Jump to content

புலம் பெயர் தமிழர்கள் முதலீடுகளை மேற்கொள்ள வட மாகாண சபை ஆவண செய்யவேண்டும் - சந்திரநேரு


Recommended Posts

கிழக்கு மாகாணம் அம்பாரை மாவட்டத்தின் முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு தலைமையில் ..இது சென்ற வருடன் நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டது...

 

தம்பி சிறிலிங்கம்,

அம்பாறை மாவட்ட முன்னாள் பாரர்ளுமன்ற உறுப்பினர் திரு.சந்திரகாந்தன் எப்ப நீங்கள் சொல்லும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியவர் ? ஒருக்கா விளக்கம் சொல்லுவியளோ ?

 

ஏற்கனவே ஒருமுறை 6வது பக்கத்தில கேட்டிருந்தேன். நீங்கள் முதலீட்டு முயற்சிகளை ஒருங்கிணைக்கிறதில மறந்திட்டியள் போல ?

 

சந்திரகாந்தனுக்கு நல்லது செய்வீங்களெண்டுதான் இன்னும் நம்புகிறோம்.

 

ஏற்கனவே றிஷி என்றொரு இளைஞர் சில வருடம் முதல் உங்களது ஆர்வம் போன்று புலம்பெயர் தமிழர்களிடம் வந்தார் சந்தித்தார் பேசினார் அதையெல்லாம் நம்பி நமது மக்களும் முதலிட்டார்கள். பிறகு றிஷியை வலைபோட்டு இணையமெல்லாம் தேடி ரெலிபோனிலயும் தேடினது வரலாறு. ஆனால் வடை போச்சு.

வரும் நவம்பர்1-2 தேதி ஜேர்மனி - வூப்பர்டால் வர அங்குள்ள தமிழர்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது...சந்திக்க விரும்புவர்கள் நேரடியாக என்னைச் சந்திக்கலாம்... மேலதிக விபரங்கள் அறியத்தரப்படும்...

 

விபரத்தை தாங்கோ நானும் உங்களை சந்திக்க வருகிறேன்.

 

Link to comment
Share on other sites

  • Replies 132
  • Created
  • Last Reply

 

ஏற்கனவே றிஷி என்றொரு இளைஞர் சில வருடம் முதல் உங்களது ஆர்வம் போன்று புலம்பெயர் தமிழர்களிடம் வந்தார் சந்தித்தார் பேசினார் அதையெல்லாம் நம்பி நமது மக்களும் முதலிட்டார்கள். பிறகு றிஷியை வலைபோட்டு இணையமெல்லாம் தேடி ரெலிபோனிலயும் தேடினது வரலாறு. ஆனால் வடை போச்சு.

 

 

 

ரிசி புலம்பெயர் நாடுகளில் உள்ள கள்ளப் புலிகளுக்கு ஒத்துளைக்க மறந்ததால்...அவரைப் பற்றி அதிர்வு உட்பட அத்தனை கள்ளப் புலிகளும் சந்தேகம் கொண்டு காட்டிக் கொடுத்து..அனைத்துத் திட்டங்கலையும் நாசமாக்கினயல் எண்டு தெரியாதோ ???? - புலிக்கு கூசா தூக்காத யாரும் மக்களுக்கு வழிகாட்டக் கூடாதா???  புலிப் பெண்டன்ல மாலை போட்டவனெல்லாம் புலியா ??? போடாங் கொய்யாலே...

Link to comment
Share on other sites

ரிசி புலம்பெயர் நாடுகளில் உள்ள கள்ளப் புலிகளுக்கு ஒத்துளைக்க மறந்ததால்...அவரைப் பற்றி அதிர்வு உட்பட அத்தனை கள்ளப் புலிகளும் சந்தேகம் கொண்டு காட்டிக் கொடுத்து..அனைத்துத் திட்டங்கலையும் நாசமாக்கினயல் எண்டு தெரியாதோ ???? - புலிக்கு கூசா தூக்காத யாரும் மக்களுக்கு வழிகாட்டக் கூடாதா???  புலிப் பெண்டன்ல மாலை போட்டவனெல்லாம் புலியா ??? போடாங் கொய்யாலே...

