Jump to content

ஈழத்துத் திரைப்படப் பாடல்களும் குறிப்புகளும்


Recommended Posts

அவள்தான் ‘அவள் ஒரு ஜீவநதி’.........................

 

பாடலுக்கு நன்றி

 

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

ஆக்கபூர்வமான பகிர்வுக்கு நன்றி . பாதுகாக்க பட வேண்டிய கலைப் பொக்கிஷங்கள்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

Link to comment
Share on other sites

  • Replies 56
  • Created
  • Last Reply

‘காத்திருப்பேன் உனக்காக’
 

மலையகத்தில் வத்தேகமவில் உள்ள ஒரு தமிழருக்கு எஸ்றேற்றும் பல தொழில்களும் சொந்தமாக இருந்தன. சினிமாவைத் தன் வாழ்நாளில் பார்க்க விரும்பாத இந்தத் தந்தை, தன் தொழிலின் நிர்வாகத்தைப் புதல்வர்களுக்குக் கொடுத்தார். புதல்வர்களுக்கு சினிமாமீது தனிப்பிரியம்.

இந்தப் புதல்வர்கள் ஒரு சிங்களப் படம் தயாரிக்கலாமா? என்று எண்ணினார்கள். ஆனால், தேசிய தமிழ்த் திரைப்பட வரலாற்றுக்கு முதலில் தமது பங்களிப்பைச் செய்யலாம் என்று பின்பு தீர்மானித்தார்கள். அதன்படி ‘காத்திருப்பேன் உனக்கா’ என்ற பெயரில் தமிழ்ப் படம் ஒன்றைத் தயாரிக்கலாம் என்று முடிவு செய்தார்கள். அப்படி முடிவு செய்த சகோதரர்கள்தான், எம். ஜெயராமச்சந்திரன், எம். தீனதயாளன், எம். ஜெயராஜ் ஆகியோராவர்.

படத்துக்கான கதை தம்பி ஜெயராஜிடம் ஏற்கனவே தயாராக இருந்தது. அது ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. கலைத்துறையில் இவர்களது குருவான நவாலியூர் நா. செல்லத்துரை இம்மூலக்கதைக்கான திரைக்கதையையும், வசனங்களையும், பாடல்களையும் எழுதினார்.

இந்த மூன்று சகோதர்களின் உறவினர் துரைபாண்டியன். இவர் சினிமா உலகில் அனுபவப்பட்டிருந்தார். இயக்குநர் பொறுப்பை இவரிடம் கொடுக்கலாம் என்றால், அவர் திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் தன் பெயரைப் பதிவு செய்திருக்கவில்லை. எனவே, இப்பொறுப்பு எஸ்.வி. சந்திரன் என்ற இளைஞருக்கு வழங்கப்பட்டது.

இளைஞர் எஸ்.வி. சந்திரன் நீண்ட காலமாகவே சிங்களப்பட உலகில் எடிட்டராகவும், உதவி இயக்குநராகவும் பணியாற்றியவர். ‘குத்துவிளக்கு’ திரைப்படத்தின் எடிட்டரும் இவரேதான். ‘துப்பத்தாகே ஹித்த வத்தா’ என்ற சிங்களப் படத்தின்மூலம் முதன் முதலாக டைரக்டராக அறிமுகமானார். துரை பாண்டியன் இப்படத்தின் இணை இயக்குநராகக் கடமையாற்றினார்.

உதவி டைரக்டராக மூனாஸ் தெரிவுசெய்யப்பட்டார். நிதி மேற்பார்வைப் பொறுப்பை எஸ்.வி. பாலசுப்பிரமணியம், வி. தர்மலிங்கம், பி. சுப்பையா ஆகியோர் பொறுப்பேற்றார்கள்.

பல வருடங்களுக்கு முன் கண்டியிலிருந்து ‘செய்தி’ என்ற பத்திரிகை வெளிவந்தது. அதன் ஆசிரியர் நாகலிங்கம். அவர் மகன் சிவராம், நல்ல அழகான இளைஞன். இவரே இப்படத்தின் கதாநாயகனாக நடித்தார்.

கொழும்பைச் சேர்ந்த கீதாஞ்சலி என்ற பெண்கதாநாயகியாக நடித்தார். கண்டி விஸ்வநாதராஜா நாடகங்களில் அனுபவப்பட்டவர். ஏற்கனவே ‘நிர்மலா’வில் நடித்தவர். இவருக்கும் இப்படத்தில் ஒரு பாத்திரம் வழங்கப்பட்டது. ரவிசெல்வராஜ் பிரதான உப பாத்திரத்தில் நடித்தார்.

