Jump to content

நீங்கள் உங்கள் மனைவிக்கு எவ்வளவு சுதந்திரம் கொடுப்பவர்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நான் பிரான்சுக்கு வந்து மூன்று வருடங்களின் பின் மனைவியையும் பிள்ளைகளையும் கூப்பிட்டு விட்டேன் . பிறகு எனது மாமியிடமிருந்து முதல் கடிதம் வருகிறது. (அப்போல்லாம் போனைவிட  அவ கடிதம் எழுதுவதுதான் அதிகம். நானுந்தான். அதில் மகளுக்கு எழுதியிருக்கின்றா  பிள்ளை சுவியைக் கவனமாய் பார்த்துக் கொள்.) எல்லாப் பொறுப்பும் அவளிடம்தான் . அதுவும் ஒரு சுகம்தான்.கிழமைக்கு முப்பது  ரூபாய் தருவாள், மறக்காமல் சொல்வாள் அப்பா மறக்காமல் இருபதுருபாக்கு  டீசல் அடித்து விடுங்கோ.நான் பதினைந்துக்குத்தான். கடையளுக்குப் போனால் வண்டிலுக்கு ஒரு ஈரோ போட்டு  எடுப்பாள், நான்தான்  வண்டிளைக் கொண்டுபோய் விடுவது. இதெல்லாம் சின்னச்  சின்னச் சந்தோசங்கள். அவளுக்கும் தெரியும். :D

:D

Link to comment
Share on other sites

  • Replies 219
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
நான் வந்தநாள்தொடக்கம் கொண்டுவந்த சாறத்டோடையே படுத்தெழும்புறன்....ரவுசரும் அப்பிடியே கிழியாமல் வைச்சிருந்து அப்பப்ப பாவிக்கிறன். :mellow:  ^_^  :o  :(
 
சாமத்தியவீடு ஒண்டுக்காக போனகிழமை இவள் பாவி ஒருக்கால் கட்டுறதுக்காக  599 ஈரோவுக்கு ஒருசாறி வாங்கியாச்சு........இப்ப என்னடாவெண்டால் லைனிங் வைச்சு பிளவுஸ் தைக்க 25 ஈரோவாம்........"ஒருக்கால் கட்டின சாறி இன்னுமொருக்கால் கட்டமாட்டம்". :o  :o  :huh: .... நோட் திஸ் பாய்ன்ட் யுவர் ஆனர்.. :icon_idea:
Link to comment
Share on other sites

இந்த சாறிப்பிரச்சனை சட்டைப்பிரச்சனை உங்கை கன இடங்களில பெரிய தொல்லைதான். உங்கள் உழைப்பை சாமத்தியவீடொன்றுக்காக இழப்பது உரிமை மீறல். கனம் கோட்டார் அவர்களை குமாரசாமிக்கு சரியான தீர்ப்பை வழங்குமாறு குமாரசாமியின் வழக்கறிஞராக இத்தால் வேண்டுகிறேன்.

சரியான தீர்ப்பை சுமேயக்கா தராவிட்டால் இத்தலைப்பில் உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்படும். :lol:
பி.கு :- சுமேயக்கா இது வெறும் சவுண்டு. கோதாரி பிறகு எனக்கு வட்டம் கட்டி அடிக்கிறேல்ல முதலே சொல்லீட்டன்.nordic-frau.gif

Link to comment
Share on other sites

ஓரளவிற்கு விஷயம் தெரிந்தவர்கள் ? தான் யாழுக்கு வருபவர்கள் .புலம் பெயர்ந்தும் நினைக்க முடியாத அடக்குமுறையில் பல பெண்கள் வாழ்வதுதான் உண்மை .வடிவேலு கோவை சரளா பாணியில் விரலை காட்டி எண்ண சொல்லி அடிக்கும் விண்ணர்கள் பலர் இருக்கின்றார்கள் .

