Jump to content

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!


Recommended Posts

சிலர் தங்கள் தலை விதியை, வலிய தாங்களே எழுதுகிறார்கள்

இதில் அம்மாவும் அடங்குகிறா......

இந்த தலைப்பிற்கு இந்த ஒரு வரிகள் மட்டுமே ...............

Link to comment
Share on other sites

  • Replies 284
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

துளசி

ஜெயலலிதா என்ன செய்தாலும் கண்டுக்காமல் போவம், கருணாநிதி என்ன செய்தாலும் கண்டுக்காமல் போவம். சீமான் அண்ணா என்ன செய்கிறார் என்று மட்டும் கேள்வி கேட்பம். சீமான் அண்ணா என்ன செய்கிறார் என்று தேடி அவர் செய்

விசுகு

வணக்கம் எங்கம்மா அம்மா மற்றவனது அம்மா சும்மா என்பதெல்லாம் வாதத்துக்குதவாது.     நீங்கள்  விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சீமான் லட்சக்கணக்கான இளைய தலைமுறையின் தலைவர் இன்று அந்த மக்களை  மதித்

nedukkalapoovan

ஈழத்தமிழர்களே ஈழத்தமிழர்களின் மீதுதானே சவாரி செய்கிறார்கள். புலம்பெயர் அசைலக் கேசுகள் எல்லாம்.. என்னத்தில சவாரி செய்யுதுகள் அண்ணா. எப்பவும் சில விசயங்களை நோண்டிக் கொண்டிருக்கப்படாது. ஏன்னா ஆழ நோண்டினா

சிலர் தங்கள் தலை விதியை, வலிய தாங்களே எழுதுகிறார்கள்

இதில் அம்மாவும் அடங்குகிறா......

முதல் வசனம் மிக உண்மையானது .

Link to comment
Share on other sites

முதல் வசனம் மிக உண்மையானது .

அப்ப உன்னை நீயே அறிவாய் என்னும் கருத்திற்கிணங்க உங்களை நன்றாக அறிந்து வைத்திருக்கிறீர்கள் அண்ணா ............. :D

Link to comment
Share on other sites

காவல்துறை வைத்த வேலியை அகற்றும் எம் மக்கள்

 

995867_480975792019809_1353037414_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

காலையில் கைதுசெய்யப்பட்ட 61 பேர் மற்றும் ஐயா நெடுமாறன் உள்ளிடோர் ரிமாண்ட் செய்யப்படுட்டு திருச்சி மத்திய சிறை நோக்கிபயணம்.ஐயா உடன் கைது செய்யப்பட்ட தம்பி புவன் தகவல்.

 

(facebook)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5cot.jpg
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் தேசத்தில் எம் ஆளுகைக்குள் இருந்தபோது நாம் புதைகுழிகளில் விதைத்த வீரப்பரம்பரைகளது வித்துடலை வெட்டியெறிந்து வீசியதே சிங்களம் அத்துடன் நாம் இன்னுமொரு விதிசெய்ய முனைந்துள்ளோம், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தினை தமிழின எதிரிகள் இப்படி இடித்தழிக்காதுவிடினே நாம் வியப்புறல்வேண்டும். மீண்டும் காலம் எமக்கு எதிரி யார் நண்பர்கள் யார் என்பதை அடையாளம் காட்டியிக்கின்றது. இதில் வியப்பேதுமில்லை. தமிழகத்தின் அரசியற்களத்திலிருந்து அழித்தொழிக்கப்படவேண்டியது கருனாநிதியும் காங்கிரசும் இல்லை அத்தோடு தன்னையும்தான் என ஜெயலலிதா தானாகவே அடையளம் காட்டியிருக்கிறார். தவிர முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இப்போது தமிழகத்தின் கடைக்கோடிவரை தன்னை அடையாளப்படுத்தியிருக்கின்றது, தஞ்சையில் பெரியகோவில் பார்ப்பதற்கு அடுத்ததாக இதுவே எதிர்காலத்தில் அனைவரது தேர்வாகவும் இருக்கும். முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை முற்றிலுமாக அழிப்பதற்கு தமிழின விரோதிகள் முயல்வதற்குமுன்பு எந்தவித சேதாரமும் இல்லாது அதைப் பெயர்த்தெடுத்து நாம் வாழும் புலம்பெயர்தேசத்தில் எங்காவது நிறுவுவதே நல்ல முயற்சி ஆகும். அவைகள் எமது சொத்துக்கள் அவற்றைக் காப்பது எமது கடன்.

