Jump to content

தோழர் தியாகுவின் போராட்டத்தைக் கைவிடுமாறு மன்மோகன் சிங் கோரிக்கை


Recommended Posts

மத்தியில் இருந்து அனுமதி வரும்வரை காத்திருந்துவிட்டு நேற்று மன்மோகன் கடிதம் எழுதியதும் திமுக தொண்டர்கள் இன்று ஐயா தியாகுவின் உண்ணாவிரதத்தை பற்றி முகநூலில் கவலை தெரிவிக்க தொடங்கியுள்ளார்கள். 14 நாட்கள் கண்ணுக்கு தெரியாத தோழர் தியாகுவின் போராட்டம், மன்மோகனின் கடிதத்திற்கு பிறகு இன்று திடிரென அக்கறை ஏற்ப்பட்டுள்ளது ஐயா தியாகுவின் மேல்.

திமுக வைப்போல கடைந்தெடுத்த அயோக்கியத்தனமான அரசியல் செய்ய யாராலும் முடியாது.

 

(facebook)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அய்யய்யா கருணாநிதி.

பிரதமர், காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வதா அல்லது கூடாதா என்பதல்ல கோரிக்கை. இந்தியா மற்றும் அதன் சார்பில் யாரும் கலந்துகொள்ள கூடாது , மேலும் இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த விடாமல் இந்தியா லாபி செய்ய வேண்டும் என்பதே நமது கோரிக்கை.

கனடா அதிபரை தொடர்ந்து. இந்தியாவும் "இனபடுகொலை செய்யப்பட்ட நாட்டில் காமன்வெல்த் நடக்க கூடாது " என்று அறிக்கை வெளியிட வேண்டும்

அய்யய்யா கருணாநிதி , பிரதமர் கலந்து கொள்ள மாட்டார் என்கிற உட்டாலக்கடி அரசியல் கடிதத்தை காட்டி ...அருவருப்பு அரசியல் செய்ய முயல வேண்டாம்.

(facebook: loyolahungerstrike)

இதத்தான் முடியாதத கேட்ட்கும் வியாபாரம் என்பது.

இந்தியா செய்யவே முடியாத ஒன்றைக்கேட்டா கடைசி வரை ஆச்பத்திரி போகும் வரை உண்ணாவிரதம், அம்புலன்ஸ் வரும் வரை உண்ணாவிரதம் என்று சொல்லி கல்லாவை நிரப்பலாம்.

முடியுமான காணி பொலிஸ் அதிகாரத்தை கேட்டு, அதை கொடுக்கும் படி இந்தியா இலங்கையை நெருக்கி, இலங்கையும் கொடுத்திட்டா. வியாபாரம் படுத்துடுமில்ல.

இதை விட சோனியா குடும்பதோடு இத்தாலிக்கு போகணும் என்று கேட்டுப் போராடுங்க. அது நடந்தாலும் நீங்க கேக்கிறது நடவாது.

Link to comment
Share on other sites

தியாகு அவர்களின் உண்ணாவிரதத்தை தொடர்ந்து இன்று தமிழக வாழ்வுரிமை கட்சி போராட்டம் நடத்தியது. இதில் கட்சி பேதமின்றி அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் 10,000 பேரளவில் கலந்து கொண்டுள்ளார்கள்.

 

இது தொடர்பான செய்தி, படங்களை பார்க்க : http://www.yarl.com/forum3/index.php?showtopic=130804&p=948008

எதிர்வரும் 17 ஆம் திகதி நாம் தமிழர் கட்சியினர் சார்பில் சீமான் அண்ணாவின் தலைமையில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

இடம்: ஆளுநர் மாளிகை
நேரம்: காலை 10 மணி.

 

(தகவல்: முகநூல்)

Link to comment
Share on other sites

தோழர் தியாகுவின் உண்ணா நிலைப் போராட்டம் முடிவுக்கு வந்தது தமிழ் உணர்வாளர்கள் அனைவருக்கும் ஆறுதல் அளித்துள்ளது. வயதான காலத்தில் , சர்க்கரை நோயுடன் அவர் 15 நாட்களுக்கு மேல் உறுதியுடன் உண்ணா நிலையில் இருந்தது பெரிய சாதனை தான் என்று சொல்ல வேண்டும்.

