Jump to content

நீங்கள் உங்கள் மனைவிக்கு எவ்வளவு சுதந்திரம் கொடுப்பவர்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்


எனக்குத் தெரிந்த பல ஆண்கள், தாம் தம் மனைவியை அடிமைபோல் நடத்தவில்லை. முழு சுதந்திரமும் கொடுக்கிறோம் என்கின்றனர். ஆனால் பல பெண்கள் ஆண்கள் கொடுக்காமல் தாமே தம் சுதந்திரத்தின் எல்லையை வரையறை செய்கின்றனர். பல ஆண்கள் சுதந்திரம் கொடுக்கிறோம் என்று கூறிக்கொண்டே அடிமைகளாய் இன்னும் நடத்துவதை நான் கண்டிருக்கிறேன்.

சில பெண்களுக்கு தனது கணவன் எவ்வளவு சம்பளம் ஈட்டுகிறார். அதை எதற்ககெல்லாம் செலவு செய்கிறார் என்றே அறியாது தாம் வேலை செய்து உழைக்கும் பணத்தையும் கணவனிடமே கொடுத்து, தன தேவைக்கே கை ஏந்தும் நிலையில் கூட புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர்.

இவர்கள் பற்றிய உங்கள் கருத்துக்களை, உறவுகளே உங்களிடமிருந்து எதிர்பார்க்கும் அதே வேளை உங்கள் மனைவியரை நீங்கள் எப்படி நடத்துகிறீர்கள்.??????
அவர்களுக்கு உரிய சுதந்திரத்தை நீங்கள் அவர்களுக்கு வழங்குகிறீர்களா??????

எங்கே துணிவுடன் யார் மனம் திறக்கிறீர்கள் பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • Replies 219
  • Created
  • Last Reply

கணக்கு வழக்கு முழுவதும் பார்க்கிறது மனைவிதான்.. கையேந்தும் நிலைமைதான் எனக்கு.. :(

கடனட்டையில் பத்து டொலர் செலவழித்தாலும் விளக்கம் கொடுக்கவேண்டிய நிலை ஒன்று உள்ளது.. :blink: எனக்கு சுதந்திரம் இருக்கா என்கிறதை நீங்கள்தான் சொல்லவேணும்.. :(:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் என் துணைவிக்கு பூரண சுதந்திரம் வழங்க நான் என்ன அவளைக் கட்டி ஆளும் அரசனா.. அல்லது இயற்கையா..??! அவளுக்கு இந்த இயற்கையில் உள்ள சுதந்திரத்தை அவள் சக மனிதனாக அனுபவிக்க எல்லா வகையிலும்.. உரித்துடையவள். அவளுக்கு எவரும் சுதந்திரத்தை வழங்கனும் என்றில்லை. அவளுடைய சுதந்திரத்தைப் பறிக்காமல் விட்டாலே போதும். ஆனால் அதேவேளை அவள் எனது சுதந்திரத்தையும் பறிக்கக் கூடாது. பாதுகாக்கத் தெரிஞ்சிருக்கனும்..! அவள் அதைச் செய்தால் நானும் அவளுக்கு அதையே செய்வேன்.

 

எனக்குத்தான் மனைவி இல்லையே.. அப்ப எப்படின்னு கேட்கிறீங்களா.... எனக்குள்ள ஒரு கற்பனையான அழகான.. அம்சமான.. அன்பான.. பெண் இருக்கா இல்லா அவா பற்றியது. :lol::D:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணக்கு வழக்கு முழுவதும் பார்க்கிறது மனைவிதான்.. கையேந்தும் நிலைமைதான் எனக்கு.. :(

கடனட்டையில் பத்து டொலர் செலவழித்தாலும் விளக்கம் கொடுக்கவேண்டிய நிலை ஒன்று உள்ளது.. :blink: எனக்கு சுதந்திரம் இருக்கா என்கிறதை நீங்கள்தான் சொல்லவேணும்.. :(:D

 

இசை உங்கள் வீட்டில் மட்டுமல்ல.. இந்த நிலை. அநேக தமிழர் வீடுகளிலும் இதே நிலை தான்.

 

அண்மையில்.. உறவினர் ஒருவரின் வீட்டுப் போயிருந்தேன். அவர்களின் பிள்ளைகளோடு உரையாடிய போது அவர்களுக்கு சைனீஸ் உணவு விடுதிக்கு போக விருப்பம் என்றார்கள். நான் உடனடியாகக் கிளம்பி விட்டேன். ஆனால் அவர்கள் அப்பாவிடம் கேட்க வேண்டும் என்றார்கள். அப்பாவிடம் கேட்டார்கள்.. அவர் அம்மாவிடம் கேட்க வேண்டும் என்றார். அம்மாவிடம் கேட்டார்கள். அம்மா ஏது சொன்னோவோ என்ன சொன்னாவோ தெரியாது.. பிள்ளைகள்.. மனதை மாற்றிக் கொண்டு விட்டார்கள்.

