Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு லண்டன் நிலக்கீழ்த்தொடருந்தில் பயணம் செய்வதுதான் பிடிக்கவே பிடிக்காத விடயம். ஆனாலும் சிலவேளைகளில் பயணம் செய்தே தீரவேண்டிய நிர்ப்பந்தம். ஏறிக் கொஞ்ச நேரத்திலேயே பார்த்தவற்றை மீண்டும் மீண்டும் பார்ப்பதனால் தூக்கமும் விரைவில் வந்துவிடும்.

இதற்கு முன்னொருமுறை பயணம் செய்தபோது தூக்கம் எப்படித்தான் என்னைத் தழுவியதோ கண்விழித்துப் பார்த்தபோது நான் இறங்கவேண்டிய இடம் கடந்து பதினைந்து நிமிடம் ஆகியிருந்தது. பிறகென்ன அடுத்த தரிப்பிடத்தில் இறங்கி மற்றத் தொடருந்து பிடித்து வீடுவந்து சேர ஒரு மணிநேரம் தாமதம்.

இன்று தூங்காது எப்பிடியாவது சரியான நேரத்துக்குப் போய்ச் சேர வேண்டும் என்று மனதுள் தீர்மானித்தபடி சுற்றுமுற்றும் பார்க்கிறேன். பலர் செய்தித்தாள்களில் மூழ்கிப்போய் உள்ளனர். ஒரு சீனப் பெண் தலையை எவ்விதத்திலும் சரிக்காமல் நேராக இருந்து தூங்கிக் கொண்டு இருக்கிறார். அவரைப் பார்த்ததும் எனக்கும் கொஞ்சநேரம் தூங்கினால் என்ன என்ற ஆசை எழுகிறது. மனதை அடக்கியபடி மீண்டும் மற்றவர்களில் பார்வையைப் பதிக்கிறேன்.

அடுத்த தரிப்பிடத்தில் பலரும் இறங்க இருக்கைகளில் பல வெறுமையாக, ஒரு தந்தையுன் மகனும் வந்து எனக்கு முன்னால் அமர்கின்றனர். தந்தை மொட்டைத் தலையுடன் பார்க்கும் போதே அவரில் ஒரு கள்ளப் பார்வை தெரிவதுபோல் என்மனம் உணர்கிறது. மகனுக்கு ஒரூ பத்து வயதாவது இருக்கும். ஆனால் கால்களைத் தூக்கி தந்தையின் கால்களில் போட்டபடி சூப்பிப் போத்தலில் பாலை அருந்தியவாறு இருக்கிறான். அவன் பாலை அருத்துகிறானா அல்லது சும்மா வாயுள் அதை வைத்திருக்கிறானா என்பதில் எனக்குச் சந்தேகம்.

நான் childcare படிக்கும்போது பலவிதமான சிறுவர் பாலியல்த் துர்ப்பிரயோகம் பற்றி ஆசிரியை கூறியவை எல்லாம் என் கண் முன்னால் வந்து என் நின்மதியைக் கெடுக்கின்றன.

இவர்கள் உண்மையிலேயே தந்தையும் மகனும்தானா??? அல்லது இந்தப் பையனை எங்கிருந்தாவது கடத்திவந்து இவன் வைத்திருக்கிறானோ ?? அப்படியாயின் அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருந்துவிட்டுப் போவது தவறு என்று உள்மனம் கூற இவர்களைப் பற்றி அறியவே வேண்டும் என என்மனம் ஆசை கொள்கிறது. தெரியாத ஒரு அந்நிய ஆணிடம் அதுகும் எந்தவித அழகோ அன்றி நல்ல மனிதனுக்குள்ள உருவ அமைப்போ இல்லாத அவனிடம் எப்படிக் கதைப்பது என என்மனம் சண்டித்தனம் செய்கிறது.

