Jump to content

இலங்கை கலையுலகின் துருவ நட்சத்திரம்


Recommended Posts

 

 
Rajeswari.jpg

அத்தனை பணிகளுக்கு மத்தியிலும் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்கள் அனுப்பி வைத்த கைபேசி குறுஞ்செய்தி - சகோதரி விசாலாக்‌ஷி தேம்பி அழுத வண்ணைமும். சகோதரர் BH குரல் கம்ம தொலைபேசி வாயிலாகத் தந்த அந்த சோகத் தகவல் என்னை அதிர வைத்தது - பதற வைத்தது - துக்கத்தால் தொண்டையை இறுக வைத்தது.

ராஜேஸ்வரி சண்முகம் - இலங்கை கலை உலகின் துருவ நட்சத்திரம் - யாழ்ப்பாணம் சென்ற இடத்தில் மாரடைப்பால் இயற்கை எய்தினார் என்பதுதான் இதயத்தைக் கனக்கச் செய்த அந்த சோகச் செய்தி.

ஒன்றா இரண்டா அறுபது ஆண்டுகாலப் பழக்கம் - கலை உலகில் இணைந்த பயணம். வர்த்தக ஒலிபரப்பு பிரபல்யமாகு முன்பு, தேசிய ஒலிபரப் பொன்றே கலை உலக ஆக்கங்களுக்கு வடிகாலாய் அமைந்த காலை, அமரர் “சானா” சண்முகநாதன் நெறியாழ்கையில் கொடி கட்டிப் பறந்த “நாடக அரங்கில், அச்சாணி போல் திகழ்ந்த இரு அங்கங்கள் நானும் சகோதரி ராஜேஸ்வரி பிச்சாண்டியும்.

ஆண்களில் ஸ்ரீதர் பிச்சையப்பாவின் தந்தை டி.எஸ்.பிச்சையப்பா, “மாடசாமி” சோமசுந்தரம், தாசன் பெர்னாண்டோ, ரொசாரியோ பீரிஸ், விக்டர், ”விதானையார்” கார்த்திகேசு சிவத்தம்பி, வீ.சுந்தரலிங்கம் ”ரேடியோ மாமா” சரவணமுத்து, எம்.எஸ்.ரத்னம், TPO நடராஜா என்று ஒரு ஜாம்பவான்கள் பட்டாளம். அவர்களுடன் நானும்..! 

பெண்களில் ஃபிலோமினா சொலொமொன், பஞ்சவர்ணம் லக்‌ஷ்மணன், ஆனந்தி சுப்ரமண்யம் (சூர்யபிரகாஷ்), சரசாம்பிகை சுப்ரமனியம், ஜோசஃபீன் ரொசாரியோ, ஜோசஃபீன் கோஸ்தா, பரிமளாதேவி விவேகானந்தா, தீரா ஆறுமுகம் என்று திறமைசால் கலைஞிகள் என்றோர் கூட்டம், அவர்களுள் எழுத்தாளர் சண்முகத்தை மணந்து கொண்டதால் திருமதி சண்முகமாகிவிட்ட ராஜேஸ்வரியும்..!

எழுத்தாளர்களில் கலாநிதி கைலாசபதி, இலங்கையர்கோன், தாளையடி சபாரத்னம். ஸக்கரியா சிமியோன், சண்முகம், நஸ்ருத்தீன், NSM ராமையா, சில்லையூர் செல்வராசன், காவலூர் ராசதுரை, “எஸ்போ” என்ற அற்புதமான ஆற்றல் மிக்கவர்களின் படைப்புகளை கூர்த்த மதியுடனும், தேர்ந்த ஞானத்துடன், மேற்சொன்ன கலைஞர்களுடைய அபாரத் திறமையாலும் மெருகுசேர் நாடங்களை உருவாக்கி இலங்கை வானொலி நிகழ்ச்சிகளிலேயெ “நாடக அரங்கை” தனித்வத்துடன் திகழச செய்தவர் அந்த மாபெரும் கலைஞர் “சானா”

சண்முகநாதன்...!

.

சானாவுக்கு யாரும் - எந்தக் கலைஞரும் தென்னிந்திய நட்சத்திரங்களின் பிரதிபலிப்பு என்று சொல்வது கட்டோடு பிடிக்காது. அதனால் தன்னை இலங்கை சிவாஜி, இலங்கை MR ராதா என்று சொல்லிக் கொண்டு வந்தவர்கள் ‘ஒடிசன்’ கட்டத்திலேயே கழற்றி விடப்பட்டு விடுவார்கள்.

