Jump to content

ஆழத்தொலைந்த அலைகளோடு இசைப்பிரியா...!


Recommended Posts

ஆழத்தொலைந்த அலைகளோடு இசைப்பிரியா...!

 

காலம் 2013 ஆடி...,

இரவு கரையும் ஈரத்தில்

நந்திக்கடல் ஆழத்தில்

நிலவு கரையும் நாளொன்றில்

அர்த்த இரவொன்று....!

அமைதியாய் ஓடியலைந்த

அலையில் முகம் நனைத்த

அன்றைப் பொழுதின் இனிமை

இதய அறைகளில்...!

காலம் 2009 மேமாதம்....,

காலழைந்த அந்தக்

கன இருளின் திரையூடே

களமாடியகதை சொன்ன தோழியின்

காலடிகள் மீளத் தேடியது நினைவு....!

ஆழத்தொலைந்த அலைகளோடு

என் ஆத்மா நிறைந்த

ஆயிரமாயிரம் பேரின் முகங்களின்

ஞாபகம் கண்ணீராய்....!

மீளத்தொலைந்து போனது

கடைசிக் கதைகளும்

காலம் மறைத்த துயர்களும்

பின்னிரவுக் கனவுகளில் பிரளயமாக....!

Isaipiri-copy-600x337.jpg
 

பிரியம் நிறைந்த தோழி

இசைப்பிரியாவின் இறுதிக் குரலின் துயர்

படமாய் ஒருநாள்

பலநாள் இரவைத் தின்றது.

பாவத்தின் கையிலிருந்து வழிந்த இரத்தம்

அவள் ப(நி)லத்திலிருந்து எழுந்த

ஓலத்தின் சாட்சியாய்

அவள் நிர்வாணம்....!

பாவங்களைக் கழுவ முடியாத

பொறுப்பிலிருந்து மீள முடியாக் கண்ணீர்

இரவுகளில் அவளே கனவுகளாய்

கண்ணகித் தெய்வத்தின் கடைசிப் பிறவியாய்....!

காலம் 2013...,

ஈழப்பெண்களின் இறுதி நிலமையின்

மொத்த உருவாய் மீள மீள வந்து

முகத்தில் அறைகிறாள் இசைப்பிரியா - இதோ

இன்று சேற்றிலிருந்து இழுத்து வரப்படுகிறாள்....!

கருணையை வேண்டிய கண்களால்

அவள் கடைசிக் குரல்

கடற்கரையோரச் சேற்றோடு கரைகிறது

ஒரு கனவு போல் எங்கள் தோழியின்

கடைசிக் கணங்கள்.....!

பழிதீர்க்கும் பகைமை மட்டுமே

மனிதமற்ற மிருகங்கள் மீது

கோபமாய் நெஞ்சு மூட்டும் நெருப்பாய்

இந்த இரவையும் தின்கிறது....!

'அவலத்தைத் தந்தவனுக்கு அதைத்திருப்பிக் கொடு'

அந்தச் சொல்லின் வலிமையே

சத்தமின்றி நிரம்புகிறது

இன்றல்லாது போயினும் என்றோ ஒருநாள்....!!!!!

01.11.2013 (நள்ளிரவு 1.40)

(இசைப்பிரியா உயிரோடு பிடிக்கப்பட்டுச் சிதைக்கப்பட்ட ஒளிநாடாவை சனல்4 வெளியிட்ட நாளில் இப்பகிர்வு பதிவு செய்யப்படுகிறது)

 

http://mullaimann.blogspot.de/2013/11/blog-post_5.html

 

(கண்ணகி தெய்வமென இசைப்பிரியாவை ஒப்பிட்டதற்கான காரணம் :- வற்றாப்பளை அம்மன் கோவிலும் நந்திக்கடற்கரையும் வரலாற்றில் பல வீரக்கதைகளைக் கொண்டது. வற்றாப்பளை அம்மனை போராளிகள் கூட நம்பிய கடவுள். அந்தக் கடவுளே கைவிட்ட நிலமையில் இசைப்பிரியா அநியாயமாக அழிக்கப்பட்டாள். அதற்காகவே கண்ணகை தெய்வத்தின் கடைசிப் பிறவியென குறிப்பிட்டுள்ளேன்.

