Jump to content

தோழர் தியாகு ஜயாவின் போராட்ட செய்தி உடனுக்குடன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2evh.jpg தமிழின உணர்வாளகளே அவசர செய்தி,,,,அனைவருக்கும் பரப்புங்கள்,,,,, இன்றுடன் 13வது நாளாக பட்டினிப் போராட்டத்தை தொடர்கிறார் தோழர் தியாகு.அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது.இதற்கு மேலும் நாம் மவுனம் காப்போமேயானால் நாமே அவரை கொலை செய்கிறோம் என்று தான் அர்த்தம்.அவரை இழந்த பின்பு நாம் புலம்புவதில் ஒரு அர்த்தமும் இல்லை.வாருங்கள் தோழர்களே தியாகுவின் உயிரை காக்க.திரள்வோம் தோழர்களே தோழர் தியாகு இருக்கும் இடம் நோக்கி.இன்று மாலை 4 மணிக்கு வாருங்கள்.நீங்கள் மட்டுமல்ல உங்களுக்கு தெரிந்த அனைத்து நன்பர்களையும் அழைத்து வாருங்கள்.தமிழினத்திற்காக களமாடிய ஒரு போராளியை காக்க ஏதேனும் செய்வோம் வாருங்கள்.அவரது கோரிக்கைகளுக்கு வழு சேர்ப்போம்.அவரது உயிரை காப்போம். கட்சி கடந்து,இயக்கம் கடந்து தமிழினத்திற்காக போராடும் போராளி உயிரை காக்க வாருங்கள்.திரள்வோம் பெருந்திரளாய். நேரம் 4 மணி,உழைக்கும் மக்கள் மன்றம், வாசுதேவன் தெரு, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை பின்புறம்,
Link to comment
Share on other sites

  • Replies 111
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
vgwx.jpg
Link to comment
Share on other sites

மிகவும் மெலிந்து நலிந்து போயுள்ளார்.. :(:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் மெலிந்து நலிந்து போயுள்ளார்.. :(:unsure:

 

அந்த ஜயாவின் உடல் நிலை மிகவும் கலவைக் கிடம் அண்ணா....

 

 

 

 

தோழர் தியாகுவின் போராட்டத்தை மக்களிடம் கொண்டு செல்ல ,எமது எளிய ஊடகமாம் --சுவரொட்டி--மன்னார்குடியில் 

m4zt.jpg

 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
69r3.jpg
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சினிமா, கிரிக்கெட், கோயில், பூசை, என்று அலையும் தமிழனுக்கு மற்றவர்களுக்காக பாடுபடுபவர்களை பற்றி நினைக்க நேரமேது? y5ym.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தனிமனிதன் மீது, தனிப்பட்ட காழ்ப்புணர்வுகள், கருத்து வேறுபாடுகள் இருப்பினும், அவன் எமது இனத்துக்காகத் தன்னை மெழுகுவர்த்தியாக்கும் போது, அந்தக் கனலில் அந்த உணர்வுகள் அந்தனையும் எரிந்து போய்விடும்!

 

அந்தத் தனிமனிதனின் உண்ணாவிரதம், உங்கள் மனதை, ஒரு கணமாவது பாதித்திருக்கும் எனின், அது அந்தத் தனிமனிதனின் வெற்றியே! அதுவே, அஹிம்சையின் வெற்றியுமாகும்!

 

தமிழக ஊடகங்கள் இனியாவாது விழித்துக் கொள்ளட்டும்!

 

1376462_754569554559368_1086302429_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு வந்து... சீமானையும், தியாகுவையும் தூற்றிக் கதைக்க.... ஒரு குரூப் வீடியோவுடன் வந்தவுடன்.... அதுக்கு, செம்பு தூக்கி காவடி எடுத்து.... தனது முகப் புத்தகத்தில் பதிகின்றேன் என்னும்....  ஆக்கள் இருக்கும் போது....  எவனுக்கும்.... ரோசம் வரும் தானே....
தியாகுவும்..... யாழ் களத்தை பார்க்கும் உறுப்பினர், என்பதை.... இந்தச் சிறு பிள்ளைக் கூட்டம், இலகுவாக மறந்து விட்டது.

