Jump to content

எமது யாழ்கள உறவுகளிடம் உதவி கோருகிறேன்.


Recommended Posts

எமது யாழ்கள உறவுகளிடம் உதவி கோருகிறேன்.

இவ்வருடம் ஆனிமாதத்திலிருந்து மட்டக்களப்பு குசேலன்மலை பிரதேசத்தில் வாழும் மிகவும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட போரால் பாதிப்புற்ற மேற்படி கிராமத்தின் 27குடும்பங்களைச் சேர்ந்த 41 பிள்ளைகளுக்கான கற்பித்தல் வகுப்பினை நேசக்கரம் அமைப்பின் உப அமைப்புகளில் ஒன்றான அரவணைப்பு அமைப்பின் கவனிப்பின் கீழ் நடாத்தி வருகிறோம்.

 

இத்திட்டத்திற்கு அமெரிக்காவிலிருந்து திரு.தவேந்திரராசா ஐயா அவர்கள் முன்வந்து உதவிக் கொண்டிருந்தார். இது மட்டுமன்றி கணணிப்பயிற்சி நெறியினை நடாத்துவதற்கான கணணிகள் கொள்வனவுக்கான உதவிகளுடன் தொடர்ந்து மாணவர்களின் கல்விக்காக தனது உதவியை வழங்கி வந்த திரு.தவேந்திரராசா ஐயா அவர்களின் தொடர்பு கடந்த 2மாதங்களாக இல்லாதுள்ளது.

 

தவேந்திரராசா ஐயா மாதாந்தம் 25ஆயிரம் ரூபா உதவியினை வழங்கிக் கொண்டு வந்தார். ஆசிரியர் கொடுப்பனவு , மாணவர்களுக்கான சிற்றூண்டிகள் , கற்றல் உபகரணங்கள் யாவும் இந்த உதவியில் செய்து கொண்டிருந்தோம். பலமுறை மின்னஞ்சல் போட்டும் எவ்வித பதிலும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. நானும் மின்னஞ்சல் தொடர்பையே பேணியதால் தொலைபேசித் தொடர்பைக் கொண்டிருக்கவில்லை. ஐயாவுக்கு ஏதும் சுகயீனமா ? அல்லது ஏது என்ற விபரம் எதுவும் அறிய முடியவில்லை.

 

முகம் அறியாமல் நேசக்கரத்தின் சேவையை மட்டுமே நம்பி ஒரு வருடத்துக்கும் மேலாக தவேந்திரராசா ஐயா செய்த பங்களிப்பு உண்மையில் நினைத்துப் பார்க்க முடியாதது. அத்தகைய நல்லுள்ளத்தின் தொடர்பு விடுபட்டுப் போனதை அறியவும் முடியாதுள்ளது. நேசக்கரத்தின் வெற்றிகளில் எல்லாம் இத்தகைய நல்லுள்ளங்கள் பலரது உதவியே அமைதியாக வேரூன்றியுள்ளது.

 

இம்மாதம் தொடக்கம் குசேலன்மலை பிள்ளைகளுக்கு தினசரி மாலைநேர வகுப்பினை நடாத்த ஆரம்பித்து வகுப்பு நடைபெற்று வருகிறது. தவேந்திரராசா ஐயாவின் தொடர்பு எடுக்க முடியாமையால் தொடந்து கற்பி;தலை நடாத்த பண உதவி சிரமமாக இருக்கிறது. இதுவரை நாம் நடத்திய கற்பித்தலில் மாணவர்கள் கல்வியில் மிகுந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளார்கள். ஆரம்பத்தில் எழுத முடியாது இணைந்த பிள்ளைகள் தற்போது எழுத வாசிக்கவென முன்னேற்றமடைந்துள்ளனர்.

 

இந்த நிலமையில் பிள்ளைகளின் கல்வியை நிறுத்தவும் முடியாத நிலமையில் இருக்கிறோம். ஆசிரியர்கள் கொடுப்பனவு மற்றும் மாணவர்களின் தேவையை நிறைவேற்றவும் முடியாத நிலமையில் சிரமப்படுகிறோம். இம்மாணவர்களை யாழ் இணைய கருத்துக்கள உறவுகள் 15பேர் இணைந்து மாதம்  ஆளுக்கு 10€ பொறுப்பேற்று இப்பணியைச் செய்ய முன்வருமாறு வேண்டுகிறேன்.

 

முன்னேற்றமான நிலமையில் உள்ள பிள்ளைகளின் தொடர்ந்த கல்வியை சிறப்பாக்க ஆதரவு தருமாறு வேண்டுகிறேன்.

