Jump to content

மாவீரர் பொது அறிவுப் போட்டி - யாழ் களம் 2013


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மேலே எங்களால் தொடுக்கப்பட்ட வினாவுக்கு விடை தந்த நுணா மற்றும் அஞ்சரனுக்கு பாராட்டுக்கள்.

 

விடுதலைப்புலிகள் அமைப்பு கொண்டிருந்த பொதுசன, தொடர்பாடல் ஊடகங்களின் (வானொலி.. தொலைக்காட்சி.. பத்திரிகைகள் மற்றும் மக்கள் தொடர்பு) பெயர்கள் என்ன..?! அவை முறையே எப்போது ஆரம்பிக்கப்பட்டிருந்தன..?!

Link to comment
Share on other sites

  • Replies 500
  • Created
  • Last Reply

முதலாவது களப்படப்பிப்பாளர் அர்ச்சுனா

 

சரியான விடை..இவர்  தமிழ்நாட்டிற்கு செல்லும்போது கடலில் மரணமானார்.  அப்பிடியே மற்ற இரண்டு கேள்விக்கும் பதிலை சொல்லி விடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான விடை..இவர் தமிழ்நாட்டிற்கு செல்லும்போது கடலில் மரணமானார். அப்பிடியே மற்ற இரண்டு கேள்விக்கும் பதிலை சொல்லி விடுங்கள்.

குறிசூட்டாளர் மயூரன்,கடற்புலி மாவீரரின் பெயர் தெரியாது மன்னிக்கவும்
Link to comment
Share on other sites

கடற்புலிகளின்  மிகவும் பிரபலமான ஓட்டி  லெப் கேணல்  டேவிட் அண்ணைதான்... !   அவர் தான் முதலாவது ஓட்டியோ நான் அறியேன்...   போராட்டத்தில் தன்னை முழுமையாக இணைக்க முன்னரே புலிகளுக்கு ஓட்டி வேலை செய்ய ஆரம்பித்தவர்...     இந்திய புலிகள்  போர் ஆரம்பித்த காலத்தில்  இந்தியாவில் இருந்த அவர் படகு கிடைக்காமல்   கட்டுமரம் ஒண்றில் மன்னார் வந்து  போரில் கலந்து கொண்டவர்...  

 

சூசை அண்ணைக்கு முன்  கடற்புலிகளின் முதலாவது தளபதியும் அவரே....  

 

 1990 ம் ஆண்டு கடற்புலிகளின் முதல் தாக்குதலான இலங்கை கடற்படையில் தாய் கப்பலை  வடமராட்ச்சி கடலில் கரும்புலி தாக்குதல் மூலம் அழித்த  கரும்புலிகள்   மேஜர் காந்தரூபன் , கப்ரன் வினோத் , கப்ரன் கொலின் தாக்குதலுக்கு  தலைமை ஏற்ற தளபதியும் லெப் கேணல் டேவிட் அண்ணையே... 

Link to comment
Share on other sites

சுலோசன் நீரடி நீச்சல் பிரிவு இல்லை...??    :unsure:

 

வீரவேங்கை சுலோஜன் 1986ல்  காரைநகரில்  தரித்து நிண்ற கப்பல் ஒண்றின் மேல் தாக்குதல் நடந்த நீரடியில் நீந்தி செண்ற போது எதிரியால் இனங்காணப்பட்டு  வீரச்சாவடைந்தவர்... 

Link to comment
Share on other sites

மேலே எங்களால் தொடுக்கப்பட்ட வினாவுக்கு விடை தந்த நுணா மற்றும் அஞ்சரனுக்கு பாராட்டுக்கள்.

 

விடுதலைப்புலிகள் அமைப்பு கொண்டிருந்த பொதுசன, தொடர்பாடல் ஊடகங்களின் (வானொலி.. தொலைக்காட்சி.. பத்திரிகைகள் மற்றும் மக்கள் தொடர்பு) பெயர்கள் என்ன..?! அவை முறையே எப்போது ஆரம்பிக்கப்பட்டிருந்தன..?!

 

புலிகளின் குரல் வானொலி .

புலிகளின் குரல் பத்திரிகை

சுகந்திர பறவை பத்திரிகை

தமிழீழ தொலைக்காட்சி

இவைகளுக்கு முன்னர் வீதிகளில் சுவரில் 'உறுமல் 'என செய்திகள் எழுதப்படும் .

இப்பொழுது இணையங்கள் பல .

 

"இந்தமண் எங்களின் சொந்தமண்" என்ற பாடல் 1990 மாவீரர் வாரத்தில் வெளியானது.

 

பாராட்டுக்கள் சிறி நானும் இப்பாடல் என நினைக்கிறன் .

 

உறவுகள் உங்களுகு தெரிந்தால் வேறு விடை அறிய தரலாம் நன்றி .

