Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு லண்டன் நிலக்கீழ்த்தொடருந்தில் பயணம் செய்வதுதான் பிடிக்கவே பிடிக்காத விடயம். ஆனாலும் சிலவேளைகளில் பயணம் செய்தே தீரவேண்டிய நிர்ப்பந்தம். ஏறிக் கொஞ்ச நேரத்திலேயே பார்த்தவற்றை மீண்டும் மீண்டும் பார்ப்பதனால் தூக்கமும் விரைவில் வந்துவிடும்.

இதற்கு முன்னொருமுறை பயணம் செய்தபோது தூக்கம் எப்படித்தான் என்னைத் தழுவியதோ கண்விழித்துப் பார்த்தபோது நான் இறங்கவேண்டிய இடம் கடந்து பதினைந்து நிமிடம் ஆகியிருந்தது. பிறகென்ன அடுத்த தரிப்பிடத்தில் இறங்கி மற்றத் தொடருந்து பிடித்து வீடுவந்து சேர ஒரு மணிநேரம் தாமதம்.

இன்று தூங்காது எப்பிடியாவது சரியான நேரத்துக்குப் போய்ச் சேர வேண்டும் என்று மனதுள் தீர்மானித்தபடி சுற்றுமுற்றும் பார்க்கிறேன். பலர் செய்தித்தாள்களில் மூழ்கிப்போய் உள்ளனர். ஒரு சீனப் பெண் தலையை எவ்விதத்திலும் சரிக்காமல் நேராக இருந்து தூங்கிக் கொண்டு இருக்கிறார். அவரைப் பார்த்ததும் எனக்கும் கொஞ்சநேரம் தூங்கினால் என்ன என்ற ஆசை எழுகிறது. மனதை அடக்கியபடி மீண்டும் மற்றவர்களில் பார்வையைப் பதிக்கிறேன்.

அடுத்த தரிப்பிடத்தில் பலரும் இறங்க இருக்கைகளில் பல வெறுமையாக, ஒரு தந்தையுன் மகனும் வந்து எனக்கு முன்னால் அமர்கின்றனர். தந்தை மொட்டைத் தலையுடன் பார்க்கும் போதே அவரில் ஒரு கள்ளப் பார்வை தெரிவதுபோல் என்மனம் உணர்கிறது. மகனுக்கு ஒரூ பத்து வயதாவது இருக்கும். ஆனால் கால்களைத் தூக்கி தந்தையின் கால்களில் போட்டபடி சூப்பிப் போத்தலில் பாலை அருந்தியவாறு இருக்கிறான். அவன் பாலை அருத்துகிறானா அல்லது சும்மா வாயுள் அதை வைத்திருக்கிறானா என்பதில் எனக்குச் சந்தேகம்.

நான் childcare படிக்கும்போது பலவிதமான சிறுவர் பாலியல்த் துர்ப்பிரயோகம் பற்றி ஆசிரியை கூறியவை எல்லாம் என் கண் முன்னால் வந்து என் நின்மதியைக் கெடுக்கின்றன.

இவர்கள் உண்மையிலேயே தந்தையும் மகனும்தானா??? அல்லது இந்தப் பையனை எங்கிருந்தாவது கடத்திவந்து இவன் வைத்திருக்கிறானோ ?? அப்படியாயின் அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருந்துவிட்டுப் போவது தவறு என்று உள்மனம் கூற இவர்களைப் பற்றி அறியவே வேண்டும் என என்மனம் ஆசை கொள்கிறது. தெரியாத ஒரு அந்நிய ஆணிடம் அதுகும் எந்தவித அழகோ அன்றி நல்ல மனிதனுக்குள்ள உருவ அமைப்போ இல்லாத அவனிடம் எப்படிக் கதைப்பது என என்மனம் சண்டித்தனம் செய்கிறது.

