Jump to content

நானும் அப்பாச்சியும் .!


Recommended Posts

எனது சிறுவயது முதல் என்னை அதிகமா நேசித்த மனிதர்களில் எனது அப்பாச்சி  முன்னணியில் உள்ளார் அம்மாவை விட அவர் மேல பாசம் அன்பு கொள்ளை பிரியம் எனக்கு ஒரு நெடியெனும் என்னை காணமல் இருப்பது அப்பாச்சிக்கு எதோ தொலைத்து விட்ட சோகம் இருக்கும் எங்க போட்டான் இன்னும் காணவில்லை சுற்றிக்கொண்டு வருவான் ஆளை காணம் செக்கல் பட்டுடு விளக்கு வைக்கும் நேரம் ஆகுது இவனை காணம் என தனியா விட்டின் திண்ணையில் இருந்து கதைப்பார் .

 

அம்மா பேசியபடி இருப்ப அவன் வருவான் நீங்க வந்து தேத்தண்ணிய குடியுங்க எங்க போகபோறான் எங்காவது பெடியலோடா நிப்பான் இப்ப வந்திடுவான் என்று சொன்னாலும் அப்பாச்சி கேளாது நாலுதரம் ரோட்டுக்கு வந்து எட்டி பார்க்கும் சிலவேளை அப்பொழுதுகளில் நான் வருவேன் ......'என்ன கிழவி ரோட்டில யாரை சயிட் அடிக்கிற என்று கேட்படி ' ஓம் ஓம் எனக்கு இப்பதான் 18 ஆள் பிடிக்கிறன் நீ எங்க உலாத்திட்டு வாற என்று என் பின்னாடி வருவார் போய் முகத்தை கைகாலை கழுவிட்டு வீடுக்குள்ள வா நேரம் கேட்ட நேரம் வாறது பேய் பிசாசுடன் என்று புறுபுறுப்பு நடக்கும் .

 

சரி சரி கிழவி உனக்கு கதை கூட புட்டை போடு என்று சொன்னா ஓம் மாப்பிளை நீ வைச்ச ஆள் நான் சாப்பாடு போடுறன் பொறு என எனக்கு பதில் சொல்லி  குசினிக்கு போகும் கிழவி கறிச்சட்டி திறந்து பார்த்து ஏண்டி பிள்ளை குழம்புக்க ஒண்டையும் காணம் என்று அம்மாவிடம் கேள்வி போகும் அம்மாவோ கிடக்கிறது போட்டு கொடுக்க சாப்பிடுவன் என்று சொல்லுவா கிழவி கேட்காது உடனம் ஒரு முட்டை பொரியும் அவ்வளவு வேகமும் வேலைக்கு பஞ்சி படாத ஆளும் அப்பாச்சி மண்வெட்டிய தூக்கினா அவ்வளவு காணி புல்லும் செருக்கிதான் வைப்பா மனவலிமையும் உடல் வலிமையையும் உள்ள ஆள் அப்பாச்சி ....

 

காலமும் நேரமும் வேகமாக நகர உறவுகள் சொந்தங்கள் பிரிவுகள் என சுழற்ச்சி முறையில் வர அதுக்கு நாங்களும் விதிவிலக்கா என்ன அதில் தப்பி போக o/L எடுக்கிற நேரம் போராட்டம் என்னும் பாதையில் போயிட்டம் சிறிது காலம் மனம் பெரும் கஷ்டம் ஏக்கங்களை சுமந்தாலும் நண்பர்கள் வேலைகள் என நாட்கள் நகர அப்பாச்சி இரவுகளில் நினைவில் எப்படியும் வருவார் என்னை அறியாமல் என் கண்கள் நீரை விட்டபடி இருக்கும் கிழவி இப்ப என்ன செய்யும் சாப்பிடுதா அல்லது கோயில் குளம் என்று திரியுதா சொல்லாமல் வந்திட்டன் தேடியிருக்கும் அன்று பூரா என மனதில் ஒரு ஓரமா வலி இருக்கும் இன்னும் சிறிது காலம் எப்படியும் பார்க்கலாம் இப்ப என்ன வேற நாட்டுக்கா போயிட்டன் என்று மனதை தேற்றி உறக்கம் தழுவும் ...

