Jump to content

எனது முதல் இசை முயற்சியில்... முள்ளிவாய்க்கால் பாடல்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப் பாடல் என் வரிகளிலும், குரலிலும், படத்தொகுப்பிலும் அத்துடன் எனது முதன் முயற்சியாக எனது இசையிலும் முள்ளிவாய்க்கால் மண்ணில் மரணித்த எமது இரத்த உறவுகளுக்காகப் படைக்கப்பட்டிருக்கிறது.

 

முதலில் என் குரலைக் கேட்க வைப்பதற்கு மன்னிக்கவும்...  உங்கள் ஆதரவைப் பொறுத்து வேறு பாடகர்களை வைத்து இசையமைக்க இருக்கிறேன்...

 

முழுதாக இசையை கற்காததால் பல தவறுகள் இருக்கலாம்...எல்லாத்துக்கும் முதலேயே மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்....

 

 

 

எனது முதல் பதிவை அகற்றியுள்ளேன்...காரணம் திருத்தப்பட்ட பதிவு இணைக்கப்பட்டுள்ளதால்...

 

 

கீழே இணைக்கப்படுவது சில திருத்தங்கள் செய்யப்பட்ட  எனது பாடல், இப்பொழுது எனது குரல் தெளிவாகக் கேட்குமென நம்புகிறேன், அத்துடன் சரியான அளவில் இசைக் கலப்பும் செய்யப்பட்டுள்ளது என நம்புகிறேன்.... அத்துடன் உங்கள் விமர்சனங்களையும் எதிர்பார்க்கிறேன்...

 

குறிப்பு: பழைய பாடலை அகற்றிவிட்டேன்...நீங்கள் பழைய பிரதியை ஒப்பிட்டுப் பார்க்க விரும்பினால் அது யூ ரியூப்பில் இன்னமும் உள்ளது

 

 

http://www.youtube.com/watch?v=63-oLh28nDs&feature=youtu.be

 

 

 

நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக உள்ளது. தனியொருவராக இதை செய்துமுடித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் இளங்கவி தொடருங்கள் உங்கள் இசைப்பணியை ..................நாம் எல்லாம் அனாதைகளாக விடப்பட்டவர்கள் அல்ல ................எங்கள் சேவையை தொடரவேனும் அதனூடு எம் கலை என்னும் முதுகெலும்பை வளர்க்கணும் ..................அதுவே எமக்கு தரப்பட்ட பணி...நாளை மலரப்போகும் தமிழீழ சமுதாயத்தின் சந்ததிகளுக்கு நாம் ஒரு பாலமாக கலை மூலம் இருந்துவிட்டு செல்வோம் ......................அவர்கள் த்ரமையாக செயல்படுவதற்கும் அத்திவாரம் போட்டுசெல்வோம் /.............

Link to comment
Share on other sites

ஹாய் இளங்கவி அண்ணா,

 

ஒரு நாள் பாடல் இசையமைப்பதாக கூறி ஒருமாதிரி இன்று அதை நிறைவேற்றி விட்டீர்கள். உங்கள் முதல் முயற்சிக்கு வாழ்த்துக்கள். :)

எனக்கு இசையை பற்றி அவ்வளவாக தெரியாது. கேட்டு ரசிக்க மட்டுமே தெரியும். :rolleyes: ஆனாலும் எனக்கு தோன்றுவதை கூறுகிறேன். தவறாக நினைக்காதீர்கள்.

  • பாடல் கொஞ்சம் மெதுவாக செல்வது போல் உணர்கிறேன். சிறிது விரைவு படுத்தி எடுத்திருக்கலாமோ தெரியவில்லை. :rolleyes:
  • பாடலில் குரல் தொலைவாக ஒலிப்பது போல் உள்ளது. இதே பிரச்சினை தமிழ்சூரியன் அண்ணா முன்னர்  பாடிய போதும் இருந்தது. காரணம் என்ன என்று தெரியவில்லை. :unsure:

இசையமைப்பு தொடர்பாக தமிழ்சூரியன் அண்ணாவிடமும் (அவருக்கு நேரமுள்ள போது) நீங்கள் ஆலோசனை கேட்க முடியும் என கருதுகிறேன். :)

 

முதல் இசை முயற்சியிலேயே எம்மக்களின் அவலங்களை முன்னிறுத்தி பாடியமைக்கு பாராட்டுக்கள்.