 

கற்பு நெறி சார்ந்த அடையாளமான கருத்தில் இல்லை. மற்றும் கண்ணகி என்ற ஒரு பாத்திரத்தின் வடிவமாக இங்கு இசைப்பிரியாவை குறிப்பிடவில்லை.

 

வற்றாப்பளை திருவிழா காலத்தில் பல போராளி குடும்பங்களின் வீடுகளில் கூட விரதம் மரக்கிற சமையலே இருக்கும். அந்தளவு அவர்களும் கண்ணகையம்மனை மதித்தார்கள்.  நந்திக்கடல் நீரில் விளக்கெரியும் மகிமை மிக்கதாய் சொல்லப்படும் கண்ணகை கடவுளே கைவிட்ட நிலமையில் இசைப்பிரியா அவலமாய் சிதைக்கப்பட்டாள். வெறும் புராணக்கதையின் கண்ணகியோடு இசைப்பிரியாவை தராசிட்டு நிறுத்துப் பார்க்க வேண்டாம்)

Link to comment
Share on other sites

கவிதை ஈழப்பெண்ணின் துயரை கண்ணீருடன் பதிவு செய்கின்றது.

 

அதே நேரத்தில், கண்ணகி ஒரு கதாபாத்திரம் மட்டுமே. வெறுமனே கற்பு எனும் கருத்துருவாக்கத்தினை ஆழமாக இறக்குவதற்காக கொண்டுவரப்பட்ட ஒரு கதை பாத்திரம்.  உயிரும், சதையுமாகி எம் முன் ஆடி ஓடி கலைப்பணி செய்து எம் கண் முன்னால் திரிந்து, பின் பேரினவாதத்தினால் கொடூரமாகச் சிதைக்கப்பட்ட இசைப்பிரியாவை வெறும் கதாபாத்திரக் கடவுளுடன் ஒப்பு நோக்குவது மிகத் தவறு.

 

என் ஒரு பெண்ணின் அவலத்தினை கண்டு கவிதை வடிப்பதுக்கு கூட கற்பு நிலை சார்ந்து தான் தலைப்பிட வேண்டுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தியக்கா

கற்பு அழிக்கப்பட்டவள்  என்பதாக உங்கள் உவமானம் வருகிறது என நினைக்கின்றேன்.

அந்த சொல்லே யாழில் தடை  செய்யப்பட்ட ஒன்று.

அந்தளவுக்கு அதற்கு யாரும் உடன்படுவது கிடையாது

 

அது தவிர்த்து

கண்ணகிக்கும் 

எம்முன்  வாழ்ந்த இசைப்பிரியாவுக்கும்

தொடர்புகளை  ஏற்படுத்துவது

வரலாற்றுக்குற்றமாகும்................ :(

பெண்களே

பெண்களை இவ்வாறு வரைவிலக்கணப்படுத்துவது  இரட்டிப்பு சோதனையாகும் :(  

கவிதைக்கும்  நன்றி  சொல்லமுடியவில்லை :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தன் கோவத்தை அடக்கி கொள்ள முடியாத கண்ணகி...மரம் ..செடி..கொடி களைக் கூட எரித்ததாக படித்திருக்கிறேன்..கண்ணகி தனி ஒரு மனிதருக்காக அதாவது கணவருக்காகத் தான் மதுரையை மரஞ்..செடி..கொடிகளை எரித்திருக்கிறா..அசாதரணமாக படங்களில் வரும் காட்சி போன்று தான் கண்ணகியின் செயல்பாட்டை நினைப்பதுண்டு..
அப்படியான ஒரு பெண்ணோடு ..

எங்கள் பிள்ளை இசைப் பிரியாவை ஒப்பிடாதீர்கள்.இசைப்பிரியா தமிழ் மக்களுக்காகவே உயிரை கொடுத்திருக்கும் பிள்ளை.