Link to comment
Share on other sites

காட்டுமிராண்டி கூட்டம் என கேள்விப்பட்டுள்ளேன் .......................ஆனாலும் அதையும் விட மோசமான கூட்டம் எம் இனத்தில் இருக்கிறார்கள் என்பது இதுவரை எனக்கு தெரியவில்லை .இந்த உன்னாவிரத்தத்தில் வீடியோ படம் காட்டியவர்களையும் அதனை பார்த்து ரசித்தவர்களையும் ......................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 தியாகு அண்ணனின் கோரிக்கைகள் நிறைவேறவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி அல்லது வீரச்சாவு என்ற முழக்கத்துடன் தோழர் தியாகு கடந்த 13 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கிறார். இந்நிலையில் தோழரின் உடல்நிலை மிகவும் பாதிப்படைந்துள்ளது. நீரிழிவு நோய் இருக்கும் தோழர் தியாகு மயக்கமடைய நேர்ந்தால் அது மிகவும் ஆபத்தானதாகும்.இதற்கு மேலும் இந்த தமிழ் சமுதாயம் மௌனம் காப்பது என்பது அவரை கொள்வதற்கு சமம். எனவே தோழர்களே இன்று மாலை 5 மணிக்கு அவர் உண்ணாவிரதம் இருக்கும் உழைக்கும் மக்கள் மன்றம், வாசுதேவன் தெரு, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை பின்புறம், புரசைவாக்கத்தில் ஒன்றுகூடுவோம். தோழர் தியாகுவின் கோரிக்கையை முன்னெடுப்போம். அவரது உயிரை காப்பாற்றுவோம். prq7.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பன்னிரண்டு நாட்கள் முடிந்துவிட்டது. கோரிக்கைக்காக பட்டினியால் செத்துக்கொண்டிருக்கும் தோழர் தியாகுவை காக்க என்ன செய்யப் போகிறோம். தோழர் தியாகுவை கொலை செய்துகொண்டிருப்பது இந்திய அரசு மட்டுமில்லை. மவுனம் காக்கும் ஒவ்வொரு தமிழனும் தான். தமிழ்த் தேசிய கருத்தியலை பரப்பிய முக்கியமான உண்மையான போராளிகளில் தோழர் தியாகும் ஒருவர் .தமிழ் தேசிய இனத்திற்கு,இளம் தலைமுறையினருக்கு வழி காட்ட இவர் போன்ற போராளிகள் மிகவும் தேவை .ஒரு வேளை இவரை இழப்போமேயானால் தமிழினத்திற்கான போராட்டக் களத்தில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்படும். முத்துக்குமாரை இழந்தது போதும்,செங்கொடியை இழந்தது போதும்.நம் கண் முன்னே செத்துக்கொண்டிருக்கும் தோழர் தியாகுவை காக்க ஏதேனும் செய்வோம் தோழர் தியாகு உயிரை காக்க ஏதேனும் செய்வோம். w3w2.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழன் எவ்வளவு... இழிவானவன்.
என்பதற்கு....  போன சனிக்கிழமை வந்து நின்று வாதாடிய.... ஒரு ஓட்டுக்குக்குழு மிருகமாவது .... வந்து,  தனது தரப்பு நியாயத்தை சொல்லியிருக்கலாம். எங்கை... போய்..... இந்த நாய்கள்.... பதுங்க்கியிருக்குதுகள்.  வள்..  .. வள்...
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் தியாகு உயிரை காப்போம்! சர்வதேசமே காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தாதே! baxq.jpg

Link to comment
Share on other sites

தியாகு ஐயாவின் போராட்டத்திற்கு புதிய திரி ஆரம்பித்தமைக்கு நன்றி பையன் அண்ணா...

 

தியாகு ஐயா உண்ணாவிரதத்தை தொடர்கிறார் என நேற்று சத்யம் tv இல் கூறப்பட்டுள்ளது. இந்த இணைப்பில் சென்று வீடியோவை பாருங்கள்.

http://sathiyam.tv/english/featured/thyagu-continues-hunger-strike-12th-day

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

thiyagu1.jpg

 

தியாகு அவர்களின் இளமைத் தோற்றம்.

