Jump to content

நாம் சமாதானத்தை அடைய கொடுக்கக்கூடிய விலை என்ன?


Recommended Posts

எந்த ஒரு சமூகத்தினது யுத்தமோ பேச்சுவார்த்தையோ இறுதி இலக்கு சமாதான சகவாழ்வாகத்தான் இருக்கம் முடியும். அந்த வகையில் எமது போராட்ட இலக்கை நாம் அடைய எம்மால் விட்டுக்கொடுக்கக் கூடிய அளவு வீச்சு என்ன?

உணர்ச்சி பூர்வமாக கருத்துகளை முன்வைப்பதைவிட அறிவு பூர்வமாக பிரச்சினைகளை அணுகுவதே இங்கு அவசியமாக இருக்கிறது.

யுத்தத்தின் நீட்சி தாயகத்தில் தமிழர்களது இருப்பையே இல்லாதொழித்துவிடக்கூடிய அபாய அறிவிப்பை எமக்கு முன்மொழிந்து நிற்கிறது.

இந்த இக்கட்டான நிலையில் புலம் பெயர்ந்த நாம் ஆற்றவேண்டிய வரலாற்று பணி என்ன?

யுத்தத்துக்கு எதிரான குரலை வலுப்படுத்துவதும் சமாதானத்தின் இறுதி நம்பிக்கையை நாம் இழந்துவிடாமல் இருப்பதும் இன்றைய தேவைகளில் முதன்மையானது.

அதற்கு நாம் என்ன விலை கொடுக்கப்போகிறோம்?

Link to comment
Share on other sites

  • Replies 67
  • Created
  • Last Reply

சமாதானம் என்பதன் தொனி என்ன... சிங்கள இனவாதிகளிடம் சொந்த நிலத்தை உரிமைகளை இழந்து அவர்களின் ஏவலுக்கு அடிபணிந்து வாழ்வதா...??!

இலங்கை என்பது சிறீலங்காவாக மாற்றமடைந்த போது மெளனித்திருந்தமே அதே போல் மெளனிகளாக சிறுகச்சிறுக சிங்களவனுக்கு இலக்காகி அழிவதா...??!

இல்ல..புகழிடம் என்று இடம்பெயர்ந்து தமிழர் என்ற இனத்துவத்துக்கான அனைத்து அடையாளங்களையும் தொலைத்து அந்நியருக்கு அவர்களின் தேசத்தில் கூலிகளாகி..பொருள் பெற்று செல்வந்தர்களாக வாழ்வதா...??!

இல்ல பாரம்பரிய மண்ணில் எம்மை நாமே என்றும் பாதுகாக்கக் கூடிய வகையில் எம்மை நாமே நிர்வகித்து எமது அடையாளங்களைக் காத்து எமக்காவும் உலக்குக்காவும் வாழ்வதா...??! இதில் எது..சமாதானம்...என்பதற்குள் அடக்கப்படுகிறது..??! :idea: :roll: :?:

Link to comment
Share on other sites

சமாதானத்தின் விலையும் ஈழத்தமிழர்கள் உயிரே!

Link to comment
Share on other sites

சமாதானம் என்பதன் தொனி என்ன... சிங்கள இனவாதிகளிடம் சொந்த நிலத்தை உரிமைகளை இழந்து அவர்களின் ஏவலுக்கு அடிபணிந்து வாழ்வதா...??!

இலங்கை என்பது சிறீலங்காவாக மாற்றமடைந்த போது மெளனித்திருந்தமே அதே போல் மெளனிகளாக சிறுகச்சிறுக சிங்களவனுக்கு இலக்காகி அழிவதா...??!

இல்ல..புகழிடம் என்று இடம்பெயர்ந்து தமிழர் என்ற இனத்துவத்துக்கான அனைத்து அடையாளங்களையும் தொலைத்து அந்நியருக்கு அவர்களின் தேசத்தில் கூலிகளாகி..பொருள் பெற்று செல்வந்தர்களாக வாழ்வதா...??!

இல்ல பாரம்பரிய மண்ணில் எம்மை நாமே என்றும் பாதுகாக்கக் கூடிய வகையில் எம்மை நாமே நிர்வகித்து எமது அடையாளங்களைக் காத்து எமக்காவும் உலக்குக்காவும் வாழ்வதா...??! இதில் எது..சமாதானம்...என்பதற்குள் அடக்கப்படுகிறது..??! :idea: :roll: :?:

ÌÕÅ¢¸Ç¢ý ¸Õò§¾ ±ý ¸ÕòÐ :idea:

Link to comment
Share on other sites

சமாதானம் என்பதன் அர்த்தம் எமது அரசியல் பார்வையில்தான் உண்மையான அர்த்தம் கொள்கிறது. யுத்தத்தின் நீட்சி தமிழ் இனத்தை இலங்கை தீவில் பூண்டோடு அழித்துவிடும். தொடர்ச்சியான யுத்தம் சிங்கள இனவாத மேன்மைக்கே வழிவகுக்கும். சமாதான கோசத்தின் மூலம்தான் நாம் எமது இலக்கை அடைய முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமாதானம் என்பதன் அர்த்தம் எமது அரசியல் பார்வையில்தான் உண்மையான அர்த்தம் கொள்கிறது. யுத்தத்தின் நீட்சி தமிழ் இனத்தை இலங்கை தீவில் பூண்டோடு அழித்துவிடும். தொடர்ச்சியான யுத்தம் சிங்கள இனவாத மேன்மைக்கே வழிவகுக்கும். சமாதான கோசத்தின் மூலம்தான் நாம் எமது இலக்கை அடைய முடியும்.

