Jump to content

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும்


Recommended Posts

சங்க காலப் பெயர் கணவீரம். 

 

இதன் மறு பெயர் செவ்வலரி, அல்லது செவ்வளரி

 

தாவரவியல் பெயர் Nerium oleander Ouarzazate

 

Link to comment
Share on other sites

  • Replies 594
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நிறைய  உண்டு கு.சா.கிரமப்புற வீடுகளில் வீட்டுக்கு ஒரு மரமாவது இருக்கும். நீங்கள் படத்தில் போட்டதுபோல் புக்ஷ்டியாய் இராது, ஊரில் தேமா மரம்போல் இருக்கும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சில தோட்டங்களில் பெரிய மாதுளை மரங்கள் உண்டு, மயில்கள் உண்டு, அலரி மரங்கள் வெள்ளை , சிகப்பு, எல்லாம் இருக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரளி மரம்!

 

இது இரண்டு வகைகள் உண்டு! 

 

ஒன்று வெள்ளைப்பூக்கள் பூப்பது, இரண்டாவது ரோஸ் கலரில் பூப்பது! செவ்வரளி என அழைக்கப்படும்!

 

விதைகள் நச்சுத்தன்மை கொண்டவை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரளி மரம்!

 

இது இரண்டு வகைகள் உண்டு! 

 

ஒன்று வெள்ளைப்பூக்கள் பூப்பது, இரண்டாவது ரோஸ் கலரில் பூப்பது! செவ்வரளி என அழைக்கப்படும்!

 

விதைகள் நச்சுத்தன்மை கொண்டவை!

மஞ்சள் நிறமும் உண்டு .ஆமா இதில நாலு மரம் நிக்குது எதிவின்ர பெயர் போடுறது  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சில தோட்டங்களில் பெரிய மாதுளை மரங்கள் உண்டு, மயில்கள் உண்டு, அலரி மரங்கள் வெள்ளை , சிகப்பு, எல்லாம் இருக்கு!

 

அப்ப துலாவோடை கிணறும் இருக்கும்!!!!!  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துலாவோடு பார்க்க வில்லை, கப்பியுடன்  சில கினறுகள் பார்த்திருக்கின்றென்.

மேலும் கிராம வீடுகளில் குழாய் கிணறுகள் உண்டு. அவை சக்கரத்தால் சுற்றி நீர் எடுப்பது, கையால் இரும்புப்  பைப்பை அமத்தி அமத்தி நீர் எடுப்பது. இப்பவெல்லாம் பல வீடுகளில் மின்சார மோட்டர் பூட்டி இருக்கினம். வீட்டுத் தோட்டங்களுக்கு  நீர் இறைக்க இவை செலவு குறைவு!

Link to comment
Share on other sites

சங்க காலப் பெயர் கணவீரம். 

 

இதன் மறு பெயர் செவ்வலரி, அல்லது செவ்வளரி

 

தாவரவியல் பெயர் Nerium oleander Ouarzazate

 

வணக்கம் பிள்ளையள் !! கிட்டமுட்ட எல்லாருமே சரியான மறுமொழியைத்தான் தந்திருக்கிறியள் . சுமேரியர் அலரி மரம் எண்டு சொன்னியள் . ஆனால் அலரியிலை ரெண்டு வகையான அலரி இருக்குது எண்டதை மறந்து போனியள் . அதாலை மல்லையர் அழுகுணி ஆட்டம் போட்டு  உங்கடை இடத்தை பிடிக்கிறார் :lol: :lol: . அவருக்கு இந்தமுறை பரிசு போகின்றது . வாழ்த்துக்கள் மல்லையர் :) :) .

 

Link to comment
Share on other sites

06 செவ் அகத்தி மரம் ( swamp pea or  Sesbania grandiflora )

 

itde.jpg

 

 