 

விரும்பின ஒரு இடத்திற்கு போய் அதுவும் அபூர்வமாய்.. சாப்பிடக் கூட சுதந்திரம் இல்லாத நிலையை ஆண்கள் தான் அதிகம் அனுபவிக்கிறார்கள்  எம்மவர் மத்தியில்..! 

 

இந்தத் தலைப்பு உங்கள் கணவருக்கு நீங்கள் எவ்வளவு சுதந்திரம் வழங்கிறீங்க என்று அமைவதே தற்காலத்திற்கு உகந்தது..! :):icon_idea:

Link to comment
Share on other sites

பெரிய 'அம்பானி' குடும்பம், இரண்டு பேர் இருந்து கணக்கு வழக்குப் பார்க்க.  :D  வாழ்கிறதே கடனில :( அதுக்குள்ள என்ன பிரிவினை.   

வங்கிக்கு ஊதியம் வரும், குடும்பத் தேவைக்கேற்ப இருவரும் மட்டையைப் பாவித்து செலவழிக்க வேண்டியதுதான்.  

மற்றும்படி ஒருவரை அடக்கி ஆள்வதோ அல்லது அடங்கிப் போவதோ எனது குணமில்லை.


நான் என் துணைவிக்கு பூரண சுதந்திரம் வழங்க நான் என்ன அவளைக் கட்டி ஆளும் அரசனா.. அல்லது இயற்கையா..??! அவளுக்கு இந்த இயற்கையில் உள்ள சுதந்திரத்தை அவள் சக மனிதனாக அனுபவிக்க எல்லா வகையிலும்.. உரித்துடையவள். அவளுக்கு எவரும் சுதந்திரத்தை வழங்கனும் என்றில்லை. அவளுடைய சுதந்திரத்தைப் பறிக்காமல் விட்டாலே போதும். ஆனால் அதேவேளை அவள் எனது சுதந்திரத்தையும் பறிக்கக் கூடாது. பாதுகாக்கத் தெரிஞ்சிருக்கனும்..! அவள் அதைச் செய்தால் நானும் அவளுக்கு அதையே செய்வேன்.

 

 

 

நெடுக்கரில் நிலையில் வரவேற்கக் கூடிய மாற்றம் தெரிகிறது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேள்விய மாத்திப்போடுங்க :( என் ஆத்துக்காரி வந்து பதில் சொல்லுவா :D:icon_idea:

Link to comment
Share on other sites

நான் வச்சது தான் சட்டம். ஆத்துக்காரிக்கு கொஞ்சம் சுதந்திரம் குறைவு தான்.
 
சுதந்திரம் குறைவே ஒழிய மற்றப்படி அவ செய்யிற வேலைகள் சமைக்கிறது, பக்கத்தில இருக்கிற பள்ளிக் கூடத்துக்கு பிள்ளைகளை கூட்டிக் கொண்டுபோய் விடுவது. கூட்டி வாறது... 4‍ - 5 நிமிச நடை. இப்படி மிகச் சில.
 
 
அதே நேரம் எனக்கும் சில சுதந்திரங்கள் இல்லை. உதாரணமாக, ஒரு பெண் -- முனியம்மா என்று வைத்துக் கொள்வோம்.
 
முனியம்மாவின் பின் பக்கம் பெரிதாக இருக்கிறது என்றோ அல்லது முனியம்மாவின் முன்பக்கம் பெரிதாக இருக்கிறது என்றோ கதைத்தால் பெரும் நச்சரிப்பாக முடியும்.
 
முனியம்மா ரொபிக் சுதந்திரம் இல்லை.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எங்காத்தில ஜனனாயகம் கொடிகட்டி பறக்குது. கிளிய கூண்டுக்கு வெளிய விட்டு கூண்ட தூக்கி தொலைவில போட்டு ரொம்ப நாளாச்சுது சார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்குத் தெரிந்த பல ஆண்கள், தாம் தம் மனைவியை அடிமைபோல் நடத்தவில்லை. முழு சுதந்திரமும் கொடுக்கிறோம் என்கின்றனர். ஆனால் பல பெண்கள் ஆண்கள் கொடுக்காமல் தாமே தம் சுதந்திரத்தின் எல்லையை வரையறை செய்கின்றனர். பல ஆண்கள் சுதந்திரம் கொடுக்கிறோம் என்று கூறிக்கொண்டே அடிமைகளாய் இன்னும் நடத்துவதை நான் கண்டிருக்கிறேன்.

