Jump to content

நாம் சமாதானத்தை அடைய கொடுக்கக்கூடிய விலை என்ன?


Recommended Posts

சமாதானம் சாமாதானத்தின் மூலம் இராணுவ வலுவாக்கம் என்ற சிந்தனைப் போக்கில் இருந்து சிங்கள தரப்பும் தமிழர் தரப்பும்..விடுபட்டு..அழுத்தங்

Link to comment
Share on other sites

  • Replies 67
  • Created
  • Last Reply

தற்போதைய சர்வதேச அரசியல் இராணுவ நிலை எமக்கு எதிராக சிறிதுதான் திரும்பி உள்ளது. அதனை நாம் தொடர்ந்து புறக்கணித்தால் எதிர்கால விளைவுகள் மோசமாக போகும் போல்தெரிகிறது.

http://releases.usnewswire.com/GetRelease.asp?id=71049

மேல் இணைப்பில் உள்ள செய்தி எமக்கு தரும் அவசர அறிவுப்பு என்ன?

இந்த அறிவுப்பு அபாயகரமான ஒரு கட்டத்துக்கு போகு முன் தமிழர் தரப்பு விழித்துக்கொள்ளவேண்டும்.

ஆக, சமாதானம் என்பதை தவிர வேறெதுவும் எமது போராடத்தை காப்பாற்ற உதவாது.

Link to comment
Share on other sites

அமெரிக்க மற்றும் மேற்குலகத்துக்கு எதிராக தமிழர் போராட்டதை திசைதிருப்பும் முயற்சியில் சிங்கள இனவாத அரசுகள் காலம்காலமாக முயற்ச்சி செய்துவந்தன. புலிகளின் தலைமை தீர்க்கதரிசனமான அரசியல் இராணுவ காய் நகர்த்தல்களால் சிங்களத்தின் அந்த முயற்சிகளை முறியடித்துவந்தது.

தற்போது அமெரிக்கா மற்றும் மேற்குலகம் எதிர் நோக்கும் அல்ஹைடா பயங்கரவாதத்துக்கு சமாந்திரமாக புலிகளின் இராணுவ யுக்திகள் இருப்பதாக சிங்களத்தின் சர்வதேச பிரச்சாரம் மேற்குலகை கொஞ்சம் குழப்பியுள்ளது.

அமெரிக்க மனித உரிமைகள் அமைப்பினால் கனடாவில் நடாத்தப்பட்ட கூட்டங்களில் சிலர் தாம் தமிழ் தேசியத்துக்கு ஆதரவாளர்கள் எனக்கூறிக்கொண்டு புலிகளுக்கு தவறான இமேச்சை ஏற்படுத்திக் கொடுத்தனர். அதன் பின் அந்த நிறுவனத்தால் கொண்டுவரப்பட்ட அறிக்கை எமது போராட்டத்துக்கும் தலைமைக்கும் அபகீர்த்தி ஏற்படுத்திக்கொடுத்தது.

மனித உரிமைகளுக்கான ஐ நா மன்றத்தின் சிறப்பு பிரதிநிதி அல்ஸ்டன் எழுதிய அறிக்கையை குறித்து ஒரு சிறப்பு வெளியீட்டு கூட்டத்தை லண்டனில் சர்வதேச மன்னிப்பு சபை சில வாரங்களுக்கு முன் நடாத்தியது. அதிலும் தமிழ் தேசியத் தலைமைக்கு அவப்பெயர் ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் தம்மை தமிழ் தேசிய பக்தர்களாக காட்டிக்கொண்டனர். அல்ஸ்டன் பேச்சின் வரிகளுக்கு இடையிலான அர்த்ததைப் புரிந்து கொள்ளாது தமிழ் ஊடகங்களில் தமிழருக்கு பேசுவதுபோல் கோமாளித்தனம் செய்தனர்.

எமக்கு உடனடித்தேவை இப்போது தோன்றியுள்ள புதிய சர்வதேச அரசியலை உள்வாங்கி காய்நகர்த்த வல்ல இளம் தலைமைகளை புலத்தில் முன்னிலைபடுத்தி தமிழ் தேசியத்தையும் அதன் தலைமையையும் பலப்படுத்துவதாகும்.

அதன் வழி எமக்கு முன் உள்ள ஒரே பாதை சமாதனம் என்ற கோசம் தான்

Link to comment
Share on other sites

தமிழர்களை கொன்றழிப்பதற்காக சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீலங்கா அரசு ஒப்பந்தம்.

தமிழர் தாயகப் பிரதேசங்களில் மேற் கொள்ளப்படும் வான் தாக்குதல்களை நடத்தம் பொறுப்பினை சிங்கபூரை தளமாக கொண்டியங்கும் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு ஸ்ரீலங்கா அரசு ஒப்பந்த அடிப்படையில் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பு தேனகம் மீதான தாக்குதல், அண்மையில் முல்லைத்தீவு செஞ்சோலைத் தாக்குதல், அடுத்து கட்டைக் காட்டில் மேற்கொள்ளப்பட்ட படகு கட்டுமானத் தொழிலகம் மீதான தாக்குதல், இவையனைத்தும் நன்கு திட்மிட்ட முறையில் இலக்குகளை துல்லியமாக அறிந்து மேற் கொள்ளப்பட்ட தாக்குதல்களாகும். குறித்த இந்த நிறுவனம் மிகவும் நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட நிறுவனம் என்றும் வெளிநாடுகளின் இராணுவ நடவடிக்கைகளை பொறுப்பெடுத்து நடத்துகின்ற நிறுவனம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது ஸ்ரீலங்கா வான் தாக்குதல்களை குத்தகை அடிப்படையில் பொறுப்பெடுத்து நடத்துகின்ற இந்த நிறுவனத்தில் உக்ரைன்,தென்னாபிரிக்க நாட்டு போர் விமானிகள் இலங்கையில் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை வன்னி பெருநிலப்பரப்பு மீது காப்பெட் குண்டுகள் மூலம் தாக்குல் நடத்த ஸ்ரீலங்கா அரசு மேற் கொண்ட முயற்சியும் இந்திய அமெரிக்க தலையீட்டினால் கைவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