 

 

காலம் உருண்டு ஓட வெளியில் போய் வரும் சுழலும் எனக்கு அமைய ஒருநாள் இரண்டு வருடம் கழிந்து இருக்கும் வீட்டுக்கு போகிறேன் அங்கு அவர்கள் இல்லை பக்கத்து வீட்டு ஆண்டி சொன்னா அம்மா ஆக்கள் இப்ப இன்னாரின் காணியில் வீடு போட்டு இருக்கினம் என்று சரி எனகூறி அங்கு போனா கிழவிதான் முன்னுக்கு இருக்கு மேட்டர் சைக்கிளை கிழவிக்கு நேர விட்டுக்கொண்டு போக அசையாமல் கிழவி இருக்கு என்னன்னா எப்படி இருக்குற குரலில் யாரு என பிடித்த கிழவி அழுது குளறி கூப்பாடு போட்டு தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்து நிண்டிச்சு சரி சரி விடு விடு இப்ப என்ன நான் உனக்கு முன்னுக்கு நிக்கிறன் எதுக்கு அழுகிற விடு தேத்தண்ணி போடு எங்க அம்மா என்று கேட்டபடி நான் அமர .....

 

அம்மா தங்கச்சிய கூப்பிட போயிட்ட எதோ பாடம் படிக்க போறவள் அந்த வாத்தியார் விட்டுக்கு பொழுது படுகுது அதுதான் கூட்டி வர போறா சரி மகனே நீ இப்படி கறுத்து இருக்குற வளத்திட போல கிடக்கு இப்ப எனக்கும் கண் பெரிசா தெரியிறது குறைவு என்று கூற ஓம் நான் முதல் நல்ல வெள்ளைதானே சும்மா இருண அப்பர் எங்க இப்பவும் தண்ணி அடிக்கிறவரா குழப்படியா உன்ர மகன் என்றவுடன் இல்லை நீ போனப்பிறகு குறைவு கவலைதான் அவனுக்கு தடி வளர்த்தபடி இருக்குறான் யாரோ இண்டைக்கு வயல் வெட்ட கூப்பிட்டது போல போயிட்டான் வருவான் இப்ப என் நீ போகப்போறியா மகனே கொஞ்சநேரம் இரு அம்மாவும் அப்பாவும் வந்திடுவினம் தங்கச்சி வேற உன்னை பார்க்க ஆர்வமா இருக்குறாள் இல்லையென நேரம் போகுது நான் எட்டி பார்த்திட்டு போவம் என்று வந்தனான் இனி இங்கால வேலை அடிக்கடி வந்து போறன் யோசிக்காமல் இரு நல்ல சாப்பிடு மருந்து எடு கண்ணுக்கு ஓம் ஓம் நாளைக்கு கட்டையில போற எனக்கு இதுகள்தான் குறை .........

 

வீட்டுக்குள் ஓடி சென்று தனது பையில் இருந்து ஒரு 200ரூபா கையில தந்தா எதாவது வாங்கி சாப்பிடு மோனே உடம்பை பாரு எங்க இருந்தாலும் நீ நல்ல இருப்ப எனக்கு நம்பிக்கை இருக்கு தங்கச்சி உன்னை நம்பிதான் இருக்குறாள் அவளை பாரு நான் இண்டைக்கோ நாளைக்கோ வாழ்த்து முடிச்சிட்டன் நீங்க வாழுற பிள்ளைகள் இன்னும் நிறைய இருக்கு பார்க்க என கட்டி அனைத்து முத்தம் இட்டு கண்கலங்கி நிக்கும் கிழவியின் கண்களை பார்த்து பேசும் அளவு நான் இல்லை என் கண்களும் நீ நிறைந்து இருந்ததால் சரியன போட்டு வாறன் அம்மா வந்தா சொல்லு சிலவேளை அடுத்த கிழமை வருவேன் போட்டு வாறன் ...........