சில பெண்களுக்கு தனது கணவன் எவ்வளவு சம்பளம் ஈட்டுகிறார். அதை எதற்ககெல்லாம் செலவு செய்கிறார் என்றே அறியாது தாம் வேலை செய்து உழைக்கும் பணத்தையும் கணவனிடமே கொடுத்து, தன தேவைக்கே கை ஏந்தும் நிலையில் கூட புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர்.

இவர்கள் பற்றிய உங்கள் கருத்துக்களை, உறவுகளே உங்களிடமிருந்து எதிர்பார்க்கும் அதே வேளை உங்கள் மனைவியரை நீங்கள் எப்படி நடத்துகிறீர்கள்.??????

அவர்களுக்கு உரிய சுதந்திரத்தை நீங்கள் அவர்களுக்கு வழங்குகிறீர்களா??????

எங்கே துணிவுடன் யார் மனம் திறக்கிறீர்கள் பார்ப்போம்.

 

உங்கடை கருத்தை நான் ஆமோதிக்கிறன் . ஏன் அவையிட்டை எங்கடை சுதந்திரத்தை கேட்டு அவையளை பெரிய மனிசர் அக்குறியள் ???? ஆனா உண்மையிலை பொம்பிளையள் தான் சுதந்திரம் எண்டு கதைச்சு கொண்டு  அடிமையாய் வாழ விரும்பினம்  .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பே பிழை! எவ்வளவு சுதந்திரம் கொடுப்பவர் என்ற கேள்வி கணவன் கொடுக்கும் சுதந்திரத்திற்கு எல்லை உள்ளது என்பதை ஏற்றுக்கொள்கின்றது. <_<

இது மனைவியானவள் கணவனுக்குக் கட்டுப்பட்டு வாழுவதுதான் ஒரு நல்ல பெண்ணுக்கு அடையாளம் என்றும், அதேவேளை கணவன் தேவையான சுதந்திரத்தைக் கொடுத்தால் சந்தோசமாக இருக்கலாம் என்றும் நினைக்கும் மனோநிலையைக் காட்டுகின்றது.

ஆணுக்குப் பெண் கட்டுப்பட்டு வாழவேண்டும் என்று நினைக்கும் பெண் அந்தக் கட்டுப்பாட்டின் இறுக்கம், தளர்வைப் பற்றி ஏன் கவலைப்படவேண்டும்? :rolleyes: 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் எத்தனை நாளைக்கு தான் பெண் விடுதலை, சம உரிமை என்று அரைச்ச மாவையே அரைக்கிறது? 

 

என்னமோ பெண்கள் பாவப்பட்டவர்கள் போலும் ஆண்கள் அவர்களின் உரிமையை பறித்துவிட்டார்கள் என்பது போன்ற தோற்றம் ஊரில் 90களில் (அல்லது இப்பொழுதும்) இருந்திருக்கலாம். 

 

இங்க வெளிநாட்டில ஆண்களிற்கு தான் சுதந்திரம் பறி போய்விட்டது. ஒரு நிமிடம் ஆற அமர சிந்தித்துப்பாருங்கள். 

 

வெளிநாடுகளில் சட்டங்கள் அனைத்துவிதத்திலும் பெண்களிற்கு முன்னுரிமை என்பதையே முன்னிறுத்துகின்றது. 

 

மனைவிக்கு கணவன் அடித்தால் உள்ளே தூக்கி போடுவார்கள். அதுவே கணவனுக்கு மனைவி அடித்தால்? 

 

இராணுவ சேவை என்பது ஆண்களிற்கு கட்டாயம். பெண்களிற்கு? 

 

வேலைக்கு இன்ரர்வியு போனால் அங்க அழகான பெண்ணுக்கு தான் சந்தர்ப்பம் அதிகம்.

 

பிள்ளை பிறந்த மனைவிக்கு 4 மாதம் சம்பளத்தோட லீவு குடுக்கிறாங்கள். ஆனால் எங்களுக்கு வெறும் 2-3 நாள் தான்  :D ?

 

விவாகரத்து என்றால் ஆண் பெண்ணிற்கு வாழ்க்கைச்செலவிற்கு பணம் கொடுக்க வேண்டும். பிள்ளை பராமரிப்பிலும் பெண்ணிற்கே முன்னுரிமை.

