Jump to content

நான் எறிந்த கேள்வியும் நீங்கள் பிடித்த பதிலும் !!!!!!!!!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(1) பூரிக்கோ

 

(2) ராஜ ராஜ சோழன் ..

 

(3) .பிரச்சினை  என்பது சம நிலை குழம்பல்

 

(4)எகிப்து  மெசொப்போ தேமியா சீனா .

 

(5) தாவரங்களில் காற்றினால் கருக்கட்டல் நடப்பது

Link to comment
Share on other sites

  • Replies 306
  • Created
  • Last Reply

01 குறுந் தொகையை யார்தொகுத்தார் ?

 
 
முதலாவது பதில்: பூரிக்கோ
 
 

02 இலக்கியத்தில் "கவரி வீசியகாவலன் " எனப் போற்றப்படும் மன்னன் யார்?

 
 
இரண்டாவது பதில்: தகடூர் எறிந்த சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை
 
 

03 ஒருவருக்கு "பிரச்னை " என்கின்றோம் .பிரச்சனை என்றால் என்ன வரைவிலக்கணம் ?

 
 
??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
 
 

04 சிந்து சமவெளி மக்கள் வாணிபத் தொடர்பு கொண்டிருந்த நாடுகள் எவை?

 
 
நான்காவது பதில்: சுமேரியா, பாபிலோனியா (ஈராக்) மற்றும் எகிப்து
 
 

05 தன் மகரந்தச் சேர்க்கை என்றால் என்ன ?

 
 
ஐந்தாவது பதில்: ஒரு மலரின் மகரந்தத் தூள் அம் மலரின் சூலகத்தைச் சென்றடைவது தன் மகரந்தச் சேர்க்கை எனப்படும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1.பூரிக்கோ
2.சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
3.மனிதர்களாகிய நாம் கொடுக்கும் உருவமும் அர்த்தமும்தான் ஒரு நிகழ்வை பிரச்சனையாக எடுத்து கொள்வது. 
4.சுமேரியா, பாபிலோனியா மற்றும் எகிப்து
5.ஒரு பூவிலுள்ள மகரந்தம் அதே பூவிலுள்ள அல்லது அதே தாவரத்திலுள்ள வேறொரு பூவிலுள்ள சூல்வித்துடன் மகரந்தச் சேர்க்கைக்கு உள்ளாவது தன் மகரந்தச் சேர்க்கை 
Link to comment
Share on other sites

3 ஆவது கேள்விக்கான மேலதிக விளக்கம் : உளவியல் அல்லது மனோதத்துவ இயலில் ஒருவருக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட இனக் குழுமத்துக்கோ " பிரச்னை " என்றால் என்ன ? என்பதற்கு  வரைவிலக்கணம் உண்டு . அதயே கேள்வியாக தந்துள்ளேன் . புயல் மீண்டும் முயற்சி செய்யுங்கள் .

Link to comment
Share on other sites

வணக்கம் கள உறவுகளே !! போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதில்கள் பின்வருமாறு ,

 

01 பூரிக்கோ.

02 சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை.

03 ஒர் இலக்கை அடைய முயலும் ஒருவனுக்கு அவ்விலக்கை அடைய முடியாதபடி அவனுக்கெதிரே சில தடைகள் குறுக்கிடுமானால் அது – பிரச்சனை எனப்படும்.

04  சுமேரியா, பாபிலோனியா மற்றும் எகிப்து

05 பூவின் மகரந்தங்கள் அதே பூவில் உள்ள சூலகமுடியை சென்றடைவதற்கு அதே தாவரத்தைச் சேர்ந்த மற்றொரு பூவில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு தன் மகரந்த சேர்க்கை எனப்படும்.

 

யாருமே சரியான பதில்களை ஒரே தடவையில் தராத படியால் ஒருவருக்குமே பரிசில் வழங்க முடியவில்லை .

Link to comment
Share on other sites

01 யார் ஆ.புத்திரனுக்கு அட்சய பாத்திரம் தந்தது ?

 

சிந்தாதேவி.

 

02 . யார் கம்பரை ஆதரித்த வள்ளல் ?

 

சடையப்பவள்ளல்.

 

03 யார் திருத்தொண்டர் திருவந்தாதி பாடினார் ?

 

நம்பியாண்டார் நம்பி.

 

04 சேக்கிழாரின்  இயற்பெயர் என்ன ?

 

அருண்மொழித் தேவர்.

 

05 ஒருவரது மனநலத்தை தீர்மானிப்பவை எவை ?