 

புலியைச்சாட்டி வாழும் நீங்கள் தலைவரா வந்து தமிழரைக் காத்தருள்வீர்கள் என்ற நம்பிக்கையில் உங்களையே புலியாக ஏற்றுக்கொள்ளச் சொல்கிறீர்களா  சிறிலிங்கம் ? அல்லது புலியைக்காட்டி இங்கு புரட்சி செய்யும்  உங்கள் பின்னே தமிழர்படை அணிதிரளச் சொல்கிறீர்களா  ?

 

ரிஷியால் நொந்து போன ஏமாந்தவர்கள் இந்தக்களத்தில் உங்கள் அபிசேகத்தை பார்த்துக்கொண்டேயிருக்கிறார்கள்.

சரி வூப்பெற்றால் வந்து தலைமை தாங்கும் உங்கள் தரிசன நிகழ்வுக்கு நானும் இன்னும் பல யாழ்கள உறவுகளும் வர விரும்புகிறோம். உங்கள் தரிசனத்தை எங்களுக்கும் தந்தருளுமாறு இத்தால் தயவோடும் பணிவோடும் வேண்டுகிறோம்.அருள்கூருமாறு அடியவர்கள் வேண்டுகிறோம்.

Link to comment
Share on other sites

புலியைச்சாட்டி வாழும் நீங்கள் தலைவரா வந்து தமிழரைக் காத்தருள்வீர்கள் என்ற நம்பிக்கையில் உங்களையே புலியாக ஏற்றுக்கொள்ளச் சொல்கிறீர்களா  சிறிலிங்கம் ? அல்லது புலியைக்காட்டி இங்கு புரட்சி செய்யும்  உங்கள் பின்னே தமிழர்படை அணிதிரளச் சொல்கிறீர்களா  ?

 

ரிஷியால் நொந்து போன ஏமாந்தவர்கள் இந்தக்களத்தில் உங்கள் அபிசேகத்தை பார்த்துக்கொண்டேயிருக்கிறார்கள்.

சரி வூப்பெற்றால் வந்து தலைமை தாங்கும் உங்கள் தரிசன நிகழ்வுக்கு நானும் இன்னும் பல யாழ்கள உறவுகளும் வர விரும்புகிறோம். உங்கள் தரிசனத்தை எங்களுக்கும் தந்தருளுமாறு இத்தால் தயவோடும் பணிவோடும் வேண்டுகிறோம்.அருள்கூருமாறு அடியவர்கள் வேண்டுகிறோம்.

சிறிலிங்கத்தை யாழில் கேட்கத்தக்கவர்கள் யாழில் கேட்பதும் யாழில் உறுபினர்கள் அல்லாதவர்கள் சென்று சந்திப்பதும் நேரங்களை சேமிக்க உதவும்.

Link to comment
Share on other sites

'கீரை வாங்கலையோ கீரை...’ என கீரைக் கட்டுகளைத் தலையில் சுமந்து தெருத்தெருவாக கீரை விற்பனை செய்யும் பெண்களை இப்போதும் பார்க்கலாம். சாதாரணமாகச் செய்யக்கூடிய இந்தத் தொழிலையே கொஞ்சம் வித்தியாசமாக ஃபேஸ்புக் மார்க்கெட்டிங் மூலம் செய்து மதுரை மாநகரத்தையே கலக்கி வருகிறார் செல்வம். தனது அம்மா தலையில் சுமந்து செய்துவந்த கீரை வியாபாரத்தைக் கீரை அட்டை என்கிற பெயரில் நவீனமாக செய்து வருகிறார்.

