Jump to content

நீங்கள் உங்கள் மனைவிக்கு எவ்வளவு சுதந்திரம் கொடுப்பவர்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எயர் ஹொஸ்ரஸ் ,நேர்ஸ்மாருக்கெல்லாம் மாப்பிளை எடுக்கிறது வலு கஸ்டம்...... :icon_idea:

Link to comment
Share on other sites

  • Replies 219
  • Created
  • Last Reply

இது ஆண்கள் சம்பந்தப்பட்ட திரி என்பதனால் நானும் இதில் எழுதாமல் விட்டிருந்தேன்.  இப்போது எழுத வேண்டிய அவசியம் இருப்பதால் எழுதுகிறேன்.  எங்கள் வீட்டிற்கு ஆண்கள் வந்தால் எனக்கு அறையை விட்டு வெளியில் வர அனுமதி இருக்கவில்லை.  கனடா வந்த பிறகும் அந்நிய ஆண்கள் வந்தால் அறையை விட்டு வெளியில் வருவதற்கு அனுமதி இல்லாமல்தான் இருந்தேன்.  எனது குடும்பம் வேறு பெரியது.  எனக்கு நிறைய ஆண் சகோதரர்கள்.  ஆனால், அவர்களையெல்லாம் மீறி அவர்களுடைய கட்டுப்பாடுகளையெல்லாம் உடைத்தெறிந்து நான் விரும்பிய பல்கலைக்கழகத்திற்கு நான் விரும்பிய படிப்பையே படித்தேன்.   நான் சென்ற பல்கலைக்கழகம் எனது வீட்டிலிருந்து 200 கிலோ மீட்டர்களுக்கப்பால் இருந்தது.  வேறு இரண்டு பெண்களோடு ஒரு வீடு எடுத்துத் தங்கியிருந்தேன்.  பல வருடங்களாகத் தமிழீழப்போராட்டத்திலும் எனது பங்களிப்பைச் செய்திருக்கிறேன்.  நான் அறிந்திராத  நாட்டிற்குச் சென்று ஆறு மாதங்களாகத் தனியாகத் தங்கியிருந்தேன்.  அந்த நாட்டிற்குச் செல்லும்வரை அங்கு என்ன மொழி பேசுவார்கள் என்றுகூட அறிந்திருக்கவில்லை.    எனது சுதந்திரத்தை நானே போராடிப் பெற்றுக் கொண்டேன்.  எனக்காக யாரும் (எனது தாயார், சகோதரிகள் உட்பட) கதைத்ததுமில்லை. உதவி செய்ததுமில்லை.  நான் வாழும் நாடு எனக்கு துணிவைக் கொடுத்தது.  அனைத்தும் எனது விருப்பப்படியேதான்  நடக்கிறது. பல்கலைக்கழகத்தில் படித்த போது மட்டுமே தனியாக இருந்தேன்.  மற்றைய காலகட்டங்களிலெல்லாம்  நான் எனது குடும்பத்தினரோடுதான் வாழ்ந்து வருகிறேன்.   

 

என்னைப் பொறுத்தவரை மைத்ரேயி, பாஞ் குறிப்பிட்டது போல சுதந்திரம் என்பது எமது கைகளிலேயே உள்ளது.     நான் பெற்றுக் கொண்ட சுதந்திரத்தினால் நான் இழந்தவற்றைவிட சாதித்தவைதான் அதிகம்.  நான் இந்த சமூகத்திற்குப் பயந்து வாழ்ந்திருந்தேனானால் யாழுக்குக் கூட வந்திருக்க முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை கூறுங்கள்.. நீங்கள் வீட்டில் இருக்கும்போது வரும் உறவினர்களுக்கோ அல்லது விருந்தினர்களுக்கோ உங்கள் கணவர் தேனீர் போட்டுக் கொடுப்பாரா?  :o

 