பெரிய பெடியனாக இருக்கிறான். பாடசாலைக்குச் செல்லாது வீட்டில் இருப்பது சட்டப்படி குற்றம் என்று எண்ணியபடி அந்தப் பையனைப் பார்த்து நீ பாடசாலைக்குப் போகவில்லையா என்று கேட்கிறேன். அவன் எனக்கு எந்தப் பதிலும் சொல்லாது சூப்பிப் போத்தலை வாயில் வைத்திருக்கிறான். தந்தையைப் பார்த்தால் அவர் விளங் காததுபோல் முகத்தை வைத்துக்கொண்டு இருக்கிறார். மீண்டும் தந்தையைப் பார்த்தே கேள்வியைக் கேட்கிறேன்.

அவனோ நான் கேட்டது விளங்காததுபோல் என்ன என்கிறான் மீண்டும். உன் பிள்ளை பள்ளிக்குச் செல்வதில்லையா என்று பொறுமையை வரவழைத்துக்கொண்டு மீண்டும் கேட்கிறேன். அந்தச் சிறுவன் நேராக இருப்பதற்கு முயற்சி செய்கிறான். அவனோ அப்பையனை அப்படி இருக்க விடாது கால்களை தன் கால்களின் மேல் இழுத்து வைப்பதுமாக சிறுவன் மீண்டும் முயல்வதுமாக சிறுவன் என்ன விடு விடு என்று கூறியபடி கால்களை இழுக்கிறான். அவனோ விட்டபாடு இல்லை. பார்த்துக்கொண்டு இருந்த எனக்கு என்கால்களை அவன் இழுத்து வைப்பதுபோல் இருக்க, ஏன் அவனைத் தடுக்கிறாய். நேராக இருக்க விடு என்கிறேன்.

அவன் கோபத்துடன் புரியாத மொழியில் எதோ சொல்கிறான். அவனுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில் சிறுவன் என்னை விடு என்று ஆங்கிலத்தில்த்தான் கூறினான். இவன் ஏன் வேறு மொழி பேசுகிறான் என்று எண்ணியவாறே உனக்கு ஆங்கிலம் தெரியாதா என்கிறேன். அவன் மீண்டும் அந்த மொழியிலேயே எதோ சொல்ல எனக்குக் கோவம் வருகிறது.

இப்பொழுது அந்தப் பெட்டியில் நானும் அவர்களும்தான். அவன் சிறுவனிடம் குனிந்து காதுக்குள் குசுகுசுக்கிறான். எனக்கு இவன் என்ன சொல்கிறான். பாவம் அந்தப் பையனை இவன் தவறாகத்தான் பயன்படுத்துகிரான்போல என்று எண்ணியபடி இவன் உன் மகனா என்று அவனைக் கேட்கிறேன். அவன் எந்தப் பதிலும் கூறாது எங்கோ பார்க்கிறான். நான் சிறுவனைப் பார்த்து இவர் உன் அப்பாவா என்று கேட்கிறேன். சிறுவன் இல்லை என்று தலை ஆட்டியவன் அவன் எதோ உறுக்க மீண்டும் ஓம் என்று மேலும் கீழுமாய்த் தலையை நிறுத்தாமல் ஆட்டுகிறான்.

ஒரு குற்றத்தைக் கண்டாலோ அல்லது சந்தேகம் கொண்டாலோ அதுபற்றி உரியவர்களிடம் அறிவிக்க வேண்டியது ஒவ்வொருப்வரின் கடமை. எனக்கு இவன் நேர்மை இல்லை என்று மனம் சொல்கிறது. ஆனாலும் அதை எப்படி நிரூபிப்பது என்று தெரியாமல் யோசனையுடன் இருக்கிறேன். மீண்டும் அவனைப் பார்த்து நீ எங்கே வசிக்கிறாய் என்று கேட்கிறேன். அவன் எதோ திட்டிவிட்டு அந்தப் பையனை இறுக்க அணைத்தபடி என்னைப் பார்ப்பதைத் தவிர்த்து அமர்ந்திருக்கிறான்.