 

 

காலம் வேகமா போக சமாதான  காலம் வர நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பா வந்தா இங்கயும் தனிமை வாட்டி எடுக்கும் சில காலம் அப்பாச்சிக்கு ஒரு போனை போட்டு ஒரு நிமிடம் கதைத்தா எதோ ஒரு சுமை இறங்கிய மாதிரி இருக்கும் கிழவி அங்க கதைக்கும் வேகம் இங்க கேட்கும் 'எண்டா மோனா அங்க எதோ காட்டு கொடுப்பினமாம் உனக்கு தந்திட்டங்களா ' என்று கேட்கும் வேகம் இங்க உள்ள பக்கத்து வீட்டுக்காரனுக்கு கேட்கும் ...இல்லையென அதுக்கு கனகாலம் வேணும் என்று சொன்னா ஆ அது எப்படி அவன்ட மகனுக்கு கொடுத்தவங்கள் இவனட மகனுக்கு கொடுத்தவங்கள் எண்டு எல்லா விபரமும் கிழவி எடுத்து விடும் நாட்டில இருந்த படி அப்படி விசாரிப்பு வெளிநாடு பற்றி அங்க ...

 

 

ஒருநாள் இப்படித்தான் வேலைக்கு போயிட்டு வந்து இருக்க  போன் வந்துது என்னன்னா சொல்லு சும்மா எடுத்தனான் இரவு பூரா ஒரே கனவு அதுதான் உனக்கு எதாவது உடம்பு சரியில்லை என்று யோசிச்சன் அதுதான் கேட்பம் என்று சொன்னா இல்லை அப்பாச்சி வேலை ஒன்றுக்கு போறனான் இங்க தேத்தண்ணி கடையில் கோப்பை கழுவுற வேலை சரியான சனம் இண்டைக்கு சாப்பிட வந்தது அதுதான் வேலை கூட களைச்சு போனன் என்று சொல்ல (அண்டைக்கு அடி அமவாசை ஊருல எல்லோரும் விரதம் எனக்கு தெரியாது ) உடனம் கிழவி சொல்லிச்சு உனக்கு பகிடி இண்டைக்கு ஆடி அமவாசை எல்லாரும் விரதம் யாரு தேத்தண்ணி கடைக்கு வரபோறான் சாப்பிட என்று உடனம் பதில் வந்துது எனக்கு சிரிச்சு முடில ...

 

 

யோவ் கிழவி இங்க வெள்ளைக்காரன் உனக்கு ஆடி அமவாசை பிடிக்கிறான் விரதம் இருந்து எண்டு ஒரு கத்து கத்தினான அதுக்கு பிறகுதான் கிழவிக்கு விளக்கிச்சு ஓம் நான் ஊர் நினைவில சொல்லி போட்டன் சரி விடு நேற்று போன் அடிக்க யாராவோ ஒரு வெள்ளைகாரி கதைச்சால் யாரு அவள் உனக்கு தெரியுமா என்று அடுத்த கேள்வி அனே அது என்னுடைய போன் நிப்பாட்டி கிடந்தா அப்படி சொல்லும் இப்ப உனக்கு இந்த ஆராய்ச்சி எல்லாம் நானும் உனக்கு கால் பண்ணினா சிலநேரம் 'உப அனத்த பிச்சி சாரிய கருணாகர லலித் பசுவ அவ தாணுவ ' எண்டு சொல்லுது நானும் கருணாவை பஸ்சில வைத்து பிடிச்சிட்டங்கள் எண்டு குழம்பி போயிட்டன் உடனம் கிழவி உனக்கு இந்த நக்கல் நளினத்துக்கு மட்டும் குறையில்லை சாப்பிட்டு படு இங்க எனக்கு காசு ஓடுது வைக்கிறன் என்று சொல்லி கட் பண்ணிட்டு போயிட்டா ...