கணவர் தேநீர் கொடுப்பதற்கு என்ன பிரச்சனை???? ஆனால் கணவரிலும் பார்க்க நான் சுவையாகப் போடுவதால் விருந்தினர்களை முகம் சுளிக்க வைப்பதில்லை என்னும் முடிவில் நானே போட்டுவிடுவேன். ஏனெனில் விருந்தோம்பல் விடயத்தில் எனக்கென்று ஒரு பெயர் என்னுடன் பழகும் ஆட்களிடமோ அன்றி உறவினரிடமோ இருக்கிறபடியால் அதைத் தக்கவைப்பது என் கடமையல்லவா??? மற்றப்படி போலிக் கவுரவம் பார்க்கமாட்டார் என் கணவர். ஒருமுறை என் நண்பிகள் எல்லாம் என் வீட்டுக்கு வந்தபொழுது என்னுடன் சேர்ந்து அவர்களுக்கு உணவு பரிமாறி அசத்தினார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் தமிழச்சி. எம் சுதந்திரத்தை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் புலம்பெயர் தேசத்தில் பழ பெண்களுக்கு சுதந்திரம் என்பது எது என்றே தெரியாது வாழ்ந்து வருகின்றனர். சில ஆண்கள் பெண்ணை வெளியே விட்டுப் பழக்கினால் எங்கே அவர்கள் தம்பாட்டில் எல்லாம் செய்ய ஆரம்பித்துவிடுவார்களோ என்னும் அச்சத்தில் அன்பு,அக்கறை என்னும் மாயத்தோற்றம் ஒன்றை உருவாக்கி தம் துணைவியாரை ஒன்றுமே செய்ய விடுவதில்லை. அவர்களின் வாயை அடைக்க அவர்களுக்கு நகையும் சேலையும் வாங்கிக் குடுத்தே வாய் திறக்காமல் செய்தும் விடுவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருமுறை என் நண்பிகள் எல்லாம் என் வீட்டுக்கு வந்தபொழுது என்னுடன் சேர்ந்து அவர்களுக்கு உணவு பரிமாறி அசத்தினார்.

உங்களையா? தோழிகளையா? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் தமிழச்சி. எம் சுதந்திரத்தை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் புலம்பெயர் தேசத்தில் பழ பெண்களுக்கு சுதந்திரம் என்பது எது என்றே தெரியாது வாழ்ந்து வருகின்றனர். சில ஆண்கள் பெண்ணை வெளியே விட்டுப் பழக்கினால் எங்கே அவர்கள் தம்பாட்டில் எல்லாம் செய்ய ஆரம்பித்துவிடுவார்களோ என்னும் அச்சத்தில் அன்பு,அக்கறை என்னும் மாயத்தோற்றம் ஒன்றை உருவாக்கி தம் துணைவியாரை ஒன்றுமே செய்ய விடுவதில்லை. அவர்களின் வாயை அடைக்க அவர்களுக்கு நகையும் சேலையும் வாங்கிக் குடுத்தே வாய் திறக்காமல் செய்தும் விடுவர்.


உங்களையா? தோழிகளையா? :rolleyes:

 

தோழிகளுக்குத்தான் வேறென்ன??? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றப்படி போலிக் கவுரவம் பார்க்கமாட்டார் என் கணவர். ஒருமுறை என் நண்பிகள் எல்லாம் என் வீட்டுக்கு வந்தபொழுது என்னுடன் சேர்ந்து அவர்களுக்கு உணவு பரிமாறி அசத்தினார்.

 

 

புரியுது... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரியுது... :D

 

புரியுதோ வயிறு எரியுதோ அண்ணா :lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் தமிழச்சி. எம் சுதந்திரத்தை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் புலம்பெயர் தேசத்தில் பழ பெண்களுக்கு சுதந்திரம் என்பது எது என்றே தெரியாது வாழ்ந்து வருகின்றனர். சில ஆண்கள் பெண்ணை வெளியே விட்டுப் பழக்கினால் எங்கே அவர்கள் தம்பாட்டில் எல்லாம் செய்ய ஆரம்பித்துவிடுவார்களோ என்னும் அச்சத்தில் அன்பு,அக்கறை என்னும் மாயத்தோற்றம் ஒன்றை உருவாக்கி தம் துணைவியாரை ஒன்றுமே செய்ய விடுவதில்லை. அவர்களின் வாயை அடைக்க அவர்களுக்கு நகையும் சேலையும் வாங்கிக் குடுத்தே வாய் திறக்காமல் செய்தும் விடுவர்.

 

தோழிகளுக்குத்தான் வேறென்ன??? :D

 

நாங்கள் எங்கையோ போட்டம், சுமே!