 

மேலும் எஜமானர்கள் வீசிய எலும்புத்துண்டுக்காய் இங்கு பல விசுவாச வாலை ஆட்டுகின்றன, விழுங்கிய எலும்புகள் ஜீரணிக்காது பேதியாக்கி வெளியேறும்போது வால்களிலும் ஒட்டிக்கொண்டு, அவை விசுவாச வலாட்டும்போது எமது முகங்களிலும் தெறிக்கின்றன ஆகவே தூர விலகி இருங்கள் இல்லையேல் அசிங்கம் எமக்குத்தான். தேர்தல் காலத்திலும் சில வந்தது பின்பு போனது அதுபோல இவைகளும் வரும் போகும் அதுகளை அதுபாட்டுக்கு விடுங்கோ.

Link to comment
Share on other sites

இவாவுக்கு சூப்ரமணிய சாமியும் துக்ளக் சோவும் ஆலோசகர்கள் எண்டால் இதுவும் நடக்கும் இன்னும் நடக்கும். மழை விட்டாலும் தூவானம் விடவில்லை புகழ் கருணாநிதியும் இவாவும் ஒரே இந்திய குட்டையில் ஊறிய மட்டைகள் தான். இப்ப நிலமை இப்படி எண்டால் மோடி வந்தால் இன்னும் மோசமாகலாம். அவருக்கும் சூப்ரமணிய சாமி ஆலோசகர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

நன்றி வைகோ ஐயா மற்றும் அனைத்து உணர்வாளர்களுக்கும்..!

Link to comment
Share on other sites

கல்தோன்றி மண்தோண்றாக் காலத்து முன்தோன்றி மூத்த தமிழன். பெருமையில் தமிழன் வானத்தில் பறந்தான். இப்போதுதான் அவனைப் பிடித்து பூமிக்குக் கொண்டுவந்து மண்போட்டு மூடுகிறார்கள். வளர்வதற்கு.

Link to comment
Share on other sites

இது என்ன கொடுமை உங்க விசுவாசத்துக்கு அளவே இல்லையா நாங்கள் தமிழக பிழைப்பு அரசியலை விமர்சனம் செய்கிறம் அதை நிங்களா முடிவு எடுத்து புலிகளுக்கு எதிரான கருத்து மாற்றுவது உங்க தப்பு ஐயாமாரே .

 

எங்க கொள்கையும் எங்கள் இலக்கும் எங்கள் தலைமையும் சரியா இருக்கு எனக்கு சீமான் போறவர் தேவை படாதவர் அவ்வளவுதான் நாங்கள் சீமானை நம்பி போராட போகவில்லை பாருங்கோ .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் கடந்து விரைந்து செல்லும்  
ஈழத்தமிழன் இனவிடுதலைப் போராட்டம் 

Link to comment
Share on other sites

ஐயா பழ.நெடுமாறன் உட்பட 83 பேரும் திருச்சி சிறையில் அடைப்பு. 27ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவலில் வைக்க தஞ்சை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஆணை.

 

(facebook)

Link to comment
Share on other sites

நன்றி பேஸ்புக் ..ட்விட்டர் ...மேலதிக செய்திகளுக்கு இணைத்து இருங்கள் :D

 

 

காமன் வெல்த்தும் ..மாணவர் போராட்டமும் காணமல் போயிட்டு சின்ன சுவர் இடிப்பில் இதுதான் இந்திய அரசியல் யுத்தி .

Link to comment
Share on other sites

ஐயா பழ.நெடுமாறன் உட்பட 83 பேரும் திருச்சி சிறையில் அடைப்பு. 27ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவலில் வைக்க தஞ்சை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஆணை.