Link to comment
Share on other sites

இதில் ஏற்கனவே தியாகு ஐயாவின் போராட்ட செய்திகள் இணைக்கப்பட்டுள்ளன. பார்க்காதவர்கள் சென்று பார்க்கலாம்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=119014&p=942846

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் தியாகு அவர்கள் 12 நாள் கடந்தும் அவர்கொண்ட கொள்கையில் எந்த மாற்றமும்,இறந்துவிடுவேனோ என்ற பயமும் இல்லாமல் உறுதியோடு போராடிக்கொண்டு இருக்குறார் ..... அனால் இந்த நாட்டை ஆளும் அரசியல் வெறியர்கள் தியாகு அவர்களின் உயிரை பற்றியோ தமிழர்களின் உணர்வு பற்றியோ சிறிதேனும் கவலைப்படுவதாக தெரியவில்லை,ஈழ ஆதரவாளர்கள் என்று சொல்லிகொள்ளும் போராளிகளும் தியாகு அவர்களின் போராட்டத்தை மக்களிடம் சரியாக கொண்டு செல்லவில்லை .... தியாகு அவர்களின் உயிர் இந்தியா என்ற மாயையை கலைக்கும் தனி தமிழீழம் போல தனி தமிழ் நாடு கோரிக்கையை வலுப்படுத்தும் என்பது மட்டும் உறுதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13 நாளாக தனது பட்டினிப் போராட்டத்தைத் தொடர்கிறார் தோழர் தியாகு. தமிழ் உணர்வாளர்களே, ஈழ உணர்வாளர்களே, நண்பர்களே, அன்பர்களே அனைவரும் வாருங்கள். தொடர்ந்து ஊடகங்களும் ஆளும் அரசுகளும் கோரிக்கைகளைப்பற்றியும் தோழர் தியாகுவின் உயிரைப்பற்றியும் வாய்திறக்காத நிலையில் அடுத்தக்கட்டப் போராட்டங்களைப்பற்றி விவாதிப்போம். மக்களைத்திரட்டிப் பலக்களங்கள் அமைப்போம். இந்தியாவை இனக்கொலை இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டிற்கு பங்கேற்கவிடாமல் மறிப்போம். கோரிக்கைகளை வென்றெடுப்போம். தியாகு தோழர் உயிரைக் காப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
j6jw.jpg பட்டினிப் போராட்டம் இருந்து வரும் தோழர் தியாகுவை நேற்று இரவு தோழர் சீமானும், தோழர் கயல்விழியும் சந்தித்து கலந்துரையாடினர். போராட்டத்தை வலிமையாக முன்னெடுப்பது பற்றி தோழர் சீமான் நம்பிக்கை தெரிவித்தார்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8aq9.jpg
Link to comment
Share on other sites

இன்று காலை உழைக்கும் மக்கள் மாமன்றத்தின் தலைவர் தோழர் குசேலர் தோழர் தியாகுவை சந்தித்து பட்டினிப் போராட்டத்தைப் பற்றி விசாரித்தார்

 

