Jump to content

இடப்பெயர்வுகள் முற்றுப்புள்ளியல்ல


Recommended Posts

,

http://www.madathuvaasal.com/2013/10/blog-post.html

இன்று வேலை முடிக்கும் நேரம் என் மேலதிகாரி என்னிடம் வந்து "நாளைக்கு நான் வேலைக்கு வரமாட்டேன் நாங்கள் இருக்கும் இடங்களைக் காலி செய்யச் சொல்லிவிட்டார்கள் எனவே வேறு இடத்து மாற வேண்டும்" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார். கடந்த சில நாட்களாக சிட்னியின் பெரும்பாகத்தைத் தாண்டிய புற நகர்ப்பகுதிகளில் பரவலான காட்டுத்தீயின் கொடூரம் பல உடமைகளை நாசப்படுத்தி விட்டது. இன்னும் இன்னும் அதிகமாகும் என்ற முன்னெச்சரிக்கையின் விளைவாக காட்டுத்தீ பரவக்கூடிய அண்மித்த இடங்களில் உள்ள மக்களையும் இடம்பெயரச் சொல்கிறார்கள். எனது மேலதிகாரி ஒரு வெள்ளை இனத்தைச் சேர்ந்த அவுஸ்திரேலியர். நகரத்தித்தின் அடர்த்தி இல்லாத எளிமையான இயற்கை வனப்புள்ள கிராமம் சார்ந்த இடங்களில் பிறந்ததில் இருந்து அகல மறுத்து அங்கேயே வாழும் வெள்ளையர்கள் அதிகம். இரண்டு மணி நேரம் வரை நீண்ட பயணம் செய்து சிட்னியின் பெரும் பாகத்தில் உள்ள நிறுவனங்களுக்கு வேலைக்கு வருபவர்களும் உண்டு. காட்டுதீ அபாயம் ஏற்பட்டவுடனேயே தங்கள் நாய், பூனைக்குட்டி ஈறாக கிடைத்த சொற்ப சொத்துகளுடன் வீடுகளைக் காலி செய்கிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்னர் எண்பதுக்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையானபோது வீட்டுக்கு முன்னார் கதறி அழுதுகொண்டிருந்தனர். இவ்வளவுக்கும் அவை சாதாரண மரத்துண்டு வீடுகள் தாம், ஆனால் அந்த வீடுகளுக்குள் தாம் பிறந்ததில் இருந்து புதைத்து வைத்த நினைவுகளை நினைத்துத் தான் அழுதுகொண்டிருந்தார்கள். சிலர் அதை வாய்விட்டும் சொல்லி அழுதனர்.

என் பெற்றோர் வேலை நிமித்தம் சில ஆண்டுகள் மலையகத்தில் தங்கி ஆசிரியர்களாகப் பணி புரிந்து நம் சொந்த ஊர் திரும்பிய காலம் என்பது மங்கலான பால்ய நினைவுகளிலேயே தங்கிவிட்டது. 83 ஆம் ஆண்டு கொழும்பிலே இனக்கலவரம் ஏற்பட்ட போது தம் சொந்த வீடுகளில் நிலை கொண்டிருந்தோரின் கண்ணுக்கு முன்னாலேயே அவர்களின் சொத்துக்களைச் சூறையாடிப் பின்னர் அங்கேயே அகோரமாகக் கொன்று குவிக்கப்பட்ட போது எஞ்சித் தப்பியோர்களில் எங்கள் சித்தி குடும்பமும் ஒன்று. அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்குப் போவதென்றால் ஏதோ சீமைக்குப் போகும் உற்சாகம். யாழ்தேவி ரயிலில் ஆறு, அருவி எல்லாம் கண்டுகொண்டு போகலாம், கொழும்பிலே பென்னாம்பெரிய கட்டிடங்களைக் காணலாம் என்ற உற்சாகம் தொற்றிக்கொள்ளும் சின்ன வயதுக் காலம் அது. சித்தி வீட்டுக்கார் அப்போது யாழ்ப்பாணத்துக்கு வந்தது ஒரு புதினமாக இருந்தது. அவர்களைப் போலவே குடும்பம் குடும்பமாக நிறையப் பேர் வந்துகொண்டிருந்தார்கள். செம்பாட்டு மண் அப்பிய காற்சட்டையோடு திரியும் எமக்கு, ஸ்ரைலாக உடுப்புப் போட்டுக்கொண்டு சின்னப்பெடியளும் இங்கிலீஷ் கதைக்கிறதை ஆச்சரியமாகப் பார்ப்பதுண்டு. எங்கட பள்ளிக்கூடத்துக்கும் சில பெடியள் படிக்க வந்தவை. இனிக் கொழும்பு வேண்டாம், யாழ்ப்பாணத்திலேயே இருப்பம் என்று நினைத்த சித்தி குடும்பமும், வீடுகட்ட அறுத்த சீமெந்துக் கல் ஈரம் காயும் முன்பே வெளிக்கிட்டு விட்டார்கள். அப்படித்தான் மீண்டும் கொஞ்சம் பயம் தெளிந்ததும் கொழும்புக்குக் கிளம்பிவிட்டார்கள் அயலில் இருந்த ஒரு சில குடும்பமும். அப்பவும் எனக்கு இந்த இடப்பெயர்வின் தாக்கம் அதிகம் தெரியவில்லை.