என்ன சொல்ல வருகின்றீர்கள் என்பதைத் தெளிவாகச் சொல்லவும்.

சமாதானமாக சிங்களவருடன் ஒத்து வாழ சிங்கள அரசாலோ அல்லது வேறு சக்திகளாலோ ஏதாவது தீர்வு முன்வைக்கப் பட்டுள்ளதா? அல்லது நீங்கள் ஏதாவது வழிமுறைகளைப் பிரேரிக்கப் போகின்றீர்களா?

யுத்தம் ஆரம்பித்தது யார்? இதை நிறுத்த என்ன செய்ய முடியும்? யார் சொல்லி யுத்தம் நிறுத்தப்படும்? யுத்தம் இல்லாமல் ஏதாவது உரிமைகளைப் பெறமுடியுமா?

பழைய வரலாறுகளையும் எழுதிய ஒப்பந்தங்களின் நிலைகளையும், புலிகளின் இடைக்கால ஆட்சிக்கு என முன்மொழியப்பட்ட வரைபுக்கு நடந்த கதியையும் அலசி ஆராய்ந்துவிட்டு வாருங்கள்.

தனி நாடு இல்லாவிட்டால் இலங்கைத் தீவில் தமிழினம் ஒருபோதும் இருக்கமாட்டாது. ஒன்றில் சிங்களம் படித்து சிங்களவராக மாற வேண்டும் அல்லது அடிபட்டு அழியவேண்டும்.

Link to comment
Share on other sites

ஈழத்தில் தமிழினம்..சிங்களத்தால் அழியப்போகுதோ...இல்லையோ..தமிழர்

Link to comment
Share on other sites

என்ன சொல்ல வருகின்றீர்கள் என்பதைத் தெளிவாகச் சொல்லவும்.

சமாதானமாக சிங்களவருடன் ஒத்து வாழ சிங்கள அரசாலோ அல்லது வேறு சக்திகளாலோ ஏதாவது தீர்வு முன்வைக்கப் பட்டுள்ளதா? அல்லது நீங்கள் ஏதாவது வழிமுறைகளைப் பிரேரிக்கப் போகின்றீர்களா?

யுத்தம் ஆரம்பித்தது யார்? இதை நிறுத்த என்ன செய்ய முடியும்? யார் சொல்லி யுத்தம் நிறுத்தப்படும்? யுத்தம் இல்லாமல் ஏதாவது உரிமைகளைப் பெறமுடியுமா?

பழைய வரலாறுகளையும் எழுதிய ஒப்பந்தங்களின் நிலைகளையும், புலிகளின் இடைக்கால ஆட்சிக்கு என முன்மொழியப்பட்ட வரைபுக்கு நடந்த கதியையும் அலசி ஆராய்ந்துவிட்டு வாருங்கள்.

தனி நாடு இல்லாவிட்டால் இலங்கைத் தீவில் தமிழினம் ஒருபோதும் இருக்கமாட்டாது. ஒன்றில் சிங்களம் படித்து சிங்களவராக மாற வேண்டும் அல்லது அடிபட்டு அழியவேண்டும்.

யுத்தத்தைப்போல சமாதானமும் கடினமான அரசியல் போராட்ட வழிமுறை.

ஈழப்போர்- 4 தொடங்கி சில நாட்களில் கடந்தகாலத்தில் நாம் ஒருபோதும் கண்டிராத புதிய அரசியல் இராணுவ நகர்வுகள் இலங்கை அரசியலின் பின்புலத்தில் அவதானிக்க கூடியதாக இருக்கிறது.

எதிரி விரும்பி உருவாக்கும் யுத்த களத்தில்-காலத்தில் சமாதானம் என்பது ஒரு கொரில்லா தாக்குதல் போன்றது.

ஆயுத யுத்தம் என்பது எமக்கு சாதகமான நிலையில் எம்மால் முன்னெடுக்கப்படவேண்டிய அரசியல் போர். எதிரிக்கு சாதகமான யுத்த களத்தில் அமைதி யுத்தம்தான் எமது அரசியல் போராட்டமாக இருக்க வேண்டும்

Link to comment
Share on other sites

யுத்தத்தின் மூலம் சமாதானம்..என்பதுதான் சந்திரிக்காவின் கோசமும் கூட..! ஒரு கையில் வெண்புறாவைத் தாங்கியபடி மறுகையால் தாங்கிகளை இயக்கியபடி யாழ்ப்பாண வீதிகளில் வலம் வருவதை வான்வழியில் விதைத்துக் கொண்டு..செம்மணியில் விதைத்தது என்னவோ..தமிழர்களின் பிணக்குவியல் தான்.

கடந்த ஒரு வாரச் சண்டையில் 200 போராளிகளினதும் 400 மக்களினதும் மரணத்துக்காகவா...சமாதானம் என்று 4 வருடங்கள்..200க்கும் மேற்பட்ட போராளிகளையும் 800 பொதுமக்களையும் தியாகம் செய்தோம்..! தமிழர்களுக்கு இழப்பு என்பது..சமாதானம் என்ற போர்வைக்குள் இருக்கும் பீரங்கியாலும் வரும்..நேரடியாக சமர்க்களத்தில் உள்ள பீரங்கியாலும் வரும்.

சமாதான காலம் வெளிப்படைக்கு தமிழ் மக்களுக்கு நிம்மதியாக இருந்திருக்கலாம்..ஆனால் அந்த சமாதான காலத்தில் எதிரி எம்மோடு சமாதானமாக வர விரும்பி இருக்கவில்லை என்பதையே அவனுடைய இராணுவ வலுவாக்கம் சுட்டிக்காட்டி இருக்கிறது..! எதிரி தன்னை இராணுவ ரீதியில் வலுவாக்கிக் கொள்வானாயின்..அது எமது அழிவுக்குத்தான் வழி வகுக்கும் என்பதை சமாதானம் என்ற உசச்ரிப்பின் கீழ் நிகழும் போருக்கான ஆயத்தங்கள்..சொல்கின்றன..!