ஆனால் இதில் ஒரு நகை முரண் உண்டு. என்னை சிவாஜியாகவும், ராஜேஸ்வரியை நடிகை பத்மினியாகவும், விசாலாக்‌ஷியை நடிகை சாவித்திரியாகவும் வர்ணித்து நேயர்கள் எழுதும் கடிதங்களை தனியாக எடுத்து வைத்து பிறகு எங்களிடம் ரகசியமாகக் காண்பித்து தானும் குதூகலிப்பார். அத்துடனில்லை, “நீங்கள் நீங்களாக இருக்க வேண்டும் வேறு யாராகவும் இருக்கக்கூடாது என்பதற்கு ரசிகர்கள் உங்களுக்கு விடும் எச்சரிக்கை இது” என்று அதற்கு ஒரு புது அர்த்தமும் சொல்வார். ஆனால் நாங்கள் யாரும் யாரையும் ‘கொப்பி’ அடிப்பதில்லை என்பது அவருக்கும் தெரியும் எங்களுக்கும் நன்றாகத் தெரியும்.

ஒரு முறை ஒரு விருந்தில் என்னை பாடச் சொன்னார்கள். நான் குரலை மாற்றி ஜெயராமன் போலவே “ஈடற்ற பத்தியின்...” பாடிக் கொண்டிருந்தேன். திடீரென்று, உச்ச ஸ்தாயியில் ஒரு வீறிட்ட அலறல், பிறகு உணர்ச்சிப் பிழம்பாய், அந்தப் படத்தில் பத்மினி பேசிய வசனம், கைங்கர்யம் ராஜேஸ்வரி..!. சற்று நேரம் அரண்டு அந்தரப் பட்டுப்போன கூடியிருந்தவர்-களிடமிருந்து கிளம்பிய ஆரவார கோஷம் அந்தக் கட்டிடத்தையே கிடுகிடுக்க வைத்தது.

நானும் ராஜேஸ்வரியும் நூற்றுக்கணக்கான வானொலி நாடகங்களில் நடித்திருக்கிறோம். ஆனால் மேடை நாடகம் என்பது ஒன்றே ஒன்றுதான். அது “ லண்டன் கந்தையா “ இந்த நாடகத்துக்கு தொடக்கம் குறித்தவர் இலங்கையர்கோன் ஆனால் தொடர்ந்து எழுதியவர் சண்முகம்.

நான் நாடக அரங்குக்கு ‘ஒடிசன்’ இல்லாமலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட போது ‘அரைக் களிசான் போட்ட ஒரு 12 வயதுப் பொடியன். ராஜேஸ்வரி எனக்குப் பிறகுதான் உள்ளே வந்தார். என்னை விட பல வயது மூத்தவர். இலங்கையில் நீ, நான் என்று பேசும் வழக்கமில்லை. ஆனால் என்னை அவர் அப்படித்தான் அழைப்பார். கேட்டால், “இந்தப் பொடிப்பயல் என் உடன் பிறவா தம்பி, வேறு எப்படிக் கூப்பிடுவது என்பார். நானும், “சரிதான்... போ.. கிழவி” என்பேன்.

ஆனால் நாடகங்களில், காதல் காட்சிகளில், உருகி வழிவதுண்டு. நாடகங்களை தொடர்ந்து கேட்கும் ஒருவர், “உங்கள் மகனுடைய போக்கு சரி இல்லை’ என்று என் தந்தையிடம் ‘போட்டுக் கொடுக்க” என் தந்தை மெல்ல ரொசாரியோ பீரிசிடம் விசாரிக்க, அவரோ, “ ஐயோ, உங்க பையன் பச்சக் குழந்த, அதனாலே நாங்க குழந்தைகளுடைய பால் மாவின் பெயரான “ கவ் & கேட்” (Cow & Gate) என்று சொல்லித்தான் அவரை செல்லமாக அழைப்போம் என்று சொல்ல, உடனிருந்த ராஜேஸ்வரி, “ஐயா இது போன்ற ஒரு பிள்ளையைப் பெற நீங்களும் ஜபாரின் அம்மாவும் பெருமைப் பட வேண்டும்” என்றிருக்கிறார். அதற்கு என் தந்தை, “அவனுக்கு தாயார் இல்லை அம்மா” என்று கண்கலங்க , அதுவரை அது பற்றித் தெரியாதிருந்த ராஜேஸ்வரி அழுதே விட்டாராம். அதன் பிறகும் ராஜேஸ்வரி என் மீது செலுத்திய பாசமும் பரியும் உண்மையில் ஒரு தாயுடையது.