இன்று இவனை விடுவதில்லை என்று மனதில் எண்ணிக்கொண்டு சில திட்டங்களைப் போடுகிறேன். ஆனாலும் மனதில் ஒரு படபடப்பும் கூட ஒட்டிக் கொள்கிறது. அவர்கள் இருவரையுமே பார்த்துக்கொண்டு இருக்கிறேன். ஒருமுறை என்பக்கம் திரும்பிப் பார்த்தவன் நான் அவர்களையே பார்ப்பதை கண்டதும் சடாரெனத் தலையைத் திருப்பிக் கொள்கிறான்.

அடுத்த தரிப்பு வந்ததும் எதிர்பாராது பையனை இழுத்துக்கொண்டு அவன் இறங்க நானும் விரைந்து என் கைப்பையைத் தூக்கியபடி பின்னால் இறங்குகிறேன். பையனுடன் விடுவிடு என்று கொஞ்சத்தூரம் சென்றவன் திரும்பிப் பார்க்கிறான். நான் வருவதைக் கண்டதும் அவனின் நடை துரிதமாகிறது. அவனை எப்படியும் தவறவிடக்கூடாது என்னும் ஆர்வத்தில் நானும் ஓட்டமும் நடையுமாகச் செல்கிறேன். எப்படியாவது வெளியே வந்தவுடன் போலிசுக்கு போன் செய்துவிட்டு அவனைப் பின்தொடர்ந்து செல்வது தான் என் திட்டம். அதனால் மற்ற எதுவும் கண்ணில் படவிடாது அவனையே பார்த்தபடி தொடர்கிறேன்.

எப்படியும் நகரும் படிக்கட்டில் வைத்து அவனைப் பிடித்துவிடலாம் என்று எண்ணியபடி அந்த திருப்பத்தில் திரும்ம எதுவோ என்னில் வேகமாக மோத, கைப்பை ஒருபுறமும் ஒரு காலணி ஒருபுறமும் போக விழ இருந்த என்னை ஒரு காப்பிலி இழுத்து நிறுத்துகிறான். என்னை இடித்துவிட்டு தொடருத்தைப் பிடிக்க ஓடிய வெள்ளையும் சொறி சொல்லிவிட்டு மீண்டும் ஓட, நான் காலனியை எடுத்து அணிந்துகொண்டு கைப்பையையும் எடுக்கிறேன். 

அதன் பின்தான் எனக்கு முதல் விடயம் நினைவுக்குவர விரைந்து சென்று படிகளில் தாவித்தாவி ஏறி பிரயாணச் சீட்டை அழுத்திவிட்டு வெளியே வந்தால் தேர்த்திருவிழா போல மக்கள் கூட்டம்.

Link to comment
Share on other sites

இது சிறுகதை!!! அருமை. பாராட்டுகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பவத்தை விறுவிறுப்பாக எழுதிய சுமேரியருக்குப் பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

கதை விறுவிறுப்பாக இருந்தது.. இன்னும் முடியவில்லைதானே?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 தேர்த்திருவிழா போல மக்கள் கூட்டம்............  என்ன நடந்தது ... பிடிபட்டுவிடானா ? 

Link to comment
Share on other sites

நல்ல கதை சுமோ ,மிஸ்கின் ரசிகை ஆகிவிட்டீர்கள் போலிருக்கு .

Link to comment
Share on other sites

சுமே அக்காவின் கதைகளில் இது ஒரு பரிமாணம் :)