பெரிய பெடியனாக இருக்கிறான். பாடசாலைக்குச் செல்லாது வீட்டில் இருப்பது சட்டப்படி குற்றம் என்று எண்ணியபடி அந்தப் பையனைப் பார்த்து நீ பாடசாலைக்குப் போகவில்லையா என்று கேட்கிறேன். அவன் எனக்கு எந்தப் பதிலும் சொல்லாது சூப்பிப் போத்தலை வாயில் வைத்திருக்கிறான். தந்தையைப் பார்த்தால் அவர் விளங் காததுபோல் முகத்தை வைத்துக்கொண்டு இருக்கிறார். மீண்டும் தந்தையைப் பார்த்தே கேள்வியைக் கேட்கிறேன்.

அவனோ நான் கேட்டது விளங்காததுபோல் என்ன என்கிறான் மீண்டும். உன் பிள்ளை பள்ளிக்குச் செல்வதில்லையா என்று பொறுமையை வரவழைத்துக்கொண்டு மீண்டும் கேட்கிறேன். அந்தச் சிறுவன் நேராக இருப்பதற்கு முயற்சி செய்கிறான். அவனோ அப்பையனை அப்படி இருக்க விடாது கால்களை தன் கால்களின் மேல் இழுத்து வைப்பதுமாக சிறுவன் மீண்டும் முயல்வதுமாக சிறுவன் என்ன விடு விடு என்று கூறியபடி கால்களை இழுக்கிறான். அவனோ விட்டபாடு இல்லை. பார்த்துக்கொண்டு இருந்த எனக்கு என்கால்களை அவன் இழுத்து வைப்பதுபோல் இருக்க, ஏன் அவனைத் தடுக்கிறாய். நேராக இருக்க விடு என்கிறேன்.

அவன் கோபத்துடன் புரியாத மொழியில் எதோ சொல்கிறான். அவனுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில் சிறுவன் என்னை விடு என்று ஆங்கிலத்தில்த்தான் கூறினான். இவன் ஏன் வேறு மொழி பேசுகிறான் என்று எண்ணியவாறே உனக்கு ஆங்கிலம் தெரியாதா என்கிறேன். அவன் மீண்டும் அந்த மொழியிலேயே எதோ சொல்ல எனக்குக் கோவம் வருகிறது.

இப்பொழுது அந்தப் பெட்டியில் நானும் அவர்களும்தான். அவன் சிறுவனிடம் குனிந்து காதுக்குள் குசுகுசுக்கிறான். எனக்கு இவன் என்ன சொல்கிறான். பாவம் அந்தப் பையனை இவன் தவறாகத்தான் பயன்படுத்துகிரான்போல என்று எண்ணியபடி இவன் உன் மகனா என்று அவனைக் கேட்கிறேன். அவன் எந்தப் பதிலும் கூறாது எங்கோ பார்க்கிறான். நான் சிறுவனைப் பார்த்து இவர் உன் அப்பாவா என்று கேட்கிறேன். சிறுவன் இல்லை என்று தலை ஆட்டியவன் அவன் எதோ உறுக்க மீண்டும் ஓம் என்று மேலும் கீழுமாய்த் தலையை நிறுத்தாமல் ஆட்டுகிறான்.

ஒரு குற்றத்தைக் கண்டாலோ அல்லது சந்தேகம் கொண்டாலோ அதுபற்றி உரியவர்களிடம் அறிவிக்க வேண்டியது ஒவ்வொருப்வரின் கடமை. எனக்கு இவன் நேர்மை இல்லை என்று மனம் சொல்கிறது. ஆனாலும் அதை எப்படி நிரூபிப்பது என்று தெரியாமல் யோசனையுடன் இருக்கிறேன். மீண்டும் அவனைப் பார்த்து நீ எங்கே வசிக்கிறாய் என்று கேட்கிறேன். அவன் எதோ திட்டிவிட்டு அந்தப் பையனை இறுக்க அணைத்தபடி என்னைப் பார்ப்பதைத் தவிர்த்து அமர்ந்திருக்கிறான்.