மாதம் அண்ணளவாக 150€க்கள் தேவை.

 

குசேலன்மலை மாணவர்கள் பற்றிய செய்தி இணைப்புகள் வருமாறு :-

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=123027

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=124185

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=128177

உதவுவதற்கு

Bank information

Germany:

NESAKKARAM e.V.55743 Idar-Oberstein
Konto-Nr. 0404446706
BLZ 60010070
Postbank Stuttgart

 

Other countrys:

 

NESAKKARAM E.V
A/C 0404446706
Bank code – 60010070
IBAN DE31 6001 0070 0404 4467 06
Swift code – PBNKDEFF
Postbank Stuttgart
Germany

 

Paypal Account – nesakkaram@gmail.com

Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418

nesakkaram@gmail.com
Skype – Shanthyramesh

www.nesakkaram.org

 

 

Link to comment
Share on other sites

அவசர உதவியாக நேற்றிரவு (20.11) ஓன்லைன் மூலமாக 150 யூரோ அனுப்பியுள்ளேன். நன்றி!!

Link to comment
Share on other sites

அவசர உதவியாக நேற்றிரவு (20.11) ஓன்லைன் மூலமாக 150 யூரோ அனுப்பியுள்ளேன். நன்றி!!

 

சோழியன் உங்கள் உதவி கிடைக்கப்பெற்றது மிக்க நன்றிகள்.

 

சாந்தி அக்கா நான் இதில் ஒரு சிறு தொகையை மாதம் மாதம் தாறன்

 

மிக்க நன்றிகள் செவ்வந்தி. இன்னும் யாராவது இணைந்தால் இந்தக் கல்வித்திட்டத்தை தொடர்ந்து நடத்த ஆதரவாக இருக்கும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் என்னால் முடிந்ததை செய்யவிரும்புகிறேன்

Link to comment
Share on other sites

சோழியனின் உதவி நவம்பர் மாதத்துக்கான ஆதரவாக அமைந்துள்ளது. அடுத்தடுத்த மாதங்கள் உதவிகள் கிடைக்கப்பெறாவிடில் கற்பித்தலை நிறுத்த வேண்டிய நிலமையே காணப்படுகிறது. எமது நிலமையினை பிள்ளைகளின் பெற்றோருக்கு தெரிவித்துள்ளோம். நிறுத்தாமல் தமது பிள்ளைகளுக்கு உதவுமாறு கேட்டுள்ளார்கள். பணம் இல்லையேல் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு பிள்ளைகளுக்கான கற்கை உபகரணங்களை வழங்க முடியாத நிலமையை விளக்கியுள்ளோம். தொடர்ந்த உதவியை கள உறவுகளிடம் மீளவும் வேண்டுகிறேன்.

செவ்வந்தி, யதார்த்தன் முன் வந்துள்ளார்கள் இவர்களோடு மேலும் சிலர் இணைந்தால் மேற்படி கிராமத்து மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதோடு தொடர்ந்து அக்கிராமத்தை சிறந்த நிலமைக்கு உருவாக்க முடியும்.


நான் என்னால் முடிந்ததை செய்யவிரும்புகிறேன்

 

மிக்க நன்றிகள் எதார்த்தன். உதவும் வழிமுறைகளை அறிய தொடர்பு கொள்ளுங்கள்.

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

தொடர்ந்த உதவிகள் கிடைக்காத நிலமையில் எமது கல்வியுதவியில் பயனடைந்த இலங்கைமாதா முன்பள்ளி மாணவர்களுக்கான ஆதரவை இம்மாதம் 1ம் திகதியுடன் நிறுத்தியுள்ளோம். இலங்கைமாதா முன்பள்ளி மாணவர்களுக்கான கற்கை உபகரணங்கள், மற்றும் ஆசிரியர் கொடுப்பனவு மாதம் 10ஆயிம் வழங்கி வந்தோம். தொடர்ந்து இயங்க முடியாத பொருளாதார நிலமையால் நிறுத்தியுள்ளோம்.

குசேலன்மலை (கரடியனாறு) 27 குடும்பங்களின் குழந்தைகளுக்கான கற்பித்தலை தைமாதம் வரையும் செய்யவுள்ளோம். குசேலன்மலை குழந்தைகளுக்கு தினமும் மாலைநேர வகுப்புக்களும் , வார விடுமுறை நாட்களிற்கான தொடர் வகுப்புகளும் நடைபெற்று வருகிறது. இவர்களுக்கு மாதம் 15ஆயிரம் ரூபா தேவை. அண்ணளவாக 90€ தேவை.

