Jump to content

"ஊருக்குச் செல்வதை விட வேறு என்ன கனவு இருக்கிறது" குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தீபச்செல்வன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"ஊருக்குச் செல்வதை விட வேறு என்ன கனவு இருக்கிறது" குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தீபச்செல்வன்

18 அக்டோபர் 2013

"ஒவ்வொரு மனிதர்களின் இரவுக் கனவுகளும் சம்பூர் பற்றியதாகத்தான் இருக்கிறது"

sampur_CI.jpg

உலக அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 7.6 மில்லியன் மக்கள் இன்னமும் அகதிகளாக உள்ள நிலையில் ஒவ்வொரு 41.1 விநாடிக்கு ஒருவர் அகதியாகிக் கொண்டிருக்கிறார். இந்த அகதிகளின் எண்ணிக்கையில் ஈழ அகதிகளும் குறிப்பிட்டளவு பங்கை வகிக்கின்றனர். இலங்கையில் நடந்த யுத்தம் காரணமாக அகதிகளாக்கப்பட்ட பலர் இன்னமும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பவேயில்லை. யுத்தம் முடிந்து நான்கு ஆண்டுகள் முடிவடைந்த பின்னரும் அகதிகள் இன்னமும் தமது சொந்த இடத்தில் குடியமர முடியவில்லை என்பது நாட்டின அரசியலின் ஸ்திரமற்ற தன்மையை தெளிவாக உணர்த்துகின்றது. யுத்தம், இடப்பெயர்வு என்பவற்றின் அரசியலும் மீள் குடியமர்த்தல் என்பவற்றின் அரசியலும் அவை இடம் பெறும் நிலப்பகுதியை சேர்ந்த மக்களை கடுமையாக துன்புறுத்துகின்றன. நில அபகரிப்பு என்பது பாதிப்பல்ல சனக்குழுமத்தினை அழித்தல் என்றே சொல்லப்படுகிறது.  

சம்பூர் வரலாறு

ஈழத்தில் தமிழ் மக்கள் வாழ்ந்து வரும் இடங்கள் அவர்களின் வரலாறு பண்பாடு மொழி வாழ்வியல் என்று  இன்னோரன்ன விடயங்கள் கலந்த பூமியாகும். சம்பூரும் அப்படியானதொரு கிராமமமே. குளக்கோட்ட மன்னன் காலத்திற்கு முன்பாகவே சம்பூரில் மக்கள் வாழ்ந்து வந்தமைக்கு ஆதாரங்கள் உள்ளன. திருக்கரசை புராணம், மற்றும் கல்வெட்டுக்களை அடிப்படையாகக் வைத்து பார்க்கும்பொழுது 1500 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை கொண்டிருப்பதை மதிப்பிட முடிகிறது. அதற்கு முன்னரும் சம்பூரில் மக்கள் வாழந்;திருக்க்கூடும். சம்பூர் என்பது அக் கிராமத்தின் வனப்பு மிகுந்த எழிலைக் குறிப்பிடுகின்றது. சம்பூரண அழகு பெற்ற ஊர் என்பதனால் சம்பூர் என்ற பெயர் டிந்தக் கிராமத்திற்கு ஏற்படட்டிருக்கிறது.

ஈழத்தில் கிழக்கில் திருகோணமலை மண்ணில் தனித்துவமான தமிழ் மொழி, பண்பாடு, மண்வாசனை என்பன உள்ளன. திருகோணமலை பல்லவர் காலத்தில் பாடல் பெற்ற திருத்தலம் என்கிற கோணேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள நிலப்பகுதி. திருகோணமலை மாவட்டத்தின் கொட்டியாராப்பற்று என் பாரம்பரியமாக அழைக்கப்பட்டு வந்த நிலப்பகுதியில் சம்பூர் அமைந்துள்ளது. சம்பூர் பிரதேசத்தில் சம்பூர் கிழக்கு, சம்பூர் மேற்கு, கூனித்தீவு, நவரட்ணபுரம், கடற்கரைச்சேனை ஆகிய ஐந்து கிராம சேவகர் பிரிவுகள் இலங்கை இந்திய கூட்டு உற்பத்தியான இலங்கை அரசின் உத்தேச அனல் மின்னிலையம் அமைப்பதற்காக அபகரிக்கபட்டன.