அந்த ஒரு வட்டம் இருக்கு மட்டும் தான் ---------- பலரின் பிழைப்பும் நடந்தது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் சிங்கங்கள் ஒரேயொரு பழையை கசங்கின பட்டுவேட்டியை அயன்பண்ணி...அயன்பண்ணி எல்லாகொண்டாட்டதுக்கும் கட்டுறம்....ஆனால் இவளவையள் மட்டும் ஒவ்வொரு பங்ஷனுக்கும் புதிசுபுதிசாய் கல்லுபதிச்ச சாறியளாய் வாங்கி எங்கடை கழுத்தை திருகிறாளவை.........இப்ப சொல்லுங்கோ ஆருக்கு சுதந்திரம் கூட????? இன்னும் எழுதினனெண்டால் அழுதிடுவன் :(  :(  :(

Link to comment
Share on other sites

ஆண் சிங்கங்கள் ஒரேயொரு பழையை கசங்கின பட்டுவேட்டியை அயன்பண்ணி...அயன்பண்ணி எல்லாகொண்டாட்டதுக்கும் கட்டுறம்....ஆனால் இவளவையள் மட்டும் ஒவ்வொரு பங்ஷனுக்கும் புதிசுபுதிசாய் கல்லுபதிச்ச சாறியளாய் வாங்கி எங்கடை கழுத்தை திருகிறாளவை.........இப்ப சொல்லுங்கோ ஆருக்கு சுதந்திரம் கூட????? இன்னும் எழுதினனெண்டால் அழுதிடுவன் :(  :(  :(

 

 

உங்களுக்காகத் தான் பரிமளம் விலை உயர்ந்த சாறி எல்லாம் வாங்குறா.  வெளிக்கிடுப் போகேக்கை ஆட்கள் கதைப்பினம் எல்லே பார் குசா என்ன மாதிரி மனிசியை வைச்சிருக்கிறார் எண்டு. எல்லாம் புண்ணியமும் உங்களுக்குத் தான் குசா. அதை விளங்காமல் உப்பிடி .......................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்காகத் தான் பரிமளம் விலை உயர்ந்த சாறி எல்லாம் வாங்குறா.  வெளிக்கிடுப் போகேக்கை ஆட்கள் கதைப்பினம் எல்லே பார் குசா என்ன மாதிரி மனிசியை வைச்சிருக்கிறார் எண்டு. எல்லாம் புண்ணியமும் உங்களுக்குத் தான் குசா. அதை விளங்காமல் உப்பிடி .......................

குசா அண்ணையின்ர வேட்டியையும், சாரத்தையும் பாத்திட்டுப் பரிமளம் அன்ரியைப் பற்றிப் பிழையா விளங்க மாட்டினமா, அலை?

 

ஒரு செத்த வீட்டுக்குக் கூட மனுசன் அந்தப் பட்டு வேட்டியைத் தானே கட்டுதெண்டு! :D

Link to comment
Share on other sites

சூப்பர் நெடுக்கு.  Realistic.

 

 

 
நன்றி. படத்தில் எல்லாமே நல்ல இருக்கு. (கதை, சம்பவங்கள், சூழ்நிலைகள்... etc. ) 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணக்கு வழக்கு முழுவதும் பார்க்கிறது மனைவிதான்.. கையேந்தும் நிலைமைதான் எனக்கு.. :(

கடனட்டையில் பத்து டொலர் செலவழித்தாலும் விளக்கம் கொடுக்கவேண்டிய நிலை ஒன்று உள்ளது.. :blink: எனக்கு சுதந்திரம் இருக்கா என்கிறதை நீங்கள்தான் சொல்லவேணும்.. :(:D

 

 
 
இந்தப்பக்கமும் அதே நிலைதான்.............
இந்த நாடுகளில் பணம் ஒரு மனிதனை பாதாளம் வரை கொண்டு செல்லும் ஆபத்து இருப்பதால்.
அது ஒரு பாதுகாப்பு என்றுதான் படுகிறது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓரளவிற்கு விஷயம் தெரிந்தவர்கள் ? தான் யாழுக்கு வருபவர்கள் .புலம் பெயர்ந்தும் நினைக்க முடியாத அடக்குமுறையில் பல பெண்கள் வாழ்வதுதான் உண்மை .வடிவேலு கோவை சரளா பாணியில் விரலை காட்டி எண்ண சொல்லி அடிக்கும் விண்ணர்கள் பலர் இருக்கின்றார்கள் .

அந்த ஒரு வட்டம் இருக்கு மட்டும் தான் ---------- பலரின் பிழைப்பும் நடந்தது .