 

இப்ப அப்பாச்சியின் கழுத்தில ஒரு சாம்சுங் கொழுவி விட்டு கிடக்கு அக்கம் பக்கம் எல்லாம் நடமாடும் டெலிக்கொம் இப்ப அப்பாச்சிதான் நம்ம ஊரில ...

 

அப்பாச்சியின் நினைவுகள் நேரம் உள்ள நேரங்களில் தொடரும் உறவுகளே ...

 

Link to comment
Share on other sites

"இப்ப அப்பாச்சியின் கழுத்தில ஒரு சாம்சுங் கொழுவி விட்டு கிடக்கு அக்கம் பக்கம் எல்லாம் நடமாடும் டெலிக்கொம் இப்ப அப்பாச்சிதான் நம்ம ஊரில.."

 

அப்பாச்சி நீடூழி வாழ்க!!  :) 

Link to comment
Share on other sites

எனக்கு என்னுடைய பேரன்மார், பேத்திமாரைத் தெரியாது. நான் பூமிக்கு வரமுன்னம் அவை பூமியை விட்டு வெளிக்கிட்டிட்டினம்.

 

ம்ம்..... நல்லாயிருக்கு, தொடருங்கள் வாசிக்க மிக ஆவல்!!

Link to comment
Share on other sites

நன்றி சோழியன் அண்ணே வரவுக்கும் கருத்துக்கும் .

 

நன்றி அலையக்கா வரவுக்கும் கருத்துக்கும் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்.....

நல்லாயிருக்கு,

தொடருங்கள் வாசிக்க மிக ஆவல்!! :icon_idea: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னால கொஞ்சம் சீரியசாச் சொல்லிப்போட்டு பின்னால சிரிக்க வச்சிட்டியள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடனம் கிழவி சொல்லிச்சு உனக்கு பகிடி இண்டைக்கு ஆடி அமவாசை எல்லாரும் விரதம் யாரு தேத்தண்ணி கடைக்கு வரபோறான் சாப்பிட என்று உடனம் பதில் வந்துது............................

 

 

 எனக்கும் சிரிச்சு முடில ...

Link to comment
Share on other sites

அஞ்சரன் அப்பாச்சியின் கதை என்னையும் எனது அம்மம்மாவிடம் கொண்டு போய்விட்டுவிட்டது. நகைச்சுவையும் கடுமையான உணர்வின் தெறிப்புமாக அனுபவம் மிகவும் அருமையாக எழுதியிருக்கிறீங்கள்.

பி.கு :- அங்கை (FB)நிற்காமல் இங்கை நிண்டு எழுதுங்கோ. :lol:

Link to comment
Share on other sites

பி.கு :- அங்கை (FB)நிற்காமல் இங்கை நிண்டு எழுதுங்கோ. :lol:

 

பேந்து அங்கை தேடுறவைக்கு ஆர் பதில் சொல்லுறது?!  :o

Link to comment
Share on other sites

ம்ம்.....

நல்லாயிருக்கு,

தொடருங்கள் வாசிக்க மிக ஆவல்!! :icon_idea: 

 

நன்றி வரவுக்கும் கருத்துக்கும் விசுகு அண்ணே :rolleyes:

முன்னால கொஞ்சம் சீரியசாச் சொல்லிப்போட்டு பின்னால சிரிக்க வச்சிட்டியள்.

 

தொடர்த்து கடினமா போனால் வாசிக்க ஆர்வம் வராது என்று கொஞ்சம் மாற்றி பார்த்தன் அக்கா :)

உடனம் கிழவி சொல்லிச்சு உனக்கு பகிடி இண்டைக்கு ஆடி அமவாசை எல்லாரும் விரதம் யாரு தேத்தண்ணி கடைக்கு வரபோறான் சாப்பிட என்று உடனம் பதில் வந்துது............................

