Jump to content

நானும் அப்பாச்சியும் .!


Recommended Posts

எனது சிறுவயது முதல் என்னை அதிகமா நேசித்த மனிதர்களில் எனது அப்பாச்சி  முன்னணியில் உள்ளார் அம்மாவை விட அவர் மேல பாசம் அன்பு கொள்ளை பிரியம் எனக்கு ஒரு நெடியெனும் என்னை காணமல் இருப்பது அப்பாச்சிக்கு எதோ தொலைத்து விட்ட சோகம் இருக்கும் எங்க போட்டான் இன்னும் காணவில்லை சுற்றிக்கொண்டு வருவான் ஆளை காணம் செக்கல் பட்டுடு விளக்கு வைக்கும் நேரம் ஆகுது இவனை காணம் என தனியா விட்டின் திண்ணையில் இருந்து கதைப்பார் .

 

அம்மா பேசியபடி இருப்ப அவன் வருவான் நீங்க வந்து தேத்தண்ணிய குடியுங்க எங்க போகபோறான் எங்காவது பெடியலோடா நிப்பான் இப்ப வந்திடுவான் என்று சொன்னாலும் அப்பாச்சி கேளாது நாலுதரம் ரோட்டுக்கு வந்து எட்டி பார்க்கும் சிலவேளை அப்பொழுதுகளில் நான் வருவேன் ......'என்ன கிழவி ரோட்டில யாரை சயிட் அடிக்கிற என்று கேட்படி ' ஓம் ஓம் எனக்கு இப்பதான் 18 ஆள் பிடிக்கிறன் நீ எங்க உலாத்திட்டு வாற என்று என் பின்னாடி வருவார் போய் முகத்தை கைகாலை கழுவிட்டு வீடுக்குள்ள வா நேரம் கேட்ட நேரம் வாறது பேய் பிசாசுடன் என்று புறுபுறுப்பு நடக்கும் .

 

சரி சரி கிழவி உனக்கு கதை கூட புட்டை போடு என்று சொன்னா ஓம் மாப்பிளை நீ வைச்ச ஆள் நான் சாப்பாடு போடுறன் பொறு என எனக்கு பதில் சொல்லி  குசினிக்கு போகும் கிழவி கறிச்சட்டி திறந்து பார்த்து ஏண்டி பிள்ளை குழம்புக்க ஒண்டையும் காணம் என்று அம்மாவிடம் கேள்வி போகும் அம்மாவோ கிடக்கிறது போட்டு கொடுக்க சாப்பிடுவன் என்று சொல்லுவா கிழவி கேட்காது உடனம் ஒரு முட்டை பொரியும் அவ்வளவு வேகமும் வேலைக்கு பஞ்சி படாத ஆளும் அப்பாச்சி மண்வெட்டிய தூக்கினா அவ்வளவு காணி புல்லும் செருக்கிதான் வைப்பா மனவலிமையும் உடல் வலிமையையும் உள்ள ஆள் அப்பாச்சி ....

 

காலமும் நேரமும் வேகமாக நகர உறவுகள் சொந்தங்கள் பிரிவுகள் என சுழற்ச்சி முறையில் வர அதுக்கு நாங்களும் விதிவிலக்கா என்ன அதில் தப்பி போக o/L எடுக்கிற நேரம் போராட்டம் என்னும் பாதையில் போயிட்டம் சிறிது காலம் மனம் பெரும் கஷ்டம் ஏக்கங்களை சுமந்தாலும் நண்பர்கள் வேலைகள் என நாட்கள் நகர அப்பாச்சி இரவுகளில் நினைவில் எப்படியும் வருவார் என்னை அறியாமல் என் கண்கள் நீரை விட்டபடி இருக்கும் கிழவி இப்ப என்ன செய்யும் சாப்பிடுதா அல்லது கோயில் குளம் என்று திரியுதா சொல்லாமல் வந்திட்டன் தேடியிருக்கும் அன்று பூரா என மனதில் ஒரு ஓரமா வலி இருக்கும் இன்னும் சிறிது காலம் எப்படியும் பார்க்கலாம் இப்ப என்ன வேற நாட்டுக்கா போயிட்டன் என்று மனதை தேற்றி உறக்கம் தழுவும் ...