http://www.athirvu.com/index.php?option=co...id=338&Itemid=9

Link to comment
Share on other sites

இது அமெரிக்காவின் வழமையான நாடகங்கள் தான். புலிகளை அமெரிக்கா எப்போதும் தான் கண்காணித்து வருகிறது. புலிகளின் முக்கிய பிரமுகர்கள் அமெரிக்காவில் இருந்து வந்துதான் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டனர். ஆனால் அமெரிக்கா புலிகளை 98 இலேயே தடை செய்துவிட்டது. இந்த நிலையில் அமெரிக்காவின் இரட்டை அணுகுமுறை சிறீலங்காவுக்கு சந்தேகத்தை உண்டு பண்ணியிருக்கும். அந்த வகையில் மீண்டும் சிறீலங்காவின் நம்பிக்கையைத் தக்க வைக்கவும்..இந்தியா பக்கம் அது சாராமல் இருக்கவும்..புலிகள் மீதுதான் தான் நடவடிக்கை எடுப்பதாகக் காட்ட வேண்டும்..! அமெரிக்காவின் தொடர்ச்சியான செயற்பாடுகளைப் பார்த்தாலே..அது நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈழப் பிரச்சனையை தனக்கான பிராந்திய ஊடுருவலுக்கு சாதகமாகவே பயன்படுத்தி வருவது தெளிவு..!

அது மட்டுமன்றி புலிகள் ஏவுகணைகளை பாவித்த வேளைகளில் எல்லாம் அமெரிக்க உளவாளிகள்...அதன் பெறப்படு இடம் தேடி...பல ஊகங்களை ஊடகங்களூடு.கட்டவிழுத்து விட்டனர். தற்போதும்...புலிகளுக்கு சிறீலங்கா விமானப்படையை எதிர்க்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ள ஒரு நிலையில் அமெரிக்கா...ஏதோ புலிகளுக்கு ஏவுகணைகள் செல்லாமல் தடுத்து நிறுத்துவது போல படம் காட்டுகிறதே அன்றி...அமெரிக்காவால்..புலிகளி

Link to comment
Share on other sites

மனித வெடிகுண்டுகள்: விடுதலைப் புலிகளின் கூர்மையான ஆயுதம்!

-------

இலங்கை ராணுவம், அந்நாட்டு அரசாங்கம் ஆகியவற்றுக்கு எதிரான யுத்தத்தில் விடுதலைப் புலிகள் மனித வெடி குண்டுகளைக் கூர்மையான ஆயுதமாகத் தீட்டி வைத்துள்ளனர்.

தரை மற்றும் கடல் படைகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் மேற்கொண்டு வரும் இந்த மனித வெடிகுண்டுத் தாக்குதல் இலங்கை ராணுவத்தைக் கவலை கொள்ள வைத்துள்ளது.

பலர் இத்தகைய தாக்குதல்கள் அனைத்துலக கடல் வர்த்தகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கக்கூடும் என்று அஞ்சுகின்றனர்.

இருப்பினும் தற்போதைய நிலவரப்படி, இத்தகைய தாக்குதல்களை விடுதலைப் புலிகளைத் தவிர மற்ற பயங்கரவாதக் குழுக்கள் இன்னும் கையாளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மனித வெடிகுண்டுத் தாக்குதல்கள் இலங்கைக் கடற்படையை நடு நடுங்க வைத்துள்ளது என்று கூறுகிறார் மேற்கத்திய பாதுகாப்பு நிபுணர் ஒருவர்.

கடல் யுத்தத்தில் ஏவுகணைகள் இல்லாத நிலையில், இந்த மனித வெடிகுண்டுத் தாக்குதல்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை என்கிறார் இவர்.

விடுதலைப் புலிகள் தங்கள் வசம் பல்லாயிரம் மனித வெடிகுண்டு நபர்கள் இருப்பதாகக் கூறுகின்றனர்.

இவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இருப்பதாகக் கூறும் விடுதலைப் புலிகளின் தளபதிகள், இவர்களைக் கரும் புலிகள் என்று வர்ணிக்கின்றனர்.

இந்தக் கரும் புலி வீரர்கள் கழுத்தில் சையனைட் மாத்திரையைத் தொங்கவிட்டுக் கொண்டு, உயிருடன் பிடிபட்டால் தங்களை மாய்த்துக்கொள்ளவும் தயாராய் உள்ளனர்.

ஜேன்ஸ் வீக்லி சஞ்சிகையின் ஆய்வாளரான இக்பால் அத்தாஸ் என்பவர், இந்தக் கரும் புலிப் படையினர் கடும் சித்தப் போராளிகள் என்று கூறுகிறார்.