எதிர்காலத்தில் நீங்களும் சிறந்த இசையமைப்பாளராக வர வாழ்த்துக்கள். :)
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முயற்சிக்கு வாழ்த்துக்கள். குரல் மிக மெதுவாகவும் ஆறுதலாகவும் இருக்கிறது. நீங்கள் பாடிய விதம் காதல் சோகப் பாடல்களுக்குப் பொருந்தும். எப்போதும் குரலில் தெளிவு இருப்பதே கேட்பவரை இரசிக்கவைக்கும். போகப் போக சரியாக்கிக் கொள்வீர்கள் என எண்ணுகிறேன். கூறியவை குறையாகப் பட்டால் மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் முயற்சி என்றாலும்.. நல்லா இருக்குது. எடுத்துக் கொண்ட விடயமும்.. மக்கள் துயரை எம் இனத்தின் துயரை.. வெளிப்படுத்தி.. தேசம் ஒன்றின் இருப்பிற்கான அவசியத்தை..  நம்பிக்கை ஊட்டும் வகையில் தந்து செல்கிறது. நல்ல படைப்பு. தொடர்ந்து செய்ய வாழ்த்துங்கள் இளங்கவி. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கன்னி முயற்சி வாழ்த்துக்கள்!!!பாடலின் வரிகள் தெளிவாகக் கேட்கவில்லை.இசை நன்றாக இருக்கின்றது.நல்ல எதிர்காலம் இருக்கின்றது.தமிழ்ச்சூரியனிடம் ஆலோசனைகளைப் பெற்று மேலும் மெருகூட்டவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப் பிடித்திருக்கின்றது என்று தான் சொல்வேன், இளங்கவி!

 

பாடல் தொய்வாக இருப்பது போல் தோன்றினாலும், இணைக்கப்பட்டுள்ள எமது சோகங்களுடன் இணைத்துப் பார்க்கும் போது பொருந்துவதாகவே உள்ளது!

 

ஒரு ஒப்பாரியைப் போல, சில பெண்குரல்கள் ஒருங்கே சேர்ந்து ஒலிக்கும்போது, 'அவலம் ' அதிகமாக வெளிப்படுத்தப் படும் என எண்ணுகின்றேன்!

 

ஆனால் நான் ஒரு சாதாரண பார்வையாளன் என்ற நிலையிலேயே இதைச் சொல்லுகிறேன்!

 

தங்கள் இசை முயற்சி தொடர வேண்டும் எனவே விரும்புகின்றேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முயற்சிக்கு வாழ்த்துக்கள். குரல் மிக மெதுவாகவும் ஆறுதலாகவும் இருக்கிறது. நீங்கள் பாடிய விதம் காதல் சோகப் பாடல்களுக்குப் பொருந்தும். எப்போதும் குரலில் தெளிவு இருப்பதே கேட்பவரை இரசிக்கவைக்கும். போகப் போக சரியாக்கிக் கொள்வீர்கள் என எண்ணுகிறேன். கூறியவை குறையாகப் பட்டால் மன்னிக்கவும்.

ம்ம்ம்ம்ம்ம் மெசொபொத்தேமியா சுமேரியர் அக்கா...முள்ளி வாய்க்கால் அதுவும் ஒரு சோக நினைவு தான்....அந்த நினைவை வைத்து பாடும் போதும் சோகம் தான்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வணக்கம் அண்ணா நலமா
 
எனக்கு தெரிந்த இளங்கவி அண்ணா கவிதை மட்டும் தான் எழுதுவார் என்று நினைத்தேன் ஆனால் பாடலும் பாடுவிங்கள் என்று இப்ப தான் தெரிந்து கொண்டேன்...நீங்கள் முதல் முதலில் இசை அமைத்து பாடிய பாடல் அருமை.....காணொளியை பார்க்க என் மனம் சம்மதிக்க வில்லை...பாடலை மட்டும் கேட்டேன் அண்ணா நல்லா இருக்கு வாழ்த்துக்கள்......ஈழத்தில் இருந்த நல்ல இசை அமைப்பாளர் இசைப்பிரியன் அண்ணா போன்ற நல்ல உறவுகளை முள்ளிவாய்காலோடை இழந்து விட்டோம்....காலம் போக்கில் நீங்கள் அவர்கள் விட்டு சென்ற பணியை தொடருவிங்கள் என்று எதிர் பாக்கிறேன்.....
Link to comment
Share on other sites

 

ஈழத்தில் இருந்த நல்ல இசை அமைப்பாளர் இசைப்பிரியன் அண்ணா போன்ற நல்ல உறவுகளை முள்ளிவாய்காலோடை இழந்து விட்டோம்....காலம் போக்கில் நீங்கள் அவர்கள் விட்டு சென்ற பணியை தொடருவிங்கள் என்று எதிர் பாக்கிறேன்.....