 

 

எமது கல்வி முறை ஒரு காரணம் என்று நான் நம்புகிறேன். இது படித்த மட்டத்தில் நிறையவே இருக்கிறது. (நீங்கள் அதை மறுத்துத்தான் ஆகவேண்டும் உங்கள் வேஷம் அப்படி). சமூகம் சார்ந்த அறிவு அரிதாகவே இருக்கிறது. வெறும் புத்ததகத்தை பாடமாக்கி அதில் பாசாகியவர்களே எமது சமூகத்தில் படித்தவர்கள்.
அவர்களிடம் பாசாங்கு அளவின்றி இருக்கிறது. பண்பு என்று எதுவுமே இல்லை.
அறிவு என்ற சொல்லுக்கு அடிப்படையே அங்கே இல்லை.
 
ஏழைகளை  பொறுத்த மட்டில்  அவர்களால் முடிந்ததைத்தான் செய்ய முடியும். ஏழ்மையில் இருந்து அவர்களை தூக்கும் வரைக்கும் அங்கே எல்லா தவறுகளும் நடந்துகொண்டே இருக்கும். ஒரு அறிவுள்ள மனிதனால் அவர்களை கை நீட்டி சாட  முடியாது. அவர்களுடைய வாழ்வு ஒரு வட்டத்திட்குள்தான் இருக்கும். 
 
நான் படித்தவன் ...... படித்தவன் என்று சொல்லுவோர்கள்.......
படிக்கும் வரை இவற்றை மாற்ற முடியாது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்காகத் தான் பரிமளம் விலை உயர்ந்த சாறி எல்லாம் வாங்குறா. வெளிக்கிடுப் போகேக்கை ஆட்கள் கதைப்பினம் எல்லே பார் குசா என்ன மாதிரி மனிசியை வைச்சிருக்கிறார் எண்டு. எல்லாம் புண்ணியமும் உங்களுக்குத் தான் குசா. அதை விளங்காமல் உப்பிடி .......................

இப்பிடி உசுப்பேத்தி உசுப்பேத்தி எங்கட உடம்பை ரணகளமாக்கியதுதான் மிச்சம்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தில் உள்ள தமிழ்ப் பெண்களின் சுதந்திரம் என்னவென்று அறிய வெளிக்கிட்டபோது, இங்கும் பெண்களை வெளியுலகம் தெரியாதபடி வீட்டுக்குள்ளேயே வைத்திருக்கின்றார்கள் என்று கேள்விப்பட்டேன். அவர்களும் கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் பணிவிடை செய்வதே வாழ்வின் விதி என்று வாழ்கின்றார்களாம். சமூக அக்கறையுள்ள மெசோ ஆன்ரி போன்ற பெண்கள் இப்படியானவர்களுக்கு உதவ ஒரு அமைப்பு ஆரம்பித்தால் நல்லது. :icon_idea:

 

நான் ஏற்கனவே ஒரு அமைப்பைப் பதிவுசெய்துவிட்டேன். ஆரம்பிக்கும் போது உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன். உங்களுக்குத் தெரிந்தவர்களை அனுப்புங்கள்.

 

இந்தத் திரியை உருவாக்கிய சுமேக்கு நன்றிகள் கோடி. எவ்வளவு சந்தோசமாய் இருக்கு வாசிக்க  :lol:

 

அலைமகளுக்கு விடுப்புச் சுந்தரி என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கிறேன். :lol: :lol:

 

மனைவியின் சுதந்திரம்பற்றிய ஆய்வுகளில் இங்கு பலரும் பலவிதமான கருத்துக்களை தங்கள் கேள்வி ஞானத்திற்கிணங்கவும், அனுபவத்திற்கு இணங்க உண்மையாகவும், நகச்சுவையாகவும் பகிர்வுகளை மேற்கொண்டிருந்தாலும், இயற்கையின் தத்துவத்தை உணர்ந்த பெரியோர்களின் வழிகாட்டுதல்கள் உணரப்படவில்லை. பெண் பாதுகாக்கப்பட வேண்டியவள். ஆண்பாதுகாக்க வேண்டியவன். இது இயற்கையின் தார்ப்பரியம் யாராலும் மீறமுடியாதது. பெண் அளவிடமுடியாத அதீத சக்தி உடையவள். அந்தச் சக்தியை எளிதில் அடக்கவே முடியாது ஆகையால்தான் பெண்ணை பூப்போல மென்மையாக்கி அடக்கமாக இயற்கை வைத்துள்ளது. பெண்ணால் அடக்கி ஆளப்படும் ஆண்கள் நிறையவே உள்ளனர். ஆனால் அவர்களைப் பெண்கள்கூட உயர்வாக மதிப்பதில்லை அதுமட்டுமல்ல ஆண்களை அடக்கிவாழும் பெண்களையும் பெண்களே உயர்வாக மதிப்பதில்லை என்பதும் அனுபவபூர்வமான உண்மை.

