Jump to content

ஐங்கரநேசனுக்கும் எமக்கும் இனி எவ்வித தொடர்புமில்லை! மாவைக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் கடிதம்!!


Recommended Posts

 

 


TNAயின் அமைச்சரவை வெறுமனே தமிழரசுக் கட்சியின் அமைச்சரவையே- நாளையஅமர்வை ஏனையகட்சிகள் பகிஸ்கரிக்குமா?

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97528/language/ta-IN/article.aspx

அன்புடன் தமிழரசுக் கட்சி செயலாளர் அவர்கட்கு - சுரேஷ். க.பிரேமச்சந்திரன், பா.உ. - கடிதம் இணைப்பு

GTMN

Audio

 

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அமைச்சரவை வெறுமனே தமிழரசுக்கட்சியின் அமைச்சரவையே. அதனை பங்காளிக்கட்சிகள் ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதாக் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
 
அமைச்சரவை முடிவு தொடர்பாக கூட்டமைப்பின் பேரினி விடுக்கப்பட்ட ஊடக அறிக்கை பொய்யானது. அது வெறுமனே சிலவேளைகளில் தமிழரசுக்கட்சியினது அமைச்சரவையாக இருக்கலாம் எனவும் இன்றைய தினம் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்தார். 
 
இதனிடையே நாளைய அமைச்சரவை பதவியேற்பு மற்றும் சத்தியப்பிரமாண நிகழ்வுகளை தங்கள் கட்சி பகிஸ்கரிக்குமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் இன்றிரவு தமது கட்சியின் மத்திய குழு ஒன்று கூடி முடிவெடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.
 
அதே வேளை தங்கள் சகோதரர் சர்வேஸ்வரனிற்கு அமைச்சு கோருவதாக வெளியிடப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களை நிராகரித்த அவர் அதற்காக சர்வேஸ்வரன் தகுதிகளை கொண்டிருக்கவில்லை என அர்த்தப்படாதெனவும் தெரிவித்தார். தங்கள் கட்சியின் நிலைப்பாடாக முல்லைத்;தீவில் தொடரும் நில ஆக்கிரமிப்பு மற்றும் குடியேற்ற திட்டங்கள் தொடர்பாக பேசுவதற்கு ஏதுவாக தமது கட்சிக்கு அமைச்சரவை வழங்கப்பட்டால் அது முல்லைதீவில் தெரிவானவர்களிற்கே வழங்கப்பட வேண்டுமென ஏற்கனவே சம்பந்தனிடம் தெரிவித்துள்ளமையையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இதனிடையே தமது கட்சியை சேர்ந்த பொன்னுத்துரை ஐங்கரநேசனுக்கு வடமாகாண சபையில் அமைச்சர் பதவி கொடுப்பதான அறிவிப்பு வெளியிலிருந்து கட்சிகளை உடைக்குமொரு தமிழரசுக்கட்சியின் சதியே எனவும் அவர் தெரிவித்தார்.
 
வடமாகாண சபை அமைச்சரவை விபரம் எனக்கூறி பட்டியலொன்று நேற்று மாலையில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது. அதில் பொன்னுத்துரை ஜங்கரநேசன் விவசாய அமைச்சராகத் தெரிவு செய்யப்படடுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
எனினும் 'ஐங்கரநேசன் அமைச்சராக தெரிவு செய்யப்பட்டது தமிழரசுக் கட்சியின் முடிவு மட்டுமே என்பதுடன், அது ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் சம்மதத்துடன் நடைபெறவில்லை' எனவும் சுரேஸ் மேலும் தெரிவித்தார்.
 