 

கல்யாணம் பண்ணும் போது எத்தினை பவுனில தாலி கட்டுறம். ஆனா எங்களுக்கு வெறும் ஒரே ஒரு மோதிரம் மட்டும் தானே மிச்சம்  :wub:

 

ஒரு கல்யாண சாறியின்ர விலை கூட வராது எங்கட மொத்த கல்யாண உடுப்பும் :(

 

பெண் குழந்தை பிறந்த மகாலட்சுமி பிறந்திருக்கு என்டு சொல்றது. என்டைக்காவது ஆண் குழந்தை பிறந்தா மகாலட்சுமன் (ஏதோ ஒன்று) பிறந்திருக்கு என்டு சொன்னதுன்டா? ஆக மொத்தம் பிறப்பிலையே நம்மட உரிமை பறிபோச்சு :unsure:

 

காதலிக்கும் போது தர்ம அடி பெண்கள் வாங்கியிருக்காங்களா? எத்தனை உள் காயங்களோட சிங்கங்கள் இப்பவும் இருக்கு.  :huh:

 

இவ்வ்வ்வ்ளோ உரிமைகளையும் பறிகொடுத்திட்டு நாங்க வேலையால வீட்டுக்கு வந்து களைப்பா இருக்கு ஏதாவது குடிக்க கொண்டுவாங்க என்டா.... எங்களை அடிமைப்படுத்திறியள் என்டுறது. :icon_idea:

 

நாட்டாமை தீர்ப்பு: ஒரே ஒரு விடயம் மட்டும் உண்மை. எதுவெல்லாம் பெண்களுக்கு சாதகமா இருக்கோ அதில மட்டும் தான் விடுதலை எதிர்பாப்பாங்க. எதெல்லாம் கஸ்ரமான வேலையோ அதுக்கு ஒரு ஆண் வேண்டும். 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மொசு ஐயா, நீங்கள் சொன்னதுதான் உண்மை.

 

கணவன் தன் மனைவிக்கு சுதந்திரம் கொடுத்திருக்கின்றேன் என்று சொல்வதே ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு தான்.

 

ஆம்பிளைக்கு ஆயிரம் செலவு இருக்கும் அதைச்சொல்ல வேண்டிய தேவை இல்லை என்பதே பல இடங்களில் நடக்கிறது!.

 

அண்மையில் நான் அதிர்ச்சி அடைந்த ஒரு செய்தி என் நெருங்கிய தோழி ஒருவரின் உறவினப்பெண்ணொருத்திக்கு அவர் கணவன் தான் சாப்பிட்ட தட்டில் தான் சாப்பிடவேண்டும் என்ற கட்டாயமாம்!....என்னால் நம்பவே முடியவில்லை!....இன்னும் எவ்வளவோ நடக்கிறது அதை வெளியில் வந்து சொல்லக்கூட முடியாமல் 'குடும்பப்பெயர் கெட்டுவிடுமோ என்ற காரணத்தால்" தவிர்க்கிறார்கள் பெண்கள்!.

 

Link to comment
Share on other sites

என் மனைவிக்கு நான் முழுச்சுதந்திரமும் தந்துள்ளேன் என்றால் நீங்க நம்பவா போறீங்க! :huh: ^_^  <_<   

 

நாங்க சைக்கிள் ஏறியே வந்தாக்கா நீங்க மோட்டார்பைக்கத்தான் பாப்பீங்க. நாங்க மோட்டார்பைக்குல வந்தாக்கா நீங்க மாருதிக்கு மாறுவீங்க. நாங்க ஜீன்ஸ் பேண்டுத்தான் போட்டாக்கா நீங்க பேகி பேண்டுதான் பாப்பீங்க. நாங்க பேகி பேண்டுதான் போட்டாக்கா நீங்க வேட்டியத்தான் தேடுவீங்க. ஒண்ணுமே விவரங்கள் புரியல்ல, என்னதான் புடிக்குமோ தெரியல்ல, அம்புகள் ஆயிரம் அடிச்சாச்சு மொத்தத்தில் பைத்தியம் புடிச்சாச்சு :D  :D :D  :D  

Link to comment
Share on other sites

நாசமா போச்சு...  

 

எப்ப ஆண்களின் முடிவை மனிசிமார் காது குடுத்து கேட்டு இருக்கினம்...  ??  தாங்கள் நினைச்சதை மட்டும் தானே செய்யுறவை....??