பால் அட்டை கேள்விப்பட்டிருக் கிறோம். அது என்ன கீரை அட்டை..? செல்வத்திடமே கேட்டோம்.

''இந்தத் தொழிலை தொடங்குவதற்கு முன்பு மூன்று மாதம் வரை கீரை குறித்து ஓர் ஆய்வு நடத்தினோம். எங்கெங்கு, என்னென்ன வகையான கீரைகள் இருக்கு, அதனுடைய அடக்க விலை என்ன, ஒவ்வொரு கீரையின் பயன்கள் என்ன என்பது போன்ற அடிப்படையான விஷயங்களைத் தெரிந்து கொண்டோம்.

nav31a.jpg

அடுத்து, எங்கிருந்தெல்லாம் கீரையை வாங்குகிறோம், எந்தளவுக்கு சுத்தமானது என்றும் மக்களிடம் தெளிவுபடுத்துகிறோம். சோழவந்தான், கீழக்குடி, வாடிப்பட்டி, அழகர்கோவில், திண்டுக்கல் பகுதிகளில் இருந்துதான் கீரைகளைக் கொள்முதல் செய்கிறோம். தண்டுக்கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி, சிறு கீரை, வெந்தயக் கீரை, முருங்கைக் கீரை, முடக்கத்தான் கீரை, வல்லாரை கீரை, பாலக் கீரை, சக்கரவர்த்தி கீரை, கரிசலாங்கண்ணி கீரை, பிரண்டை, அகத்தி கீரை, நீராரை, முள்முருங்கை, லட்சக் கொட்டை, பருப்பு கீரை, பசலைக் கீரை உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட கீரை வகைகளை மதுரை மக்களுக்கு தினமும் தந்து வருகிறோம்.

கீரை எங்கள் கைக்கு வந்ததும் அப்படியே கட்டுகளைக் கட்டி விற்பனைக்கு அனுப்புவதில்லை. அதைச் சுத்தம் செய்வதில் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்கிறோம். சகதி, மண், பூச்சிகள், கொசு முட்டைகளையெல்லாம்  அகற்றி முறைப்படி சுத்தம் செய்தபிறகே, வீடுகளுக்கு சப்ளை செய்கிறோம்.

nav31c.jpg

சுத்தமான கீரை வீடு தேடி வருவதால் மக்கள் ஆர்வமாக வாங்குகிறார்கள்.  காலை 6.30 மணிக்குள் பால் பாக்கெட் போடுவதுபோல கீரையையும் சப்ளை செய்கிறோம். ஒரு வீட்டிற்கு வாரத்துக்கு மூன்று நாட்கள் போடுகிறோம். அப்படியென்றால் ஒரு மாதம் 12 நாட்கள், ஒரு நாளைக்கு இரண்டு கட்டு என்றால் 24 கட்டு வரை ஒரு வீட்டுக்கு விற்பனை செய்கிறோம்.

வாரத்தில் எந்தெந்த கிழமைகளில் என்னென்ன கீரைகள் வேண்டுமென்பதை வாடிக்கையாளர்களே தேர்ந்தெடுக்கிற மாதிரி அவர்களிடம் எழுதி வாங்கிக்கொள்கிறோம். இரண்டு கட்டு கீரை வாங்கினால் தள்ளுபடியும் தருகிறோம்.  இப்போதைக்கு 125 வீடுகளுக்கு கீரை சப்ளை செய்கிறோம்.

டோர் டெலிவரி போக, மதுரை அரசரடி மைதானத்தில் கடை போட்டும் கீரை விற்பனை செய்கிறோம். முதலீடு என்பது பெரிதாக இல்லை. ஒரு நாளில் தோராயமாக 750 ரூபாய் வரை முதலீடு செய்கிறோம். லாபம் 1,500 ரூபாய் வரை கிடைக்கிறது.

nav31b.jpg'உண்போம் கீரையை’ (UNBOM - Unit for Nurturing and Bridging organic merchandise) என்ற பெயரில் ஒரு விழிப்பு உணர்வு இயக்கமாகவும் ஆரம்பித்துள்ளோம்.