சமாதானம் என்பது ஈழத்தைப் பொறுத்தவரை மனமாற்றங்களின் அவசியம். அதை ஆயுதத்தால் வரவழைக்க முடியாது. சிங்கள இனம் தமிழரின் நியாயப்பாடுகளைப் புரிந்து கொள்ள முனைய வேண்டும். அல்லது புரிந்து கொள்ள வழிகாட்டப்பட வேண்டும்.

இது ஒரு பக்கம் சிங்கள இளைஞர்களுக்கு யுத்த வெறியை ஊட்டிக் கொண்டு..மறுபுறம் சமாதானம் என்று பேசிக் கொண்டால்..மலருமா புரிந்துணர்வும்...சமாதானமும்..

சமாதானம் என்பது ஈழத்தில் தமிழர்களின் நியாயங்கள் சிங்களவர்களால் புரிந்து கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்படுவதாகத்தான் இருக்க வேண்டுமே தவிர ஆயுத பாவனைக்கான ஆயத்தமாக இருக்கக் கூடாது. அதுவரை சமாதானம் என்பது வெறும் கேலிக் கூத்துதான்..! :idea:

Link to comment
Share on other sites

சந்திரிக்காவின் போரின் மூலம் சமாதானம் தமிழர் தரப்பால் இலகுவாக வெற்றி கொள்ளகூடியதாக இருந்ததிற்கு யுத்த களத்தில் மட்டும் அல்ல அரசியல் தளத்திலும் நாம் பலமாக இருந்தோம். அன்றைய சர்வதேச அரசியல் தமிழர் தரப்புக்கு ஆதரவாக இல்லாவிட்டாலும் சந்திரிக்கா அரசுக்கு சாதகமாக இருக்கவில்லை. ஆனால் தற்போதைய உலக அரசியல் சூழல் எமது தரப்புக்கு எதிராகமட்டும் அல்ல எதிரிக்கு சாதகமாக உள்ளது.

இந்திய அமெரிக்க உதவிகள் சிங்கள் தரப்பை முன்னெப்போதும் இல்லாத அளவு உசுப்பேத்தி உள்ளது. சிங்களம் யுத்தத்தை தெரிவு செய்துள்ள இந்த காலகட்டம் எமக்கு சாதகமாக அமைய வாய்ப்புகள் அரிதாகும்.

இது பலவீனத்தினால் வந்த முடிவு அல்ல. இது இன்றைய காலகட்டத்தின் யுத்த தந்திரோபாயமகும்.

ஆக, சமாதானம் என்பதுதான் எமக்கு முன் உள்ள சிங்கள யுத்தத்துக்கு எதிரான அரசியல் யுத்தம் ஆகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரிக்காவின் போரின் மூலம் சமாதானம் தமிழர் தரப்பால் இலகுவாக வெற்றி கொள்ளகூடியதாக இருந்ததிற்கு யுத்த களத்தில் மட்டும் அல்ல அரசியல் தளத்திலும் நாம் பலமாக இருந்தோம். அன்றைய சர்வதேச அரசியல் தமிழர் தரப்புக்கு ஆதரவாக இல்லாவிட்டாலும் சந்திரிக்கா அரசுக்கு சாதகமாக இருக்கவில்லை. ஆனால் தற்போதைய உலக அரசியல் சூழல் எமது தரப்புக்கு எதிராகமட்டும் அல்ல எதிரிக்கு சாதகமாக உள்ளது.

இந்திய அமெரிக்க உதவிகள் சிங்கள் தரப்பை முன்னெப்போதும் இல்லாத அளவு உசுப்பேத்தி உள்ளது. சிங்களம் யுத்தத்தை தெரிவு செய்துள்ள இந்த காலகட்டம் எமக்கு சாதகமாக அமைய வாய்ப்புகள் அரிதாகும்.

இது பலவீனத்தினால் வந்த முடிவு அல்ல. இது இன்றைய காலகட்டத்தின் யுத்த தந்திரோபாயமகும்.

ஆக, சமாதானம் என்பதுதான் எமக்கு முன் உள்ள சிங்கள யுத்தத்துக்கு எதிரான அரசியல் யுத்தம் ஆகும்.

சிங்கள இராணுவம் புதிதாக இடங்களை ஆக்கிரமிக்கும். ஆட்டிலறி, கிபீர் என்பனவற்றைப் பாவித்து மக்களைக் கொல்லும். பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்று சொல்லுகின்றீர்கள். ஒவ்வொரு தடவையும் மக்கள் கொல்லப்படும்போது சர்வதேச நிறுவனங்களின் முன்னின்று மகஜரைக் கையளித்தால் அவர்கள் எப்படியாவது யுத்தத்தை நிறுத்துவார்கள் என்று நம்பச் சொல்லுகின்றீர்கள். ஈராக், ஆப்கானிஸ்தான், லெபனான் போன்ற இடங்களில் மக்கள் தொடர்ந்து கொல்லப்படுகின்றனர். தற்போது தமிழீழத்திலும் இது தொடர்கின்றது. சமாதானமாக இருந்தால் எல்லாவற்றையும் அடையலாம் என்று சொல்ல வருகின்றீர்கள். கடந்த 4 1/2 வருடமாக சமாதானம் நிலவத்தானே போர் நிறுத்தம் வந்தது. ஏன் சமாதானம் வரவில்லை?

