Jump to content

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்

எங்கம்மா அம்மா

மற்றவனது அம்மா சும்மா என்பதெல்லாம் வாதத்துக்குதவாது.

 

 

நீங்கள்  விரும்பினாலும்

விரும்பாவிட்டாலும்

சீமான் லட்சக்கணக்கான இளைய தலைமுறையின் தலைவர் இன்று

அந்த மக்களை  மதித்து தங்கள் எழுத்து இருக்கணும்.

 

உங்களது எழுத்துக்களை  பார்க்கும் போது

நீங்கள்  சொல்வது மட்டுமே சரி  என்பது போலவும்

நீங்கள் மட்டுமே ஈழத்தமிழருக்கு தலைவர் என்பது போலவும் உள்ளது.

அதனை  முதலில் அசை  போடவும்.

 

மாவீரர்களுக்கு இங்குள்ளவர்கள் அஞ்சலி  செலுத்துவதையே  கேலி  செய்யும் தாங்கள்

மாவீரர் பற்றி  எழுத பேச தகுதியுடையவரா???

சிந்திக்கவும்.............. :(

 

முக்கியமாக யாழ் என்பது நீங்கள் நினைக்கும் அளவுக்கு 

மலிவான தளமல்ல

அது பெரும் விரூட்சமாக

பல திறமைசாலிகளையும்

பல தாயக விரும்பிகளையும்

பல படைப்பாளிகள்  எழுத்தாளர்களையும் கொண்ட தளம்.

இங்கு எழுதும் போது

ஆதாரங்கள்

அடக்கம்

மற்றும்   பொறுப்புணர்வு முக்கியம்...... :) 

 

respect-067.gif

Link to comment
Share on other sites

  • Replies 284
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

துளசி

ஜெயலலிதா என்ன செய்தாலும் கண்டுக்காமல் போவம், கருணாநிதி என்ன செய்தாலும் கண்டுக்காமல் போவம். சீமான் அண்ணா என்ன செய்கிறார் என்று மட்டும் கேள்வி கேட்பம். சீமான் அண்ணா என்ன செய்கிறார் என்று தேடி அவர் செய்

விசுகு

வணக்கம் எங்கம்மா அம்மா மற்றவனது அம்மா சும்மா என்பதெல்லாம் வாதத்துக்குதவாது.     நீங்கள்  விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சீமான் லட்சக்கணக்கான இளைய தலைமுறையின் தலைவர் இன்று அந்த மக்களை  மதித்

nedukkalapoovan

ஈழத்தமிழர்களே ஈழத்தமிழர்களின் மீதுதானே சவாரி செய்கிறார்கள். புலம்பெயர் அசைலக் கேசுகள் எல்லாம்.. என்னத்தில சவாரி செய்யுதுகள் அண்ணா. எப்பவும் சில விசயங்களை நோண்டிக் கொண்டிருக்கப்படாது. ஏன்னா ஆழ நோண்டினா

சனல் நான்கிற்கு அடுத்தது என்பதையும் விசுகு சேர்த்துஇருக்கலாம் ,

இப்படி எத்தனை பேரை உசுப்பேற்றி உயிர் எடுக்க போகின்றீர்கள் .

Link to comment
Share on other sites

ஏதோ சீமானை நம்பிக்கொண்டு வாய் பார்த்துக் கொண்டிருக்கிற மாதிரி இருக்கு உங்கட பதிவு.. :D எனக்குத்தெரிந்து யாரும் இங்கு அப்படி இல்லை..

தேனீ வந்து குடிச்சிட்டுப் போகுதே என்று பூ நினைத்தால் அந்த மரத்துக்கு எதிர்காலம் இல்லை.. (தத்துவம் எண் 2378 :lol: )

மாறாக, அது குடிச்சிட்டுப் போகட்டும்.. ஆனால் என் சந்ததியும் பெருகட்டும் என்று பூ நினைக்குது பாருங்க.. அங்கதான் பூ நிக்குது.. :D

சீமான் ஈழ அரசியலை பேசுவதால் தமிழகத்தில் இன்று நன்மைகள் அவருக்குக் கிடைக்கலாம்.. ஆனால் ஈழ ஆதரவு என்கிற தண்ணீரை ஊற்றியவர்களுள் அவர் முக்கியமானவர் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.. ஆகவே, அவர் நீரூற்றி தேன் எடுக்கிறார். அதே நேரத்தில் அவரது அரசியல் ஈழ ஆதரவு அரசியல் பலத்தைப் பெருக்குகிறது என்பதை நாமும் மறந்துவிடக்கூடாது.. இது பூவாகிய எமக்கு நன்மை.. :D

 

இது வரவேற்கக்கூடிய கருத்து. 

 

அன்று முன்னாள் எதிர்கட்சி தலைவர் அமிர்தலிங்கத்தின் உணர்ச்சிப் பேச்சின் பின் திரளாத கூட்டமா? போடாத இரத்தப் பொட்டுக்களா? திருமதி மங்கையற்கரசியார் பாடாத தமிழுணர்வுப் பாடல்கள்களா? அதற்கு வீறு கொண்டெழாத இளைஞர் கூட்டங்களா? இறுதியில்…???