 

 

 எனக்கும் சிரிச்சு முடில ...

 

நன்றி அக்கா நிலாமதி வரவுக்கும் கருத்துக்கும் :)

 

அஞ்சரன் அப்பாச்சியின் கதை என்னையும் எனது அம்மம்மாவிடம் கொண்டு போய்விட்டுவிட்டது. நகைச்சுவையும் கடுமையான உணர்வின் தெறிப்புமாக அனுபவம் மிகவும் அருமையாக எழுதியிருக்கிறீங்கள்.

பி.கு :- அங்கை (FB)நிற்காமல் இங்கை நிண்டு எழுதுங்கோ. :lol:

 

அப்பம்மா அம்மம்மா ஒரு வரம் எங்கள் பிள்ளைகளுக்கு அப்படி கிடைக்க வில்லையே என்கிற கவலை எனக்கு இருக்கு அக்கா .

 

fb குறைச்சுட்டு வாறன் இப்ப :D

பேந்து அங்கை தேடுறவைக்கு ஆர் பதில் சொல்லுறது?!  :o

 

அதுதானே சோழியன் அண்ணே அப்படி கேளுங்கோ :icon_idea:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரன், உங்கள் கதையை வாசித்ததும், உடனே நினைவுக்கு வந்தது, என்னையும் வளர்த்த ஆச்சிகளும். அப்புக்களும் தான்!

 

அவர்கள் எங்களிடம் எதையுமே எதிர்பார்க்காவிட்டாலும், எம்மால் அவர்களுக்கு, அவர்களுக்குத் தேவையான நேரத்தில்.எதையுமே செய்ய இயலாத தூரத்தில் வாழ்ந்திருந்தோம்! :o

 

அவர்கள் விடைபெற்ற போது , அவர்கள் அருகிலிருந்து விடையனுப்பும் சந்தர்ப்பங்கள் ம் கூடக் கிடைக்கவில்லை! 

 

உங்கள் கதை நகைச்சுவையுடன் கலந்திருந்தாலும், அதன் கருப்பொருள் மிகவும் காத்திரமானது!

 

தொடர்ந்து எழுதுங்கள்!

Link to comment
Share on other sites

அஞ்சரன், உங்கள் கதையை வாசித்ததும், உடனே நினைவுக்கு வந்தது, என்னையும் வளர்த்த ஆச்சிகளும். அப்புக்களும் தான்!

 

அவர்கள் எங்களிடம் எதையுமே எதிர்பார்க்காவிட்டாலும், எம்மால் அவர்களுக்கு, அவர்களுக்குத் தேவையான நேரத்தில்.எதையுமே செய்ய இயலாத தூரத்தில் வாழ்ந்திருந்தோம்! :o

 

அவர்கள் விடைபெற்ற போது , அவர்கள் அருகிலிருந்து விடையனுப்பும் சந்தர்ப்பங்கள் ம் கூடக் கிடைக்கவில்லை! 

 

உங்கள் கதை நகைச்சுவையுடன் கலந்திருந்தாலும், அதன் கருப்பொருள் மிகவும் காத்திரமானது!

 

தொடர்ந்து எழுதுங்கள்!

 

 

புங்கை உங்கள் அனுபவங்களையும் எழுதுங்கோ :)

Link to comment
Share on other sites

பேந்து அங்கை தேடுறவைக்கு ஆர் பதில் சொல்லுறது?!  :o

 

அங்கை காலைவணக்கம் மதிய வணக்கம் போடுற நேரத்தை அப்பாச்சியின் ஞாபகத்தை பகிர பாவிக்கலாம் எண்ட நல்லெண்ணம்தான். அங்கையும் தம்பி வேணும் பதில் சொல்ல ஆனால் இங்கை ஒரு வரலாற்றை பதிய வேண்டிய காலத்தின் கடமையை இங்கையும் செய்ய வேணுமெண்டு சொல்ல வந்தன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கோ அஞ்சரன் அப்பாச்சியின் கதைகளை வாசிக்க ஆவலாய் உள்ளோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பாட்டன் பாட்டியின் அன்பை அரவணைப்பைப் பெற்றுக்கொள்ளதவன்.