இன்று இவனை விடுவதில்லை என்று மனதில் எண்ணிக்கொண்டு சில திட்டங்களைப் போடுகிறேன். ஆனாலும் மனதில் ஒரு படபடப்பும் கூட ஒட்டிக் கொள்கிறது. அவர்கள் இருவரையுமே பார்த்துக்கொண்டு இருக்கிறேன். ஒருமுறை என்பக்கம் திரும்பிப் பார்த்தவன் நான் அவர்களையே பார்ப்பதை கண்டதும் சடாரெனத் தலையைத் திருப்பிக் கொள்கிறான்.

அடுத்த தரிப்பு வந்ததும் எதிர்பாராது பையனை இழுத்துக்கொண்டு அவன் இறங்க நானும் விரைந்து என் கைப்பையைத் தூக்கியபடி பின்னால் இறங்குகிறேன். பையனுடன் விடுவிடு என்று கொஞ்சத்தூரம் சென்றவன் திரும்பிப் பார்க்கிறான். நான் வருவதைக் கண்டதும் அவனின் நடை துரிதமாகிறது. அவனை எப்படியும் தவறவிடக்கூடாது என்னும் ஆர்வத்தில் நானும் ஓட்டமும் நடையுமாகச் செல்கிறேன். எப்படியாவது வெளியே வந்தவுடன் போலிசுக்கு போன் செய்துவிட்டு அவனைப் பின்தொடர்ந்து செல்வது தான் என் திட்டம். அதனால் மற்ற எதுவும் கண்ணில் படவிடாது அவனையே பார்த்தபடி தொடர்கிறேன்.

எப்படியும் நகரும் படிக்கட்டில் வைத்து அவனைப் பிடித்துவிடலாம் என்று எண்ணியபடி அந்த திருப்பத்தில் திரும்ம எதுவோ என்னில் வேகமாக மோத, கைப்பை ஒருபுறமும் ஒரு காலணி ஒருபுறமும் போக விழ இருந்த என்னை ஒரு காப்பிலி இழுத்து நிறுத்துகிறான். என்னை இடித்துவிட்டு தொடருத்தைப் பிடிக்க ஓடிய வெள்ளையும் சொறி சொல்லிவிட்டு மீண்டும் ஓட, நான் காலனியை எடுத்து அணிந்துகொண்டு கைப்பையையும் எடுக்கிறேன். 

அதன் பின்தான் எனக்கு முதல் விடயம் நினைவுக்குவர விரைந்து சென்று படிகளில் தாவித்தாவி ஏறி பிரயாணச் சீட்டை அழுத்திவிட்டு வெளியே வந்தால் தேர்த்திருவிழா போல மக்கள் கூட்டம்.

Link to comment
Share on other sites

இது சிறுகதை!!! அருமை. பாராட்டுகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பவத்தை விறுவிறுப்பாக எழுதிய சுமேரியருக்குப் பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

கதை விறுவிறுப்பாக இருந்தது.. இன்னும் முடியவில்லைதானே?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 தேர்த்திருவிழா போல மக்கள் கூட்டம்............  என்ன நடந்தது ... பிடிபட்டுவிடானா ? 

Link to comment
Share on other sites

நல்ல கதை சுமோ ,மிஸ்கின் ரசிகை ஆகிவிட்டீர்கள் போலிருக்கு .

Link to comment
Share on other sites

சுமே அக்காவின் கதைகளில் இது ஒரு பரிமாணம் :)