வெறும் உணர்வுகளுக்கு மட்டும் இடம் கொடுக்காமல்… தொட்டிலில் ஆரம்பித்த அப்பா பிள்ளை அல்லது அம்மா பிள்ளை என்ற ஒரு பக்க சார்புநிலை எடுக்காமல்… தூற்றும் காற்றில் தூற்றிடினும் விழித்திருப்போம்!!  :)

Link to comment
Share on other sites

கவனம்! கவனம்! கவனம்! தமிழினத்திற்கு இழைத்த அநீதிகளுக்கும் படுகொலைகள், பாலியல் வன்முறைகளுக்கு எதிராக பேசினால், நீதி கேட்டால் உயிரை எடுப்போம் என்று......... இல்லை இல்லை என் எஜமான் உங்கள் உயிரை எடுப்பார் என்று ஒரு ஜனநாயகவாதி எச்சரிக்கை விட்டுள்ளார்.

Link to comment
Share on other sites

ஏதோ சீமானை நம்பிக்கொண்டு வாய் பார்த்துக் கொண்டிருக்கிற மாதிரி இருக்கு உங்கட பதிவு.. :D எனக்குத்தெரிந்து யாரும் இங்கு அப்படி இல்லை..

 

அண்ணா, இதை பலர் பல தடவை சொல்லியாயிற்று.

ஆனால் அவர்கள் திரும்ப திரும்ப நாங்கள் சீமான் அண்ணா தமிழீழம் வாங்கி தருவார் என்று சொல்லி தான் அவருக்கு ஆதரவு கொடுக்கிறம் என்று சொல்லினம். அது அவர்களே கற்பனையில் நினைத்து கூறுவது. அதற்கு நாங்கள் என்ன செய்வது? அவர்களுக்கும் எங்களோட சண்டை பிடிக்கிறதுக்கு ஒரு கருத்து வேணுமெல்லோ? :lol:

 

Link to comment
Share on other sites

இசை நிங்கள் யாரை பற்றி சொல்லுறியள் என்று புரியவில்லை இவைகள் ஒருபோதும் நான் செய்யாதவை ஒருமுறை பெயரை சரி பாருங்கள் அல்லது அப்படியான நான் இணைத்ததா கூறும் பதிவுகளை தாருங்கள் .

 

நிங்கள் வேறு ஒருவரை நான் என் நினைத்து பேசிட்டு இருக்குரியல் என்று நினைக்கிறேன் இசை கவனத்தில் எடுங்கள் . :(

அஞ்ச்.. நீங்கள் சொன்னது சரிதான்.. :blink:  ஜீவா எழுதியதை நீங்கள் எழுதியதாக நினைவில் கொண்டுவிட்டேன்.. என்னால் தங்களுக்கு ஏற்பட்ட அபகீர்த்திக்கு களத்தின் முன் சாஸ்டாங்கமாக விழுந்து மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்..  :D

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=126465#entry919807

Link to comment
Share on other sites

அஞ்ச்.. நீங்கள் சொன்னது சரிதான்.. :blink:  ஜீவா எழுதியதை நீங்கள் எழுதியதாக நினைவில் கொண்டுவிட்டேன்.. என்னால் தங்களுக்கு ஏற்பட்ட அபகீர்த்திக்கு களத்தின் முன் சாஸ்டாங்கமாக விழுந்து மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்..  :D

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=126465#entry919807

 

அவுக்கெண்டு வண்டி அடியுண்ட விழுந்துபோட்டு, என்னெண்டு எழும்புறதெண்டு தெரியாமை நிலத்திலை நீச்சலடிச்சவரை நாந்தான் ஒருமாதிரி ஓடிப்போய்த் தூக்கிவிட்டனான்.  :o  :lol:

Link to comment
Share on other sites

வணக்கம்

எங்கம்மா அம்மா

மற்றவனது அம்மா சும்மா என்பதெல்லாம் வாதத்துக்குதவாது.

 

 

நீங்கள்  விரும்பினாலும்

விரும்பாவிட்டாலும்

சீமான் லட்சக்கணக்கான இளைய தலைமுறையின் தலைவர் இன்று

அந்த மக்களை  மதித்து தங்கள் எழுத்து இருக்கணும்.

 

உங்களது எழுத்துக்களை  பார்க்கும் போது

நீங்கள்  சொல்வது மட்டுமே சரி  என்பது போலவும்

நீங்கள் மட்டுமே ஈழத்தமிழருக்கு தலைவர் என்பது போலவும் உள்ளது.

அதனை  முதலில் அசை  போடவும்.

 

மாவீரர்களுக்கு இங்குள்ளவர்கள் அஞ்சலி  செலுத்துவதையே  கேலி  செய்யும் தாங்கள்

மாவீரர் பற்றி  எழுத பேச தகுதியுடையவரா???