1980களிலிருந்து 2003ம் ஆண்டுவரை மனித வெடிகுண்டுத் தாக்குதல்களில் 24 விழுக்காடு விடுதலைப் புலிகளால் நடத்தப் பட்டது என்கிறார். இது மத்திய கிழக்கில் ஹமாஸ் போன்ற பயங்கரவாத இயக்கங் களின் தாக்குதல்களைவிட

அதிகம்.

TAMILMURASU-SINGAPORE

Link to comment
Share on other sites

அமெரிக்க கனடிய உளவுத்துறையின் கூட்டுச்சதிக்குள் சிக்கிய தமிழ் இளைஞர்கள்

நமது நிருபர்

Wednesday, 23 August 2006

கடந்த 2004ம் ஆண்டு சுனாமி அனர்த்தம் நிகழ்ந்த போது சதாஜ்கன் சரச்சந்திரன், சுரேஸ் சிறிஷ்கந்தராஜா இவர்களும் மேலும் 26 கனடிய தமிழ் மாணவர்களுடன் வட கிழக்கில் பாதிக்ககப்பட்ட மக்களுக்கும் உதவி வழங்கினார்கள்.

இன்று அவர்கள் பயங்கரவாதத்திற்க்கு உதவினார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

கனடிய தமிழினத்தின் குரலாய் ஒலித்து கொண்டிருந்த சமூக நோக்கம் கொண்ட இந்த இளைஞர்கள் இன்று எப்.பி.ஐ (FBI)மற்றும்; ஆர்.சி.எம்.பி(RCMP)யின் கூட்டுச் சதிக்குள் சிக்கியுள்ளனர். கனடாவிலும் அமெரிக்காவிலும் அதிகரித்திருக்கும் தமிழீழத்திற்கானதும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்குமான ஆதரவை நசுக்கி தமிழ் மக்களை அச்ச நிலையில் வைத்திருக்கவே இரு நாட்டு உளவுப்பிரிவுகளும் விரும்புகின்றன.

கனடாவில் தமிழ் மக்களின் போராட்டங்கள், கண்டனக்கூட்டங்கள் என்பதை வழமைக்கு மாறாக, பெருந்தொகை மக்களுடன் நடைபெறுவதும், அவற்றை ஒழுங்கு செய்யும் அமைப்புக்களை எந்தவகையிலாவது ஒடுக்க வேண்டும் எனற ஒரு மேலாதிக்க சிந்தனையுடன் கனடிய அமெரிக்க உளவு நிறுவனங்கள் செயற்ப்பட்டுவருகின்றன.

கைது செய்யப்பட்ட சதாஜ்கன் சரச்சந்திரன் ரொரன்ரோ பல்கலைகழக (UofT) மாணவன், முன்னை நாள் கனடிய தமிழ் மாணவர் அமைப்பின் (TSA) தலைவராகவும் இருந்தவர். நண்பர்கள் மத்தியில் “சதா” என் அழைக்கப்படும் இவர் மிகவும் துடிப்புள்ள ஒரு சமூக சேவையாளர். கனடிய தமிழ் மக்கள் சார்பாக சுனாமி அனர்த்ததின் போது தாயகம் சென்ற இவர் அங்கு பல உதவிகளை செய்தவர்.

இவரைப்போலவே சுரேஷ் சிறிஸ்கந்தராஜாவும் ஒரு துடிப்புள்ள இளையவர். வல்லெட்டி துறையில் பிறந்த இவர் 15 வருடங்களுக்கு பின்னர் கடந்த 2004 ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் தாயகம் திரும்பி சிறிது காலம் அங்கு சில சமூக சேவைகளை செய்துள்ளார். வோட்லோ பல்கலைக்கழகத்தில், (University of Waterloo) இன்ஜினியரிங் பாடம் படித்து கொண்டிருக்கும் சுரேஷ் சிறிஸ்கந்தராஜா தான் ஒரு இன்ஜினியரிங் புரொக்கிராமர் மனேஜராக வரவேண்டும் என கனவு கண்டார். தாயகத்தில மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர், தனது தனிப்பட்ட இணையத்தில், தாயகத்தில் தான் இருந்த வேளை தன்னால் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இட்டுள்ளார். ஆனாலும் தற்போது ரொரன்ரோவில் வைத்து பயங்கரவாதத்திற்க்கு உதவினார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் இவர் கைது செய்யப்ட்டு ஒன்ராரியோ, கிச்சினர் நீதிமன்றில் நிறுத்தப்பட்டுள்ளார்.

இவர்களைப் போலவே சகிலால் சபாரத்தினமும் ஒரு துடிப்புள்ள சமூக சேவை செய்யும் இளைஞன், 2005 ம் ஆண்டில் கனடிய தமிழர் பேரவையின் (CTC) ஊடகப்பேச்சாளராக கடமையாற்றிய இவர், இன்று ஆயுதம் வங்க முயன்றார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் கனடிய அமெரிக்க கூட்டுச் சதிக்குள் சிக்கியுள்ளனர்.

இவர்களது கைதானது கனடிய தமிழர்களுக்கு அதிர்சியளிப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது. கனடிய தமிழினத்தின் தாயகம் மீதான பற்றுதியையும், அது நோக்கிய தொலை நோக்கு பார்வையையும் சகித்து கொள்ள முடியாது அமெரிக்க –கனடிய மேலாதிக்க சக்திகள் இப்படியான கைதுகள் மூலம் மக்களை மிரட்ட முயல்கின்றது.