நன்றாக இருக்கு! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:D எப்பிடித் தான் இப்படி பக்கத்தில இருக்கிறவனயெல்லாம் சந்தேகப் பட்டுக் கொண்டு நிம்மதியில்லாமல் சீவிக்கிறீங்களோ தெரியாது! ஒருத்தன்  உங்கள் பார்வைக்கு உவப்பாக இல்லா விட்டால் அவன் கிரிமினல் தான் போல! பின் பக்க சீட்டில கோட் சூட் போட்டுக் கொண்டு ஒருத்தன் குழந்தையைக் கடத்திக் கொண்டு போயிருப்பான்! கண்டிருந்தாலும் கோட் சூட்டோட போற  கீரோ எண்டு பேசாமல் போயிருப்பீங்கள் போல! நல்ல vigilante தான் போங்கோ!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பதிந்த சோழியன், அலை,வாத்தியார், இசை, கரன், நிலா அக்கா, நுணா, அர்யுன், கவிதை, ஜஸ்டின் ஆகிய உறவுகளே நன்றி. நாளைக்குத் தொடரும் கவலை வேண்டாம். :D :D

Link to comment
Share on other sites

நாளைக்குத் தொடரும் கவலை வேண்டாம். :D :D

 

எப்பிடித் தான் உங்களுக்கு மனம் வருகுதோ தெரியாது எங்களைக் காக்திருக்கச் சொல்ல நாளை வரை! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சனக்கூட்டத்துக்க அவனை எங்க தேடித் பிடிக்கிறது. திரும்பிப் போவமோ என்று எண்ணிய மனதை இழுத்து நிறுத்தி, இந்து அவனை ஒருகை பாக்காமல் போறேல்லை என்னும் முடிவுக்கு வந்து சனத்துக்குள் இறங்குகிறேன்.

எனக்கோ இந்த இடம் புதிது. இன்றுதான் முதல் முதல் வருகிறேன். சரி இருக்கவே இருக்கு வாய் என்று எண்ணிக்கொண்டு வலதுபக்க வீதிக்கு விரைந்து சென்று பார்க்கிறேன் அவன் என் கண்களுக்குத் தென்படவில்லை. நேரம் நிறைய ஆகவில்லை. ஆதலால் அவன் நிறையத் தூரம் சென்றிருக்க முடியாது. திரும்பி இடது பக்க வீதியைக் குறிவைத்து விரைகிறேன்.

விரைவாக நடந்ததில் மூச்சு வாங்குகிறது. இரண்டு மூன்றுபேரிடம் கால் கைகளில் இடித்ததில் திட்டு வாங்கியபடி அசட்டுச் சிரிப்புடன் மன்னிக்கவும் என்று சொல்லிக்கொண்டு கிட்டத்தட்ட ஓடுகிறேன். தூரத்தில் அவன் போவது தெரிகிறது. மனதில் படபடப்பும் கூடுகிறது. அவன் என்னைப் பார்க்கக் கூடாது என்று எண்ணிக்கொண்டு ஒரு இடைவெளியை வைத்துக்கொண்டே நடக்கிறேன்.

என் கெட்ட காலம் தற்செயலாகத் திரும்பியவன் என்னைக் கண்டுவிட்டான். இப்பொழுது அவன் ஓட்டமும் நடையுமாகப் போகிறான். அந்தப் பையன் நடக்க முடியாமல் கைகளைப் பின்னுக்கு இழுக்க இழுக்க இஅவனும் எதோ திட்டித் திட்டிக் கொண்டே கொற இழுவையில் பையனைக் கொண்டு போகிறான்.

எதற்கும் போலிசுக்கு போன் செய்துகொண்டே அவனைத்துரத்துவோம் என எண்ணிக்கொண்டே கைப்பையைத் திறந்து என் போனை எடுக்கிறேன். போனை இயக்கினால் இயங்கவில்லை. என்ன இது சரியாகத்தானே இருந்தது போன் என்று எண்ணிக்கொண்டு மீண்டும் போனை உயிர்ப்பிக்க முயல்கிறேன். லோ சாச் என்று சொல்லிவிட்டு மீண்டும் போன் நின்றுவிடுகிறது.