நன்றாக இருக்கு! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:D எப்பிடித் தான் இப்படி பக்கத்தில இருக்கிறவனயெல்லாம் சந்தேகப் பட்டுக் கொண்டு நிம்மதியில்லாமல் சீவிக்கிறீங்களோ தெரியாது! ஒருத்தன்  உங்கள் பார்வைக்கு உவப்பாக இல்லா விட்டால் அவன் கிரிமினல் தான் போல! பின் பக்க சீட்டில கோட் சூட் போட்டுக் கொண்டு ஒருத்தன் குழந்தையைக் கடத்திக் கொண்டு போயிருப்பான்! கண்டிருந்தாலும் கோட் சூட்டோட போற  கீரோ எண்டு பேசாமல் போயிருப்பீங்கள் போல! நல்ல vigilante தான் போங்கோ!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பதிந்த சோழியன், அலை,வாத்தியார், இசை, கரன், நிலா அக்கா, நுணா, அர்யுன், கவிதை, ஜஸ்டின் ஆகிய உறவுகளே நன்றி. நாளைக்குத் தொடரும் கவலை வேண்டாம். :D :D

Link to comment
Share on other sites

நாளைக்குத் தொடரும் கவலை வேண்டாம். :D :D

 

எப்பிடித் தான் உங்களுக்கு மனம் வருகுதோ தெரியாது எங்களைக் காக்திருக்கச் சொல்ல நாளை வரை! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சனக்கூட்டத்துக்க அவனை எங்க தேடித் பிடிக்கிறது. திரும்பிப் போவமோ என்று எண்ணிய மனதை இழுத்து நிறுத்தி, இந்து அவனை ஒருகை பாக்காமல் போறேல்லை என்னும் முடிவுக்கு வந்து சனத்துக்குள் இறங்குகிறேன்.

எனக்கோ இந்த இடம் புதிது. இன்றுதான் முதல் முதல் வருகிறேன். சரி இருக்கவே இருக்கு வாய் என்று எண்ணிக்கொண்டு வலதுபக்க வீதிக்கு விரைந்து சென்று பார்க்கிறேன் அவன் என் கண்களுக்குத் தென்படவில்லை. நேரம் நிறைய ஆகவில்லை. ஆதலால் அவன் நிறையத் தூரம் சென்றிருக்க முடியாது. திரும்பி இடது பக்க வீதியைக் குறிவைத்து விரைகிறேன்.

விரைவாக நடந்ததில் மூச்சு வாங்குகிறது. இரண்டு மூன்றுபேரிடம் கால் கைகளில் இடித்ததில் திட்டு வாங்கியபடி அசட்டுச் சிரிப்புடன் மன்னிக்கவும் என்று சொல்லிக்கொண்டு கிட்டத்தட்ட ஓடுகிறேன். தூரத்தில் அவன் போவது தெரிகிறது. மனதில் படபடப்பும் கூடுகிறது. அவன் என்னைப் பார்க்கக் கூடாது என்று எண்ணிக்கொண்டு ஒரு இடைவெளியை வைத்துக்கொண்டே நடக்கிறேன்.

என் கெட்ட காலம் தற்செயலாகத் திரும்பியவன் என்னைக் கண்டுவிட்டான். இப்பொழுது அவன் ஓட்டமும் நடையுமாகப் போகிறான். அந்தப் பையன் நடக்க முடியாமல் கைகளைப் பின்னுக்கு இழுக்க இழுக்க இஅவனும் எதோ திட்டித் திட்டிக் கொண்டே கொற இழுவையில் பையனைக் கொண்டு போகிறான்.

எதற்கும் போலிசுக்கு போன் செய்துகொண்டே அவனைத்துரத்துவோம் என எண்ணிக்கொண்டே கைப்பையைத் திறந்து என் போனை எடுக்கிறேன். போனை இயக்கினால் இயங்கவில்லை. என்ன இது சரியாகத்தானே இருந்தது போன் என்று எண்ணிக்கொண்டு மீண்டும் போனை உயிர்ப்பிக்க முயல்கிறேன். லோ சாச் என்று சொல்லிவிட்டு மீண்டும் போன் நின்றுவிடுகிறது.