உண்மையில் உங்கள் செய்தி என்னவென்று விளங்கவில்லை???

Link to comment
Share on other sites

சமாதானம் எண்று ஒண்று வரவேண்டுமானால் ஒரு தரப்பு மற்றய தரப்பை சமனான பலம்வாய்தவர்களாய் ஏற்றுக்கொள்ள வேண்டும்....! தங்களின் பலத்தை கணக்கிட்டு அதை நம்புவோர்த்தான் எதிரியின் பலத்தை சரியாக எடை போடமுடியும்...

இந்த நிலையில் சமாதானம் எங்களின் கைகளில் இல்லை அது எப்போதுமே சிங்களவனின் தெரிவாகத்தான் இருக்கும்...!

Link to comment
Share on other sites

சமாதானம் எண்று ஒண்று வரவேண்டுமானால் ஒரு தரப்பு மற்றய தரப்பை சமனான பலம்வாய்தவர்களாய் ஏற்றுக்கொள்ள வேண்டும்....! தங்களின் பலத்தை கணக்கிட்டு அதை நம்புவோர்த்தான் எதிரியின் பலத்தை சரியாக எடை போடமுடியும்...

இந்த நிலையில் சமாதானம் எங்களின் கைகளில் இல்லை அது எப்போதுமே சிங்களவனின் தெரிவாகத்தான் இருக்கும்...!

''புலிகள் மீண்டும் ஒரு யுத்தத்திற்கு திரும்பினால் ஒரு பலமான இராணுவத்தை சந்திக்கவேண்டி இருக்கும்'' உங்களில் பலருக்கு நினைவிருக்கும் இது அமெரிக்க தரப்பால் சில மாதங்களுக்கு முன் தமிழர் தரப்புக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை.

கடந்த சில தினங்களுக்கு முன் இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான அமைச்சின் பிரதி துணைச்செயலாளர் ஸ்டீவ் மான் அரசின் வான் தாக்குதல்கள் குறித்து கண்டித்ததும் அவர் கொழும்பைவிட்டு வெளியேறியதும் அரசின் வான் தாக்குதல்கள் அதிகரித்திருப்பதும் தற்செயல் அல்ல.

முல்லை செஞ்சோலை தாக்குதலின் பின் அரசு வெளியிட்ட ஒளிப்படங்களின் பாணி அமெரிக்கா இராக், ஆப்கானிஸ்தான் மேல் வான் தாக்குதல் செய்தபின் வெளியிட்ட ஒளிப்படங்கள் போல் இருப்பதை அவதானித்திருப்பீர்கள்.

அண்மைய அரசின் வான் தாக்குதலின் பின்புலத்தில் அமெரிக்க ஐரோப்பிய ஆலோசனையும் உதவியும் மறைமுகமாக நிறையவெ இருக்கிறது. அரசு வான் தாக்குதலில் தேர்ந்தெடுக்கும் இலக்குகளை வைத்து இதை ஓரளவு ஊகிக்கக்கூடியதாக இருக்கிறது.

அடுத்து இந்திய அரசின் இராணுவ உதவி குறித்து நாம் மிக விழிப்பாக இருக்கவேண்டும்.

இலங்கை அரசுக்கு பாகிஸ்தான் இராணுவ உதவி என்பது போல் வெளியில் பாவால் காட்டிக் கொண்டு அமெரிக்க இந்திய இராணுவ அரசியல் உதவிகள் திரை மறைவில் நிகழும் புதிய நகர்வுகள் பற்றிய செய்திகள் கசியத்தொடங்கிவிட்டது.

ஆக, சமாதானம் என்ற கோசம்தான் எமது போராட்டத்தின் இருப்புக்கு தற்போது பாதுகாப்பு தரகூடியது.

Link to comment
Share on other sites

எந்த ஒரு தீர்வும் தமி;ழ் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க பின்வரும் அம்சங்களை கொண்டிருக்க வேண்டும்.

[*] தமிழீழ விடுதலைப்புலிகள், ஆயுதங்களும் படை அமைப்புகளும், தீவு முழுவதும் உள்ள தமிழரின் பாதுகாப்புக்காக தமிழ்மக்களின் கட்டுப்பாட்டில் உள்ள சட்டரீதியான இராணுவமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

[*] தீவு முழுவதும் (மலையகம் கொழும்பு உட்பட) தமிழருக்கு, தமிழ் மொழியிலான நிருவாகம் நிறைவான அதிகாரங்களுடன் தமிழ்மக்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

போர் மூலம் தீர்வு கண்ட பிரச்சினைகளில், மக்கள் நிம்மதியாக வாழுவது, நாட்டை வெற்றி பெற்ற படைகள் முற்று முழுதாக கைப்பற்றி ஆட்சி அமைத்த நாடுகளிலேயே இடம் பெற்றிருக்கிறது.

நாட்டின் ஒரு பகுதியை பிரித்தெடுத்த மக்கள், எல்லையில் உள்ள எதிரியுடன் என்றும் நிம்மதியாக வாழவில்லை. அது பாகிஸ்தான் - இந்தியாவாக இருக்கலாம்,. இசுரேல் - பலஸ்தீனமாக இருக்கலாம், எதியோப்பியா - எரித்திரியாவாக இருக்கலாம். இங்கே மக்கள் நிம்மதியாக வாழவில்லை.

சமாதானமாக நாடு பிரித்த சிங்கப்பு_ர், மலேசியாவுடன் நிம்மதியாக வாழ்கிறது. ஆனால் இது சிறிலங்காவுடன் சாத்தியம் இல்லை.