முதல் இடப்பெயர்வு

ஈழத்தில் நான்காம் ஈழப்போர் தொடங்கிய பொழுது முதல் முதலில் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பிரதேசம் சம்பூர்பகுதியே. விடுதலைப் புலிகளிடமிருந்து மக்களை மீட்கும் மனிதாபிமான யுத்தம் என அறிவிக்கப்பட்டு இலங்கை அரசு யுத்தத்தை தொடங்கிய நாட்களில் முதன் முதலில் அகதியாக்கப்பட்டவர்கள் சம்பூர் மக்கள். 2006.04.26 அன்று தொடங்கப்பட்ட யுத்தத்தில் இந்த மக்கள் அகதியான வரலாறு தொடங்கியது. அன்றைய நாளில் சம்பூர் கிராமம்மீது மிகக் கடுமையான விமானத்தாக்குதல்களும் எறிகணைத் தாக்குதல்களும் நடத்தப்பட்டன. மக்கள் சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள் என்று சனங்கள் பலரும் செத்துச் சிதறுவதைப் பார்த்த மக்கள் இரவோடு இரவாக சம்பூரை விட்டு இடம் பெயர்ந்ததார்கள். காலம் காலமாக வாழ்ந்த நிலத்தை விட்டு போகும் திசை அறியாதது செல்லத் தொடங்கினார்கள் மக்கள்.

இந்த மக்கள் இடம்பெயர்ந்து மட்டக்களப்பிற்குச் சென்று கதிரவெளிப் படாசாலையிலும் வாகரையிலும் தங்கியிருந்தனர். அங்கு நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டனர். தொடர் யுத்த நடவடிக்கை காணரமாக சம்பூரிலிருந்து 100 கிலோ மீற்றர் கால் நடைப்பயணமாக மட்டக்களப்பு நகரை அடைந்தார்கள். சம்பூரில் யுத்தம் தொடங்கியது முதல் அதன் பாதிப்புக்களை எதிர்கொள்ளத் தொடங்கிய சம்பூர் மக்கள் இன்றுவரை அதை அனுபவித்துக் கொண்டே இருக்கிறார்கள். யுத்தம் உடல்ரீதியான காயங்களை ஏற்படுத்தியது. உயிர்களைப் பறித்தது. யுத்தத்தின் முடிவில் மாபெரும் சிறை வாழ்வாக அகதிமுகாங்களை வந்தடைந்தனர் சம்பூர் மக்கள். முதலில் மட்டக்களப்பு நகரில் உள்ள முகாங்களிலும் பின்னர் திருகோணமலை மூதூரில் உள்ள கிளிவொட்டி, பட்டித்திடல், மணற்சேணை, கட்டைப் பறிச்சான் முதலிய இடங்களில் தங்க வைக்கப்பட்டார்கள். ஏழு ஆண்டுகளைக் கடந்தும் நிலம் மறுக்கப்பட்ட, நிலம் பறிக்கப்பட்ட சனங்களாய் அந்த முகாங்களில் உள்ளனர்.

