Jump to content

நாம் சமாதானத்தை அடைய கொடுக்கக்கூடிய விலை என்ன?


Recommended Posts

சமாதானம், போர் என்ற பதங்களில் கவனத்தை செலுத்தாமல், மக்கள் அங்கு நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் நீண்டகாலத்துக்கு வாழ என்ன வழி என்ற கேள்வியை கேட்பதே, அந்த மக்களுக்கு தேவையானதை தேடுவதாக அமையும்.

கடந்த 50 வருட உரிமை பிரச்சினையில், 20 வருடங்கள் போர்க்காலமாக அமைந்து விட்டது. சில ஆய்வாளர்கள் 'ஆசியாவின் நீண்ட உள்நாட்டுப்போர்' என்று இந்த போரை குறிப்பிடுகிறார்கள். மக்கள் மடிவதோ கூடிக்கொண்டே போகிறது. குறிப்பாக தமிழர் ஆட்சிப்பகுதியில் நிம்மதியாக வாழலாம், என்று நினைத்த மக்களின் தலை மீது மீண்டும் குண்டுகள் விழுகின்றன.

அமெரிக்காவோ, இசுரேலோ கூட தலைமீது விழும் குண்டுகளில் இருந்து தம் மக்களை பாதுகாக்க கூடிய தொழில்நுட்பத்தை அறியவில்லை. றீகன் காலத்தில் நட்சத்திர போர் என்ற ஒன்று இந்த தொழில்நுட்பத்தை விருத்தி செய்ய உருவாக்கப்பட்டது. அது வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில், தமிழ் மக்களுக்கு தனிநாடு உருவானாலும், எதிரிநாட்டின் விமானங்களும், ஏவுகணைகளும் நாளும் மக்களை கொன்றுவருவதை எப்படி தடுக்க முடியும்? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.. மக்களுக்கு தனிநாடு எப்படி இந்த எறிகணைககளில் இருந்து பாதுகாப்பு தரும்?

Link to comment
Share on other sites

  • Replies 67
  • Created
  • Last Reply

சமாதானம், போர் என்ற பதங்களில் கவனத்தை செலுத்தாமல், மக்கள் அங்கு நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் நீண்டகாலத்துக்கு வாழ என்ன வழி என்ற கேள்வியை கேட்பதே, அந்த மக்களுக்கு தேவையானதை தேடுவதாக அமையும்.

கடந்த 50 வருட உரிமை பிரச்சினையில், 20 வருடங்கள் போர்க்காலமாக அமைந்து விட்டது. சில ஆய்வாளர்கள் 'ஆசியாவின் நீண்ட உள்நாட்டுப்போர்' என்று இந்த போரை குறிப்பிடுகிறார்கள். மக்கள் மடிவதோ கூடிக்கொண்டே போகிறது. குறிப்பாக தமிழர் ஆட்சிப்பகுதியில் நிம்மதியாக வாழலாம், என்று நினைத்த மக்களின் தலை மீது மீண்டும் குண்டுகள் விழுகின்றன.

அமெரிக்காவோ, இசுரேலோ கூட தலைமீது விழும் குண்டுகளில் இருந்து தம் மக்களை பாதுகாக்க கூடிய தொழில்நுட்பத்தை அறியவில்லை. றீகன் காலத்தில் நட்சத்திர போர் என்ற ஒன்று இந்த தொழில்நுட்பத்தை விருத்தி செய்ய உருவாக்கப்பட்டது. அது வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில், தமிழ் மக்களுக்கு தனிநாடு உருவானாலும், எதிரிநாட்டின் விமானங்களும், ஏவுகணைகளும் நாளும் மக்களை கொன்றுவருவதை எப்படி தடுக்க முடியும்? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.. மக்களுக்கு தனிநாடு எப்படி இந்த எறிகணைககளில் இருந்து பாதுகாப்பு தரும்?

போர் அல்லது சமாதானம் என்னும் தனித்தனியான இரு வேறு பாதைகள் தொடங்கும் ஒரு முச்சந்தியில் எமது போராட்டம் தற்போது தடம் பதித்து நிற்கிறது. நாம் கடந்து வந்த பாதை பற்றி எமக்கு இருந்த தெளிவு தொடர்ந்து எந்த பாதையில் பயணிக்க போகிறோம் என்பதை தீர்மானிக்க முடியாத குழப்பநிலையில் இருந்து நாம் மீள எமக்கு உதவாதது ஏன்?