Link to comment
Share on other sites

கவிதை ஈழப்பெண்ணின் துயரை கண்ணீருடன் பதிவு செய்கின்றது.

 

அதே நேரத்தில், கண்ணகி ஒரு கதாபாத்திரம் மட்டுமே. வெறுமனே கற்பு எனும் கருத்துருவாக்கத்தினை ஆழமாக இறக்குவதற்காக கொண்டுவரப்பட்ட ஒரு கதை பாத்திரம்.  உயிரும், சதையுமாகி எம் முன் ஆடி ஓடி கலைப்பணி செய்து எம் கண் முன்னால் திரிந்து, பின் பேரினவாதத்தினால் கொடூரமாகச் சிதைக்கப்பட்ட இசைப்பிரியாவை வெறும் கதாபாத்திரக் கடவுளுடன் ஒப்பு நோக்குவது மிகத் தவறு.

 

என் ஒரு பெண்ணின் அவலத்தினை கண்டு கவிதை வடிப்பதுக்கு கூட கற்பு நிலை சார்ந்து தான் தலைப்பிட வேண்டுமா?

 

நிழலி,

கற்பின் தத்துவத்தை இலக்கணப்படுத்தியதல்ல கண்ணியென்ற சொல்லின் அர்த்தம். வற்றாப்பளை கண்ணகையம்மனை நம்பியவர்களின் அடையாளமாகவே கண்ணகியென்ற சொல்லை இட்டிருந்தேன். இதனை ஒரு குறிப்பாக இடாமல் போட்டது தவறான புரிதலைத் தந்துள்ளது.

வன்னிமண் நம்பிய வற்றாப்பளையம்மன் வரலாறும் நந்திக்கடலின் வரலாற்றில் மக்களால் நம்பப்படும் நம்பிக்கையையும் நினைத்தே இப்படி தலைப்பிட்டேன்.

கணவனுக்கு நீதி கேட்ட கதாபாத்திரம் கண்ணகியை இங்கு குறிப்பிடவில்லை.நீங்கள் எண்ணும் கற்பு நிலையில் இருந்து எழுதவில்லை. எனது எழுத்தின் தெளிவின்மையே உங்களை தவறான புரிதலுக்கு இட்டுச் சென்றுள்ளது.

 

சாந்தியக்கா

கற்பு அழிக்கப்பட்டவள்  என்பதாக உங்கள் உவமானம் வருகிறது என நினைக்கின்றேன்.

அந்த சொல்லே யாழில் தடை  செய்யப்பட்ட ஒன்று.

அந்தளவுக்கு அதற்கு யாரும் உடன்படுவது கிடையாது

 

அது தவிர்த்து

கண்ணகிக்கும் 

எம்முன்  வாழ்ந்த இசைப்பிரியாவுக்கும்

தொடர்புகளை  ஏற்படுத்துவது

வரலாற்றுக்குற்றமாகும்................ :(

பெண்களே

பெண்களை இவ்வாறு வரைவிலக்கணப்படுத்துவது  இரட்டிப்பு சோதனையாகும் :(  

கவிதைக்கும்  நன்றி  சொல்லமுடியவில்லை :(

மேலே நிழலியின் கருத்துக்கு இட்ட பதிலையே உங்களுக்கும் யாயினிக்கும் தருகிறேன்.

கற்பு என்ற சொல்லை எங்கும் எனது எழுத்துக்களில் எழுதியதில்லை இதுவரையில். கற்பென்ற சொல்லை எங்கள் இதிகாசங்கள் தொடக்கம் இக்காலம் வரையான வரையறைகளுக்குள் எனக்கு உடன்பாடில்லை. கற்பளிப்பு என்ற சொல்கூட எனது எழுத்துக்களில் ஒரு போதும் இருந்ததில்லை. இதனை வாசித்தால் புரியும். நீங்கள் தவறான புரிதலில் கண்ணகி பற்றியும் கற்பு பற்றியும் சொல்லியிருக்கிறீங்கள்.