அபிவிருத்திக்கான அபகரிப்பு

ஈழத்தின் வடக்கில் வலிகாமம் வடக்கில் உள்ள காணிகளை உயர்பாதுகாப்பு வலயம் என்று இலங்கை அரசு அபகரித்த பொழுது 'நாட்டின் பாதுகாப்பிற்காக மக்கள் தமது நிலங்களை தியாகம் செய்ய வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டது. கிழக்கில் சம்பூர் நிலம் அபகரிக்கப்பட்ட பொழுது 'அபிவிருத்திக்காக நிலங்களை மக்கள் தியாகம் செய்ய வேண்டும்' எனப்பட்டது. இங்கு முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு எப்படியானது? அபிவிருத்தி எப்படியானது? ஈழ மக்களின் நிலங்களை அபகரிக்க இப்படிப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ஏற்கனவே மனிதாபிமான யுத்தத்திற்காக இந்த மக்களின் அங்கங்கள் பறிக்கப்பட்டன. காயங்கள் உண்டாக்கப்பட்டன. உயிர்கள் பறிக்கப்பட்டன. இப்பொழுது இந்த மக்களிடம் எஞ்சியிருப்பது நிலம் மட்டுமே. அந்த நிலத்திற்காகவே வாழ்வதும் போராடுவதும். அதையும் பறிக்கும் பொழுது இந்த மக்கள் எங்கு செல்லுவார்கள்? என்ன செய்வார்கள்?

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப்போல வந்தது இந்தச் செய்தி. 1499ஃ25 ஆம் இலக்க 2007 ஆம் ஆண்டு மே 30ஆம் திகதி வர்த்தமானியில் விசேட பொருளாதாரத்துடன் இணைந்த சம்பூர் அனல் மின்னிலையத்திற்கான நிலச்சுவிகரிப்பு பற்றிய அறிவித்தல் விடுக்கப்பட்டது. இந்தத் திட்டடத்தில் சுமார் 1700 ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டது. நிலத்தடி நீர், கடல் வளம்,  மண் வளம், மரங்கள் என்று அழகும் வளமும் கொண்ட சம்பூரின் வளத்தை குறித்த அனல் மின்னிலையம் பாதிக்கும் என்றே கருதப்படுகிறது. 530 குடும்பங்கள் வசிக்கும் சன நெரிசல் கொண்ட சம்பூர் இதில் நேரடியாகப்பாதிக்கப்படுகிறது. அருகில் உள்ள கிராமங்களுக்கும் இதனால் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. மக்களை மனிதாபிமான அடிப்படையில் மீட்டு மக்களை மீள்குடியேற்றம் செய்வோம் என்று தெரிவித்த இலங்கை அரசு அந்த மக்களின் வாழ்வை வளத்தை அபகரித்திருப்பது என்ன வகையான மனிதாபிமானம்?

மூதூரில் அகதிமுகாங்கள்

தகரங்களுக்குள் தவிக்கும் ஒரு வாழ்வை இந்த மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். மூதூர் பிரதேசத்தில் உள்ள அகதிமுகாங்களில் தங்கள் சொந்த நிலத்திற்கே செல்வோம் என்றும் வாழ்வையே ஒரு போராட்டமாக்கிக் கொண்டு இந்த மக்கள் வாழ்கிறார்கள். தகரங்களால கட்டப்பட்ட நீண்ட கொட்டகைகளால் அமைக்கப்பட்டிருக்கின்றன இந்த மக்கள் வசிக்கும் அகதிமுகாம். துகரங்களாலும் தறப்பால்களாலும் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அறைகளிலும் குடியிருப்பத்தப்பட்டு இருக்கிறார்கள். வயல் வெளிகளுக்குள்தான் பட்டித்திடல் முகாம் அமைக்கப்பட்டிருக்கிறது. மழைகாலத்தில் அந்தக் தகரக் கொட்டகைகளினுள் வெள்ளம் நுழைந்து விடும்பொழுதும் அவற்றுக்குள்தான் மக்கள் வசிக்கின்றனர். இவைகள்தான் இயல்வான வாழ்வு ஒன்றைப்போல அனர்த்த கால முகத்துடன் ஒவ்வொரு முகாமும் காணப்படுகிறது.