1380459_1440335176192786_785437113_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பார்ந்த முகநூல் தோழர்களே, தமிழ்ச்சமூகத்தின் போராட்டங்களை ஊடகங்கள் இருட்டடிப்பு செய்துகொண்டிருக்கும் இவ்வேளையில், நமக்கான மாற்று ஊடகமாய் வேறு வழியே இல்லாமல் நம் முன் நிற்பது முகநூல் மட்டுமே. 13நாட்கள் கடந்து, தன் உயிரை பணயம் வைத்து நமக்கான போராட்டத்தை முன்னெடுத்துக்கொண்டிருக்கும் தோழர் தியாகுவின் உடல் நிலை இன்று மிகவும் மோசமடைந்த நிலையில் உள்ளது. 5நாட்கள் சந்திரபாபு டெல்லியில் உண்ணாவிரதம் இருந்ததையும், நஸ்ரியா தொப்புளையும் பெரிதாக எழுதும் ஊடகங்கள், 13நாட்கள் கடந்து நமக்காக போராடும் தோழர் தியாகுவின் உண்ணாவிரதத்தைப்பற்றி ஒரு வார்த்தை கூட எழுதவில்லை.. ஊடகங்களின் இந்த வக்கிரப்போக்கிற்கு பதிலடியாய் விளம்பரம், பதாகைகள் என இணையம் அல்லாத மாற்று செய்தி முன்னெடுப்புகளுக்கு நம்மிடம் போதிய பணவசதி இல்லை. இருக்கும் கொஞ்ச தோழர்களும் உணர்வாளர்களைத்திரட்ட நேரில் சென்று ஆதரவு கேட்டு வருகிறார்கள். அது வலிமையற்றது. இருக்கும் வலிமையான ஒரே வாய்ப்பு இணையம்.. இணையத்தில் இருக்கும் முகநூல் பக்கங்கள் பெரும்பாலும் பொழுதுபோக்கு விடயங்களை மட்டுமே பெரிதாக பதிவிட்டு வருகின்றன. தோழர் தியாகுவை இழந்தால் கருத்தியலில் தமிழ் சமூகத்தை முன்னெடுத்துச்செல்லும் ஒரு பெரும் ஆற்றலை நம் சமூகம் இழக்கும். தியாகு தமிழனின் சொத்து! அவரை இப்படியே விட்டுவிட்டால், மௌனம் காத்து தோழரைக்கொன்ற கொலைப்பழியை நாம் ஏற்கவேண்டும். கேரளாவிலும், ஆந்திரத்திலும் நடக்கும் போராட்டங்கள் அங்குள்ள மக்களிடம் விரைவாக சென்றடைவதன் முக்கிய காரணம் அவர்கள் சோத்துக்கு உப்பு போட்டு சாப்பிடுகிற மான ரோசம் கொண்டவர்கள்.. இங்கே பெரும்பாலும் மொன்னயர்கள், அடிமைக்கூட்டம். விடுமுறைகளில் இன்பமாய் பொழுது போக்குங்கள், தடுக்க யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் நமக்காக, நம் கோரிக்கைக்காக போராடும் ஒரு போராளி இன்று செத்துக்கொண்டிருக்கிறார். நாம் என்ன செய்யப்போகிறோம்? குறைந்தபட்ச அறிவைக்கொண்ட காகங்கள் கூட, தம் இனத்தவன் யாரும் இறந்தால், கூட்டமாக வந்து பங்களிக்கும். இதற்கு மேல் எழுதவும் ஒன்றுமில்லை. தமிழனுக்காக குரல்கொடுக்கும் ஒருவர் யாராக இருந்தாலும் அவருக்கு உறுதுணையாய் நிற்பது தமிழனின் கடமை. நான் தமிழன்.. நீங்கள்? கட்சிகள், இயக்கங்கள் என்று கட்டுப்பட்டு நில்லாமல்((மொன்னைக்காரணம்)), உணர்வாளராய் வாருங்கள், இன்று (13-10-13) மாலை 4மணி: இடம்: புரசைவாக்கம்,பாதாள பொன்னி அம்மன் ஆலயம் அருகில், வாசுதேவன் சாலை,உழைக்கும் மக்கள் மாமன்றம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 18 APR, 2024 | 11:40 AM   யாழ்ப்பாணம் - நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார்.  நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்று புதன்கிழமை திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர் பரிந்துரைத்தார். அதனையடுத்து போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு, அம்புலன்ஸ் படகு தற்போது சேவையில் ஈடுபடாததால், பொதுமக்கள் போக்குவரத்து படகில் ஏற்றி குறிகாட்டுவான் நோக்கி அழைத்து வந்துள்ளனர்.  இந்நிலையில் கடலில் படகு பயணித்துக்கொண்டிருந்த வேளை, பிரசவ வலி பெண்ணுக்கு அதிகரித்ததை அடுத்து, படகின் கீழ் தளத்தில் இருந்த ஆண்களை மேல் தளத்திற்கு அனுப்பி வைத்த பின்னர் , படகில் பயணித்த பெண்களே பிரசவம் பார்த்துள்ளனர்.  படகு குறிகட்டுவான் இறங்கு துறையை வந்தடைந்ததும், அங்கு தயார் நிலையில் நின்ற புங்குடுதீவு வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியில் தாயையும் சேயையும், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.  தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/181359