ஈராக் போருக்காக கதைகளை உருவாக்கிய அமெரிக்க அரசின் சர்வதேச விவாகாரங்களை கவனித்து கொள்ளும், சீ.ஐ.ஏ (CIA) யின் வளர்ப்பு பிள்ளையான எப்.பி.ஐ (FBI)எப்படி இருக்கும் என்பதை மக்களுக்கு நாம் சொல்லி தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.

இன்றைய இவர்களின் நோக்கு தமிழ் தேசியத்திற்காதரவானவர்களை ஒடுக்குவதே, அந்த வரிசையில், கனடிய தமிழர் பேரவை, கனடிய தமிழ் மாணவர் அமைப்பு போன்ற முக்கியமான தமிழர் அமைப்புக்களை முடக்க அவர்கள் திட்டமிடலாம் எனவே தமிழர்களே விழிப்போமா

http://www.worldtamilpress.com/index.php?o...d=625&Itemid=27

அமெரிக்க மற்றும் மேற்குலகத்தின் இராஜதந்திர நகர்வுகளின் ஆரம்ப அறிகுறி இது. இதை புரிந்து கொண்டு நாம் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் எமது போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம்.

சமாதானம் என உரத்து குரல் எழுப்புவதே எமக்கு முன் உள்ள ஓரே வழி

Link to comment
Share on other sites

அமெரிக்க மற்றும் மேற்குலகத்துக்கு எதிராக தமிழர் போராட்டதை திசைதிருப்பும் முயற்சியில் சிங்கள இனவாத அரசுகள் காலம்காலமாக முயற்ச்சி செய்துவந்தன. புலிகளின் தலைமை தீர்க்கதரிசனமான அரசியல் இராணுவ காய் நகர்த்தல்களால் சிங்களத்தின் அந்த முயற்சிகளை முறியடித்துவந்தது.

தற்போது அமெரிக்கா மற்றும் மேற்குலகம் எதிர் நோக்கும் அல்ஹைடா பயங்கரவாதத்துக்கு சமாந்திரமாக புலிகளின் இராணுவ யுக்திகள் இருப்பதாக சிங்களத்தின் சர்வதேச பிரச்சாரம் மேற்குலகை கொஞ்சம் குழப்பியுள்ளது.

அமெரிக்க மனித உரிமைகள் அமைப்பினால் கனடாவில் நடாத்தப்பட்ட கூட்டங்களில் சிலர் தாம் தமிழ் தேசியத்துக்கு ஆதரவாளர்கள் எனக்கூறிக்கொண்டு புலிகளுக்கு தவறான இமேச்சை ஏற்படுத்திக் கொடுத்தனர்.அதன் பின் அந்த நிறுவனத்தால் கொண்டுவரப்பட்ட அறிக்கை எமது போராட்டத்துக்கும் தலைமைக்கும் அபகீர்த்தி ஏற்படுத்திக்கொடுத்தது.

மனித உரிமைகளுக்கான ஐ நா மன்றத்தின் சிறப்பு பிரதிநிதி அல்ஸ்டன் எழுதிய அறிக்கையை குறித்து ஒரு சிறப்பு வெளியீட்டு கூட்டத்தை லண்டனில் சர்வதேச மன்னிப்பு சபை சில வாரங்களுக்கு முன் நடாத்தியது. அதிலும் தமிழ் தேசியத் தலைமைக்கு அவப்பெயர் ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் தம்மை தமிழ் தேசிய பக்தர்களாக காட்டிக்கொண்டனர். அல்ஸ்டன் பேச்சின் வரிகளுக்கு இடையிலான அர்த்ததைப் புரிந்து கொள்ளாது தமிழ் ஊடகங்களில் தமிழருக்கு பேசுவதுபோல் கோமாளித்தனம் செய்தனர்.

எமக்கு உடனடித்தேவை இப்போது தோன்றியுள்ள புதிய சர்வதேச அரசியலை உள்வாங்கி காய்நகர்த்த வல்ல இளம் தலைமைகளை புலத்தில் முன்னிலைபடுத்தி தமிழ் தேசியத்தையும் அதன் தலைமையையும் பலப்படுத்துவதாகும்.

அதன் வழி எமக்கு முன் உள்ள ஒரே பாதை சமாதனம் என்ற கோசம் தான்

இலங்கையில் இடம்பெறும் பாரதூரமான மனித உரிமை மீறல்களை கண்காணிக்க சர்வதேசகுழுவை அனுப்ப வேண்டும்

- அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமை அமைப்பு கோரிக்கை.

[வியாழக்கிழமை, 24 ஓகஸ்ட் 2006, 03:04 தமிழீழம்] [கிருஷ்ணப்பிள்ளை]

இலங்கையில் இடம்பெறும் பாரதூரமான மனித உரிமை மீறல்களை கண்காணித்து அவற்றை கட்டுப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையின் கீழ் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று அமெரிக்காவை தளமாகக் கொண்டியங்கும் "ஹியூமன் ரைட்ஸ் வோட்ச்' எனப்படும் மனித உரிமைகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

ஏற்கனவே ஹொங்கொங்கை தளமாகக் கொண்டியங்கும் ஆசிய மனித உரிமைகள் அமைப்பு கடந்த 17ஆம் திகதி வெளியிட்ட தமது விசேட அறிக்கையில்; பாரிய மனித படுகொலைகளும்,ஆட்கடத்தல்களும

Link to comment
Share on other sites

சமாதானம்.. ஆறு வருஷம் "சமாதானம் என உரத்து குரல் எழுப்புவதே எமக்கு முன் உள்ள ஓரே வழி" எண்டு கத்தி திட்டு வாங்கினதுதான் மிச்சம்.. இப்ப நீங்கள் தொடங்கியிருக்கிறியள்..