ஆனாலும் அயலவர்கள் உறவினர்களின்
பாட்டன் பாட்டிகள் தங்கள் பேரன் பேத்திகளிடம் காட்டும்

தொல்லைக்கு அளவே இல்லை. :D

சிலவேளைகளில் பாட்டியின் மேலிருக்கும் கோபத்தை

அவரின் பேரனிடம் காட்டி அவர்களை வம்புக்கிழுப்பதும் உண்டு :lol:

 

பதிவிற்கு நன்றி அஞ்சரன் 

Link to comment
Share on other sites

நன்றி புத்தன் ..........வாத்தியார் உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் :rolleyes:


எங்கை மிச்சக் கதை? 

 

அக்கா அவசரம்  வேணாம் வரும் ஆனால் வராது :D

 

கூடிய சீக்கிரம் :rolleyes:
 

Link to comment
Share on other sites

அனுபவ வெளிப்பாடுகளுக்கு என்றுமே ஒரு தனியான வீச்சு உண்டு . அதைச் சொல்லும்பொழுது மிகவும் கவனமாக கோர்த்துச் சொல்ல வேண்டும் . அந்த வித்தையை அஞ்சரன் கைவரப் பெற்றிருப்பது மகிழ்சியே . ஆனாலும் முற்ருப்  புள்ளி , கால் புள்ளி இடைப்புள்ளி ஆகியவற்றில் கவனம் எடுங்கள் . இதுவும் ஒரு கதைசொல்லிக்கு அத்தியாவசியமானது .உங்கள் கதைக்கு எனது மனந் திறந்த பாராட்டுக்கள் :) :) :) .

 

Link to comment
Share on other sites

அனுபவ வெளிப்பாடுகளுக்கு என்றுமே ஒரு தனியான வீச்சு உண்டு . அதைச் சொல்லும்பொழுது மிகவும் கவனமாக கோர்த்துச் சொல்ல வேண்டும் . அந்த வித்தையை அஞ்சரன் கைவரப் பெற்றிருப்பது மகிழ்சியே . ஆனாலும் முற்ருப்  புள்ளி , கால் புள்ளி இடைப்புள்ளி ஆகியவற்றில் கவனம் எடுங்கள் . இதுவும் ஒரு கதைசொல்லிக்கு அத்தியாவசியமானது .உங்கள் கதைக்கு எனது மனந் திறந்த பாராட்டுக்கள் :) :) :) .

 

நன்றி கோமகன் அண்ணா உங்கள் கருத்துக்கும் வரவுக்கும் பிழைகளை திருத்த முயற்சி செய்வேன் நிச்சயம் :)

Link to comment
Share on other sites

அஞ்சரன்...  என் அப்பா தன் இளவயதிலேயே தன் தாய் தந்தையரை இழந்தவர் என்பதனால் நான் அப்பாச்சியைப் பார்த்ததே இல்லை.

எனக்கு எல்லாமுமேஎன் அம்மம்மாதான். ஆனாலும் அம்மாவின் மாமியார் ஒருவர் இருந்தவ. பூமணி என்பது அவவின்ர பெயர்.

எங்கட இயக்கப் பெடியள் என்றால் அவவுக்கு பிடிக்காது. இதனால் என் அப்பாவுக்கும் அவவுக்கும் அடிக்கடி சூடான  அரசியல் விவாதம் நடக்கும். இப்படியே அவவைப்பற்றி நிறையக் கதைக்கலாம்.