அகத்தி என்னும் சிறிய மரம் கெட்டித்தன்மை இல்லாதது, இந்த அகத்தி மரம்  செவ் அகத்தி மஞ்சள் அகத்தி என இரண்டு வகையாகப் பிரிக்கப்படும்  . இந்தமரம்   சுமார் 6. மீட்டரிலிருந்து 10 மீட்டர் வரை வளரக்கூடியது. இதன் இலைகள் 15 முதல் 30 செ.மீ. வரை நீளமுடையவை. இந்த மரம் இந்தியாவிலோ தென்ஆசியாவிலோ தோன்றியிருக்க வேண்டும் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். அகத்தி மரம் பிற மரங்களைப் போல் அதிகம் கிளைகள் கிளைத்து வளருவதில்லை. அகத்தி இலைகள் கூட்டிலைகள் ஆகும். ஒவ்வொரு கூட்டிலையிலும் 40 முதல் 60 இலைகள் வரை இருக்கும். பொதுவாக வெப்பமானதும் அதிக ஈரப்பதம் நிறைந்த இடங்களிலும் வளர்கின்றது.
அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக சித்த மருத்துவம் கூறுகிறது. இம்மரத்தின் பல பகுதிகள் மூலிகையாகப் பயன்படுகின்றது. சிறப்பாக இதன் இலை தமிழ்நாடு உட்பட தென்னிந்திய சமையலில் அகத்திக்கீரை மற்றும் அகத்தியின் பூவும் சமைத்து உண்ணப்படுகிறது.

அகத்தியின் மருத்துவச் சிறப்பைப் பின்வருமாறு கூறலாம்.....

"மருந்திடுதல் போகுங்காண் வன்கிரந்தி - வாய்வாம்
திருந்த அசனம் செரிக்கும் - வருந்தச்
சகத்திலெழு பித்தமது சாந்தியாம் நாளும்
அகத்தியிலை தின்னு மவர்க்கு" .


அகத்திக் கீரையில் 8.4 விழுக்காடு புரதமும் 1.4 விழுக்காடு கொழுப்பும், 3.1 விழுக்காடு தாது உப்புகளும் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். மேலும் அகத்திக்கீரையில் மாவுச் சத்து, இரும்புச் சத்து, வைட்டமின்(உயிர்ச்சத்து) ஏ ஆகியவையும் உள்ளன.

அகத்தி கோழி, மாடு போன்ற கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது.

 

அகத்தி இலையிலிருந்து ஒரு வகைத் தைலம் தயாரிக்கப்படுகிறது.

 

அகத்தியின் பட்டையும் வேரும் மருந்துப்பொருள்களாகப் பயன்படுகிறது.

 

அகத்தி மரக்குச்சிகள் கூரை வேய்வதற்குப் பயன்படுகிறது.

 

அகத்தியின் மிலாரிலிருந்தும் பட்டையிலிருந்தும் உரித்தெடுக்கப்படும் ஒரு வகை நார் மீன் பிடி வலைகளுக்குப் பயன்ப்டுகிறது.

 

அகத்திப் பட்டையின் சாறு சிரங்குக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

 

வேர் மூட்டுவலிக்கு மருந்தாக அரைத்துப் பயன்படுத்தப்படுகிறது.

 

வெண்மை நிற அகத்தி மரம் பொம்மை செய்யவும் வெடிமருந்து செய்யவும் பயன் படுகிறது.

 

வெற்றிலைக் கொடிக்கால்களில் வெற்றிலைக் கொடி படரவும் மிளகுத்தோட்டட்தில் மிளகுக்கொடி படரவும் அகத்தி மரம் பயன்படுகிறது.

 

http://en.wikipedia.org/wiki/Sesbania_grandiflora

 

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூக்களை வைத்துத்தான் மரத்தை இனம் காண்பது தவறு. தவறு இல்லை எனில் இம்மரம்  செவ்வகத்தி என்று நான் கூறுகிறேன். ஏனெனில் அகத்தியிலும் மஞ்சள் நிறமுடையதும் உண்டே. :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வகத்தி மரம். அகத்தியின் பூ மஞ்சள் நிறம்.....அத்துடன் ஒருசில மரங்களின் இலைகளையோ பூக்களையோ நுகர்ந்துதான் உணர முடியும்.

 

 

 

Link to comment
Share on other sites

விக்கி பீடியா இரண்டையும் ஒன்றாகத்தான் பார்க்கிறது.