சிந்திக்கவும்.............. :(

 

முக்கியமாக யாழ் என்பது நீங்கள் நினைக்கும் அளவுக்கு 

மலிவான தளமல்ல

அது பெரும் விரூட்சமாக

பல திறமைசாலிகளையும்

பல தாயக விரும்பிகளையும்

பல படைப்பாளிகள்  எழுத்தாளர்களையும் கொண்ட தளம்.

இங்கு எழுதும் போது

ஆதாரங்கள்

அடக்கம்

மற்றும்   பொறுப்புணர்வு முக்கியம்...... :) 

 

விசு அண்ணே ஒரு விடையத்தை புரிந்து கொள்ளுங்கள் இங்கு சீமானை தவிர ஈழ ஆதரவு தலைவர்கள் பற்றி எவரு கதைப்பது இல்லை ஏன் என்றுதான் விளங்க வில்லை வைகோ செய்யாத ஈழ ஆதரவு போராட்டமா .

 

திருமாவளவன் செய்யாத ஈழ ஆதரவு போராட்டமா

ராமதாஸ் விடாத அறிக்கையா

திருமுருகன் காந்தி

வேல்முருகன்

நெடுமாறன் ஐயா

குளத்தூர் மணி

வீரமணி

சுபா வீரபாண்டி

d .ராஜா

தாமரை

தோழர் தியாகு

ஏன் கருணாநிதியும் சேர்க்கலாம்

 

இன்னும் நிறைய இருக்கு அது என்ன யாழ் தளம் சீமானின் ஊடக தளமா அவரை பற்றி மட்டும் செய்தி போடுவது அவர் செய்வதை மட்டும் இங்கு பகிர்வது  சீமானை பற்றி கருத்து சொன்னால் அனைவரும் திரண்டு வராது இது நீங்கள் எந்தவையில் பார்க்குரியல் .

 

ஏன் கருணாநிதி செய்யும் ஈழம் சம்மந்தமான போராட்டங்களை டொசோ கூட்டத்தை ஆதரியுங்கோ உங்களுக்கு புலிகள் சொன்னார்களா கருணாநிதி துரோகி என்று அறிக்கை விட்டார்களா .*

 

அல்லது சீமான் எங்களில் அதிகார பூர்வ பிரதி நிதி அவரை ஆதரியுங்கோ என்று அறிக்கை தலைமை செயலகம் விடுத்தது எதுக்கு இவ்வளவு புரணம் அவருக்கு பாடுரியல் .

 

அவைகளை விடுங்கள் முதலில் சுய ஆக்க தளம் ..ஒரு கருத்தாடல் தளம் இங்கு கொண்டுவந்து பேஸ்புக் குப்பைகளை கொட்டுவாதை முதலில் நிறுத்த சொல்லுங்கள் யாழ் கருத்தை கருத்தால் எதிகொள்ள முடியாது வசை பாடுவது நக்கல் பண்ணுவது அல்ல அரசியல் களம் .

 

பெண்ணை ஒருவன் வேசி என்று சொல்லுறான் அதுக்கு இங்க உள்ளவ ஈழ உணர்வாளர்கள் ஆதரவு கொடுக்கினம் அவன் சொன்னது என்ன தப்பாம் சிங்களவனுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம் இதில் புலிகளை தீவிரமா நேசிக்கிரம் என்று வேறு பேச்சு .

 

வாதங்கள் ஆரோக்கியமா இருக்கவேணும் என்று நான் விரும்புவது ஆனால் அவார்கள் சீண்டி விவாதத்தை திருப்பி விட்டு அஞ்சரன் குழப்பவாதி தேசியம் பேச தகுதி அற்றவர் என்பது இதுதான் உங்க பண்பா .

 

புலிகளை பாடும் வாயால் கடைசிவரை நரிகளை பாடேன் என்பது மட்டும் உறுதி .

 

 

 

அஞ்ச்.. நீங்கள் சொன்னது சரிதான்.. :blink:  ஜீவா எழுதியதை நீங்கள் எழுதியதாக நினைவில் கொண்டுவிட்டேன்.. என்னால் தங்களுக்கு ஏற்பட்ட அபகீர்த்திக்கு களத்தின் முன் சாஸ்டாங்கமாக விழுந்து மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்..  :D

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=126465#entry919807

 

நன்றி இசை இவ்வாறான தவறான புரிதல்கள் தான் பிரச்சினைக்கு காரணம் நிங்கள் பிழையை ஏற்ருகொண்டதுக்கு நன்றி . :D

 

மறுபடியும் கையை பிடிச்சு இழுத்தியா விளாட்டு வேணாம் ஆமா :D :D :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசு அண்ணே ஒரு விடையத்தை புரிந்து கொள்ளுங்கள் இங்கு சீமானை தவிர ஈழ ஆதரவு தலைவர்கள் பற்றி எவரு கதைப்பது இல்லை ஏன் என்றுதான் விளங்க வில்லை வைகோ செய்யாத ஈழ ஆதரவு போராட்டமா .