 

(facebook)

 

அப்ப ஜெயலலிதா இடித்து முடிக்கத்தான் நினைக்கிறா.

 

தமிழ் நாடு தமிழர்களால் ஆளப்படுவத்தற்கு அவர்களுக்கு என்ன தடை என்று கேட்கிறா. 

Link to comment
Share on other sites

முதலமைச்சர் செயலலிதா அரசின் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிப்பை வண்மையாகக் கண்டிக்கின்றேன் !- தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை.
=======================================

தமிழக முதல்வர் செயலலிதாவின் கட்டளையைத் தலைமேற் கொண்டு இன்று (13.11.2013) விடியற்காலை தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்கும் 'திருப்பணி'யில், மாவட்ட வருவாய்த்துறையும், காவல்துறையும், தமிழக நெடுஞ்சாலைத்துறையும் கூட்டாக ஈடுபட்டன.

சுற்றுச்சுவரை முற்றாக இடித்துத் தகர்த்துவிட்டனர். 60 அடி அகலத்திற்கு, சுற்றியிருந்த பூங்காவையும் நாசம் செய்து விட்டனர். கருங்கல்லால் வடிவமைக்கப்பட்ட நீருற்றை, அப்புறப்படுத்திவிட்டனர்.

இந்த அட்டூழியங்களுக்கு அவர் சொல்கின்ற காரணம், தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான புறம்போக்கில் பூங்கா எழுப்பியிருக்கிறார்கள், எனவே இடித்தோம் என்கிறார்கள். இந்த பூங்காவையும் சுற்றுச்சுவரையும் அப்புறப்படுத்த வேண்டுமென்று நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு எதையும் செய்யவில்லை.

சாலையோரம் உபரியாகக் கிடந்த இந்த புறம்போக்கு நிலத்தில், நெடுஞ்சாலைத்துறையின் எழுத்து வடிவிலான ஒப்புதலோடு தான், பூங்கா அமைக்கப்பட்டது. இப்பொழுது, அந்த உத்தரவை நாங்கள் நீக்கி விட்டோம் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் காலையில் கூறினார்கள்.

சாலையோர பூங்கா அமைத்துக் கொள்ளத் தனியாருககு அனுமதி வழங்கும் விதிமுறை நெடுஞ்சாலைத்துறையிடம் இருக்கிறது. அவ்விதியின்படி, கொடுக்கப்பட்ட அனுமதியை இரத்து செய்து கொள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு உரிமை இருக்கிறது. ஆனால், இரத்து செய்வதற்கான விதிமுறைகள் இருக்கின்றன. அதன்படி, இரத்து செய்தது பற்றிய செய்தியை எழுத்துவடிவில் அய்யா பழ.நெடுமாறன் அவர்களுக்கு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் வழங்கவில்லை.

நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அ.நல்லதுரை அவர்களும், நானும் உரிமை இரத்து செய்து கொடுத்த நகலைக் காட்டுங்கள் என்று கேட்டபோது, நெடுஞ்சாலைத்துறை அதிகாரி, அவர்களாக எழுதிக் கொண்ட அறிக்கையைக் காட்டினார்களே தவிர, அந்த அறிக்கையை தொடர்புடையவரிடம் கொடுத்து பெற்றுக் கொண்டோம் என்பதற்கான கையொப்பமுள்ள நகலை அந்த அதிகாரி காட்டவில்லை. எனவே, நீங்கள் இப்பொழுது ஜோடனையாகத் தயாரித்துக் கொண்ட அறிக்கை இது என வாதிட்டோம்.