 

 எனக்கு  இப்ப சுதந்திரம் தந்து இருக்கிறார்களா எண்டு தேடிக்கொண்டு இருக்கிறன்... இதுக்கை நான் சுதந்திரம் குடுக்கிறதோ...   சும்மா கடுப்பை கிளப்பாதேங்கோ.. 

 

ஏதாவது கல்யாணவீடுகளுக்கு போனால் மாப்பிள்ளையை பாத்து நான் சொல்லுறது தம்பி கடைசியாய் ஒருக்கா படம் எடுக்கேக்கை தன்னும் சிரியப்பு...  :D

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணக்கு வழக்கு முழுவதும் பார்க்கிறது மனைவிதான்.. கையேந்தும் நிலைமைதான் எனக்கு.. :(

கடனட்டையில் பத்து டொலர் செலவழித்தாலும் விளக்கம் கொடுக்கவேண்டிய நிலை ஒன்று உள்ளது.. :blink: எனக்கு சுதந்திரம் இருக்கா என்கிறதை நீங்கள்தான் சொல்லவேணும்.. :(:D

 

கையேந்தும் நினை உங்கள் ஆளுமை இன்மையையோ அல்லது மனைவியின்பால் நீங்கள் கொண்டுள்ள ஆதீத அன்பையோதான் காட்டி நிற்கிறது. நீங்கள்தான் இசை அது எதுவென்று கூறவேண்டும். :lol:

 

நான் என் துணைவிக்கு பூரண சுதந்திரம் வழங்க நான் என்ன அவளைக் கட்டி ஆளும் அரசனா.. அல்லது இயற்கையா..??! அவளுக்கு இந்த இயற்கையில் உள்ள சுதந்திரத்தை அவள் சக மனிதனாக அனுபவிக்க எல்லா வகையிலும்.. உரித்துடையவள். அவளுக்கு எவரும் சுதந்திரத்தை வழங்கனும் என்றில்லை. அவளுடைய சுதந்திரத்தைப் பறிக்காமல் விட்டாலே போதும். ஆனால் அதேவேளை அவள் எனது சுதந்திரத்தையும் பறிக்கக் கூடாது. பாதுகாக்கத் தெரிஞ்சிருக்கனும்..! அவள் அதைச் செய்தால் நானும் அவளுக்கு அதையே செய்வேன்.

 

எனக்குத்தான் மனைவி இல்லையே.. அப்ப எப்படின்னு கேட்கிறீங்களா.... எனக்குள்ள ஒரு கற்பனையான அழகான.. அம்சமான.. அன்பான.. பெண் இருக்கா இல்லா அவா பற்றியது. :lol::D:icon_idea:

 

கற்பனையில் உள்ள பெண்ணுக்குச் சரிதான் நெடுக்ஸ். நீயா வாழ்வு அப்படி அல்லவே. அதனால் உங்கள் விடயத்தில் நாம் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். கற்பனையில் உள்ள அவா நியத்தில் எவவா மாறுவாவோ இல்லை நெடுக்ஸ்தான் மாறுமோ யாரறிவார்????

 

பெரிய 'அம்பானி' குடும்பம், இரண்டு பேர் இருந்து கணக்கு வழக்குப் பார்க்க.  :D  வாழ்கிறதே கடனில :( அதுக்குள்ள என்ன பிரிவினை.   

வங்கிக்கு ஊதியம் வரும், குடும்பத் தேவைக்கேற்ப இருவரும் மட்டையைப் பாவித்து செலவழிக்க வேண்டியதுதான்.  

மற்றும்படி ஒருவரை அடக்கி ஆள்வதோ அல்லது அடங்கிப் போவதோ எனது குணமில்லை.

 

 

உங்கள் மனைவியும் வேலை பார்க்கிறாரா தப்பிலி???

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் ஒரு மனைவிக்குரிய சுதந்திரங்கள் எவை எனக் கூறுங்கள்
பின்னர் யோசிப்போம் :D  :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேள்விய மாத்திப்போடுங்க :( என் ஆத்துக்காரி வந்து பதில் சொல்லுவா :D:icon_idea:

 

ஆத்துக்காரி சொல்லக்கூடிய பதில் உங்களுக்குத் தெரிந்திருக்கும்தானே. அதைச் சொல்லுறது.

 

 

நான் வச்சது தான் சட்டம். ஆத்துக்காரிக்கு கொஞ்சம் சுதந்திரம் குறைவு தான்.
 
சுதந்திரம் குறைவே ஒழிய மற்றப்படி அவ செய்யிற வேலைகள் சமைக்கிறது, பக்கத்தில இருக்கிற பள்ளிக் கூடத்துக்கு பிள்ளைகளை கூட்டிக் கொண்டுபோய் விடுவது. கூட்டி வாறது... 4‍ - 5 நிமிச நடை. இப்படி மிகச் சில.
 
