலோ

பொலித்தீன் டியூப் - 10

------------------------------

------------------------------

பொருட்கள் கிடைக்கும் இடம் :

S.H Colour House

27, Dam street,

Colombo-12

Pettah

A.c No : 1276737 (Bank of Ceylon)

Tel no : 011-2422910

Mob: 078-5100725,

 

எல்லோருமே வீடுகளில் செய்யத்தக்கது. பிரத்தியேகமாக, இதை போன்றவையை கூட்டமைப்பு விதைவைப் பெண்களுக்கு ஏற்றபடி முன்னேற்ற வேண்டும்.

Link to comment
Share on other sites

விவாதம் அருமையான திசையில் போய்கொண்டிருக்கிறது. உறவுகளே, நண்பர்கள் தொடருங்கள். இந்த மாதிரி புயத்தல் கதைக்களுக்கு இனி இந்த திரியில் நேரத்தை வீணடிக்க தேவை இல்லை. 

 

 

தமிழரசுக் கட்சிக்கு வால் பிடிக்கும் மல்லை ஐயாவுக்கு வால்மாட்டு விவாதமாகத் தெரிவதில் வியப்பில்லை.

 

யாழில் எனது கருத்துக்களை வாசித்து என்னைப்பற்றி விளங்கிக்கொண்டது இவ்வளவும் தானா?  இப்படித்தனா புத்தகங்கள் எல்லாவற்றையும்  ஒடி ஒடி வசித்த பின்னர்  அவற்றையும் விள்ங்கி வைத்திருக்கும் இலட்சணம். பரிதாபம்! 

முதலீடு செய்வது/செய்யாமல் விடுவது ஒவ்வொருவரது கொள்கைகளையும் தேவைகளையும் பொறுத்தது. போர் முடிந்துவிட்டது. இனி தலைவரும் வரமாட்டார், பொட்டரும் வரமாட்டார் என்று விளங்கியவர்கள் சிங்களவர்களும், முஸ்லிம்களும் வடக்கு கிழக்கில் முதலீடு செய்து வளங்களையும் உழைப்பையும் சுரண்டுவதைக் இயலுமான அளவு தடுக்க புலம்பெயர் நாடுகளில் இருந்து முதலீடு செய்கின்றார்கள். இவை பொருளாதாரத்தையும், வேலை வாய்ப்பையும் அதிகரித்து மக்கள் முன்னேறினால் நல்லதுதான்.

 

நீங்கள் தமிழ்ழீழத்தில் முதலிட விரும்பாதது உங்களால் லாபத்தை கண்டால் பாவம் பச்சாதாபம் பார்த்து விட்டுக்கொடுக்க முடியாமல் விடும் என்பதலா?

அதேவேளை அங்கு முதலீடு செய்பவர்கள் இலாபமாக வருவதை மேலும் அங்கு முதலீடு செய்து தாயகப் பொருளாதாரத்தை அதிகரிக்கச் செய்வதை நோக்கமாகக் கொள்ளவேண்டும். அதைவிடுத்து வளங்களையும், உழைப்பையும் சுரண்டிக் கொழுக்கலாம் என்பதை நோக்கமாகக் கொள்ளக்கூடாது என்பதுதான் எனது கருத்து.

 

உற்சாகம் கொடுக்காத ஒன்றில் வெறும் உபயோகம் இல்லாத வறட்டு தத்துவங்களை பேசிக்கொண்டிருக்க புலம் பெயர் மக்கள் முதலிடுவார்களா? புலம் பெயர் மக்கள் முதலிடும்போது லாபத்தை  வெளியே கொண்டுவரக்கூடாது என்றால் இது மற்றவர்களும் பின்பற்றப்படுமா? 50% கமிசன் அடிப்பவர்கள் தொடர்ந்து அடிக்கலாமா? அதை பற்றி ஒரு சொல்லு எழுத இந்த திரி பொருத்தம் இல்லை, ஆனால் புலம் பெயர் மக்கள் கொள்ளை அள்ளிவிடப்போகிறார்கள் என்பதுதான் கவலையா?

 

 

இதற்குத்தான் கூட்டமைப்பு, மாகாண சபை என்பவை தேவை. மேற்குலகில் தாம் வாழும் நாட்டில் இருந்த படி முதலீடுக்கு 10% ROI கிடைக்குமாயின், தமிழ் ஈழத்தில் இலகுவாக  %20 ROI பெற்றுவிடலாம் என்றால்  தனது நாட்டை விட்டு போபவனுக்கும், தமிழ்மக்களுக்கும், 15% ROI நீதியானது என்று கூட்டமைப்பு உச்ச வரம்பு போடலாம். இது மிக எளிமையான உதாரணம். இதில் பேரம் பேசும் பலம் பற்றியும் தெரிய வேண்டும். ஆனால் முதலிடுவது லாபம் பெறவே. மற்றவை தானம். 

 

 

Link to comment
Share on other sites

ஒரு ஏக்கர்... 100 நாள்... 2,00,000
நல்வருமானம் தரும் நன்னீர் இறால்!
கு. ராமகிருஷ்ணன் படங்கள்: கே. குணசீலன்
 

கடற்கரையோரங்கள், கடலும் ஆறும் சந்திக்கும் முகத்துவாரங்கள் ஆகிய பகுதிகளில் மட்டுமே இருந்த இறால் வளர்ப்பு, தற்போது உள்நாட்டுப் பகுதிகளிலும் பரவலாகி வருகிறது. வெளிநாட்டு விற்பனை வாய்ப்பும் அதிகம் என்பதால், நன்னீர் இறால் வளர்ப்பு மூலம் நல்ல லாபம் கிடைக்கவே... பலரும் இதில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களில், கொஞ்சம் வித்தியாசமாக... குட்டையில் மீன்களோடு சேர்த்து இறாலை வளர்த்து, கூடுதல் லாபம் ஈட்டி வருகிறார், தஞ்சாவூரைச் சேர்ந்த சீனிவாசன்.

தாராளமாக குஞ்சுகள் கிடைக்கும்!

தஞ்சாவூர்-பூதலூர் சாலையில் பதினைந்தாவது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிள்ளையார்நத்தம் கிராமத்தில் அமைந்திருக்கும் சீனிவாசனின் இறால் பண்ணையை வலம் வந்தோம். ''எனக்கு சொந்த ஊர், நாகப்பட்டினம் மாவட்டம், கடம்பங்குடி. அங்க, 30 ஏக்கர்ல நெல், கரும்பு சாகுபடி செஞ்சுட்டு இருந்தோம். தொடர்ச்சியா நஷ்டம். அதனால, நிலத்தை குத்தகைக்கு விட்டுட்டு, குடும்பத்தோடு தஞ்சாவூருக்கு வந்து, இயற்கை விளைபொருள்களை வாங்கி விற்பனை செய்துட்டிருக்கேன்.

எங்க ஊர்ல, 2003-ம் வருசம் வரைக்கும் நன்னீர் இறால் வளர்த்தேன். அது நல்ல லாபமான தொழிலா இருந்தாலும்... அந்த சமயத்துல, இறால் குஞ்சுகளை உற்பத்தி செய்யுற நிறுவனங்கள் அதிகமா இல்ல. அதனால, குஞ்சுகளுக்குத் தட்டுப்பாடு வரவே... இறால் வளர்ப்பைக் கைவிட்டேன். இப்போ சென்னை, கிழக்குக் கடற்கரை சாலையில இறால் குஞ்சு பொரிக்கிற நிறுவனங்கள் நிறைய இருக்கு. அதனால, குஞ்சுகள் தாராளமா கிடைக்குது. இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதுமே... மீன் குட்டைகளை குத்தகைக்கு எடுத்து, கடந்த ஒரு வருஷமா இறால் வளர்த்துட்டுருக்கேன்.

pv18a.jpg

இறால் விற்பனைக்காக பெருசா கவலைப்படத் தேவையில்ல. நாகப்பட்டினம், சென்னையில இருக்கற கடல் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு வாரியத்துல சொல்லி வெச்சுட்டோம்னா... ஏற்றுமதி செய்றவங்க தேடி வந்து வாங்கிக்கிட்டுப் போயிடுறாங்க. உள்ளூர் மார்க்கெட்லயும் நல்ல விற்பனை இருக்கு'' என்று முன்னுரை கொடுத்த சீனிவாசன், தொடர்ந்தார்.