 

திருமாவளவன் செய்யாத ஈழ ஆதரவு போராட்டமா

ராமதாஸ் விடாத அறிக்கையா

திருமுருகன் காந்தி

வேல்முருகன்

நெடுமாறன் ஐயா

குளத்தூர் மணி

வீரமணி

சுபா வீரபாண்டி

d .ராஜா

தாமரை

தோழர் தியாகு

ஏன் கருணாநிதியும் சேர்க்கலாம்

 

இன்னும் நிறைய இருக்கு அது என்ன யாழ் தளம் சீமானின் ஊடக தளமா அவரை பற்றி மட்டும் செய்தி போடுவது அவர் செய்வதை மட்டும் இங்கு பகிர்வது  சீமானை பற்றி கருத்து சொன்னால் அனைவரும் திரண்டு வராது இது நீங்கள் எந்தவையில் பார்க்குரியல் .

 

ஏன் கருணாநிதி செய்யும் ஈழம் சம்மந்தமான போராட்டங்களை டொசோ கூட்டத்தை ஆதரியுங்கோ உங்களுக்கு புலிகள் சொன்னார்களா கருணாநிதி துரோகி என்று அறிக்கை விட்டார்களா .*

 

அல்லது சீமான் எங்களில் அதிகார பூர்வ பிரதி நிதி அவரை ஆதரியுங்கோ என்று அறிக்கை தலைமை செயலகம் விடுத்தது எதுக்கு இவ்வளவு புரணம் அவருக்கு பாடுரியல் .

 

அவைகளை விடுங்கள் முதலில் சுய ஆக்க தளம் ..ஒரு கருத்தாடல் தளம் இங்கு கொண்டுவந்து பேஸ்புக் குப்பைகளை கொட்டுவாதை முதலில் நிறுத்த சொல்லுங்கள் யாழ் கருத்தை கருத்தால் எதிகொள்ள முடியாது வசை பாடுவது நக்கல் பண்ணுவது அல்ல அரசியல் களம் .

 

பெண்ணை ஒருவன் வேசி என்று சொல்லுறான் அதுக்கு இங்க உள்ளவ ஈழ உணர்வாளர்கள் ஆதரவு கொடுக்கினம் அவன் சொன்னது என்ன தப்பாம் சிங்களவனுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம் இதில் புலிகளை தீவிரமா நேசிக்கிரம் என்று வேறு பேச்சு .

 

வாதங்கள் ஆரோக்கியமா இருக்கவேணும் என்று நான் விரும்புவது ஆனால் அவார்கள் சீண்டி விவாதத்தை திருப்பி விட்டு அஞ்சரன் குழப்பவாதி தேசியம் பேச தகுதி அற்றவர் என்பது இதுதான் உங்க பண்பா .

 

புலிகளை பாடும் வாயால் கடைசிவரை நரிகளை பாடேன் என்பது மட்டும் உறுதி .

 

சீமான் சம்பந்தப்பட்ட செய்திகளை  இணைப்பதும்

அதனை  விவாதப்பொருளாக்குவதும் தாங்கள் தான்  அஞ்சயன்

 

மீண்டும் மீண்டும்

கண்ணை  மூடிக்கொண்டு பால் குடிக்கவேண்டாம்

இங்குள்ளவர்கள் சிறு பிள்ளைகள் கிடையாது

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு இங்குள்ளவர்கள் அஞ்சலி  செலுத்துவதையே  கேலி  செய்யும் தாங்கள்

மாவீரர் பற்றி  எழுத பேச தகுதியுடையவரா???

சிந்திக்கவும்.............. sad.png

 

 

விசு அண்ணே மாவீரரை போற்றும் நீங்கள் என்றாவது அன்றைய தினம் கொல்லபட்ட மக்களை யோசிச்சது உண்டா அவர்களுக்கு ஒரு அகவணக்கம் சொல்லியது உண்டா அவர்கள் இறத்தார்கள்  போராளிகளுடன் அவர்களும் நின்றனர் தனியே மாவீரகளுக்கு வணக்கம் செலுத்துவதால் மட்டுமே புலி ஆதரவாளன காட்டி கொள்ளவேண்டிய தேவை இல்லை என்று நினைக்கிறேன் .

 

ஒரு வேளை அவர்களின் எண்ணிக்கை மட்டும் இணையத்தில் இருப்பதால் கூட இருக்கலாம் தேடுங்கள் அன்றைய நாளில் கொல்லபட்ட மக்களை :( :(


சீமான் சம்பந்தப்பட்ட செய்திகளை  இணைப்பதும்

அதனை  விவாதப்பொருளாக்குவதும் தாங்கள் தான்  அஞ்சயன்

 

மீண்டும் மீண்டும்

கண்ணை  மூடிக்கொண்டு பால் குடிக்கவேண்டாம்

இங்குள்ளவர்கள் சிறு பிள்ளைகள் கிடையாது

 

செய்தி தளம் உண்மை பொய்கள் நடுநிலை பக்க சார்பு என்று பல இருக்கும் இதில் சீமானின் மறுப்பகத்தை இணைத்தால் இணைப்பவர் குற்றவாளி நல்ல இருக்கு உங்க வாதம் .