அடுத்து, மதுரை உயர்நீதிமன்றம், இப்பொழுதுள்ள ஒட்டுமொத்தக் கடடுமானத்தோடு முள்ளிவாய்க்கால் முற்றத்தைத் திறந்து கொள்ள அனுமதி வழங்கியிருக்கிறது. அத்துடன், ஆக்கிரமிப்புப் பற்றி தமிழக அரசு தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், நீதிமன்ற ஆணைக்குப் புறம்பாக இடிப்பது சட்டவிரோதம், நீதிமன்ற அவமதிப்பு என்று சுட்டிக் காட்டினோம். அதற்கு, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் பதில் சொல்லவில்லை. அவர்கள் இடிப்பதிலேயே குறியாக இருந்தனர்.

சுற்றுச்சுவர்களை முழுமையாக இடித்த பிறகு, பூங்காவை நாசப்படுத்திய பிறகு, முற்றத்தில் உள்ள மண்டபங்களுக்குச் செல்லும் பாதையையும், கம்பி வேலிகட்டி அடைத்தார்கள். அந்த முற்றத்திற்குள் நுழைய எந்த வாசலும் அவர்கள் வைக்கவில்லை.

முற்றத்தின் மண்டபங்கள் பட்டா நிலத்தில் உள்ளது. அது உலகத் தமிழர் பேரமைப்பினுடையத் தலைவர் அய்யா பழ.நெடுமாறன் அவர்களது பெயரில் உள்ளது. தனியாருக்குச் சொந்தமானது. அதற்குப் போவதற்குப் பாதை வேண்டும். அதுமட்டுமல்ல, அய்யா நெடுமாறன் குடியிருக்கும் வீடு அதிலுள்ளது. அவ்வீட்டில் மனைவி, மகள் ஆகியோருடன் நெடுமாறன் குடியிருந்து வருகிறார். அவர்களையும் சேர்த்து உள்ளே வைத்து கம்பி வேலி வைத்து அடைத்துவிட்டால்,எப்படி வெளியே வருவார்கள்?

துப்பாக்கிச் சூடு நடத்தி நெடுமாறனை சுட்டுக் கொன்றால் பழி வரும் என்று அஞ்சி, கம்பி வேலி அடைப்புக்குள் பட்டினி கிடந்து சாகட்டும் என செயலலிதா இந்தத் திட்டம் போட்டிருக்கிறாரா? என்று கேட்டோம்.

ஒரு வீட்டுக்குச் செல்லும் பாதையை அடைப்பதற்கு, யாருக்கு உரிமை இருக்கிறது? எந்த சட்டத்தில் இடமிருக்கிறது? என்று கேட்டபிறகு, அதிகாரிகள் யோசித்து, வீட்டுக்கு செல்லும் பாதையை மட்டும் விட்டுவிட்டு மற்ற இடங்களுக்குச் செல்லும் பாதையை கம்பி வேலி கட்டி அடைத்துள்ளார்கள்.

முள்ளிவாய்க்கால் முற்றத்தைத் தமிழக அரசு அதிகாரிகள் இடிக்கிறார்கள் என்ற செய்திப் பரவியதும் மக்கள் திரண்டுவிட்டார்கள். அந்த மக்கள் ஆவேசத்தோடு அதிகாரிகள் போட்ட வேலியை அப்புறப்படுத்தினார்கள். காவல்துறையினர் அந்த மக்களைக் கைது செய்து, தஞ்சை நகரில் காவலில் வைத்துள்ளார்கள்.

அய்யா பழ.நெடுமாறன் அவர்களையும், அவரோடு முள்ளிவாய்க்கால் முற்ற மண்டபத்தில் உட்கார்ந்திருந்த தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அ.நல்லதுரை உள்ளிட்ட பலரையும் காவல்துறை கைது செய்து கொண்டுபோனது.

இந்த அநீதியைக் கண்டித்து, த.தே.பொ.க. மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு தலைமையில் தஞ்சை பழைய பேருந்து நிலையம் எதிரில் சாலை மறியலில் ஈடுபட்ட 17 தோழர்களைக் கைது செய்து காவலில் வைத்துள்ளார்கள். தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில், தமிழக இளைஞர் முன்னணித் தோழர் ரெ.ரெங்கராசு தலைமையில், மறியல் செய்த மகளிர் ஆயம் ஒன்றியப் பொறுப்பாளர் தோழர் மீனா உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மற்றும்,தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள், மறியல்கள் நடந்து கொண்டுள்ளன.