100 நாட்களில் வருமானம்!

''நெல், கரும்பு சாகுபடிக்குத் தேவையான தண்ணியைவிட, இறால் வளர்ப்புக்குக் குறைவான தண்ணிதான் தேவைப்படும். இதுல நூறு நாள்ல லாபம் பார்த்துடலாம். ஒரு ஏக்கருக்கு வருஷத்துக்கு 25 ஆயிரம் ரூபாய்னு குத்தகைக்கு எடுத்துருக்கேன். இந்தப் பண்ணை மொத்தம் 10 ஏக்கர். இதுல 7 ஏக்கர் நீர்ப் பரப்பு. அதுல, 13 குட்டைகள் இருக்கு. இங்க, நன்னீர், கடல்நீர் ரெண்டுலயும் வளரக்கூடிய 'லிட்டோபினஸ் வெனாமி’ங்கிற ரக இறாலைத்தான் வளர்க்கிறேன்'' என்ற சீனிவாசன், ஒரு ஏக்கர் நீர்ப் பரப்பில் நன்னீர் இறால் வளர்க்கும் முறை பற்றி சொன்னார். அதை அப்படியே பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.

pv18d.jpg

சூரிய வெளிச்சம் அவசியம்!

'களிமண் தன்மை கொண்ட நிலத்தில்தான் குட்டை அமைக்க வேண்டும். காரணம், இந்த நிலத்தில்தான் தண்ணீர் தேங்கி நிற்கும். ஒரு வேளை இந்த நிலத்தின் தன்மை பற்றி தெரியவில்லை என்றால், குட்டை அமைக்க திட்டமிட்டுள்ள நிலத்தில் ஒரு எளிய பரிசோதனையை நீங்களே செய்யலாம். அதாவது,  1 மீட்டர் நீளம், அகலம், ஆழத்தில் குழி எடுக்கவும். அதில் நீரை நிரப்பவும். உடனே நீர் வற்றிவிட்டால், அந்த நிலம், குளம் அமைக்க ஏற்றது அல்ல என்று புரிந்து கொள்ளலாம். தண்ணீர் தேங்கி நின்றால், தயங்காமல் குட்டை அமைக்கலாம்.சூரிய வெளிச்சம் தாராளமாகக் கிடைக்கக்கூடிய பகுதியில் இறால் குட்டை அமைக்க வேண்டும். அப்போதுதான் ஒளிச்சேர்க்கை சிறப்பாக நடைபெற்று, இறாலுக்குத் தேவையான இயற்கையான உணவு தடையின்றி உற்பத்தியாகும். நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதாக இருந்தால், கார-அமிலத்தன்மையின் அலகு 7 பி.ஹெச். முதல் 8.5 பி.ஹெச். அளவுக்குள் இருக்க வேண்டும். இதை அறிந்து கொள்ள நீர்ப் பரிசோதனை செய்வது கட்டாயம். ஆற்று நீராக இருந்தால், கார-அமிலத்தன்மையைப் பரிசோதிக்க வேண்டியதில்லை.

pv18e.jpg

நான்கு வேளைகளில் தீவனம்!

குட்டையில் இரண்டு சால் உழவு ஓட்டி, 15 நாட்கள் வெயிலில் காயவிட வேண்டும். பிறகு, ஏக்கருக்கு 100 கிலோ கல் சுண்ணாம்பு, 100 கிலோ ஜிப்சம் என்கிற அளவில் போட்டு, ஒன்றரையடி உயரத்துக்கு தண்ணீர் நிறுத்தி... அதில், 50 கிலோ ஈரச் சாணம்,

5 கிலோ தாதுப்புக் கலவை (இது கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மையங்களிலும், கால்நடை மருந்துக் கடையிலும் கிடைக்கும். கிடைக்கும்) ஆகியவற்றைக் கலந்துவிட வேண்டும். அடுத்த மூன்று நாட்களில் பாசி உட்பட தாவர, விலங்கின மிதவை நுண்ணுயிரிகள் உருவாகும். பிறகு, 4 அடி உயரத்துக்கு தண்ணீரை நிறுத்தி, 10 நாட்கள் முதல் 15 நாட்கள் வயதுள்ள ஒரு லட்சம் இறால் குஞ்சுகளை விட்டு, கடைகளில் விற்பனை செய்யப்படும் 2 கிலோ இறால் தீவனத்தையும் போட வேண்டும்.இது குஞ்சுகளுக்கு ஒரு நாளுக்கான தீவனம்.

pv18c.jpg

தீவனத்தை மொத்தமாகப் போடாமல், காலை 6 மணி, 10 மணி, மதியம் 2 மணி, மாலை 6 மணி என்று நான்கு மணி நேர இடைவெளியில், நான்கு பாகங்களாகப் பிரித்து போட வேண்டும். குஞ்சுகள் வளர்ந்தாலும், இதே முறையில்தான் தீவனம் போட வேண்டும். கரையில் இருந்துகொண்டு தீவனத்தைப் போடாமல், மிதக்கக்கூடிய பலகையில் அமர்ந்து கொண்டு குட்டைக்குள் சென்று தீவனம் போட வேண்டும். அதற்கு வசதியாக குட்டையின் நான்கு மூலைகளிலும் கயிறு கட்டி வைத்துக் கொள்ளலாம். இரவு நேரங்களில் குட்டைக்குள் தாராளமாக ஆக்சிஜன் கிடைக்குமாறு அதற்கான பிரத்யேக கருவிகளைப் பொருத்த வேண்டும். பாம்பு, ஆமை, நண்டு போன்றவற்றைத் தவிர்க்க, குட்டையைச் சுற்றி வலை அமைக்க வேண்டும்.

தீவனம்... கவனம்!  

குஞ்சுகள் விட்ட 2-ம் நாள் 2.2 கிலோ; 3-ம் நாள் 2.4 கிலோ என தினமும் 200 கிராம் தீவனத்தை அதிகரித்துக் கொண்டே வர வேண்டும். 8-ம் நாளிலிருந்து 15-ம் நாள் வரை தினமும் 300 கிராம் தீவனத்தை அதிகரிக்க வேண்டும். 16-ம் நாளிலிருந்து 22-ம் நாள் வரை தினமும் 400 கிராம் தீவனத்தையும்; 23-ம் நாளிலிருந்து 30-ம் நாள் வரை தினமும் 500 கிராம் தீவனத்தையும் அதிகரிக்க வேண்டும். இறால் வளர்ச்சியை வைத்தே தீவனம் கொடுக்க வேண்டும்.