கௌரவ மாவை.சோ. சேனாதிராசா, பா.உ,
பொதுச்செயலாளர்
இலங்கைத் தமிழரசுக் கட்சி
மாட்டின் வீதி
யாழ்ப்பாணம்
10.10.2013

அன்புடன் தமிழரசுக் கட்சி செயலாளர் அவர்கட்கு,
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினால் பரிந்துரைக்கப்பபட்டு தழிரசுக் கட்சியின் சின்னமான வீட்டுச் சின்னத்தில் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டு வடமாகாணசபையின் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட பொ.ஐங்கரநேசன் என்பவர் தனிப்பட்ட முறையில் வடமாகாணசபைக்கான அமைச்சுப் பதவியைப் பெற்றதன் காரணமாகவும் தனக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கும் இனி எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும் இந்த அமைச்சுப் பதவியானது தமிழரசுக் கட்சியினுடைய தலைமையின் பரிந்துரையின் பேரில், முதலமைச்சரினால் தனக்குத் தனிப்பட்டரீதியில் வழங்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார். அதுவே உண்மையுமாகும். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமான என்னுடன் பொ.ஐங்கரநேசன் அவர்கட்கு அமைச்சுப் பதவி வழங்குவது தொடர்பாக தமிழரசுக் கட்சியோ முதலமைச்சரோ எவ்விதக் கருத்துப் பரிமாற்றங்களையும் மேற்கொள்ள வில்லை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். 

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கு ஒரு அமைச்சுப் பதவியை நீங்கள் வழங்க விரும்பினால் அதனை முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வழங்குமாறு நான் கோரியிருந்தபோதிலும் என்னுடன் எவ்விதக் கலந்துரையாடலும் மேற்கொள்ளப்படாமல், முடிவெடுக்கப்பட்டுள்ளது.

எனவே திரு பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளபடி, அவருக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கும் எதிர்காலத்தில் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதைத் தங்களுக்குத் தெளிவு படுத்துவதுடன் அவர் கூறியது போன்றே அவருக்குக் கொடுக்கப்பட்ட அமைச்சுப் பொறுப்பானது தனிப்பட்ட முறையில் அவருக்கு வழங்கப்பட்டதென்ற அடிப்படையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்து ஆறு ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கு எந்தவிதமான அமைச்சுப் பதவியும் வழங்கப்படவில்லை என்பதைத் தங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். எதிர்காலத்தில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கு ஓர் அமைச்சுப் பதவியை வழங்கியதாக தவறானதும் பொய்யானதுமான பரப்புரைகளைச் செய்ய வேண்டாமென்று கேட்டுக்கொள்வதுடன் செய்ய மாட்டீர்கள் என்றும் நம்புகின்றேன்.
நன்றி.
இப்படிக்கு
சுரேஷ். க.பிரேமச்சந்திரன், பா.உ.,
செயலாளர் நாயகம்,
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
 
 
 

 

Link to comment
Share on other sites

சபாஸ் சுரேஷ் ,அடுத்த தேர்தலுக்கு EPRLF(ஐங்கரன் )அணி உருவாக வழி வகுத்துள்ளீர்கள் .நீங்களும் மற்றைய கட்சிகளும் வெளியேறினாலும் தமிழரசுக்கட்சி தனித்து ஆட்சி அமைக்கும் .நீங்கள் எல்லோரும் பதவி கேட்டு குழப்புவீர்கள் என்று தெரிந்துதான் மக்கள் தமிழரசுக்காரருக்கு வாக்களித்து அதிகப்படியானவர்களை தெரிவு செய்துள்ளார்கள் .

 

 

Link to comment
Share on other sites

தனிமரம் தோப்பாகாது ஹரி.

 

தமிழரசுக் கட்சிக்கு தற்போது முதியவர்களின் வாக்கு வங்கியே உள்ளது. அத்தோடு, அவர்கள் மக்களுக்கு மத்தியில் சென்று பிரச்சாரம் செய்வதும் இல்லை. அத்தோடு, தனிப்பட்ட ரீதியாகவோ அமைப்பு சார்பாகவோ அதாவது, சனசமூக நிலையங்களோ, சமூக அமைப்புக்கள் மத்தியிலோ தமிழரசுக் கட்சியினர் செல்வதும் இல்லை. அவர்களின் முதுமை விடாது.