விடுதலைப்புலிகள் முழு இலங்கையையும் கைப்பற்றி, தமது பொம்மை ஆட்சியை சிறிய சிங்களப்பகுதியில் அமைப்பர் என்று சிங்களவர் பயப்படுகிறார்கள். இதற்கு ஆதாரம் கேட்பவர்களுக்கு நான் சொல்லக்கூடியது, 1990 களில் சிறிலங்கா ஜனாதிபதியின் ஆலோசகர் எனக்கு இதை நேரடியாகவே சொன்னார் என்பது மட்டுமே.

சிறிலங்காவில் போரிலும், அநர்த்தத்திலும், மக்களை கோள்ளையடிக்கும் அரசியல்வாதிகளுக்கு கொடுப்பதை கொடுக்காமல் எந்த தீர்வும் சாத்தியம் இல்லை. அவர்கள் இவ்வாறான சமாதான தீர்வின் பின், புதிய கட்டுமானம், வணிகம் போன்றவற்றில் இன்னும் அதிகம் சிங்கள மொழி ஆட்சிபிரதேசத்தில் (அவர்கள் ஆட்சி) கொள்ளையடிக்கலாம், என்று அவர்களுக்கு புரியயவைக்க வேண்டும். இதை உத்தியோகபுூர்வ பேச்சுவார்த்தைகளில், சமாதான பேச்சுக்கள் மூலம் செய்ய முடியாது. வணிகத்தில் தேர்ந்தவர்கள்(deal Makers), தனிப்பட்ட முறையில் முயற்சி செய்து, சிங்கள தலைவர்களை ஆசைகாட்டி வழிக்கு கொண்டு வரவேண்டும். முடிவு மட்டும்

[*] தமிழீழ விடுதலைப்புலிகள், ஆயுதங்களும், படை அமைப்புகளும், தீவு முழுவதும் உள்ள தமிழரின் பாதுகாப்புக்காக தமிழ்மக்களின் கட்டுப்பாட்டில் உள்ள சட்டரீதியான இராணுவமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

[*] தீவு முழுவதும் (மலையகம், கொழும்பு) உட்பட, தமிழருக்கு தமிழ் மொழியிலான நிருவாகம் நிறைவான அதிகாரங்களுடன் தமிழ்மக்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

''புலிகள் மீண்டும் ஒரு யுத்தத்திற்கு திரும்பினால் ஒரு பலமான இராணுவத்தை சந்திக்கவேண்டி இருக்கும்'' உங்களில் பலருக்கு நினைவிருக்கும் இது அமெரிக்க தரப்பால் சில மாதங்களுக்கு முன் தமிழர் தரப்புக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..

அமெரிக்காவிம் பூச்சாண்டி போனதடவை ஆனையிறவை மீட்ட போதும்... தீச்சுவாலை நடவடிக்கைக்கு நேரடி திட்டமிடலுக்கு கொடுத்த அடியுடன் சரியான விபரணம் கொடுக்க பட்டு உள்ளது... இதைப்பற்றி நாங்கள் அல்ல அமெரிக்கா வித்தியாசமாக சிந்திக்க ஆரம்பித்து நீண்ட காலமாகி இப்போ புலிக்கொடியை ஏற்றினாலும் குற்றம் இல்லை எண்று சொல்லும் நிலையில் அமெரிக்கா நடு நிலமைக்கு வந்து நீண்ட காலமாச்சு...! இதே அமெரிகாவில் அல்கைடாவின் தலைவரான பின்லாடனின் படத்தை தூக்குக்கொண்டோ இல்லை அவர்களின் சின்னத்தை தூக்கிக்கொண்டு போய் பாருங்கள் உங்களுக்கான மரியாதை சரிவர தெரியும்... ஆனால் புலிக்கொடி அந்த முறையில் கௌரவிக்க பட்டு இருக்கிறது... இதையே சிங்கள் ஊடகங்கள் அமெரிகா புலிகளின் சுயநிர்ணயத்தை மதித்து இலங்கை துண்டாட வளிசெய்கிறது எண்று பினாத்தும் அளவுக்கு இருக்கு நிலமை...!

கடந்த சில தினங்களுக்கு முன் இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான அமைச்சின் பிரதி துணைச்செயலாளர் ஸ்டீவ் மான் அரசின் வான் தாக்குதல்கள் குறித்து கண்டித்ததும் அவர் கொழும்பைவிட்டு வெளியேறியதும் அரசின் வான் தாக்குதல்கள் அதிகரித்திருப்பதும் தற்செயல் அல்ல.

முல்லை செஞ்சோலை தாக்குதலின் பின் அரசு வெளியிட்ட ஒளிப்படங்களின் பாணி அமெரிக்கா இராக், ஆப்கானிஸ்தான் மேல் வான் தாக்குதல் செய்தபின் வெளியிட்ட ஒளிப்படங்கள் போல் இருப்பதை அவதானித்திருப்பீர்கள்.

அண்மைய அரசின் வான் தாக்குதலின் பின்புலத்தில் அமெரிக்க ஐரோப்பிய ஆலோசனையும் உதவியும் மறைமுகமாக நிறையவெ இருக்கிறது. அரசு வான் தாக்குதலில் தேர்ந்தெடுக்கும் இலக்குகளை வைத்து இதை ஓரளவு ஊகிக்கக்கூடியதாக இருக்கிறது..

அடுத்து இந்திய அரசின் இராணுவ உதவி குறித்து நாம் மிக விழிப்பாக இருக்கவேண்டும்..