31-ம் நாள், குளத்தில் உள்ள இறாலைப் பிடித்து எடைபோட வேண்டும். பொதுவாக, அந்த வயதில் ஒரு இறால் குஞ்சு சராசரியாக 3 கிராம் எடையில் இருக்கும். ஒரு லட்சம் குஞ்சுகளில் 80 ஆயிரம் குஞ்சுகள் அளவுக்கு உயிரோடு இருக்கும். இவற்றின் மொத்த எடை 240 கிலோ இருக்கும். இதில் 7 சதவிகித அளவுக்குத் தீவனம் போட வேண்டும். இந்த வகையில், தினமும் 16.8 கிலோ தீவனம் போட வேண்டும்.

pv18h.jpg

38-ம் நாள் ஒரு இறாலின் சராசரி எடை 4 கிராம் இருக்கும். மொத்த இறாலின் எடை 320 கிலோ. தினமும் இதில் 6 சதவிகிதம் அளவுக்கு தீவனம் போட வேண்டும். அடுத்தடுத்த வாரங்களில்... 5%, 4%, 3%, 2% என தீவனத்தைக் குறைத்துக் கொண்டே வர வேண்டும். எடையில் 2 சதவிகிதம் தீவனத்தை கடைசி வரை கடைபிடிக்க வேண்டும். எடை பார்க்க அனைத்து இறால்களையும் பிடிக்க வேண்டியதில்லை. குட்டையில் நான்கு பக்கமும் தலா ஒரு முறை வலையை வீசி, அதில் கிடைக்கும் இறால்களின் எடையைக் கொண்டு, ஒட்டுமொத்த இறால்களின் சராசரி எடையை எளிதாகக் கணித்து விடலாம். ஒரு கிலோ இறால் உற்பத்தி செய்ய சுமார் ஒன்றே கால் கிலோ தீவனம் தேவைப்படும்.

ஒரு ஏக்கரில் 1,650 கிலோ இறால்!

60-ம் நாளிலிருந்து 80-ம் நாளுக்குள் 400 கிலோ அளவுக்கு இறாலைப் பிடித்து விற்பனை செய்யலாம். இந்த சமயத்தில் ஒரு இறால், 10 கிராம் முதல் 20 கிராம் வரை எடை இருக்கும். 90-ம் நாளிலிருந்து 100 நாட்களுக்குள் 1,250 கிலோ அளவுக்கு இறால் பிடித்து விற்பனை செய்யலாம். இந்த சமயத்தில் ஒரு இறால், 25 கிராம் அளவில் இருக்கும். ஒரு ஏக்கர் குளத்தில் சராசரியாக 1,650 கிலோ அளவுக்கு இறால் கிடைக்கும்' தொழில்நுட்பம் சொன்ன சீனிவாசன் நிறைவாக, வருமானம் பற்றிச் சொன்னார்.

''அறுவடை முடிஞ்ச பிறகு, குட்டையை காயவிட்டு மீண்டும் நீர் நிரப்பி இறால் வளர்க்கலாம். முதல் தவணையில பிடிக்கிற இறால், கிலோ சராசரியா 250 ரூபாய் அளவுக்கு விற்பனையாகும்.

தஞ்சாவூர்ல நாங்களே, நேரடியா விற்பனை செஞ்சுடுவோம். உயிரோட இறால் கிடைக்கறதால உடனடியா வித்துடுது. ரெண்டாம் தவணை பிடிக்கிற இறாலை கிலோ 300 ரூபாய்னு வியாபாரிகளுக்கு வித்துடுவோம். இது மூலமா, மொத்தம் ஏக்கருக்கு நாலே முக்கால் லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல, எல்லா செலவும் போக, 2 லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும். இதுபோல, ஒரு ஏக்கர் குட்டையில, வருஷத்துக்கு ரெண்டு தடவை இறால் வளத்து, 4 லட்சம் ரூபாய் அளவுக்கு லாபம் பார்க்கலாம்'' என்றார், மகிழ்ச்சியாக.

 ஆலோசனை தேவையா?

pv18f.jpgதஞ்சாவூரில் உள்ள மீன்வளப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், இறால் வளர்ப்புப் பயிற்சி தொடர்பான ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருகிறது. தேவைப்படுவோர் இந்த மையத்தை அணுகலாம். தொடர்புக்கு, தொலைபேசி: 04362-291625, செல்போன்: 99441-61466

 நெற்பயிரைக் காப்பாற்றிய இறால் தண்ணீர்!

கடந்த ஆண்டின் கடும் வறட்சியிலும்கூட பிள்ளையார்நத்தம் கிராமத்தில் பலருடைய நிலங்களில் நெற்பயிர் செழித்து வளர்ந்து, நல்ல பலனைக் கொடுத்திருக்கிறது. இதற்கும் கைகொடுத்திருக்கிறது... இறால் பண்ணை. இதைப் பற்றி பேசும் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன், ''போன சம்பா பருவத்துல 7 ஏக்கர் நெல் சாகுபடி செஞ்சுருந்தேன். கடுமையான வறட்சியால பயிர்கள் கருக ஆரம்பிச்சிடுச்சு. அப்போ, இந்த இறால் குட்டையில் இருந்து கொடுத்த தண்ணீரைப் பாய்ச்சித்தான் என்னோட பயிரைக் காப்பாத்தினேன். இறாலோட கழிவும், சத்தான தீவனமும் தண்ணீர்ல இருந்ததால, பயிர்கள் நல்லா செழிப்பாகி, கதிர்களும் நல்லா வாளிப்பா வந்துச்சு. இந்த கிராமத்துல நிறைய பேரோட பயிரை இந்த இறால் குட்டை தண்ணிதான் காப்பாத்திக் கொடுத்துச்சு'' என நெகிழ்ச்சியோடு சொன்னார்.

 

 

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=71234

 

 

 


12 ஏக்கர்... 7 மாதங்கள்... 25 லட்சம்...
பணம் காய்க்கும் பந்தல்...!
ஜி. பழனிச்சாமி படங்கள்: தி. விஜய்
 

'புதுப்புது யுக்திகளைப் புகுத்தி, புத்திசாலித்தனமாக செயல்படுவர்களுக்கு... விவசாயம், பொன்முட்டையிடும் வாத்துதான்’ என்பதை நிரூபித்து வருகிறார், எழுபத்து இரண்டு வயதைக் கடந்த மூத்த விவசாயி 'கேத்தனூர்’ பழனிச்சாமி. கேத்தனூர், ஆறு, குளம், வாய்க்கால்... என இயற்கை நீராதாரத்துக்கு வாய்ப்பில்லாத ஊர். ஆயிரத்து இருநூறு அடிக்கும் கீழே போய்விட்ட நிலத்தடி நீர்மட்டம். வறண்டு கிடக்கும் பாசனக் கிணறுகள்... இப்படியான சூழலிலும் 'பந்தல்’ விவசாயத்தில் முடிசூடாத மன்னராக அரை நூற்றாண்டு காலம் அசத்தி வரும், பழனிச்சாமியின் வெற்றிச் சூத்திரத்தை அறிந்து கொள்ள... திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள கேத்தனூர் கிராமத்தில் உள்ள அவரது பண்ணைக்குப் பயணித்தோம்.

வாழ்க்கையை மாற்றிய கல்பந்தல்!

''இந்த மாட்டுக்கு மூக்கணாங் கயித்தை மாத்தப்பா; இந்தக் கன்னுக்குட்டிய புடிச்சு வேப்பமர நிழல்ல கட்டப்பா...''

-தொழுவத்தில் நின்றபடி வேலையாட்களிடம் சொல்லிக் கொண்டிருந்த பழனிச்சாமி, நம்மைக் கண்டதும், வரவேற்றுப் பேச ஆரம்பித்தார்...