 

 

கண்ணை நீங்கள் திறந்து ஒருபக்கத்தை பார்ப்பதுதான் பிழை 360 பகையில் பாருங்கள் உலகம் பல செய்திகள் சொல்லும் அண்ணே .
 

Link to comment
Share on other sites

விசு அண்ணே ஒரு விடையத்தை புரிந்து கொள்ளுங்கள் இங்கு சீமானை தவிர ஈழ ஆதரவு தலைவர்கள் பற்றி எவரு கதைப்பது இல்லை ஏன் என்றுதான் விளங்க வில்லை வைகோ செய்யாத ஈழ ஆதரவு போராட்டமா .

 

திருமாவளவன் செய்யாத ஈழ ஆதரவு போராட்டமா

ராமதாஸ் விடாத அறிக்கையா

திருமுருகன் காந்தி

வேல்முருகன்

நெடுமாறன் ஐயா

குளத்தூர் மணி

வீரமணி

சுபா வீரபாண்டி

d .ராஜா

தாமரை

தோழர் தியாகு

ஏன் கருணாநிதியும் சேர்க்கலாம்

 

இன்னும் நிறைய இருக்கு அது என்ன யாழ் தளம் சீமானின் ஊடக தளமா வரை பற்றி மட்டும் செய்தி போடுவது அவர் செய்வதை மட்டும் இங்கு பகிர்வது  சீமானை பற்றி கருத்து சொன்னால் அனைவரும் திரண்டு வராது இது நீங்கள் எந்தவையில் பார்க்குரியல் .

 

ஏன் கருணாநிதி செய்யும் ஈழம் சம்மந்தமான போராட்டங்களை டொசோ கூட்டத்தை ஆதரியுங்கோ உங்களுக்கு புலிகள் சொன்னார்களா கருணாநிதி துரோகி என்று அறிக்கை விட்டார்களா .*

 

அல்லது சீமான் எங்களில் அதிகார பூர்வ பிரதி நிதி அவரை ஆதரியுங்கோ என்று அறிக்கை தலைமை செயலகம் விடுத்தது எதுக்கு இவ்வளவு புரணம் அவருக்கு பாடுரியல் .

 

அவைகளை விடுங்கள் முதலில் சுய ஆக்க தளம் ..ஒரு கருத்தாடல் தளம் இங்கு கொண்டுவந்து பேஸ்புக் குப்பைகளை கொட்டுவாதை முதலில் நிறுத்த சொல்லுங்கள் யாழ் கருத்தை கருத்தால் எதிகொள்ள முடியாது வசை பாடுவது நக்கல் பண்ணுவது அல்ல அரசியல் களம் .

 

புலிகளை பாடும் வாயால் கடைசிவரை நரிகளை பாடேன் என்பது மட்டும் உறுதி .

 

அண்ணா, நீங்கள் கூறுவது தவறு. யாழ் தளம் சீமான் அண்ணாவின் ஆதரவு தளம் என்று அர்த்தமல்ல. இந்த இணைப்பில் முன்னோக்கி சென்று பாருங்கள். எத்தனை பேர் பற்றிய போராட்ட செய்திகள் உள்ளது என தெரியும்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=119014&page=66

 

அதைவிட இதில் தியாகு ஐயாவின் போராட்ட செய்தி. http://www.yarl.com/forum3/index.php?showtopic=130671&page=1

இது வேல்முருகன் அவர்களின் போராட்ட செய்தி. http://www.yarl.com/forum3/index.php?showtopic=130804&page=1

எம் கண்ணில் படும் செய்திகளை பாரபட்சமற்று நாங்கள் இணைத்துக்கொண்டு தான் இருக்கிறோம்.

 

ஆனால் யாழில் அடிக்கடி சீமான் அண்ணாவுக்கு எதிரான கட்டுரைகள் முளைப்பது புதிதல்ல. நீங்களும் இணைக்கிறீர்கள். அதனால் தான் நாங்களும் அதிகளவில் சீமான் அண்ணா பற்றி கருத்து வைக்கிறோம். நீங்களே பல திரிகளை அவ்வாறு ஆரம்பித்து விட்டு இப்பொழுது புலம்பினால் என்ன செய்வது? இந்த திரியில் நாங்கள் எம்பாட்டுக்கு இருந்தோம். சீமான் அண்ணா பற்றி சீண்டி எழுதி தொடக்கியது மெசோ அக்கா. அதற்கு பிறகு அலை அக்கா, நீங்கள் என சீமான் அண்ணாக்கு எதிராக எழுதி இந்த திரியை இவ்வளவு நீட்டியதற்கு நாம் எவ்வாறு பொறுப்பாக முடியும்.

அத்துடன் ஏனையோர் பற்றிய செய்திகளை வேறு யாரையும் இணைக்க வேண்டாம் என்று சொன்னார்களா? நீங்கள்/மற்றவர்கள் இணைக்காமைக்கு நாங்கள் என்ன செய்ய முடியும்? இந்த திரியில் பல முக்கிய நபர்களின் கருத்துகள் இணைக்கப்பட்டுள்ளன. அதை விட வைகோ ஐயாவின் காணொளியையும் பையன் அண்ணா இணைத்திருந்தார். உங்கள் கண்ணிற்கு அவை படாதவை ஆச்சர்யம் தான்.