Link to comment
Share on other sites

நிழலி,

கற்பின் தத்துவத்தை இலக்கணப்படுத்தியதல்ல கண்ணியென்ற சொல்லின் அர்த்தம். வற்றாப்பளை கண்ணகையம்மனை நம்பியவர்களின் அடையாளமாகவே கண்ணகியென்ற சொல்லை இட்டிருந்தேன். இதனை ஒரு குறிப்பாக இடாமல் போட்டது தவறான புரிதலைத் தந்துள்ளது.

வன்னிமண் நம்பிய வற்றாப்பளையம்மன் வரலாறும் நந்திக்கடலின் வரலாற்றில் மக்களால் நம்பப்படும் நம்பிக்கையையும் நினைத்தே இப்படி தலைப்பிட்டேன்.

கணவனுக்கு நீதி கேட்ட கதாபாத்திரம் கண்ணகியை இங்கு குறிப்பிடவில்லை.நீங்கள் எண்ணும் கற்பு நிலையில் இருந்து எழுதவில்லை. எனது எழுத்தின் தெளிவின்மையே உங்களை தவறான புரிதலுக்கு இட்டுச் சென்றுள்ளது.

 

 

விளக்கத்துக்கு நன்றி சாந்தி.

 

கண்ணகி என்ற பெயர் கொடுக்கும் அர்த்தம், கற்பு பற்றிய வலிந்த எண்ணத்தினை  கடந்து என்றுமே செல்லாது என்று நினைக்கின்றேன். அந்த சொல்லை கடவுள் முன் போட்டலோ அல்லது எந்தப் பெண்ணின் முன் போட்டாலோ அது வலியுறுத்தும் கோட்பாடு சார்ந்து பார்க்கப்பட்டுத் தான் அடுத்த அர்த்தங்களை தேடும். அது சொல்ல வந்த கருத்தினை திசை திருப்பி விடும் (கற்பு சார்பான கருத்து அல்லாதவிடத்தும்)

 

தலைப்பில் செய்யும் சில மாற்றங்கள் உங்கள் கவிதையை இன்னும் பலருக்கு புரிய வைக்கும் என நினைக்கின்றேன். இது என் கருத்து மட்டுமே.

Link to comment
Share on other sites

விளக்கத்துக்கு நன்றி சாந்தி.

 

கண்ணகி என்ற பெயர் கொடுக்கும் அர்த்தம், கற்பு பற்றிய வலிந்த எண்ணத்தினை  கடந்து என்றுமே செல்லாது என்று நினைக்கின்றேன். அந்த சொல்லை கடவுள் முன் போட்டலோ அல்லது எந்தப் பெண்ணின் முன் போட்டாலோ அது வலியுறுத்தும் கோட்பாடு சார்ந்து பார்க்கப்பட்டுத் தான் அடுத்த அர்த்தங்களை தேடும். அது சொல்ல வந்த கருத்தினை திசை திருப்பி விடும் (கற்பு சார்பான கருத்து அல்லாதவிடத்தும்)

 

தலைப்பில் செய்யும் சில மாற்றங்கள் உங்கள் கவிதையை இன்னும் பலருக்கு புரிய வைக்கும் என நினைக்கின்றேன். இது என் கருத்து மட்டுமே.

 

நன்றிகள் நிழலி உங்கள் கருத்துக்கு. உங்கள் எண்ணப்படி தலைப்பில் மாற்றத்தை செய்கிறேன். கண்ணகி கதையில் எனக்கு என்றும் உடன்பாடில்லை. நான் வற்றாப்பளை கண்ணகையம்மன் மீதான போராளிகள் பொதுமக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் தான் எழுதினேன். கவிதையின் கீழ் உங்கள் கருத்தின் பின்னர் அடிக்குறிப்பு இட்டுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் நிழலி உங்கள் கருத்துக்கு. உங்கள் எண்ணப்படி தலைப்பில் மாற்றத்தை செய்கிறேன். கண்ணகி கதையில் எனக்கு என்றும் உடன்பாடில்லை. நான் வற்றாப்பளை கண்ணகையம்மன் மீதான போராளிகள் பொதுமக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் தான் எழுதினேன். கவிதையின் கீழ் உங்கள் கருத்தின் பின்னர் அடிக்குறிப்பு இட்டுள்ளேன்.