இதுவரை காலமும் யுத்தத்தால் நாம் ஈட்டிய முதலீடுகள் பத்திரமாக எமது அடுத்த சந்ததிக்கு முதுசமாக்கப்பட வேண்டுமெனின் சமாதானத்தின் கதவுகளை நாம் அகல திறக்க வேண்டிய வேளை இது.

தமிழீழம் எனும் தேச உருவாக்கத்துக்கு யுத்தமூலம் செய்யப்பட வேண்டிய சத்திரசிகிச்சை அனைத்து செய்தாகிவிட்டது. குழந்தையை வெளியே எடுப்பதற்கு மிகுந்த பொறுமையும் அமைதியுமே இப்போது எமக்கு அதிகமாக தேவைப்படுகிறது.

அது ஒரு நீண்ட வரலாற்றுப்பணி. அதற்குரிய முன்நிபந்தனைகளை ஆயுதப்போராட்டம் மூலம் நிறைவேற்றி முடிதாயிற்று. அடுத்த களத்தில் நாம் சமாதானம் என்ற போர் முரசை முழங்கி உலகத்தின் கவனத்தை எமக்கு சார்பாக திருப்பவேண்டிய காலகட்டம்.

சிங்களம் எமக்கெதிரான யுத்தத்தில் மட்டுமல்ல சமாதானத்திலும் தோல்வியை சந்திக்க வைக்கவேண்டும்.ஒரு அரசியல் சமாதான தீர்வுக்கு ஊடாக எமது இருப்பு காப்பாற்றப்பட வேண்டிய காலத்தின் கட்டாயம் இது. அத்தீர்வு எமது காலத்தில் கிட்டவேண்டும். அதனூடாக ஒரு அரசியல் போராட்டத்துக்குரிய குறைந்தபட்ச தமிழ் மக்கள் தொகை காப்பாற்றப்படும்.

மேற்கூறிய நிபந்தனைகளை இன்று நிராகரிப்போமால் எமது இனம் இலங்கை தீவில் முற்றாக துடைத்து அழிக்கப்படும் அவலத்துக்கு உள்ளாவோம்.

ஆக சிங்களத்துக்கு எதிரான சமாதான யுத்தத்தை தீவிரமாக முடுக்கிவிட்டு சர்வதேசத்தில் இருந்து அவர்களை தனிமைப்படுத்தி எமது தேச இருப்பபை நிலைநாட்டுவோம்.

Link to comment
Share on other sites

ஆப்கானிஸ்தானில் உள்ள துருப்புகளுக்கு கடல்வழித்துணைக்காக இந்து சமுத்திரத்தில் நிலைகொண்டுள்ள பிரித்தானிய போர்கப்பல்கள் தமது எண்ணிக்கையை மேலும் இரண்டு அதிகரித்துள்ளது. அந்த கடல் பிராந்தியத்தில் இந்திய கடற்படைகளுடன் இணைந்த கூட்டு வேலைத்திட்டதின் ஒரு பகுதி நிறைவேற்றத்துக்கே மஹிந்த அவசரமாக பிரித்தானியா வந்ததாக தற்போது தெரியவருகிறது.

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ரணில் முன்மொழிந்த புலிகளுக்கு எதிரான சர்வதேச பாதுகாப்பு வலைப்பின்னல் மஹிந்த சிந்தனைக்குள் பின் கதவால் எப்படி வந்தது

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கடந்த சில நாட்களாக களப்பிரிவுகள் - செய்திகள் - தமிழீழம் பகுதியில் சில தலைப்புகளுக்கு கீழ் எமக்கிடையிலான விவாத பொருள் தலைகீழாக மாறி '' சமாதானம்'' என்னும் புனைபெயரில் எழுதும் எனது கருத்துகள் ஒரு ''புலி எதிர்ப்பு'' வானொலியின் அலைவரிசையை ஒத்ததாக இருப்பதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகிவருகிறது.

இவ்வாறான மலிந்த விமர்சனங்கள் யாழ் களத்தில் ஒன்றும் புதிதல்ல. தமது கருத்துகளுடன் முரண்படும் ஒருவரது அரசியல் பார்வை பற்றிய தமது விமர்சனங்களை இங்கு முன் வைக்காது வெற்றுக் கோசங்களை எழுப்பும் உரையாடல் மூலம் தாம் கருத்துக் களத்தில் வெற்றி கொண்டதாக தமக்குள் பெருமிதம் கொள்ளும் மனக்கட்டமைப்பு யாழ் களத்தின் உயிர் நாடியையே உலுப்பிவிடக்கூடியது.

