Jump to content

சொல்விளையாட்டு - கண்டுபிடியுங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை இலகுவாகத் தந்த பின்னும் என்ன தயக்கம்????

 

தாய்மொழி அறிவதில் அத்தனை ஆர்வம். ம் ......

Link to comment
Share on other sites

  • Replies 145
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை இலகுவாகத் தந்த பின்னும் என்ன தயக்கம்????

 

தாய்மொழி அறிவதில் அத்தனை ஆர்வம். ம் ......

பழைய விதிகளின்படி பல அறியாத புதிய சொற்களை அறிய முடிந்தது. இப்போது நீங்கள் நினைத்த ஒரு குறிப்பிட்ட சொற்களை மட்டுமே அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்

 

தமிழ் அறிவுள்ளவர்கள் எல்லோரும் பாவங்கள் :D  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஒருதடவை விதியைத் தளர்த்துகிறேன். முயன்றவர் மீண்டும் முயலலாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. அறிவிற் சிறந்தோரை இப்படி அழைப்பர்.   ம _ _ _ _ ர்

     மதியுரைஞர்

 

2. மற்றவர் பார்வைக்காக பொருட்களை வைத்தல்.  கா _ _ _ _ _ _ _ல்

     கண்காட்சிசெய்தல்

 

3. தயார் படுத்துதல்.   அ _ _ _ _ _ _ ல்

     அழகுபடுத்தல்

 

4. மிகப் பழைய காலம்.   தொ _ _ _ _ _ _ ம்

     தொன்மையானகாலம்

 

5. அவசியம் என்பதன் தமிழ்ச் சொல்.   அ _ _ _ _ ம்

எனக்குத் தெரிந்தவரையில் இதற்குரிய தூயதமிழ்ச் சொல் "தேவை" என்பதாகும். அத்திவாரம் (அஸ்திபாரம்) என்பதும் வடசொல்தான்.

 

 

அடித்தளம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாருமே அனைத்தையும் சரியாகக் கூறாததால் சரியான விடைகளை நானே கூறியுள்ளேன்.

 

 

1. அறிவிற் சிறந்தோரை இப்படி அழைப்பர்.   மதியுரைஞர்

2. மற்றவர் பார்வைக்காக பொருட்களை வைத்தல்.  காட்சிப்படுத்துதல்

3. தயார் படுத்துதல்.   அணியம்செய்தல்

4. மிகப் பழைய காலம்.   தொல்பழங்காலம்

5. அவசியம் என்பதன் தமிழ்ச் சொல்.   அகத்தியம்

 

 

 

 

இதற்காவது யாராவது சரியாகக் கூறுகிறீர்களா பார்க்கலாம்.

 

1. ஒன்றைப்பற்றி வர்ணித்தல்  வ _ _ ணை

2. வாசனைப் பொருட்கள்.  க _ _ _ _ _ _ ள்

3. ஒரு தோல் வாத்தியத்தின் பெயர்  த _ _ மை

4. வானில் பயணம் செய்வது    வி _ _ _  து

5. தண்ணீரில் வாழ்வன  நீ _ _ _ _ ள்

Link to comment
Share on other sites

 

1. ஒன்றைப்பற்றி வர்ணித்தல்  வ _ _ ணை

2. வாசனைப் பொருட்கள்.  க _ _ _ _ _ _ ள்

3. ஒரு தோல் வாத்தியத்தின் பெயர்  த _ _ மை

4. வானில் பயணம் செய்வது    வி _ _ _  து

5. தண்ணீரில் வாழ்வன  நீ _ _ _ _ ள்

 

1. வர்ணனை

2. கத்தூரிமஞ்சள்

3. தண்ணுமை

4. விண்ணூர்து

5. நீர்வாழிகள்

 

Link to comment
Share on other sites

1. வர்ணனை

2. கத்தூரிமஞ்சள்

3. தண்ணுமை

4. விண்ணூர்து

5. நீர்வாழிகள்

 

 

4. விண்ணூர்து அல்ல விண்ணூந்து

5. நீர்வாழிகள் (அ) நீருயிரிகள் - நீர்வாழிகள் என்பது மிகப் பொருத்தமாக இருக்கும்

Link to comment
Share on other sites

வர்ணனை என்பதில் "னை" தானே இறுதிச்சொல்.. "ணை" என்று கொடுக்கப்பட்டிருக்கே.. கேள்வியில்?! :rolleyes:

 

அதுபோல கத்தூரி மஞ்சள் என்பது கஸ்தூரி மஞ்சளின் தமிழ்ப்படுத்திய வடிவம் என நினைக்கிறேன்.. ஸ் வந்தாலே அநேகமாக வடமொழியாக இருக்கும்.. :D

Link to comment
Share on other sites

வர்ணனை என்பதில் "னை" தானே இறுதிச்சொல்.. "ணை" என்று கொடுக்கப்பட்டிருக்கே.. கேள்வியில்?! :rolleyes:

 

அதுபோல கத்தூரி மஞ்சள் என்பது கஸ்தூரி மஞ்சளின் தமிழ்ப்படுத்திய வடிவம் என நினைக்கிறேன்.. ஸ் வந்தாலே அநேகமாக வடமொழியாக இருக்கும்.. :D

 

வர்ணணை எனபதற்கு பதில் வர்ணனை என்று வந்துவிட்டது. அழிச்சு எழுதலாமா?? கத்தூரிமஞ்சளின் வடமொழி வடிவம் கஸ்தூரி மஞ்சள் என்று சொல்லலாம்தானே ?? :)

 

தப்புக்கு ஏத்தமாதிரி குறைச்சுகிட்டு கொஞ்சம் பாத்து போடுங்க சுமேரியர் ... :)

4. விண்ணூர்து அல்ல விண்ணூந்து

5. நீர்வாழிகள் (அ) நீருயிரிகள் - நீர்வாழிகள் என்பது மிகப் பொருத்தமாக இருக்கும்

 

வானூர்தி போல் விண்ணூர்து என்று எழுதினேன். விண்ணூர்து  எனபதில் ஏதேனும் பிழை உள்ளதா?

 

Link to comment
Share on other sites

இதைப் பார்க்க இருக்கிற தமிழே போயிடும் போலை இருக்கு. முடிவு ஒரு மொழியும் .........................


கீறிட்ட இடத்தை நிரப்புங்கோ பார்க்கலாம்  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைப் பார்க்க இருக்கிற தமிழே போயிடும் போலை இருக்கு. முடிவு ஒரு மொழியும் ..தமிழ்போல் ..இனிதாய்  .......இல்லை..............

கீறிட்ட இடத்தை நிரப்புங்கோ பார்க்கலாம்  :D

 

முடிவு ஒரு மொழியும் ..தமிழ்போல் ..இனிதாய்  .......இல்லை..............சரிதானே அலை :lol:

 

1. வர்ணனை

2. கத்தூரிமஞ்சள்

3. தண்ணுமை

4. விண்ணூர்து

5. நீர்வாழிகள்

 

 

ஆதித்தியன் உங்கள் விடையில் மூன்றாவது மட்டும் சரியான விடை. பச்சை ஒண்டுதானே அதில என்னத்தைக் கழிச்சு எதைத் தாறது????

 

 

 

4. விண்ணூர்து அல்ல விண்ணூந்து

5. நீர்வாழிகள் (அ) நீருயிரிகள் - நீர்வாழிகள் என்பது மிகப் பொருத்தமாக இருக்கும்

 

நான்காவது விடையில் நீங்கள் கொஞ்சம் நெருங்கி வந்துள்ளீர்கள் தமிழ் வேந்தன் :D

 

வர்ணனை என்பதில் "னை" தானே இறுதிச்சொல்.. "ணை" என்று கொடுக்கப்பட்டிருக்கே.. கேள்வியில்?! :rolleyes:

 

அதுபோல கத்தூரி மஞ்சள் என்பது கஸ்தூரி மஞ்சளின் தமிழ்ப்படுத்திய வடிவம் என நினைக்கிறேன்.. ஸ் வந்தாலே அநேகமாக வடமொழியாக இருக்கும்.. :D

 

முயற்சி செய்து பாருங்கோ இசை.

 

Link to comment
Share on other sites

ஆதித்தியன் உங்கள் விடையில் மூன்றாவது மட்டும் சரியான விடை.