 

நீங்கள் இன்னும் நாவாந்துறை, கோணாந்தோட்டம் லெவல்ல தான் சிந்திக்கிறீங்கள் போல கிடக்கு! :D

Link to comment
Share on other sites

 மற்றப்படி போலிக் கவுரவம் பார்க்கமாட்டார் என் கணவர். ஒருமுறை என் நண்பிகள் எல்லாம் என் வீட்டுக்கு வந்தபொழுது என்னுடன் சேர்ந்து அவர்களுக்கு உணவு பரிமாறி அசத்தினார்.

 

 

இதென்ன பெரிய விசயம். நான் எண்டால் தோழிகளுக்கு சாப்பாடு ஊட்டி விட்டிருப்பன். :D

Link to comment
Share on other sites

கணவர் தேநீர் கொடுப்பதற்கு என்ன பிரச்சனை???? ஆனால் கணவரிலும் பார்க்க நான் சுவையாகப் போடுவதால் விருந்தினர்களை முகம் சுளிக்க வைப்பதில்லை என்னும் முடிவில் நானே போட்டுவிடுவேன். ஏனெனில் விருந்தோம்பல் விடயத்தில் எனக்கென்று ஒரு பெயர் என்னுடன் பழகும் ஆட்களிடமோ அன்றி உறவினரிடமோ இருக்கிறபடியால் அதைத் தக்கவைப்பது என் கடமையல்லவா??? மற்றப்படி போலிக் கவுரவம் பார்க்கமாட்டார் என் கணவர். ஒருமுறை என் நண்பிகள் எல்லாம் என் வீட்டுக்கு வந்தபொழுது என்னுடன் சேர்ந்து அவர்களுக்கு உணவு பரிமாறி அசத்தினார்.

 

 

ஆலயங்களில் அன்னதானம், கலியாணவீடு என்று சபைகள் சந்திகளில் ஆண்கள் உணவு பரிமாறி அசத்துவது ஒன்றும் பெரிய விடயமே அல்ல. விருந்தினர் வீட்டுக்கு வந்தால் இறைச்சிகூடச் சமைப்பார்கள். ஆனால் இவற்றை அவர்கள் தாம் விரும்பும்போது மாத்திரமே செய்வார்கள். மனைவி கூறி செய்வார்கள் என்பது சந்தேகமே. இதுதான் சாதாரணமாக ஒரு தமிழ் ஆணின் இயல்பு. ஆனால் இதே ஆண் வேற்றினப் பெண்ணை திருமணம் செய்திருந்தால் தானாகவே பலவற்றை செய்வதை அவதானிக்கலாம். ஆகவே முட்டையில் மயிர் பிடுங்குவதுபோல இவற்றை பெண்களுக்கான சுதந்திரமின்மை எனக் கருதினால் சகல தமிழ் பெண்களும் சுதந்திரமில்லாமல்தான் வாழ்கிறார்கள்.  

 

இப்படியான நிகழ்வுகளை கண்டு எழுதிய சிறுகதைகள் சில:

 

சாகாவரம்

 

மறுவிசாரணை 

 

யாகாவாராயினும் நாகாக்க!  

 

விசவித்துக்கள்...! 

 

:D 

Link to comment
Share on other sites

நாங்கள் எங்கையோ போட்டம், சுமே!

நீங்கள் இன்னும் நாவாந்துறை, கோணாந்தோட்டம் லெவல்ல தான் சிந்திக்கிறீங்கள் போல கிடக்கு! :D

புங்கை.. உது லண்டன் சமாச்சாரம்.. ;-)

இதென்ன பெரிய விசயம். நான் எண்டால் தோழிகளுக்கு சாப்பாடு ஊட்டி விட்டிருப்பன். :D

கவனிச்சுப் பாருங்கோ.. உங்கட வீட்டுக்கு தோழியரே வராயினமே.. :rolleyes::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எயர் ஹொஸ்ரஸ் ,நேர்ஸ்மாருக்கெல்லாம் மாப்பிளை எடுக்கிறது வலு கஸ்டம்...... :icon_idea:

 

இந்த  திரியை  கவனித்தால் தெரியும்

வயசு வந்த பிள்ளைகளை உடையோர் எல்லோரும் தமது வயதாலும்

அனுபவத்திலும்

பிள்ளைகளின் அக்கறையின் பாலும்

தமது பிள்ளைகளை ஒரு வரம்புக்குட்பட்டே வளர்க்கிறார்கள் என்பது இங்கு தெரிகிறது.

