Jump to content

லீனா மணிமேகலை... White Van .... Channel 4


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளை வேனின் கறுப்புப் பக்கங்கள்!

 

போராளிகளையும் தமிழர்களையும் மட்டுமா... இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டும் எந்த நபரையும் அள்ளிச் செல்கிறது வெள்ளை வேன். அப்படிக் கடத்திச் செல்லப்பட்டவர்கள், கருகிய பிணமாகவோ, அழுகிய சடலமாகவோ காணக் கிடைப்பார்கள். அல்லது காணாமல் போனவராகவோ, காற்றில் கரைந்தவராகவோ மட்டுமே நினைவில் இருப்பார்கள். இப்படி நடந்த நடுக்கமூட்டும் கொடூரங்களைப் பதிவுசெய்துள்ளது லீனா மணிமேகலை இயக்கியுள்ள 'வொயிட் வேன் ஸ்டோரிஸ்’ என்ற ஆவணப்படம்!

மகனைப் பறிகொடுத்த ஒரு தாய், கணவரை இழந்து தவிக்கும் ஒரு முஸ்லிம் மனைவி, முன்னாள் போராளியான ஒரு பெண் புலி, தந்தையைப் பறிகொடுத்த ஒரு மீனவச் சிறுமி என, ஏழு பேரின் சாட்சியங்களைப் பதிவுசெய்திருக்கும் ஆணவப்படம், பல சமயங்களில் மனதைக் கனக்கச் செய்கிறது. குத்தி வெளியில் எடுக்கப்பட்ட குடல், ரத்தம் சிதறி உருக்குலைந்த பிணம், மார்புகள் அறுக்கப் பட்ட பெண் போராளி, உடலில் இருந்து தனியாகத் துண்டிக்கப்பட்ட குழந்தையின் தலை... என்று கோரக் காட்சிகள் எதுவும் வெள்ளை வேன் கதையில் இல்லை. ஆனால், அவற்றைப் பார்த்து இன்றைய இலங்கையை நாம் உணர்ந்து கொள்வதைவிட வெள்ளை வேன் கதை மூலம் இன்னும் ஆழமாக உணர்ந்துகொள்ளலாம்.

மேலும், இலங்கையில் ஒரு மனிதனின் ஒருநாள் பொழுது, எத்தனை துயரம் மிக்கதாக... எத்தனை பதற்றம் நிறைந்ததாகக் கழிகிறது என்பதை மிக முக்கியமாகப் பதிவுசெய்திருக்கிறது.

p83.jpg

'இலங்கையில் எல்லோரும் இப்போது சிரித்துக்கொண்டிருக்கிறோம். அந்தச் சிரிப்பு, மகிழ்ச்சியால் எங்களுக்கு வரவில்லை. இங்கு அழுவதற்கு எங்களுக்கு உரிமை இல்லை. அதனால் சிரிக்கிறோம்!’ - இந்த ஆவணப்படத்தில் சிங்கள கார்ட்டூனிஸ்ட் பிரகீத்தின் மனைவி உதிர்த்திருக்கும் வேதனை வார்த்தைகள் இவை.

'வொயிட் வேன் ஸ்டோரிஸ்’ ஆவணப்படத்தை, இலங்கை அரசின் பயங்கரவாதத்துக்கு எதிரான ஆவணமாகக் கொண்டுவந்திருக்கிற லீனா மணிமேகலையிடம் பேசினேன்...

p83c.jpg''90-களில் இருந்து 2009-ம் ஆண்டு இறுதிப் போர் வரை விடுதலைப் புலிகளாக இருந்தவர்களும் இல்லாதவர்களுமாக பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல்போனார்கள். அந்த வகையில் கணவனை இழந்த, மகனை - மகளை இழந்த, சகோதரர்களை இழந்த, தந்தையை இழந்த, நண்பர்களை இழந்த உறவுகளின் போராட்டங்களும் கண்ணீரும்தான் 'வெள்ளை வேன் கதைகள்’. முடிந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கும் ஒரு போரின் பின்னரும் வாரத்துக்கு ஒரு சிலராவது, இலங்கையில் அரசாங்கத்தால் களையப்படுகிறார்கள். உலக அரங்கில் ஈராக்குக்கு அடுத்ததாக காணாமல்போனவர்களின் எண்ணிக்கையில் இலங்கை முன்னிலை வகிக்கிறது. சேட்டிலைட் பிம்பங்களாகப் பார்த்தும் பத்திரிகைச் செய்திகளாகப் படித்தும் நாம் அறிந்த மனிதர்களின் வாழ்க்கையை, அந்த வலியுடன் உள்வாங்கும்போது பித்துப்பிடிக்கும்; ஆன்மா அலறும்; நெஞ்சு எரியும். அதை அப்படியே மடைமாற்றம் செய்யும் முயற்சியே இந்த ஆவணப்படம்!''