 

இரண்டு தனி தனி மரங்கள் மாதிரி படவில்லை.

http://en.wikipedia.org/wiki/Sesbania_grandiflora

 

http://www.grannytherapy.com/tam/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-3/sesbania-grandiflora/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்டறியாத விக்கி......செவ்வகத்தி இலையை அகத்தி இலையெண்டு சொல்லி விக்கிறாங்கள்......பனையுரஞ்சி இலையை கருவேப்பிலையெண்டு சொல்லி விக்கிறாங்கள். விக்கியன் சொன்னால் இனி எல்லாம் உண்மை......இஞ்சை பொறு.....ஒரு துளி பொலிடோல் தலையிடிக்கு நல்லதெண்டு நானும் விக்கியிலை எழுதப்போறன்...பண்ணியில் பண்ணிப்பாருங்கோ. :icon_idea:

Link to comment
Share on other sites

செவ்வகத்தி மரம். அகத்தியின் பூ மஞ்சள் நிறம்.....அத்துடன் ஒருசில மரங்களின் இலைகளையோ பூக்களையோ நுகர்ந்துதான் உணர முடியும்.

 

செவ்வகத்திதான் அண்ணை...  !!!     செவ்வகத்தி , அகத்தி இரண்டும் வேறை வேறு...  

 

ஊரிலை எங்கட வீட்டுக்கு பக்கத்து ஐயர் வீட்டிலை நிண்டது....   போய் கேட்டு வாங்கி வந்து  இரண்டு வகையான கண்டையும் கிணத்தடியில் வைச்சனான்.... !!!

 

அகத்தி கீரை மாதம் ஒருக்காலோ இல்லை இரண்டு தரத்துக்கு மேல் சாப்பிட கூடாது எண்டு சொல்வார்கள்,  கிரந்தி வருமாம் ....   உண்மையா....??    ஏன்...??   யாராவது  காரணம் தெரிஞ்சால் சொல்லுங்கள்...   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விக்கி பீடியா இரண்டையும் ஒன்றாகத்தான் பார்க்கிறது.

 

இரண்டு தனி தனி மரங்கள் மாதிரி படவில்லை.

 

அலரியையுமோ ??????????????

 

கண்டறியாத விக்கி......செவ்வகத்தி இலையை அகத்தி இலையெண்டு சொல்லி விக்கிறாங்கள்......பனையுரஞ்சி இலையை கருவேப்பிலையெண்டு சொல்லி விக்கிறாங்கள். விக்கியன் சொன்னால் இனி எல்லாம் உண்மை......இஞ்சை பொறு.....ஒரு துளி பொலிடோல் தலையிடிக்கு நல்லதெண்டு நானும் விக்கியிலை எழுதப்போறன்...பண்ணியில் பண்ணிப்பாருங்கோ. :icon_idea:

 

செவ்வகத்தி இலையை உண்பதில்லையா ???

 

Link to comment
Share on other sites

அலரியையுமோ ??????????????

 

வேறு பெயர் இருந்தால் ஆதாரத்தை கொடுத்துதான் பாவிக்க வேண்டும். யாழில் ஒரு விவாததிற்காக மட்டும் ஒரு புதுப்பெயரை ஏற்றுகொள்ள முடியுமா?

 

நான் இரண்டு தாவரங்களையும் பற்றி விக்கிபீடியாவில்த்தான் பார்த்தேன்.  விக்கிபீடியா சரியா பிழையா என்பது வேறு விவாதம். ஆனால் அது ஒரு ஆதாரம். 

 

அகத்தியில் இலையும் அலரியில் பூவும் மட்டும் பயன் படுத்துவத்தாலும் இந்த நிலையை வந்திருக்கலாம். செவ்வலரி பூ போர்களங்களில் பாவிக்கப்பட்டதினால் அது அடையாளம் கணப்பட்டு தனிபெயர் இடப்பட்டிருக்கு.  அகத்தியில் இரண்டினதும் இலையைப்பாவனை மட்டும்தான் முதன்மை பெறுவதால் பூ முதனமை பெறவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் சைவக் கடைகளில் சொதி வைக்கும் அகத்தி . :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் சைவக் கடைகளில் சொதி வைக்கும் அகத்தி . :D

 

ஏனண்ணா உங்கள் வீட்டில் அகத்திச் சொதி வைப்பதில்லையோ ????