 

மற்றவர்கள்

சிறு பிள்ளைகளை உடையோர்

கேட்டறிவும்

அனுபவமுமின்றி  எழுதுகின்றார்கள் என்பது தெரிகிறது.

 

எனது 2வது மகன்  விமானிக்கு படிக்கப்போவதாக சொல்லி  அபிப்பிராயம் கேட்ட போது நான் சொன்னது.

நல்லவிடயம்

கேட்க சந்தோசமாகவும் இருக்கு.

ஆனால் எனக்கு விருப்பமில்லை

ஒரே ஒரு காரணம் தான்

அந்த தொழிலுக்கும் குடும்ப  வாழ்க்கைக்கும் சரி வராது என்று தான். :(

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன பெரிய விசயம். நான் எண்டால் தோழிகளுக்கு சாப்பாடு ஊட்டி விட்டிருப்பன். :D

 

கையாலா கரண்டியாலா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கையாலா கரண்டியாலா???

தப்பிலி அந்த நேர தேவையைப் பொறுத்து செய்வார்
Link to comment
Share on other sites

இந்த  திரியை  கவனித்தால் தெரியும்

வயசு வந்த பிள்ளைகளை உடையோர் எல்லோரும் தமது வயதாலும்

அனுபவத்திலும்

பிள்ளைகளின் அக்கறையின் பாலும்

தமது பிள்ளைகளை ஒரு வரம்புக்குட்பட்டே வளர்க்கிறார்கள் என்பது இங்கு தெரிகிறது.

 

மற்றவர்கள்

சிறு பிள்ளைகளை உடையோர்

கேட்டறிவும்

அனுபவமுமின்றி  எழுதுகின்றார்கள் என்பது தெரிகிறது.

 

எனது 2வது மகன்  விமானிக்கு படிக்கப்போவதாக சொல்லி  அபிப்பிராயம் கேட்ட போது நான் சொன்னது.

நல்லவிடயம்

கேட்க சந்தோசமாகவும் இருக்கு.

ஆனால் எனக்கு விருப்பமில்லை

ஒரே ஒரு காரணம் தான்

அந்த தொழிலுக்கும் குடும்ப  வாழ்க்கைக்கும் சரி வராது என்று தான். :(

.

 

எனது சகோதரனுக்கும் இதே நிலைமைதான் இருந்தது.  அவர் பல்கலைக்கழகம் செல்லும்போது எனது குடும்பத்தினர் அனைவரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.  அதனால் அவர் வேறு துறையில்தான் படித்தார்.  படித்து முடித்ததும் தனது செலவிலேயே விமானிக்குப் படித்து இப்போது சிறு விமானங்கள் மற்றும் வர்த்தக விமானங்கள் செலுத்தும் விமானியாக இருக்கிறார்.  அதேபோல், எனது மருமகன் ஒருவரும் விமானப் பொறியியலாளராக (Aeronautical Engineering) வர விரும்பினார்.  அதனை இங்கு பல்கலைக்கழகத்தில் படிப்பிப்பதில்லை.  கல்லூரிகளிலேயே படிப்பிப்பார்கள்.  அதனால், எனது அண்ணா இவரை அப்படிப்பிற்கு அனுமதிக்கவில்லை.  பெற்றோரின் விருப்பப்படியே பல்கலைக்கழகத்திற்குச் சென்று, முதலாவது ஆண்டை முடித்து விட்டு,  கல்லூரிக்குச் சென்று இப்போது விமானப் பொறியியலாளர் படிப்பையே தொடர்கிறார்.   தந்தையின் விருப்பப்படி, தான் ஒரு டிகிரி எடுத்துத் தருவேன் என்ற உறுதிமொழியும் கொடுத்திருக்கிறார்.   இவருக்கு அடுத்தவர் அவரது மற்றும் பெற்றோரின் விருப்பப்படி கம்பியூட்டர் இன்ஜீனயரிங் பல்கலைக்கழகத்திற்குச் சென்று படிக்கிறார்.  

Link to comment
Share on other sites

எனது 2வது மகன் விமானிக்கு படிக்கப்போவதாக சொல்லி அபிப்பிராயம் கேட்ட போது நான் சொன்னது.

நல்லவிடயம்

கேட்க சந்தோசமாகவும் இருக்கு.

