Jump to content

யாழைச் சேர்ந்த நபர் தமிழகத்தில் தற்கொலை - இரு மனைவிகளினதும் பிரிவே காரணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அந்த பெண்களை குற்றவாளியாக நினைத்ததால் அவ்வாறு இல்லாமலும் இருக்கலாம் என குறிப்பிட்டிருந்தேன். அதற்காக அந்த ஆணில் தான் பிழை என்று நான் கூறவில்லை. அத்துடன் இரண்டாவது மனைவி பற்றி அதில் நான் எழுதியும் இருக்கவில்லை. விவாகரத்து தொடர்பான உங்கள் கருத்துக்கு முதல் மனைவியை வைத்தே பதில் எழுதக்கூடியதாக இருந்தது.

அந்த பெண்கள் ஏமாற்றியதாக ஏன் எண்ன வேணும்? அந்த ஆணில் தான் பிழை என ஏன் எண்ன கூடாது? எனவும் கேட்கலாம். அவ்வாறு நாங்கள் மாறிமாறி கேட்பதற்காக எதுவும் உண்மை ஆகிவிடாது.

 

நான் பெண்கள் அனைவரும் நல்லவர்கள் என வாதிடவில்லை. ஆனால் ஒரு பிரச்சினை என்றவுடன் பெண்ணை குற்றம் சாட்டுவதையே நான் எதிர்க்கிறேன். ஆண்களிலும் பெண்களிலும் நல்லவர்களும் உள்ளார்கள், கெட்டவர்களும் உள்ளார்கள்.

முதல் மனைவியை இவர் துரத்தி விட்டும் இருக்கலாம். அல்லது இவரது செய்கைகள் பிடிக்காமல் அவர் பிரிந்து இருக்கலாம். போன்ற சந்தர்ப்பங்களும் உள்ளது. அதுதொடர்பான விபரமறிய இச் செய்தி போதாது. ஆனால் இரண்டாவது மனைவி விடயத்தில் இவர் பாதிக்கப்பட்டிருக்கலாம், அதனால் தற்கொலை செய்திருக்கலாம். அல்லது இவர் விட்ட தவறு ஏதும் தெரியவந்து மனைவி பிரிந்த பின்னர் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை பண்ணியும் இருக்கலாம். அருகில் இருப்பவர்களுக்கு தான் உண்மை தெரியும். எமக்கு எதற்கு இந்த ஆராய்ச்சி?

 

நல்ல சுவாரசியமாக இருக்குது இந்தக் கருத்து. ஆண்களும் நல்லம். பெண்களும் நல்லம். ஆண்களிலும் கெட்டவங்க இருக்காங்க.. பெண்களிலும் இருக்காங்க. இதைச் சொல்லிக் கொண்டு.. ஊடகம் செய்தி காணாதுன்னும் சொல்லிக் கொண்டு.. ஆராய்ச்சி ஏன் என்றும் கேட்டுக் கொண்டு.. மீண்டும் மீண்டும் ஒரு பக்கம் மட்டும் கேள்விகளை தொடுப்பது மட்டும் நியாயமாகாது..??!

 

நீங்கள் கேட்ட அத்தனை கேள்விகளை மாற்றி அந்தப் பெண்கள் மீதும் போடலாம். போட முடியும். அதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார் என்றால்.. அதற்கு வெறும் அவமானம் மட்டும் காரணமாக இருக்க முடியாது. மேலும்.. இது தற்கொலையா அல்லது அந்தப் பொண்ணுங்க செய்விச்ச கொலையா என்ற கோணத்திலும் விசாரிக்கப்பட வேண்டும்..??! அது மட்டுமன்றி இந்தத் தற்கொலைக்கு பிறர் குறிப்பாக அந்தப் பொண்ணுங்க தூண்டுதலாக இருப்பின் அவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் அவசியம். நீங்கள் அப்படி எதனையும் சொல்லேல்ல. மாறாக மீண்டும் மீண்டும்... அந்த செத்துப் போன மனிசன் மீதே.. குற்றம் சாட்டிற கேள்விகளை வைக்கிறீங்க. அப்புறம் எதுக்கு ஆராய்ச்சின்னும் கேட்டிட்டு முடிக்கிறீங்க. அது தான் சுவாரசியம் இங்கு.

 

நாங்க நேரிடையா.. குறித்த பெண்கள் மீது அதுவும் குற்றத்தை விசாரித்து அறியக் கூடிய உயிர் வாழும் இந்த சம்பவத்தோடு சம்பந்தப்பட்டங்க மீதே சந்தேகத்தை வைக்கிறம். அவர்களை நீதி விசாரணைக்கு உட்படுத்துவதன் மூலம் மட்டுமே இந்த மரணத்திற்கான உண்மைக்காரணம் தெரியும். மேலும்.. பிள்ளைகளையும் பெத்துக்கிட்டு ஓடி இருக்கினமின்னா.. உந்தப் பெண்கள் சந்தேகத்திற்கு இடமான ஆக்களே. அந்த வகையில் இந்த மரணம் தற்கொலையா... தூண்டிய மரணமா... அல்லது கொலையா என்பதே நிச்சயமில்லை..! ஊடகம் காவி வந்த செய்தியை அடிப்படையாக வைச்சு நீதியை தேடனுமே தவிர அந்த ஆண் மீது மட்டும் குற்றம் சுமத்த முடியாது. அது பக்கச் சார்ப்பான வாதம் ஆகும். குறித்த பெண்கள் மீது குற்றம் சுமத்த முடியும். காரணம்.. அவங்க தான் இப்ப தப்பி உள்ள இந்தச் சம்பவத்தோடு தொடர்புடைய மறு தரப்பு. :icon_idea::)

 

Link to comment
Share on other sites

இந்த செய்தியிலுள்ள தகவல்கள் போதாது. இதை வைத்து ஊகத்தின் அடிப்படையில் நாம் கருத்து தெரிவிக்க முடியாது. அப்படியிருக்கும்போது அந்த பெண்களில் தான் பிழை என எவ்வாறு சொல்வீர்கள் என தான் நானும் கேட்டேன். <_<

 

யார் மீது தவறு உள்ளது என்பது தெரியாமல் ஊகத்தின் அடிப்படையில் நாம் அனைவரும் கருத்து வைப்பதால் உண்மை தெரியப்போவது இல்லை.