 

இதனை உணர்ந்துதான் திருவள்ளுவரும் பெண்ணின் மென்மைக்கு இணையான நாணத்தை தனது குறளில் இவ்வாறு கூறியுள்ளார்.

 

பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்

பெண்ணே பெருமை உடைத்து.

மனைவியின் ஏவலைச் செய்து நடக்கின்றவனுடைய ஆண்மையைவிட, நாணத்தை தன் இயல்பாக உடையவளின் பெண்மையே பெருமை உடையது.

 

திருவள்ளுவர் ஆண் இல்லையா?????

 

ஈசன்ர லவ் இப்படியானது. அது அவருக்கு மட்டுமே தான் விளங்கும்..!

 

 

 

நல்லதொரு குறும்படம்.எவ்வளவு பொருத்தமாக ஈசனின் நிலையைக் கண்டுபிடித்துப் போட்டுள்ளீர்கள் நெடுக்ஸ்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நான் வந்தநாள்தொடக்கம் கொண்டுவந்த சாறத்டோடையே படுத்தெழும்புறன்....ரவுசரும் அப்பிடியே கிழியாமல் வைச்சிருந்து அப்பப்ப பாவிக்கிறன். :mellow:  ^_^  :o  :(
 
சாமத்தியவீடு ஒண்டுக்காக போனகிழமை இவள் பாவி ஒருக்கால் கட்டுறதுக்காக  599 ஈரோவுக்கு ஒருசாறி வாங்கியாச்சு........இப்ப என்னடாவெண்டால் லைனிங் வைச்சு பிளவுஸ் தைக்க 25 ஈரோவாம்........"ஒருக்கால் கட்டின சாறி இன்னுமொருக்கால் கட்டமாட்டம்". :o  :o  :huh: .... நோட் திஸ் பாய்ன்ட் யுவர் ஆனர்.. :icon_idea:

 

 

சிலருக்கு பழைய ஆடைகளை திரும்பத் திரும்பப் போடுவதில் ஆனந்தம். ஒவ்வொருவருக்கும் ஒரு ரசனை. நான் ஒரு நாளுமே பணத்தை விரயமாக்கி சேலை எடுப்பதில்லை. நீங்கள் உங்களுக்குப் புதிய ஆடை வாங்காதது உங்கள் தவறு. நீங்கள் கேட்டு மனைவி இல்லை என்று சொன்னாரா???? அதுக்கும் இல்லையே???  நீங்கள் கஞ்சப்பிசினாரியாக இருந்துகொண்டு மனைவியை ஏன் குறை சொல்லுவான்.

துணிஞ்சு காலை நிலத்தில வடிவா ஊண்டி நிண்டு கேள்வி கேட்கவேணும் அண்ணா.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான தீர்ப்பை சுமேயக்கா தராவிட்டால் இத்தலைப்பில் உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்படும்.

பி.கு :- சுமேயக்கா இது வெறும் சவுண்டு. கோதாரி பிறகு எனக்கு வட்டம் கட்டி அடிக்கிறேல்ல முதலே சொல்லீட்டன்.nordic-frau.gif

 

நீங்கள் சவுண்டை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைச்சதால சரி உங்களை அப்பிடியே விடுறன்.

 

ஓரளவிற்கு விஷயம் தெரிந்தவர்கள் ? தான் யாழுக்கு வருபவர்கள் .புலம் பெயர்ந்தும் நினைக்க முடியாத அடக்குமுறையில் பல பெண்கள் வாழ்வதுதான் உண்மை .வடிவேலு கோவை சரளா பாணியில் விரலை காட்டி எண்ண சொல்லி அடிக்கும் விண்ணர்கள் பலர் இருக்கின்றார்கள் .

அந்த ஒரு வட்டம் இருக்கு மட்டும் தான் ---------- பலரின் பிழைப்பும் நடந்தது .

 

நீங்கள் ஒருவராவது ஒத்துக்கொண்டீர்களே அண்ணா.

 

குசா அண்ணையின்ர வேட்டியையும், சாரத்தையும் பாத்திட்டுப் பரிமளம் அன்ரியைப் பற்றிப் பிழையா விளங்க மாட்டினமா, அலை?