 

நன்றி  சாந்தியக்கா

படைப்பாளிகளுக்கு  என்று இருக்கும் 

கறுவத்திலிருந்தும் இறங்கி  முன்னுதாரணமாகியுள்ளீர்கள்

நன்றி

நன்றி....

தொடர்க  தம் பணி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழத்தொலைந்த அலைகளோடு இசைப்பிரியா...! இது தலைப்பு.....இதை விட்டுட்டு சும்மா கிடக்கிற கண்ணகியைக் கூப்பிட்டால் என்ன செய்யிறது..உண்மையாக மற்றவர்கள் எழுதிவிட்டார்கள். நானும் எழுதனும் என்ற ஆதங்கத்தில் எழுதுவதில்லை..அப்படியானவளும் அல்ல..அண்மைய காலங்களில் முடிந்தவரைக்கு என் பாட்டுக்கு திரிகிறனான்.புரிந்து கொள்வீர்கள் என்று நம்பிறன்..தலைப்பில் தடுமாறுகிறோம் என்று புரிந்து கொண்டு செயல்பட்டதற்கு நன்றியக்கா.

Link to comment
Share on other sites

யாயினிச் செல்லம் நான் எழுதிய அர்த்தம் புராணக்கதைப் பாத்திரம் கண்ணகியை இல்லை. கோவிக்காதையணை ராசாத்தி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழத்தொலைந்த அலைகளோடு இசைப்பிரியா...! இது தலைப்பு.....இதை விட்டுட்டு சும்மா கிடக்கிற கண்ணகியைக் கூப்பிட்டால் என்ன செய்யிறது..

 

 

 

உண்மையாக மற்றவர்கள் எழுதிவிட்டார்கள். நானும் எழுதனும் என்ற ஆதங்கத்தில் எழுதுவதில்லை..அப்படியானவளும் அல்ல..அண்மைய காலங்களில் முடிந்தவரைக்கு என் பாட்டுக்கு திரிகிறனான்.புரிந்து கொள்வீர்கள் என்று நம்பிறன்..

 

 

இது கருத்துக்களம்

சரி

பிழை என்பதை எழுதும் களம்

நீங்கள் தாராளமாக எழுதலாம்

அது எவருக்கும் பிடிக்கணும்

பிடிக்காமல் இருக்கணும் என்ற  எந்த வரையறையும் இல்லை.

உங்கள் மனதுக்குப்பட்டதை

உங்களுக்கு தெரிந்ததை எழுதுங்கள் பிள்ளாய்

எழுதிவிட்டு

இவ்வாறு அடிக்கடி எழுதுகின்றீர்கள்

அதை தவிர்த்துவிடுங்கள்

இவ்வாறு  எழுதுவதால்

தங்கள் கருத்த தானாகவே வலு  இழந்து விடுகிறது......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏக்கங்களின் வெளிப்பாடாகி விடிந்திருக்கின்றது, கவிதை! 

 

எல்லோருடைய மனதிலும் ஒரே விதமான தாக்கங்களை ஏற்படுத்த, இசைப்பிரியாவினால் மட்டும் முடிந்திருக்கின்றது!

 

ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, சாதாரணமான வாழ்க்கையை வாழ்ந்துவிட நினைத்த எம்மைப்போல ஒரு சாதாரணமானவள் என்பது காரணமாக இருக்கலாம்!

 

ஒரு இயக்கத்தை, நம்பிப்போனவள், நிராதரவாக விடப்பட்டு, அநியாயமாகக் கொல்லப்பட்டமை காரணமாக இருக்கலாம்! எங்கள் எல்லோர் மனதிலும், உள்ள 'குற்றவுணர்வின்' வெளிப்படையான சின்னமாக, இசைப்பிரியாவை, எமது 'ஆழ்மனது' நினைப்பதன் காரணமாக இருக்கலாம்!