இப்பொழுது அவனுக்கும் எனக்குமான இடைவெளி கூடியிருந்தது. எனக்குப் பதட்டம் அதிகரிக்க பக்கத்தில் போனவன் ஒருவனை நிறுத்தி ஒருக்கா போலிசுக்குப் போன் செய்கிறாயா என்று கேட்கிறேன். ஏன் என்று கேட்கிறான். அதில் போகும் ஒருவன் ஒரு சிறுவனைக் கடத்திக்கொண்டு போகிறான். உடனே பொலிசுக்குச் சொல்லு நான் அவனைத் தொடர்கிறேன் என்று கூற உனக்கு என்ன பயித்தியமா என்று சொல்லிவிட்டு பயித்தியங்களைப் பார்த்துச் சிரிப்பதுபோல் என்னை நக்கலாகப் பார்த்துச் சிரித்துவிட்டு அவன் போய்விட்டான்.

எனக்கு கோவம் ஒருபுறம். அவமானம் ஒருபுறம், அவனை விடக்கூடாது என்று ஒருபுறம் வீதியைப் பார்க்கிறேன். அவனைக் காணவில்லை. அட வீணாக இவனிடம் கதைத்து அவனைக் கோட்டை விட்டுவிட்டேனே என அங்கலாய்ப்புடன் ஓடுகிறேன். வீதி மேம்பாலம் ஒன்றில் அவன் தலை தெரிகிறது. அவன் பாலத்தால் இறங்குமுன் அவனைப் பிடித்துவிடவேண்டும் என்னும் வெறி எழுகிறது.

நான் பாலத்தால் ஏறி இறங்க அவன் எப்படியும் தப்பிப் போய்விடுவான். அவனை விடக்கூடாது என்றபடி வீதியைக் கடப்போம் என எண்ணினால் வீதியில் இரு மருங்கும் ஆட்கள் கடக்காதவாறு இரும்புத் தடை போட்டுள்ளார்கள். என்னதான் செய்வது என்று ஒரு செக்கன்தான் எண்ணியிருப்பேன் என்ன ஆனாலும் சரி என எண்ணியபடி இரும்புத் தடைக்கு மேலால் ஏறி வீதியில் இறங்க வாகனங்கள் விரைவாகச் சென்றுகொண்டிருக்கின்றன. ஐயோ அவன் இறங்கிறானே. விட்டால் போய்விடுவான் என்னும் பதட்டத்தில் இடையில் புகுந்து வாகனச் சாரதிகளின் காது கிழியும் கோர்ன் சத்தத்தையும் சட்டை செய்யாது ஓடிவருக்கிறேன். அந்தப்பக்கம் இருந்ததுபோல் ஏறுவதற்கு வசதியாகக் கம்பிகள் இல்லை.

அவனோ கீழே வந்துவிட்டான். அவனைப் பிடியுங்கள் அவனைப் பிடியுங்கள். அவன் அந்தச் சிறுவனைக் கடத்திக்கொண்டு போகிறான் என்று கத்துகிறேன். யாரும் நான் கூறுவதை நம்பியதுபோல் தெரியவில்லை. அவன் போகும் பக்கமாகவே வீதியின் கரையாக ஓடுகிறேன். அவனும் இப்ப ஓட ஆரம்பித்துவிடான். திடகாத்திரமான ஒரு ஆபிரிக்க இனத்தவன் வருகிறான். அவனை நிப்பாட்டு என்கிறேன். அவனோ எதற்கு என்று என்னையும் அவனையும் மாறிமாறிப் பார்க்கிறான்.

இவனுக்குச் சொல்லி விளங்கப்படுத்த முடியாது என்று எண்ணி, எனக்கு அந்தப் பக்கம் வர உதவி செய் என்று கேட்க அவனும் என் கைகளைப் பிடித்து வா என்கிறான். நான் கால் ஊன்றி ஏறுவதற்கு வசதியாக ஏதும் இல்லை. அவன் அதை விளங்கிக் கொண்டு தான் பாய்ந்து இந்தப் பக்கம் வருகிறான். என் இடுப்பின் இரு பக்கமும் என்னைப் பிடித்து அந்தப் பக்கம் தூக்கி விடுகிறான்.