பாரம்பரிய விவசாயிகளை ஊக்குவித்து வருகிறோம்; விவசாயிகளுக்கும் மக்களுக்கும் ஒரு பாலமாக இருக்கிறோம்; இயற்கையில் விளையக்கூடிய பொருட்களை சந்தைப் படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறோம்.

ஃபேஸ்புக் மூலம் கீரை பற்றிய தகவல்களைக் கொடுத்து அதன் பயன்கள் என்ன, எப்படி சமைக்கலாம் என்பது போன்ற விஷயங்களைச் சொல்லி சந்தைப்படுத்தி வருகிறோம். இந்த வியாபாரத்தைக் கீரை வியாபாரம்தானே என்றில்லாமல் புரொஃபஷனலாகச் செய்வதால் மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. இதனை தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தில் பதிவு செய்தும் உள்ளோம். கீரை பிசினஸில் ஒரு நாளைக்கு ஐந்து முதல் ஆறு மணி நேரம் வரை உழைத்தாலே போதும், நல்ல வருமானம் ஈட்டலாம்.''

பெரிய பிசினஸ் முதல் சின்ன பிசினஸ் வரை காலத்துக்கு ஏற்ப புதுமையாக யோசித்தால் நிச்சயம் வெற்றிதான் என்பதற்கு ஓர் உதாரணம், இந்த கீரை அட்டை!

 

 

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=71316

Link to comment
Share on other sites

 

'கீரை வாங்கலையோ கீரை...’ என கீரைக் கட்டுகளைத் தலையில் சுமந்து தெருத்தெருவாக கீரை விற்பனை செய்யும் பெண்களை இப்போதும் பார்க்கலாம். சாதாரணமாகச் செய்யக்கூடிய இந்தத் தொழிலையே கொஞ்சம் வித்தியாசமாக ஃபேஸ்புக் மார்க்கெட்டிங் மூலம் செய்து மதுரை மாநகரத்தையே கலக்கி வருகிறார் செல்வம். தனது அம்மா தலையில் சுமந்து செய்துவந்த கீரை வியாபாரத்தைக் கீரை அட்டை என்கிற பெயரில் நவீனமாக செய்து வருகிறார்.

பால் அட்டை கேள்விப்பட்டிருக் கிறோம். அது என்ன கீரை அட்டை..? செல்வத்திடமே கேட்டோம்.

''இந்தத் தொழிலை தொடங்குவதற்கு முன்பு மூன்று மாதம் வரை கீரை குறித்து ஓர் ஆய்வு நடத்தினோம். எங்கெங்கு, என்னென்ன வகையான கீரைகள் இருக்கு, அதனுடைய அடக்க விலை என்ன, ஒவ்வொரு கீரையின் பயன்கள் என்ன என்பது போன்ற அடிப்படையான விஷயங்களைத் தெரிந்து கொண்டோம்.

nav31a.jpg

அடுத்து, எங்கிருந்தெல்லாம் கீரையை வாங்குகிறோம், எந்தளவுக்கு சுத்தமானது என்றும் மக்களிடம் தெளிவுபடுத்துகிறோம். சோழவந்தான், கீழக்குடி, வாடிப்பட்டி, அழகர்கோவில், திண்டுக்கல் பகுதிகளில் இருந்துதான் கீரைகளைக் கொள்முதல் செய்கிறோம். தண்டுக்கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி, சிறு கீரை, வெந்தயக் கீரை, முருங்கைக் கீரை, முடக்கத்தான் கீரை, வல்லாரை கீரை, பாலக் கீரை, சக்கரவர்த்தி கீரை, கரிசலாங்கண்ணி கீரை, பிரண்டை, அகத்தி கீரை, நீராரை, முள்முருங்கை, லட்சக் கொட்டை, பருப்பு கீரை, பசலைக் கீரை உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட கீரை வகைகளை மதுரை மக்களுக்கு தினமும் தந்து வருகிறோம்.