இந்த முகாங்களில் பார்த்த குழந்தைகள் நமது அரசியல் துயரத்தை தமது முகங்களில் வெளிப்படுத்துகின்றனர். கூடுகளைப் போலிருக்கும் தகர வீடுகளுக்குள் இருந்து சில குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். சில குழந்தைகள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர் வாடிய முகத்தோடு குந்தியிருக்கிறார்கள். நிவாரண பொருட்களில் சமைத்த உணவை பசியோடு அள்ளி உண்டு கொண்டிருக்கும் பல குழந்தைகள் எதிர்காலம் குறித்த ஏக்கத்துடன் இருக்கிறார்கள். எவ்வளவு காலத்திற்குத்தான் இந்க் குழந்தைகள் அகதிமுகாம் பிள்ளைகளாக வளர்வது என்ற ஏக்கமே அந்த மக்களின் நெஞ்சில் அனலால் கொதிக்கிறது. தமது ஊரை அறியாத தமக்கொன்று ஒரு வீட்டை அறியாத பிள்ளைகளுக்கு 'சம்பூர் என்று எமக்கொரு ஊர் இருக்கிறது' என்று தர்மார்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

சல்மான்குர்ஷின் கையெழுத்து

இலங்கைக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தனது பயணத்தில் ஒரு நிகழ்வாக சம்பூர் அனல்மின்னிலையம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்த்தில் கையெழுத்திட்டுள்ளார். சல்மான் குர்ஷித் சம்பூர் அனல் மின்னிலையம் தொடர்பில் எட்டு உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டார். இலங்கை இந்திய கூட்டு யுத்தத்திற்கு பரிசாக சம்பூரை இந்தியாவுக்கு கொடுத்திருக்கிறது இலங்கை. தமது நிலம் தமக்குக் கிடைக்கும் என்று காத்திருந்த நிலையில் இந்தச் செய்தி இடிபோல விழுந்திருக்கிறது என்று சம்பூர் மக்கள் குறிப்பிடுகின்றார்கள். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் பயணம் வடக்கு கிழக்கு மக்களின் மேம்பாட்டிற்காக என்று இந்தியா சொல்லிக் கொண்டிருந்த நிலையில் அந்தப் பயணமும் தமிழ் மக்களின் நிலத்தை பறித்தெடுக்கும் பயணமாகவே அமைந்துவிட்டது. இருப்பதையும் புடுங்கிய கதையாக சல்மான் குர்ஷித்தின் இலங்கைப் பயணம் சம்பூர் அகதிகளை நிரந்தர அகதிகளாக்கியுள்ளது. சல்மான் குர்ஷித் ஒப்பந்த்தில் இட்ட கையெழுத்து அந்த சம்பூர் மண்ணின் குழந்தைகனை நிரந்தர அகதிகளாகக்கும் தலையெழுத்தாக்கிவிட்டது.

எப்பொழுது ஊர்?

சம்பூர் பகுதியில் அனல் மின் நிலையம் அமைப்பதற்கு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2006ஆம் ஆண்டில் இடம்பெயர்ந்த நிலையில் இன்னமும் தாம் அகதி முகாங்களில் தங்கியிருப்ப்பதாகவும் தம்மை தமது இருப்பிடங்களில் குடியமர்த்துமாறும் கோரி சம்பூர் பிரதேச மக்கள் மனுவை தாக்கல் செய்திருந்தார்கள். இந்த மனுவுக்கு அனல் மின்னிலையம் அமைக்கும் அனுமதியை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. அத்துடன் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்ற துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மாற்றிடங்களில் குடியேற வருமாறு பல தடவைகள் அதிகாரிகளால் அழைக்கப்பட்டபோதும் தமது சொந்த இடங்களே தமக்குத் தேவை என்றும் மாற்றிடங்களில் குடியேறமுடியாது எனவும் மக்கள் தெரிவித்தனர். எங்களை வேறு ஒரு நிலத்தில் குடியேற்ற வேண்டாம்! சொந்த நிலத்தில் மீள்குடியேற்றம் செய்யுங்கள் என்பதே சம்பூர் மக்களின் உறுதியான கோரிக்கை. உயர்நீதிமன்றமும் மக்களை மீள்குடியேற்றவே தீர்ப்பளித்துள்ளது.

