Jump to content

நான் எறிந்த கேள்வியும் நீங்கள் பிடித்த பதிலும் !!!!!!!!!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தவறவிடவில்லை .....தெரியாது :D

Link to comment
Share on other sites

  • Replies 306
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1. பொ. பூலோகசிங்கம்
2. King Ying Zheng
3. Operation Cactus 
4. Charles Dickens
5. King George V ( 1910 - 1936 )
6. அல்கெமி (Alchemy)
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

களவிதிகள் அப்படி ஒரு கட்டுப்பாட்டை விதிக்கவில்லை.அப்படி களவிதிகளும் இல்லை.புயல் தொடங்கிய பொது அறிவு திரி அவர் சிலகாலம் வராத நிலையில் நான் தொடர்ந்தேன். மீன்டும் அவர் திரும்பி வந்து தொடர்கிறார். கோமகனும் திரும்பி வரும் பட்சத்தில் அவரே திரும்பி தொடரலா

 

 

அப்படி எனில் தற்காலிகமாக வராதவர் திரியிலும் நாம் நுழைந்து எழுதலாம் போல் இருக்கே நீங்கள் கூறுவது நுணா. ஒருவிதத்தில் இது மனித உரிமை மீறல். நான் எனது திரியை அப்படிப் பயன்படுத்த யாரையும் அனுமதிக்க மாட்டேன். சில திரிகளில் யாரும் எதுவும் எழுதலாம். ஆனால் பிரச்சனையில் நின்றவர் ஒருவரின் திரியைப் பயன்படுத்துவது நல்லவர்கள் செய்யும் செயல் அல்ல. புயலுக்கு தன திரியை தொடர்ந்து நடத்த என்ன பிரச்சனை ??????

 

சிங்களவனுக்கும் எமக்கும் கூட வித்தியாசமே இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி எனில் தற்காலிகமாக வராதவர் திரியிலும் நாம் நுழைந்து எழுதலாம் போல் இருக்கே நீங்கள் கூறுவது நுணா. ஒருவிதத்தில் இது மனித உரிமை மீறல். நான் எனது திரியை அப்படிப் பயன்படுத்த யாரையும் அனுமதிக்க மாட்டேன். சில திரிகளில் யாரும் எதுவும் எழுதலாம். ஆனால் பிரச்சனையில் நின்றவர் ஒருவரின் திரியைப் பயன்படுத்துவது நல்லவர்கள் செய்யும் செயல் அல்ல. புயலுக்கு தன திரியை தொடர்ந்து நடத்த என்ன பிரச்சனை ??????

 

சிங்களவனுக்கும் எமக்கும் கூட வித்தியாசமே இல்லை

 

நீங்களே  ஒரு இணையத்தை  ஆரம்பியுங்கள் சுமே

தனி  உடமைக்கு அதுவே  சரியானது

யாழ்  உங்களுடையதோ

என்னுடையதோ இல்லை...... :(  :(  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி எனில் தற்காலிகமாக வராதவர் திரியிலும் நாம் நுழைந்து எழுதலாம் போல் இருக்கே நீங்கள் கூறுவது நுணா. ஒருவிதத்தில் இது மனித உரிமை மீறல். நான் எனது திரியை அப்படிப் பயன்படுத்த யாரையும் அனுமதிக்க மாட்டேன். சில திரிகளில் யாரும் எதுவும் எழுதலாம். ஆனால் பிரச்சனையில் நின்றவர் ஒருவரின் திரியைப் பயன்படுத்துவது நல்லவர்கள் செய்யும் செயல் அல்ல. புயலுக்கு தன திரியை தொடர்ந்து நடத்த என்ன பிரச்சனை ??????

 

சிங்களவனுக்கும் எமக்கும் கூட வித்தியாசமே இல்லை

இதுக்கும் சிங்களவனுக்கும் என்ன தொடர்பு?

கல்லைத் தூக்கினால் நாய் "லொள்" என்டுற மாதிரி இருக்கு!

Link to comment
Share on other sites

தனிப்பட்ட முறையில் நான் இவ்வாறு தொடரமாட்டேன்.. ஆனாலும், யாழ் பீனல் கோடு அடிப்படையில் இவ்வாறு தொடர்ந்தாலும் தவறில்லை.. :huh:  அதுவும் புயல் ஒரு வஞ்சகம் இல்லாத உறவு.. :( அவரை ஏனப்பா இப்பிடி போட்டு உலுப்புறீங்கள்?  :o  :D

Link to comment
Share on other sites

இதுவரை காலமும் கருத்து வேறுபாடு இல்லாமல் இருந்த கள உறவுகளிடையே இத்திரியை நான் தொடர்வதால் ஏன்
 
மோதல்கள். எனவே நான் இன்னும் ஓர் புதுத்திரியில் சந்திக்கின்றேன். கோமகன் இத்திரியை ஆரம்பித்த நாளிலிருந்து
 
மிகவும் ஆர்வமாக நான் கலந்து கொண்டது தான் தொடரவும் ஆர்வத்தை ஊட்டியது. இருந்தும் இசைக்கலைஞன்
 
எழுதியுள்ள மாதிரி தனிப்பட்ட முறையில் நான் இவ்வாறு தொடரமாட்டேன் என்ற நேர்மையான எழுத்தை
 
மதிக்கின்றேன். இத்திரி நகர்ந்து செல்லக் கரம் கொடுத்த கறுப்பி, புத்தன், பரியாரி, நிலாமதி, நுணாவிலான், அம்மா,
 
கிருபன் மற்றும் தமிழினி ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள். இதைப் புதிய திரிக்கு மாற்றுவதால் கோமகனுக்கு
 
ஏட்டிக்குப் போட்டியாகத் தொடங்குவதாகக் கருத வேண்டாம். 
 
சந்திப்போம் திக்கெட்டும் திகட்டாத கேள்விகள் திரியில்
 
வாழ்க வளமுடன்

 

வினா 01.
 
இலங்கை அரசினால் கலாகீர்த்தி பட்டம் அளிக்கப் பெற்ற முதல் ஈழத் தமிழர் யார்?
 
வினா 02. 
 
பிரித்தானியாவிற்கு விஜயம் செய்த முதலாவது கொம்யூனிஸ்ட் ஆட்சியாளர் யார்?
 
வினா 03.
 
1988ல் மாலைதீவில் நிகழ்ந்த ஆட்சிக் கவிழ்ப்புச் சதியை முறியடித்த இந்திய இராணுவ முயற்சியின் குறியீட்டுப் பெயர் என்ன?
 
வினா 04.
 
இங்கிலாந்தில் Bleak House என்ற வீட்டிற்குச் சொந்தமான பிரபலமான மனிதர் யார்?
 
வினா 05.
 
எட்டாம் எட்வேர்ட் பதவி துறந்ததையடுத்து பிரித்தானியாவின் மன்னராக முடிசூடிக் கொண்டவர் யார்?
 
வினா 06.
 
இரும்பைத் தங்கமாக மாற்றும் கலையின் பெயர் என்ன?

 

 

 

சரியான பதில்கள் திக்கெட்டும் திகட்டாத கேள்விகள் திரியில்

 

வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.