    • 7 மாகாணங்களில் இன்று வெப்பநிலை அதிகரிப்பு! நாட்டின் 07 மாகாணங்களில் இன்று (18) வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் வெப்பநிலையானது மனித உடலால் உணரப்படும் அளவினை விட அதிகரித்துக் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இம்மாதத்தின் இறுதிவரை நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை தரச்சுட்டெண் அதிகரிக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. https://thinakkural.lk/article/299507
    • Published By: RAJEEBAN    18 APR, 2024 | 03:14 PM   2024ம் ஆண்டு செல்வாக்கு செலுத்திய 100 நபர்களில் ஒருவராக பாலதீன புகைப்படப்பிடிப்பாளர் மொட்டாஸ் அசைசாவை டைம்ஸ் தெரிவுசெய்துள்ளது. இது குறித்து டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது கடந்த 108 நாட்களாக அவரது சொந்த ஊரான காசா குறித்த உலகின் குரலாகவும் பார்வையாகவும் அசைசா விளங்கினார். கமராவுடனும் பிரெஸ் என்ற எழுத்துக்கள்பொறிக்கப்பட்ட ஜக்கெட்டுடனும் அவர் நான்கு மாதங்களாக இஸ்ரேலின் குண்டுவீச்சின் கீழ் வாழ்க்கை வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் நேசத்துக்குரியவர்களை இழந்து கதறும் பெண்கள் இடிபாடுகளின் கீழ் சிக்கி உயிரிழந்த நபர் போன்ற விடயங்களை பதிவு செய்தார். காசாவிற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு சவாலாக அமையக்கூடிய விதத்தில் காணப்பட்ட அவரது படங்கள் காசாவில் என்ன நடைபெறுகின்றது என்பதை உலகிற்கு தெரிவித்தன. அவர் பெரும் ஆபத்தின் மத்தியிலேயே தனது பணியை முன்னெடுத்தார். ஒக்டோபர் ஏழாம் திகதி முதல் 98 பத்திரிகையாளர்கள் காசாவில் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் கொல்லப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1992ம் ஆண்டுமுதல் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலை பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு பதிவுசெய்ய தொடங்கியது முதல்  பத்திரிகையாளர்களிற்கு மிகவும் ஆபத்தான ஆண்டாக இந்த ஆண்டே காணப்பட்டுள்ளது. காசாவிலிருந்து ஜனவரியில் வெளியேறியது முதல் அவரது பணி இந்த நெருக்கடி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் சர்வதேச கவனத்தை ஈர்ப்பதாகவும் மாறியுள்ளது. காசாவில்  நடைபெறுவது உங்களின் ஊடங்களிற்கான ஒரு உள்ளடக்கடம் இல்லை. அங்கு என்ன நடைபெறுகின்றது என்பதை நாங்கள் உங்கள் விருப்பங்களை கருத்துக்களை பெறுவதற்காக தெரிவிக்கவில்லை. நாங்கள் நீங்கள் செயற்படுவதற்காக காத்திருக்கின்றோம், இந்த யுத்தத்தை நாங்கள் நிறுத்தவேண்டும் என்கின்றார் அவர். https://www.virakesari.lk/article/181378
    • Paco Rabanne 1Million அட நம்ம தங்க பிஸ்கட். பயல் பிரமாதம் அடிச்சு தூக்குவான். கொஞ்சம் spicy and warm ஆக இருப்பதால் எல்லா இடத்திலும் செட் ஆகமாட்டான். இவனுக்கு பின்னால் ஒரு கதையே உள்ளது. மயிரிழையில் தப்பினேன் இல்லையென்றால் பயல் எண்ட வேலைக்கு உலை வச்சிருப்பான்.     நமது favourites 1. Bleu de chanel  2. Dior Sauvage 3. Giorgio Armani acqua di gio (கிளாசிக்) ஒரு காலத்தில் பிரமாதம் நாள் கணக்கில் சட்டையில் மணம் இருக்கும் ஆனால் இப்போ வருவது அந்தளவுக்கு தரமாக இல்லை அதனால் Profondo வுக்கு மாறிவிட்டேன் பொருள் டக்கர். இதெல்லாம் ஒவ்வொரு நாளும் விசிற கட்டுப்படியாகாது என்பதால் சாதாரண பாவனைக்கு Davidoff Coldwater Intense ,Cyrus Writer and Nautica Blue.   Gucci Envy கேள்விப்பட்டிருக்கிறேன் பாவிக்க கொடுத்துவைத்திருக்கவில்லை.      
    • எனக்கு தெரிந்த சில சிறிய பென்சன்காரர்கள் (மாதம் 500 இலிருந்து 600 யூரோக்கள் வரை) அங்கே 6 முதல் 9 மாதங்கள் தங்கி வருகிறார்கள். அவர்களுக்கு இது இனி கடினம் தானே? விமான ரிக்கற் மற்றும் விசா செலவு என்று பார்த்தால் வாழ்க்கை இனி இறுகலாம் அல்லவா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.