இந்தியா.., இந்திய தமிழர்களைத்தாண்டி ஒரு நடவடிக்கையை எடுக்கும் என நினைப்பது உள்நாட்டில் வேண்டாத வினையை ஏற்படுத்தும் என்பதை அறியாத முட்டாள்கள் அல்ல.... அதயும் தாண்டி தமிழர் சாவது இப்போதுதான் நிகழ்வதும் இல்லை... 1991ம் ஆண்டு முதல் வாளாது இருந்த தமிழகம் இப்போது மட்டும் கிளர்ந்து எழ தமிழக அரசு பார்த்துக்கொண்டு இருக்கின்றது அவர்களுக்கு உதவியும் செய்கிறது கண்டும் காணாமல் இருக்கின்றது மத்திய அரசை வேண்டுகிறது என்பதெல்லாம் புதிய நடவடிக்கைகள் இதுக்கும் மத்திய அரசுக்கும் சம்பந்தம் இல்லை அவர்களுக்கு தெரியாமல் தமிழக அரசு செயற்படுகின்றது என்பதை எப்படித்தான் சொல்கிறீர்கள் எண்றுதான் புரியவில்லை...!

இலங்கை அரசுக்கு பாகிஸ்தான் இராணுவ உதவி என்பது போல் வெளியில் பாவால் காட்டிக் கொண்டு அமெரிக்க இந்திய இராணுவ அரசியல் உதவிகள் திரை மறைவில் நிகழும் புதிய நகர்வுகள் பற்றிய செய்திகள் கசியத்தொடங்கிவிட்டது.

ஆக, சமாதானம் என்ற கோசம்தான் எமது போராட்டத்தின் இருப்புக்கு தற்போது பாதுகாப்பு தரகூடியது.

இலங்கைக்கு உதவியை செய்வது அமெரிக்காதான் இல்லை, பாக்கிஸ்தானும், ஜப்பானும் கூட உதவிகள் செய்யலாம் அது எல்லாம் இலங்கையின் கட்டுப்பாட்டை இலங்கை அரசு வைத்திருக்கின்றது என்பது வெளியில் இலங்கை அரசு செய்யும் பிரச்சாரத்தை நம்பித்தான்...!

இலங்கை தன்னை எப்போதும் வெற்றி பெறும் தரப்பாக காட்டி கொள்கிறது எண்றால் அதன் காரணம் உலகம் வெல்பவனைத்தான் நேசிக்கிறது என்பதால்த்தான்...! எவ்வளவுதான் தோல்விகள் எண்றாலும் தாங்கள் எதையும் இளக்கவில்லை என்பது எல்லாம் தங்களின் நாட்டில் இருந்து நலன் பெறவிருப்புபவர்களிடம் பிரச்சினையை சீரமைக்க உதவி பெற மட்டுமே.... இதுவே தாங்கள் தேற்பதாக இலங்கை காட்டினால் அவர்களுக்கு உதவி செய்ய சொந்தமக்களே வரமாட்டார்கள்....!

இப்படித்தான் பிலிப்பைன்ஸ் சர்வாதிகாரியான மாக்கோஸ் அவர்களை அமெரிக்கா கொடுத்த ஊக்கமும் அவருக்கான படை உதவி எண்று அமர்க்களப்படுத்தியது... ஆனால் அவருக்கு எண்று தோல்வி முகம் எண்று கண்டதோ அண்று அவைரை கைகழுவியும் விட்டது....

முதலில் மற்றவர்கள் எல்லாரும் சேர்ந்து எங்களை அளிக்காப்போறார்கள் என்பதை விட்டு எங்களை பலமானவர்களாக்கும் விதத்தை பற்றி சிந்திப்பது நலம்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
சுருக்கமா சொல்வதானால் ஆயுதத்தை போட்டு விட்டு சரணடையட்டாம் :twisted: :twisted: :twisted:
Link to comment
Share on other sites

யாரோ கேள்வியும் கேட்டு பதிலும் கொடுக்கிற மாதிரி கிடக்கு. :? :roll:

என்ன நன்பரே இது கூடவா புரியவில்லை சில குருவிகள் புறாவக மாறி புதிதாக இனைந்தது நோக்கு தெரியுது :lol: :P :lol:

Link to comment
Share on other sites

ஆனையிறவு மீட்புப்போர் காலகட்டம் இன்றைய அமெரிக்க அல்கைடா எதிர்ப்பு யுத்த நிலையில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. அமெரிக்காவில் எமது கொடியை பறக்கவிட அனுமதித்தை ஒரு அரசியல் அங்கீகாரமாக பார்ப்பது அமெரிக்க உள்துறை மற்றும் வெளித்துறை அரசியலை எம்மால் ஆழமாக பகுத்தாய்வு செய்யமுடியாமல் போன தவறாகும்.

புலி கொடி அமெரிக்காவில் பறக்கக்கூடிய நிலையில் இன்று இருப்பதற்கு முக்கிய வரலாற்று காரணம் தமிழர் தலைமை தமிழீழ விடுததைப்போராட்ட ஆரம்பகாலத்தில் பிரகடனப்படுத்திய உலக அரசியல் சார்பு நிலைக்கோட்பாடு. ஈ பி ஆர் எல் எவ் எண்பதுகளின் ஆரம்பதில் அமெரிக்க அலன் தம்பதிகளான கடத்திய போது எல் ரி ரி ஈ அதை முதல்முதலில் கண்டித்ததுடன் நிபந்தனைகள் எதுவும் இல்லாமல் அவர்களை விடுதலை செய்யும்படி உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்களுக்கு அறிவித்தது. அப்போதைய அமெரிக்க சோவியத் பனிப்போரில் புலிகள் தமது நிலையை தெளிவாக அமெரிக்காவுக்கு தெரியப்படுத்தி இருந்தனர். அன்று மிக தெளிவாக புலிகளின் தலைமை எடுத்த முடிவின் பயன்களை புலம் பெயர்ந்து அமெரிக்க ஐரோப்பிய மண்ணில் வாழும் நாம் இன்றும் அனுபவிக்கிறோம்.