உலகெங்கிலும் தமிழர்கள் பலரும் தியாகுவின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். கட்சித் தலைமைகள் வைகோ, சீமான், பண்ருட்டி வேல்முருகன், திருமாவளவன் மற்றும் தமிழருவி மணியன் போன்றோரும் தோழரை சந்தித்து உண்ணா நிலையை கைவிடுமாறு கோரிக்கை வைத்தனர். முகநூலில் பலரும் இந்த கோரிக்கையை முன்வைத்தனர். மாணவர்களும் அழுத்தம் கொடுத்தனர்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டும் , தமிழகத்தில் நடைபெறும் பல மாணவர் , கட்சிகளின் போராட்டங்களை சுட்டிக் காட்டியும் தான் காமன்வெல்த் எதிர்ப்பு இயக்கம் தோழரை போராட்டத்தை முடிக்குமாறு வலியுறுத்தினர் . அதன் பேரிலேயே தோழர் தன்னுடைய உண்ணா நிலையை முடித்துக் கொண்டார். அதே நேரம் , பிரதமரிடம் இருந்து கருணாநிதிக்கு ஒரு கடிதம் வந்ததும் , அதுவும் ஒரு காரணமாக சேர்க்கப்பட்டு விட்டது. அக்கடிதம் வரவில்லை என்றாலும் தோழர் தியாகு இன்று போராட்டத்தை முடித்துக் கொண்டு இருப்பார். எனினும் பிரதமரின் பதில் சற்று ஆறுதல் பரிசாக தான் வந்தது. அதனால் அதையும் தோழர் குறிப்பிடத்தான் வேண்டி வந்தது.

இப்போராட்டத்திற்கு முழு வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் இது முதல் வெற்றி என தோழர் குறிப்பிட்டுள்ளார். பல கட்சிகளையும் , இயக்கங்களையும் இப்போராட்டம் இணைத்துள்ளது. போராட தூண்டியுள்ளது, இப்போராட்டம் புதிய வடிவெடுக்கும் என்பதையும் சுட்டி காட்டியுள்ளார் தோழர். தோழரின் உண்ணா நிலை முடிவு பெற்றதற்கும் டெசோ அமைப்பிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தான் உண்மை. அதனால் திமுக இப்போராட்டத்தில் ஆதாயம் தேடாமல் இந்தியாவை இலங்கைக்கு அனுப்பாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபடுவதே திமுக தமிழர்களுக்கு செய்த அநீதிக்கான பரிகாரம் ஆகும்.

 

 

Rajkumar Palaniswamy

 

(facebook)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
மகிழ்ச்சியான செய்தி!
 
தோழர் தியாகுவும் உயிரோடு இருக்கிறார்!
தமிழுக்கும் தமிழர்களுக்கும் பல உன்னத வேலைகளை செய்தவர்.
சில தவறுகளால் ....
சில மனிதர்களின் பரிகாசங்களுக்கு உள்ளாவது கவலைக்கு உரியது.
 
எமக்கு தலைவர் என்றால் பிரபாகரன்தான்.
ஒழுக்கம் பண்பு இவரின் அசையாத நம்பிக்கை. அதனூடுதான் நாம் யாரையும் பார்க்கிறோம்.
 
தோழர் தியாகு அவர்கள்.
தொடரும் வாழ்வில் கடந்த கால தவறுகளை கடந்து . வாழ வேண்டும் என்பது ஒரு சிறிய கோரிக்கை.
Link to comment
Share on other sites

இனி மன்மோகன்சிங் அப்படியான முடிவுகள் தான் எடுப்பார் என நம்புகின்றீர்களா?

சிங்கிற்கு ஒரு நன்றி கடிதம் போடுவவோமா?

எடுத்த முடிவை மன்மோகன் செயற்படுத்துவார் எண்று இல்லை.. ஆனால் முடிவு எடுக்க முன் பரிசீலிக்க தமிழ் மக்களின் உணர்வுகள் பரிசீலிக்க எடுக்கப்படும்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.