கீரை எங்கள் கைக்கு வந்ததும் அப்படியே கட்டுகளைக் கட்டி விற்பனைக்கு அனுப்புவதில்லை. அதைச் சுத்தம் செய்வதில் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்கிறோம். சகதி, மண், பூச்சிகள், கொசு முட்டைகளையெல்லாம்  அகற்றி முறைப்படி சுத்தம் செய்தபிறகே, வீடுகளுக்கு சப்ளை செய்கிறோம்.

nav31c.jpg

சுத்தமான கீரை வீடு தேடி வருவதால் மக்கள் ஆர்வமாக வாங்குகிறார்கள்.  காலை 6.30 மணிக்குள் பால் பாக்கெட் போடுவதுபோல கீரையையும் சப்ளை செய்கிறோம். ஒரு வீட்டிற்கு வாரத்துக்கு மூன்று நாட்கள் போடுகிறோம். அப்படியென்றால் ஒரு மாதம் 12 நாட்கள், ஒரு நாளைக்கு இரண்டு கட்டு என்றால் 24 கட்டு வரை ஒரு வீட்டுக்கு விற்பனை செய்கிறோம்.

வாரத்தில் எந்தெந்த கிழமைகளில் என்னென்ன கீரைகள் வேண்டுமென்பதை வாடிக்கையாளர்களே தேர்ந்தெடுக்கிற மாதிரி அவர்களிடம் எழுதி வாங்கிக்கொள்கிறோம். இரண்டு கட்டு கீரை வாங்கினால் தள்ளுபடியும் தருகிறோம்.  இப்போதைக்கு 125 வீடுகளுக்கு கீரை சப்ளை செய்கிறோம்.

டோர் டெலிவரி போக, மதுரை அரசரடி மைதானத்தில் கடை போட்டும் கீரை விற்பனை செய்கிறோம். முதலீடு என்பது பெரிதாக இல்லை. ஒரு நாளில் தோராயமாக 750 ரூபாய் வரை முதலீடு செய்கிறோம். லாபம் 1,500 ரூபாய் வரை கிடைக்கிறது.

nav31b.jpg'உண்போம் கீரையை’ (UNBOM - Unit for Nurturing and Bridging organic merchandise) என்ற பெயரில் ஒரு விழிப்பு உணர்வு இயக்கமாகவும் ஆரம்பித்துள்ளோம்.

பாரம்பரிய விவசாயிகளை ஊக்குவித்து வருகிறோம்; விவசாயிகளுக்கும் மக்களுக்கும் ஒரு பாலமாக இருக்கிறோம்; இயற்கையில் விளையக்கூடிய பொருட்களை சந்தைப் படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறோம்.

ஃபேஸ்புக் மூலம் கீரை பற்றிய தகவல்களைக் கொடுத்து அதன் பயன்கள் என்ன, எப்படி சமைக்கலாம் என்பது போன்ற விஷயங்களைச் சொல்லி சந்தைப்படுத்தி வருகிறோம். இந்த வியாபாரத்தைக் கீரை வியாபாரம்தானே என்றில்லாமல் புரொஃபஷனலாகச் செய்வதால் மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. இதனை தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தில் பதிவு செய்தும் உள்ளோம். கீரை பிசினஸில் ஒரு நாளைக்கு ஐந்து முதல் ஆறு மணி நேரம் வரை உழைத்தாலே போதும், நல்ல வருமானம் ஈட்டலாம்.''

பெரிய பிசினஸ் முதல் சின்ன பிசினஸ் வரை காலத்துக்கு ஏற்ப புதுமையாக யோசித்தால் நிச்சயம் வெற்றிதான் என்பதற்கு ஓர் உதாரணம், இந்த கீரை அட்டை!