இன்னும் ஒரு வரலாற்று நிகழ்வை இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன். 1987 இந்திய இலங்கை ஒப்பந்ததின்பின் உருவான ஈழப்போரில் மேற்குலகம் வெளிப்படையாக புலிகளை ஆதரித்ததும், அதில் இந்திய (சோவியத்) சார்பு ஈ பி ஆர் எல் எவ் படுதோல்வியை சந்திக்க வாய்ப்புகள் உருவானதொன்றும் தற்செயல் அல்ல.

புலிகளின் தலைமை மேற்குலகுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விளைவுதான் எமது போராட்டதை இன்று வரை காப்பாற்றிவந்துள்ளது. மேற்குலகுடன் ஒரு இணக்கப்பாட்டுக்கு தமிழர் தலைமை வர தாமதம் ஏற்பட்டிருந்தால் ஜே ஆர் ஜெயவர்தனா காலத்திலேயே எமது போராட்டம் தோற்கடிக்கப்ப்ட்டிருக்கும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் அழிந்துபோன அனைந்து அமைப்புகளுக்கும் புலிகளுக்கும் உள்ளவித்தியாசம் சர்வதேச அரசியலில் புலிகள் எடுத்த தந்திரோபாய சரர்பு நிலைதான். அதனால்தான் புலிகளால் இருபது வருடங்களுக்கு மேல் தமிழர்க்கு தலைமை கொடுக்கமுடிகிறது. புலிகளின் முதல் வெளியீடான வந்த ''சோசலிச தமிழீழத்தை நோக்கி'' என்ற புத்தகத்தில்தான் சோசலிசம் என்ற அரசியல் கோட்பாடு முன்னிலைப்படுத்தப்பட்டது. அதுவும் அப்போது லண்டனில் படித்து கொண்டிருந்தவரது சொந்த அரசியல் ஆசையே தவிர புலிகளது அரசியல் அல்ல. இருப்பினும் தலைமை சரியான நேரத்தில் சரியான திசையில் எமது போராட்ட அரசியலை நெறிப்படுத்தியதன் விளைவுதான் இன்று எம்மால் அறுவடை செய்யப்படும் புலிக்கொடி ஏந்தும் சுதந்திரதின் சூட்சுமம்.

எம்மை மற்றவர்கள் அழித்துவிவார்கள் என்ற மனநிலையில் இருந்து விடுபட்டு நாம் எம்மை பலமானவர்களாக்குவது வெறும் கருத்து தளத்தில் நிகழ்வது அல்ல. அதற்கான கருத்து தளம் உயிர்நிலை கொள்ளக்கூடிய புறச்சூழல் எமக்கு சாதகமாக இருக்கவில்லை எனில் தற்போதை சர்வதேச சூழலுக்கு உகந்த கருத்து நிலையை தமிழர் தரப்பு கைக்கொண்டால் அன்றி சிங்களத்தை நாம் வென்று விடமுடியாது.

Link to comment
Share on other sites

யுத்தத்துக்கு எதிரான குரலை வலுப்படுத்துவதும் சமாதானத்தின் இறுதி நம்பிக்கையை நாம் இழந்துவிடாமல் இருப்பதும் இன்றைய தேவைகளில் முதன்மையானது.

வரலாற்றை மறந்துவிட்டுத்தான் பேசுகிறீர்களா? எத்தனை ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. அத்தனையும் வெறும் காகிதத்தில்தான். கடைசியாக செய்யப்பட்டது யுத்தநிறுத்த ஒப்பந்தம் அதைத்தன்னும் நிறைவேற்றினார்களா? அதுசெய்யப்பட்ட போது சிறீலங்காஇராணுவம் பெரும் அழிவுகளைச் சந்தித்திருந்தது. இராணுவத்துக்கும் ஒய்வு தேவைப்பட்டது. தனது விமானங்களைக்கூட இழந்திருந்தது. இப்ப எல்லாாவற்றையம் மீண்டும் பெற்றவுடன் மீண்டும் தொடங்கிவிட்டான்.

இஸ்ரேல் பலஸ்தீன ஒப்பந்தம் பல சர்வதேச நாடுகளின் முன்னிலையில் தான் செய்யப்பட்டது. இன்றும் நினைத்தவுடன் பாலஸ்தீனத்தின் மீது படையெடுத்துவிட்டு வருகிறான் இஸ்ரேல் காரன். சமாதானம் பேசி அழிக்கப்பட்ட விடுதலைஇயக்கம் பாலஸ்தீன இயக்கந்தான்.

இன்று சமாதானம் பேசும் சர்வதேசமெல்லாம் நாளை போர் நின்றாலோ விடுதலைப்புலிகள் பலவீனம் அடைந்தாலோ தங்கள் வேலையைப்பார்க்க போய்விடுவார்கள்.

தமிழருக்கு சுயாட்சி அல்லது தனிநாட்டுக்கு குறைந்த எந்த ஒரு தீர்வும் பாதுகாப்பானதல்ல. ஏனென்றால் சிங்களவன் அப்பிடி.

சிங்களவனுக்கு உலகநாடுகள் எல்லாம் உதவிசெய்கின்றன. விடுதலைப்புலிகளுக்கு தமிழ்மக்கள்தான் பக்கபலம். விடுதலைப்புலிகள் இல்லையென்றால் இன்று தமிழர்களின் இருப்பு கேள்விக்குறிதான். புலிகள் எம்முடிவை எடுத்தாலும் அதற்கு நாம் பக்கபலமாக இருக்க வேணும்.