:P

சரி என்னத்துக்கும் பிள்ளையார்சுழி போட்டுவிடுறன் மிச்சத்தை அவங்கள் தொடருவாங்கள்..

:P :lol::lol:

"There is plenty of guilt in our region. No one is innocent, but as long as we allow the events on the ground to dictate policies, we are in trouble."

Link to comment
Share on other sites

சமாதானம் என்பது ஒரு தரப்பு இணங்கினால் மட்டும் வராது. இருதரப்பும் இணங்கிச்செல்ல வேண்டும். சும்மா இஞ்சை நிண்டு மாரித்தவக்கை மாதிரி சத்தம் போடுறதை விட்டு;;, போய் சிங்களவன்ரை காதிலை ஊதும். புலிகள் எப்போதும் சமாதானத்துக்கு தயாராக இருந்திருக்குறார்கள், இருக்கிறார்கள். உங்கட சிங்களவர் தயாரா? தயார் என்றால் யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை அமுல்படுத்திட்டு வரச்சொல்லுங்க ஏனெனில் சமாதானம் என்னும் கட்டடத்துக்கு யுத்தநிறுத்த ஒப்பந்தம் எனும் அத்திவாரம் தேவை.

மேற்கு நாடுகளைப்பற்றி அதிகம் அலட்டாதேம். அவையின்ரை நடுநிலைமை சந்தி சிரிக்குது. அரசாங்கம் தாக்குதல் தொடங்கினால் பேசாமல் இருப்பினம். விடுதலைப்புலிகள் தற்காப்பு தாக்குதல் செய்தாலே பெரிய அறிக்கை விட்டுடுவினம்.

Link to comment
Share on other sites

அடுத்த மாதம் அமெரிக்கா செல்லும் ஜனாதிபதி அங்கு அதிபர் புஷ்ஷிடம் நேரில் உதவிகோருவார்

ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அடுத்த மாதம் நடுப்பகுதியில் அமெரிக்கா செல்லும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நியூயோர்க்கில் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ.புஷ்ஷை சந்தித்துப் பேசவுள்ளார்.

பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் உலக நாடுகளின் தலைவர்களின் சம்பிரதாயபூர்வ சந்திப்பிற்குப் புறம்பாக மேற்படி சந்திப்பு இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவிடமிருந்து இலங்கைக்குத் தேவையான ஒத்துழைப்புகள், உதவிகள் குறித்து இந்த பேச்சுகளின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கையை விடுப்பார் என்று ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் கூறின.

ஜனாதிபதியுடனான அமெரிக்க விஜயத்தில் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் பலர்

http://www.sudaroli.com/SudarOli%20Web/Index.htm

தமிழர் தரப்புக்கு எதிரான இன்றைய நிலைக்கு அமெரிக்க கனடிய கூட்டுச் சதி, அது, இது என புலம்பிக்கொண்டிராமல் எம்மிடம் இருக்கும் கடைசி சொற்ப கணங்களையும் எமக்கு சாதமான சூழலை உருவாக்க என்ன வழிகளில் நாம் முன் நகர வேண்டும் எனச்சிந்திப்பதே சிறந்தது.

அமெரிக்க கனடிய உள்ளக புலனாய்வுத்துறையின் அண்மைய கைதுகளின் பின்ணணியில் பத்து நாடுகளுக்கு மேற்பட்ட புலனாய்வு இலாக்காக்கள் வேலை செய்துள்ளன. Operation Under Control எனக் குறியீட்டு பெயர் சூட்டப்பட்ட அமெரிக்க உளவுத்துறையின் நடவடிக்கைக்கு சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன் 40 மேற்பட்ட எவ் பி ஐ ஏஜென்டுகள் பொறுப்பாக நியமிக்கப் பட்டுள்ளனர்.

இந்த கைதுகளின் பின்ணணி என்ன, அது சொல்லும் அரசியல் இராணுவ செய்தி என்ன என்பதை விளங்கிக்கொள்லாமல் கனட வாழ் தமிழரின் கத்திக்கு வேலைவந்துவிட்டது என உணர்சிவயப்படாமல் புலம் பெயர் தமிழரின் புத்திக்கு வேலை வந்துவிட்டது என செயலாற்றவேண்டிய தருணம் இது.

எமது போராட்டப்போக்கில் நாம் ஒரு யூ திருப்பம் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதற்கு போதிய அரசியல் இராணுவ பலம் எம்மிடம் இருக்கு நிலையில் அந்த வரலாற்றுப் பணியை நாம் நிறைவெற்றி ஆகவேண்டும். அல்லாது போனால் வரலாற்றின் போக்கு புலிகளையும் புலிகளின் தலைமையையும் புறந்தள்ளிவிட்டு தனது மேலாண்மையை எமது வரலாறாக எழுதிவிட்டு செல்லும்.