 

ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப், புளொட் ஆகியனவற்றுக்கு பெருமளவிலான இளைய மற்றும் நடுத்தர வயதினரின் வாக்கு வங்கிகள் உள்ளன. அவர்கள், தாம் முன்னர் விட்ட தவறுகளுக்கு பிராயச்சித்தமாக மக்களுக்கு தம்மால் இயன்றளவு உதவிகள் புரிந்து வருகின்றனர்.

 

ரெலோவுக்கு மன்னாரிலும் புளொட்டுக்கு வவுனியா, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணத்திலும் செல்வாக்கு நிறையவே உள்ளன. அதேபோன்று ஈ.பி.ஆர்.எல்.எஃப்புக்கும் செல்வாக்கு உள்ளன.

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிதறுமாயின் அதற்கு தார்மீகமான முழுப்பொறுப்பினையும் சம்பந்தன், மாவை, சுமந்திரன் தற்போது இவர்களுடன் இறுதியாக இணைந்து கொண்ட சி.விக்கினேஸ்வரனும் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.

Link to comment
Share on other sites

தனிமரம் தோப்பாகாது ஹரி.

 

தமிழரசுக் கட்சிக்கு தற்போது முதியவர்களின் வாக்கு வங்கியே உள்ளது. அத்தோடு, அவர்கள் மக்களுக்கு மத்தியில் சென்று பிரச்சாரம் செய்வதும் இல்லை. அத்தோடு, தனிப்பட்ட ரீதியாகவோ அமைப்பு சார்பாகவோ அதாவது, சனசமூக நிலையங்களோ, சமூக அமைப்புக்கள் மத்தியிலோ தமிழரசுக் கட்சியினர் செல்வதும் இல்லை. அவர்களின் முதுமை விடாது.

 

ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப், புளொட் ஆகியனவற்றுக்கு பெருமளவிலான இளைய மற்றும் நடுத்தர வயதினரின் வாக்கு வங்கிகள் உள்ளன. அவர்கள், தாம் முன்னர் விட்ட தவறுகளுக்கு பிராயச்சித்தமாக மக்களுக்கு தம்மால் இயன்றளவு உதவிகள் புரிந்து வருகின்றனர்.

 

ரெலோவுக்கு மன்னாரிலும் புளொட்டுக்கு வவுனியா, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணத்திலும் செல்வாக்கு நிறையவே உள்ளன. அதேபோன்று ஈ.பி.ஆர்.எல்.எஃப்புக்கும் செல்வாக்கு உள்ளன.

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிதறுமாயின் அதற்கு தார்மீகமான முழுப்பொறுப்பினையும் சம்பந்தன், மாவை, சுமந்திரன் தற்போது இவர்களுடன் இறுதியாக இணைந்து கொண்ட சி.விக்கினேஸ்வரனும் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.

தமிழரசுக்கட்சி மாதிரி ஆலமரம் தோப்பாக வேண்டியதில்லை. ஒவ்வொரு விழுதும் ஒரு மரமாகிவிடும். 

 

தாங்கள் நிறையத்தான் தேர்தலில் முன்னரும் பின்னரும்  அரசியல் ஆய்வுகள் செய்தனீர்கள். ஆனால் வீட்டு சின்னத்திற்கு 80% மக்கள் வாக்களித்தவர்கள். 

 

மந்திரிப்பதவி ஏற்றார் என்பதற்காக அவரை கட்சியில் நின்று மாவைக்கு ஒரு கடிதம் எழுதுவது போன்ற ஒரு செயலுடன் அவரை இவரால் பதவி நீக்க முடியுமாயின். EPRLF யை கூட்டமைப்பில் வைத்திருப்பது சர்வாதிகாரத்தையும் கூட்டமைப்பில் இணைப்பது போன்றது.