 

 

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=71316

 

 

நன்றி நல்லதே நினைப்போம்... நல்லதே நடக்கும்...இணைப்பிற்கு நன்றி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயா அண்ணா,

உங்களின் கருத்துடன் உடன்படுகிறேன் ஆனால் கோழி பண்ணைகள் தொடங்ககூடாது என்ற கருத்தை தவற.

அதில்

டொரோண்டோவில் உள்ளூர் இயற்கை முட்டைகள் $9! ஒரு பவுண்ட் இயற்கை இறைச்சி $8! அடுத்த வருடம் நாங்களும் 300 வித விதமான உள்ளூர் குஞ்சுகளை வளர்க்க திட்டம். :) சோளம், கோதுமை போன்ற தானியங்களை நாங்களே வளர்த்து தீனி வேண்டும் செலவை குறைக்க திட்டம்.

 

எங்கை ஊரிலா அல்லது கனடாவிலா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் அண்ணா. 300 கோழிக்கு மேல் வளர்க்க வேண்டும் என்றால் குவோட்டா வாங்கவேண்டும். குவொட்டா வாங்க $2 மில்லியன் டொலர் தேவை. பின் வியாபாரம் தொடங்க இன்னொரு $2 மில்லியன் தேவை.

கனடாவில் சிறு விவசாயிகள் இப்போதும் அரிதான பல வகை கோழிகளை வளர்க்கிறார்கள். அவைகளை வாங்கி இனத்தை பெருக்கி அந்த இனங்கள் அழியாமல் பாதுகாப்பதும் எமது நோக்கம்.

உலகம் பூரா பல சிறிய விவசாயிகள் இப்படி செய்கிறார்கள். பெரிய ஒரு சில நிறுவனங்களில் தங்கி இருப்பதையும் குறைக்கும் திட்டம்.

மற்றும் இயற்கை உணவை "REAL FOOD" என்று அழைப்போம்.

$2 டசின் முட்டைகளில் REAL முட்டைகளில் இருக்கும் சத்து இல்லை. காரணம், $2 டசின் முட்டை தயாரிக்கும் விதம் அப்படி.

ஒரு பெரிய வெளிச்சம் புகாத கூண்டுக்குள் பல்லாயிரகணக்கான கோழிகளை அடைத்து வைத்திருப்பார்கள். இவை தம் ஒரு வருட வாழ் நாளில் சில அடிகள் தான் உலாவி இருக்கும்.

அவைகளுக்கு முன் ஒரு நகரும் நாடாவில் ஜி.எம்.ஒ சோள தீனி 24 மணி நேரமும் ஓடும், அதே நேரம் கோழிகளுக்கு அடியில் அவைகளின் கழிவுகளை அகற்றும் நாடா ஓடும். பின் கழிவு நாடா சென்று தீனி நாடாவுடன் சேர்ந்து திரும்ப தீனியாக உண்ண வரும்.

இந்த கோழிகள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த படியால் நீரில் எப்போதும் அன்டிபயோடிக் கலந்திருக்கும்.

இந்த கூண்டுக்குள் இருக்கும் மின் விளக்குகள் ஒரு நாளைக்கு இரண்டு இரவுகளை உருவாக்கி இந்த கோழிகளை நாளைக்கு இரண்டு முட்டைகள் போட வைக்கும்.

ஒரு வருடம் முடிந்த பின் இந்த கோழிகள் கழிவுகள் ஆகிவிடும். பின் அது இறைச்சிக்கு அனுப்பபடும்.

FOOD INC விவரண படத்தில் இதை விரிவாக காட்டுகிறார்கள்.

எமது வாடிக்கையாளர்கள் இதனால் தான் காசு கூட கொடுத்து இயற்கை உணவுகளை உண்டு நோய் நொடிகளில் இருந்து தம்மை காப்பாற்றுகிறார்கள்.

தமிழீழத்திலும் தன்சார் ஊர்கோழி வளர்ப்புகள் ஊக்குவிக்க படவேண்டும்.