ஏ.எம்.லதீப் மேடை நாடகங்கள் பலவற்றில் நடித்து அனுபவப்பட்டவர். இவர் இப்படத்தில் தந்தை பாத்திரத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டார். நா.செல்லத்துரையும், தர்மலிங்கமும் கலைத் தாகமுள்ளவர்கள். இவர்கள் இருவரும் இப்படத்தில் முக்கியமான உப பாத்திரங்களாகத் தெரிவுசெய்யப்பட்டார்கள்.

மற்றும் சந்திரகுமார், மித்திரகுமார், குலேந்திரன், பாலகிருஷ்ண், கிருஷ்ணராஜா, ருக்மணிதேவி, ஸ்ரீதேவி, கிருஷ்ணகுமாரி, சந்திரா, ஜெயதேவி, நிர்மலா, ரத்னகலா, வசந்தி ஆகியோர் நடிக்க ஒப்பந்தமானார்கள்.

இது எம். முத்துசாமி இசை அமைத்த 5வது தமிழ்ப்படம். ஆரம்பத்தில் திலகநாயகம் போல் பின்னணி பாடினார். அது வானொலியிலும் ஒலிபரப்பப்பட்டது. பின்பு அவர் பாடிய பாடல்களை ஜோசப் ராஜேந்திரன் பாடினார். சுஜாதா அத்தநாயக்காவும் பாடினார்.

ஜெய்ந்திரா மூவிஸ் ‘காத்திருப்பேன் உனக்காக’ படத்தின் ஆரம்ப விழா 6.9.76இல் மாத்தளை முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்றது. ஆரம்பப் படப்பிடிப்பு அங்கேயே தொடங்கியது. படப்பிடிப்பு தொடர்ந்து கொழும்பு, கண்டி, தெஹிவளை மிருகக்காட்சிச்சாலை போன்ற இடங்களில் நடைபெற்றது.

9மாதங்களின் பின் படம் சம்பூர்ணமாகியது. 24.06.77இல் இலங்கையின் பல நகரங்களிலும் 7 தியேட்டர்களில் திரையிடப்பட்டது.

ராஜாவை, ராஜி காதலிக்கிறாள். ஆனால், ராஜாவோ அத்தை மகள் சாந்தியைக் காதலிக்கிறான். ராஜியின் சகோதரனான கண்ணன் ராஜாவின் தங்கையான வனிதாவைக் காதலிக்கிறான்.

ராஜா, சாந்தா திருமணம் நடைபெற இருந்த சமயத்தில், வனிதாவைக் கெடுத்துவிட்டுத் தனது தங்கை ராஜியின் கழுத்தில் தாலி ஏறினால் வனிதாவுக்கு வாழ்வளிப்பேன் என்கிறான்.

தங்கைக்கு வாழ்வு கொடுப்பதா? அல்லது சாந்தாவை மணந்து வாழ்வதா? என்ற சிக்கலில் விழுகிறான். முடிவில் தன் தங்கைக்காகக் காதலியின் சம்மதத்துடன் ராஜியைத் திருமணம் செய்ய முன்வருகிறான் ராஜா. இதுதான் ‘காத்திருப்பேன் உனக்காக’ திரைப்படத்தின் கதைச் சுருக்கமாகும். எல்லாம் சரிதான் கதையின் முடிவுதான் சிறந்ததாக அமையவில்லை.

1977ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இலங்கையில் ‘கீதா’ என்ற சினிமா பத்திரிகை வெளிவந்துகொண்டிருந்தது. இதன் ஆசிரியர் தமிழ்நெஞ்சனாவார். இவருக்கு உதவியாக ஜெயசீலனும் அதே பாத்திரிகையில் இருந்தார். இந்தக் ‘கீதா’ இலங்கையின் தமிழ்த் திரைப்பட வளர்ச்சியில் அதிக பங்களிப்புச் செய்திருக்கிறது. மற்ற தேசிய பத்திரிகை செய்யாத அளவுக்கு அதிகமாகவே உதவியிருக்கிறது.

இந்தக் ‘கீதா’வும் அப்பொழுது ‘காத்திருப்பேன் உனக்காக’ படத்துக்கு விமர்சனம் எழுதியது.