Link to comment
Share on other sites

தமிழரசு கட்சியின் வாக்கு வங்கியே முதியவர்கள் தான் காலம் செல்ல செல்ல அது குறைந்திடும் கூட்டமைப்பில் இருக்கும் மற்றை நான்கு கட்சிகளும் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் அரசு கட்சியை கலட்டி விட்டு போட்டி போட்டால் நிச்சயம் தமிழ் அரசு கட்சியின் வாக்கு வங்கியை உடைக்கலாம் சுரேஷ் ஒரு சிறந்த பேச்சாளர் இராணுவத்துக்கு எதிராக பல போராட்டங்களை ஜனநாயக வழியில் முன்னின்று நடத்தியவர் ஒரு கட்சியில் யார் அமைச்சராக வேண்டும் என்று அந்த கட்சி தலைமை தான் தீர்மானிக்க முடியுமே ஒழிய சம்மந்தன் விக்கி கும்பல் தீர்மானிக்க முடியாது

Link to comment
Share on other sites

சித்தார்த்தன்,  சிவாஜிலிங்கம், ஆனந்தசங்கரி,  மற்றும் பல எலிகள் கூடி மணிகட்ட மாட்டா.

 

V.பொன்னம்பலம் போன்ற சிறந்த பேச்சாளிகள் தேர்தல் வெல்லவில்லை. தர்மலிங்கம் மாதிரி பேசவே தெரியாவர்கள்  தேர்தலில் வென்றார்கள். 

 

அரசு தேர்தலில் 10, 12 சுயேட்சை கட்சிகளை களம் இறக்கியது. போன இடம் தெரியாது.

 

EPRLF தான் மாவை முதலமைச்சராக கூடாது என்று விக்கினேஸ்வரனை கொண்டு வரப்பண்ணியது. மாவை விட்டுக்கொடுத்தார். தனக்கு வரவேண்டிய பதவியை தியாகம் செய்தார்.

 

EPRLF இந்தியாவின் நேரடி தலையீடு இல்லாமல் கூட்டமைப்பின் தலைமைக் கட்சியாவது கஸ்டம்.  வரதரை தூக்கி நிறுத்தியது போல இனி இந்தியா செய்யவும் மாட்டாது. 

 

 

 

 

Link to comment
Share on other sites

காலம் பதில் சொல்லும் .பொறுமையாக காத்திருங்கள் 

Link to comment
Share on other sites

ஆம் காலம் பதில் சொல்லும் பழசுகள் எல்லாம் மண்டைய போட தமிழ் அரசு கட்சியின் வாக்கு வங்கி எங்கே போகுதெண்டு பாப்பம்

Link to comment
Share on other sites

சுண்டல், 

 

விறுவிறுப்பான ஆட்சி செய்ய இளைஞர்கள் தேவை. அமெரிக்கா, பிருத்தானியா, கனடா, அவுசி எங்குமே இன்றைய கால கட்டத்தில் பழையவர்கள் இல்லை. இந்த நாடுகள் சுறு சுறுப்பான அரசியல் தேவையில் இருக்கின்றன. பாரிய பொருளாதார நெருக்கடியை அந்த நாட்டுமக்கள் உணருகின்றார்கள். ஆனால் அது வல்ல இலங்கையின் கதி.  (அவர்கள் சந்திர மண்டல அரிசிக்காக காத்திருப்பவர்கள்). அதனால் தெற்கிலோ வடக்கிலோ இளைஞர்கள் இன்னும் மேலே வரவில்லை. அதுதான் அவர்களின் தேவை. சம்பந்தர் போனால் தமிழரசுக்கட்சியின் தலைமை விக்கினேஸ்வரனுக்கு வரும் சந்தர்ப்பம் கூடவே அல்லாமல் சிறீதரன் வர நிறையக் காலம் இருக்கு. அதற்கான அரசியல் சூழ்நிலைகள் அங்கில்லை. மாவை கூட வரம முடியாது என்பதைத்தான் அவரிடமிருந்து தட்டுண்டு போன முதலமைச்சர் பதவி காட்டுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் என்ற ஒற்றை நாமத்தால் கட்டி வைத்திருந்த கூட்டமைப்பு.. சம்பந்தரின் சாணக்கியத்தின் வீரியத்தில் சிதைந்து சின்னாபின்னமாகி.. தமிழினத்தை நடுத்தெருவிற்கு கொண்டு வரும்.. அடுத்த அத்தியாயம் ஆரம்பம்.