முகநூலிலிருந்து வருவன அனைத்தும் குப்பைகள் அல்ல. போராட்ட செய்திகள், முக்கியமான நபர்களின் கருத்துகள் போன்றன இடம்பிடிக்கின்றன. (நீங்கள் கூட முகநூல் செய்தியை இணைத்தீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்). மற்றவர்களை சுய ஆக்கம் எழுத வேண்டாம் என்று யாராவது தடுத்தார்களா? எனக்கு எழுத தெரியாது எழுதவில்லை. எழுதக்கூடியவர்கள் எழுதட்டும்.

 

உங்களை சீமான் அண்ணா பற்றி பாட சொல்லி யாராவது கேட்டார்களா? பிறகு ஏன் பாட மாட்டீர்கள் என இங்கே சொல்லிக்காட்டுகிறீர்கள்? (அதுவும் மட்டம் தட்டலுடன்).

Link to comment
Share on other sites

அதை விட தமிழக செய்திகள் பகுதியில் பாருங்கள். ஏனைய பலர் பற்றிய செய்திகளை பிழம்பு அண்ணா  :icon_mrgreen: உட்பட பலர் இணைத்திருக்கிறார்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showforum=151&prune_day=100&sort_by=Z-A&sort_key=last_post&topicfilter=all

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

------

ஆனால் யாழில் அடிக்கடி சீமான் அண்ணாவுக்கு எதிரான கட்டுரைகள் முளைப்பது புதிதல்ல. நீங்களும் இணைக்கிறீர்கள். அதனால் தான் நாங்களும் அதிகளவில் சீமான் அண்ணா பற்றி கருத்து வைக்கிறோம். நீங்களே பல திரிகளை அவ்வாறு ஆரம்பித்து விட்டு இப்பொழுது புலம்பினால் என்ன செய்வது? இந்த திரியில் நாங்கள் எம்பாட்டுக்கு இருந்தோம். சீமான் அண்ணா பற்றி சீண்டி எழுதி தொடக்கியது மெசோ அக்கா. அதற்கு பிறகு அலை அக்கா, நீங்கள் என சீமான் அண்ணாக்கு எதிராக எழுதி இந்த திரியை இவ்வளவு நீட்டியதற்கு நாம் எவ்வாறு பொறுப்பாக முடியும்.

-------

 

இந்தத் தலைப்பு.... ஆரம்பித்ததிலிருந்து,

ஒவ்வொருவரின் கருத்தையும்... அவதானித்திலிருந்து,

துளசி சொல்வது சரியான கணிப்பு.

எல்லா... இட‌த்திலும், எல்லாப் ப‌கிடி, ந‌க்க‌ல்க‌ளை விட‌ முடியாது.

தயவு... செய்து இனிமேலாவது, சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்புணர்ச்சியுடன் நடப்பது எல்லோருக்கும் நல்லது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
dzr6.jpg
 

 

 

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் இடித்ததற்கும், பழ.நெடுமாறன் கைது செய்யப்பட்டதற்கும் தமிழக அரசுக்கு கண்டனம்! - சீமான் !!

தமிழ்ச் சமூகத்துக்காக உயிர் நீத்தவர்களை நினைவு படுத்தும் வகையில் கட்டப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் இடித்து அகற்றப்பட்டதும் பழ.நெடுமாறன் கைது செய்யப்பட்டதும் கண்டனத்துக்குரியது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச்சுவர் இடிப்பைக் கண்டித்து மதுரை தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசையும், காங்கிரசையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் இது குறித்து சீமான் பேசும் போது, தமிழ்ச் சமூகத்துக்காக உயிர் நீத்தவர்களை நினைவு படுத்தும் வகையில் கட்டப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் இடித்து அகற்றப்பட்டதும் பழ.நெடுமாறன் கைது செய்யப்பட்டதும் கண்டனத்துக்குரியது என்று தெரிவித்த அவர், நெடுஞ்சாலைக்குச் சொந்தமான இடத்தை ஒப்பந்தப்படி பராமரித்து வந்த நிலையில், அதை ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி நினைவுமுற்றத்தை அரசு அகற்றியுள்ளது. இதை சட்டப்படி எதிர்கொண்டு இழந்த நிலத்தை மீட்போம் என்று தெரிவித்தார்.இதில் சீமான் மனைவி கயல்விழி, இளைஞர் பாசறை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சீமான், மதுரை மண்டல பொறுப்பாளர் வெற்றிக்குமரன், மதுரை மாவட்ட, புறநகர் மாவட்ட பொறுப்பாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

 

facebook

Link to comment
Share on other sites

தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டதை கண்டித்தும், ஐயா.பழ.நெடுமாறன் காவல் துறையால் கைது செய்ததைக் கண்டித்தும், தமிழக அரசின் தமிழர் விரோத போக்கினை கண்டித்தும் 15/11/2013 அன்று சென்னையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

 

1452428_664211176951828_2082909773_n.jpg

 

(facebook)


முள்ளிவாய்க்கால் முற்ற சுவர் இடிக்கப்பட்டதையும் நெடுமாறன் ஐயாவின் கைதையும் கண்டித்து மயிலாடுதுறையில் 15/11/2013 அன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்.