நான் அவனுக்கு நன்றி கூடச் சொல்லாமல் தலைதெறிக்க ஓடுகிறேன். நான் சிறுவயதில்  விளையாட்டுப் போட்டிகளில் ஓடியவை எல்லாம் என் நினைவில் வந்து என்னை விரைந்து ஓடச் செய்கின்றன. நான் அவனை அண்மித்துவிட்டேன். என் களைப்பையும் பொருட்படுத்தாது நில்லு என்று கத்தியபடி இரண்டு கைகளாலும் அவனை எட்டிப் பிடிக்கிறேன். 

கேய் என்று யாரோ என்னைப் பிடித்து உலுப்புகிறார்கள். நான் திடுக்கிட்டுக் கண்விழிக்கிறேன்.ரெயின் இதுக்கு மிஞ்சிப்  போகாது இறங்கு என்று மஞ்சள் உடை போட்ட ஒருவன் எனக்குக் கூறுகிறான். அட நான் இத்தனை நேரமும் கண்டது கனவா என்னும் ஏமாற்றம் என்னைத் தழுவ, சோர்வுடன் இறங்குகிறேன்.

இறங்கியபின் பார்த்ததால் நான் இறங்கவேண்டிய இருப்பிடம்  கழிந்து ஒரு மணிநேரம் ஆகியிருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழமை போலவே தொடக்கமும் முடிவும் வாசித்து விட்டேன். இனித்தான் நடுவால வாசிக்கவேணும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையை நகர்த்திய விதமும், கடுப்பேத்த்திய விதமும் நல்லாயிருக்கு! :icon_idea:

 

நான் உங்கட பிக்காடில்லி லயினில ஏறி, Cockfosters  தரிப்பிடத்தில, ரயிலைத் துப்புரவு செய்யிற ஆக்கள், நித்திரையால எழுப்பி, வெளியால கொண்டுவந்து விட்ட கதையும் இருக்கு! :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழமை போலவே தொடக்கமும் முடிவும் வாசித்து விட்டேன். இனித்தான் நடுவால வாசிக்கவேணும்

 

இதில் ஒரு பந்தி எழுதும்போது உங்கள் ஞாபகம்தான் வந்தது நந்தன். நீங்கள் சொல்லாமலேயே நீங்கள் முழுவதும் வாசிக்கவில்லை என்று தெரிகிறது.

 

Link to comment
Share on other sites

முதல் பாகத்தை படித்த பொழுது, இது உண்மையாக இருக்கலாம் என்று நம்பினேன். இரண்டாம் பாகத்தை படிக்கும் போதே புரிந்து விட்டது, இது கனவு என்று.

ஒரு திடகாத்திரமான ஆபிரிக்கன் உங்கள் இடுப்பை பிடித்து தூக்கியதாக நீங்கள் கனவில் கண்ட காட்சி ஆராயத்தக்கது :-)

Link to comment
Share on other sites

நல்லவேளை கனவா போட்டுது நான் பயந்து போனன் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையை நகர்த்திய விதமும், கடுப்பேத்த்திய விதமும் நல்லாயிருக்கு! :icon_idea:

 

நான் உங்கட பிக்காடில்லி லயினில ஏறி, Cockfosters  தரிப்பிடத்தில, ரயிலைத் துப்புரவு செய்யிற ஆக்கள், நித்திரையால எழுப்பி, வெளியால கொண்டுவந்து விட்ட கதையும் இருக்கு! :o

 

அந்தக் கதையையும் எழுதிறதுதானே புங்கை.

 

நல்லவேளை கனவா போட்டுது நான் பயந்து போனன் :lol:

 

உங்களையே கலைச்சனான். :lol:  :lol:  நீங்கள் எதுக்குப் பயப்பிட வேணும் ????

 

முதல் பாகத்தை படித்த பொழுது, இது உண்மையாக இருக்கலாம் என்று நம்பினேன். இரண்டாம் பாகத்தை படிக்கும் போதே புரிந்து விட்டது, இது கனவு என்று.