உங்கள் விரிவான விழக்கத்துக்கு மிக்க நன்றி.இங்கும் இயற்கை கோழிகளுக்காக கிழைமை கணக்ல் காவல் இருந்து 4 மடங்கு அதிக விலை கொடுத்து வாங்குவார்கள்.எனக்கும் ஊரில சிறிய அனுபவம் இருக்கு.ஆனால் நவீன முறையில் ஏதாவது செய்தால் வெற்றி அடையலாம்.தேவைப்படும் போது உங்களை தொடர்பு கொள்கிறேன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடக்கு-கிழக்கில் தமிழ்த்தேசியம் பலவீனமாக உள்ளது. எதிர்ப்பு அரசியலால் சலித்துப்போனவர்கள் அதிகரித்துள்ளார்கள். பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்ப வெளிநாடுகளுக்கு ஓடமுயல்கின்றார்கள். இந்த நிலையில் மக்கள் இயல்பாகவே தமது தனிப்பட்ட வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஸ்திரமான ஆட்சியை யார் தருவார் என்று பார்ப்பார்களே தவிர, ஒரு திரளாக கொள்கைக்கு வாக்களிக்கமாட்டார்கள்.  ஆகவே, சிங்களத் தலைவர்கள்  “தமிழர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை” என்று சொன்னால் அதை மறுதலிக்கமுடியாத நிலைதான் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் மூலம் உருவாகும். அது ஒரு வகையில் தமிழரின் தலைமை இனப்பிரச்சினைக்கு என்ன வகையான தீர்வை முன்னெடுக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கவும் உதவலாம்!
    • தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவர் அறிக்கை! தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா அறிக்கையொன்றை விடுத்துள்ளார். தற்போதைய அரசியல், பொருளாதார சூழலில் தமிழ் மக்கள் தமது இருப்பை நிலைநிறுத்தவும் உரிமைக் கோரிக்கைக்கான ஒரு குரலாகவும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயத்தை முன்வைப்பது பொருத்தமாக இருக்கும் என கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவதனூடாக, தமிழர்கள் சிங்கள ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கையிழந்து விட்டார்கள் என்பதையும் தமிழ் மக்களின் உரிமைக்காக ஒன்றுபட்டமையை பொது வேட்பாளருக்கு திரளாக வாக்களிப்பதன் மூலம் உணர்த்த முடியும் எனவும் அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் பொது வேட்பாளர் என்ற எண்ணக்கருவை எதிர்ப்பவர்கள் பேரினவாத ஆட்சியாளர்கள் வெல்வதற்கே துணை செய்கிறார்கள் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா கூறியுள்ளார். -(3)   http://www.samakalam.com/தமிழ்-பொது-வேட்பாளர்-தொட/
    • நன்றி @கந்தப்பு நீங்களும் கலந்துகொள்ளவேண்டும்😀 @முதல்வன், 19 ஆவது கேள்விக்கு அணியின் பெயரைத் தாருங்கள் அல்லது RR என்று போட்டுக்கொள்ளவா?
    • இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொடர்பில் வெளியான தகவல்கள்! 16 APR, 2024 | 11:03 AM   இலங்கையின் தென் கடற்பரப்பில் கடந்த 12ஆம் திகதி  இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட  சுமார் 380 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், துபாயில் உள்ள இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரால் அனுப்பப்பட்டமை  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கையின்போது இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்ரரக்க்ஷா’ என்ற கப்பலினால் 133 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் இந்த ஹெரோயின் மற்றும் ஐஸ்  கைப்பற்றப்பட்டுள்ளன.   கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 179 கிலோ 906 கிராம் ஐஸ் மற்றும் 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் அடங்குகின்றன. அத்துடன், இந்தப் போதைப்பொருளைக் கொண்டு வந்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன் 6 பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/181204
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM   பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.