‘… ஒருகாதல் கதை, கருத்துள்ள குடும்பக் கதையாகவும் அமையும் என்பதை இப்படம் நிரூபித்திருக்கிறது. வசனத்தின் சிறப்புகள் படம் முழுவதும் பரவி இருந்தாலும் முக்கிய நடிகர்களின் வாயிலிருந்து வெளிப்படும்போது உயிர்ப்பு பெறுகிறது…. கதாநாயகன் சிவராமின் நடிப்பு சிறப்பாக அமைந்திருக்கிறது. விஸ்வநாத ராஜாவின் நடிப்பு அருமை. செல்வராஜின் துடிப்பு வெகுசிறப்பாக இருக்கிறது. கீதாஞ்சலி காதல் காட்சிகளைவிட, சோகக் காட்சிகளில் எடுபடுகிறார். ஸ்ரீதேவி வசனங்களை அழுத்தாமல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். கிருஷ்ணகுமாரி கோபப்படும்பொழுது சிறப்பாக இருக்கிறது. செல்லத்துரை, லதீப், தர்மலிங்கம் ஆகியோர் தந்தைகளுக்குரிய தாக்கமான நடிப்பினைச் சிறப்பாகவே வெளிப்படுத்துகிறார்கள். சந்திராவின் தாய்மை நடிப்பிலும் தரம் இருக்கிறது. ருக்மணிதேவி, தான் ஒரு பழம்பெரும் நடிகை என்கதை நிரூபிக்கிறார்.

ஆர். முத்துசாமி பாடல்களுக்கு ஏற்றவகையில் இசை அமைத்திருந்தார். ஒளிப்பதிவாளர் எஸ். தேவேந்திரா தனது தனித்திறமையை நிரூபித்திருக்கிறார். எடிட்டராகவும் டைரக்டராகவும் கடமையாற்றி சிறப்பான ஒரு படத்தை நமக்கு அளித்திருக்கிறார் எஸ்.வி. சந்திரன்.

இலங்கையில் ஒரு தரமான தமிழ்ப்படம் தயாரிக்கவேண்டுமென்ற இலட்சிய வேட்கையில் பல இலட்சங்களை வாரி இறைத்து ஒரு படத்தைத் தயாரித்து இருக்கின்றனர். ஜெயேந்திரா மூவீஸார் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்று தயாரிப்பாளருக்கு ‘சப்போட்’ பண்ணி விமர்சனம் எழுதியது.

 

தகவல்: இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை - தம்பிஐயா தேவதாஸ் (B.A.(Cey.), B.Ed.(Cey.), Diploma in Journalism.

 

‘காத்திருப்பேன் உனக்காக’ திரைப்படத்தில் இருந்து….  நினைவெல்லாம் போதுமா..?

பாடியவர்கள்: ஜோசேப் ராஜேந்திரன், சுஜாதா அத்தநாயக்க

இசை: R. முத்துசாமி

 

https://www.youtube.com/watch?v=m6K7MIFxUdQ

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குத்துவிளக்கு படம் பார்த்தேன். என்னை எமது பழைய வாழ்க்கைக்கு கொண்டு சென்று விட்டது. நல்ல பாடல்கள்.

ஈழத் திருநாடே என்னருமைத் தாயகமே

இருகரம் கூப்புகிறோம் வணக்கம் அம்மா.....

நல்ல திரி. பகிர்வுக்கு நன்றி

Link to comment
Share on other sites

‘காத்திருப்பேன் உனக்காக’ திரைப்படத்தில் இருந்து….  ஆரம்பம் ஆனதெங்கே?

பாடியவர்கள்: ஜோசேப் ராஜேந்திரன், சுஜாதா அத்தநாயக்க

இசை: R. முத்துசாமி

 

http://www.youtube.com/watch?v=5-S-hsu9os8

‘காத்திருப்பேன் உனக்காக’ திரைப்படத்தில் இருந்து….  இன்று நமக்கொரு உதயம்!

பாடியவர்கள்: ஜோசேப் ராஜேந்திரன், சுஜாதா அத்தநாயக்க

இசை: R. முத்துசாமி

 

http://www.youtube.com/watch?v=xzkfj53kpqQ

காத்திருப்பேன் உனக்காக’..அருமை,,நன்றி

 

வருகைக்கு நன்றி!!  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எண்ணங்களாலே இறைவன் தானே எனும் பாடலை பாடியவர் முத்தழகு  

இனிமையான பாடல். பாடகர் முத்தழகுவின் குரல் அருமையானது. கவி வரிகளும் எனக்கு நன்கு பிடித்துள்ளது. இசையமைப்பும் நன்றாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them. For Example, during the 2001-2004 period, they rose up with several protests.  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.