இது ஒரு பேராபத்தான போக்கு.

ஒரு மனிதன் தனக்குதான் கிச்சு..முச்சு செய்து தன்னைத்தான் சிரிப்பூட்டி தானாக சிரிக்கும் மன நிலையில் யாழ் களத்தில் சிலர் கருத்து எழுதுகிறார்கள்.

புலிகளின் இராணுவ வெற்றியின் இரகசியம் முன்னெப்போதும் கண்டிராத பேசப்பட்டிராத ஏன் மற்றவர்கள் நினைத்தே பார்த்திருக்காத விடயங்களை நியத்தில் நிகழ்த்திக்காட்டிய செயல் வீரத்தின் பின்புலம் '' புதியன புகுதல்'' எனும் தீராத தேடல்.

அதை விடுத்து ''புலியெதிர்ப்பு புராணங்கள்'' பாடுவது என்னவோ... சூத்திரம் சுத்தும் மாடுகளில் ஊர் போய் சேரலாமென்ற நினைப்புதான் நம்மில் பலரது பிழைப்பைக் கெடுகிறது.

Link to comment
Share on other sites

யுத்தத்தைப்போல சமாதானமும் கடினமான அரசியல் போராட்ட வழிமுறை.

ஈழப்போர்- 4 தொடங்கி சில நாட்களில் கடந்தகாலத்தில் நாம் ஒருபோதும் கண்டிராத புதிய அரசியல் இராணுவ நகர்வுகள் இலங்கை அரசியலின் பின்புலத்தில் அவதானிக்க கூடியதாக இருக்கிறது.

எதிரி விரும்பி உருவாக்கும் யுத்த களத்தில்-காலத்தில் சமாதானம் என்பது ஒரு கொரில்லா தாக்குதல் போன்றது.

ஆயுத யுத்தம் என்பது எமக்கு சாதகமான நிலையில் எம்மால் முன்னெடுக்கப்படவேண்டிய அரசியல் போர். எதிரிக்கு சாதகமான யுத்த களத்தில் அமைதி யுத்தம்தான் எமது அரசியல் போராட்டமாக இருக்க வேண்டும்

சந்திரிக்காவின் போரின் மூலம் சமாதானம் தமிழர் தரப்பால் இலகுவாக வெற்றி கொள்ளகூடியதாக இருந்ததிற்கு யுத்த களத்தில் மட்டும் அல்ல அரசியல் தளத்திலும் நாம் பலமாக இருந்தோம். அன்றைய சர்வதேச அரசியல் தமிழர் தரப்புக்கு ஆதரவாக இல்லாவிட்டாலும் சந்திரிக்கா அரசுக்கு சாதகமாக இருக்கவில்லை. ஆனால் தற்போதைய உலக அரசியல் சூழல் எமது தரப்புக்கு எதிராகமட்டும் அல்ல எதிரிக்கு சாதகமாக உள்ளது.

இந்திய அமெரிக்க உதவிகள் சிங்கள் தரப்பை முன்னெப்போதும் இல்லாத அளவு உசுப்பேத்தி உள்ளது. சிங்களம் யுத்தத்தை தெரிவு செய்துள்ள இந்த காலகட்டம் எமக்கு சாதகமாக அமைய வாய்ப்புகள் அரிதாகும்.

இது பலவீனத்தினால் வந்த முடிவு அல்ல. இது இன்றைய காலகட்டத்தின் யுத்த தந்திரோபாயமகும்.

ஆக, சமாதானம் என்பதுதான் எமக்கு முன் உள்ள சிங்கள யுத்தத்துக்கு எதிரான அரசியல் யுத்தம் ஆகும்.

புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு எமது போராட்டம் யுத்தத்திற்கு முகம் கொடுப்பதற்கு வேண்டிய உதவிகளை எந்தவகையில் செய்கிறார்களோ அதேபோல் எமது போராட்டம் சமாதானத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பதில் தெளிவில்லை. அதற்கு பிரதான காரணம் புலத்தில் உள்ள தமிழ் ஊடகங்கள் அநேகமானவை போர் குறித்து மிகைப்படுத்தியே அதிகம் பேசுகின்றன. சிங்களத்தின் வலிந்த போருக்கு தமிழர் தரப்பு எதிர்வினைகொள்வதில் உள்ள மன ஆதங்கத்தில் வெறுமனே உள்ளக்குமுறல்களை வெளியில் கொட்டிச் சிந்துவதன் பயன்கள் குறித்து எமக்கு புதிய அணுகுமுறை தேவை.

தேசியத்துக்கு சார்பான ஆங்கில ஊடகங்கள் யுத்த நேரத்தில் வெளியிடும் செய்திகளின் பொறுப்புணர்வு தமிழ் ஊடகங்களில் குறைந்தபட்சம் இருப்பதாக தெரியவில்லை.

யுத்தமும் சமாதானமும் ஒர் இரட்டைக்குழல் துப்பாக்கியில் இருந்து வெளியேறும் சமபலம் உள்ள ரவைகள் என்பது நம்மில் பலருக்கு வயித்தில் புளியைகரைக்கும் சமாச்சாரம். மாறிவரும் உலக ஒழுங்கு எமது போராட்டத்துக்கு புதிய தடைகளை புகுத்தியபோதும் தமிழர் போராட்டத்தை இன்னும் முன்நகர்த்தி செல்ல புதிய களங்களையும் திறந்து விட்டுள்ளது என்பதை நாம் ஏன் கண்டுகொள்ளத்தவறி வருகிறோம்?

யுத்தகாலத்தைப் போலல்லாது சமாதான காலத்தில் புலம்பெயர் தமிழர்கள் ஆற்றவேண்டிய பணிகள் அதிகம். அதில் இருந்து நாம் தப்புவதற்காகவே சமாதானம் பற்றி மெளனம் சாதிக்கிறோம் அல்லது சமாதானத்துக்கு எதிராக பேசுகிறோம் என்பது கசப்பான உண்மை.

போர் அல்லது சமாதானம் என்னும் தனித்தனியான இரு வேறு பாதைகள் தொடங்கும் ஒரு முச்சந்தியில் எமது போராட்டம் தற்போது தடம் பதித்து நிற்கிறது. நாம் கடந்து வந்த பாதை பற்றி எமக்கு இருந்த தெளிவு தொடர்ந்து எந்த பாதையில் பயணிக்க போகிறோம் என்பதை தீர்மானிக்க முடியாத குழப்பநிலையில் இருந்து நாம் மீள எமக்கு உதவாதது ஏன்?

இதுவரை காலமும் யுத்தத்தால் நாம் ஈட்டிய முதலீடுகள் பத்திரமாக எமது அடுத்த சந்ததிக்கு முதுசமாக்கப்பட வேண்டுமெனின் சமாதானத்தின் கதவுகளை நாம் அகல திறக்க வேண்டிய வேளை இது.

தமிழீழம் எனும் தேச உருவாக்கத்துக்கு யுத்தமூலம் செய்யப்பட வேண்டிய சத்திரசிகிச்சை அனைத்து செய்தாகிவிட்டது. குழந்தையை வெளியே எடுப்பதற்கு மிகுந்த பொறுமையும் அமைதியுமே இப்போது எமக்கு அதிகமாக தேவைப்படுகிறது.

அது ஒரு நீண்ட வரலாற்றுப்பணி. அதற்குரிய முன்நிபந்தனைகளை ஆயுதப்போராட்டம் மூலம் நிறைவேற்றி முடிதாயிற்று. அடுத்த களத்தில் நாம் சமாதானம் என்ற போர் முரசை முழங்கி உலகத்தின் கவனத்தை எமக்கு சார்பாக திருப்பவேண்டிய காலகட்டம்.

சிங்களம் எமக்கெதிரான யுத்தத்தில் மட்டுமல்ல சமாதானத்திலும் தோல்வியை சந்திக்க வைக்கவேண்டும்.ஒரு அரசியல் சமாதான தீர்வுக்கு ஊடாக எமது இருப்பு காப்பாற்றப்பட வேண்டிய காலத்தின் கட்டாயம் இது. அத்தீர்வு எமது காலத்தில் கிட்டவேண்டும். அதனூடாக ஒரு அரசியல் போராட்டத்துக்குரிய குறைந்தபட்ச தமிழ் மக்கள் தொகை காப்பாற்றப்படும்.