புலிகள் அமைப்பில் இயக்கத்தின்  முதலாவது கடலோடி  யார்?? எங்கே மரணமானார்.....முதலாவது  குறி பர்த்து சுடும் சினைப்பர்  தாக்குதல் வீரன் யார்.. எங்கே மரணமானார்..முதலாவது கள படப் பிடிப்பு போராளி யார். எங்கே  மரணமானார். இவை கூகிளிலோ. விக்கி யிலோ  அனேகமாக கிடைக்காது  எனவே  தேடி  பதில் சொல்லுங்கள்.

 

பதிலை தாருங்கள் அண்ணே ஆவலா இருக்குறம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் குரல் வானொலி .

புலிகளின் குரல் பத்திரிகை

சுகந்திர பறவை பத்திரிகை

தமிழீழ தொலைக்காட்சி

இவைகளுக்கு முன்னர் வீதிகளில் சுவரில் 'உறுமல் 'என செய்திகள் எழுதப்படும் .

இப்பொழுது இணையங்கள் பல .

 

 

பாராட்டுக்கள் சிறி நானும் இப்பாடல் என நினைக்கிறன் .

 

உறவுகள் உங்களுகு தெரிந்தால் வேறு விடை அறிய தரலாம் நன்றி .

 

பதிலை தாருங்கள் அண்ணே ஆவலா இருக்குறம் .

 

பதிலுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்.

 

தமிழீழ தேசிய தொலைக்காட்சிக்கு முன்னர் நிதர்சனம்..

 

தமிழீழ வானொலி..

 

தமிழீழ வானொலி சிங்கள சேவை..

 

ஈழநாதம்

 

Hotspring - ஆங்கில இதழ்

 

மக்கள் தகவல் பெட்டி.. (மக்களின் குறை நிறைகளை எழுதிப் போடும் பெட்டி)

 

இவைகளும் அடங்கும். இதற்கும் மேலதிகமாக இருந்தால் தெரிந்திருந்தால் கள உறவுகள் தெரியப்படுத்தலாம்.

 

நன்றி.

 

Link to comment
Share on other sites

பதிலுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்.

 

தமிழீழ தேசிய தொலைக்காட்சிக்கு முன்னர் நிதர்சனம்..

 

தமிழீழ வானொலி..

 

தமிழீழ வானொலி சிங்கள சேவை..

 

ஈழநாதம்

 

Hotspring - ஆங்கில இதழ்

 

மக்கள் தகவல் பெட்டி.. (மக்களின் குறை நிறைகளை எழுதிப் போடும் பெட்டி)

 

இவைகளும் அடங்கும். இதற்கும் மேலதிகமாக இருந்தால் தெரிந்திருந்தால் கள உறவுகள் தெரியப்படுத்தலாம்.

 

நன்றி.

 

 

நன்றி நெடுக் அண்ணா .

 

1< விடுதலை புலிகளால் ஒரு வழிகாட்டிக்கு (காடுகள் ஊடா பயணம் )மேஜர் பதவி கொடுக்க பட்ட பொதுமகன் யார் ?

 

Link to comment
Share on other sites

மயில்க்குஞ்சன் 

 

சரியான பதில்

அருமை உங்களுக்கு எங்கள் கரகோஷம் கே கரன் வாழ்த்துக்கள் .

 

மேஜர் மயில்குஞ்சு ..நாங்கள் நிக்கும் இடத்தில் இருக்கும் மரம் மண்ணின் நிறம் என்ன என்று கேட்டு விட்டு நீங்கள் நிக்கும் இடம் இன்ன காடு என சரியா சொல்லு நேர வந்து கூட்டிபோகும் ஒரு சிறந்த வீரன் .

 

 

(இவரின் வீரச்சாவு உடலில் அருகில் நின்று கருணாம்மான் உட்பட மட்டகளப்பு போராளிகள் பலர் கண்ணீர் விட்டு அழுதனர் )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மயில்க்குஞ்சன்

அந்தக் காலத்திலேயே 89/90 களில் m16 வைத்திருந்த துணைப்படை வீரர்
Link to comment
Share on other sites

குறிசூட்டாளர் மயூரன்,கடற்புலி மாவீரரின் பெயர் தெரியாது மன்னிக்கவும்

 

மயூரன் என்பது சரியான விடை. மயூரன் மல்லாகத்தை சேர்ந்தவன்.யாழ் கோட்டையில் இவனின் சினைப்பர் தாக்குதலில் இறந்து போன இராணுவத்தினர் ஏராளம். சண்டை ஒன்றில் கட்டுவன் பகுதில்  இராணுவத்தின் சினைப்பர் தாக்குதலில்  கொல்லப் பட்டான். அடுத்த கேள்வி கடலோடி என்றுதான் கேட்டிருந்தேன் அப்பொழுது கடற்புலிகள்  தொடங்கப்பட்டிருக்கவில்லை. ஆரம்பத்தில் புலிகளிற்கு சம்பளத்திற்கே  கடலோடிகள் வேலை செய்த காலகட்டத்தில் இயக்கத்தில் இணைந்து முதலாவது கடலோடியாக இருந்தவர். இவரது குடும்பத்தில் 3 பேர் மாவீரர்கள். இன்னும் கொஞ்சம் யொசித்து சொல்லுங்கள்.

அர்சுனா எழுத்தாளர் எஸ் பொ  வின் மகனா ?