இப்பொழுது அவனுக்கும் எனக்குமான இடைவெளி கூடியிருந்தது. எனக்குப் பதட்டம் அதிகரிக்க பக்கத்தில் போனவன் ஒருவனை நிறுத்தி ஒருக்கா போலிசுக்குப் போன் செய்கிறாயா என்று கேட்கிறேன். ஏன் என்று கேட்கிறான். அதில் போகும் ஒருவன் ஒரு சிறுவனைக் கடத்திக்கொண்டு போகிறான். உடனே பொலிசுக்குச் சொல்லு நான் அவனைத் தொடர்கிறேன் என்று கூற உனக்கு என்ன பயித்தியமா என்று சொல்லிவிட்டு பயித்தியங்களைப் பார்த்துச் சிரிப்பதுபோல் என்னை நக்கலாகப் பார்த்துச் சிரித்துவிட்டு அவன் போய்விட்டான்.

எனக்கு கோவம் ஒருபுறம். அவமானம் ஒருபுறம், அவனை விடக்கூடாது என்று ஒருபுறம் வீதியைப் பார்க்கிறேன். அவனைக் காணவில்லை. அட வீணாக இவனிடம் கதைத்து அவனைக் கோட்டை விட்டுவிட்டேனே என அங்கலாய்ப்புடன் ஓடுகிறேன். வீதி மேம்பாலம் ஒன்றில் அவன் தலை தெரிகிறது. அவன் பாலத்தால் இறங்குமுன் அவனைப் பிடித்துவிடவேண்டும் என்னும் வெறி எழுகிறது.

நான் பாலத்தால் ஏறி இறங்க அவன் எப்படியும் தப்பிப் போய்விடுவான். அவனை விடக்கூடாது என்றபடி வீதியைக் கடப்போம் என எண்ணினால் வீதியில் இரு மருங்கும் ஆட்கள் கடக்காதவாறு இரும்புத் தடை போட்டுள்ளார்கள். என்னதான் செய்வது என்று ஒரு செக்கன்தான் எண்ணியிருப்பேன் என்ன ஆனாலும் சரி என எண்ணியபடி இரும்புத் தடைக்கு மேலால் ஏறி வீதியில் இறங்க வாகனங்கள் விரைவாகச் சென்றுகொண்டிருக்கின்றன. ஐயோ அவன் இறங்கிறானே. விட்டால் போய்விடுவான் என்னும் பதட்டத்தில் இடையில் புகுந்து வாகனச் சாரதிகளின் காது கிழியும் கோர்ன் சத்தத்தையும் சட்டை செய்யாது ஓடிவருக்கிறேன். அந்தப்பக்கம் இருந்ததுபோல் ஏறுவதற்கு வசதியாகக் கம்பிகள் இல்லை.

அவனோ கீழே வந்துவிட்டான். அவனைப் பிடியுங்கள் அவனைப் பிடியுங்கள். அவன் அந்தச் சிறுவனைக் கடத்திக்கொண்டு போகிறான் என்று கத்துகிறேன். யாரும் நான் கூறுவதை நம்பியதுபோல் தெரியவில்லை. அவன் போகும் பக்கமாகவே வீதியின் கரையாக ஓடுகிறேன். அவனும் இப்ப ஓட ஆரம்பித்துவிடான். திடகாத்திரமான ஒரு ஆபிரிக்க இனத்தவன் வருகிறான். அவனை நிப்பாட்டு என்கிறேன். அவனோ எதற்கு என்று என்னையும் அவனையும் மாறிமாறிப் பார்க்கிறான்.

இவனுக்குச் சொல்லி விளங்கப்படுத்த முடியாது என்று எண்ணி, எனக்கு அந்தப் பக்கம் வர உதவி செய் என்று கேட்க அவனும் என் கைகளைப் பிடித்து வா என்கிறான். நான் கால் ஊன்றி ஏறுவதற்கு வசதியாக ஏதும் இல்லை. அவன் அதை விளங்கிக் கொண்டு தான் பாய்ந்து இந்தப் பக்கம் வருகிறான். என் இடுப்பின் இரு பக்கமும் என்னைப் பிடித்து அந்தப் பக்கம் தூக்கி விடுகிறான்.