''இந்தப் படத்துக்காக, தமிழகத்தில் இருந்து இலங்கைக்குச் சென்று களப்பணி ஆற்றிய அனுபவம் எப்படி இருந்தது?''

''எதுவும் முயற்சித்தால் நடக்கும் நண்பா! வாய் நிறைய உணர்ச்சி பொங்கப் பேசும் பலர், ஒரு புல்லைக்கூட பிடுங்கிப்போடுவது இல்லை. போர் முடிவற்ற பிறகும், மக்கள் மனதில் ஒருவித கிலியைப் பீடிக்கவைத்திருப்பதில் ராஜபக்ஷே அரசாங்கம் முனைப்பாக உள்ளது. அரை மைலுக்கு ஒரு ராணுவ செக்போஸ்ட். ஒவ்வோர் அசைவையும் கண்காணித்து வருகிறது. 'கொலை செய்யப்படுவீர்கள், மானபங்கப்படுத்தப்படுவீர்கள், கைது செய்யப்படுவீர்கள், காணாமல் போகடிக்கப்படுவீர்கள்’ என்று என்னைப் பல வகைகளில் எச்சரித்தனர். ஆனால், ஒரு கலைஞியின் குணம் பணிவது அல்ல; மீறுவது. நான் மீறினேன்!

நானும், ஒளிப்பதிவாளர் தம்பி அரவிந்தும்தான் படக்குழு. டவுன் பஸ்ஸில் பயணம் செய்து, கிடைக்கும் இடங்களில் தங்கி, சர்ச்சிலும் கோயிலிலும் சாலையிலும் தூங்கி, 'படம் எடுக்கிறோம்’ என்ற எந்தச் சலசலப்புகளும் இல்லாமல் எடுத்த படம் இது. இலங்கையின் ஜெஸ்யூட் பாதிரிமார்களும், மனித உரிமைப் போராளிகளும், எழுத்தாளத் தோழர்களும் எங்களுக்கு உணவும் பாதுகாப்பும் அளித்து அரவணைத்தார்கள்.  

p83b.jpg

படத்தில் பேசிய ஒரு பெண் போராளி, 'உங்களிடம் கதைத்தற்காக நான் கடத்தப்படலாம்’ என்று ஒரு வாக்குமூலம் அளித்திருக்கிறார். 'இவ்வளவு அழிவைப் பார்த்துவிட்டேன். இனி என்ன நான் பார்க்கவேண்டி இருக்கிறது. இந்த வாக்குமூலத்தை அளிப்பது எனது வரலாற்றுக் கடமை’ என்று அறிவித்தே, அவர் இந்தப் படத்தில் பங்குகொண்டார். அவர் இழந்த ஒரு கண்ணையும் கையையும் தடவிப் பார்த்தபோது, சத்தியத்தைத் தடவிப் பார்த்த உணர்வு எனக்கு ஏற்பட்டது. அந்தச் சத்தியத்துக்காகவே அவர் வாழ்ந்து தீர்ப்பார். அவரைப் போலவே மற்றவர்களும் தாங்கள் இழப்பதற்கு வேறொன்றும் இல்லை என்ற மனநிலையில்தான், தங்கள் கதைகளைப் பகிர்ந்துகொண்டார்கள். அவர்கள் நாடு கேட்கவில்லை, தங்கள் கண் முன்னே 'விசாரணைக்கு என்று அழைத்துச் செல்லப்பட்ட, ராணுவத்திடம் சரண் அடைந்த உறவுகள் எங்கே?’ என்றுதான் கேட்கிறார்கள். அந்தக் கேள்விகளுக்கு இலங்கை அரசாங்கம் நிச்சயம் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்!''

''உங்களின் ஒவ்வொரு முயற்சியும், பாதிக்கப்பட்டவர்களின் நலன் மீட்பில் அக்கறை செலுத்துவதைவிடவும், பொருளாதாரரீதியில் உங்களை வலுப்படுத்திக்கொள்வதற்கான முனைப்பாக இருக்கிறது என்ற விமர்சனம் குறித்து!?''

''என் ஏ.டி.எம். அட்டையைத் தருகிறேன்; கடவுச்சொல்லையும் தருகிறேன். நீங்களே சோதித்துப் பாருங்கள். ஒரு பத்திரிகையாளராக நீங்கள் வாங்கும் மாதச் சம்பளத் தொகைகூட என் கணக்கில் இருக்காது. அப்புறம் என்ன கேட்டீர்கள்... பாதிக்கப்பட்டவர்களின் நலன் மீட்பா? அதெல்லாம் ரொம்பப் பெரிய விஷயம். நான் ஒரு கதைசொல்லியாக என்னைப் பாதிக்கும் விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறேன். அவ்வளவுதான்!''