பழைய ஞாபகங்களை கிளறிவிட்டது உங்கள் கதை... தொடருங்கள்! :)

 

கோமகன் சொன்ன விடயங்களில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். மற்றும் படி திறம்பட எழுதுகின்றீர்கள்! வாழ்த்துக்கள்! :)

Link to comment
Share on other sites

நன்றி கவிதை வரவுக்கும் கருத்துக்கும் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மின்னம்பலம் மெகா சர்வே: தஞ்சாவூர்… வெற்றி கோபுரத்தில் யாருடைய கலசம்? Apr 16, 2024 16:24PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் திமுக சார்பில் முரசொலி களமிறங்கியுள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் பி.சிவநேசன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் எம்.முருகானந்தம்போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஹூமாயூன் கபீர் போட்டியிடுகிறார். திமுக, தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான தஞ்சாவூர், மன்னார்குடி, திருவையாறு, ஒரத்தநாடு,  பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் முரசொலி 50% வாக்குகளைப் பெற்று தஞ்சாவூர் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் பி.சிவநேசன் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் எம்.முருகானந்தம் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹூமாயூன் கபீர் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, தஞ்சாவூர் தொகுதியில் இந்த முறை முரசொலி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-murasoli-won-thanjavur-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/ மின்னம்பலம் மெகா சர்வே: கடலூர்… கரையை கடப்பது யார்? Apr 16, 2024 17:09PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் கடலூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில்எம்.கே.விஷ்ணுபிரசாத் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் பி.சிவக்கொழுந்து போட்டியிடுகிறார்.  பாஜக கூட்டணியில் பாமக சார்பில் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் வே.மணிவாசகன் போட்டியிடுகிறார். காங்கிரஸ், தேமுதிக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக கடலூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திட்டக்குடி,  விருத்தாச்சலம்,  பண்ருட்டி,  நெய்வேலி,  குறிஞ்சிப்பாடி மற்றும் கடலூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்அடிப்படையில், காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத் 47% வாக்குகளைப் பெற்று கடலூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் பி.சிவக்கொழுந்து 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் 21% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வே.மணிவாசகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, கடலூர் தொகுதியில் இந்த முறை எம்.கே.விஷ்ணுபிரசாத் வெற்றி பெற்று காங்கிரசின் கொடிபறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cuddalore-constituency-congress-vishnuprasad-wins-dmdk-second-place/ மின்னம்பலம் மெகா சர்வே: சிவகங்கை சீமையை வெல்வது யார்? Apr 16, 2024 18:21PM IST 2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? சிவகங்கை தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் சிவகங்கை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கார்த்தி சிதம்பரம் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் சேவியர்தாஸ் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் தேவநாதன் யாதவ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் வி.எழிலரசி போட்டியிடுகிறார். காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக சிவகங்கை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  சிவகங்கை,  திருமயம்,  ஆலங்குடி, காரைக்குடி,  திருப்பத்தூர் மற்றும் மானாமதுரை (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்  காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 50% வாக்குகளைப் பெற்று சிவகங்கை தொகுதியில் மீண்டும்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவ் 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வி.