நான் அவனுக்கு நன்றி கூடச் சொல்லாமல் தலைதெறிக்க ஓடுகிறேன். நான் சிறுவயதில்  விளையாட்டுப் போட்டிகளில் ஓடியவை எல்லாம் என் நினைவில் வந்து என்னை விரைந்து ஓடச் செய்கின்றன. நான் அவனை அண்மித்துவிட்டேன். என் களைப்பையும் பொருட்படுத்தாது நில்லு என்று கத்தியபடி இரண்டு கைகளாலும் அவனை எட்டிப் பிடிக்கிறேன். 

கேய் என்று யாரோ என்னைப் பிடித்து உலுப்புகிறார்கள். நான் திடுக்கிட்டுக் கண்விழிக்கிறேன்.ரெயின் இதுக்கு மிஞ்சிப்  போகாது இறங்கு என்று மஞ்சள் உடை போட்ட ஒருவன் எனக்குக் கூறுகிறான். அட நான் இத்தனை நேரமும் கண்டது கனவா என்னும் ஏமாற்றம் என்னைத் தழுவ, சோர்வுடன் இறங்குகிறேன்.

இறங்கியபின் பார்த்ததால் நான் இறங்கவேண்டிய இருப்பிடம்  கழிந்து ஒரு மணிநேரம் ஆகியிருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழமை போலவே தொடக்கமும் முடிவும் வாசித்து விட்டேன். இனித்தான் நடுவால வாசிக்கவேணும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையை நகர்த்திய விதமும், கடுப்பேத்த்திய விதமும் நல்லாயிருக்கு! :icon_idea:

 

நான் உங்கட பிக்காடில்லி லயினில ஏறி, Cockfosters  தரிப்பிடத்தில, ரயிலைத் துப்புரவு செய்யிற ஆக்கள், நித்திரையால எழுப்பி, வெளியால கொண்டுவந்து விட்ட கதையும் இருக்கு! :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழமை போலவே தொடக்கமும் முடிவும் வாசித்து விட்டேன். இனித்தான் நடுவால வாசிக்கவேணும்

 

இதில் ஒரு பந்தி எழுதும்போது உங்கள் ஞாபகம்தான் வந்தது நந்தன். நீங்கள் சொல்லாமலேயே நீங்கள் முழுவதும் வாசிக்கவில்லை என்று தெரிகிறது.

 

Link to comment
Share on other sites

முதல் பாகத்தை படித்த பொழுது, இது உண்மையாக இருக்கலாம் என்று நம்பினேன். இரண்டாம் பாகத்தை படிக்கும் போதே புரிந்து விட்டது, இது கனவு என்று.

ஒரு திடகாத்திரமான ஆபிரிக்கன் உங்கள் இடுப்பை பிடித்து தூக்கியதாக நீங்கள் கனவில் கண்ட காட்சி ஆராயத்தக்கது :-)

Link to comment
Share on other sites

நல்லவேளை கனவா போட்டுது நான் பயந்து போனன் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையை நகர்த்திய விதமும், கடுப்பேத்த்திய விதமும் நல்லாயிருக்கு! :icon_idea:

 

நான் உங்கட பிக்காடில்லி லயினில ஏறி, Cockfosters  தரிப்பிடத்தில, ரயிலைத் துப்புரவு செய்யிற ஆக்கள், நித்திரையால எழுப்பி, வெளியால கொண்டுவந்து விட்ட கதையும் இருக்கு! :o

 

அந்தக் கதையையும் எழுதிறதுதானே புங்கை.

 

நல்லவேளை கனவா போட்டுது நான் பயந்து போனன் :lol:

 

உங்களையே கலைச்சனான். :lol:  :lol:  நீங்கள் எதுக்குப் பயப்பிட வேணும் ????

 

முதல் பாகத்தை படித்த பொழுது, இது உண்மையாக இருக்கலாம் என்று நம்பினேன். இரண்டாம் பாகத்தை படிக்கும் போதே புரிந்து விட்டது, இது கனவு என்று.