 

Link to comment
Share on other sites

கார்த்திகை பூக்களையும் தேடி அழிக்கும் சிங்கள படையினர்

2297344951_cc4b24f774_z.jpg?zz=1

விடுதலைப்புலிகள் கார்த்திகை பூக்களை தேசிய மலர்களாக அறிவித்ததால் மாவீரர் நாளில் அம்மலரையும் தேடி அழிக்கும் நடவடிக்கைகளில் வன்னியில் உள்ள சிறிலங்கா படையினர் ஈடுபட்டுள்ளனர். முல்லைத்தீவு கிளிநொச்சி வடமராட்சி கிழக்கு உட்பட வன்னிப்பிரதேசங்களிலேயே கார்த்திகை பூக்கள் அதிகம் காணப்படுகின்றன. ஐப்பசி கார்த்திகை மார்கழி மாதங்களில் மழைக்காலம் ஆரம்பித்ததும் மரங்களிலும் வேலிகளிலும் படரும் கார்த்திகை மரத்தில் பூக்கும் கார்த்திகை பூக்களை விடுதலைப்புலிகள் தமிழீழ தேசிய மலர்களாக அறிவித்தனர்.

அதன் பின்னர் கார்த்திகை மலர்களை கண்டால் சிங்கள படையினருக்கு விடுதலைப்புலிகளை கண்டது போல சிம்ம சொர்பனமாக இருக்கும். தற்போது மாவீரர்நாள் ஆரம்பமாகியிருப்பதால் வன்னி மற்றும் வடமராட்சி கிழக்கு பகுதியில் கார்த்திகை கொடிகளை தேடி அழிக்கும் நடவடிக்கைகளில் சிறிலங்கா படையினர் ஈடுபட்டுள்ளனர்.

வீட்டு வேலிகளில் படர்ந்திருக்கும் கார்த்திகை கொடிகளையும் அழித்து விடுமாறு இராணுவத்தினர் பொதுமக்களுக்கு உத்தரவிட்டுள்ளனர். கார்த்திகை பூக்கள் ஆலயங்களிலும் பூசைக்கு எடுக்கப்படுகிறது. கார்த்திகை மார்கழி மாதங்களில் வரும் விநாயகர் விரதம், திருவெம்பாவை பூசைகளுக்கும் இந்த மலர்கள் எடுப்பது வழக்கமாகும்.

இராணுவத்தினரின் கெடுபிடிகளால் கார்த்திகை மலர்களும் வடக்கு கிழக்கிலிருந்து அழிந்து போகும் அவலம் ஏற்பட்டுள்ளது.

 

Link to comment
Share on other sites

வணக்கம்  கள உறவுகளுக்கு , தவிர்க்க முடியாத சில காரணங்களுக்காக நான் , எனது பதிவுகள் யாவற்றையும் வரும் சனிகிழமை வரை நிறுத்தியுள்ளேன் . மீன்றும் சனிகிழமை சந்திப்போம் நன்றி ,

Link to comment
Share on other sites

நான் போட்ட மரத்திலை சிக்கிச் சில்லெடுத்து  விளையாடின எல்லா உறவுகளுக்கும் நன்றியுங்கோ  :lol:  :lol:  . இன்னும் கொஞ்ச நேரத்திலை ஆர் வெண்டதெண்டு சொல்லுறன் பிள்ளையள் :D :D .

Link to comment
Share on other sites

பூக்களை வைத்துத்தான் மரத்தை இனம் காண்பது தவறு. தவறு இல்லை எனில் இம்மரம்  செவ்வகத்தி என்று நான் கூறுகிறேன். ஏனெனில் அகத்தியிலும் மஞ்சள் நிறமுடையதும் உண்டே. :D

 

" அகத்தி ஆயிரம் காய் காய்த்தாலும் புறத்தி புறத்திதான்! " எண்டு ஒரு சொலவடை இருக்கு கண்டியளோ :unsure: . ஏன் இப்பிடி சொல்லிறாங்கள் எண்டு எனக்கு விளங்கேலை  . தமிழினி " அகத்தி" எண்டு சொன்னியள் .நல்ல விசையம் . அனால் என்ன அகத்தி??  சுமே உங்கடை மறுமொழியை வைச்சு இப்பிடி பரிசை லவட்டிப் போட்டாவே :lol: ?? அப்புக்காத்தைப் போட்டு வழக்காடினாலும் கேஸ் படுத்துட்டுதே :D :icon_idea: ?? இதிலை கலகலப்பாய் கருத்து எழுதின எல்லா கள உறவுகளுக்கும் நன்றி   . சுமேரியருக்கே பரிசு வழங்கப் படுகின்றது :) .