''எங்களுக்கு மொத்தமா 75 ஏக்கர் நிலம் இருக்கு. பருத்தி, கொண்டைக் கடலை, கோதுமை, கம்புனு ஒரு காலத்துல மானாவாரி வெள்ளாமையில கொடிகட்டிப் பறந்த ஊருங்க இது. இப்போ, கிணத்துப் பாசனத்தை நம்பித்தான் வண்டி ஓடுது. 50 வருஷத்துக்கு முன்ன கொடைக்கானலுக்குப் போயிட்டிருந்தேன். அப்போ, ஒரு இடத்துல கல்பந்தல் போட்டு திராட்சை சாகுபடி பண்ணிட்டுருந்தாங்க. அப்போதான், பந்தல் விவசாயத்தைப் பத்தியே தெரிஞ்சிகிட்டேன். உடனே, என் தோட்டத்துல பந்தல் போட்டு, திராட்சையைப் போட்டேன். நல்ல வருமானம் கிடைச்சுது. அதனால, என்னை 'திராட்சைத் தோட்டத்துக்காரர்’னே கூப்பிட ஆரம்பிச்சாங்க. 88-ம் வருஷம் வரைக்கும் திராட்சை சாகுபடிதான். கூடவே, கத்திரி, தக்காளி, மிளகாய்னு காய்கறி விவசாயமும். 89-ம் வருஷத்துல இருந்து பந்தல்ல காய்கறி சாகுபடி செஞ்சுட்டுருக்கேன். இப்போ, நாலு ஏக்கர்ல பாகல், மூணு ஏக்கர்ல பீர்க்கன், நாலு ஏக்கர்ல புடலை, ஒரு ஏக்கர்ல கோவைக்காய்னு மொத்தம் 12 ஏக்கர்ல பந்தல் விவசாயம் செய்றேன்.

pv28c.jpg

நல்வழி காட்டிய நம்மாழ்வார்!

ஆரம்பத்துல, லாரி லாரியா உரத்தைக் கொண்டு வந்து கொட்டி, ரசாயன விவசாயம்தான் செஞ்சேன். அதேமாதிரி, வீரியமான பூச்சிக்கொல்லிகளைத்தான் தெளிச்சுட்டிருந்தேன். பகல் முழுக்க என் பண்ணையில பவர் ஸ்பிரேயர் ஓடுற சத்தம் கேட்டுக்கிட்டேதான் இருக்கும். ஒவ்வொரு முறையும் கணக்கு பாக்குறப்போ, உற்பத்திச் செலவுதான் அதிகமா இருந்துச்சு. லாபம் கம்மியா இருந்துச்சு. 'செலவை எப்படி குறைக்கலாம்?’னு பலர்கிட்ட யோசனை கேட்டுட்டிருந்த சமயத்துலதான், நம்மாழ்வார் பத்திக் கேள்விப்பட்டேன். அவரைத் தேடிப்போய் சந்திச்சுப் பேசி பல தகவல்களைத் தெரிஞ்சிக்கிட்டேன். 'இயற்கை விவசாயம்தான் லாபகரமான விவசாயத்துக்கு ஒரே தீர்வு’னு முடிவு செஞ்சேன். கொஞ்சம் கொஞ்சமா மாற ஆரம்பிச்சுட்டேன்.

pv28d.jpg

பஞ்சகவ்யா, மூலிகைப் பூச்சிவிரட்டி, மீன் அமிலம், அரப்பு-மோர் கரைசல்னு இயற்கை இடுபொருட்களை நானே தயாரிச்சு, பயிர்களுக்குக் கொடுத்ததுல நல்ல பலன் கிடைச்சது. அப்படியே, சுபாஷ் பாலேக்கரோட 'ஜீரோ பட்ஜெட்’ பயிற்சி வகுப்புலயும் கலந்துகிட்டு பயிற்சி எடுத்த பிறகு, முழுக்க முழுக்க இயற்கைக்கு மாறிட்டேன். கலப்பின பசுமாடுகளைக் குறைச்சுட்டு, காங்கேயம் மாடுகளை வாங்கினேன். அதுங்களோட சாணம், மூத்திரத்தை வெச்சு, ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம், அமுதக்கரைசல்னு எல்லா இடுபொருட்களையும் தயாரிக்கிறேன்'' என்ற பழனிச்சாமி... புடலை பந்தலுக்குள் அழைத்துச் சென்றார்.

பந்தலுக்குள் வரிசையாகத் தொங்கிக் கொண்டிருந்த முற்றிய வெளிர் பச்சை நிற குட்டைப்புடலங்காய்களைப் பறித்து, சிறிய தள்ளுவண்டிகளில் சில பெண்கள் கொட்ட, அதை அப்படியே களத்து மேட்டுக்கு உருட்டி சென்று கொண்டிருந்தனர், சில ஆண்கள். அந்த பந்தலுக்குள் நின்றவாறே, பந்தல் காய்கறி சாகுபடி செய்யும் விதத்தைச் சொல்ல ஆரம்பித்தார், பழனிச்சாமி.

அதை அப்படியே பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.

pv28e.jpg

ஏக்கருக்கு 1,25,000 ரூபாய்!

'நடவு செய்ய வேண்டிய நிலத்தை உழுது, கல்தூண்களை ஊன்றி கம்பிகளைக் கட்டி பந்தல் அமைக்க வேண்டும். ஒரு ஏக்கர் நிலத்தில் பந்தல் அமைக்க கிட்டத்தட்ட ஒன்றேகால் லட்ச ரூபாய் வரை செலவாகும். ஒருமுறை கல்பந்தல் அமைத்து விட்டால்... கம்பிகள் 50 வருடம் வரையிலும், தூண்கள் 100 வருடங்களுக்கு மேலும் பயன்தரும். பந்தல் அமைத்த பிறகு, 16 அடி இடைவெளியில் தென்வடலாக பார் அமைத்து, சொட்டு நீர்ப்பாசனக் கருவிகளைப் பொருத்திக் கொள்ளவேண்டும். ஏக்கருக்கு தலா, ஒன்றரை கிலோ அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா ஆகியவற்றை 12 டன் தொழுவுரத்தில் கலந்து, பார் பாத்திகளுக்குள் தூவி... 5 அடி இடைவெளியில் இரண்டரை அடி அகலம் கொண்ட வட்டக்குழிகளை அமைக்க வேண்டும்.

விதைநேர்த்தி அவசியம்!

புடலை 200 நாள் பயிர். தரமான நாட்டு விதைகளை  (ஏக்கருக்கு 400 கிராம் தேவைப்படும்) அரைலிட்டர் பஞ்சகவ்யாவில் இட்டு, 12 மணி நேரம் ஊற வைத்து எடுத்து நிழல் தரையில் பரப்பி, உலர வைக்க வேண்டும். இப்படி விதைநேர்த்தி செய்யும் போது முளைப்புத்திறன் அதிகரிக்கும். ஒரு குழிக்கு மூன்று விதைகள் என்ற கணக்கில் படுக்கை வசமாக நடவு செய்து... ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்ற கணக்கில் பாசனம் செய்யவேண்டும். நடவு செய்த 16-ம் நாளில் களை எடுக்க வேண்டும். தொடர்ந்து மூன்று மாதங்கள் வரை, 15 நாட்களுக்கு ஒரு முறை களை எடுக்க வேண்டும்.

pv28f.jpg

வளர்ச்சிக்குப் பிண்ணாக்கு... பூச்சிக்கு புளித்த மோர்!

ஒவ்வொரு முறை களை எடுக்கும்போதும், ஒவ்வொரு செடியின் தூரிலும் அரை லிட்டர் பிண்ணாக்குக் கரைசலை ஊற்ற வேண்டும். நடவு செய்த 18-ம் நாளில் 10 லிட்டர் தண்ணீருக்கு, 250 மில்லி அரப்பு-மோர் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து, அனைத்து செடிகள் மேலும் படும்படி விசைத்தெளிப்பான் மூலம் புகைபோல் தெளிக்க வேண்டும். 23-ம் நாள் 10 லிட்டர் தண்ணீருக்கு, 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து செடிகள் மேல் செழிம்பாகத் தெளிக்க வேண்டும்.  