 

 

காலம் உருண்டு ஓட வெளியில் போய் வரும் சுழலும் எனக்கு அமைய ஒருநாள் இரண்டு வருடம் கழிந்து இருக்கும் வீட்டுக்கு போகிறேன் அங்கு அவர்கள் இல்லை பக்கத்து வீட்டு ஆண்டி சொன்னா அம்மா ஆக்கள் இப்ப இன்னாரின் காணியில் வீடு போட்டு இருக்கினம் என்று சரி எனகூறி அங்கு போனா கிழவிதான் முன்னுக்கு இருக்கு மேட்டர் சைக்கிளை கிழவிக்கு நேர விட்டுக்கொண்டு போக அசையாமல் கிழவி இருக்கு என்னன்னா எப்படி இருக்குற குரலில் யாரு என பிடித்த கிழவி அழுது குளறி கூப்பாடு போட்டு தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்து நிண்டிச்சு சரி சரி விடு விடு இப்ப என்ன நான் உனக்கு முன்னுக்கு நிக்கிறன் எதுக்கு அழுகிற விடு தேத்தண்ணி போடு எங்க அம்மா என்று கேட்டபடி நான் அமர .....

 

அம்மா தங்கச்சிய கூப்பிட போயிட்ட எதோ பாடம் படிக்க போறவள் அந்த வாத்தியார் விட்டுக்கு பொழுது படுகுது அதுதான் கூட்டி வர போறா சரி மகனே நீ இப்படி கறுத்து இருக்குற வளத்திட போல கிடக்கு இப்ப எனக்கும் கண் பெரிசா தெரியிறது குறைவு என்று கூற ஓம் நான் முதல் நல்ல வெள்ளைதானே சும்மா இருண அப்பர் எங்க இப்பவும் தண்ணி அடிக்கிறவரா குழப்படியா உன்ர மகன் என்றவுடன் இல்லை நீ போனப்பிறகு குறைவு கவலைதான் அவனுக்கு தடி வளர்த்தபடி இருக்குறான் யாரோ இண்டைக்கு வயல் வெட்ட கூப்பிட்டது போல போயிட்டான் வருவான் இப்ப என் நீ போகப்போறியா மகனே கொஞ்சநேரம் இரு அம்மாவும் அப்பாவும் வந்திடுவினம் தங்கச்சி வேற உன்னை பார்க்க ஆர்வமா இருக்குறாள் இல்லையென நேரம் போகுது நான் எட்டி பார்த்திட்டு போவம் என்று வந்தனான் இனி இங்கால வேலை அடிக்கடி வந்து போறன் யோசிக்காமல் இரு நல்ல சாப்பிடு மருந்து எடு கண்ணுக்கு ஓம் ஓம் நாளைக்கு கட்டையில போற எனக்கு இதுகள்தான் குறை .........

 

வீட்டுக்குள் ஓடி சென்று தனது பையில் இருந்து ஒரு 200ரூபா கையில தந்தா எதாவது வாங்கி சாப்பிடு மோனே உடம்பை பாரு எங்க இருந்தாலும் நீ நல்ல இருப்ப எனக்கு நம்பிக்கை இருக்கு தங்கச்சி உன்னை நம்பிதான் இருக்குறாள் அவளை பாரு நான் இண்டைக்கோ நாளைக்கோ வாழ்த்து முடிச்சிட்டன் நீங்க வாழுற பிள்ளைகள் இன்னும் நிறைய இருக்கு பார்க்க என கட்டி அனைத்து முத்தம் இட்டு கண்கலங்கி நிக்கும் கிழவியின் கண்களை பார்த்து பேசும் அளவு நான் இல்லை என் கண்களும் நீ நிறைந்து இருந்ததால் சரியன போட்டு வாறன் அம்மா வந்தா சொல்லு சிலவேளை அடுத்த கிழமை வருவேன் போட்டு வாறன் ...........