நேற்று மாலை, காமன்வெல்த் மாநாட்டிற்கு இந்தியா செல்லககூடாது என்று சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் போட்டு பரபரப்புக் காட்டிய முதலமைச்சர் செயலலிதா, இன்று காலை விடிவதற்குள் ஈழத்தமிழர்களின் நினைவுச் சின்னமான முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்கச் செய்திருப்பது, இட்லரின் செயல்பாட்டை நினைவுட்டுகிறது.

1933ஆம் ஆண்டு மே முதல் நாள், இலட்சக்கணக்கான மக்களை, தொழிலாளர்களைத் திரட்டி மே நாள் கொண்டாடினார் இட்லர். அந்த பெருந்திரள் கூட்டத்தில் பேசிய இட்லர், இன்று முதல் ஜெர்மன் தேசமெங்கும் இரண்டு முழக்கங்கள் ஒலிக்க வேண்டும் என்றார். அது, "உழைப்பை மதிப்போம்! உழைப்பாளியை கவுரவிப்போம்!" என்ற முழக்கங்களாகும் என்றார். ஆனால் மறுநாள் விடிந்தவுடன், நாளேடுகளில் தொழிற்சங்கங்கள் தடை செய்யப்பட்டன, தொழிற்சங்கத் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர் என செய்தி வந்தது. செயலலிதாவின் முள்ளிவாய்க்கால் முற்ற இடிப்பு நிகழ்வு. இட்லரின் தந்திரத்தை ஒத்ததாக இருக்கிறது.

இலங்கையில், ஈழ விடுதலைக்குப் போராடிய வீரர்களுக்கு, மக்களுக்கு எழுப்பப்பட்ட நினைவுச் சின்னங்களையெல்லாம் இராசபக்சே இடித்தான். தமிழ்நாட்டில், ஈழத்தமிழர்களின் நினைவுச் சின்னமான முள்ளிவாய்க்கால் முற்றத்தை முதலமைச்சர் செயலலிதாவே இடிக்கிறார்.

முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்கும் இந்த சட்டவிரோதச் செயலுக்கு, நடுவண் அரசின் தூண்டுதல் இருக்கும் என்ற போதிலும், முதலமைச்சர் செயலலிதாவின் தீவிர முனைப்பு வெளிப்படையாகத் தெரிகிறது. தமிழினத்தின் மீது இந்திய அரசுக்கு எந்தளவிற்கு காழ்ப்புணர்ச்சி இருக்கிறதோ, அதே அளவுக்கு காழ்ப்புணர்ச்சி செயலலிதாவுக்கும் இருக்கிறது என்றுதான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

தமிழக அரசின், முள்ளிவாய்க்கால் முற்றத் தகர்ப்பு அழிவு வேலையை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். அய்யா பழ.நெடுமாறன் உட்பட கைது செய்யப்பட்ட தோழர்களை தமிழக அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அதே வேளை, தமிழக, இந்திய அரசுகளின் தமிழின விரோதச் செயல்களை தமிழ் மக்கள் எதிர் கொள்வார்கள், முறியடிப்பார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறேன்!

இப்படிக்கு,
தோழர் பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.

============================================
தலைமைச் செயலகம்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

 

(facebook)

Link to comment
Share on other sites

உன்னால் வாழ முடியாவிட்டால்- திருமணம் செய்யாதே!
உன்னால் வாழ வைக்க முடியாவிட்டால்- குழந்தை பெற்றுக் கொள்ளாதே!
உன்னால் போராட முடியாவிட்டால்-
புரட்சி பன்னாதே!
....
.
.
அன்று முள்ளிவாய்க்கால் மண்ணில்
உயிரை இழந்தோம்!
இன்று முள்ளிவாய்க்கால் முற்றத்தில்
மானத்தை இழந்தோம்!
###
மறுபடியும் எங்கள் வலிகளை வைத்து காமெடி பண்ணிவிட்டார்களே-:(

 

(நன்றி ..பேஸ்புக் )

 

Link to comment
Share on other sites

முள்ளி வாய்க்கால் முற்றம் இடிப்பு முழுத்தமிழர்களையும் இன்னொருமுறை இடிக்க நினைக்கும் ஒரு செயல் ...சூடு சுரணை ,மானம் ,ரோசம் உள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் இது சுடும் .சுடாதவர்களே என்னை மன்னியுங்கள் ........