 

 

இசைப்பிரியன் அண்ணா இப்பொழுது இந்தியாவில் தானே? :unsure: நெடுந்தீவு முகிலன் அண்ணாவின் குறும்படத்துக்கு இசையமைத்துமிருந்தார். :rolleyes: அவருக்கு ஏதும் உதவி தேவைப்பட்டால் எம்மக்கள் உதவி செய்து மீளவும் பழையபடி இசையமைக்க வழிசெய்து கொடுக்க வேண்டும். :rolleyes:

 

ஆனாலும் அன்றைய பாடல்களுக்கும் இன்றைய பாடல்களுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. காரணம் இடையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் எனும் அவலம். :(:rolleyes:

Link to comment
Share on other sites

முதல் முயற்சி என்று சொல்ல முடியவில்லை..  :D "விடுதலை தேசம் வரும்.." உண்மை.

 

எனது கருத்துக்கள் சில..

 

  1. பாதி பாடலுக்கு மேல் தாளத்தை மாற்றியபோது Bass ஒலி இல்லாதமை தெளிவாகத் தெரிகிறது. Bass, Rhythm sections பாடல்களுக்கு கண்டிப்பாக அவசியம்.
  2. ஒலிச்சேர்ப்பில் குரல் அமிழ்ந்துவிட்டதை அநேகர் சொல்லிவிட்டார்கள்.
  3. பாடல் மெதுவாகச் செல்வது எனக்கு ஒரு குறையாகப் படவில்லை. எடுத்துக்கொண்ட பின்னணி இசை அமைப்பிற்கு இது பொருத்தமாகத்தான் உள்ளது. மெல்லிய இதயம் படைத்தவர் நீங்கள் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது. :D

டிஸ்கி: தனக்கு கருத்து சொல்லாமல் இளங்கவிக்கு சொல்றாரே இந்தால் எண்டு த.சூ கோவிக்கப் போறார்.. :o  டூவீலரில் போனால் பரவாயில்லை.. மாருதி காரில் போற த.சூவுக்கு அட்வைஸ் தேவையில்லைதானே.. :icon_idea:  (சும்மா.. பகிடிக்கு).

 

படைப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது கருத்து சொல்லக் கூடாது என்பது என் எண்ணம்.. அது கற்பனைத்திறத்தைப் பாதித்துவிடும். த.சூ. புரிந்துகொள்வார் என நம்புகிறேன். :unsure:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல்முயற்சியே நன்றாக இருக்கின்றது......வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.

 

தங்கள் இசை முயற்சி தொடர வேண்டும் எனவிரும்புகின்றேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல்முயற்சியே நன்றாக இருக்கின்றது......வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்பொழுது மீண்டும் கேட்டேன்

உங்கள் குரலில் ஒரு  இனிமையான ஈர்ப்பு இருக்கிறது 

தொடருங்கள்

நல்ல எதிர்காலமுண்டு

வாழ்க வளமுடன்..........

Link to comment
Share on other sites

வணக்கம் இளங்கவி .........என் இரத்த உறவு என்ற வகையில் சில தகவல்களை தருகிறேன் ..............ஓடியோவில் உங்கள் குரலை பதிவு செய்திருந்தால் அதை நோர்மலிஸ் மூலம் சத்தமாக உருவாக்கலாம் .....................எடிட் பண்ணுவதில் கூடுதலான கவனம் எடுங்கள் /எமது இசை பாடல்களுக்கு குரலே மிக முக்கியம் ......................நானும் சில அனுபவங்களின் பின்னரே இதை உங்களுக்கு எழுதுகிறேன் ............................எப்பொழுதும் குரலை மேல் வைக்கவேண்டும் . வெள்ளைகள்  ஏன் என்று கேட்பார்கள் .....அவர்கள் முறை அது .அனால் எங்கள் முறையை அவர்களால் ப்ருரிந்து கொள்ள முடியாது ........என்னில் இசை என்பது எம்மிடம்தான் உள்ளது . இவர்களிடம் நாம் படிக்கலாம் .................ஆனால்ம் அதை பயன்படுத்தி எம் இசைக்கு ஏற்றவாறு சில விடயங்களை நாம் செய்யவேண்டும் ..............இவற்றை நான் எழுதுவது நிச்சயம் உங்களால் சாதிக்க முடியும் ......................தேடலே வாழ்க்கை .இதை இன்றுவரை ரன் வாழ்பில் கண்டுகொண்டிருக்கிறேன் ....நான் ஒன்றும் பெரியவன் என்று நினைத்து இதை உங்களுக்கு சொல்லவில்லை .உங்களைப்போலவே தேடிக்கொண்டிருக்கும் உங்கள் நண்பன் .......................எம் தேசியத்தலைமை எமக்கு காட்டிய அதே பாதையில் ஒருமைப்பட்டு பயணிப்போம் ....................இறைவனின் ஆசியும் அருளும் ,என்றும் உங்களோடு இருப்பதாக ..............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றாக உள்ளது. தனியொருவராக இதை செய்துமுடித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