மேற்கூறிய நிபந்தனைகளை இன்று நிராகரிப்போமால் எமது இனம் இலங்கை தீவில் முற்றாக துடைத்து அழிக்கப்படும் அவலத்துக்கு உள்ளாவோம்.

ஆக சிங்களத்துக்கு எதிரான சமாதான யுத்தத்தை தீவிரமாக முடுக்கிவிட்டு சர்வதேசத்தில் இருந்து அவர்களை தனிமைப்படுத்தி எமது தேச இருப்பபை நிலைநாட்டுவோம்.

Link to comment
Share on other sites

ஆக சிங்களத்துக்கு எதிரான சமாதான யுத்தத்தை தீவிரமாக முடுக்கிவிட்டு சர்வதேசத்தில் இருந்து அவர்களை தனிமைப்படுத்தி எமது தேச இருப்பபை நிலைநாட்டுவோம்.

சமாதானம் என்ற மாயைக்குள்ளே இல்லாத நடுநிலமை என்ற ஒரு மாயைதோற்றத்துக்குள்ளே பேய் என்ற எதிரிகளையும் தூரோகிகளையும் வளர்த்து விடவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமாதானம் எழுதியது

தேவன் எழுதியது:

என்ன அழகாக ஒரு விடயத்தை சொன்னாலும் அதன் சாரம் புலிகளின் தலையில் குட்ட ஒருபோதுமே மறந்ததில்லை. அதுதான் சமாதானத்தின் பாணி.

பணியும்கூட

எனது கருத்துகள் நாம் ஏன் சமாதானத்தை எமது உடனடி போராட்ட முறையாக்க வேண்டுமென்பது பற்றியது.

அதில் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளான புலிகளை எந்த வகையிலும் குட்டவோ குறைசொல்லவே அகதிதமிழனான எனக்கு எந்தவித அருகதையும் இல்லை என்பதை தாழ்மையுடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

தேவனின் சந்தேகம் இப்போ தீர்ந்திருக்கும்.....??????

ஐயா சமாதானம்!

புலிகளை திருத்தம் செய்கின்ற பணி என்பது புலிவிரோதம் தன் கள்ளங்களை மறைகின்ற பணியுடையாக அல்லவா உபயோகிக்கிறது.

தவிர எம்தேசியத்துக்கு ஆக்கபூர்வமான பணிகளைத்தந்து கொண்டிருக்கும் தமிழ்உணர்வாளர் பதிவுகளுக்கு குட்டுப்போட்டு தேசியவிரோதத்தைக் கக்கும் பதிவுகளுக்கு

பரிந்தும் பதிவுத்தராதரங்களை நாட்டாமை செய்யும் உரிமையும் உங்களுக்கு யார்தந்தது.

இந்தக்களத்தின் பெருந்தன்மை. தெரிந்தும் தேசியவிரோதத்தை கக்கும் பதிவுகளுக்கும் நுளைவனுமதி தந்தமை. இந்த உரிமையை துர்உபயோகம் செய்தவதுதான் சமாதானத்தின் யோக்கியமா.

கேள்விகளால் துளைக்கப்படாத ஒரு விடையம் மேன்நிலையை அடையமுடியாது.

எனவே உங்கள் கருத்துக்களை அள்ளிவிடுங்கள், அதற்க்கு அழகாக பதிலுரைக்க பலர் இங்கே ஆயத்தமாகவே இருக்கிறார்கள். அதன் உபயோகம் உங்களுக்கு இல்லாவிடினும் அறியாதநெஞ்சங்களுக்கு புலிபற்றி நல்லவிபிராயத்தைக் கொடுக்க உதவும்

_________________

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமாதானம், போர் என்ற பதங்களில் கவனத்தை செலுத்தாமல், மக்கள் அங்கு நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் நீண்டகாலத்துக்கு வாழ என்ன வழி என்ற கேள்வியை கேட்பதே, அந்த மக்களுக்கு தேவையானதை தேடுவதாக அமையும்.

கடந்த 50 வருட உரிமை பிரச்சினையில், 20 வருடங்கள் போர்க்காலமாக அமைந்து விட்டது. சில ஆய்வாளர்கள் 'ஆசியாவின் நீண்ட உள்நாட்டுப்போர்' என்று இந்த போரை குறிப்பிடுகிறார்கள். மக்கள் மடிவதோ கூடிக்கொண்டே போகிறது. குறிப்பாக தமிழர் ஆட்சிப்பகுதியில் நிம்மதியாக வாழலாம், என்று நினைத்த மக்களின் தலை மீது மீண்டும் குண்டுகள் விழுகின்றன.