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனது பார்வையில் - ஈரான் தாக்கும் என்பது கிட்டதட்ட ஈபி காரைநகர் அடித்தது போல் - நடக்க முதலே எல்லாரும் ஊகித்த விடயம். ஆகவே தாக்குதலுக்கு சரியாக ஒரு நாள் முதல் விலை கூடி local peak ஐ அடைந்தது. அதவாது தாக்குதல் நடக்கும் போது ஏலவே price factored-in நிலை. தாக்குதல் முடிந்ததும் profit taking ஆல் விலை கொஞ்சம் இறங்கியது. ஆனால் இஸ்ரேல் தாக்கலாம், சண்டை பெரிதாகலாம் என வாய்ப்பு இருந்த படியால் 84 இல் தரித்து நின்றது. அதற்கு உடனடி வாய்ப்பு இல்லை என்றதும் 82க்கு வந்து விட்டது. ஆனால், இஸ்ரேல் ஈரானிய அதிகாரிகளை தாக்கு முன் இருந்த நிலைக்கு வீழவில்லை. ஆகவே இன்னும் ஒரு சிறிய பதட்டநிலைக்காவது வாய்ப்புள்ளது என சந்தை கருதுவதாகப்படுகிறது எனக்கு. இது ஒரு டைமன்சன் பார்வை மட்டுமே. இன்னொரு வளமாக - அமெரிக்காவின் எண்ணைகுதங்கள் எல்லாம் நிரம்பு நிலைக்கு வந்துவிட்டதால் - கேள்வி குறைவதாகவும் தெரிகிறது. இதை விட வேறு ஒன்று அல்லது பல காரணிகள் எமக்கு தெரியாமல் விலையை தீர்மானிக்க கூடும்.
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.   CSK, RR, KKR, SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.      #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team KKR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator SRH 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 KKR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி)   SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)   RIYAN PARAG   11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) JASPRIT BUMRAH 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) RIYAN PARAG 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Sunil Narine   19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • நீங்க‌ள் சொல்லுவ‌து புரியுது அண்ணா இந்த‌ திரியில் நேற்றே நான் எழுதி விட்டேன் பிஜேப்பி த‌மிழ் நாட்டில் வ‌ள‌ந்தால் அது ஒட்டு மொத்த‌ த‌மிழ் நாட்டுக்கே ஆப‌த்து என்று த‌மிழ் நாட்டின் விச‌ச் செடி பிஜேப்பி..................இவ‌ர்க‌ள் ஊழ‌ல காட்டி மிர‌ட்டி தான் பாம‌காவை கூட்ட‌ணியில் சேர்த்த‌வை...............ம‌ருத்துவ‌ர் ஜ‌யா ராம‌தாஸ் போன‌ வ‌ருட‌ம் சொன்னார் த‌மிழ் நாட்டில் பிஜேப்பிக்கு   பூச்சிய‌த்துக்கு கீழ‌ என்று  அதாவ‌து த‌மிழ் நாட்டில் பிஜேப்பிக்கு ம‌க்க‌ள் ஆத‌ர‌வு இல்லை என்று........... ப‌ல‌ வ‌ருட‌மாய் நோட்டாவுக்கு கீழ‌ நின்று கொண்டு இருந்த‌ பிஜேப்பி த‌மிழ் நாட்டில் ம‌ற்ற‌ க‌ட்சிக‌ளை உடைச்சு முன்னுக்கு வ‌ருவ‌து த‌மிழ் நாட்டுக்கு ஆப‌த்து கோவையில் வ‌ட‌ நாட்டானின் ஆதிக்க‌ம்  அதிக‌ம் த‌மிழ‌ன் மாத‌ம் 18ஆயிர‌ம் ரூபாய்க்கு வேலை செய்த‌ இட‌த்தில் வ‌ட‌க்க‌னின் வ‌ருகைக்கு பிற‌க்கு த‌மிழ‌ர்க‌ளுக்கு வேலை இல்லை வ‌ட‌க்க‌ன் மாத‌ம் 9ஆயிர‌த்துக்கு  வேலை செய்வான்  த‌மிழ‌னே த‌மிழ‌னை நீக்கி விட்டு வ‌ட‌க்க‌னை வேலைக்கு அம‌த்தின‌ம் கார‌ண‌ம் வ‌ட‌க்க‌ன் குறைந்த‌ ச‌ம்ப‌ல‌த்துக்கு வேலை செய்வான்............................