 

நான் இசைப்பிரியாவை, முள்ளி வாய்க்காலில் புதைந்து போன, எல்லாப் பெண்களினதும் 'அடையாளச் சின்னமாகவே' பார்க்கவிரும்புகின்றேன்!

 

அதையே தான், 'கெலம் மக்கரே' சொல்ல விழைவதும்!  

 

உங்கள் வரிகள், மிகவும் அழகாக எடுத்தியம்புக்கின்றன, சாந்தி!

 

ஈழப்பெண்களின் இறுதி நிலமையின்
மொத்த உருவாய் மீள மீள வந்து
முகத்தில் அறைகிறாள் இசைப்பிரியா - இதோ
இன்று சேற்றிலிருந்து இழுத்து வரப்படுகிறாள்....!

 

கண்ணகியைப் பற்றி, எனக்கு ஒரு அபிப்பிராயம் இல்லை!

 

கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்று ஒரு பெண் இருக்கவேண்டும் என்ற அடிமைத் தத்துவத்தின் பிரதிநிதி அவள்! 

 

கணவனைக் கூடையில் வைத்துச் சுமந்து சென்ற 'நளாயினி' யின் கதையைப்போன்றதே அவளது கதை!

 

அத்துடன், இந்திர விழா போன்ற வைதீக விழாக்களையும், முதன் முதலாக , வேதத்தின் 'அருவருப்பான' சுலோகங்களுடனான 'வைதீகத் திருமணத்தையும்' நடத்தி வைத்தது 'சிலப்பதிகாரமே"!

 

இன்று நம்பியார், சிவசங்கர் மேனன் போன்ற மலையாளிகள் (சேர நாட்டவர்) எமக்கு செய்யும் அநியாயங்களுக்கு, நியாயம் கற்பித்துக் கொடுப்பதும், இந்தச் சிலப்பதிகாரமே!

 

தமிழர்களைப் 'பாண்டி' என்று இவர்கள் அழைப்பது கூட, சிலப்பதிகாரத்திலிருந்து வந்திருக்கவும் கூடும்! (இது புங்கையின் அனுமானம் மட்டுமே!) :o  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"ஆழத்தொலைந்த அலைகளோடு
என் ஆத்மா நிறைந்த
ஆயிரமாயிரம் பேரின் முகங்களின்
ஞாபகம் கண்ணீராய்....!"

 

 

 

இசைப்பிரியாவின் இறுதி மூச்சுடன்
பல ஆயிரம் உயிர்களின் மூச்சுக்கள்
வெளிவரவேண்டும்
கண்ணீரால் வரைந்த கவிதைக்குப்
பலன் கூடப் பயணிப்போம் ஒன்றாய்

Link to comment
Share on other sites

Thursday, December 9, 2010

உன்போல் ஆயிரமாயிரம் தங்கைகளை அக்காக்களை தின்னக் கொடுத்துவிட்டு

 

isaipriya.PNG
அக்கிரமம் இறுதியில்
பெண்ணுடலையே தின்னும் ஆதிக்கம்
அதற்கு நீயும் விலக்கில்லாமல்
ஆழ்கடல் நுனிமட்டும்
அலைகிறதுன் ஆத்ம ஓலம்……

கண்ணுக்குள் நிறைந்த சிரிப்பும்
கதைசொல்லும் பொன்முகமும்
பூவினும் இனியதாய்
பொலிந்த உன் பெண்மையும்
நாயினும் கடையதாய் உனக்கு நடந்தவைகள்……

நெஞ்சமெல்லாம் நெருப்புப்பற்ற நீ
சிரிக்கும் கொள்ளையழகின் தூய்மை
அலங்கோலமாய் அணுவணுவாய்
படம்பிடித்து மகிழும் காட்சியாய்
நினைக்க நினைக்க மூழும் தீயின் எச்சம்
நெஞ்சுக்குள் மட்டுமே புதைகிறது……

தீயெரித்த கண்ணகியின் கோபத்தை
கதைகளில் தான் படித்தோம்.
ஆனால் எங்கள் சக்திகள் உங்களின் சாதனைகளை
சமகாலத்தில் தானே கற்றோம்.
ஆயினும் ஊமைகளாய்…..!