 

விடை பொருத்தமானது இல்லை என்று நிராகரிக்கிறீர்களா. ஆம் எனில்  ஏன்??  இல்லை வடமொழி கலந்துள்ளது என்று நிராகரிக்கிறீர்களா என்பதை தெளிவுபடுத்தினால் எல்லோரும் தெரிந்து கொள்வற்கும் அடுத்தமுறை சரியாக எழுதுவதற்கு உதவியாக இருக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடை பொருத்தமானது இல்லை என்று நிராகரிக்கிறீர்களா. ஆம் எனில்  ஏன்??  இல்லை வடமொழி கலந்துள்ளது என்று நிராகரிக்கிறீர்களா என்பதை தெளிவுபடுத்தினால் எல்லோரும் தெரிந்து கொள்வற்கும் அடுத்தமுறை சரியாக எழுதுவதற்கு உதவியாக இருக்கும் .

 

வர்ணனை என்பது வடமொழி. கஸ்தூரி மஞ்சள் வாசனைப் பொருள் அல்ல. விண்ணூர்து, நீர்வாழிகள் என்று ஒரு தமிழ்ப் பெயர்கள்  உள்ளனவா ???

 

ஒன்பது மணிவரை மீண்டும் யாரும் முயலலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைதந்த உறவுகள் ஆதித்த இளம்பிறையன், இசைக்கலைஞன், தமிழ் வேந்தன், புங்கையூரன்  ஆகிய உறவுகளே நன்றி.

 

இதுவரை யாரும் சரியான விடைகளைக் கூறாதது மனவருத்தம் தருகிறது.

 

1. ஒன்றைப்பற்றி வர்ணித்தல்   வண்ணணை

2. வாசனைப் பொருட்கள்.   கமழ்வுப்பொருள்

3. ஒரு தோல் வாத்தியத்தின் பெயர்   தண்ணுமை

4. வானில் பயணம் செய்வது    விண்ணுந்து

5. தண்ணீரில் வாழ்வன   நீருயிரிகள்

 

சரி உறவுகளே இதற்கு யார் கூறுகிறீர்கள் என்று பார்க்கலாம்.

 

1. செடி, கொடி, மரங்களை இப்படி அழைப்பர்  நி _ _ _ ணை

2. நெல் விளையும் நிலத்தை இப்படிக் கூறுவர்  ப _ _ _ _ ள்

3. தோற்கருவிகளை இப்படி அழைப்பர் மு _ _ _ ள்

4. பலகாரங்களை இப்படி அழைப்பர் சி _ _ _ _ _ ள்

5. தங்க வளையலை இப்படிக் கூறலாம் பொ _ _ டி                         

 

Link to comment
Share on other sites

மாவினைவாய் பிளந்துகந்த மாலை வேலை வண்ணணை என் கண்ணணைவன் குன்ற மேந்தி

ஆவினையன் றுயக்கொண்ட ஆய ரேற்றை அமரர்கள்தந் தலைவனைஅந் தமிழி னின்பப்

பாவினைஅவ் வடமொழியைப் பற்றற் றார்கள் பயிலரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்

கோவினைநா வுறவழுத்தி என்றன் கைகள் கொய்ம்மலர்தூய் என்றுகொலோ கூப்பும் நாளே

 

பதவுரை

 

மாவீனை வாய் பிளந்து உகந்த மாலை

-

குதிரை வடிவங்கொண்டு வந்த கேசியினுடைய வாயைக் கிழித்து மகிழ்ந்த பெருமானாய்

வேலை வண்ணணை

-

கடல்போன்ற வடிவையுடையவனாய்

ஏன் கண்ணணை

-

என்னுடையவன்’ என்று அபிமானிக்கக் கூடிய (ஸூலபனான) க்ருஷ்ணனாய்’