நடவிலிருந்து 20 நாட்களுக்கு ஒரு முறை, 100 மில்லி புளித்த மோர், 50 கிராம் சூடோமோனஸ் ஆகிய இரண்டையும் 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தேவைப்படும் அளவுக்குத் தெளிக்க வேண்டும். இது இலைப்பேன் மற்றும் அசுவிணி உள்ளிட்ட பூச்சிகளைக் கட்டுப்படுத்தி, செடிகள் ஒரே சீராக வளர உதவி செய்கிறது. நடவு செய்த 60-ம் நாளுக்குப் பிறகு, 10 லிட்டர் தண்ணீருக்கு, 200 மில்லி புளித்த மோர், 100 கிராம் சூடோமோனஸ் என அளவைக் கூட்டிக் கொள்ள வேண்டும். இதைத் தெளித்து வந்தால், சாம்பல் நோய் மற்றும் வைரஸ் தொற்றுக்கள் இருக்காது.

pv28g.jpg

26, 27-ம் நாட்களில் ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தம், ஆறு லிட்டர் மீன் அமிலம், 70 லிட்டர் தண்ணீர் ஆகியவற்றைக் கலந்து ஒவ் வொரு செடிக்கும் அரைலிட்டர் அளவுக்கு நேரடியாக ஊற்ற வேண்டும். இது நல்ல வளர்ச்சி ஊக்கியாக செயல்படும். 30-ம் நாளுக்குள் கொடிகளை கொம்பில் படர விட வேண்டும். கொம்புக்குப் பதிலாக கெட்டியான காடா நூலை கம்பியில் இழுத்துக்கட்டியும் படரவிடலாம். திசைமாறிப்போகும் கூடுதல் பக்கக் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும்.

60-ம் நாளில் 100 மில்லி அரப்பு-மோர் கரைசல், 100 மில்லி தேங்காய்ப்பால், 100 மில்லி இளநீர், இவற்றுடன் 50 கிராம் நாட்டுச் சர்க்கரை சேர்த்து, 10 லிட்டர் நீரில் கலந்து தெளித்தால், பெண்பூக்கள் உதிராமல் இருப்பதோடு, பூஞ்சண நோய்த் தாக்குதலும் இருக்காது.

pv28b.jpg

பூச்சிகளுக்குப் பொறிகள்!

பந்தலுக்கு உள்பகுதியில் இரண்டு, மூன்று இடங்களில் விளக்குப் பொறிகளைக் கட்டித் தொங்க விட்டால், பச்சைப்புழுக்கள், காய்துளைப்பான்கள் போன்றவைக் கட்டுப்படும். பந்தலுக்குள் இரண்டு மூன்று இடங்களில் 'சிறிய அரிக்கேன்' விளக்கு வடிவத்தில் உள்ள இனக்கவர்ச்சிப் பொறிகளைக் கட்டித் தொங்கவிட்டால், பந்தல் காய்கறிகளைத் தாக்கும் குளவிகளைக் கட்டுப்படுத்தலாம் இந்தப் பொறிக்குள் சென்று மாட்டிக் கொண்டு அவை இறந்துவிடும்.

இதே பராமரிப்புதான் அனைத்து வகை பந்தல் காய்கறிகளுக்கும். ஆனால், பாகலுக்குக் கொஞ்சம் கூடுதல் பராமரிப்பு தேவைப்படும். புடலை சாகுபடியில், நடவு செய்த 65-ம் நாளில் இருந்து காய்களைப் பறிக்கத் தொடங்கலாம். தொடர்ந்து, 140 நாட்கள் வரை காய்ப்பு இருக்கும். சராசரியாக ஏக்கருக்கு 40 டன் அளவுக்கு விளைச்சல் இருக்கும். நாட்டுப்புடலை என்பதால், அடுத்த போகத்துக்கு உரிய விதைகளை நாமே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.மீண்டும், மீண்டும் விதைக்காக செலவு செய்வது மிச்சம்'

26 லட்ச ரூபாய் லாபம்!

சாகுபடிப் பாடம் முடித்த பழனிச்சாமி, ''ஒரு கிலோ புடலை சராசரியா கிலோ 15 ரூபாய்னு விலைபோகுது. ஒரு ஏக்கர்ல விளையற 40 டன் காய்கள் மூலமா, 200 நாள்ல கிட்டத்தட்ட 6 லட்ச ரூபாய் வருமானமா கிடைக்கும். நான் நாலு ஏக்கர்ல புடலை போட்டிருக்கேன். அது மூலமா 24 லட்ச ரூபாய் கிடைக்கும். சாகுபடிச் செலவு

10 லட்ச ரூபாய் போக... 14 லட்ச ரூபாய் லாபம். நாலு ஏக்கர்ல பாகல் இருக்கு. ஏக்கருக்கு சராசரியா 25 டன் விளைச்சல் இருக்கும். இதுவும் சராசரியா கிலோ 15 ரூபாய்னு விலைபோகும். நாலு ஏக்கர் பாகல் மூலமா 15 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும்.

pv28a.jpg

10 லட்ச ரூபாய் சாகுபடிச் செலவு போக 4 லட்ச ரூபாய்க்கு மேல் லாபம்!

மூணு ஏக்கர்ல பீர்க்கன் இருக்கு. ஏக்கருக்கு 30 டன் கிடைக்கும். இதுவும் கிலோ 15 ரூபாய்னு விலைபோகுது. மூணு ஏக்கர்லயும் சேர்த்து மொத்தம் 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல 9 லட்ச ரூபாய் செலவு போக, 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லாபம்.

ஒரு ஏக்கர்ல கோவைக்காய் இருக்கு. இதுல ஏக்கருக்கு 30 டன் மகசூல் கிடைக்கும். இது கிலோ 20 ரூபாய்க்கு விலைபோகுது. இதன் மூலமா 6 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும். 3 லட்ச ரூபாய் செலவு போக மூணு லட்ச ரூபாய் லாபம்.

ஆகமொத்தம் 12 ஏக்கர்ல இருந்து, 25 லட்ச ரூபாய்க்கு மேல லாபமா கிடைக்குது. வியாபாரிகள் என் தோட்டத்துக்கே வந்து காய்களை வாங்கிட்டுப் போறதால போக்கு வரத்துச் செலவுகூட இல்லை'' என்ற பழனிச்சாமி,

''இவ்வளவு வருமானத்தைப் பாக்கும்போது மலைப்பா இருக்கலாம். ஆனா, இந்த வெற்றிக்குக் காரணம் தினமும் நான் பந்தலுக்குள்ள போய் பாத்துப் பாத்து தேவையான இயற்கை இடுபொருளைக் கொடுக்குறதுதான். நிலம், நீர், நுணுக்கமான விவசாய அறிவு இருந்தா போதும்... எந்தப் பகுதியில வேணும்னாலும் பந்தல் விவசாயம் செய்து, யார் வேணும்னாலும் ஜெயிக்க முடியும்'' என்று நம்பிக்கை வார்த்தைகள் சொன்னார்.
 

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=71234

Link to comment
Share on other sites

ஊரிலே எம்மவர்கள் முதலீடு செய்யும் போது லாபத்தை வெளிநாட்டுக்கு எடுப்பதற்காக எவரும் செய்வதில்லை என நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை ஓரளவு லாபத்தை reinvest பண்ண வேண்டும். மற்றயதை reserves ஆக வைத்திருக்கலாம்.

அச்சுவேலி கைத்தொழில் பேட்டையை மீளவும் இயங்க வைத்திருக்கிறார்கள். நீண்டகால குத்தகைக்கு இங்கு நிலம் எடுக்கலாம். அத்துடன் பாரிய இயந்திரங்களுக்கு தேவையான 3 phase மின்சார வசதியும் இருக்கிறது. தெற்கு நிறுவனமான MAS holdings, இவர்கள் ஆடைத்தயாரிப்புத் துறையில் இருப்பவர்கள் (GAP , NIKE, REEBOK, Victoria's secret போன்ற பிரபல நிறுவனங்களுக்கு செய்பவர்கள்) தமது ஒரு தொழிற்சாலையை அச்சுவேலியில் போடப் போவதாக சொல்லியிருந்தார்கள். தற்போதைய விபரம் தெரியவில்லை.