 

மரபு வழிக் காரணிகள், உடல் நலக் காரணிகள், குழந்தைப் பருவத்தில் அடிப்படை தேவைகளில் திருப்தி.

 

 

 

Link to comment
Share on other sites

01 யார் ஆ.புத்திரனுக்கு அட்சய பாத்திரம் தந்தது ?

 
 
முதலாவது பதில்: சிந்தாதேவி
 
 
 

02 . யார் கம்பரை ஆதரித்த வள்ளல் ?

 
 
இரண்டாவது பதில்: சடையப்ப வள்ளல்
 
 

03 யார் திருத்தொண்டர் திருவந்தாதி பாடினார் ?

 
 
மூன்றாவது பதில்: நம்பியாண்டார் நம்பிகள்
 
 

04 சேக்கிழாரின்  இயற்பெயர் என்ன ?

 
 
நான்காவது பதில்: அருண்மொழித்தேவன்
 
 

05 ஒருவரது மனநலத்தை தீர்மானிப்பவை எவை ?

 
 
ஐந்தாவது பதில்: மரபு வழிக்காரணிகள், உடல் நலக்காரணிகள் மற்றும் குழந்தைப் பருவத்தில் அடிப்படைத் தேவைகளின் திருப்தி
 

 

Link to comment
Share on other sites

  • 1 month later...

இன்று மாலை தொடக்கம் கேள்விக்கணைகள் எறியப்படும் :) :) .

Link to comment
Share on other sites

இன்று மாலை தொடக்கம் கேள்விக்கணைகள் எறியப்படும் :) :) .

 

மீள் வருகைக்கு நன்றி
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று மாலை தொடக்கம் கேள்விக்கணைகள் எறியப்படும் :) :) .

மகிழ்ச்சி

Link to comment
Share on other sites

வணக்கம் கள உறவுகளே !! போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதில்கள் பின்வருமாறு ,

 

01 சிந்தாதேவி.

02 சடையப்பவள்ளல்.

03 நம்பியாண்டார் நம்பி.

04 அருண்மொழித் தேவர்.

05 மரபு வழிக் காரணிகள், உடல் நலக் காரணிகள், குழந்தைப் பருவத்தில் அடிப்படை தேவைகளில் திருப்தி.

 

புயல் சரியான பதிலைத் தந்ததால் அவருக்கே பரிசு செல்கின்றது .புயலுக்கான பரிசு நாளை வழங்கப்படும்.

Link to comment
Share on other sites

01 மனித முதுகெலும்பிலுள்ள எலும்பிணைப்புகள் எத்தனை
 

இருபத்தாறு.

 

02 ஒரு விண்வெளியாண்டு என்பது என்ன ?

 

பால்வழியில் சூரிய குடும்பத்தின் ஒரு சுற்றுப் பாதை - 2500 இலட்சம் ஆண்டுகள்.

 

03 டெல்லியின் பழங்காலப் பெயர் என்ன ?

 

இந்திர பிரஸ்தம்

04 வினாக்கள் எத்தனை வகைப்படும் ? அவை யாவை ?

 

வினாக்கள்  ஆறுவகைப்படும் .
1. அறிவினா, 2. அறியாவினா, 3. ஐய வினா, 4. கொளல் வினா, 5. கொடை வினா, 6. ஏவல் வினா.


05 விடைகள் எத்தன வகைப்படும் ? அவை யாவை  ?

 

விடைகள் எட்டு வகைப்படும்.
1. கட்டு விடை, 2. மறை விடை, 3. நேர் விடை, 4. ஏவல் விடை, 5. வினா எதிர் வினாதல் விடை, 6. உற்றது உணர்தல், 7. உருவது கூறல் விடை, 8. இனமொழி விடை. 

 

 

Link to comment
Share on other sites

01 மனித முதுகெலும்பிலுள்ள எலும்பிணைப்புகள் எத்தனை

 

 

முதலாவது பதில்: 26

 

 

02 ஒரு விண்வெளியாண்டு என்பது என்ன ?

 

இரண்டாவது பதில்: பால்வழியில் சூரிய குடும்பத்தின் ஒரு சுற்றுப்பாதை. 2500 இலட்சம் ஆண்டுகள்

 

03 டெல்லியின் பழங்காலப் பெயர் என்ன ?

 

மூன்றாவது பதில்: இந்திரப்பிரஸ்தம்

 

04 வினாக்கள் எத்தனை வகைப்படும் ? அவை யாவை ?