ஆனால் எனக்கு விருப்பமில்லை

ஒரே ஒரு காரணம் தான்

அந்த தொழிலுக்கும் குடும்ப வாழ்க்கைக்கும் சரி வராது என்று தான். :(

.

உங்களது அவதானங்களை (observations) சொல்லியிருந்தீர்களாயின், அது ஏற்புடையதே. ஆனால் நீங்கள் விமானத்துறையில் இல்லாதபட்சத்தில் ஒருஆலோசனையாக (advise) அதைச் சொல்லியிருந்தீர்களாயின் அது ஏற்புடையதல்ல என்பது என் கருத்து. :unsure:

மகன் நாளை தான் ஒரு விமானியாக வந்திருக்கலாமே என்று வருந்தினால் அதற்கு பொறுப்புக்கூறும் கடமை உங்களை வந்து சேர்ந்துவிடும்.

பி.கு.: இன்று மகன் சரி என்று சொல்வதற்குப் பல காரணங்கள் இருக்கலாம், குடும்ப உணர்வு, பொருளாதாரம் என.. ஆனால் Gen-x வகையைச்சேர்ந்த எமது சிந்தனைகளுக்கும், millennials என்கிற அவர்களது சிந்தனைகளுக்கும் இடையில் பலத்த வேறுபாடுகள் உண்டு.

Link to comment
Share on other sites

விசுகு அண்ணா ஒரு தாயாக இருந்தும் என் பெண் பிள்ளைக்கு ஒரு எல்லைக்கு அப்பால் என்னால் தடைகளை அகற்ற முடியவில்லை. உங்களுக்கே தெரியும் எனது மகள் விரும்பிப்படித்து பெற்ற தொழில் air hostress அதனைத் தொடர நான் அனுமதிக்கவில்லை சில மாதங்களோடே நிறுத்திவிட்டேன்.

ஒரு பெண்ணின் சுதந்திரம். 

 

எனது 2வது மகன்  விமானிக்கு படிக்கப்போவதாக சொல்லி  அபிப்பிராயம் கேட்ட போது நான் சொன்னது.

நல்லவிடயம்

கேட்க சந்தோசமாகவும் இருக்கு.

ஆனால் எனக்கு விருப்பமில்லை

ஒரு ஆணின் சுதந்திரம்

Link to comment
Share on other sites

ஆனால் இவற்றை அவர்கள் தாம் விரும்பும்போது மாத்திரமே செய்வார்கள். மனைவி கூறி செய்வார்கள் என்பது சந்தேகமே. இதுதான் சாதாரணமாக ஒரு தமிழ் ஆணின் இயல்பு. ஆனால் இதே ஆண் வேற்றினப் பெண்ணை திருமணம் செய்திருந்தால் தானாகவே பலவற்றை செய்வதை அவதானிக்கலாம். ஆகவே முட்டையில் மயிர் பிடுங்குவதுபோல இவற்றை பெண்களுக்கான சுதந்திரமின்மை எனக் கருதினால் சகல தமிழ் பெண்களும் சுதந்திரமில்லாமல்தான் வாழ்கிறார்கள்.  

 

 

:D 

 

ஏன் வேற்றினப்பெண்ணை மணந்தால் மட்டும் தமிழ் ஆண் ஏன் சகஜமாக எல்லா வேலைகளையும்  பகிர்ந்து செய்வார் ? விளக்கம் வேணும் அண்ணோய் ?

 

 யாயினியின் கருத்துக்கு,

போராளிகள் விடயத்திலும் இதுதான் உங்கள் கருத்தா?! ... என்று கேட்டிருக்கிறேன். ஏனெனில் சமுதாயத்திற்காக தங்களைத் தொலைத்தவர்கள்தானே அவர்கள்_!

 

 

போராளிகள் பற்றி விவாதிப்பதானால் சோழி புதிய திரியை ஆரம்பியுங்கோ அதுதான் பொருத்தமாக இருக்கும்.

Link to comment
Share on other sites

தேசிய தலைவருக்கு பலத்த பாதுகாப்பு இருந்தது. அவர் நினைத்தாலும் தனியாக செல்ல முடியாது. அதற்காக அவருக்கு சுதந்திரம் இல்லை என்று கூறிவிட முடியுமா? பெண் சமூகத்தின் உற்பத்திக்கான காரணி என்பதால் சமூகமானது பாதுகாப்புக்காக சில கட்டுப்பாடுகளை விதித்தால் அவற்றை எப்படி அடக்குமுறை என்று கூறமுடியும்?