 

 

காலம் வேகமா போக சமாதான  காலம் வர நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பா வந்தா இங்கயும் தனிமை வாட்டி எடுக்கும் சில காலம் அப்பாச்சிக்கு ஒரு போனை போட்டு ஒரு நிமிடம் கதைத்தா எதோ ஒரு சுமை இறங்கிய மாதிரி இருக்கும் கிழவி அங்க கதைக்கும் வேகம் இங்க கேட்கும் 'எண்டா மோனா அங்க எதோ காட்டு கொடுப்பினமாம் உனக்கு தந்திட்டங்களா ' என்று கேட்கும் வேகம் இங்க உள்ள பக்கத்து வீட்டுக்காரனுக்கு கேட்கும் ...இல்லையென அதுக்கு கனகாலம் வேணும் என்று சொன்னா ஆ அது எப்படி அவன்ட மகனுக்கு கொடுத்தவங்கள் இவனட மகனுக்கு கொடுத்தவங்கள் எண்டு எல்லா விபரமும் கிழவி எடுத்து விடும் நாட்டில இருந்த படி அப்படி விசாரிப்பு வெளிநாடு பற்றி அங்க ...

 

 

ஒருநாள் இப்படித்தான் வேலைக்கு போயிட்டு வந்து இருக்க  போன் வந்துது என்னன்னா சொல்லு சும்மா எடுத்தனான் இரவு பூரா ஒரே கனவு அதுதான் உனக்கு எதாவது உடம்பு சரியில்லை என்று யோசிச்சன் அதுதான் கேட்பம் என்று சொன்னா இல்லை அப்பாச்சி வேலை ஒன்றுக்கு போறனான் இங்க தேத்தண்ணி கடையில் கோப்பை கழுவுற வேலை சரியான சனம் இண்டைக்கு சாப்பிட வந்தது அதுதான் வேலை கூட களைச்சு போனன் என்று சொல்ல (அண்டைக்கு அடி அமவாசை ஊருல எல்லோரும் விரதம் எனக்கு தெரியாது ) உடனம் கிழவி சொல்லிச்சு உனக்கு பகிடி இண்டைக்கு ஆடி அமவாசை எல்லாரும் விரதம் யாரு தேத்தண்ணி கடைக்கு வரபோறான் சாப்பிட என்று உடனம் பதில் வந்துது எனக்கு சிரிச்சு முடில ...

 

 

யோவ் கிழவி இங்க வெள்ளைக்காரன் உனக்கு ஆடி அமவாசை பிடிக்கிறான் விரதம் இருந்து எண்டு ஒரு கத்து கத்தினான அதுக்கு பிறகுதான் கிழவிக்கு விளக்கிச்சு ஓம் நான் ஊர் நினைவில சொல்லி போட்டன் சரி விடு நேற்று போன் அடிக்க யாராவோ ஒரு வெள்ளைகாரி கதைச்சால் யாரு அவள் உனக்கு தெரியுமா என்று அடுத்த கேள்வி அனே அது என்னுடைய போன் நிப்பாட்டி கிடந்தா அப்படி சொல்லும் இப்ப உனக்கு இந்த ஆராய்ச்சி எல்லாம் நானும் உனக்கு கால் பண்ணினா சிலநேரம் 'உப அனத்த பிச்சி சாரிய கருணாகர லலித் பசுவ அவ தாணுவ ' எண்டு சொல்லுது நானும் கருணாவை பஸ்சில வைத்து பிடிச்சிட்டங்கள் எண்டு குழம்பி போயிட்டன் உடனம் கிழவி உனக்கு இந்த நக்கல் நளினத்துக்கு மட்டும் குறையில்லை சாப்பிட்டு படு இங்க எனக்கு காசு ஓடுது வைக்கிறன் என்று சொல்லி கட் பண்ணிட்டு போயிட்டா ...