 

செங்கொடி...

 

உங்கள் வாழ்த்துக்கு எனது நன்றிகள்....

 

என் ஈழ தேசத்தின் விடிவுக்காக தம் உயிர்களை தந்த எம் மாவீரர்களையும், எம் அப்பாவி உடன்பிறப்புக்கலையும் நினைத்தாலே மனதில் எத்தனை இசைக்கருவும் தோன்றும்...  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் இளங்கவி தொடருங்கள் உங்கள் இசைப்பணியை ..................நாம் எல்லாம் அனாதைகளாக விடப்பட்டவர்கள் அல்ல ................எங்கள் சேவையை தொடரவேனும் அதனூடு எம் கலை என்னும் முதுகெலும்பை வளர்க்கணும் ..................அதுவே எமக்கு தரப்பட்ட பணி...நாளை மலரப்போகும் தமிழீழ சமுதாயத்தின் சந்ததிகளுக்கு நாம் ஒரு பாலமாக கலை மூலம் இருந்துவிட்டு செல்வோம் ......................அவர்கள் த்ரமையாக செயல்படுவதற்கும் அத்திவாரம் போட்டுசெல்வோம் /.............

 

தமிழ்சூரியன்...

 

எனது நோக்கமும் நம் தாய் நாட்டுப் படைப்புக்களைத் தரவேண்டுமென்பதே...எங்களுக்காக மரணித்தவர்களின் ஆன்மாக்கள்  எனது முயற்சிகளூக்கு உறுதுணையாய் நிற்கும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹாய் இளங்கவி அண்ணா,

 

ஒரு நாள் பாடல் இசையமைப்பதாக கூறி ஒருமாதிரி இன்று அதை நிறைவேற்றி விட்டீர்கள். உங்கள் முதல் முயற்சிக்கு வாழ்த்துக்கள். :)

எனக்கு இசையை பற்றி அவ்வளவாக தெரியாது. கேட்டு ரசிக்க மட்டுமே தெரியும். :rolleyes: ஆனாலும் எனக்கு தோன்றுவதை கூறுகிறேன். தவறாக நினைக்காதீர்கள்.

  • பாடல் கொஞ்சம் மெதுவாக செல்வது போல் உணர்கிறேன். சிறிது விரைவு படுத்தி எடுத்திருக்கலாமோ தெரியவில்லை. :rolleyes:
  • பாடலில் குரல் தொலைவாக ஒலிப்பது போல் உள்ளது. இதே பிரச்சினை தமிழ்சூரியன் அண்ணா முன்னர்  பாடிய போதும் இருந்தது. காரணம் என்ன என்று தெரியவில்லை. :unsure:

இசையமைப்பு தொடர்பாக தமிழ்சூரியன் அண்ணாவிடமும் (அவருக்கு நேரமுள்ள போது) நீங்கள் ஆலோசனை கேட்க முடியும் என கருதுகிறேன். :)

 

முதல் இசை முயற்சியிலேயே எம்மக்களின் அவலங்களை முன்னிறுத்தி பாடியமைக்கு பாராட்டுக்கள்.

எதிர்காலத்தில் நீங்களும் சிறந்த இசையமைப்பாளராக வர வாழ்த்துக்கள். :)

 

 

துளசி

 

ஆம்.. இந்தப் பாடலுக்கான குரலைப் பதிவுசெய்து கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு மேலாகிவிட்டது. இது ஒரு சோகம் கலந்த பாடல் என்பதால் slow tempo வைத்தான் தெரிவுசெய்தேன், காரணம் சோகமான உணர்வைச்சொல்லும் போது பாடலில் வேகம் வராது...ஆனாலும் விதிவிலக்குகள் உண்டு...