 

ஒரு செத்த வீட்டுக்குக் கூட மனுசன் அந்தப் பட்டு வேட்டியைத் தானே கட்டுதெண்டு! :D

 

உண்மையிலேயே இங்க அப்பிடி ஒண்டு நடந்தது. இங்கு பிறந்து வளர்ந்து கலியாணம் கட்டின ஒருவரின் மாமனார் இறந்ததற்கு அவரைப் போய் வெட்டி கட்டிக்கொண்டு வந்து நில்லுங்கோ என்று கூற அவர் தன் திருமண வேட்டி சட்டையைப் போட்டுக்கொண்டு வந்தது செத்தவீட்டுக்குப் போனவர்களுக்கு அதிர்ச்சி.

 

 

 
 
இந்தப்பக்கமும் அதே நிலைதான்.............
இந்த நாடுகளில் பணம் ஒரு மனிதனை பாதாளம் வரை கொண்டு செல்லும் ஆபத்து இருப்பதால்.
அது ஒரு பாதுகாப்பு என்றுதான் படுகிறது.

 

 

அப்பிடி ஒத்துக் கொள்ளுங்கோ மருதங்கேணி. :D

 

Link to comment
Share on other sites

சிலருக்கு பழைய ஆடைகளை திரும்பத் திரும்பப் போடுவதில் ஆனந்தம். ஒவ்வொருவருக்கும் ஒரு ரசனை. நான் ஒரு நாளுமே பணத்தை விரயமாக்கி சேலை எடுப்பதில்லை. நீங்கள் உங்களுக்குப் புதிய ஆடை வாங்காதது உங்கள் தவறு. நீங்கள் கேட்டு மனைவி இல்லை என்று சொன்னாரா???? அதுக்கும் இல்லையே???  நீங்கள் கஞ்சப்பிசினாரியாக இருந்துகொண்டு மனைவியை ஏன் குறை சொல்லுவான்.

துணிஞ்சு காலை நிலத்தில வடிவா ஊண்டி நிண்டு கேள்வி கேட்கவேணும் அண்ணா.

 

 

 

:lol:  :lol: ம்ம்....

Link to comment
Share on other sites

 

திருவள்ளுவர் ஆண் இல்லையா?????

 

திருவள்ளுவர் சிலைவடிக்க கருநாநிதிக்கு உளி எடுத்துக் கொடுத்த மெசொபொத்தேமியா சுமேரியருக்கே சந்தேகமா????? :huh:  :o  :(  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருவள்ளுவர் சிலைவடிக்க கருநாநிதிக்கு உளி எடுத்துக் கொடுத்த மெசொபொத்தேமியா சுமேரியருக்கே சந்தேகமா????? :huh:  :o  :(  

 

அவர் பெண் சுதந்திரம் பற்றி எங்காவது கூறியுள்ளாரா பாஞ்ச்?????

 

Link to comment
Share on other sites

இன்னொருவர் பெற்றுத்தருவது சுதந்தரமல்ல. எங்களுடைய முயற்சியால் பெற்றுக்கொள்ளும் சுதந்திரமே நிலைத்து நிற்கும். இயற்கையுடனும் போராடித்தான் ஒரு உயிர் சுதந்திரமாக வாழ முனைகிறது. :)

 

திருவள்ளுவர் ஆண் என்பதுதான் உண்மையென்று வரலாற்றில் உள்ளது ஆனால் திருக்குறளுக்கு பொழிப்புரை எழுதியவர்கள் எல்லோருமே உண்மையை எழுதியுள்ளார்களா? என்ற சந்தேகத்தை எழவைக்கும் உதாரணத்தையும் காணுங்கள்: :rolleyes:

 

"தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை"

 

தினமும் தெய்வத்தை தொழுபவள், தெய்வத்திற்குப் பதிலாக வயலை உழவுசெய்யும் ஏரைத் (கொழுவிற்கு ஏர் என்றும் பொருளுண்டு) தொழுதெழுகிறாள். உழவுத்தொழில்பற்றி அதீத ஞானமுடையவள் என்றும் அப்பெண்ணை வள்ளுவர் காண்பதாக, அவருடைய குறளுக்கு ஏன் பொருள் கொள்ளக்கூடாது!. அத்துணை திறன் கொண்ட பெண்ணுக்கு மழை எப்போது பெய்யும் என்பதை சொல்லியா கொடுக்கவேண்டும்!. அவள் மழை பெய்யுமென்றால் பெய்யும்!  :wub:

 