 

இங்கு நான் சிவப்பால் அடையாளமிட்டிருக்கும் கருத்துக்கான எனது பதில் :-

15வருடங்கள் இருக்குமென நினைக்கிறேன்.  ஒரு பத்திரிகைப் பேட்டியில் பெண் விடுதலை தொடர்பாக பேசப்பட்டிருந்தது. அதில் ஒரு பெண்ணும் கலந்ததாக நினைவு. குறித்த ஆணின் கருத்துக்கு பதில் கொடுத்திருந்தார். இறுதியில் அந்து ஆண் பெண்ணின் கருத்தை வெல்ல முடியாத நிலமை வந்ததும் இறுதி முற்று வைத்திருந்தார்.

ஆண் சிறுநீர் கழிப்பது போல பெண்ணால் முடியுமா என. இதே போன்ற மனநிலையில் தான் உங்கள் கருத்தும் அமைந்திருக்கிறது.

 

உற்பத்தி மெஷின் தானாக தன்னை காப்பாற்றாதவரை அது தனத தரத்தை இழந்து போவது தவிர்க்க முடியாது.

பெண் உற்பத்தி மெஷினாக நீங்கள் நினைத்து காப்பாற்றத் துடிப்பது பாதுகாப்பதற்கு அல்ல பக்கா சுயநலம்.

 

மகன் நாளை தான் ஒரு விமானியாக வந்திருக்கலாமே என்று வருந்தினால் அதற்கு பொறுப்புக்கூறும் கடமை உங்களை வந்து சேர்ந்துவிடும்.

 

இதேபோன்றதொரு நிலமை சகாராவின் மகளின் மனதிலும் நிச்சயம் இருக்கும். விசுகுவின் மகனின் எண்ணத்திலும் மறக்காத காயமாக இருக்கும்.

எனக்குப் பிடித்த கல்வியை அடைய முடியாமற்போனதற்கு காரணமான எனது உறவினர்களை நான் இப்போதும் நினைத்து வருந்துவது மட்டுமல்ல. என் வாழ்வில் மன்னிக்க முடியாதவர்களாகவும் அவர்கள் என் மனசில் இருக்கிறார்கள்.

பெண் என்ற காரணத்துக்காக எனக்கு மறுக்கப்பட்ட உயர்கல்வி எனது தெரிவை அப்போது என்னால் முன்னெடுக்க இப்போது போல யாரும் துணையாய் இருக்கவில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அக்கா மற்றப் பெண்களைப் பற்றி தேவையில்லாமல் கதைப்பதால் மற்றப் பெண்கள் அக்காவின்ட‌ மகளைப் பற்றி கதைப்பினம் என்ட பயமோ :unsure:  :(
 
Link to comment
Share on other sites

ஏன் வேற்றினப்பெண்ணை மணந்தால் மட்டும் தமிழ் ஆண் ஏன் சகஜமாக எல்லா வேலைகளையும்  பகிர்ந்து செய்வார் ? விளக்கம் வேணும் அண்ணோய் ?

 

 

போராளிகள் பற்றி விவாதிப்பதானால் சோழி புதிய திரியை ஆரம்பியுங்கோ அதுதான் பொருத்தமாக இருக்கும்.

அதற்கான விளக்கத்தை வேற்றினப் பெண்ணை திருமணம் செய்தவர்களைத்தான் கேட்க வேண்டும். எனினும், நான் நினைக்கிறேன் வேற்றினப் பெண்கள் சீதனம் கொடுப்பதுமில்லை, ஆண்களிடத்தில் அவர்களின் பதவிகளையோ வசதிகளையோ எதிர்பார்ப்பதுமில்லை.