 

அவரேதான். அருச்சுனா திலீபனால் புலிகள் இயக்கத்தின் பிரச்சார பத்திரிகையாக ஆரம்பத்தில் நடத்தப் பட்ட களத்தில் என்கிற பத்திரிகையிலும்.வேலை செய்தான்.அந்த பத்திரிகை்காகத்தான் படங்கள் எடுக்கத் தொடங்கியிருந்தான்.அந்த பத்திரிகையில்  திலீபன் எழுதும்  கட்டுரைகளிற்கு  தலைப்பு எழுதுபராக  நான் இருந்திருக்கிறேன்.   பத்திரிகை வேலையாக தமிழ்நாடு போய்க்கொண்டிருந்போதுதான்  கடலில் நடந்த விபத்தில் இறந்து போனான்.

Link to comment
Share on other sites

யாழ் பல்கலை கழகத்தில் அங்கு படித்த மாணவ மாணவிகளில் இலங்கையரசிற்கு எதிராக  உண்ணா விரதம் இருந்தார்கள்.  அப்படி இருந்தவர்களில் நான்கு மாணவிகளை  உண்ணா விரதம்  அகிம்சை  போராட்டத்தில்  நம்பிக்கை  கொள்ளாத புலிகள் இயக்கம்  இவர்களை  கடத்தி இந்தியாவிற்கு  அதாவது தமிழ் நாட்டிற்கு கொண்டு போயிருந்தார்கள். அவர்களில் ஒருவர்தான் மதிவதனி பின்னர்  பிரபாகரனின்  மனைவி . மற்றையவர்கள் பெயர் என்ன?? இவர்களை கடத்திக்: கொண்டு போனவர்  யார்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலை கழகத்தில் அங்கு படித்த மாணவ மாணவிகளில் இலங்கையரசிற்கு எதிராக  உண்ணா விரதம் இருந்தார்கள்.  அப்படி இருந்தவர்களில் நான்கு மாணவிகளை  உண்ணா விரதம்  அகிம்சை  போராட்டத்தில்  நம்பிக்கை  கொள்ளாத புலிகள் இயக்கம்  இவர்களை  கடத்தி இந்தியாவிற்கு  அதாவது தமிழ் நாட்டிற்கு கொண்டு போயிருந்தார்கள். அவர்களில் ஒருவர்தான் மதிவதனி பின்னர்  பிரபாகரனின்  மனைவி . மற்றையவர்கள் பெயர் என்ன?? இவர்களை கடத்திக்: கொண்டு போனவர்  யார்??

 

 வினோஜா, லலிதா, ஜெயா

http://vidhai2virutcham.com/2012/02/05/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/

 

கிட்டு மாமா

Link to comment
Share on other sites

யாழ் பல்கலை கழகத்தில் அங்கு படித்த மாணவ மாணவிகளில் இலங்கையரசிற்கு எதிராக  உண்ணா விரதம் இருந்தார்கள்.  அப்படி இருந்தவர்களில் நான்கு மாணவிகளை  உண்ணா விரதம்  அகிம்சை  போராட்டத்தில்  நம்பிக்கை  கொள்ளாத புலிகள் இயக்கம்  இவர்களை  கடத்தி இந்தியாவிற்கு  அதாவது தமிழ் நாட்டிற்கு கொண்டு போயிருந்தார்கள். அவர்களில் ஒருவர்தான் மதிவதனி பின்னர்  பிரபாகரனின்  மனைவி . மற்றையவர்கள் பெயர் என்ன?? இவர்களை கடத்திக்: கொண்டு போனவர்  யார்??

 

வினோஜா, லலிதா மற்றும் விஜயா

 

வாழ்க வளமுடன்

Link to comment
Share on other sites

ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார ஆணையாளர்  கிறிஸ் பற்றன் கிளிநொச்சியில் மேதகு தலைவர் பிரபாகரனைச் சந்தித்த ஆண்டு எது?

Link to comment
Share on other sites

ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார ஆணையாளர்  கிறிஸ் பற்றன் கிளிநொச்சியில் மேதகு தலைவர் பிரபாகரனைச் சந்தித்த ஆண்டு எது?

 

Nov 25, 2003

Link to comment
Share on other sites

தெய்வா அண்ணை, நெடுமாறனின் சகோதரரா 


ஜனனி அக்காவும் ஒன்று,மற்றவர்களின் பெயர் மறந்துவிட்டது 

Link to comment
Share on other sites

Nov 25, 2003

 

மிகவும் சரியான பதில்

நுணாவிலானுக்குச் சிறப்பான பாராட்டுக்கள்

வாழ்க வளமுடன்

Link to comment
Share on other sites

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் சுயசரிதையை Tigers of Lanka என்ற தலைப்பில் வெளிவந்த ஆங்கில நூலை எழுதிய

 

இந்தியப் பத்திரிகையாளர் யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

M. R. Narayan Swamy

Link to comment
Share on other sites

 

பெயர்கள் சரி ஆனால் கடத்திப் போனவர் கிட்டு அல்ல

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.