 

ஈபி யோ.. ரெலோவோ.. புளொட்டோ.. ஈபிடிபி யோ.. கருணாவோ.. பிள்ளையானோ..கூட்டணியோ.. தமிழரசுக் கட்சியோ..  தமிழ் மக்கள் தனிச்சுச் சந்தித்து வெற்றி பெறுவது என்பது கனவிலும் எனி நடக்காது.. இதனை இவர்கள் புரிந்து கொள்ள மறுத்தால்.. மக்கள் அதனைப் புரிய வைப்பார்கள். அதனை புலம்பெயர் மக்களும் தாயக மக்களும் தமிழக மக்களும்..உணர்த்தி நிற்பார்கள்...!

 

சுரேஸ் மீண்டும்.. மண் கவ்வு அரசியலைத் தேடாமல்.. அதே நேரம் சம்பந்தரின்.. ஏதேச்சதிகாரத்திற்கு அடிபணியாமலும்.. தமிழ் மக்களின் நலனை.. தேசிய தலைவரின் எதிர்பார்ப்பை.. மாவீரர்களின் தியாகங்களை மனதில் இருத்தி செயற்படுதல் வேண்டும். மீண்டும் ஒரு முறை மண்டையன் குழு அரசியல் செய்ய தீர்மானித்தால்  விளைவு.. மோசமாகவே இருக்கும்..! :icon_idea::)

Link to comment
Share on other sites

என்ன நெடுக்கு பேசுகறீர்கள். தற்போதைய அரசியற் சூழ்நிலையில் ரெலோ, புளட், ஈபிஆர்எல்எஃப் போன்றன மட்டுமல்ல புலிகளின் அரசியற் சித்தாந்தத்தை கொள்பவர்களாலும் தனித்துநின்று எதையும் சாதிக்க முடியாது. விடுதலைப்புலிகளின் வீரத்திற்கும் அவர்களின் தியாகத்திற்கும் மதிப்பு கொடுத்து அவர்கள் பின்னால் மக்கள் எழுச்சியுடன். திரண்டது உண்மை. தாங்களே உருவாக்கிய பலத்தை சரிவர கையாள தெரியாமல் பேச்சு வார்த்தைக் காலத்தில் தவறுகள் பல புரிந்து சறுக்கி வீழ்நது அப்பலத்தை இழந்து தோல்வியை தழுவிய பின் புலிகளின் அரசியலில் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். அதற்கு சாட்சி புலிகளின் அரசியலை முன் நிறுத்திய கஜேந்திரன் அணியின் படு தோல்வி. யதார்த்தம் உணர்ந்த தம்மை தாமே நிர்வகிக்கும,கௌரவமான, அதேவேளை நடைமுறைச்சாத்தியமான தீர்வையே

மக்கள் விரும்புகின்றனர்.தனியே புலியெதிர்ப்பு அரசியலை முன்னெடுத்த டக்லசின் சரணாகதி அரசியலையும் மக்கள் நிராகரித்து இராணுவ அதிகார பண பலத்தை பாவித்த அவரின் திமிரை அடக்கியுள்ளனர்.

Link to comment
Share on other sites

பாரதியார் பாடல்கள் படித்துவிட்டு இன்று படுக்கைக்கு போகவேண்டும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நெடுக்கு பேசுகறீர்கள். தற்போதைய அரசியற் சூழ்நிலையில் ரெலோ, புளட், ஈபிஆர்எல்எஃப் போன்றன மட்டுமல்ல புலிகளின் அரசியற் சித்தாந்தத்தை கொள்பவர்களாலும் தனித்துநின்று எதையும் சாதிக்க முடியாது. விடுதலைப்புலிகளின் வீரத்திற்கும் அவர்களின் தியாகத்திற்கும் மதிப்பு கொடுத்து அவர்கள் பின்னால் மக்கள் எழுச்சியுடன். திரண்டது உண்மை. தாங்களே உருவாக்கிய பலத்தை சரிவர கையாள தெரியாமல் பேச்சு வார்த்தைக் காலத்தில் தவறுகள் பல புரிந்து சறுக்கி வீழ்நது அப்பலத்தை இழந்து தோல்வியை தழுவிய பின் புலிகளின் அரசியலில் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். அதற்கு சாட்சி புலிகளின் அரசியலை முன் நிறுத்திய கஜேந்திரன் அணியின் படு தோல்வி. யதார்த்தம் உணர்ந்த தம்மை தாமே நிர்வகிக்கும,கௌரவமான, அதேவேளை நடைமுறைச்சாத்தியமான தீர்வையே