''அடிப்படைவாதிகள், இடதுசாரிகள், பகுத்தறிவுவாதிகள்... என, அனைத்துத் தரப்பினரும் உங்களை எதிர்க்கவோ விமர்சிக்கவோ செய்கிறார்கள். உங்களின் நிலைப்பாடுதான் என்ன?''

''நான் எந்தக் கருத்தியலுக்கும் அடிபணியாத படைப்பாளி, கலைஞி, சுதந்திரமான மனுஷி. இதை எந்தப் பிரிவினரால்தான் தாங்க முடியும்... சொல்லுங்கள்?''

 

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=89315

Link to comment
Share on other sites

சோபா சத்தியின் வலதுக்கு எப்படி இலங்கை போயி படம் எடுக்க அனுமதி கிடைத்தது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது தான் தெரியவில்லை. நல்லவ- போல நடித்துச் சனல்4 இல் குழப்பத்தை ஏற்படுத்தவோ, அங்கே நட்பு வட்டத்தை உருவாக்கிச் சிங்கள அரசை நியாயப்படுத்தவோ போறா-- தெரியவில்லை. பார்க்கலாம் என்ன நடக்கப் போகின்றது என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

White Van Stories

---------------------------

1. Channel Four News Feature(12 minutes) : Thursday, Nov 14, 7pm News. For Non UK Viewers, It will be online after the broadcast.

2. Center for South Asian Studies, SOAS, Screens White Van Stories(120 minutes) on Nov 13, Wednesday by 5:00 PM

Venue: Russell Square: College Buildings Room: Khalili Lecture Theatre.

3. The Centre of South Asian Studies, University of Cambridge, will be screening White Van Stories(120 minutes), followed by a Q&A with Director. Leena Manimekalai. on Monday 18 November, at 5pm.

Venue: Alison Richard Building (7 West Road), Audiovisual Room, 2nd floor (inside the Latin American Studies Centre).

நேரம் கிடைத்தால் 18ந் தேதி திங்கள் பார்க்க முயற்சிக்கின்றேன்.

Link to comment
Share on other sites

White Van Stories

---------------------------

1. Channel Four News Feature(12 minutes) : Thursday, Nov 14, 7pm News. For Non UK Viewers, It will be online after the broadcast.

 

 

White Van Stories: Sri Lanka's 'disappeared' - video

14 November 2013

 

They come in unmarked white vans. The people they take are never seen again. Activists say one person is taken this way every 5 days. Leena Manimekalay met the families of Sri Lanka's disappeared.

 

 

http://www.channel4.com/news/white-van-stories-sri-lanka-disappeared-video

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
புலிகள் ஒருவனை சுட்டால் .............
அதை உள்ள புத்தகம் முழுவதும் எழுதுவது.
 
இத்தனை இலட்சம் மக்களை இலங்கை அரசு கொன்று போட்டிருக்கிறதே..... இதை பற்றி ஏன் எழுதுவதில்லை. என்று கேட்டால்??
அதை 1984 ஆம் ஆண்டு எழுதிய ஒரு புத்தகத்தில் 67ஆம் பக்கத்தில் எழுதியிருக்கிறேனே....
என்று கூறிக்கொண்டு .....
கூலிகள் எறியும் கை சோற்றுக்கு கடன் தீர்ர்க்க ...
தமிழரின்  போரை காலம் முழுதும் சேறு அடித்து வாழ்வு நடாத்தும்.
எழுத்தாளர் பெருந்தகைகல்போல்.
 
 
ஆமியை பற்றியும் படம் எடுத்தானான் தானே.............
என்று கூறி விட்டு. (அதிலும் 90 வீதமானோர் புலிகளின் காலத்தில்தான் காணமல்  போனார்கள்  என்று ஒரு வசனம் இருக்கும்) 
உள்ள காலம் முழுக்க புலியையும் எமது கண்ணீரையும் வைத்து வாழ இது ஒரு நல்ல வழி .
 
இந்தியாவில் பட்டினியால் நாளும் நூறு குழந்தைகள் சாகுது.......
ஆண்களின் வக்கிர காமத்திற்கு நூறு பெண்கள் சாகிறார்கள் .......
பார்பானின் சாதி கொடுமையால் எத்தனயோ மனங்கள் சாகிறது .......
பணத்தின் ஆதிக்கத்திற்கு ஆயிரம் கற்புகள் நாளும் காணமல் போகிறது .............
 
இவளுக்கு ஈழத்திட்குள்தான் ............. அரிக்குது.
 
