Jump to content

புலமைப்பரிசில் சித்தியடைந்த 88மாணவர்களுக்கான நேசக்கரம் கௌரவிப்பு நிகழ்வு.


Recommended Posts

புலமைப்பரிசில் சித்தியடைந்த 88மாணவர்களுக்கான நேசக்கரம் கௌவிப்பு நிகழ்வு.

 

மண்முனை மேற்கு கல்வி வலய பாடசாலைகளின் அதிபர் சங்கமும் நேசக்கரம்பிறைட் புpயூச்சர் அமைப்பின் உப அமைப்பான அரவணைப்பு அமைப்பும் இணைந்து 88 புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு மட்டகளப்பு கரடியானாறு மகாவித்தியாலய மண்டபத்தில் 29.10.2013 அன்று கோட்டக்கல்விப் பணிப்பாளர் முருகேசுப்பிள்ளை (ஏறாவூர்பற்று மேற்கு) தலைமையில் இடம்பெற்றது.

DSCF5869-682x1024.jpg

நிகழ்வில் பிறைட் பியுச்சர் நேசக்கரம் அமைப்பின் அமைப்பாளர் திரு.ஜனனன் , சமூக ஒருங்கிணைப்பாளர் திரு. ரஜிகாந்த்  ,அரவணைப்பு அமைப்பின் தலைவர் திரு.றொஷான் , செயலாளர் திரு.அருணா , முன்னாள் மாகாண கல்விப்பணிப்பாளர் திரு.எ.எம்.இ.போல் , பிரதேச செயலாளர் ஏறாவூர்பற்று செங்கலடி திரு.உ.உதயசிறீதர் , கல்வி அபிவிருத்தி பிரதிக்கல்விப்பணிப்பாளர் திரு.எஸ்.மகேந்திரகுமார், ஆரம்பக்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு.கே.மாணிக்கப்போடி, இணைப்பாளர் ZOAநிறுவனம் திருமதி சாந்தினி சிவனேசன் ஆகியோருடன் விசேட அதிதிகளாக அவ்வலயத்தில் அடுத்த வருடம் பலமைப்பரிசில் தோற்றும்  மாணவர்களும்  சித்தியடைந்த மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.

யுத்தத்தினால் கடுமையாகப் பாதிப்புற்ற பிரதேசமாகையால் தேர்ச்சிப்புள்ளியைப் பெற்ற 83 மாணவர்களுக்கும் வெட்டுப்புள்ளியில் (155மேற்பட்ட புள்ளிகள் பெற்றவர்கள்) தேர்ச்சி பெற்ற 5மாணவர்களுக்கும் பாடசாலைக் கற்றல் உபகரணங்களும் முதலாவது இடத்தைப் பெற்ற மாணவி கு.சாளினி அவர்களுக்கு யேர்மனி ராகவன் பிரவீனா (வயது 9) ராகவன் சுபீட்சனா(வயது 5) ஆகியோரின் நிதியுதவியில் மிதியுந்தும் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு சிறப்புச்சித்தியடைந்த 5மாணவர்களுக்கும் சேமிப்புக்கணக்கில் 500ரூபாய் பணமும் வைப்பிலிடப்பட்டு வழங்கப்பட்டது.

DSCF5977-1024x682.jpg

சென்ற வருடம் தேர்ச்சிப் புள்ளியில் 2மாணவர்கள் மட்டுமே இங்கு சித்தியடைந்திருந்தனர். இவ்வருடம் எமது அமைப்பின் ஆதரவில் நடைபெற்ற 48நாள் பயிற்சி வகுப்பின் பயனாக 88மாணவர்களைத் தேர்ச்சிபெற வைத்துள்ளோம்.

 

எதிர்வரும் காலங்களில் யுத்தத்தால் பாதிப்புற்ற கோட்டக் கல்வி வலய மட்டத்தில் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புக்களை நடாத்தி மேலும் மாணவர்களின் அடைவுமட்டத்தினை அதிகரிக்கும் நோக்கில் எம்மால் முன்னெடுக்கப்படும் நேசம் இலவச கல்வித்திட்டத்திற்கான ஆதரவினை புலம்பெயர்ந்து இன்னும் நிலத்தின் நினைவோடும் தமிழ்க் குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்தில் அக்கறையோடும் வாழும் தமிழர்களிடம் உரிமையோடு உதவிகளை வேண்டி நிற்கிறோம்.

 

இவ்வருடம் 5ம் வகுப்பு புலமைப்பரிசில் வழிகாட்டி வினாத்தாழ்கள் 15ஆயிரம் மாணவர்களுக்கு வழங்கியதோடு மாலைநேர பிரத்தியேக சிறப்பு வகுப்புக்களையம் நடாத்தியிருந்தோம். இம்முயற்சிக்கு நிதியாதரவு வழங்கிய புலம்பெயர்ந்து வாழும் அமெரிக்காவில் வாழும் திரு.தவேந்திரராசா ஐயா, மற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத அவுஸ்ரேலிய உறவுக்கும்  எங்களது சிறப்பான நன்றிகள்.

 

மாணவர் கௌரவிப்பு நிகழ்வை ஒருங்கமைத்து சகல ஒத்தழைப்புகளையும் வழங்கிய அரவணைப்பு அமைப்பின் தலைவர் றொஷான் , செயலாளர் அருணா ஆகியோருக்கு வேப்பவெட்டுவான் ஆசிரியர் மோகன்ராஜ் அவர்களுக்கும் எமது சிறப்பான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

படங்கள் :-

DSCF5852-150x150.jpg DSCF5854-150x150.jpg
DSCF5862-150x150.jpg DSCF5869-150x150.jpg
DSCF5871-150x150.jpg DSCF5872-150x150.jpg DSCF5873-150x150.jpg
DSCF5875-150x150.jpg DSCF5880-150x150.jpg
DSCF5885-150x150.jpg DSCF5895-150x150.jpg DSCF5906-150x150.jpg
DSCF5914-150x150.jpg DSCF5921-150x150.jpgDSCF5922-150x150.jpg

DSCF5933-150x150.jpg DSCF5945-150x150.jpg

DSCF5960-150x150.jpg

 

http://nesakkaram.org/ta/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F/

Link to comment
Share on other sites

தலைப்பில் உள்ள எழுத்து பிழையை திருத்திவிடவும்.

 

நன்றிகள் சிறி மாற்றியுள்ளேன்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.