Link to comment
Share on other sites

என்ன நன்பரே இது கூடவா புரியவில்லை சில குருவிகள் புறாவக மாறி புதிதாக இனைந்தது நோக்கு தெரியுது :lol: :P :lol:

குருவிகளையும் சமாதானத்தையும் ஒன்றாக பார்த்து குழம்ப வேண்டாம்.

குருவிகள் தனித்துவம் உடையவர். அதைப்போல சமாதானமும் தனித்துவம் பேணுபவர்

Link to comment
Share on other sites

குருவிகளையும் சமாதானத்தையும் ஒன்றாக பார்த்து குழம்ப வேண்டாம்.

குருவிகள் தனித்துவம் உடையவர். அதைப்போல சமாதானமும் தனித்துவம் பேணுபவர்

என்ன சொல்ல வருகிறீர்கள். ஒன்றாக இருந்தாலும் தனித்துவம் பேணுவமென்றா.

Link to comment
Share on other sites

புலி கொடி அமெரிக்காவில் பறக்கக்கூடிய நிலையில் இன்று இருப்பதற்கு முக்கிய வரலாற்று காரணம் தமிழர் தலைமை தமிழீழ விடுததைப்போராட்ட ஆரம்பகாலத்தில் பிரகடனப்படுத்திய உலக அரசியல் சார்பு நிலைக்கோட்பாடு. ஈ பி ஆர் எல் எவ் எண்பதுகளின் ஆரம்பதில் அமெரிக்க அலன் தம்பதிகளான கடத்திய போது எல் ரி ரி ஈ அதை முதல்முதலில் கண்டித்ததுடன் நிபந்தனைகள் எதுவும் இல்லாமல் அவர்களை விடுதலை செய்யும்படி உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்களுக்கு அறிவித்தது. அப்போதைய அமெரிக்க சோவியத் பனிப்போரில் புலிகள் தமது நிலையை தெளிவாக அமெரிக்காவுக்கு தெரியப்படுத்தி இருந்தனர். அன்று மிக தெளிவாக புலிகளின் தலைமை எடுத்த முடிவின் பயன்களை புலம் பெயர்ந்து அமெரிக்க ஐரோப்பிய மண்ணில் வாழும் நாம் இன்றும் அனுபவிக்கிறோம். .

உங்களின் வாதத்திலை அடிப்படையே சிக்கலா இருக்கே....! புலிகளை தடை செய்த அமெரிக்கா கொடியேற்ற விடுவது.... அலன் தம்பதிகளை கடத்தியதை புலிகள் எதிர்த்ததாலா...???

என்ன சொல்லுறீங்கள் என்பது விளங்கித்தான் சொல்கிறீங்களா..??? புலிகளை அழிக்க பயிற்ச்சியும் ஆயுதமும் இலங்கைக்கு வளங்கின அமெரிக்கா இண்று இப்பிடி நிலை எடுக்க காரணம் புலிகள் அரசியல் வளியில் செய்த மாற்றங்கள் எண்று நீங்கள் சொன்னால், சரத் பொன்ஸ் சேகாவுக்கு குண்டுத்தாக்குதல் நடத்தியது எண்று புலிகள் மீது குற்றம் சாட்டி கண்டித்த அமெரிக்கா.. பன்னிய பிட்டியவில் அதேபோல ஒரு அதிகாரி கொல்லப்பட்ட போது சும்மா இருந்த்து 1 மாத இடைவெளியில் புலிகள் செய்த சீர் திருத்தத்தாலா...???? என்னால் நம்பவே முடியல்லயே...???? தகவலுக்கு நண்றி...!

ஆயுதம் இல்லாது சமாதானம் என்பது கிடைக்கும் எண்றால் அது செல்வா காலத்திலேயே கிடைத்து இருக்க வேண்டும்... 1957ம் ஆண்டின் இனப்படுகொலை நடந்திருக்காது...!

எமது பலம் மட்டும்தான் எங்களுக்கு எதையும் கொண்டுவரும்.... அமெரிக்காவின் ஆதரவைக்கூட, பலமில்லாத உங்களை சீண்டிப்பார்த்து வருத்த பலபேர் வருவார்கள். அவர்கள் நன்மை அடைவதுக்காக...! நீங்கள் பலமாக இருந்தால் அவர்களே பேரம்தான் பேசுவார்கள்... இதுதான் வித்தியாசம்...!

Link to comment
Share on other sites

இனியும் எங்களால் உயிர்களை விலையாக்கமுடியாது எம் தலமையின் ஏன் பொறுமை காக்கின்றதோ தெரியவில்லை என்கே விமானஎதிர்ப்பு படையணி???,விமானபடை இனியும் பொறுமை காத்தால் வெறும் நிலத்தை மாத்திரம் தான் பெறமுடியும் பொறுமைக்கு எல்லை உண்டு அந்த எல்லை கடந்து விட்டது கொடுத்த விலைகள் காணும் என நான் நினைகின்றேன்

sencholai_children.jpg

இவ்வளவு உயிர்களுக்கும் 19000 மாவீரருக்கும் நாம் இழந்த எம் உறவுகளுக்கும் பதில் தான் என்ன :?: :?: :?: :?: :evil: :evil: :evil: :twisted: :twisted:

பிரிவுகளால் அங்கலாய்க்கும்

அகதி தமிழன்

ஈழவன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
    • 28 MAR, 2024 | 09:36 PM   யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ்  யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.  அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவு கூர்ந்தார், இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவரின் விஜயத்தின் அடையாளமாக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புக்களை எழுதினார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன யாழ். பாதுகாப்பு படை தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி  உளவியல் செயற்பாடு மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/179913
    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.