புலிகளால் திருகோணமலை நகரத்திற்கும் துறைமுகத்திற்கும் பிறிமா ஆலைக்கும் மாத்திரமல்ல சம்பூர் மக்களுக்கும்தான் பாதிப்பு என்று சம்பூர்மீது யுத்தம் தொடுக்கப்பட்டது. அதற்கு முன்பு சம்பூரில் மக்கள் மகிழ்ச்சியோடு நிம்மிதியோடு வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அன்று தொடங்கிய யுத்தம்தான் சம்பூர் மக்களின் நிலத்தை பறித்தது. அதுவே சம்பூரில் அனல் மின் நிலையத்தை அமைக்கச் உதவியது. அதுவே இப்பொழுதும் இந்த மக்களை ஆபத்திற்குள் தள்ளியது.

அகதி முகாங்களும் நிலப் பறிப்புக்களும் குழந்தைகளதைதான் அதிகம் பாதிக்கின்றன. இன்றைய அகதிமுகாங்களும் அரசியலும் இந்தக் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதிக்கப்போகிறது என்பதே இங்குள்ள சனங்களின் துக்கம். ஊருக்குச் செல்வதை விட வேறு என்ன கனவு இருக்கிறது என்பதே இந்த மக்களின் கேள்வி. நிச்சயமாக இங்குள்ள ஒவ்வொரு மனிதர்களின் ஒவ்வொரு இரவுக் கனவுகளும் ஊர் பற்றியதாகத்தான் இருக்கிறது. ஊரில் வாழ்வது போல ஊருக்கச் செல்வதுபோல தினமும் இவர்கள் கனவு காண்கிறார்கள். தாம் காணாத ஊருக்குச் சென்று வசிப்பதுபோலவும் தமது ஊரிலுள்ள வீட்டில் விளையாடுவதுபோல, பள்ளிக்கூடம் செல்வது போல இங்குள்ள குழந்தைகள் உரிமையோடு கனவுகள் காண்கிறார்கள். குழந்தைகள் காணும் கனவுகள் நியாயமும்உன்னதமும் மிக்கவை.

குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தீபச்செல்வன்

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97787/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

வலிகாமம் வடக்கு காணி பிரச்சனை ஊடகங்களில் வந்த அளவிற்கோ அல்லது மக்களால் நடத்தப்பட்ட போராட்டுங்களின் அளவிற்கோ சம்புர் பிரச்சனை பெரிது படுத்தப்படவில்லை.

மயிலட்டி மக்கள் தங்கள் இடங்களை பார்பதற்கு பல தடவைகள் கொடுக்கப்பட்ட சந்தர்பங்கள் இந்த மக்களுக்கு ஒரு தடவையேனும் கொடுக்கப்படவில்லை.

Link to comment
Share on other sites

சம்பூர் மக்கள் மட்டுமல்ல புலம் பெயர்ந்த எமது  நிலையும் இதுதான் .

பல விடயங்களை உணர்வுபூர்வமாக அணுகாத வரையில் இதே நிலை எமக்கு தொடரத்தான் போகுது .இலங்கை இந்திய ஒப்பந்ததை ஏற்றிருந்தால் எவ்வளவு உயிர்கள் ,உடைமைகள் ,எமது நிலங்கள் பாதுகாக்க பட்டிருக்கும் .

இன்றும் விறிசு விடுவதிலேயே காலம் போகுது .தீபச்செல்வன் உட்பட .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பூர் மக்கள் மட்டுமல்ல புலம் பெயர்ந்த எமது  நிலையும் இதுதான் .

பல விடயங்களை உணர்வுபூர்வமாக அணுகாத வரையில் இதே நிலை எமக்கு தொடரத்தான் போகுது .இலங்கை இந்திய ஒப்பந்ததை ஏற்றிருந்தால் எவ்வளவு உயிர்கள் ,உடைமைகள் ,எமது நிலங்கள் பாதுகாக்க பட்டிருக்கும் .