அன்று

-

(இந்திரன் கல் மழை பெய்வித்த) அக்காலத்திலே

வல் குன்றம் ஏந்தி

-

வலிய (கோவர்த்தன) மலையை (க்குடையாக)த் தூக்கி

ஆவினை உய்யக் கொண்ட

-

பசுக்களைக் காப்பாற்றியருளின

ஆயர்  ஏற்றை

-

இடையர்  தலைவனாய்

அமரர்கள் தம் தலைவனை

-

நித்யஸூரிகளுக்கு ஸ்வாமியாய்,

அத்தமிழின் இன்பம் பாவினை

-

அழகிய தமிழ்ப்பாஷையாலாகிய ஆநந்தமயமான அருளிச்செயல் போல் யோக்கியனாய்

அ வடமொழியை

-

அழகிய ஸம்ஸ்க்ருத பாஷையாலாகிய ராமாயணாதிகள் போல் யோக்யனாய்

பற்று அற்றார்கள் பயில் அரங்கத்து

-

ஸம்ஸார பந்தம் அற்றவர்களான விரக்தர்கள் நித்திய வாஸம் செய்கிற கோயிலிலே

அரவு அணையில் பள்ளிகொள்ளும்,

கோவினை

-

ஸ்வாமியான ஸ்ரீரங்கநாதனை

நா உற

-

நாக்குத் தடிக்கும்படி

வழுத்தி

-

துதித்து

என் தன் கைகள்

-

என்னுடைய கைகளானவை

கொய் மலர் தூய்

-

(காலத்தில்) பறிக்கப்பட்ட புஷ்பங்களை பணிமாறி

கூப்பும் நாள் என்று கொல்

-

அஞ்ஜலி பண்ணும் நாள் எதுவோ!

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- குதிரை வடிவங்கொண்டு தன்னைக் கவளங்கொள்ளவந்த கேசியென்னு மசுரனைக் கொன்று தன்னை நித்யாநுபாவ்யனாக உபகரித்தருளினவனும், கடலைக் கண்டாற் போலே வடிவைக்கண்டபோதே தாபத்ரயமும் தீரும்படியிருப்பவனும், அரியன செய்து ஆச்ரிதரைக் காப்பாற்றினவனும் பரம யோக்யனுமான ஸ்ரீரங்கநாதனை நாத்தழும் பெழத் துதித்து நன்மலர்களைக் கொணர்ந்து ஸமர்ப்பித்து  ‘அடியேனை ஆட்கொள்ள வேணும்’ என்கிற ப்ரார்த்தனை தோற்றக் கைகூப்பி நிற்கும்படியான பாக்கியம் என்றைக்கு  வாய்க்குமோ என்கிறார். எம்பெருமானுடைய ஒப்புயர்வற்ற போக்யதைக்கு அவனுடைய திவ்ய குணங்களை ப்ரதிபாதிக்கின்ற திருவாய்மொழி முதலிய திவ்ய ப்ரபந்தங்களும் ஸ்ரீராமாயணம் முதலிய இதிஹாஸ புராணங்களுந் தவிர வேறொன்றும் ஒப்புச்சொல்லத் தகாமையால் “அந்தமிழினின் பப்பாவினை அவ்வடமொழியை” என்றார்.

(பற்றற்றார்கள் பயிலரங்கம்) “சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டரொன்றினர்,அற்ற பற்றர் சுற்றிவாழு மந்தணீரரங்கமே” என்றார் திருமழிசைப்பிரானும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் புதிய சொல்லை கண்டுபிடிக்கவில்லை நுணா. புலம் பெயர் தேசத்தில் வாழும் மாணவர்கள் கற்கவென தனித் தமிழுக்காய் பாடப்புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதற்காக இந்தியாவிலிருந்து சுப திண்ணப்பன், அறிவரசன் போன்ற இந்திய பல்கலைக்கழக அறிஞர்கள் கூடித் தெளிந்த சொல்லே இது. இது ஒருசொல் பல பொருளாகவும் இருக்கலாம்.

 

இது எந்தத் தொகுதியுள் வரும் பாடல். விளக்க உரையை யாரும் எப்படியும் எழுதலாம்.

Link to comment
Share on other sites

 

சரி உறவுகளே இதற்கு யார் கூறுகிறீர்கள் என்று பார்க்கலாம்.

 

1. செடி, கொடி, மரங்களை இப்படி அழைப்பர்  நி _ _ _ ணை

2. நெல் விளையும் நிலத்தை இப்படிக் கூறுவர்  ப _ _ _ _ ள்

3. தோற்கருவிகளை இப்படி அழைப்பர் மு _ _ _ ள்

4. பலகாரங்களை இப்படி அழைப்பர் சி _ _ _ _ _ ள்

5. தங்க வளையலை இப்படிக் கூறலாம் பொ _ _ டி                         

 

 
 
 
2. படப்பைகள் (அ) பரப்புகள் 
    (.கா) - "காவிரி அணையும் தாழ்நீர்ப் படப்பை
     நெல்விளை கழனி அம்பர் கிழவோன்(புறநானூறு)"
 