 
அதே நேரம் எனக்கும் சில சுதந்திரங்கள் இல்லை. உதாரணமாக, ஒரு பெண் -- முனியம்மா என்று வைத்துக் கொள்வோம்.
 
முனியம்மாவின் பின் பக்கம் பெரிதாக இருக்கிறது என்றோ அல்லது முனியம்மாவின் முன்பக்கம் பெரிதாக இருக்கிறது என்றோ கதைத்தால் பெரும் நச்சரிப்பாக முடியும்.
 
முனியம்மா ரொபிக் சுதந்திரம் இல்லை.

 

 

எதோ சொல்லுகிறீர்கள் நம்புகிறோம் ஈசன். மனைவியிடமே மற்றப் பெண்ணின் முன்பக்கப் பின்பக்கக் கதை கதைக்கும் உங்களை இன்னும் வெளியே கலைக்காமல் இருப்பதற்கு உங்கள் மனைவியைப் பாராட்டத்தான் வேண்டும்.

 

இப்ப எங்காத்தில ஜனனாயகம் கொடிகட்டி பறக்குது. கிளிய கூண்டுக்கு வெளிய விட்டு கூண்ட தூக்கி தொலைவில போட்டு ரொம்ப நாளாச்சுது சார்.

 

யாழில் உள்ள பல ஆண்கள் பாவப்பட்ட ஆண்களாகத்தான்  இருக்கு. ம் அது உங்கள் வினைப்பயன் :D  நான் சார் அல்ல மேடம் .

 

Link to comment
Share on other sites

இருவருக்கும் கட்டுப்பாடு அவசியம்.இல்லாவிடில் spiral ஆகி குடும்பம் குலையலாம்.

 

 

 

Two+Intersecting+Circles+2.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கடை கருத்தை நான் ஆமோதிக்கிறன் . ஏன் அவையிட்டை எங்கடை சுதந்திரத்தை கேட்டு அவையளை பெரிய மனிசர் அக்குறியள் ???? ஆனா உண்மையிலை பொம்பிளையள் தான் சுதந்திரம் எண்டு கதைச்சு கொண்டு  அடிமையாய் வாழ விரும்பினம்  .

 

உண்மைதான் மைத்திரேயி. பல பெண்களைப் பார்க்க பாவமாக இருக்கும். எல்லாப் பெண்களுக்கும் துணிவு வந்துவிடாது.

 

தலைப்பே பிழை! எவ்வளவு சுதந்திரம் கொடுப்பவர் என்ற கேள்வி கணவன் கொடுக்கும் சுதந்திரத்திற்கு எல்லை உள்ளது என்பதை ஏற்றுக்கொள்கின்றது. <_<

இது மனைவியானவள் கணவனுக்குக் கட்டுப்பட்டு வாழுவதுதான் ஒரு நல்ல பெண்ணுக்கு அடையாளம் என்றும், அதேவேளை கணவன் தேவையான சுதந்திரத்தைக் கொடுத்தால் சந்தோசமாக இருக்கலாம் என்றும் நினைக்கும் மனோநிலையைக் காட்டுகின்றது.

ஆணுக்குப் பெண் கட்டுப்பட்டு வாழவேண்டும் என்று நினைக்கும் பெண் அந்தக் கட்டுப்பாட்டின் இறுக்கம், தளர்வைப் பற்றி ஏன் கவலைப்படவேண்டும்? :rolleyes: 

 

 

சுதந்திரம் எல்லைகள் அற்றதுதான் என்றாலும் எம் சமூகத்தைப் பொறுத்தவரை எல்லைகள் வகுத்ததால் சமூகம் சீரழிந்து போகாது இன்னும் இருக்கிறது. கணவனுக்கும் மனைவிக்குமான புரிதலோடு எதையும் தீர்மானிக்கும் சுதந்திரம் எம் பெண்கள் எல்லோருக்கும் கிடைப்பதில்லை.அப்படியே ஆணுக்கும் தான். ஆனால் வெள்ளை இனத்தவர்களிலும் கூட இன்னும் சுதந்திரம் அற்ற பெண்கள் இருக்கின்றனர். எமது சமூகம் கட்டுக்கோப்பை வைத்திருப்பது ஒருவிதத்தில் நல்லதுதான் எனினும் அதுவே பெண்களுக்கு தீங்காகவும் முடிகிறது.

புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் பல தமிழர்கள் இன்னும் உறவினர் நண்பர்கள் என்னும் வட்டத்திலும் பண்பாட்டு மீறலை ஏற்றுக்கொள்ள முடியாமல் தம்மைச் சுற்றி ஒரு வட்ட்டமிட்டு அதற்குள்ளேயே வாழ்கின்றனர். மற்றவரின் சுதந்திர வாழ்க்கை முறையை விமர்சித்துக் கொண்டும் உள்ளனர். ஒட்டுமொத்தமாக எம் சமூகத்தை ஒதுக்கிவிட்டு வாழ எம்மால் முடியாதுதானே.

 

 

நாட்டாமை தீர்ப்பு: ஒரே ஒரு விடயம் மட்டும் உண்மை. எதுவெல்லாம் பெண்களுக்கு சாதகமா இருக்கோ அதில மட்டும் தான் விடுதலை எதிர்பாப்பாங்க. எதெல்லாம் கஸ்ரமான வேலையோ அதுக்கு ஒரு ஆண் வேண்டும். 

 

ஆண்கள் செய்யும் கஷ்டமான வேலை எது என்று ஒரு பத்தை பட்டியலிட முடியுமா செங்கொடி.

 

மொசு ஐயா, நீங்கள் சொன்னதுதான் உண்மை.

 

கணவன் தன் மனைவிக்கு சுதந்திரம் கொடுத்திருக்கின்றேன் என்று சொல்வதே ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு தான்.

 

ஆம்பிளைக்கு ஆயிரம் செலவு இருக்கும் அதைச்சொல்ல வேண்டிய தேவை இல்லை என்பதே பல இடங்களில் நடக்கிறது!.

 

அண்மையில் நான் அதிர்ச்சி அடைந்த ஒரு செய்தி என் நெருங்கிய தோழி ஒருவரின் உறவினப்பெண்ணொருத்திக்கு அவர் கணவன் தான் சாப்பிட்ட தட்டில் தான் சாப்பிடவேண்டும் என்ற கட்டாயமாம்!....என்னால் நம்பவே முடியவில்லை!....இன்னும் எவ்வளவோ நடக்கிறது அதை வெளியில் வந்து சொல்லக்கூட முடியாமல் 'குடும்பப்பெயர் கெட்டுவிடுமோ என்ற காரணத்தால்" தவிர்க்கிறார்கள் பெண்கள்!.

 

இப்படியான சைக்கோ கணவர்களுடனும் எத்தனையோபேர் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனர்.

 

என் மனைவிக்கு நான் முழுச்சுதந்திரமும் தந்துள்ளேன் என்றால் நீங்க நம்பவா போறீங்க! :huh: ^_^  <_<   

 

நாங்க சைக்கிள் ஏறியே வந்தாக்கா நீங்க மோட்டார்பைக்கத்தான் பாப்பீங்க. நாங்க மோட்டார்பைக்குல வந்தாக்கா நீங்க மாருதிக்கு மாறுவீங்க. நாங்க ஜீன்ஸ் பேண்டுத்தான் போட்டாக்கா நீங்க பேகி பேண்டுதான் பாப்பீங்க. நாங்க பேகி பேண்டுதான் போட்டாக்கா நீங்க வேட்டியத்தான் தேடுவீங்க. ஒண்ணுமே விவரங்கள் புரியல்ல, என்னதான் புடிக்குமோ தெரியல்ல, அம்புகள் ஆயிரம் அடிச்சாச்சு மொத்தத்தில் பைத்தியம் புடிச்சாச்சு :D  :D :D  :D  

 

பாஞ்சு   பாஞ்சு  பாஞ்சு  பாஞ்சு  உங்கள் நிலைமை தேஞ்சு போச்சு. :lol:

 

Link to comment
Share on other sites

கையேந்தும் நினை உங்கள் ஆளுமை இன்மையையோ அல்லது மனைவியின்பால் நீங்கள் கொண்டுள்ள ஆதீத அன்பையோதான் காட்டி நிற்கிறது. நீங்கள்தான் இசை அது எதுவென்று கூறவேண்டும். :lol:

நீங்கள் எழுதினாப்பிலதான் தெரியுது நான் அதீத அன்பு, நம்பிக்கை எல்லாம் வச்சிருக்கிறன் எண்டு.. :icon_idea:

Link to comment
Share on other sites

ஆண் கணவனானால் ,பெண் மனைவியானால் இருவருக்கும் சுதந்திரம் ?  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாசமா போச்சு...  

 

எப்ப ஆண்களின் முடிவை மனிசிமார் காது குடுத்து கேட்டு இருக்கினம்...  ??  தாங்கள் நினைச்சதை மட்டும் தானே செய்யுறவை....??