வ‌ட‌ நாட்டில் வேலை இல்லாம‌ தான் ஹிந்தி கார‌ங்க‌ள் அதிக‌ம் த‌மிழ் நாட்டுக்கு ப‌டை எடுத்து வ‌ருகின‌ம்😮 ஆனால் ஹிந்தி ப‌டிச்சா வேலை கிடைக்கும் என்று பிஜேப்பி கூட்ட‌ம் பொய் ப‌ர‌ப்புரைய‌ த‌மிழ் நாட்டில் அவுட்டு விட்ட‌வை 5வ‌ருட‌த்துக்கு முத‌ல்.........................த‌மிழ‌ர் அல்லாத‌வ‌ர்க‌ள் த‌மிழ் நாட்டில் ஒரு கோடி பேர் வாழுகின‌ம் அதில் அதிக‌ம் வ‌ட‌க்க‌ன் இதுவும் த‌மிழ‌ர்க‌ளுக்கு ஆவ‌த்தில் போய் முடியும்..................... சீமானுக்கு அர‌சிய‌லில் எதிர் கால‌ம் இருக்கு ப‌ய‌ணிக்க‌ நீண்ட‌ தூர‌ம் இருக்கு அண்ணா சீமான் கூட்ட‌னி வைச்சா க‌ட‌சியில் விஜ‌ய‌காந்துக்கு ந‌ட‌ந்த‌து தான் ந‌ட‌க்கும்.......................ச‌ம‌ர‌ச‌ம் செய்யாம‌ எவ‌ள‌வு கால‌ம் தேர்த‌ல‌ ச‌ந்திக்கிறாரோ அவ‌ள‌வ‌த்துக்கு சீமானுக்கும் க‌ட்சிக்கும் ந‌ல்ல‌ம்........................சீமான் போட்ட‌ விதையை அவ‌ரின் த‌ம்பிக‌ள் ச‌ரி செய்வார்க‌ள் ..................... என‌து க‌ணிப்பு நாம் த‌மிழ‌ர் க‌ட்சி இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் 7/9 ச‌த‌வீத‌ம்  பெற‌ அதிக‌ வாய்ப்பு..................... ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் போட்டியிட்ட‌ தொகுதியில் ஒரு ஆளுக்கு 2000ரூபாய் ஆளும் அர‌சு கொடுக்குது அப்ப‌டி வீஜேப்பி ஆதிமுக்கா என்று இந்த‌ மூன்று க‌ட்சியும் ஓட்டுக்கு காசு கொடுக்கின‌ம் காசு கொடுக்காம‌ தேர்த‌ல‌ ச‌ந்திக்கும் ஒரே க‌ட்சி நாம் த‌மிழ‌ர் க‌ட்சிம‌ட்டும் தான் 🙏🥰......................................................
    • அதுக்கு நன்றி கடனாக சின்னத்தை முடக்கி மாற்றாக கேட்ட சின்னங்களையும் தேர்தலில் போட்டியிடாத சுயேட்சைகளுக்கு ஒதுக்கி தனது புலனாய்வுப்பிரிவை வீட்டுக்கு அனுப்பி  வாக்கு எந்திரத்தில் சின்னத்தை மங்கலாக்கி மைக் சின்னத்துக்கு மேலையே விவசாயி சின்னத்தை வைத்து தாம் கொஞ்சம் மெருகேற்றி வரைந்து கேட்ட விவசாயி சின்னத்தை போனவாட்டி சமதிக்காமல் இந்த வாட்டி போட்டியிடாத சுயேட்சைக்கு அதே வரைந்த சின்னத்தை அப்படியே கொடுத்து நன்றிக்கடனை சீமானுக்கு பிஜேபி செய்துள்ளது.... அடேங்கப்பா எவ்வளா ஒரு அன்பு பிஜேபிக்கு...
    • தங்களது கவி வரிகளில் வாழ்கிறது எமதுபோராட்டமும் வாழ்வும் வலியும். அதற்கேற்ற படங்களும்... பாராட்டுகள் உரித்தாகுக. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.