 

நான்காவது பதில்: 

 
ஆறு வகைப்படும்
 
அவையாவன அறிவினா, அறியாவினா, ஐயவினா, கொளல்வினா, கொடைவினா மற்றும் ஏவல்வினா
 
 

05 விடைகள் எத்தன வகைப்படும் ? அவை யாவை  ?

 

ஐந்தாவது பதில்: 

 
எட்டு வகைப்படும்
 
அவையாவன சுட்டுவிடை, மறைவிடை, நேர்விடை, ஏவல்விடை, வினா எதிர் வினாதல்விடை, உள்ளது உரைத்தல்விடை,
 
உறுவதுகூறல்விடை மற்றும் இனமொழிவிடை 

 

 

 

 

Link to comment
Share on other sites

வணக்கம் கள உறவுகளே !! போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதில்கள் பின்வருமாறு ,

01 இருபத்தாறு.

02 பால்வழியில் சூரிய குடும்பத்தின் ஒரு சுற்றுப் பாதை - 2500 இலட்சம் ஆண்டுகள்.

03 இந்திர பிரஸ்தம்

04 வினாக்கள்  ஆறுவகைப்படும் .

1. அறிவினா, 2. அறியாவினா, 3. ஐய வினா, 4. கொளல் வினா, 5. கொடை வினா, 6. ஏவல் வினா.

05 விடைகள் எட்டு வகைப்படும்.

1. கட்டு விடை, 2. மறை விடை, 3. நேர் விடை, 4. ஏவல் விடை, 5. வினா எதிர் வினாதல் விடை, 6. உற்றது உணர்தல், 7. உருவது கூறல் விடை, 8. இனமொழி விடை.


புயல் ஒரேதடவையில் பதிலைத் தந்ததால் அவருக்கே பரிசு வழங்கப்படுகின்றது :) :) .

 

Link to comment
Share on other sites

01 அமர் என்ற சொல்லின் பொருள் என்ன ?

 

போர்.

 

02  எந்த நூல் பதினெட்டு உறுப்புக்கள் கலந்து வரப் பாடப்பட்டது ?

 

கலம்பகம்.

 

03 வெள்ளை சிமெண்ட் வெள்ளையாக இருப்பதன் காரணம் என்ன?

 

இரும்பு இல்லாததால்.

 

04 எந்த தாவரம்  மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்த பயன்படுத்தப்படுகின்றது ?

 

கிழாநெல்லி.

 

05 மனோதத்துவத்தில் "மனபிம்பம்" என்றால் என்ன ?

 

புலன்காட்சிவழி முதலில் தோற்றுவித்த ஒருபொருள் அன்றியே அப்பொருள் பற்றிய உணர்தலை மனபிம்பம் என்கிறோம்.

Link to comment
Share on other sites

01 அமர் என்ற சொல்லின் பொருள் என்ன ?

 

முதலாவது பதில்: போர்

 

 

02  எந்த நூல் பதினெட்டு உறுப்புக்கள் கலந்து வரப் பாடப்பட்டது ?

 

 

இரண்டாவது பதில்: கலம்பகம்

 

 

03 வெள்ளை சிமெண்ட் வெள்ளையாக இருப்பதன் காரணம் என்ன?

 

 

 

மூன்றாவது பதில்: வெள்ளைச் சீமெந்தில் இரும்பு சேர்க்கப்படாத காரணத்தினால் அது வெள்ளையாக இருக்கின்றது

 

 

04 எந்த தாவரம்  மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்த பயன்படுத்தப்படுகின்றது ?

 

 

நான்காவது பதில்: கீழ்க்காய் நெல்லி

 

 

05 மனோதத்துவத்தில் "மனபிம்பம்" என்றால் என்ன ?

 

 

ஐந்தாவது பதில்: புலன்காட்சி வழி முதலில் தோற்றுவித்த ஒரு பொருள் அன்றியே  அப்பொருள் பற்றிய உணர்தலை

 

மனபிம்பம் என  அழைக்கின்றோம்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1.போர்

2.கலம்பகம் 

3.இரும்பு இல்லாததால்

4.கீழாநெல்லி

5.புலன்காட்சிவழி முதலில் தோற்றுவித்த ஒருபொருள் அன்றியே அப்பொருள் பற்றிய உணர்தல்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வணக்கம் கள உறவுகளே !! போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதில்கள் பின்வருமாறு ,

01 போர்  
02 கலம்பகம்
03 இரும்பு இல்லாததால்
04 கிழாநெல்லி  
05 புலன்காட்சிவழி முதலில் தோற்றுவித்த ஒருபொருள் அன்றியே அப்பொருள் பற்றிய உணர்தலை மனபிம்பம் என்கிறோம்.