மக்கள் விரும்புகின்றனர்.தனியே புலியெதிர்ப்பு அரசியலை முன்னெடுத்த டக்லசின் சரணாகதி அரசியலையும் மக்கள் நிராகரித்து இராணுவ அதிகார பண பலத்தை பாவித்த அவரின் திமிரை அடக்கியுள்ளனர்.

 

உங்களை விட மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். தேசிய தலைவரின் கீழான விடுதலைப்புலிகள் அமைப்பின் இராணுவத் தோல்வி குறித்தும் அவை தொடர்பான பின்னணிகள் குறித்தும் மக்களுக்கு அதிகம் தெரிகிறது. ஆனால் நீங்கள்... எரிக்சொல்கைம் போன்ற கையாலாகாதவர்களின் நிலையில் நின்று புலிகளை பார்க்கக் காட்ட நினைப்பது தான் கேவலமாகத் தெரிகிறது..!

 

மேலும்.. தேசிய தலைவர் அடையாளப்படுத்திய கூட்டமைப்பையும்.. அங்கத்தவர்களையும் மக்கள் அன்று தேர்ந்தெடுத்தார்கள். இன்று புலிகள் அடையாளப்படுத்தாமலே.. புலிகள் கொண்ட அதே நம்பிக்கையை.. கொள்கையை.. உறுதியைக் கொண்ட உண்மையாக மக்களுக்காக உழைக்கக் கூடியவர்களை கூட்டமைப்பு என்ற அதே தேசிய தலைவரின் அடையாளத்துக்குள்.. மக்கள் தெரிவு செய்யத் தயங்குவதில்லை. இதற்குக் காரணம்.. புலிகளால் தான்.. உண்மையில்.. சிங்கள.. இராணுவ மற்றும் ஒட்டுக்குழு அடக்குமுறைகளுக்குள் இருந்து தம்மை அரசியல் சமூக ரீதியில் விடுவிக்க முடியும் என்ற ஒரு நம்பிக்கை இன்னும் மக்கள் மத்தியில் இருப்பது தான்.

 

கூட்டமைப்பு என்ற அந்த தேசிய தலைவரின் அடையாளத்துக்கு வெளியில் போய்.. முன்னாள் புலிகள் நின்றால் கூடத் தோற்பார்கள். காரணம்.. தேசிய தலைவர் அவர்களையோ வேறு ஆட்களையோ அதற்கு வெளியில் தேர்தல் அரசியலில் அடையாளம் காட்டவில்லை. தேசிய தலைவர் சிங்கள தேசத்தின் தேர்தல் அரசியலில்.. தமிழ் மக்கள் ஒற்றுமையாக நின்றால் தவிர வேறு வழியில்.. தமது பலத்தை காட்ட முடியாது என்று நம்பித்தான்... தமிழ் தேசியக்  கூட்டமைப்பு என்ற அந்த எண்ணக்கருவுக்கு செயல்வடிவம் கொடுத்தார். ஒரு காலத்தில் மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட.. தமிழீழ விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணியைக் கூட தேசிய தலைவர் உயிர்ப்பிக்க விரும்பி இருக்கவில்லை..!