இன்றும் விறிசு விடுவதிலேயே காலம் போகுது .தீபச்செல்வன் உட்பட .

 

 

நீங்கள் சொல்வதுதான் உண்மை...........
1987 லிபெரசன் ஒபெரசனுக்குள் இருந்து நாங்கள் தப்புவோம் என்று வயது வந்த இளைஞர்கள் யாரும் நினைத்திருக்கவில்லை. இராணுவம் நாலு திசையாலும் முன்னேறிக்கொண்டு இருந்தது. மில்லரின் வேடியோசையின் அதிர்வினால்தான் கொஞ்சம் அடங்கிற்று. பின்பு இந்திய விமானங்கள் பறந்துவந்து உலர்  உணர்வு பொட்டலங்களை வீசி சென்றது. கீழிருந்து பார்த்த எங்களுக்கு கடவுளாகத்தான் அது தெரிந்தது.
பின்பு கடவுள்கள் நேரிலேயே வந்தார்கள்.
எங்களுக்கு இனபத்தை அடக்க முடியாத ஒரு சோகம்.
 
பின்பு அவர்கள் போட்ட ஒப்பந்தம் செல்லாது என்று அவர்களே சொன்னார்கள்.
சிங்கள காடை அரசும். இந்திய அரசும். இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்கவில்லை. அதில் இருந்த எதுவும் நடைமுறையில் இருக்கவில்லை. ஏன் ன்று கேட்டால் பதில் இல்லை.
புலிகள் சத்தியா கிரகம் செய்தார்கள் தீலீபனை இழந்தார்கள்.
பின்பு அவர்களுடைய இரண்டு முக்கிய தளபதிகள் உட்பட 16 பேரை இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு  அமைவாக விடுதலை  செய்யுங்கள். இல்லை என்றால் இந்தியாவிற்கு கொண்டு செல்லுங்கள் என்றார்கள்............. மன்றாடினார்கள்.
அப்போதுதான் அவர்கள் சொன்னார்கள் ஒப்பத்தை நடைமுறை படுத்த முடியாது. சும்மா பேப்பரில்  எழுதியிருக்கு என்று. பரிதாபமாக அவர்கள் நஞ்சு அருந்தி இறந்தார்கள்.
 
வந்த கடவுள்களின் உண்மை முகத்தை நான்கு நாள் கடந்து காண கூடியதாக இருந்தது.
இந்திய இலங்கை கொடூர கொலை கார கும்பல்கள் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றிருந்தால். என்று நாம் இத்தனை அரிய  புலிகளை இழந்திருப்போமா ??? 
 
தேசத்திற்காக குண்டுகளை தம்மோடு அணைத்தவர்கள். மக்களின் மரணங்களை தடுக்க தம் உடல்களை  காப்ரனாக்கியவர் இன்று இருந்திருந்தால்........... எமது தேசத்திற்கு வேறு என்ன வேண்டும்??
Link to comment
Share on other sites

ஏன் ஆயுதப்போரட்டத்தையே ஆரம்பிக்காமல் இருந்திருக்கலாம். தம்பி அர்சுண் உங்களுக்கு அளவான இடத்தில ஏன் நிப்பாட்டிறியள். ஏதோ 1987 ஒப்பந்தத்திற்கு முன்னர் ஒன்றுமே நடக்சாத மாதிரி.