 

மற்றயது புறக்கணி சிறிலங்கா எதிர்காலத்தில் எவ்வாறு மாற்றம் பெறும் என சிந்திக்க வேண்டியது அவசியம். அதாவது எம்மவர்கள், தமது உற்பத்திகளை ஏற்றுமதி செய்ய வெளிக்கிடும் போது அவற்றை நாமே புறக்கணிப்பதாக அமையக்கூடாது.

 

 

இலங்கையில் ஒரு முதலீட்டைச் செய்வது மிகவும் சுலபமானது. காணிகளை இலகுவாக வாங்கலாம் என்பது கொஞ்சம் இடிக்கின்றது.

நான் ஆகஸ்ட்டில் யாழ்ப்பாணத்தில் நின்றேன். இலங்கை குடியுரிமை இல்லாதவர்களின் காணிகள் வாங்குவது பற்றிய சட்ட அபிப்பிராயம் என்ன என்று ஒரு பிரபல பிரக்கிராசியிடம் கேட்டபோது அவர் சொல்லியது இதுதான்.

அண்மையில் கொண்டு வரப்பட்ட சட்டப்படி பிறநாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள் காணி வாங்கவேண்டும் என்றால் 100% வரி கட்டவேண்டும். அதாவது ஒரு ஏக்கர் உள்ளூர்க்காரருக்கு 5 இலட்சம் என்றால், வெளி நாட்டவர் 10 லட்சம் கொடுத்துத்தான் வாங்கலாம். 100% வரி கட்டிக் காணி வாங்கி முதலீடு செய்வது இலாபம் தருமா என்று நீங்கள்தான் சொல்லவேண்டும். இலங்கைக் குடியுரிமை வைத்திருப்பவர்களின் பெயரில் காணி வாங்குவது வரி கட்டுவதைத் தவிர்க்க உதவும் என்றாலும் அது ஒரு ரிஸ்க்கான பிஸினஸ்!

மேலும் இன்னுமொன்றையும் சொல்லியிருந்தார். இலங்கையில் பிறந்தவர்களுக்கு காணிகள் இருந்தால் அவர்கள் பிறநாட்டுக் குடியுரிமை பெற்றாலும் அவர்களின் காணிகளை அரசாங்கம் பறிக்கமுடியாது. அதற்குச் சட்டத்தில் இடமில்லை. எனவே பிறநாட்டுக் குடியுரிமை எடுத்தவர்கள் காணிகள், வீடுகள் வைத்திருந்தால் அவை பறிபோகும் என்று கவலைப்படவேண்டாம்.
 

என்ன வேலை கொடுக்கப்போகின்றார்களாம்?
Call centre நடத்தினாலும் 10000 பேருக்கு வேலை கொடுக்கமுடியாது. சிலவேளை ஆடைத் தொழிற்சாலை தொடங்கப்போகின்றார்களோ :unsure:

 

 

வெளிநாட்டு குடியுரிமைக் காரரும் இலங்கையில் வரிகட்டாமல் காணி வாங்க முடியும். தாய்லாந்து போன்ற இடங்களிலும் சில வெள்ளிகள் இந்த முறையைப் பாவிக்கிறார்கள். சட்டப்படியாக ஒரு கம்பனியை ஆரம்பித்து அந்தக் கம்பனியின் பெயரில் தான் காணி வாங்குவது. காணி கம்பனிக்கு, கம்பனி உங்களுக்கு. இந்த  முறையின் சட்டத்தன்மை, சாதக பாதகங்கள் சரியாகத் தெரியாது. மனைவி இப்போதும் இலங்கைப் புத்தகம் என்பதால் எங்களுக்கு அந்தப் பிரச்சனை இதுவரை வரவில்லை. இரட்டைக் குடியுரிமையும் இப்போது எடுக்கலாம். ஆனால் எனது வேலை காரணமாக அதை விரும்பவில்லை.

நீங்கள் சொன்னமாதிரி 10,000 பேருக்கு வேலை கொடுக்க முடியாது. 100 பேருக்கு கொடுப்பதே பெரிய விடயம். SLT யுக்கே இலங்கை முழுவதும் ஒரு 2,000 பேர் வேலை செய்யுறாங்களோ தெரியவில்லை.

 

விவசாயப் பொருட்கள் தயாரிப்பு பொருட்களுக்கு வரி விலக்குகள் உண்டு....முயற்சி எடுங்கள் எல்லாத்தையும் வாழைப்பழம் போல் உரிச்சித் தரமுடியாது...இவ் விடயங்களை நான் சேகரிக்க எவ்வளவு கஸ்டப்பட்டன்....இருந்தாலும் மக்கள் நலன் கருதி சில விடயங்களைச் சொல்றன்... நீங்களும் முயற்சி எடுங்க.. ... நான் ஐரோப்பாவுக்கு வந்து 5-6 மாதம் தான் ...ஆனால் ஒரு புலம்பெயர் தமிழரும் எனக்கு உதவி செய்யவில்லை... ஆனால் நான் வெல்லுவன் எண்டது மட்டும் நிச்சயம்..

 

விவசாயம், கடல்துறை உபகரணங்களுக்கு வரிவிலக்கு உண்டு. விவசாயத் திணைக்களம்/கடல் நீரியல் வள அமைச்சு மூலம் விண்ணப்பிக்க வேண்டும். யாரும் தெரிந்தவர்கள் இருந்தால் இலகு. உங்கள் முயற்சி வெற்றியளிக்க வாழ்த்துக்கள்

 

எனது நண்பர் ஒருவர் கொன்கிரிட் போஸ்ட்  செய்யும் கொம்பனியொன்று புலோலியில்யுத்தம் முடிந்த கையோடையே போய் ஆரம்பித்தார் .இயந்திரங்கள் சீனாவில் இருந்து இறக்கி ஆரம்பித்தார் ,கனடா போல ரைவோல் இல் வீடு கட்டும் வேறு திட்டம் இருக்கு என்றார் .அண்மையில் தொடர்பு கொள்ளவில்லை என்ன நடக்குதோ தெரியாது .

 

மந்திகையில் ஒருவர் செய்கிறார் என்பது தெரியும், நீங்கள் சொல்பவரும் அவரும் ஒரே ஆளா எனத் தெரியவில்லை. Instant housing என்ற ஒரு வகையான வீடுகளை ஒரு கொழும்பு நிறுவனம் யாழ்ப்பாணத்தில் Eurovil என்ற பொறியியல் தொழில் நுட்ப நிறுவனத்துடன் சேர்ந்து சந்தைப்படுத்த முயற்சி செய்தார்கள். தற்போதைய நிலவரங்கள் தெரியவில்லை. யாழ்ப்பாண சுவாத்தியத்துக்கு (tropical) dry wall வேலை செய்யுமோ தெரியவில்லை. ஈரப்பதன் கூடவாக இருப்பதால் சரிவராது எனத்தான் நினைக்கிறேன். இசை அண்ணா தான் சொல்ல வேணும். அத்துடன் எம்மவர்கள் சீமேந்திலே கட்டிப் பழகிவிட்டார்கள் என்பதால் மாத்த முடியுமோ தெரியாது.

 

Link to comment
Share on other sites

அச்சுவேலி கைத்தொழில் பேட்டையை மீளவும் இயங்க வைத்திருக்கிறார்கள். நீண்டகால குத்தகைக்கு இங்கு நிலம் எடுக்கலாம். அத்துடன் பாரிய இயந்திரங்களுக்கு தேவையான 3 phase மின்சார வசதியும் இருக்கிறது. தெற்கு நிறுவனமான MAS holdings, இவர்கள் ஆடைத்தயாரிப்புத் துறையில் இருப்பவர்கள் (GAP , NIKE, REEBOK, Victoria's secret போன்ற பிரபல நிறுவனங்களுக்கு செய்பவர்கள்) தமது ஒரு தொழிற்சாலையை அச்சுவேலியில் போடப் போவதாக சொல்லியிருந்தார்கள். தற்போதைய விபரம் தெரியவில்லை.