ஆக, எமது தலைவிதியை நாங்கள் எழுதவேண்டுமானால் சமாதானம் ஒன்றுதான் எமக்கு முன் உள்ள ஓரேவழி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

QUOTE("SAMATHANAM

[/b)

அது தான் சமாதானம் வந்திட்டுதே. பிறகு ஏன் விலை கொடுக்க வேண்டும்? :lol::lol:

Link to comment
Share on other sites

அரிசி கொண்டொரு

படகு வந்தது

அதனை தொடர்ந்து செஞ்சிலுவை வந்தது.

வரிசை வரிசையாய் கவசவாகனம்

வந்து வந்தெம்மை

உரிசை பார்த்தது.

படகுவந்து வாய்கரிசி போட்டது

செஞ்சிலுவை வந்தெம்மை நிறுவை பார்த்து..!

::::: புதுவை அண்ணாவின் கவி::::

Link to comment
Share on other sites

நேற்று சிலிக்கன்வலியில் இருக்கும் எனது நண்பர் ஒருவருடன் தொலைபேசியில் கதைக்கும் போது '' எவ் பி ஐ, ஆர் சி எம் பி கைதுகளின் பாரதூரம் எம்மில் பலரால் சரியாக உள்வாங்கப்படவில்லை. கனடாவில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களது அடுத்த சந்ததி பல்கலைக்கழக படிப்பை தொடங்குவதும் பலர் படிப்பை முடித்துக்கொண்டு வெளிவரும் இக்காலகட்டத்தில் புலிகளுடன் அவர்களை தொடர்புபடுத்தி வரும் சம்பவங்கள் எமது அடுத்த சந்ததியினரை வெகுவாக பாதிக்கும். எதிர்காலத்தில் நாம் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு சமூகமாக ஒதுக்கப்பட வாய்ப்புகள் இருக்கிறது.'' என்று தனது ஆதங்கதை தெரிவித்தார்.

புலம்பெயர்ந்த நாம் சமாதானம் என்ற ஒரே ஒரு கோசத்தினூடாகவே சர்வதேசம் எம்மை தனிமைப்படுத்துவதை தடுத்து நிறுத்த முடியும்

Link to comment
Share on other sites

Unfair to link plot to Tamil community, group says

Last Updated Thu, 24 Aug 2006 21:32:39 EDT

CBC News

The arrests of six Canadian men in an alleged conspiracy to buy weapons for the Tamil Tigers in Sri Lanka should not reflect negatively on the Tamil community as a whole, the Canadian Tamil Congress said Thursday.

"In the strongest of terms possible, we categorically condemn this isolated incident," Kavitha Pathinathar, a spokeswoman with the CTC, said during a news conference in Toronto.

"We deplore anyone attempting to make political statements by advocating violence."

Pathinathar stressed that the incident involves six men "who happen to be Tamil. We caution you not to read anything more into this."

The alleged plot is being investigated by law enforcement agencies in Canada and the U.S.

At least 14 people are in custody, with arrests made so far in Ontario, Buffalo, N.Y., San Jose, Calif., Seattle, Wash., and Connecticut.

Used to hold positions in group

Three of the Canadians were arrested in the U.S. last weekend, after investigators alleged they tried to purchase surface-to-air missiles and hundreds of AK-47 assault weapons from undercover agents. Three other Canadians were arrested in Ontario.

Pathinathar acknowledged that some of the accused held positions within the organization in the past, but no longer do so.

"They are not members of our organization. We have a diverse membership. It would be patently unfair if the allegations are in any way attributed to the Canadian Tamil Congress," she said.

The Tigers have been engaged in a violent campaign for independence since the early 1980s. More than 65,000 people have been killed in the conflict.

A ceasefire in 2002 has all but collapsed in recent months, leading to hundreds of casualties.

Canada added the Tamil Tigers to its official list of terrorist organizations in April, nine years after the U.S.

Link to comment
Share on other sites

புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு எமது போராட்டம் யுத்தத்திற்கு முகம் கொடுப்பதற்கு வேண்டிய உதவிகளை எந்தவகையில் செய்கிறார்களோ அதேபோல் எமது போராட்டம் சமாதானத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பதில் தெளிவில்லை. அதற்கு பிரதான காரணம் புலத்தில் உள்ள தமிழ் ஊடகங்கள் அநேகமானவை போர் குறித்து மிகைப்படுத்தியே அதிகம் பேசுகின்றன. சிங்களத்தின் வலிந்த போருக்கு தமிழர் தரப்பு எதிர்வினைகொள்வதில் உள்ள மன ஆதங்கத்தில் வெறுமனே உள்ளக்குமுறல்களை வெளியில் கொட்டிச் சிந்துவதன் பயன்கள் குறித்து எமக்கு புதிய அணுகுமுறை தேவை.

தேசியத்துக்கு சார்பான ஆங்கில ஊடகங்கள் யுத்த நேரத்தில் வெளியிடும் செய்திகளின் பொறுப்புணர்வு தமிழ் ஊடகங்களில் குறைந்தபட்சம் இருப்பதாக தெரியவில்லை.