 

 எனக்கு  இப்ப சுதந்திரம் தந்து இருக்கிறார்களா எண்டு தேடிக்கொண்டு இருக்கிறன்... இதுக்கை நான் சுதந்திரம் குடுக்கிறதோ...   சும்மா கடுப்பை கிளப்பாதேங்கோ.. 

 

ஏதாவது கல்யாணவீடுகளுக்கு போனால் மாப்பிள்ளையை பாத்து நான் சொல்லுறது தம்பி கடைசியாய் ஒருக்கா படம் எடுக்கேக்கை தன்னும் சிரியப்பு...  :D

 

உங்கள் உடையைத் தெரிவுசெய்து வாங்கவாவது உங்களுக்குச் சுதந்திரம் உள்ளதா :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களது குடும்பதில் எல்லாவற்றிலும் இருவரும் சமமாகவே இருக்கின்றோம். அவளாகவே வந்து எல்லாவற்றையும் எனக்குச் சொல்லுவாள் செய்வாள். நான் ஆண் என்ற எண்ணத்தில் என்றும் அதிகாரம் செலுத்தியது கிடையாது. அவளுக்குப் பிடிவாதம் கொஞ்சம் ஜாஸ்தியாக இருக்கும். அதனால் சமாளிக்க கொஞ்சம் அய்ஸ் வக்கவேண்டிருக்கும். இருவருக்கும் ஒரே வயது என்பதால் பலவிடயங்களில் அவளின் ஆலோசனைப்படியே நடந்துகொள்ளவேண்டிய கட்டாயம் எனக்கிருக்கிறது. :(

 

இப்ப உங்களுக்கே தெரிஞ்சிருக்கும் ஆருக்குக் கூடச் சுதந்திரம் இருக்கெண்டு! :)

Link to comment
Share on other sites

 

மனைவியிடமே மற்றப் பெண்ணின் முன்பக்கப் பின்பக்கக் கதை கதைக்கும் உங்களை இன்னும் வெளியே கலைக்காமல் இருப்பதற்கு உங்கள் மனைவியைப் பாராட்டத்தான் வேண்டும்.

 

 

 

 

இதத்தான் சொல்றது எங்களுக்கு சுதந்திரம் இல்லையென்று.
 
இது ஒரு பாரதூரமான மனித உரிமை மீறல்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் ஒரு மனைவிக்குரிய சுதந்திரங்கள் எவை எனக் கூறுங்கள்

பின்னர் யோசிப்போம் :D  :D  :lol:

 

மனைவிக்குரிய சுதந்திரங்கள் ஒவ்வொருவருக்கும் ஏற்றவாறு மாறுபடும் வாத்தியார். அது அவர்களின் கல்விநிலை, சமூக நிலை என்பவற்றின் அடிப்படையில் வித்தியாசப்படும். எதைச் சமைக்க வேண்டும் என்பதிலிருந்து ஆடைகள் வாங்குவது, யார் யாருடன் குடும்ப உறவை வளர்ப்பது, நண்பிகளுடன் தனியே வெளியே செல்வது, திருமணமானபின்னும் ஆண் நண்பர்களுடன் பேசுவது, பெற்றோருக்கு உதவுவது, நண்பர்களுக்கு உதவுவது, பொதுத் தொண்டு ஆற்றுவது, திரைப்படத்துக்குச  செல்வது, விரும்பிய ஆடை அணிவது, எங்கே என்று கூறாமல் எங்கேயாவது செல்வது, திருமணத்தின் பின்னரும் கற்பது, வாரத்தில் ஒருநாளாவது எந்த வேலையும் செய்யாது அவர்கள் விருப்பத்துக்கு இருப்பது என்று இன்னும் எத்தனையோ இருக்கு.

சுதந்திரமாகத் திரியும் எனக்கே என் கணவரின் செய்கை சில நேரங்களில் சினம் கொள்ள வைக்கும். என் கணவருக்கு காலையில் தனிப் பாலில் கோப்பி போட்டு வைக்கவேண்டும். ஏதும் அவசர அலுவலில் எப்பவாவது நான் அதை மறந்தால் அன்று காலை எதுவும் குடிக்க மாட்டார் கணவர். உன்கையால் ஊத்துவது சுவை என்று வேறு சொல்வாரா. அட கோப்பி போட்டு வைக்க மறந்துவிட்டோமே என்னும் குற்ற உணர்வு நாள் முழுதும் இருக்கும். இதுவும் ஒருவகை அடிமைப் படுத்தல் தான்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.