பிழைச்சு போங்க !
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொடர்பில் வெளியான தகவல்கள்! 16 APR, 2024 | 11:03 AM   இலங்கையின் தென் கடற்பரப்பில் கடந்த 12ஆம் திகதி  இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட  சுமார் 380 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், துபாயில் உள்ள இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரால் அனுப்பப்பட்டமை  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கையின்போது இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்ரரக்க்ஷா’ என்ற கப்பலினால் 133 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் இந்த ஹெரோயின் மற்றும் ஐஸ்  கைப்பற்றப்பட்டுள்ளன.   கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 179 கிலோ 906 கிராம் ஐஸ் மற்றும் 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் அடங்குகின்றன. அத்துடன், இந்தப் போதைப்பொருளைக் கொண்டு வந்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன் 6 பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/181204
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM   பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
    • கல்முனை வடக்கு பிரதேச செயலகம் : பிரதமர் தினேஷுக்கு கஜேந்திரன் எம்.பி. கடிதம் 15 APR, 2024 | 04:09 PM ஆர்.ராம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எம்.பி. கடிதமொன்றை அனுப்பியுள்ளார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது தொடர்பாகவும், கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகத்தில் முறைகேடுகளால் பொது மக்கள் முகங்கொடுக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளை கவனத்துக்குக் கொண்டு வருவதற்காகவும் அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மூன்று தசாப்தங்களாக கல்முனை வடக்கு தமிழ் சமூகம் தீர்க்கப்படாத சவால்களை எதிர்கொண்டுள்ளது. இது அவர்களின் அத்தியாவசிய அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான திறனை கணிசமாகத் தடுக்கிறது. இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நெருக்கடியான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பகுதி மக்கள் பல தசாப்தங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் அவ்வாறே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். இருந்தும் கணக்காளர் நியமனம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. காலங்காலமாக எமது கோரிக்கைகள் மதிக்கப்படாத நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரமிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரம் தாழ்த்துவதற்கான நோக்கத்தினாலும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளரின் ஜனநாயக விரோத மற்றும் சட்ட விரோதமான செயற்பாடுகளினாலும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் முறுகல் நிலை உருவாகியுள்ளது. கல்முனை தெற்கு பிரதேச செயலகச் செயற்பாடுகளுக்கு உரிய அதிகாரிகள் அனுசரணையாக செயற்படுவதால் தமிழ் சமூகம் மத்தியில் அச்சமும் பதற்றமும் அதிகரித்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேசத்தில் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் தமிழ் மக்கள், கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கோரியும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமிறக்குவதை நிறுத்துமாறு கோரியும் தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான போராட்டத்தின் மூலம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்த போதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்கள் 20 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், எந்தவொரு அரச அதிகாரியும் அங்கு செல்லவில்லை அல்லது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிலைமையை சீர்செய்ய உடனடியாக தாங்கள் தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வினைத்திறனான அரச சேவைகளுக்கான அணுகல் இல்லாமை, முறையான நிர்வாக ஆதரவைப் பெறுவதற்கான அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதைப் பிரதிபலிக்கிறது. இவ்விடயத்தில் தாங்கள் உடனடி கவனம் செலுத்துமாறும் கல்முனை வடக்கில் வசிப்பவர்களின் குறைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். எங்கள் சமூகத்தின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்வதில் உங்கள் தலையீடு முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181136
    • Published By: DIGITAL DESK 7   15 APR, 2024 | 04:06 PM ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் தவத்திரு வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன், விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளராக களமிறக்குமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன தவத்திரு வேலன் சுவாமிகளை தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். எனினும் அரசியல் செயற்பாடுகளில் கட்சி சார்ந்து தான் செயற்படுவதற்கு விரும்பவில்லை என்று வேலன் சுவாமிகள் பதிலளித்துள்ளார். இருப்பினும் அனைத்து தமிழ் கட்சிகளும் கூட்டிணைந்து பொதுவேட்பாளர் விடயத்தில் செயற்படுவதற்குரிய சாத்தியமான நிலைமைகள் இருப்பதால் தாங்கள்(வேலன் சுவாமிகள்) கட்சி சார்ந்த நபாராக அடையாளப்படுத்த மாட்டீர்கள் என்று சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த விடயம் சம்பந்தமாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு சிலநாட்கள் கால அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன்,  விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். https://www.virakesari.lk/article/181134
    • பகுதி 1 Spelling NIST 2024 competition இற்கு 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களின் திறமையை பாராட்டி சுழிபுரம் பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் யாழ் மருத்துவபீட துறைத் தலைவர் பேராசிரியர் Dr R.Surenthirakumaran, Victoria college Vice Principal B.Ullasanan and Meikandan Mahavidyalaya Principal V.Vimalan ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தது மாணவர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்துள்ளது. விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவு வழங்கியவர்களுக்கும் VK NIST நன்றியையும் புது வருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.