 

1453302_569001523165143_2080679762_n.jpg

 

1469805_569001539831808_66510076_n.jpg

 

1393941_569001536498475_1783901298_n.jpg

 

995543_569001573165138_1196902945_n.jpg

 

524606_569001609831801_1093149011_n.jpg

 

1473027_569001563165139_1832322669_n.jpg

 

(facebook)


முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்த மாநில அரசை கண்டித்து 15/11/2013 அன்று நாம் தமிழர் கட்சி,திருச்சி மாவட்டத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்.பிரபு தலைமையில் நாம் தமிழர் உறவுகள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட தோழர்கள் பின்பு மாலை விடுவிக்கப்பட்டனர்.

 

1465140_249122998578118_731362141_n.jpg

 

946045_249123001911451_1013233111_n.jpg

 

1470301_249122978578120_1186008180_n.jpg

 

1450252_249123678578050_2122423504_n.jpg

 

1461709_249123558578062_1720393669_n.jpg

 

999624_249123561911395_346694842_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற பகுதிகளை இடித்த அதிமுக அரசை கண்டித்து இன்று மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதிமுக முன்னணி தளபதிகளும் தோழர்களும் .. பல்வேறு இயக்க உணர்வாளர்களும் திரளாகக் கலந்து கொண்டனர் ..

 

1002916_604394319620518_960249319_n.jpg

 

1454801_604394359620514_1465693835_n.jpg

 

1456110_604394406287176_520638063_n.jpg

 

1393510_604394432953840_1995209975_n.jpg

 

1457572_604394459620504_747914364_n.jpg

 

1474550_604394666287150_2141828394_n.jpg

 

(facebook)


முள்ளிவாய்க்கால் முற்றம் இடிக்கப்பட்டதைக் கண்டித்து திருப்பூரில் ம.தி .மு.க. சார்பில் தடையை மீறி ஆர்ப்பாட்டம். ஆர்ப்பாட்டம் நடத்திய அனைவரும் கைது..

 

1463729_604397956286821_1847077890_n.jpg

 

1465313_604397812953502_1754550463_n.jpg

 

(facebook)


இராமநாதபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில்

 

1455903_604399132953370_1587336540_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

தஞ்சையில் அமைந்த முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்த தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம். ஈரோடை மாவட்டம் கோபிசெட்டிபாளையம்.

 

நாம் தமிழர் கட்சியினர் கைது.

 

1460185_188836441305785_1521916105_n.jpg

 

1452271_188836654639097_151209672_n.jpg

 

1441239_188836437972452_1929882389_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு இங்குள்ளவர்கள் அஞ்சலி  செலுத்துவதையே  கேலி  செய்யும் தாங்கள்

மாவீரர் பற்றி  எழுத பேச தகுதியுடையவரா???

சிந்திக்கவும்.............. sad.png

 

 

1- விசு அண்ணே மாவீரரை போற்றும் நீங்கள் என்றாவது அன்றைய தினம் கொல்லபட்ட மக்களை யோசிச்சது உண்டா அவர்களுக்கு ஒரு அகவணக்கம் சொல்லியது உண்டா அவர்கள் இறத்தார்கள்  போராளிகளுடன் அவர்களும் நின்றனர் தனியே மாவீரகளுக்கு வணக்கம் செலுத்துவதால் மட்டுமே புலி ஆதரவாளன காட்டி கொள்ளவேண்டிய தேவை இல்லை என்று நினைக்கிறேன் .

 

ஒரு வேளை அவர்களின் எண்ணிக்கை மட்டும் இணையத்தில் இருப்பதால் கூட இருக்கலாம் தேடுங்கள் அன்றைய நாளில் கொல்லபட்ட மக்களை :( :(

 

செய்தி தளம் உண்மை பொய்கள் நடுநிலை பக்க சார்பு என்று பல இருக்கும் இதில் சீமானின் மறுப்பகத்தை இணைத்தால் இணைப்பவர் குற்றவாளி நல்ல இருக்கு உங்க வாதம் .

 

 

 

2- கண்ணை நீங்கள் திறந்து ஒருபக்கத்தை பார்ப்பதுதான் பிழை 360 பகையில் பாருங்கள் உலகம் பல செய்திகள் சொல்லும் அண்ணே .

 

 

 

1- எல்லாவற்றையும் நீங்கள்தான் சொல்கிறீர்கள்

 

2- ஒரு மனிதன் 360 பாகையில் ஒரே நேரத்தில் பார்ப்பது முடியாத  காரியம்

ஆனால் உங்களுக்கு பார்க்கமுடிகிறது

அதிலும் 360 பாகையிலும் சீமானே தெரிகிறார்

தயவு செய்து நல்ல வைத்தியரை அணுகவும்

அவசரம்.

நன்றி.