 

GSP+ போனது என்று எங்களுக்கு பெரிய சந்தோசம்....

வெளிநாடுகளில் இலங்கையில் செய்த ஆடைகளை தடை செய்ய சொல்லி போராட்டம்...

பிறகு இது எப்படி சாத்தியமாகும்

Link to comment
Share on other sites

குறிப்பாக உழைப்பை சுரண்டும் எனும் போது ஒண்டை சொல்ல வேண்டும்... 

 

பொருளின் விலையை விவசாயிக்களும்  உற்பத்தியாளரும் தீர்மானிக்க  உரிமையை  கூட்டமைப்பு பெற்று தரவேண்டும்...  இல்லை எண்டால் பொருட்களுக்கான விலை வருடாந்த  தீர்மானம்  மாகானசபை அமைச்சினூடாக தீர்மானிக்க பட வேண்டும்... 

 

ஏன் சொல்லுறன் எண்டால் கொழும்பில் வைத்து ஏற்றுமதி செய்யும் சிங்கள ,முஸ்லீம்  , தமிழ் முதலாளிகளுக்கு இந்த மக்கள் அறாவிலையில் பொருட்களை விற்கும் நிலை வரக்கூடாது... 

 

முதலாளித்துவத்தில் இது கஷ்டம்...தேவையென்றால் கூட்டுறவு முறையில் அவர்களே சந்தைப்படுத்த வேண்டும்....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் ஒரு முதலீட்டைச் செய்வது மிகவும் சுலபமானது. காணிகளை இலகுவாக வாங்கலாம் என்பது கொஞ்சம் இடிக்கின்றது.

நான் ஆகஸ்ட்டில் யாழ்ப்பாணத்தில் நின்றேன். இலங்கை குடியுரிமை இல்லாதவர்களின் காணிகள் வாங்குவது பற்றிய சட்ட அபிப்பிராயம் என்ன என்று ஒரு பிரபல பிரக்கிராசியிடம் கேட்டபோது அவர் சொல்லியது இதுதான்.

அண்மையில் கொண்டு வரப்பட்ட சட்டப்படி பிறநாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள் காணி வாங்கவேண்டும் என்றால் 100% வரி கட்டவேண்டும். அதாவது ஒரு ஏக்கர் உள்ளூர்க்காரருக்கு 5 இலட்சம் என்றால், வெளி நாட்டவர் 10 லட்சம் கொடுத்துத்தான் வாங்கலாம். 100% வரி கட்டிக் காணி வாங்கி முதலீடு செய்வது இலாபம் தருமா என்று நீங்கள்தான் சொல்லவேண்டும். இலங்கைக் குடியுரிமை வைத்திருப்பவர்களின் பெயரில் காணி வாங்குவது வரி கட்டுவதைத் தவிர்க்க உதவும் என்றாலும் அது ஒரு ரிஸ்க்கான பிஸினஸ்!

மேலும் இன்னுமொன்றையும் சொல்லியிருந்தார். இலங்கையில் பிறந்தவர்களுக்கு காணிகள் இருந்தால் அவர்கள் பிறநாட்டுக் குடியுரிமை பெற்றாலும் அவர்களின் காணிகளை அரசாங்கம் பறிக்கமுடியாது. அதற்குச் சட்டத்தில் இடமில்லை. எனவே பிறநாட்டுக் குடியுரிமை எடுத்தவர்கள் காணிகள், வீடுகள் வைத்திருந்தால் அவை பறிபோகும் என்று கவலைப்படவேண்டாம்.

 

என்ன வேலை கொடுக்கப்போகின்றார்களாம்?

Call centre நடத்தினாலும் 10000 பேருக்கு வேலை கொடுக்கமுடியாது. சிலவேளை ஆடைத் தொழிற்சாலை தொடங்கப்போகின்றார்களோ :unsure:

 

ஆடை தொழிற்சாலையோ, வேறு எந்த ஏற்றுமதி தொழிலோ தொடங்க முடியாது. காரணம், இலங்கையில் தயாராகும் பொருட்களை நாம் பகிஷ்கரிக்கிறோமே.. வரிச் சலுகை கொடுக்க வேண்டாம் என்று போராடுகிறோமே.. அதற்குப் பிறகும் யாராவது அங்கே தொழில் தொடங்குவார்களா?

Link to comment
Share on other sites

எல்லோருமே வீடுகளில் செய்யத்தக்கது. பிரத்தியேகமாக, இதை போன்றவையை கூட்டமைப்பு விதைவைப் பெண்களுக்கு ஏற்றபடி முன்னேற்ற வேண்டும்.

 

கிழக்கு மாகாணம் அம்பாரை மாவட்டத்தின் முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு தலைமையில் ..இது சென்ற வருடன் நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டது...

Link to comment
Share on other sites

சந்தண மரக் கன்றுகள் ஒன்று ரூபாய் 3200 /= .. முடியுமென்றால் வாங்கி நாட்டிப் பராமரித்து 10 வருடத்தில் பலன் பெறலாம்.. ஒரு 20 மரத்தை சும்மா நாட்டி தண்ணி ஊத்த வைக்கலாம்...அது ஒருவருக்கு வேலைவாய்ப்பையும் கொடுக்கும்.. தேவையானவர்கள் தொடர்புகொள்ளவும்...

Link to comment
Share on other sites

இது ஒன்னுதான் பயன் உள்ள திரியா இருக்கு வாழ்த்துக்கள் தொடருங்கள் :)

Link to comment
Share on other sites

சந்தண மரக் கன்றுகள் ஒன்று ரூபாய் 3200 /= .. முடியுமென்றால் வாங்கி நாட்டிப் பராமரித்து 10 வருடத்தில் பலன் பெறலாம்.. ஒரு 20 மரத்தை சும்மா நாட்டி தண்ணி ஊத்த வைக்கலாம்...அது ஒருவருக்கு வேலைவாய்ப்பையும் கொடுக்கும்.. தேவையானவர்கள் தொடர்புகொள்ளவும்...

 

நல்ல யோசனை... !  சும்மா இருக்கும் காணிகளில் போட சொல்ல முடியும்... ! 

 

சந்தண மரம் காடுகளில் இருந்து வெட்டக்கூடாது எண்டு சட்டம் இருக்கிறது எண்டு சொல்கிறார்கள்...    வீடுகளில் வளர்க்க அனுமதி ஏதும் பெற வேண்டுமா...??   விற்கும் போது காடுகளில் வெட்டியதாக குற்றம் சாட்டப்படும் போது சட்டச்சிக்கல் வராமல் இருக்க....?? 

 

நான் சந்தண மரத்தை பாத்ததே இல்லை....   எப்படி இருக்கும் எண்டு தெரியாது...  எந்த வகையான பிரதேசங்களில் வளரும்... ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நல்ல யோசனை... !  சும்மா இருக்கும் காணிகளில் போட சொல்ல முடியும்... ! 

 

சந்தண மரம் காடுகளில் இருந்து வெட்டக்கூடாது எண்டு சட்டம் இருக்கிறது எண்டு சொல்கிறார்கள்...    வீடுகளில் வளர்க்க அனுமதி ஏதும் பெற வேண்டுமா...??   விற்கும் போது காடுகளில் வெட்டியதாக குற்றம் சாட்டப்படும் போது சட்டச்சிக்கல் வராமல் இருக்க....?? 

 

நான் சந்தண மரத்தை பாத்ததே இல்லை....   எப்படி இருக்கும் எண்டு தெரியாது...  எந்த வகையான பிரதேசங்களில் வளரும்... ???