புயலும் கப்பியும் ஒரேதரத்தில் சரியான பதிலை தந்ததினால் இருவருக்கும் பரிசு பங்கிட்டு கொடுக்கப்படுகின்றது .

Link to comment
Share on other sites

01 சரியான இலக்குகளை முடிவு எடுக்க முடியாத நிலையில் ஒருவருக்கு ஏற்படும் போராட்டத்தை எப்படி அழைக்கப்படும் ?

02  மனநலமுடையோர் என்றால் யார் ?

03 தமிழ் இலக்கணத்தில் "பால் " எத்தனை வகைப்படும் ? அவை யாவை ?

04 இடுகுறிப் பெயர் என்றால் என்ன ?

05 எந்த வருத்தத்தை தடுப்பூசியால் தடுக்க முடியாது ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1.மனப்போராட்டம்

2.மகிழ்ச்சியாக வாழ்பவர்கள்

3.ஐந்து 

4.ஒரு காரணமும் எழாமல் வருவது

5.சர்க்கரை வியாதி

Link to comment
Share on other sites

01 சரியான இலக்குகளை முடிவு எடுக்க முடியாத நிலையில் ஒருவருக்கு ஏற்படும் போராட்டத்தை எப்படி அழைக்கப்படும் ?

 

முதலாவது பதில்: மனப்போராட்டம்

 

 

02  மனநலமுடையோர் என்றால் யார் ?

 

இரண்டாவது பதில்: வாழ்க்கையில் குறிக்கோள்களையும் இலட்சியங்களையும்  பெற்றிருப்பவர். நுண்ணறிவும் சரியான முடிவுகளை

 

மேற்கொள்பவர். நகைச்சுவை உணர்வு, தன்னம்பிக்கை மற்றும் சமூகப் பொருத்தப்பாட்டினை பெற்றிருப்பவர். இவ்வனைத்தும்

 

உடையவரொருவரை மனநலமுடையோர் எனக் கூறலாம். 

 

 

03 தமிழ் இலக்கணத்தில் "பால் " எத்தனை வகைப்படும் ? அவை யாவை ?

 

மூன்றாவது பதில்: ஐந்து அவையாவன ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால் மற்றும் பலவின்பால்

 

 

04 இடுகுறிப் பெயர் என்றால் என்ன ?

 

நான்காவது பதில்: எவ்வித காரணமும் இன்றி முன்னோர்கள் இட்டுத் தற்போதும் நடைமுறையில் வழங்கிவரும் பெயர்கள்

 

இடுகுறிப்பெயர் என அழைக்கப்படும். 

 

 

05 எந்த வருத்தத்தை தடுப்பூசியால் தடுக்க முடியாது ?

 

ஐந்தாவது பதில்: சர்க்கரை வியாதி

Link to comment
Share on other sites

புயல் நீங்கள் விரும்பினால் இத்திரியை தொடரலாம்.

 

 

ஊக்கம் தந்ததற்கு நன்றி நுணாவிலான்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

வினா 01.
 
.பண்டைத் தமிழர் வாழ்வும் வளமும் என்ற நூலை இயற்றிய ஈழத்துத் தமிழ் இலக்கிய விமர்சகர் யார்?
 
திரு. க. கைலாசபதி
 
வினா 02. 
 
கோள்களிலேயே பனிப்பந்து என அழைக்கப்படும் கோள் எது?
 
புளுட்டோ
 
வினா 03.
 
அந்தமான்தீவுகளில் உள்ள குன்றுகளில் மிகப் பெரிய குன்றின் பெயர் என்ன?
 
ஹரியட்
 
வினா 04.
 
ஜப்பானின் புகழ் பெற்ற நிறுவனமான சொனி நிறுவனத்தை உருவாக்கியவரின் பெயர் என்ன?
 
அக்யோ மொரிட்டா
 
வினா 05.
 
கோழியின் இளமைப்பெயர் குஞ்சு போல, குதிரையின் இளமைப்பெயர் குட்டி போலப் புலியின் இளமைப்பெயர் என்ன?
 
புலிப்பறழ்
 
வினா 06.
 
ஒரு பொருள் திண்ம நிலையிலிருந்து நேரடியாக வாயு நிலைக்கு மாறும் நிகழ்வு அழைக்கப்படும் பெயர் என்ன?
 
பதங்கமாதல்
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.