Link to comment
Share on other sites

முள்ளி வாய்க்கால் முற்றம் இடிப்பு முழுத்தமிழர்களையும் இன்னொருமுறை இடிக்க நினைக்கும் ஒரு செயல் ...சூடு சுரணை ,மானம் ,ரோசம் உள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் இது சுடும் .சுடாதவர்களே என்னை மன்னியுங்கள் ........

நாங்கள் செத்து விழுந்தபோது .....எம் உடைகள் களையப்பட்டபோது ...இசைப்பிரியா கதறி அழுதபோது ...இந்த சூடு சுரணை மானம் ரோஷம் எல்லாம் எங்க தமிழ்நாட்டு தமிழன் என்ன அடைவு கடையிலா வைத்து இருந்தான் அண்ணே .

 

இனி புடுங்கிறது எல்லாம் தேவையில்லா ஆணி எவன் புடுங்கினா என்ன எங்களுக்கு தலைக்கு மேல போனபின் சாண் என்ன முழமென்ன .

 

Link to comment
Share on other sites

நாங்கள் செத்து விழுந்தபோது .....எம் உடைகள் களையப்பட்டபோது ...இசைப்பிரியா கதறி அழுதபோது ...இந்த சூடு சுரணை மானம் ரோஷம் எல்லாம் எங்க தமிழ்நாட்டு தமிழன் என்ன அடைவு கடையிலா வைத்து இருந்தான் அண்ணே .

 

இனி புடுங்கிறது எல்லாம் தேவையில்லா ஆணி எவன் புடுங்கினா என்ன எங்களுக்கு தலைக்கு மேல போனபின் சாண் என்ன முழமென்ன .

அந்த துயர் நிறைந்த சுமைகளை, கொடுமைகளை  தமிழ்நாட்டு உறவுகள் மட்டும்  அல்ல உலகத்தின் எந்த ஒரு தமிழாலோ ,அல்லது சக்தியாலோ தடுக்கமுடியவில்லை ,முடியாதிருந்தது அதுதான் யதார்த்தம் ......................இன்றைய யதார்த்தத்தில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் சாதகமான நிலைகளை நாம் பயன்படுத்தி எதிர்காலத்தில் இவற்றை எம் சந்ததிக்கு சாதகமாக்குவதே புத்திசாலித்தனம் ....................

Link to comment
Share on other sites

அன்று முள்ளிவாய்க்கால் மண்ணில்

உயிரை இழந்தோம்!

இன்று முள்ளிவாய்க்கால் முற்றத்தில்

மானத்தை இழந்தோம்!

 

 

மேலுள்ள கருத்து சரியானது அல்ல. மானத்தை இழந்தது தமிழக அரசும் அதன் இந்திய இயக்குனர்களும் தான். இவாரான சம்பவங்கள் தான் சந்ததி சந்ததியாக நின்று அவர்களின் மானத்தை வாங்கும். நீங்கள் இருந்து பாருங்கள். வேறொருவன் இவர்களுக்கு இனோரு விடயத்தில் இதையே செய்வான். அப்போது இவர்கள் பாத்துக்கொண்டிருக்க வேண்டி வரும். இன்று ஜப்பான், இன்டொநேஷியா, ஜர்மனி, ஆவெஸ்திராலியா, அமெரிக்க போன்ற எல்லா நாடுகளின் அங்கிருந்த மக்களுக்கும் மற்றோருக்கும் அவர்கள் செய்த பல சீறிய மற்றும் பெரிய குற்றங்கள் இன்றைய தலைமுறையை தலைகுனிய வைக்கின்றது.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.