 

இப்ப அப்பாச்சியின் கழுத்தில ஒரு சாம்சுங் கொழுவி விட்டு கிடக்கு அக்கம் பக்கம் எல்லாம் நடமாடும் டெலிக்கொம் இப்ப அப்பாச்சிதான் நம்ம ஊரில ...

 

அப்பாச்சியின் நினைவுகள் நேரம் உள்ள நேரங்களில் தொடரும் உறவுகளே ...

 

Link to comment
Share on other sites

"இப்ப அப்பாச்சியின் கழுத்தில ஒரு சாம்சுங் கொழுவி விட்டு கிடக்கு அக்கம் பக்கம் எல்லாம் நடமாடும் டெலிக்கொம் இப்ப அப்பாச்சிதான் நம்ம ஊரில.."

 

அப்பாச்சி நீடூழி வாழ்க!!  :) 

Link to comment
Share on other sites

எனக்கு என்னுடைய பேரன்மார், பேத்திமாரைத் தெரியாது. நான் பூமிக்கு வரமுன்னம் அவை பூமியை விட்டு வெளிக்கிட்டிட்டினம்.

 

ம்ம்..... நல்லாயிருக்கு, தொடருங்கள் வாசிக்க மிக ஆவல்!!

Link to comment
Share on other sites

நன்றி சோழியன் அண்ணே வரவுக்கும் கருத்துக்கும் .

 

நன்றி அலையக்கா வரவுக்கும் கருத்துக்கும் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்.....

நல்லாயிருக்கு,

தொடருங்கள் வாசிக்க மிக ஆவல்!! :icon_idea: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னால கொஞ்சம் சீரியசாச் சொல்லிப்போட்டு பின்னால சிரிக்க வச்சிட்டியள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடனம் கிழவி சொல்லிச்சு உனக்கு பகிடி இண்டைக்கு ஆடி அமவாசை எல்லாரும் விரதம் யாரு தேத்தண்ணி கடைக்கு வரபோறான் சாப்பிட என்று உடனம் பதில் வந்துது............................

 

 

 எனக்கும் சிரிச்சு முடில ...

Link to comment
Share on other sites

அஞ்சரன் அப்பாச்சியின் கதை என்னையும் எனது அம்மம்மாவிடம் கொண்டு போய்விட்டுவிட்டது. நகைச்சுவையும் கடுமையான உணர்வின் தெறிப்புமாக அனுபவம் மிகவும் அருமையாக எழுதியிருக்கிறீங்கள்.

பி.கு :- அங்கை (FB)நிற்காமல் இங்கை நிண்டு எழுதுங்கோ. :lol:

Link to comment
Share on other sites

பி.கு :- அங்கை (FB)நிற்காமல் இங்கை நிண்டு எழுதுங்கோ. :lol:

 

பேந்து அங்கை தேடுறவைக்கு ஆர் பதில் சொல்லுறது?!  :o

Link to comment
Share on other sites

ம்ம்.....

நல்லாயிருக்கு,

தொடருங்கள் வாசிக்க மிக ஆவல்!! :icon_idea: 

 

நன்றி வரவுக்கும் கருத்துக்கும் விசுகு அண்ணே :rolleyes:

முன்னால கொஞ்சம் சீரியசாச் சொல்லிப்போட்டு பின்னால சிரிக்க வச்சிட்டியள்.

 

தொடர்த்து கடினமா போனால் வாசிக்க ஆர்வம் வராது என்று கொஞ்சம் மாற்றி பார்த்தன் அக்கா :)

உடனம் கிழவி சொல்லிச்சு உனக்கு பகிடி இண்டைக்கு ஆடி அமவாசை எல்லாரும் விரதம் யாரு தேத்தண்ணி கடைக்கு வரபோறான் சாப்பிட என்று உடனம் பதில் வந்துது............................

 

 

 எனக்கும் சிரிச்சு முடில ...

 

நன்றி அக்கா நிலாமதி வரவுக்கும் கருத்துக்கும் :)

 

அஞ்சரன் அப்பாச்சியின் கதை என்னையும் எனது அம்மம்மாவிடம் கொண்டு போய்விட்டுவிட்டது. நகைச்சுவையும் கடுமையான உணர்வின் தெறிப்புமாக அனுபவம் மிகவும் அருமையாக எழுதியிருக்கிறீங்கள்.