 

யாழ் மூலிகைத் தோட்டத்தில் சந்தன மரச் செய்கை

திங்கள், 01 ஜூலை 2013 - 15:56 IST   எழுத்தாளர்: அஜந்தா அச்சு வடிவம் | Print
யாழ் நவற்கிரிப் பிரதேசத்தில் உள்ள மூலிகைத் தோட்டத்தில் சுதேச வைத்திய திணைக்களத்தினால் சந்தன மரச் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
 
யாழ்பாணத்தில் வடமாகாண சபையின் நிதியுதவியுடன் இந்த முலிகைத் தோட்டம் பராமரிக்கப்பட்டு வருகின்றது. மருத்துவ குணங்கள் கொண்ட அரிய வகை தாவரங்கள்,மரங்கள்,செடிகள் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.
 
இந்த தோட்டத்தில் அரியவகை மரமான சந்தன மரம் நடுகை செய்யப்பட்டு பாரமரிக்கப்பட்டு வருகின்றது.
 
குறிப்பாக மாதுழை மரத்திற்கு அருகில் இதனை நடுகை செய்தால் அதன் சத்தியைப் பெற்று சந்தன மரம் முதிர்ச்சியடையும் என்றும் அந்த அடிப்படையில் மாதுழை மரங்களுக்கு நடுவில் இந்த சந்தண மரம் நடுகை செய்யப்பட்டுள்ளதாக தோட்டப்பராமரிப்பாளர் தெரிவித்தார்.

நன்றி தமிழ் உலா.கொம்.

 

1370924383-tn-sandalwood-tree-sandalwood

 

 

 

Link to comment
Share on other sites

நவற்கிரி எண்டால் அச்சு வேலி நவற்கிரி தானே சிறீ...???

அப்படியானால் செம்பாட்டு மண்ணில் வருகிறது... எங்கட பக்கம் எல்லாம் புழுதி மணல்... தென்னை எண்டால் நல்லா வரும்... சந்தணக்கட்டை வருமா...??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நவற்கிரி எண்டால் அச்சு வேலி நவற்கிரி தானே சிறீ...???

அப்படியானால் செம்பாட்டு மண்ணில் வருகிறது... எங்கட பக்கம் எல்லாம் புழுதி மணல்... தென்னை எண்டால் நல்லா வரும்... சந்தணக்கட்டை வருமா...??

 

நீங்கள் குறிப்பிடும் அச்சுவேலி நவக்கீரி தான் தயா.

கீழுள்ள  தினமணி இணைப்பில் சந்தன  மர  வளர்ப்பை பற்றிய மேலும் சில தகவல்கள் உள்ளது.

 

கோவை : ""ஒரு ஏக்கரில் சந்தன மரம் வளர்த்தால், 15வது ஆண்டில், குறைந்தபட்சம் 1.5 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்'' என, தலைமை வனப்பாதுகாவலர் (ஆராய்ச்சி) பசவராஜூ தெரிவித்தார்.

"தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமை திட்டம்' பற்றிய கலந்தாய்வு கூட்டம், கோவை, வன மரபியல் அலுவலகத்தில், நேற்று நடந்தது. வனத்துறை தலைமை வனப்பாதுகாவலர் (ஆராய்ச்சி) பசவராஜூ, தலைமை வகித்து பேசியதாவது:

 

வனத்தில் மரம் வெட்ட தடை விதித்துள்ளதால், வனமரங்களை நம்பியிருந்த தொழிற்சாலைகள், பொதுமக்களுக்கு, தேவைக்கேற்ப மரங்கள் கிடைப்பதில்லை. சுற்றுச்சூழலால் புவி வெப்பமடைவதை தடுக்கவும், மக்களின் மரத்தேவையை பூர்த்தி செய்யவும், வனத்திற்கு வெளியே, தனியார் நிலத்தில் மரம் வளர்க்கும் திட்டத்தை, தமிழக அரசு துவங்கியுள்ளது.

 

ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கியின் நிதியுதவியுடன், தமிழகத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வரும் 2019 வரையிலும், எட்டாண்டு திட்டத்தின் மூலம், தமிழகத்தின் பசுமை பரப்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

வறட்சி, பாசன வசதியுள்ள பகுதிகளில் வளரக்கூடிய மரங்கள் பற்றிய ஆராய்ச்சியில், வனத்துறை ஈடுபட்டுள்ளது. தனியார் நிலத்தில், மரம் வளர்க்கும் திட்டம் மூலம், 10 கோடி மரக்கன்றுகள் 1.43 லட்சம் ஹெக்டர் பரப்பில், வரும் ஐந்தாண்டுகளில் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மாநிலத்தில், 30 மாவட்டங்களில் தரிசு நிலம் அதிகமுள்ள ஐந்தாயிரம் கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

தரிசு நிலங்களில் மரங்களை தொகுப்பாகவும், பாசன நிலத்தில் வரப்பு ஓரங்களிலும், வளர்க்க வேண்டும். இந்த திட்டத்தில், வனத்துறை ஆராய்ச்சிப் பணிகள் 2,163 ஹெக்டர் பரப்பில் 5.55 கோடி செலவில் மேற்கொள்ளப்படுகின்றன.

 

நெடுநாள் மற்றும் மத்திய கால மரங்கள், எரி மரங்கள், வேளாண் வானிலை, மூங்கில், உயிர் உரம், மர வர்த்தகம், மரம் சாரா வன உற்பத்தி தொடர்பாக ஆராய்ச்சி பணிகள் நடக்கவுள்ளன. விவசாயிகள் சவுக்கு, கத்தி சவுக்கு, யூகலிப்டஸ் போன்ற குறுகிய கால மரங்களையும், தேக்கு, பெருமரம், மலை வேம்பு, மூங்கில், ஈட்டி, வாகை மற்றும் வேம்பு போன்ற நீண்ட கால மரங்களையும், புங்கன், பூச்சான், இலுப்பை, கடுக்காய் மற்றும் நெல்லி போன்ற மரம் சாரா வனப்பொருட்கள் தரும் மரப்பயிர்களை சாகுபடி செய்யலாம்.

 

வனமரங்களில் விலை உயர்ந்த மரமான, சந்தன மரத்தை, விவசாயிகள் பயிர் செய்ய வேண்டும். ஒரு ஏக்கரில், 15 ஆண்டுக்கு, சந்தன மரம் வளர்த்தால் குறைந்தபட்சம் 1.5 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். சந்தன மரம் சோப்பு, ஊதுவர்த்தி, மருந்துகள் தயாரிக்க பயன்படுவதால், மவுசு குறையாத மரமாக உள்ளது.

இவ்வாறு, தலைமை வனப்பாதுகாவலர் பேசினார்.

 

தர்மபுரி கோட்ட வன அலவலர் அன்பு, கோவை வன விரிவாக்க அலுவலர் ராஜேஸ்வரன், தன்னார்வ அமைப்பினர் பேசினர்.

 

ஈரோடு வனச்சரக அலுவலர் அமிர்தலிங்கம் நன்றி கூறினார்.

டிப்ஸ்: நான்கு கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் தொகுப்பாக (கிளஸ்டர்) சந்தன மரம் பயிரிட்டால், திருட்டு பயம் இருக்காது. சந்தன மரங்கள், 15 ஆண்டுகளில் 40 செ.மீ., சுற்றளவுக்கு வளர்ந் ததும், விற்பனை செய்யலாம். சந்தனமரம் ஒட்டுண்ணி வகையை சேர்ந்ததால், தனியாக வளராது.

 

அதனால், சந்தன மரத்தின் அருகில் எலுமிச்சை, வாகை போன்ற மரங்களை, வளர்க்க வேண்டும். அந்த மரத்தின் வேர்களில் இருந்து சத்தை எடுத்து, சந்தன மரங்கள் வளரும். ஊடுபயிர் எலுமிச்சை மூலம், நிரந்தர வருவாய் கிடைக்கும். சந்தன மரத்தின் வருவாயை போனாசாக பெறலாம்.

 

நன்றி தினமலர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.