எழிலரசி 8% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, சிவகங்கை தொகுதியில் இந்த முறை கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்று காங்கிரசின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/congress-candidate-karthi-chidambaram-won-sivagangai-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/   மின்னம்பலம் மெகா சர்வே : திருப்பூர்… மக்களின் டாலர் யாருக்கு? Apr 16, 2024 19:02PM IST  சூடுபிடிக்கிறது அரசியல் களம்…  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில்,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? திருப்பூர் தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி? என்று ஆய்வு நடத்தினோம்.  தமிழ்நாட்டில் இருந்து உலகமே அறியும் வகையில் தொழில் நகராக உருவெடுத்துள்ளது டாலர் சிட்டியானதிருப்பூர். இங்கே தொழிலோடு விவசாயமும் சம அளவில் நடைபெறுகிறது. திருப்பூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சிட்டிங் எம்பி சுப்பராயனே  மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் அருணாசலம்  போட்டியிடுகிறார். பாஜக சார்பில்ஏ.பி.முருகானந்தம் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி நிற்கிறார். திமுக கூட்டணி, அதிமுக, பாஜக இவற்றுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவும் திருப்பூர் களத்தின்இறுதி  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருப்பூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.   இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருப்பூர்  நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருப்பூர் வடக்கு, திருப்பூர்தெற்கு மற்றும் ஈரோடு மாவட்டத்தில் அமைந்திருக்கும் பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…  திமுக கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சுப்பராயன் 43% வாக்குகளைப் பெற்று மீண்டும்முந்துகிறார்.   அதிமுக வேட்பாளர் அருணாசலம் 36%  வாக்குகளைப் பிடித்து இரண்டாம் இடத்தில் இருக்கிறார். பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் 14% வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி 6% வாக்குகளை பெறுகிறார். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூர் தொகுதியில் இந்த முறையும் கம்யூனிஸ்ட் கொடியே  வேகமாக பறக்கிறது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-tiruppur-constituency-cpi-subburayan-wins-admk-came-second-place/   மின்னம்பலம் மெகா சர்வே: தென் சென்னை Apr 16, 2024 19:46PM IST 2024 மக்களவைத் தேர்தலில்  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் தென்சென்னை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் ஜெயகுமாரின் மகன் ஜெயவர்தன் போட்டியிடுகிறார்.  தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்திருக்கிற தமிழிசை செளந்தர்ராஜன் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழ்செல்வி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான விருகம்பாக்கம், சைதாப்பேட்டை,  தியாகராய நகர்,  வேளச்சேரி,  மயிலாப்பூர் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 41% வாக்குகளைப் பெற்று மீண்டும் தென்சென்னைதொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தர்ராஜன் 25% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்செல்வி 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, தென்சென்னை தொகுதியில் இந்த முறையும் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-south-chennai-dmk-thamilachi-thangapandiyan-wins-admk-jayavardhan-second-place/
    • க‌ருணாவுட‌ன் இருந்த‌ ப‌டிப்பு அறிவு இல்லாத‌ பிள்ளையான் அர‌சிய‌லில் பெரிய‌ இட‌த்தில் இருக்கும் போது  கூலிக்கு மார் அடிக்கும் சிங்க‌ள‌வ‌ன் ராங்கிக்குள் ஏறி இருந்து கொண்டு  வ‌ட்டின‌ அமுக்கிற‌து  சின்ன‌ வேலை புத்த‌ன் மாமா🤣😁😂.......................................
    • நேற்று நம்ம ஈழத்து எம்.ஜி.ஆர் ஒர் யூ டியுப்பில் கதைக்கும் பொழுது, நீங்கள் மேற்கூறிய கருத்துப்பட கூறியிருந்தார்....தமிழ் மக்கள் பொங்கி ஏழ வேண்டும் ஆனால் அதிகமாக பொங்கி எழக்கூடாதாம் ..அதன் விளைவு பலாலிக்குள் நாங்கள் இப்ப போக முடியாமைக்கு காரணமாம்... நல்ல சகுணமாம் வெடிச்சத்தம் கேட்கின்றமையால் என கண் சிமிட்டுதிறார்
    • #பக்கத்து இலைக்கு பாயாசம் 🤣.
    • அமெரிக்க‌னுக்கு இஸ்ரேலுக்கு 3.3 மில்லிய‌ன் அமெரிக்க‌ன் டொல‌ர் அவ‌ங்க‌ட‌  கால் தூசுக்கு ச‌ம‌ம்.................... உக்கிரேனுக்கே உத்த‌ன‌ பில்லிய‌ன் டொல‌ர‌ அமெரிக்க‌ன் அள்ளி அள்ளி கொடுத்த‌து அமெரிக்காவோடு ஒப்பிடும் போது  ஈரான் பணரீதியா கொஞ்சம் கச்டப்பட்ட நாடு.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.