 

பாடலில் குரல் தொலைவில் ஒலிப்பதுபோல உள்ளது என்றீர்கள்....இதற்குக் காரணம் நான் சிறிது அதிகமாக reverb ஐ உபயோகப்படுத்திவிட்டேன் என்று நினைக்கிறேன்... எனது திருத்திய பதிவில் இதை சரிப்படுத்தி தருகிறேன்...

 

மற்றும் தமிழ்சூரியனிடம் இசையமைப்பு சம்மந்தமாக அறிவுரை கேட்கச்சொன்னீர்கள்...ஒவ்வொருவரின் மனதில் தோன்றும் உணர்வுகளுக்கு அவரவர் வடிவம் கொடுத்தால் தான் அந்த உணர்வு முழுமையாக வெளிப்படும்....உதாரணத்துக்கு..எனது மனதில் ஒரு இசைக்கரு தோன்றுது என்று வைத்துக்கொண்டால் அதற்கு எனது மனதில் பியானோ இசை மட்டும் போதும் என்று எண்ணம் தோன்றும், ஆனால் அது இன்னொரு இசையமைப்பாளருக்கு என் மனதில் தோன்றுவதைப் போல தோன்றுமென்று சொல்லமுடியாதல்லவா? வேறுமாதிரித் தோன்றக்கூடுமல்லவா? அது என் உணர்வை முழுமையாகப் பிரதிபலிக்காமல் போகக்கூடும்.

 

ஆனாலும் எங்கள் ஈழப்படைப்புக்காக சந்தர்ப்பம் வரும்போது அவருடன் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறேன்...

 

 

 

 

 

 

முயற்சிக்கு வாழ்த்துக்கள். குரல் மிக மெதுவாகவும் ஆறுதலாகவும் இருக்கிறது. நீங்கள் பாடிய விதம் காதல் சோகப் பாடல்களுக்குப் பொருந்தும். எப்போதும் குரலில் தெளிவு இருப்பதே கேட்பவரை இரசிக்கவைக்கும். போகப் போக சரியாக்கிக் கொள்வீர்கள் என எண்ணுகிறேன். கூறியவை குறையாகப் பட்டால் மன்னிக்கவும்.

 

 

மெசொபொத்தேமியா சுமேரியர்....

 

உங்களைப் போன்ரோரின் அறிவுரைகளுடன் மேலும் முன்னேறத்தானே இந்தப் பதிவை இங்கே பதிந்தேன்... எல்லாவிதமான உணர்வுகளுடன் எனது பாடல்கள் அடிக்கடி வரும்... நன்றிகள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதல் முயற்சி என்றாலும்.. நல்லா இருக்குது. எடுத்துக் கொண்ட விடயமும்.. மக்கள் துயரை எம் இனத்தின் துயரை.. வெளிப்படுத்தி.. தேசம் ஒன்றின் இருப்பிற்கான அவசியத்தை..  நம்பிக்கை ஊட்டும் வகையில் தந்து செல்கிறது. நல்ல படைப்பு. தொடர்ந்து செய்ய வாழ்த்துங்கள் இளங்கவி. :icon_idea:

 

 

nedukkalapoovan

 

நிச்சயமாக எனது படைப்புக்கள் எமது தேசம் சார்ந்ததாகவே இருக்கும்... கருத்துக்கு மிக்க நன்றிகள்...

கன்னி முயற்சி வாழ்த்துக்கள்!!!பாடலின் வரிகள் தெளிவாகக் கேட்கவில்லை.இசை நன்றாக இருக்கின்றது.நல்ல எதிர்காலம் இருக்கின்றது.தமிழ்ச்சூரியனிடம் ஆலோசனைகளைப் பெற்று மேலும் மெருகூட்டவும்.

 

புலவர்....

 

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்குப் பிடித்திருக்கின்றது என்று தான் சொல்வேன், இளங்கவி!

 

பாடல் தொய்வாக இருப்பது போல் தோன்றினாலும், இணைக்கப்பட்டுள்ள எமது சோகங்களுடன் இணைத்துப் பார்க்கும் போது பொருந்துவதாகவே உள்ளது!

 

ஒரு ஒப்பாரியைப் போல, சில பெண்குரல்கள் ஒருங்கே சேர்ந்து ஒலிக்கும்போது, 'அவலம் ' அதிகமாக வெளிப்படுத்தப் படும் என எண்ணுகின்றேன்!