Link to comment
Share on other sites

 

நீங்கள் சொல்வதுதான் உண்மை...........
1987 லிபெரசன் ஒபெரசனுக்குள் இருந்து நாங்கள் தப்புவோம் என்று வயது வந்த இளைஞர்கள் யாரும் நினைத்திருக்கவில்லை. இராணுவம் நாலு திசையாலும் முன்னேறிக்கொண்டு இருந்தது. மில்லரின் வேடியோசையின் அதிர்வினால்தான் கொஞ்சம் அடங்கிற்று. பின்பு இந்திய விமானங்கள் பறந்துவந்து உலர்  உணர்வு பொட்டலங்களை வீசி சென்றது. கீழிருந்து பார்த்த எங்களுக்கு கடவுளாகத்தான் அது தெரிந்தது.
பின்பு கடவுள்கள் நேரிலேயே வந்தார்கள்.
எங்களுக்கு இனபத்தை அடக்க முடியாத ஒரு சோகம்.
 
பின்பு அவர்கள் போட்ட ஒப்பந்தம் செல்லாது என்று அவர்களே சொன்னார்கள்.
சிங்கள காடை அரசும். இந்திய அரசும். இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்கவில்லை. அதில் இருந்த எதுவும் நடைமுறையில் இருக்கவில்லை. ஏன் ன்று கேட்டால் பதில் இல்லை.
புலிகள் சத்தியா கிரகம் செய்தார்கள் தீலீபனை இழந்தார்கள்.
பின்பு அவர்களுடைய இரண்டு முக்கிய தளபதிகள் உட்பட 16 பேரை இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு  அமைவாக விடுதலை  செய்யுங்கள். இல்லை என்றால் இந்தியாவிற்கு கொண்டு செல்லுங்கள் என்றார்கள்............. மன்றாடினார்கள்.
அப்போதுதான் அவர்கள் சொன்னார்கள் ஒப்பத்தை நடைமுறை படுத்த முடியாது. சும்மா பேப்பரில்  எழுதியிருக்கு என்று. பரிதாபமாக அவர்கள் நஞ்சு அருந்தி இறந்தார்கள்.
 
வந்த கடவுள்களின் உண்மை முகத்தை நான்கு நாள் கடந்து காண கூடியதாக இருந்தது.
இந்திய இலங்கை கொடூர கொலை கார கும்பல்கள் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றிருந்தால். என்று நாம் இத்தனை அரிய  புலிகளை இழந்திருப்போமா ??? 
 
தேசத்திற்காக குண்டுகளை தம்மோடு அணைத்தவர்கள். மக்களின் மரணங்களை தடுக்க தம் உடல்களை  காப்ரனாக்கியவர் இன்று இருந்திருந்தால்........... எமது தேசத்திற்கு வேறு என்ன வேண்டும்??

 

"பின்னர் அவர்கள் போட்ட ஒப்பந்தம் செல்லாது என்று அவர்களே சொன்னார்கள் "

சொன்னவர்கள் யார் ? எப்ப சொன்னார்கள் என்று கூறமுடியுமா ?.

இங்கு சில உண்மைகளை எழுதத்தான் வேண்டும் .வெறுமன புலிகள் செய்தபிரச்சாரத்தை வைத்துத்தான் பலரின் பதிவுகள் இருக்கு ,அதைவிட பலர் போராளிகளாக மட்டும் இருந்தவர்கள் .நான் கொஞ்சம் மேல் மட்டத்தில் இந்திய அரசின் கொள்கை வகுப்பாளர்கள் ,றோ மட்டத்தில் தொடர்பில் இருந்தவன்  (இயக்கங்களுடன் றோ சார்பில் தொடர்பாளராக இருந்த சந்திரசேகரன் அதில் முக்கியமானவர் ).

இந்திய வெளியுறவு கொள்கை தமிழ் ஈழத்திற்கு எதிரானது ஆனால் என்ன விலை கொடுத்தும் இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை நிறைவேற்றவேண்டும் என்பதில் மிக கடுமையாக நின்றார்கள் .அவர்கள் தமிழ் தரப்பை விட சிங்கள தரப்பை கட்டுக்குள் கொண்டுவரத்தான் மிக கஷ்டப்பட்டார்கள் .ஜே,ஆர் ,சிறிமா ,பிரேமதாச ,அத்துலத்முதலி,பிக்குகள் என அத்தனை பிரிவுகளையும் ஒரு கட்டுக்குள் கொண்டுவருவது ஒன்றும் இலகுவானதல்ல .முதலில் கப்பலும் பின்னர் பிளேனும் அனுப்பித்தான் படியவைத்தார்கள் .அதைவிட இராஜதந்திர அழுத்தம் .