அமெரிக்காவோ, இசுரேலோ கூட தலைமீது விழும் குண்டுகளில் இருந்து தம் மக்களை பாதுகாக்க கூடிய தொழில்நுட்பத்தை அறியவில்லை. றீகன் காலத்தில் நட்சத்திர போர் என்ற ஒன்று இந்த தொழில்நுட்பத்தை விருத்தி செய்ய உருவாக்கப்பட்டது. அது வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில், தமிழ் மக்களுக்கு தனிநாடு உருவானாலும், எதிரிநாட்டின் விமானங்களும், ஏவுகணைகளும் நாளும் மக்களை கொன்றுவருவதை எப்படி தடுக்க முடியும்? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.. மக்களுக்கு தனிநாடு எப்படி இந்த எறிகணைககளில் இருந்து பாதுகாப்பு தரும்?

மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் பாணிதானா யூட் பாணி

உலகில் சிலசாவுகளுக்கு உணவேகாரணம் அதற்க்காக உண்பதை நிறுத்திவிடலாமா?

நாய்வாலில் கட்டிய தேன்கூடுபோல் சிலநாடுகள் பிரச்சினையோடு அலைகின்றன இவைதான் ஒப்பீட்டுத்தகுதிக்குரிய நாடுகளா?

Link to comment
Share on other sites

மேற்கோள்:

நாம் சமாதானத்தை அடைய கொடுக்க கூடிய விலை என்ன?

விலை எல்லாத்துக்கும் இருக்கு.......

வேணும்னா....... அதன் அதிகரிப்பை தடுக்கலாம்....

கூட இருந்தே சிங்களவனுக்கு எம்மில் யாரும் காவடி தூக்காமல் விட்டால்..! 8)

Link to comment
Share on other sites

மேற்கோள்:

நாம் சமாதானத்தை அடைய கொடுக்க கூடிய விலை என்ன?

விலை எல்லாத்துக்கும் இருக்கு.......

வேணும்னா....... அதன் அதிகரிப்பை தடுக்கலாம்....

கூட இருந்தே சிங்களவனுக்கு எம்மில் யாரும் காவடி தூக்காமல் விட்டால்..! 8)

SAMATHAANAM எழுதியது:

இலங்கை வரலாற்றில் நிகழ்ந்த ஒப்பந்தங்களை அவற்றின் கீர்த்தி கருதி கீழ்வருமாறு வரிசைப்படுத்தி கொள்ளலாம்.

1. பண்டா - செல்வா ஒப்பந்தம் : 1957

2. டட்லி - செல்வா ஒப்பந்தம் : 1965

3. மாவட்ட அபிவிருத்தி சபை : 1980

4. இலங்கை இந்திய ஒப்பந்தம் : 1987

5. யுத்தநிறுத்தம் : 1994

6. யுத்தநிறுத்த ஒப்பந்தம் : 2002

7. ஒஸ்லோ பிரகடனம் 2002

தமிழர் தேச விடுதலைப்போராட்ட வரலாற்றில் தமிழீழ தேசிய தலைவருக்கும் அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் 22/2/2002 இல் கைசாத்திடப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தம் முன்னுதாரணம் அற்றது.

இந்த ஒப்பந்தம்தான் முதல்முதலில் தமிழர் தாயகக் கோட்பாட்டை அரசியல் அர்த்தத்தில் மட்டும் அல்லாது இராணுவ வலுச்சமநிலையிலும் சர்வதேச அங்கீகாரத்துடன் ஏற்றுக்கொண்டது. புலிகளின் வரலாற்றில் தமிழ் தேசியம் உலகு தழுவி இதற்கு முன்னமும் சரி பின்னமும் சரி பேசப்பட்டது கிடையாது.

தமிழீழ நிழல் அரசும் சிங்கள அரசும் சமாந்திரமாக இலங்கைத் தீவில் ஒன்றையொன்று ஏற்றுக்கொண்டதுடன் கால் நூற்றாண்டு வயது வந்த யுத்தத்துக்கும் ஒரு முடிவு காணும் நோக்கில் 05/12/2002 இல் ஒஸ்லோ பிரகடனத்தை வெளியிட்டன.