யுத்தமும் சமாதானமும் ஒர் இரட்டைக்குழல் துப்பாக்கியில் இருந்து வெளியேறும் சமபலம் உள்ள ரவைகள் என்பது நம்மில் பலருக்கு வயித்தில் புளியைகரைக்கும் சமாச்சாரம். மாறிவரும் உலக ஒழுங்கு எமது போராட்டத்துக்கு புதிய தடைகளை புகுத்தியபோதும் தமிழர் போராட்டத்தை இன்னும் முன்நகர்த்தி செல்ல புதிய களங்களையும் திறந்து விட்டுள்ளது என்பதை நாம் ஏன் கண்டுகொள்ளத்தவறி வருகிறோம்?

யுத்தகாலத்தைப் போலல்லாது சமாதான காலத்தில் புலம்பெயர் தமிழர்கள் ஆற்றவேண்டிய பணிகள் அதிகம். அதில் இருந்து நாம் தப்புவதற்காகவே சமாதானம் பற்றி மெளனம் சாதிக்கிறோம் அல்லது சமாதானத்துக்கு எதிராக பேசுகிறோம் என்பது கசப்பான உண்மை.

Link to comment
Share on other sites

இன்றைய காலகட்டத்தில் சமாதானம் பற்றி பேசுவோர் தமிழ் தேசியத்தை காப்பாற்றுகிறார்கள். புதிய உலக ஒழுங்கை புரிந்துகொள்ள முடியாது, யுத்த பிரகடனம் செய்வோர்கள் தமிழ் தேசியத்தின் தலைமையை காட்டிக்கொடுக்கிறார்கள்.

தமிழ் தேசிய விடுதலைப்போராட்டத்தை இந்திய பாகிஸ்தான் உறவுகளுக்கு இடையில் ஊசலாடும் ஓர் அற்பவிடயமாக்கப்படுவதை தமிழ் இணையத்தள ஊடகங்கள் தமது செய்தியாக தூரநோக்கின்றி முன்வைக்கின்றன. 9/11 க்கும் முன் உலக வரைபடத்தில் இந்திய உபகண்டம் தனக்குள் வைத்திருந்த முரண்பாடு தற்போது தவிடுபொடியாகிவிட்டது. இன்னும் குண்டுச்சட்டிக்குள் குதிரையோடும் மனபாங்கில் எம்மில் பலர் தமது காலத்தை விணடிகிறார்கள்.

அமெரிக்க இந்திய பாகிஸ்தான் உறவுகளுக்கிடையில் எமது தேசிய போர் முன்னுதாரணம் அற்ற ஒரு நவகோலத்தில் முன் நகர்கிறது. எமது போராட்டதின் புதிய சுவடுகள் எம்மை சோரவிடாமல் தட்டிச்செல்வதை எம்மில் பலர் முகம் கொடுக்க மறுக்கிறார்கள். ஒருவகையில் எமது தேசிய போரின் புதிய தடங்களை புரிந்து கொள்ள முடியாததால் தமக்குள் பயமும் கொள்கிறார்கள். அதுவே அவர்களை சமாதானத்தின் எதிரியாகவும் யுத்தத்தின் நண்பனாகவும் தம்மைத்தாம் பிரகடனபடுத்திக் கொள்ளவேண்டி இருக்கிறது.

யுத்தத்தின் மூலம் தமிழர் அரசியலை தலைமையின் தலையில் போட்டுவிட்டு தம்மை தாம் விடுவித்துக்கொள்ள முனையும் ஆபத்தான அரசியலை புலம்பெயர்ந்த தமிழர்கள் உடன் நிறுத்தவேண்டும். சமாதானத்திம் மூலம் தேசியத்தின் தலைமைக்கு அனுசரணையாக இருப்பதன் மூலமே எம்முன் மாறிவரும் உலக ஒழுங்கை எம்மால் எமக்கு உரியதாக மாற்றிக்கொள்ள முடியும்

Link to comment
Share on other sites

இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு அனுசரணை வழங்கிவந்த நோர்வேயுடன் இந்திய அரசும் இணைந்து கொள்ளப் போவதாக செய்திகள் கசியத்தொடங்கிவிட்ட நிலையில் இந்திய அரசு அந்த அனுசரணையாளர் குழுவில் பிரித்தானியவையும் இணைந்து கொள்ளுமாறு கேட்டுள்ளதாகவும் அது குறித்து பேசவே மகிந்த பிரித்தானியா வருவதாகவும் சில கதைகள் அடிபடுகின்றன.

இலங்கை இனப்பிரச்சினை சமரசத்திட்டத்தில் இந்திய பிரித்தானிய வருகைக்கு பாலசிங்கம் ஊடாக தலைமையின் கருத்து அறியப்பட்டதாகவும் தலைமை அது குறித்து எந்தவித எதிர்ப்பும் இல்லை எனத்தெரிவித்ததாக சில உள்வட்டாரங்கள் சொல்கின்றன.

இந்த சம்பவங்களின் பின்ணணி எமக்கு தரும் செய்தி என்ன?

Link to comment
Share on other sites

எமது இனச் சிக்கலை இன்னும் சிக்கலாக்கப் போகினம் எண்டதுதான் சமாதானம் வேற என்ன..! :idea:

Link to comment
Share on other sites

இலங்கையில் அரசியல் தீர்வு முயற்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் ஜே வி பி மற்றும் தீவிர சிங்கள அமைப்புகளுக்கு பிரித்தானிய அரசு தடை விதிப்பை ஏற்படலாம் எனவும் ஒரு செய்தி வருகிறது.