 

மக்கள் அதனையே இப்போதும்.. எப்போதும் விரும்புகிறார்கள். கஜேந்திரன் என்ற தனி வேட்பாளர் தோற்கவில்லை. அவர் தேசிய தலைமையின் அடையாளத்தை விட்டு வெளியில போனது தான் தோல்விக்குக் காரணம். அதேபோல்.. சுரேஸோ.. சித்தார்த்தனோ.. மாவையோ.. சம்பந்தனோ.. கூட்டமைப்பை  விட்டு வெளியில் போய் வென்று காட்ட நினைத்தால் அவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர். இந்த சுரேஸ்.. சித்தார்த்தன்.. சங்கரி எல்லாம் தனிய நின்று தோற்றுப் போன பின் தான் தேசிய தலைவர் மக்களுக்கு அடையாளப்படுத்திய தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் நுழைந்து மக்கள் முன் வர முடிந்தது..!

 

கஜேந்திரன் மட்டுமல்ல.. கூட்டமைப்பை விட்டு வெளியே போய் தோற்ற சிவாஜிலிங்கம்.. மீண்டும் கூட்டமைப்புக்குள் நின்று வெற்றி பெற்றுள்ளமை இதற்கு நல்ல எடுத்துக்காட்டு.

 

மக்கள்.. தேசிய தலைமையின் அத்தனை நகர்வுகளிலும் இப்போதும் நம்பிக்கை கொண்டே உள்ளனர். அதன் இராணுவத் தோல்வி என்பதை மக்கள் சரியாக விளங்கிக் கொள்வதோடு.. அது தலைமையின் சக்திக்கு மீறிய சர்வதேச சதிகளால்.. பலத்தால் நிகழ்த்தப்பட்ட ஒன்று என்பதையும் உணர்கிறார்கள். இருந்தும்.. தேசிய தலைமையின் இலட்சியத்தின் பால் மக்கள் இப்போதும் நம்பிக்கை கொண்டே உள்ளனர். தேசிய தலைவரும் புலிகளும்.. எமது மக்களுக்கு அடையாளப்படுத்திய.. சுயநிர்ணய உரிமை... தாயகக் கோடுபாடு.. சுயாட்சி.. சமஸ்டி.. சிங்கள ஆக்கிரமிப்பை அகற்றல்.. என்ற அந்த மக்கள் உரிமைக்கான.. பதங்களைச் சொல்லித்தான் விக்னேஸ்வரன் கூட வாக்குக் கேட்க முடிந்தது..!

 

தேசிய தலைவரின் மதிநுட்பமான.. தீர்க்கதரிசனம் மிக்க ஒரு வழிகாட்டலே தமிழ் தேசியக் கூட்டமைப்பு... என்ற சிந்தனை மக்களிடம் ஆழப் பதிந்துள்ளது. அதனை மீறி.. எவர் நின்றாலும் அவர்கள் தோற்பார்கள்..! அதேபோல்.. கூட்டமைப்பை தேசிய தலைமை விரும்பியதற்கு மாறாக.. தவறாக வழி நடத்த எவர் முனைந்தாலும் அப்போது கூட்டமைப்பும் தோற்கலாம்.. அதை மக்கள் செய்வார்கள். அதனை இன்று கூட்டமைப்புக்குள் இருந்து பதவி மோகம் பிடித்து அலைவோர்.. எதேச்சதிகாரம் பிரயோகிப்போர் புரிந்து கொள்ளத் தவறினால் மக்கள் அவர்களுக்கு சரியான நேரத்தில் சரியான பாடம் புகட்டுவார்கள்..!

 

தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்கள் தேசிய தலைமை தமக்குக் காட்டிய ஒரு வலுவான ஜனநாயக நிறுவமைப்பாகவே நோக்குகிறார்கள். அதை சிதைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது.. இன்று அதன் முதன்மைப் பொறுப்புக்களில் உள்ள.. முன்னாள் இன்னாள் ஒட்டுக்குழு ஆட்களும்.. மிதவாதத் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்வோரும்.. சட்டம் படித்த.. படித்த மேதைகள் என்போரும்.