சாமிகளாய் நம்பிய சரித்திரங்கள் யாவையும்
சாவிட்டு முடித்துச் சாம்பரும் கரைத்துச்
சாவின் மீதுலவும் பூதங்களாய்
பயம்தருகின்ற பொழுதுகளில் உழலுகிறோம்.

சுடலைகளாய் நீழ்கிற தெருக்களில்
கண்ணகைகளாய் எழவும் முடியவில்லை
கண்ணீர் விட்டு அழவும் முடியவில்லை
கொப்பளிக்கும் கோபத்தை துயரத்தை
இப்படித்தான் கொட்ட முடிகிறது.

தங்கையே !
நீ தமிழுக்கும் தமிழனத்துக்கும் கிடைத்த
சொத்துக்களில் ஒரு முத்து.
உன்னைத் தொலைத்துவிட்டோம்.
உன்போல் ஆயிரமாயிரம்
தங்கைகளை அக்காக்களை
தின்னக் கொடுத்துவிட்டு நாங்கள் தின்கிறோம்
உடுக்கிறோம் உழைக்கிறோம்
உயிர்வாழ்கிறோம் இது துரோகம்தான்.
ஆனாலும் உயிர்வாழ்கிறோம்.

யாரும் யாருக்காகவும் உரிமைகோர முடியாத
பூட்டுக்களால் பிணைக்கப்பட்ட
சடங்களாயான எங்கள்
சமகாலவிதியை இப்படித்தான்
ஏற்றுக்கொள்கிறோம்.

பாளங்கள் பிழந்து
வடிந்தொழுகும் சுமைகள்
உன்மீதிறங்கி உன்னைக்
குலைத்துச் சிதைத்துச்
சொன்ன சேதி……!!! :icon_idea:

08.12.10 (கொடுமையாய் சிதைக்கப்பட்ட இசைப்பிரியாவின் நினைவாக இப்பதிவு. இசைப்பிரியா ஒரு கலைஞராக வாழ்ந்து காத்திரம் மிகுந்த படைப்புகளையும் தந்து எங்கள் காலத்தில் வாழ்ந்த போராளி. அவள் நிர்வாணப்படுத்தப்பட்டு நாசமாக்கப்பட்டுக் கொல்லப்பட்டாள்)

 

http://mullaimann.blogspot.de/2010/12/blog-post.html

 

இக்கவிதை 3வருடம் முதல் எழுதியது 2010இல் இப்போது மீள இணைத்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி நீங்கள் எழுதி முடித்துவிட்டீர்கள் என் எழுத்துகள் இன்னும் தொண்டைக்குழியில் சிக்கிய வார்த்தைகளைப்போல நெஞ்சக்கூட்டறைக்குள் குருட்டுத்தனமாக மோதுகின்றன. வெளிவரத் தெரியாமல்...... :(

Link to comment
Share on other sites

சாந்தி நீங்கள் எழுதி முடித்துவிட்டீர்கள் என் எழுத்துகள் இன்னும் தொண்டைக்குழியில் சிக்கிய வார்த்தைகளைப்போல நெஞ்சக்கூட்டறைக்குள் குருட்டுத்தனமாக மோதுகின்றன. வெளிவரத் தெரியாமல்...... :(

 

சகாரா எழுதி முடித்தாயிற்று ஆனாலும் எரியும் நெருப்பாய் மனசு....இன்னும் ஓயாத கடலலைகளின் அதிர்வாய்....

நீங்களும் எழுதிவிடுங்கோ ஓராயிரம் பேரலைகளின் குரலின் பதிவு என்றோ ஒருநாள் பிரளயமாகட்டும்:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.