ஒரு திடகாத்திரமான ஆபிரிக்கன் உங்கள் இடுப்பை பிடித்து தூக்கியதாக நீங்கள் கனவில் கண்ட காட்சி ஆராயத்தக்கது :-)

 

:D :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அவன் அதை விளங்கிக் கொண்டு தான் பாய்ந்து இந்தப் பக்கம் வருகிறான். என் இடுப்பின் இரு பக்கமும் என்னைப் பிடித்து அந்தப் பக்கம் தூக்கி விடுகிறான்
தொடர் கனவுக்கு நன்றிகள்......ஒரெ வித்தியாசமான கனவா காண்கிறீர்கள்
Link to comment
Share on other sites

முதலாவது பகுதியோடே நிறுத்தி இருக்கலாம். கதைக்கான விடயம், பாத்திரங்களின் விவரிப்பு, சூழலின் சித்தரிப்பு, முடிவில் சிறு திருப்பம் என முழுமையான ஒரு சிறுகதைக்கான அம்சங்கள் யாவும் அதில் இருந்தன. அதனால்தான் அதை சிறுகதை எனக் குறிப்பிட்டேன். 2ஆம் பகுதியை போட்டு...???  :wub:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர் கனவுக்கு நன்றிகள்......ஒரெ வித்தியாசமான கனவா காண்கிறீர்கள்

 

கனவில வந்ததைச் சொன்னன். :D

 

Link to comment
Share on other sites

போனை இயக்கினால் இயங்கவில்லை. என்ன இது சரியாகத்தானே இருந்தது போன் என்று எண்ணிக்கொண்டு மீண்டும் போனை உயிர்ப்பிக்க முயல்கிறேன். லோ சாச் என்று சொல்லிவிட்டு மீண்டும் போன் நின்றுவிடுகிறது. ////

 

ஒரு முற்றிலும் மாறுபட்ட கட்டத்திற்கு உங்கள் அக்கம் செல்கின்றதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன் . அதே வேளையில் கதை சொல்லும்பொழுது நம்பகத்தன்மையையும் கவனத்தில் எடுப்பது நன்று . இன்றைய கைத்தொலைபேசிகள் யாவுமே உள்ளுர் அவசரத்தொலைபேசி அழைப்புகள் மற்றும் ஐரோப்பிய அவசரத்தொலைபேசி அழைப்புகள் ( 112 ) அவை எந்த நிலையிலும் இருக்கும் பொழுதும் இயங்கத்தக்கவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன . நல்ல கதையைத் தந்த சுமேரியருக்குப் பாராட்டுக்கள் :) :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போனை இயக்கினால் இயங்கவில்லை. என்ன இது சரியாகத்தானே இருந்தது போன் என்று எண்ணிக்கொண்டு மீண்டும் போனை உயிர்ப்பிக்க முயல்கிறேன். லோ சாச் என்று சொல்லிவிட்டு மீண்டும் போன் நின்றுவிடுகிறது. ////

 

ஒரு முற்றிலும் மாறுபட்ட கட்டத்திற்கு உங்கள் அக்கம் செல்கின்றதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன் . அதே வேளையில் கதை சொல்லும்பொழுது நம்பகத்தன்மையையும் கவனத்தில் எடுப்பது நன்று . இன்றைய கைத்தொலைபேசிகள் யாவுமே உள்ளுர் அவசரத்தொலைபேசி அழைப்புகள் மற்றும் ஐரோப்பிய அவசரத்தொலைபேசி அழைப்புகள் ( 112 ) அவை எந்த நிலையிலும் இருக்கும் பொழுதும் இயங்கத்தக்கவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன . நல்ல கதையைத் தந்த சுமேரியருக்குப் பாராட்டுக்கள் :) :) .

 

மின்கலம் சுத்தமாக சக்தியிழந்த பிறகும் வேலை செய்யுமா? இது நம்ப முடியாமல் இருக்கு!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.