 

இவர்களின் இந்த சுய அடையாளங்களுக்காக அல்ல.. கூட்டமைப்பை தலைவர் ஸ்தாபிக்கும் எண்ணக்கருவை விதைத்தார். தமிழ் மக்களின் ஒன்றுபட்ட பலமாக தமிழ் தேசிய அடையாளம் தன் வலிமையை கொள்கைகளை உலகிற்கும் சிங்களத்திற்கும் காட்டவே அதனை அவர் உருவாக்கினார். அந்த எண்ணகருவின் வெற்றிக்காக உழைத்தோர் பலர். அவர்களை மக்கள் இப்போதும் கெளரவிக்கவே விளைகின்றனர். அதேநேரம் சிதைப்போருக்கு.. சிதைக்க நினைப்போருக்கு நல்ல பாடமும் கற்பிக்கவே செய்கின்றனர்..!

 

சிறீலங்காவின் தேர்தல் அரசியலில் தேசிய தலைமையின் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அப்பால் எனி ஒரு அரசியல் என்பதை தமிழ் மக்கள் விரும்பப் போவதில்லை..! அதனை சிங்களக் கட்சிகள் தமிழ் மக்களால் நிராகரிப்பட்டது மட்டுமன்றி... ஈபிடிபி.. பிள்ளையான் குழு.. கருணா குழு.. புளொட் போன்ற அடாவடி.. ஆயுத அரசியல் ஒட்டுக்குழுக்கள்..கண்ட படுதோல்விகள் மூலமும் காட்டி நின்ற்கின்றனர்.

 

இந்தக் கள யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல்.. புலிகள் இல்லாததால்.. மக்கள் ஒட்டுக்குழுக்களுக்கு வாக்களிக்கின்றனர் ஒட்டுக்குழு அரசியலை வரவேற்கிறார்கள்.. என்று ஒரு மாயைப் படம் காட்ட முனைந்தால்..அதற்கும்.. மக்கள் பதில் சொல்வார்கள்..! ஏலவே 1987 இலும் இப்படியான ஒரு மாயைக்கு மக்கள் முடிவு கட்டி இருந்தனர். எனவே உங்களைப் போன்றோர் உந்த சித்து விளையாட்டு கருத்தியலை விட்டு கள யதார்த்தத்தை சரியாக விளங்கிக் கொண்ட மக்கள் உணர்வுகளை தாயகத்திலும் புகலிடத்திலும் உள்வாங்கிக் கொண்டு கருத்துக்களை முன் வைக்க வேண்டும். அதுதான் தமிழ் மக்களின் பலத்தை இன்னும் இன்னும் அதிகரிக்கச் செய்யும். மாறாக.. ஒட்டுக்குழுக்களின் அராஜக பாசிச அரசியலுக்கு மக்கள் அங்கீகாரம் அளிப்பதாக காட்ட முனையக் கூடாது. அது அவர்களை மீண்டும் மீண்டும் தவறாகவே வழிநடத்தும். மக்கள் சிந்தனையில் இருந்து அவர்கள் தூரப் போய் துரோகிகள் ஆகும் நிலையே தொடரும்..!  :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் பச்சை முடிந்துவிட்டது....மேலே நீங்கள் எழுதியவை இன்றைய களயதார்த்தமும் உண்மையும்....இதுதான் இன்றைய எமது பைபிள்.குரான்,பகவத்கீதை,மகாவம்சம்..... D மேட்டுகுடி..பள்ளக்குடி...தலித்தியம்,அந்த இசம் இந்த இசம் எல்லாத்தையும் இனி உந்த முன்னாள் ஆயுத போராளிகள் இன்னாள்புலத்துத போராளிகள் கைவிடவேண்டும்....

Link to comment
Share on other sites

பல வருட போராட்டத்தில் சிங்கள பேரினவாத அரசிடம் அரசியல்,இராணுவ, ராஜதந்திர ரீதியான அனைத்து போராட்டத்திலும். தோல்வியடைந்து அதல பாதாளத்தில் நின்று சர்வதேச நாடுகளின் உதவி மட்டுமே எம்து உரிமைகளை பெற உதவும் என்னும் கையாலகாத நிலையில் இருக்கும் நாம் எப்படி எரிக் சோல்கைமை கையாலகாதவர் என று கூறமுடியும். ஒருவேளை எமது போராட்ட தோல்விக்கும் இந்த வாய்க்கொழுப்பு தான் காரணமோ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.