 

ஆனால் நான் ஒரு சாதாரண பார்வையாளன் என்ற நிலையிலேயே இதைச் சொல்லுகிறேன்!

 

தங்கள் இசை முயற்சி தொடர வேண்டும் எனவே விரும்புகின்றேன்!

 

புங்கையூரன்

 

சோகம் கலந்த பாடல் என்பதால் பாடல் மெதுவாகச் செல்கிறது...மற்றும் நானும் சரியாக பாடக்கற்றுக்கொண்ட பாடகனும் இல்லை... my car ...my petrol என்று நாங்கள் பெடியளுடன் பகிடிக்கு கதைப்பது போல, எனது மை, எனது கொம்பியூட்டர் எனது குரல் சும்மா கத்திப்பார்ப்போம் என்று பாடியது தான்...சும்மா சொல்லக்கூடாது தொண்டை கிழிந்துவிட்டது இந்தப் பாடலை பாடி முடிப்பதற்குள்...

 

மனதில் கொம்பொசிஷன் வந்துவிட்டது...கை பிச்சுக்கு குரலை கொண்டுபோக தொண்டையில் சளி வந்து பாடலில் கரகரப்பு ஏற்பட்டுவிடும், ... ரைக்கோடிங் பிழைத்துவிடும்..இப்படியாக பல தடவைகள் ரீ டேக் எடுத்து பாடிப்பாடி எனது குரலும் ஒருமாதிரிப் பணிந்துவிட்டது...இருந்தும் சில பிழைகள்... எங்கள் தாய் மண்னின் உணர்வுகளைச் சொல்லும் போது எனது பிழைகள் எனக்கு பெரிதாக தோன்றவில்லை, ஈங்களும் பெரிதாக எடுக்கமாட்டீர்கள் என்று நினைத்துக்கொண்டு எதிர்காலத்தில் நல்ல படைப்புக்களை தருவேன்... நன்றிகள்.... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

வணக்கம் அண்ணா நலமா
 
எனக்கு தெரிந்த இளங்கவி அண்ணா கவிதை மட்டும் தான் எழுதுவார் என்று நினைத்தேன் ஆனால் பாடலும் பாடுவிங்கள் என்று இப்ப தான் தெரிந்து கொண்டேன்...நீங்கள் முதல் முதலில் இசை அமைத்து பாடிய பாடல் அருமை.....காணொளியை பார்க்க என் மனம் சம்மதிக்க வில்லை...பாடலை மட்டும் கேட்டேன் அண்ணா நல்லா இருக்கு வாழ்த்துக்கள்......ஈழத்தில் இருந்த நல்ல இசை அமைப்பாளர் இசைப்பிரியன் அண்ணா போன்ற நல்ல உறவுகளை முள்ளிவாய்காலோடை இழந்து விட்டோம்....காலம் போக்கில் நீங்கள் அவர்கள் விட்டு சென்ற பணியை தொடருவிங்கள் என்று எதிர் பாக்கிறேன்.....

 

 

பையன்26

 

நிச்சயமாக எனது படைப்புக்கள் எமது தாயகம் சார்ந்ததுவே பையா..... கால ஓட்டத்துக்கு ஏற்ப, இளைய சமுதாயத்தின் இசை ரசனைக்கேற்ப இசையிலும் புதுமைகள் செய்தால்தான் இளைய சமுதாயத்துக்கும் எமது சோகங்களை, வலிகளை, எனது வீரத்தை, எங்களது மாவீரர்களது தியாகங்களை கொண்டுசெல்லமுடியும்... அதுவே என் கடன்... நன்றிகள் பையா....

Link to comment
Share on other sites

துளசி

 

ஆம்.. இந்தப் பாடலுக்கான குரலைப் பதிவுசெய்து கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு மேலாகிவிட்டது. இது ஒரு சோகம் கலந்த பாடல் என்பதால் slow tempo வைத்தான் தெரிவுசெய்தேன், காரணம் சோகமான உணர்வைச்சொல்லும் போது பாடலில் வேகம் வராது...ஆனாலும் விதிவிலக்குகள் உண்டு...

 

உண்மை அண்ணா, நீங்கள் அமைத்த இசையை பின்னர் மீளவும் கேட்டேன். அவ் இசைக்கு slow தான் பொருத்தம். விரைவு படுத்தியெடுக்க முடியாது. விரைவுபடுத்தினால் இசையில் இப்போதுள்ள ஈர்ப்பு இல்லாமல் போய்விடும். :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.