இந்த பிரகடனத்தின் சாரம்சமாக கொள்ளகூடிய பந்தியை மீண்டும் கீழே தருகிறேன்.

Responding to a proposal by the leadership of the LTTE, the parties agreed to explore a solution founded on the principle of internal self-determination in areas of historical habitation of the Tamil-speaking peoples, based on a federal structure within a united Sri Lanka. The parties acknowledged that the solution has to be acceptable to all communities.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்தின் யோசனையொன்றுக்குப் பதிலளிக்கு முகமாக தமிழ்மொழி பேசும் மக்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வரும் பிரதேசங்களில் உள்ளக சுய நிர்ணயத்தின் மேல் நிறுவப்பட்ட தீர்வொன்றை ஐக்கிய இலங்கையினுள் சமஸ்டி அடிப்படையில் தேடுவதற்கு இக்கட்சிகள் இணக்கம் தெரிவித்தன. அத்தீர்வு சகல சமூகங்களாலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதை இக்கட்சிகள் ஒப்புக் கொள்கின்றன.

புலிகளின் இமாலய இராணுவ சாதனைகளால் எட்டப்பட்டதே இந்த பிரகடனம். ஒஸ்லோ பிரகடனம் வெளியாகி கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் உருண்டோடி விட்டன.

இந்த நான்கு ஆண்டுகளில் புலிகள் எமது தேச எல்லைகுள்ளும் இலங்கை தீவுக்குள்ளும் இந்திய உப கண்டத்துக்குள்ளும், உலக அளவிலும் சாதித்த அரசியல், இராணுவ நகர்வுகள் என்ன?

ஒப்பந்தம் கைச்சாத்தாகி 14 மாதங்களுக்குள் கருணா வெளியேற்றம்...

கடும்போக்காளரான மகிந்த ராஜபக்சவின் தேர்தல் வெற்றி.....

அடிப்படையில் புலிகளுக்கு எதிரான இந்திய வெளியுறவுக் கொள்கையின் தொடர்ச்சி...

புலிகளை தடை செய்யும் உலக அரச பட்டியலின் நீட்சி........

இராணுவரீதியில் சம்பூர் கை நழுவி போனது...முகமாலை முன்னரண் பின்வாங்க வேண்டிப்போனது..... மற்றும் ஏ9 பாதை மூடப்பட்டது.

நான்கு ஆண்டுகளில் இந்த பின்னடைவுகள் வந்தது ஏன்?

2002ஆம் ஆண்டு முடிவில் ஒஸ்லோ பிரகடனத்தின் மூலம் தமிழ் தேசியம் விளைவித்த அரசியல் வெற்றி சமாதான பாதையில் இருந்து தடம் புரண்டு போனதுக்கு அரசுதான் தனிக்காரணம் என்பதை சர்வதேசம் ஏற்றுக்கொண்டிருந்தால் எமக்கு எதிரான தடைகள் வந்திருக்கமாட்டாது.

மனித உரிமை அமைப்புகள், யுத்த நிறுத்த கண்காணிப்பு குழு, உதவி வழங்கும் நாடுகள் போன்றனவற்றுடன் ஒரு மென்மையான அணுகுமுறை சமாதான காலத்தில் பல இராஜதந்திர வெற்றிகளை நிஜமாக்கி இருக்கும்.

சமாதான பாதையில் இருந்து தமிழர் தரப்பு வெளியேறியதற்கு சிங்களம்தான் முழுபொறுப்பையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்குரிய வலுவான சாட்சியங்கள் எதனையும் சர்வதேச சமூகத்தின் கவனத்து நாம் கொண்டுவரத்தவறிவிட்டோம்.

இராணுவத்தால் செய்யப்பட்ட தமிழ் மக்கள் கொலைகளுக்கு உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளும்படி ஒரு அரசியல் நியாயப்பாட்டை உருவாக்க முயச்சிக்காமல் யுத்த பேரிகைகளுக்குகே முன்னிடம் கொடுத்த அரசியல் வறுமை எம்மை தனிமைப்படுத்திவிட்டது.