ஒரு திடகாத்திரமான ஆபிரிக்கன் உங்கள் இடுப்பை பிடித்து தூக்கியதாக நீங்கள் கனவில் கண்ட காட்சி ஆராயத்தக்கது :-)

 

:D :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அவன் அதை விளங்கிக் கொண்டு தான் பாய்ந்து இந்தப் பக்கம் வருகிறான். என் இடுப்பின் இரு பக்கமும் என்னைப் பிடித்து அந்தப் பக்கம் தூக்கி விடுகிறான்
தொடர் கனவுக்கு நன்றிகள்......ஒரெ வித்தியாசமான கனவா காண்கிறீர்கள்
Link to comment
Share on other sites

முதலாவது பகுதியோடே நிறுத்தி இருக்கலாம். கதைக்கான விடயம், பாத்திரங்களின் விவரிப்பு, சூழலின் சித்தரிப்பு, முடிவில் சிறு திருப்பம் என முழுமையான ஒரு சிறுகதைக்கான அம்சங்கள் யாவும் அதில் இருந்தன. அதனால்தான் அதை சிறுகதை எனக் குறிப்பிட்டேன். 2ஆம் பகுதியை போட்டு...???  :wub:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர் கனவுக்கு நன்றிகள்......ஒரெ வித்தியாசமான கனவா காண்கிறீர்கள்

 

கனவில வந்ததைச் சொன்னன். :D

 

Link to comment
Share on other sites

போனை இயக்கினால் இயங்கவில்லை. என்ன இது சரியாகத்தானே இருந்தது போன் என்று எண்ணிக்கொண்டு மீண்டும் போனை உயிர்ப்பிக்க முயல்கிறேன். லோ சாச் என்று சொல்லிவிட்டு மீண்டும் போன் நின்றுவிடுகிறது. ////

 

ஒரு முற்றிலும் மாறுபட்ட கட்டத்திற்கு உங்கள் அக்கம் செல்கின்றதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன் . அதே வேளையில் கதை சொல்லும்பொழுது நம்பகத்தன்மையையும் கவனத்தில் எடுப்பது நன்று . இன்றைய கைத்தொலைபேசிகள் யாவுமே உள்ளுர் அவசரத்தொலைபேசி அழைப்புகள் மற்றும் ஐரோப்பிய அவசரத்தொலைபேசி அழைப்புகள் ( 112 ) அவை எந்த நிலையிலும் இருக்கும் பொழுதும் இயங்கத்தக்கவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன . நல்ல கதையைத் தந்த சுமேரியருக்குப் பாராட்டுக்கள் :) :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போனை இயக்கினால் இயங்கவில்லை. என்ன இது சரியாகத்தானே இருந்தது போன் என்று எண்ணிக்கொண்டு மீண்டும் போனை உயிர்ப்பிக்க முயல்கிறேன். லோ சாச் என்று சொல்லிவிட்டு மீண்டும் போன் நின்றுவிடுகிறது. ////

 

ஒரு முற்றிலும் மாறுபட்ட கட்டத்திற்கு உங்கள் அக்கம் செல்கின்றதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன் . அதே வேளையில் கதை சொல்லும்பொழுது நம்பகத்தன்மையையும் கவனத்தில் எடுப்பது நன்று . இன்றைய கைத்தொலைபேசிகள் யாவுமே உள்ளுர் அவசரத்தொலைபேசி அழைப்புகள் மற்றும் ஐரோப்பிய அவசரத்தொலைபேசி அழைப்புகள் ( 112 ) அவை எந்த நிலையிலும் இருக்கும் பொழுதும் இயங்கத்தக்கவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன . நல்ல கதையைத் தந்த சுமேரியருக்குப் பாராட்டுக்கள் :) :) .

 

மின்கலம் சுத்தமாக சக்தியிழந்த பிறகும் வேலை செய்யுமா? இது நம்ப முடியாமல் இருக்கு!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.