தமிழ் தரப்பு அனைத்தும் முதலிலேயே ஓம் என்று சொல்லிவிட்டது .இவ்வளவு சீரியசாக விரைவாக வந்து ஒப்பந்தம் கையெழுத்து வைக்கபோகின்றார்கள் என்று புலிகள் சற்றும் எதிர்பார்க்கவில்லை .பிரபாகரனின் தீர்வு தனி தமிழ்ஈழம் மட்டுமே .இந்த நேரம் தான் எப்படியாவது இந்த ஒப்பந்த்தை குழப்பவேண்டும் வேண்டும் என்று முடிவெடுத்தபுலிகள் தமது வழக்கமான செயற்பாடுகளில் இறங்குகின்றார்கள்.அதன் பின்னர் தான் பிரபா டெல்கி கொண்டுசெல்லப்பட்டதும் பின்னர் சுதுமலையில் இறக்கிவிடப்பட்டதும் .புலிகள் என்ன செய்கின்றார்கள் என்றதை றோ அவதானிதுக்கொண்டே இருந்தது .ஒப்பந்ததத்திற்கு புலிகள் தடையாக இருக்க முனைகின்றார்கள் என்ற செய்தி வர புலிகளையும் அழிக்க றோ முடிவேடுத்ததுதான் நடந்தது .

இதில் பெரும் பகிடி டெல்கிக்கு பிரபாகரனை கொண்டு சென்றது .வெருட்டியது.பிரபாகரன் தனது முடிவில் மாறாமல் திடமாக இருந்தது என்றெல்லாம் எழுதுகின்றார்கள் .உண்மை ,ஆனால் இந்தியா அந்தளவிற்கு இறங்கி வந்திருக்கவே தேவையில்லை என்பது கூட எம்மவருக்கு விளங்கவில்லை .

இதில் இன்னொமொரு விடயமும் இருக்கு ,எமது ஆய்வாளர்கள் புலம்பி தள்ளும் விடயம் .அது என்ன இலங்கை -இந்திய ஒப்பந்தம் .ஆரம்பத்தில் இயக்கங்கள் தான் இந்தியாவை கேட்டவை எங்களை சிங்களம் ஏமாற்றிவிடும் நீங்களே மூன்றாவது தரப்பாக எமது சார்பில்  ஒப்பந்தில் கையெழுத்து இடுங்கள் என்று .

அதற்காக இந்திய இராணுவம் இலங்கையில் செய்த அநியாயங்களை எந்த வகையிலும் நியாய படுத்த முடியாது ,இந்திய இராணுவம் இப்படியான அநியாயங்களை செய்யவேண்டும் என்று புலிகள் மிக பிரயாசைப்பட்டு அதில் வெற்றியும் கண்டார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 

எல்லா  விதத்திலும் புலிகளை  மாட்ட நினைத்து

நீங்களே  உங்கள் கருத்துக்கு எதிர்க்கருத்து எழுதுகின்றீர்கள்

இது தான் தங்களது வரலாறோ.........

எழுதுங்கள்

எழுதுங்கள்

எல்லோரும் சந்திரனில் இருந்து தற்பொழுழுதான்  இறங்கி  வந்துள்ளோம்....... :(  :(  :(

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
    • 28 MAR, 2024 | 09:36 PM   யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ்  யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.  அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவு கூர்ந்தார், இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவரின் விஜயத்தின் அடையாளமாக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புக்களை எழுதினார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன யாழ். பாதுகாப்பு படை தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி  உளவியல் செயற்பாடு மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/179913
    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.