பி.கு :- அங்கை (FB)நிற்காமல் இங்கை நிண்டு எழுதுங்கோ. :lol:

 

அப்பம்மா அம்மம்மா ஒரு வரம் எங்கள் பிள்ளைகளுக்கு அப்படி கிடைக்க வில்லையே என்கிற கவலை எனக்கு இருக்கு அக்கா .

 

fb குறைச்சுட்டு வாறன் இப்ப :D

பேந்து அங்கை தேடுறவைக்கு ஆர் பதில் சொல்லுறது?!  :o

 

அதுதானே சோழியன் அண்ணே அப்படி கேளுங்கோ :icon_idea:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரன், உங்கள் கதையை வாசித்ததும், உடனே நினைவுக்கு வந்தது, என்னையும் வளர்த்த ஆச்சிகளும். அப்புக்களும் தான்!

 

அவர்கள் எங்களிடம் எதையுமே எதிர்பார்க்காவிட்டாலும், எம்மால் அவர்களுக்கு, அவர்களுக்குத் தேவையான நேரத்தில்.எதையுமே செய்ய இயலாத தூரத்தில் வாழ்ந்திருந்தோம்! :o

 

அவர்கள் விடைபெற்ற போது , அவர்கள் அருகிலிருந்து விடையனுப்பும் சந்தர்ப்பங்கள் ம் கூடக் கிடைக்கவில்லை! 

 

உங்கள் கதை நகைச்சுவையுடன் கலந்திருந்தாலும், அதன் கருப்பொருள் மிகவும் காத்திரமானது!

 

தொடர்ந்து எழுதுங்கள்!

Link to comment
Share on other sites

அஞ்சரன், உங்கள் கதையை வாசித்ததும், உடனே நினைவுக்கு வந்தது, என்னையும் வளர்த்த ஆச்சிகளும். அப்புக்களும் தான்!

 

அவர்கள் எங்களிடம் எதையுமே எதிர்பார்க்காவிட்டாலும், எம்மால் அவர்களுக்கு, அவர்களுக்குத் தேவையான நேரத்தில்.எதையுமே செய்ய இயலாத தூரத்தில் வாழ்ந்திருந்தோம்! :o

 

அவர்கள் விடைபெற்ற போது , அவர்கள் அருகிலிருந்து விடையனுப்பும் சந்தர்ப்பங்கள் ம் கூடக் கிடைக்கவில்லை! 

 

உங்கள் கதை நகைச்சுவையுடன் கலந்திருந்தாலும், அதன் கருப்பொருள் மிகவும் காத்திரமானது!

 

தொடர்ந்து எழுதுங்கள்!

 

 

புங்கை உங்கள் அனுபவங்களையும் எழுதுங்கோ :)

Link to comment
Share on other sites

பேந்து அங்கை தேடுறவைக்கு ஆர் பதில் சொல்லுறது?!  :o

 

அங்கை காலைவணக்கம் மதிய வணக்கம் போடுற நேரத்தை அப்பாச்சியின் ஞாபகத்தை பகிர பாவிக்கலாம் எண்ட நல்லெண்ணம்தான். அங்கையும் தம்பி வேணும் பதில் சொல்ல ஆனால் இங்கை ஒரு வரலாற்றை பதிய வேண்டிய காலத்தின் கடமையை இங்கையும் செய்ய வேணுமெண்டு சொல்ல வந்தன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கோ அஞ்சரன் அப்பாச்சியின் கதைகளை வாசிக்க ஆவலாய் உள்ளோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பாட்டன் பாட்டியின் அன்பை அரவணைப்பைப் பெற்றுக்கொள்ளதவன்.