1987 ஆம் ஆண்டு ஒபரேசன் லிபரேசன் என்று பெயரிட்டு அப்போதைய இலங்கை ராசா ஜெயவர்த்தனா தீவிர இராணுவ நடவடிக்கையை மேற்கொண்ட நேரம் அது. "பலாலி றோட்டால ஆமிக்காறன் வாறான் ஓடுங்கோ ஓடுங்கோ என்று" அம்மம்மா வீட்டில் இருந்த எல்லாரையும் எச்சரித்து விட்டு சுதுமலைப் பக்கமாக ஓடத்தொடங்கினார் தருமர் மாமா. அந்த நேரம் இப்படி அடிக்கடி ஓட்டப்பந்தயம் நடக்கும். வடமாராட்சியில் இருந்து அதைத் தாண்டியும் மக்கள் இடம்பெயரத் தொடங்கினர். ஆனால் எங்கட ஊருக்கு ஆமிக்காறரின் கால் பதியும் முன்பே, நெல்லியடியில் கப்டன் மில்லரின் முதலாவது கரும்புலித் தாக்குதலோடு அந்த முழு இராணுவ நடவடிக்கையும் முடங்கிப் போனது.

ஆனால் சில மாதங்களில் இந்திய இராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையில் போர் மூண்ட போதுதான் எங்கள் வாழ்வில் இடப்பெயர்வின் வலியை நேரே உணர முடிந்தது. வீட்டில் போட்டது போட்டபடி கிடக்க, எல்லோரும் அண்ணா தொழிலகம் என்ற உள்ளூரில் இயங்கிய தொழிற்சாலையில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்தோம். எங்கள் ஊரிலேயே ஒரே ஒரு மாடிக்கட்டிடம் அதுதான். ஆமிக்காறன் அடிக்கிற ஷெல் அந்தக் கட்டிடத்தைப் பாதிக்காது என்ற மூட நம்பிக்கை வேறு. அந்தத் தொழிற்சாலைக்குள்ளேயே நூற்றுக்கணக்கில் குடும்பங்கள் அடைபட்டுக் கிடக்க, இருப்பில் இருந்த அரிசி தான் கஞ்சி போட்டது. ஒரு சுபயோக சுப தினத்தில் ஆமிக்காறர் அடிச்ச ஷெல் நாங்கள் இருந்த கட்டிடத்தையும் பதம் பார்க்க, ஒரு சிலர் காயத்தோடு தப்ப, மிச்சப்பேர் இனி ஆண்டவன் சந்நிதி தான் ஒரே வழி என்று மடத்துவாசல் பிள்ளையாரடி நோக்கி ஓடினர், நாங்கள் உட்பட. தற்காலிக முகாம்களில் இருந்து வீடு பார்க்கப் போவோர் பெரும்பாலும் திரும்பி வரார். அவர்களைத் தேடிச் சென்றவர்கள் பிணத்தோடு வருவர். கோயிலுக்குப் பக்கத்தில் உள்ள நெல் உமி எரிக்கும் வளவுக்குள் எரித்து விட்டு குளிப்பதோடு சரி. சிட்னியில் இருக்கும் ஒரு நண்பரின் வாழ்க்கையில் நடந்தது இது. வல்வெட்டித்துறையில் வீடு பார்க்கச் சென்றவர், தனக்கு முன்பே வீடு பார்க்க வந்த அங்கே தனது தமையன் வீட்டு முற்றத்தில் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் காண்கிறார். தூரத்தில் ஆமிக்காறன் வரும் சல சலப்புக் கேட்கிறது. உடனே தன்னுடைய தமையனின் உடம்பில் வழிந்த இரத்ததை உடம்பெல்லாம் தடவிச் செத்தது மாதிரிக் கிடந்து தப்பித்தாராம். இப்படி நிறைய இடப்பெயர்வுக் கதைகள்.