மகளிருக்குக் கல்வியும் மிக முக்கிய காரணம். அவர்களும், ஆண்களுக்கு நிகராக உயர கல்வி பெற்று, அனைத்துத் துறைகளிலும் சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், திருவள்ளுவர் பெயரிலேயே, திருவள்ளுவர் பல்கலைக் கழகம் ஒன்று தமிழகத்தில் உள்ளதாகவும் அறிந்துள்ளேன். :o  :D 

Link to comment
Share on other sites

அலைமகள் தான்.... உண்மையான தமிழ்மகள். ஊர் விடுப்பு அறிவதில், அவ்வளவு சந்தோசம் போல இருக்கு. :D:lol:

அலை அக்காக்குக்கு சந்தோசம் வீட்டு காரர அடக்கி அதிகாரம் பண்ணுறதில எல்லா பொண்டாட்டிங்களும் தன்ன மாதிரியே இருக்காங்க எண்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொருவர் பெற்றுத்தருவது சுதந்தரமல்ல. எங்களுடைய முயற்சியால் பெற்றுக்கொள்ளும் சுதந்திரமே நிலைத்து நிற்கும். இயற்கையுடனும் போராடித்தான் ஒரு உயிர் சுதந்திரமாக வாழ முனைகிறது. :)

 

திருவள்ளுவர் ஆண் என்பதுதான் உண்மையென்று வரலாற்றில் உள்ளது ஆனால் தி

 

நாமாகப் பெற்றுக்கொள்வதிலும் யாராவது பெற்றுக் கொடுப்பதையே பெரும்பாலான தமிழ்ப் பெண்கள் விரும்புகின்றனர். ஆண்டாண்டு காலமாக அடிமைத்தனத்தில் ஊறியவர்கள் மற்றவரைப் பார்த்து உடனே திருந்தவா போகின்றனர். அதற்கு ஊருக்கு பத்துப்பேர் என்போன்றவர்கள் வரவேண்டும்.

 

Link to comment
Share on other sites

ஆண்டாண்டு காலமாக அடிமைத்தனத்தில் ஊறியவர்கள் மற்றவரைப் பார்த்து உடனே திருந்தவா போகின்றனர். அதற்கு ஊருக்கு பத்துப்பேர் என்போன்றவர்கள் வரவேண்டும்.

 

 

 

 கடவுள்தான் காப்பாற்றவேண்டும். :blink:  சுமேரியரையா! ஊரையா! என்பதை உறவுகள்தான் முடிவுசெய்யவேண்டும். :lol:  :D  :o  

Link to comment
Share on other sites

சுமேரியர்களை இனிமேல் ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்..! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே நீங்கள் குடும்பம் என்ற பொதுமைச் சிறைக்குள் நின்றுகொண்டு அந்தச் சிறைக்குள் எவ்வளவு சுதந்திரம் இருக்கிறது என்று அளவுகோல் கேட்கிறீர்கள்....... :icon_mrgreen:  

 

இருப்பதே சிறைக்குள்..... :unsure: அதற்குள் என்ன பெரிதாக சுதந்திரம் இருக்கப்போகிறது? :(  ஆணுக்கும் பெண்ணுக்கும் எல்லாம் சமமே :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே நீங்கள் குடும்பம் என்ற பொதுமைச் சிறைக்குள் நின்றுகொண்டு அந்தச் சிறைக்குள் எவ்வளவு சுதந்திரம் இருக்கிறது என்று அளவுகோல் கேட்கிறீர்கள்....... :icon_mrgreen:  

 

இருப்பதே சிறைக்குள்..... :unsure: அதற்குள் என்ன பெரிதாக சுதந்திரம் இருக்கப்போகிறது? :(  ஆணுக்கும் பெண்ணுக்கும் எல்லாம் சமமே :D

 

இதைத்தான் நானும் எழுதியிருந்தேன்

நானே அடிமை

என்னிடம் சுதந்திரம்  கேட்கின்றீர்கள் என்று........ :lol:  :D

சமூகக்கட்டுப்பாடுகளுக்குள்ளும்

அதன் வழி நடத்தல்களுக்குள்ளும்  கட்டுப்பட்டு

என்னைத்துலைத்து வாழும் அடிமை நான்.

என்னிடமிருந்து எப்படி நீங்கள் உரிமையை  எதிர்பார்க்கமுடியும்???

 

எனது பிள்ளைக்கே 

சில தடைகளை  என்னால் விலத்தமுடியாத போது.........

மனைவிக்கு............??? :(

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.