இன்னும் காலம் கடந்துவிடவில்லை. சாத்தியமான அரசியல் தீர்வு பற்றி மீண்டும் பேசத் தொடங்க ஒஸ்லோ பிரகடனத்தை ஒரு அரிசுவடி ஆவணமாகக் கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

இந்த ஒப்பந்தங்களை கிளிச்சு எறிஞ்சவன் தமிழன் இல்லை...! சிங்களவந்தான்.. ஒப்பந்ததையே மதிக்க தெரியாதவனுக்கு தெளிய வைக்க வளி ஒண்டு இருக்கு அதுதான் சரியான வளி...!

அந்த வளிதான் சமாதானம் எண்ட ஒண்டை பற்றி சிங்களவனுக்கு யோசிக்க வைச்சது...! அதேவளிதான் ஆப்கானிஸ்தானிலை அமெரிக்கனுக்கும் பிரிட்ட்னுக்கும் பாடம் நடக்குது...! பில்லியன் கணக்கில செலவளிச்சு பாடம் படிக்கினம்...!

Link to comment
Share on other sites

மேற்கோள்:

இந்த ஒப்பந்தங்களை கிளிச்சு எறிஞ்சவன் தமிழன் இல்லை...!

இதெல்லாம் யாரும் சொல்லி தந்தா- அவங்களுக்கு தெரிய வரணும் - தலைவா?

தெரிஞ்சிருக்கும் - ஆனாலும் - ஏதோ சொல்லணும்னு நினைக்கிறாங்கப்போ!

அவங்க இப்போதான் -ஒப்பந்தங்கள் - எல்லாம் நடந்தது - அப்புறம் பூட்டுகிச்சுன்னு -கேள்விபட்டு இருக்காங்களோ- என்னமோ!

விட்டுரலாம்! 8) 8

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

சமாதானம் அய்யா இங்கு சொல்ல வந்ததை பலர் குளப்பிப் போட்டியள். சொல்லவிட்டிருந்த எப்படி போயிருக்கும் என்ற கற்பனைக்கு இது நன்றாக பொருந்துகிறது.

http://sangam.org/taraki/articles/2006/10-...al.php?uid=1997

Link to comment
Share on other sites

இவர்கள் எந்த ரகம் எப்படியானவர்கள் என்று இந்த கட்டுரையில் விபரமாக எழுதியிருக்கு.

http://www.tamilnaatham.com/articles/2006/...chandran/15.htm

Link to comment
Share on other sites

கீழ் உள்ள கட்டுரையும் படிப்பதற்கு மிக்க பயன் உள்ளது.

LTTE -Tamil Tigers- and its UK-wide network

By Dominic Whiteman

LTTE was banned in the UK February 28th 2001. The annual publication of the International Institute for Strategic Studies (IISS) London 'Military Balance 2005/2006' referred to emerging links between the LTTE and the Al-Qaeda movement. It was later revealed confidentially by the editors to diplomatic sources that these links were in terms of commercial transactions including trafficking for financial gain and acquisition of technology rather than any ideological linkage. Experts are studying with interest links between the LTTE and Al-Qaeda in its financial, commercial and arms dealings. It is also believed that such links also exist in maritime transactions..............

Dominic Whiteman is spokesperson for the London-based VIGIL anti-terrorist organization an international network of terror trackers, including former intelligence officers, military personnel and experts ranging from linguistic to banking experts.

http://globalpolitician.com/articles.asp?I...2235&print=true

Link to comment
Share on other sites

உந்த உளவு அமைப்புக்கள் எழுதிற கட்டுரையள் படிக்கவும் இணைக்கவும் நேரம் இருக்கு எங்க கேட்ட கேள்வியளுக்குப் பதில்? இன்னும் பதிலைத் தேடிக் கொண்டிருகிறீரோ? இல்லை எசமானர் இன்னும் பதிலைச் சொல்ல வில்லயா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிலும், இந்தச் செய்திக்கு சிங்கள இணையத்தளங்கள் அதுவும் நேற்று நடந்த தாக்குதலை விடவும் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து போட்டிருக்கின்றன என்பதில் இருந்து விடயத்தைப் புரிந்து கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

"The annual publication of the International Institute for Strategic Studies (IISS) London 'Military Balance 2005/2006' referred to emerging links between the LTTE and the Al-Qaeda movement."

அய்யா சமாதானம் உந்த புனைக்கதைகள் எங்களுக்கு செய்திகள் அல்ல. எமது பிரச்சனை இலங்கைமயப்படுத்தப்பட்டிருந

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.