இந்திய அரசின் கடைக்கண் அசைவு இல்லாமல் மகிந்த தன்னிச்சையாக பிரித்தானிய விஜயத்தை அவசர அவசரமாக செய்திருக்கமாட்டார். இந்திய பிரித்தானிய கூட்டு நடவடிக்கை இந்துசமுத்திரத்தில் பிரசன்னமாக இருப்பதற்கான மற்றுமொரு அறிகுறி இதுவாக இருக்கலாம். இந்த கடற்படை கூட்டு நடவடிக்கை இந்திய நலன்களின் நீணடகால பாதுகாப்புகுரிய உத்தியே எனவும் கருத இடம்முண்டு. பாகிஸ்தான் சீனா போன்ற நாடுகளுடனான கடற்படை சமநிலை பிரித்தானிய வருகையினால் இந்திய தரப்பில் சற்று பிடிப்பை அதிகரிக்கும்.

ஆக மொத்தத்தில் எமது தேச மீட்புப்போராட்டத்துக்கு ஒரு புது வடிவம் ஒன்றை அவசரமாக வேண்டிநிற்கிறது,.

Link to comment
Share on other sites

**************

இங்கு கருத்துகளுக்கான கருத்துகள்தான் முக்கியமே தவிர தனிமனித பழிப்பு அல்ல. யாழில் கருத்து எழுதும் சிலரை தவிர மற்றவர்கள் தமக்குரிய சிலபல காரணங்களுக்காக அநாமதேயமாகவே புனைபெயர்களில் வந்து எழுதுபவர்கள். இதில் நீங்கள், நான், குருவி போன்ற பலரும் அடங்கும். இதுவே நம் முன் உள்ள யதார்த்தம் என்பதை நாம் ஏற்க மறுக்கின்றோம்?

ஆக கருத்துகள் எழுதும் போது அவரவர் கருத்துகளில் உங்களுக்கு உள்ள முரண்பாடுகளை சுட்டிக்காட்டுவதை விட்டு வெறும் வசை மொழிகள் எந்த பயனையும் யாருக்கும் தரப்போவதில்லை.

Link to comment
Share on other sites

இப்படி தான் ஒருவர் ஒரே தலைப்பில் கருத்துக்கள் எழுதி குழம்பி இருக்கார் ஒருவர் இருவர் பெயரில் ஜயோ நான் என்ன பேசுகிறேன் எனக்கு பைத்தியமா?

Link to comment
Share on other sites

SAMATHAANAM எழுதியது:

வடிவேலு எழுதியது:

kuruvikal எழுதியது:

எமது இனச் சிக்கலை இன்னும் சிக்கலாக்கப் போகினம் எண்டதுதான் சமாதானம் வேற என்ன..!

**************

இங்கு கருத்துகளுக்கான கருத்துகள்தான் முக்கியமே தவிர தனிமனித பழிப்பு அல்ல. யாழில் கருத்து எழுதும் சிலரை தவிர மற்றவர்கள் தமக்குரிய சிலபல காரணங்களுக்காக அநாமதேயமாகவே புனைபெயர்களில் வந்து எழுதுபவர்கள். இதில் நீங்கள், நான், குருவி போன்ற பலரும் அடங்கும். இதுவே நம் முன் உள்ள யதார்த்தம் என்பதை நாம் ஏற்க மறுக்கின்றோம்?

ஆக கருத்துகள் எழுதும் போது அவரவர் கருத்துகளில் உங்களுக்கு உள்ள முரண்பாடுகளை சுட்டிக்காட்டுவதை விட்டு வெறும் வசை மொழிகள் எந்த பயனையும் யாருக்கும் தரப்போவதில்லை.

இப்படி தான் ஒருவர் ஒரே தலைப்பில் கருத்துக்கள் எழுதி குழம்பி இருக்கார் ஒருவர் இருவர் பெயரில் ஜயோ நான் என்ன பேசுகிறேன் எனக்கு பைத்தியமா?

ஒரு தலைப்பில் நின்று கருத்து எழுதுவது அவரவர் தேவைக்கும் விருப்பத்துக்கும் மேலாக நோக்கம் அதாவது ஒரு குறிப்பிட்ட இலக்கு நோக்கியதானது.

இதை புரிந்துகொள்ளாமல் குருவிகளையும் சமாதானத்தையும் ஒருவராக நினைத்து குழம்ப வேண்டாம்.

Link to comment
Share on other sites

இலங்கை ஜனாதிபதியின் பிரித்தானிய விஜயம், இலங்கையின் கடும்போக்கிற்கு இந்தியாவின் ஆதரவை பெற்றுக் கொள்ள எடுக்கும் முயற்சியாக இருக்கலாம் என்று தெரிவிப்பு. இலங்கை புலிகளை சர்வதேச மட்டத்தில் ஓரங்கட்ட முயற்சிக்கிறது. இது தவறானது

Sri Lankan President Mahinda Rajapakse's meeting scheduled with the British Prime Minister Tony Blair Wednesday is "presumably an attempt to win Indian support in favour of Sri Lankan policy," reported the Norwegian state radio NRK P1, citing Jon Hanssen-Bauer, the Norwegian Special Envoy to the Sri Lanka Peace Process. The Sri Lanka Government's policy seeks to isolate the Liberation Tigers of Tamil Eelam (LTTE) as a terrorist organisation, contrary to the Norwegian facilitated peace process where both the parties were to be equally treated, Mr. Jon Hanssen-Bauer has commented to the radio.

...

.....

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19420

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.