இந்திய இராணுவ முற்றுகைக்குப் பின்னர் பல இடப்பெயர்வுகளை எங்கட சனம் சந்தித்து விட்டது.

1990 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தெல்லிப்பழை தாண்டி ஒரு பெரும்பாகமே காடு வளர்த்து விட்ட பூமியாகிவிட்டது. பலாலியில் இருந்து இலங்கை இராணுவத்தின் வலிகாமம் மீதான முற்றுகையில் இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் தான் அந்தப் பகுதியெல்லாம் கொஞ்சமாக மெல்லத் திறந்து விடப்பட்டது. வீடு எங்கே வீதி எங்கே என்றே தெரியாத அளவுக்கு அடர்ந்த காட்டுப்பகுதியாக அந்த இருபது வருடங்கள் மாற்றிவிட்டிருந்தது இந்த ஊர்களை. இந்த ஊர்களை இருபது வருடங்களுக்கு முன்னர் பார்க்கச் சென்றவர்களில் பலரும் இன்னும் திரும்பவில்லை.

வீடும் காணியும் சடப்பொருட்கள் என்றாலும் அவற்றை உதறித்தள்ளிவிட்டு எங்கட சனத்தால் வரமுடியவில்லை. அந்த வீட்டு வளவில் கொண்டாடிய சொந்தங்களும், உறவுகளும் செத்து மடிந்தாலும் கூட.

தொண்ணூறுகளுக்குப் பின்னரான தீவிர யுத்தத்தில் இப்போது யார் எந்த ஊரில் இருக்கிறார் என்பதை விட நான் சொந்த ஊரில் இருக்கிறேனா என்பதே பெரிய கேள்வி. தொடர்ந்த இடப்பெயர்வுகள் பலரின் ஊரையே மாற்றி வேறோர் ஊரில் சொந்தம் கொண்டாட வைத்து விட்டது. ஆசையாக வீட்டைப் பார்க்கப் போனவர் மாண்டது போக, இன்று அநாதைகளாக இருக்கும் பல வீடுகளுக்கும் சொந்தம் கொண்டாட யாருமே இல்லை. வெளிநாட்டுக்குப் போயிருக்கலாம் அல்லது குடும்பமாகவே செத்துப் போயிருக்கலாம். தெல்லிப்பழை தாண்டி இருபக்கமும் இடிபாடுடைய வீடுகளைப் பார்க்கும் போது, தலை விரி கோலமாக நிற்கும் வாழ்வைத் தொலைத்தவள் நிலையில் தான் இருக்கும்.

ஊருக்கு ஒரு இடப்பெயர்வு என்ற காலம் போய், முழு யாழ்ப்பாணமே இடம்பெயர்ந்த 1995 கள் கடந்து, 2009 ஆம் ஆண்டில் இறுதிக்கட்ட யுத்தம் நடந்து கொண்டிருக்கும் போது மணிக்கொரு ஊராய் அலைந்து உயிரைப் பாதுகாத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது வானொலிக் கலையகத்தில் இருந்து தாயக நடப்புகளை எடுத்து வரும்போது முதல் நாள் பேசியவர் காணாமல் போயிருப்பார், பின்னர் அவர் இறந்த செய்தியை இன்னொருவர் எடுத்து வருவார். உடமைகளோடு இடம்பெயர்ந்த காலம் போய், ஒவ்வொரு ஷெல் அடிக்கும், விமானக் குண்டுவீச்சுக்கும் காணும் பக்கமெல்லாம் ஓடித் தப்ப முடிந்தோர் தப்பினார்கள். அந்த நேரத்தில் இடப்பெயர்வு என்பது நிமிடத்துளிக் கணக்கிலும் மாறிக் கொண்டிருந்தது.

இந்த கால் நூற்றாண்டு கடந்த யுத்தத்தில் இடப்பெயர்வுகளின் வடிவங்கள் வேறு, ஆனால் வலி ஒன்று தான்.

" சிறு நண்டு கடலோரம் படம் ஒன்று கீறும் சிலவேளை அதை வந்து அலை கொண்டு போகும்" -மகாகவி உருத்திரமூர்த்தி

Link to comment
Share on other sites

இந்த கால் நூற்றாண்டு கடந்த யுத்தத்தில் இடப்பெயர்வுகளின் வடிவங்கள் வேறு, ஆனால் வலி ஒன்று தான்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.