சமீபத்தில் கொழும்பு வந்திருந்த போது அவரை தொலை பேசியில் அழைத்தேன். CALLER TUNE என்ன என்கிறீர்கள், தனுஷின் “கொலவெறி..டி..”. “கிழவிகளுக்கெல்லாம் ஏன் இந்தக் கொலவெறி..? என்று நான் கேட்ட போது, மறுமுனையில் கேட்டகணீர் வெடிச் சிரிப்பு ராஜேஸ்வரியின் ‘ட்ரேட்-மார்க்’. அது இன்னும் என் காதுகளில் ரீங்கரித்துக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் ரஸ்மினின் ‘ சமூக வானொலி” நூல் வெளியீட்டு விழாவில், அங்கு வந்திருந்த பிரமுகர்களிடமெல்லாம், அவர்களது கை எழுத்துக்களை திரட்டி அதை ராஜேஸ்வரியக் கொண்டு என்னிடம் கொடுக்கச் செய்து எங்கள் இருவரையும் வித்தியாசமான முறையில் கௌரவித்தார்கள். அப்போது சிவாஜிக்கு பத்மினி அளிக்கும் கௌரவம் என்றார் அவருக்கே உரிய வாஞ்சையுடன்..!

ராஜேஸ்வரிக்கு அழகான கணீரென்ற குரல் - தெளிவான அட்சர சுத்தமான உச்சரிப்பு - கையாளும் பாத்திரத்தின் மீது பரிபூரண ஆளுமை - அற்புதமான நடிப்பு. இவை அத்தனையும் ராஜேஸ்வரியின் தனிச் சிறப்புகள் - முத்திரைகள். பிற்காலத்தில் வர்த்தக ஒலிபரப்பில் ராஜேஸ்வரியும் விசாலாக்‌ஷியும் கொடி கட்டிப் பறந்ததற்கு அவர்களது சொந்தத் திறமை போக “நாடக அரங்கு” என்ற பயிற்சிப்பட்டறையில் பெற்ற பட்டறிவும் ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல.

அடக்கத்துடன் ஒன்று சொல்வேன். உலகிலேயே மூத்த தமிழ் ஒலிபரப்பாளர்களாக ஆண்களில் நானும், பெண்களில் ராஜேஸ்வரியும் இருந்தோம். இன்று அதில் ஒரு பாதி இல்லை. காலம் புதுப் புது கலைஞர்களை தோற்றுவித்துக் கொண்டே இருக்கும் ஆனால் இழந்தவைகளை ஈடு செய்ய அதனால் இயலாது - முடியாது. அந்த வகையில் ராஜேஸ்வரியினுடையது ஈடு செய்ய முடியாத பேரிழப்பே.

மூத்த ஒலிபரப்பாளன் என்கிற முறையில் சில நண்பர்கள் சேர்ந்து ஒரு விழா எடுக்க என்னை அணுகினார்கள். அப்படி ஒன்று நிகழ்வதாயின் ராஜேஸ்வரியையும் இந்தியாவுக்கு அழைத்து அந்த விழாவில் கௌரவிக்கச் செய்ய வேண்டும் என்று அவாக் கொண்டேன்.

ஆனால், இறைவன் இந்த சாமான்யனை முந்திக் கொண்டு மரணம் என்னும் மஹா பெரிய மகத்தான விருதை - கௌரவத்தை ராஜேஸ்வரிக்கு வழங்கி விட்டான்.

உள்ளத்து உணர்வுகளை எல்லாம் ஒன்று திரட்டி ஒன்று சொல்கிறேன்... போ கிழவி போ...எங்கள் உணர்வுகளில் என்றென்றும் கலந்திருப்பாய்....இதயங்களில் நிறைந்திருப்பாய்....கலாபிமானி களின் நெஞ்சங்களில் கண்னியத்துடன் கொலு வீற்றிருப்பாய்... கடந்த கால நினைவுகள் எண்னத் திரையில் பயணிக்க... கண்ணீர் கண்களை நிறைக்க பிரியா விடை தருகிறோம்... போ கிழவி..போ.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.