3. முழவுகள் 
 
4. சிற்றுணவுகள் (அ) சிற்றுண்டிகள் 
 
5. பொன்தொடி 
    "பொன் தொடிக்கு இறத்தல் இல்லை - புலம்பு கொண்டு அழேற்க! (சீவக சிந்தாமணி)"
 
 
இந்த முறை தவறுவதற்கு வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்..
Link to comment
Share on other sites

 

 
 
 
2. படப்பைகள் (அ) பரப்புகள் 
    (.கா) - "காவிரி அணையும் தாழ்நீர்ப் படப்பை
     நெல்விளை கழனி அம்பர் கிழவோன்(புறநானூறு)"
 
3. முழவுகள் 
 
4. சிற்றுணவுகள் (அ) சிற்றுண்டிகள் 
 
5. பொன்தொடி 
    "பொன் தொடிக்கு இறத்தல் இல்லை - புலம்பு கொண்டு அழேற்க! (சீவக சிந்தாமணி)"
 
 
இந்த முறை தவறுவதற்கு வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்..

 

 

5. சரியான சொல். ஆனால், இலக்கணப்படி பொற்றொடி(பொன்+தொடி) என்றல்லவா வரவேண்டும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைதந்த உறவுகளுக்கு நன்றி.

சரியான விடைகளை எழுதி பச்சை வெல்கிறார் ஆதித்யஇளம்பிறையன். அவருக்கு வாழ்த்துக்கள்.

 

இளம்பிறையன் சரியாகப் பொற்றொடி எனப் புணர்த்தி எழுதவில்லையாயினும் சரியான விடையை எழுதியதால் அந்த விடையைச் சரியென்று கொள்வோம்  தமிழ் வேந்தன்.

 

சரி இவற்றுக்கு யார் சரியான சொற்களை முதலில் எழுதுகிறீர்கள் பார்க்கலாம்.

 

1. குற்றங்களைப் போக்குதல் என்பதற்குரிய தமிழ்ச் சொல்  க _ _ ல்

2. ஒன்றை மேலோங்கச் செய்தல்  மே _ _ _ _ _ _ ல்

3. வசனம் என்பதின்  தமிழ்ச்சொல் சொ _ _ _ ம்

4. ஒரு வினாடி நேர அளவையை இப்படிக் கூறலாம் நொ _ _ _ _ து

5. நிலத்தைத் தோண்டுவதை இப்படிச் சொல்வர்  க _ _ _ ல்


பிள்ளைகளே சொல்லுங்கோ பார்க்கலாம், மெசொபொத்தேமியா சுமேரியர் என்ன மொழிப் பெயர்? 

 

கிரேக்கப் பெயர் அலை. ஆனால் தமிழரின் மூதாதையர் வாழ்ந்த இடமும் அவர்களின் இனப்பெயரும்.
 

Link to comment
Share on other sites

1) களைதல் :unsure:

2)மேவுறச்செய்தல்

3) சொல்வனம் :blink:

4) நொடிப்பொழுது

5) கடத்தல் (மணலைத் தோண்டி கடத்துவதால்.. :lol: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரவுக்கு நன்றி இசை. 1, 4 ஆகியவற்றின் விடைகள் மாத்திரம் சரியானவை. மீண்டும் முயன்று பாருங்கள்.

Link to comment
Share on other sites

2) மேம்பாடுசெய்தல்??

Link to comment
Share on other sites

1. குற்றங்களைப் போக்குதல் என்பதற்குரிய தமிழ்ச் சொல்  க _ _ ல்

2. ஒன்றை மேலோங்கச் செய்தல்  மே _ _ _ _ _ _ ல்

3. வசனம் என்பதின்  தமிழ்ச்சொல் சொ _ _ _ ம்

4. ஒரு வினாடி நேர அளவையை இப்படிக் கூறலாம் நொ _ _ _ _ து

5. நிலத்தைத் தோண்டுவதை இப்படிச் சொல்வர்  க _ _ _ ல்

 

களைதல்

மேன்மைபடுத்தல்

சொற்பதம்

நொடிப்பொழுது

கலகம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. களைதல்
2. மேம்படுத்துதல்
3. சொல்வளம்
4. நொடிப்பொழுது
5. கல்லுதல்

:D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.