 

அந்த கருத்துக்கு போராளிகளும் பொருத்தமாக அமைந்தார்கள். மற்றும்படி, அவர்களைப்பற்றி விவாதிப்பதானால் நீங்கள் எதிராகவும், நான் ஆதரவாகவும்தான் விவாதிக்கலாம்.  :lol:  :o

Link to comment
Share on other sites

இங்கு நான் சிவப்பால் அடையாளமிட்டிருக்கும் கருத்துக்கான எனது பதில் :-

15வருடங்கள் இருக்குமென நினைக்கிறேன்.  ஒரு பத்திரிகைப் பேட்டியில் பெண் விடுதலை தொடர்பாக பேசப்பட்டிருந்தது. அதில் ஒரு பெண்ணும் கலந்ததாக நினைவு. குறித்த ஆணின் கருத்துக்கு பதில் கொடுத்திருந்தார். இறுதியில் அந்து ஆண் பெண்ணின் கருத்தை வெல்ல முடியாத நிலமை வந்ததும் இறுதி முற்று வைத்திருந்தார்.

ஆண் சிறுநீர் கழிப்பது போல பெண்ணால் முடியுமா என. இதே போன்ற மனநிலையில் தான் உங்கள் கருத்தும் அமைந்திருக்கிறது.

 

உற்பத்தி மெஷின் தானாக தன்னை காப்பாற்றாதவரை அது தனத தரத்தை இழந்து போவது தவிர்க்க முடியாது.

பெண் உற்பத்தி மெஷினாக நீங்கள் நினைத்து காப்பாற்றத் துடிப்பது பாதுகாப்பதற்கு அல்ல பக்கா சுயநலம்.

 

 

உங்களுடைய அகராதியில் அப்படியான அர்த்தம் என்றால் என்னால் என்ன செய்ய முடியும்.

 

இயற்கையின் நியதிப்படி பெண் உற்பத்திக்கு உரியவள்தான். அதற்காக அவளுக்கான தவிர்க்கமுடியாத கட்டுப்பாடுகள் சுயநலம் என்றால், பிறகு ஏன் ஆண் இணை? குழந்தை? பொட்டு? தாலி? எல்லாவற்றையும் தூக்கி எறியுங்கள்... எறியமாட்டார்கள்.. தங்கள் வீட்டில் அடக்குமுறை இல்லை என்பார்கள்.. இதுதான் பல தமிழ் பெண்ணியவாதிகளின் கூற்று.  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுடைய அகராதியில் அப்படியான அர்த்தம் என்றால் என்னால் என்ன செய்ய முடியும்.

 

இயற்கையின் நியதிப்படி பெண் உற்பத்திக்கு உரியவள்தான். அதற்காக அவளுக்கான தவிர்க்கமுடியாத கட்டுப்பாடுகள் சுயநலம் என்றால், பிறகு ஏன் ஆண் இணை? குழந்தை? பொட்டு? தாலி? எல்லாவற்றையும் தூக்கி எறியுங்கள்... எறியமாட்டார்கள்.. தங்கள் வீட்டில் அடக்குமுறை இல்லை என்பார்கள்.. இதுதான் பல தமிழ் பெண்ணியவாதிகளின் கூற்று.  :D

 

இந்தக் காலத்தில் புதிய தலைமுறை தாலி எல்லாம் போடுகிறார்களா என்ன ??? எங்கே இருக்கிறீர்கள் ??? பெண்கள் பொட்டு அணிவது தம்மை அழகுபடுத்தவேயன்றி வேறு எதற்கும் இல்லை. பெண் உற்பத்திக்கு உரியவள்தான். ஆனால் இணை இன்றியே உற்பத்தி செய்யக்கூடியவள். அனால் நீங்கள் எதுவென்றாலும் பெண்ணிடம்தான் வரவேண்டும் சோழி. :lol:

 

Link to comment
Share on other sites

இந்தக் காலத்தில் புதிய தலைமுறை தாலி எல்லாம் போடுகிறார்களா என்ன ??? எங்கே இருக்கிறீர்கள் ??? பெண்கள் பொட்டு அணிவது தம்மை அழகுபடுத்தவேயன்றி வேறு எதற்கும் இல்லை. பெண் உற்பத்திக்கு உரியவள்தான். ஆனால் இணை இன்றியே உற்பத்தி செய்யக்கூடியவள். அனால் நீங்கள் எதுவென்றாலும் பெண்ணிடம்தான் வரவேண்டும் சோழி. :lol:

 

 

எது என்றாலும் மனுசியிட்ட வரவேணும் என்றதாலதானே 1988ல 3 முறை ஏஜென்சிக்கு காசு கட்டி (2 முறை ஏமாத்திட்டாங்க) ஊர் பெட்டையை மனுசியா கூப்பிட்டனான். :wub:  :lol:  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.