இது விசாரித்து உண்மை அறியப்பட வேண்டிய ஒரு விடயம். ஆனால் தமிழக காவல்துறை இதில் மினக்கடாது என்றே நினைக்கிறேன். :rolleyes:

Link to comment
Share on other sites

எந்தத் தங்கை பற்றி ????? :D

 

 

உங்களின் கோள்விக்கு என்னால் விடைதர முடியவில்லை சுமேரியர் மன்னித்துக்கொள்ளுங்கள். :( 

 

நெடுக்கர் வந்துவிட்டார்தான் ஆனால் அவர் அர்த்தநாரீஸ்வரராக வந்துள்ளார்!. ஆணையோ, பெண்ணையோ குறை சொல்லமுடியாத நிலமை. இராமராக வந்திருந்தாலாவது சீதையைத் தீக்குளிக்க வைத்திருப்பார். இருந்தபோதும் அவர் இப்போ துளசியிடம் மாட்டிவிட்டார். :o  நெடுக்கரோ பிரமச்சாரி என்றறிந்தேன். மனைவி என்று ஒருத்தி இருந்தாலாவது அவவைக்கொண்டு சுற்றி வணங்கவைத்து துளசியைச் சாந்தப்படுத்தி விடலாம்.

 

தங்கை பற்றிக் கவலைப்படாதீர்கள்! தமிழ்நாட்டுப் பொலிசார் லேசுப்பட்டவர்களல்ல!. ராஜீவ்காந்தியின் கொலையைக் கண்டுபிடித்தமாதிரி, சேலைக்குச் சொந்தமான தங்கை யாரென்று விரைவிலேயே கண்டுபிடித்துச் சொல்லிவிடுவார்கள். :icon_idea: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் இரண்டு மனைவிகளுமே கொடியவர்களாக இருந்து இந்த மனிதர் இழகிய மனம் படைத்தரவாக இருந்திருக்கலாம். அந்தச் சோகத்தில் தன்னை மாய்த்துக் கொண்டிருக்கலாம். ஆனாலும் தற்கொலை முழு முட்டாள் தனமானதே... எந்தச் சோகமும் மனதால் வெல்லப்படக் கூடியதே. அந்தத் தருணத்தை தாண்டுவது தான் முக்கியம் மனிதனுக்கு.

 

உலகிற்கு அணு அறிவியலைத் தந்த.. அயன்ஸ்ரைனின் கூட விவாகரத்துப் பெற்றவர் தான். அதேபோல்.. தத்துவஞானி சாக்கிரட்டிஸ் கூட தனது கெட்ட மனைவியை வெறுத்தவர் தான். அவர்கள் எல்லாம்.. கெட்டவர்களோ...இயலாதவர்களோ...??!

 

ஏனோ தெரியல்ல சில ஆண்களுக்கு பெண்களை எப்பவுமே நல்லவங்களாவே காட்டிப் பழகிட்டு. அதனால் அவங்க குனிந்து வளைந்து நெழிந்து..... பல நன்மைகளைப் பெறுறாங்க போல. ஆனால் சமூகத்தில்.. யதார்த்தம் என்பது வேறாக உள்ளது. :)

 

 

 

 

இங்கு தனிநபரின் வாழ்க்கையைப்பற்றிய பட்டிமன்றம் நடக்கவில்லை, 'தற்கொலை கூடாது" என்பதே பொதுப்படையான கருத்து.

 

 

தன் பிள்ளைகளைப்பற்றி சிறிதும் யோசிக்காமல் அவர்களுக்காக வாழவேண்டும் என்ற பொறுப்பில்லாத ஒரு அப்பனுக்கு!....' எந்தவகையில் அனுதாபப் பட முடியும்?!.

 

அதுக்குப் பிறகும் இன்னொரு மனுஷி கேட்குதா இவருக்கு?!.

 

 

நெடுக்ஸ் அண்ணை, 'வெறும் சுகத்துக்காகத்தான் பெண்கள் அலைகின்றார்கள் என்றால், அவர்கள் பிள்ளையைச்சுமந்து கஷ்டப்பட வேண்டிய தேவை இல்லை!

 

அவரின் தற்கொலை கண்டிக்கத்தக்கதே அன்றி எந்த விதத்திலும் அவருக்காகப் பரிதாபப் படத்தோன்றவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனப்பா அந்தப் பச்சைக்குழந்தையை இங்கை கூப்பிடுறியள். பாவம் பிள்ளையை கொஞ்சம் படிக்க விடுங்கோவன். :lol:

 

 

என்ன  செய்வது சகோதரி

ஆண் சிங்கங்கள் :lol:  எல்லோரும்

வண்டியில் பூட்டிய  மாடுகள் ஒரே அளவில் ஓடணும் என்ற உயர்ந்த லட்சியத்துக்காக :o

வாழ்க்கை எனும் சிறையில் மாட்டி வாயில்லாப்பூச்சிகளாக :D

மௌனமாக  வண்டியை  இழுக்க

இவர் ஒருவர் தானே

தனியே  நின்ற எமக்காக நொங்கு நொங்கு என்று  வாங்கிக்கட்டினாலும் :D

வாதிடுகின்றார்... :D  :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.