Link to comment
Share on other sites

1- எல்லாவற்றையும் நீங்கள்தான் சொல்கிறீர்கள்

 

2- ஒரு மனிதன் 360 பாகையில் ஒரே நேரத்தில் பார்ப்பது முடியாத  காரியம்

ஆனால் உங்களுக்கு பார்க்கமுடிகிறது

அதிலும் 360 பாகையிலும் சீமானே தெரிகிறார்

தயவு செய்து நல்ல வைத்தியரை அணுகவும்

அவசரம்.

நன்றி.

 

என்ன வியப்பு அண்ணா இது ஒரு வாகனசாரதி வலம் இடம் எல்லாம் பார்க்க முடியாது நேரா மட்டுமே பார்ப்பேன் என்பதுபோல் உள்ளது உங்கள் வாதம் .

 

பல்நோக்கு சிந்தனை இல்லாவிட்டால் தலைவரால் கூட போராட்டத்தை இவ்வளவு படையணிகளை உருவாக்கி இருக்க முடியாது ஒருமனிதன் ஒன்றைத்தான் ஒருநேரத்தில் பார்க்க செய்ய முடியும் என்றால் பல்சார் அறிவு வளராது .

 

நீங்கள் பார்க்கும் பக்கம் அப்படி ஒருவரை திருப்தி படுத்த எழுதுவது அல்ல கருத்து யதார்த்தம் எதுவோ அதை வையுங்கள் வாதத்தில் நான் தமிழ் தேசியவாதி என்பதால் நான் சொல்வது எல்லாம் சரியா இருக்க முடியாது எமக்கு வேண்டியதை பிரித்து எடுப்பதுதான் எமக்கு நல்லம் .

 

உணர்ச்சி வசப்படுவது கூட ஒருவகை நோய்தான் இரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு வரும் நல்ல புத்தகம் படியுங்கள் முடித்தாள் தியானம் பண்ணுங்கள் வைத்தியரிடம் செல்லவேண்டிய தேவை இருக்காது அண்ணே . :(

 

Link to comment
Share on other sites

மே 19 பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாள். அது வேறுவிதமாகவும், நொவெம்பர் 27 வேறுவிதமாகவும் அனுஸ்டிக்கப்படுவது. நொவெம்பர் 27ல் பொதுமக்களுக்கு வணக்கம் கூறுவது வழமை அல்ல. தவறும் அல்ல. 

Link to comment
Share on other sites

நொவெம்பர் 27 மாவீரர்நாள் இது தலைவரால் அறிவிக்கப்பட்டதால் பசுமரத்தாணிபோல் அந்நாள் தமிழர் மனதில் பதிந்துவிட்டது. பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாளை, மே18 அல்ல 19 என்று நாட்டுக்கு நாடு வேறுபட அனுட்டிக்கப்படுகிறது. இதனைத் தவிர்ப்பது நல்லது. மே 18-19 இரு நாட்களையும் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாட்களாக அறிவித்து அனுட்டித்தால் வேறுபாடுகள் நீங்கிவிட இடமுண்டு.

 

 

 

 

Link to comment
Share on other sites

தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இடம் பெற்றுள்ள தமிழக தலைவர்களின் படங்களில் பெரியார் இடம் பெறவில்லை. இதற்கு விளக்கம் கேட்ட தோழர்களிடம், ‘தமிழகத் தலைவர்கள் - தமிழுக்காக உழைத்தவர்கள் - தமிழ் எழுத்தாளர்கள் - தமிழ்ப் பேச்சாளர்கள்’ என்ற நான்கு வகைப்படுத்தலிலும் பெரியார் எதிலும் இடம் பெறவில்லை என்று அமைப்பாளர்கள் சார்பில் கூறப்பட்ட தாம்.

Fb

Link to comment
Share on other sites

தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இடம் பெற்றுள்ள தமிழக தலைவர்களின் படங்களில் பெரியார் இடம் பெறவில்லை. இதற்கு விளக்கம் கேட்ட தோழர்களிடம், ‘தமிழகத் தலைவர்கள் - தமிழுக்காக உழைத்தவர்கள் - தமிழ் எழுத்தாளர்கள் - தமிழ்ப் பேச்சாளர்கள்’ என்ற நான்கு வகைப்படுத்தலிலும் பெரியார் எதிலும் இடம் பெறவில்லை என்று அமைப்பாளர்கள் சார்பில் கூறப்பட்ட தாம்.

Fb

 

தமிழக தலைவர்களின் படங்களில் பெரியார் இடம் பெறவில்லை என்பதைக் கண்ணுற்ற அம்மா செயலலிதாவின் கோபம்தான், தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவரை இடித்தழித்ததோ???. :blink: 

Link to comment
Share on other sites

நல்ல செய்தி:

முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்த பின்பு கைது செய்யப்பட்ட பழ. நெடுமாறன் ஐயா உட்பட ஏனைய 82 பேர்களுக்கும் இன்று மதுரை உயர் நீதிமன்றத்தில் சொந்த ஜாமீனில் விடுதலை கிடைத்தது.

 

Rajkumar Palaniswamy

(facebook)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.