ஆனாலும் அயலவர்கள் உறவினர்களின்
பாட்டன் பாட்டிகள் தங்கள் பேரன் பேத்திகளிடம் காட்டும்

தொல்லைக்கு அளவே இல்லை. :D

சிலவேளைகளில் பாட்டியின் மேலிருக்கும் கோபத்தை

அவரின் பேரனிடம் காட்டி அவர்களை வம்புக்கிழுப்பதும் உண்டு :lol:

 

பதிவிற்கு நன்றி அஞ்சரன் 

Link to comment
Share on other sites

நன்றி புத்தன் ..........வாத்தியார் உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் :rolleyes:


எங்கை மிச்சக் கதை? 

 

அக்கா அவசரம்  வேணாம் வரும் ஆனால் வராது :D

 

கூடிய சீக்கிரம் :rolleyes:
 

Link to comment
Share on other sites

அனுபவ வெளிப்பாடுகளுக்கு என்றுமே ஒரு தனியான வீச்சு உண்டு . அதைச் சொல்லும்பொழுது மிகவும் கவனமாக கோர்த்துச் சொல்ல வேண்டும் . அந்த வித்தையை அஞ்சரன் கைவரப் பெற்றிருப்பது மகிழ்சியே . ஆனாலும் முற்ருப்  புள்ளி , கால் புள்ளி இடைப்புள்ளி ஆகியவற்றில் கவனம் எடுங்கள் . இதுவும் ஒரு கதைசொல்லிக்கு அத்தியாவசியமானது .உங்கள் கதைக்கு எனது மனந் திறந்த பாராட்டுக்கள் :) :) :) .

 

Link to comment
Share on other sites

அனுபவ வெளிப்பாடுகளுக்கு என்றுமே ஒரு தனியான வீச்சு உண்டு . அதைச் சொல்லும்பொழுது மிகவும் கவனமாக கோர்த்துச் சொல்ல வேண்டும் . அந்த வித்தையை அஞ்சரன் கைவரப் பெற்றிருப்பது மகிழ்சியே . ஆனாலும் முற்ருப்  புள்ளி , கால் புள்ளி இடைப்புள்ளி ஆகியவற்றில் கவனம் எடுங்கள் . இதுவும் ஒரு கதைசொல்லிக்கு அத்தியாவசியமானது .உங்கள் கதைக்கு எனது மனந் திறந்த பாராட்டுக்கள் :) :) :) .

 

நன்றி கோமகன் அண்ணா உங்கள் கருத்துக்கும் வரவுக்கும் பிழைகளை திருத்த முயற்சி செய்வேன் நிச்சயம் :)

Link to comment
Share on other sites

அஞ்சரன்...  என் அப்பா தன் இளவயதிலேயே தன் தாய் தந்தையரை இழந்தவர் என்பதனால் நான் அப்பாச்சியைப் பார்த்ததே இல்லை.

எனக்கு எல்லாமுமேஎன் அம்மம்மாதான். ஆனாலும் அம்மாவின் மாமியார் ஒருவர் இருந்தவ. பூமணி என்பது அவவின்ர பெயர்.

எங்கட இயக்கப் பெடியள் என்றால் அவவுக்கு பிடிக்காது. இதனால் என் அப்பாவுக்கும் அவவுக்கும் அடிக்கடி சூடான  அரசியல் விவாதம் நடக்கும். இப்படியே அவவைப்பற்றி நிறையக் கதைக்கலாம்.

பழைய ஞாபகங்களை கிளறிவிட்டது உங்கள் கதை... தொடருங்கள்! :)

 

கோமகன் சொன்ன விடயங்களில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். மற்றும் படி திறம்பட எழுதுகின்றீர்கள்! வாழ்த்துக்கள்! :)

Link to comment
Share on other sites

நன்றி கவிதை வரவுக்கும் கருத்துக்கும் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'அதிர்ஷ்ட லாபச் சீட்டு' என்ற தலைப்பில் இந்த வாரம் இங்கே களத்தில் ஒரு சுய ஆக்கம் எழுதியிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் லொட்டோக்களைப் பற்றியே எழுதியிருந்தாலும், உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்று நினைக்கின்றேன். அதில் இருந்து ஒரு பகுதி: 'இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகளில் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும்.'................😌  
    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.