 

10பேர் இணைந்து மாதம் 10€ தந்துவதவினால் போரால் மிகவும் பாதிப்புற்ற இக்கிராமத்தின் 27 குடும்பங்களின் குழந்தைகளுக்கான கல்வியை எம்மால் தொடர்ந்து வழங்க முடியும்.  ஏற்கனவே செவ்வந்தி, எதார்த்தன் முன்வந்துள்ளார்கள். இவர்களோடு இன்னும் சிலர் இணைந்தால் தொடர்ந்து எம்மால் இப்பணியை முன்னெடுக்க முடியும்.

 

உதவுவதற்கு

Bank information

Germany:

NESAKKARAM e.V.55743 Idar-Oberstein
Konto-Nr. 0404446706
BLZ 60010070
Postbank Stuttgart

 

Other countrys:

 

NESAKKARAM E.V
A/C 0404446706
Bank code – 60010070
IBAN DE31 6001 0070 0404 4467 06
Swift code – PBNKDEFF
Postbank Stuttgart
Germany

 

Paypal Account – nesakkaram@gmail.com

Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418

nesakkaram@gmail.com
Skype – Shanthyramesh

www.nesakkaram.org

 

Link to comment
Share on other sites

நானும் மாதம் 10 ஈரோ தருகிறேன்.

 

மிக்க நன்றிகள் நவீனன்.

 

Link to comment
Share on other sites


குசேலன்மலை மாணவர்களின் நிலமை பற்றி பெற்றோரின் கருத்துக்களும் பிள்ளைகளின் நிலமையும்.

கடந்த  6மாதங்களின் முன்னேற்றம் பற்றிய விவரம் :-

https://www.youtube.com/watch?v=QnJpPkiA8J0

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் அடுத்த மாதத்தில் இருந்து மாதத்துக்கு 20 இயுரோ அனுப்பி வைக்கிறேன்... எப்படி அனுப்பி வைக்க்கனும் என்று தெரியப் படுத்துங்கோ சாந்தி அக்கா...நன்றி

Link to comment
Share on other sites

நானும் அடுத்த மாதத்தில் இருந்து மாதத்துக்கு 20 இயுரோ அனுப்பி வைக்கிறேன்... எப்படி அனுப்பி வைக்க்கனும் என்று தெரியப் படுத்துங்கோ சாந்தி அக்கா...நன்றி

 

மிக்க நன்றிகள் பையன்.பேபால் ஊடாக அல்லது வங்கியூடாக உங்கள் உதவியை அனுப்பலாம். உங்களளுக்கு வசதியான வழியில் அனுப்பலாம். இதர விபரங்கள் தனிமடலில் அனுப்புகிறேன்.

 

Link to comment
Share on other sites

அக்கா வணக்கம்.....
 ஜனவரி மாதத்தில் இருந்து 20 euro  இக்களை மாதாந்தம் அனுப்பி வைக்கிறேன் .விபரங்களை தரவும் .உங்கள் பணி தொடரவும் ,உங்களுக்கு திடத்தையும் ,மன உறுதியையும் அளிக்க இறைவன் அருள் புரிவாராக .நன்றிகள் .
Link to comment
Share on other sites

 

அக்கா வணக்கம்.....
 ஜனவரி மாதத்தில் இருந்து 20 euro  இக்களை மாதாந்தம் அனுப்பி வைக்கிறேன் .விபரங்களை தரவும் .உங்கள் பணி தொடரவும் ,உங்களுக்கு திடத்தையும் ,மன உறுதியையும் அளிக்க இறைவன் அருள் புரிவாராக .நன்றிகள் .

 

 

மிக்க நன்றிகள் தமிழ்சூரியன்.

 
Link to comment
Share on other sites

இத்திட்டத்திற்காக தங்கள் ஆதரவை வழங்க முன்வந்த செவ்வந்தி , எதார்த்தன் , சோழியான் , நவீனன் ,பையன், தமிழ்சூரியன் உங்கள் அனைவருக்கும் இதயம் நிறைந்த நன்றிகள்.  உங்கள் உதவிகள் இல்லையெனில் ஒரு கிராமத்தின் குழந்தைகளின் கல்வியை எம்மால் வழங்க முடியாது போயிருக்கும்.

 

நிச்சயம் குசேலன்மலை குழுந்தைகளின் எதிர்காலம் உங்கள் ஒவ்வொருவரையும் நன்றியுடன் நினைவு கொள்ளும்.

Link to comment
Share on other sites

செவ்வந்தி -
எதார்த்தன் -
நவீனன் - 10€
பையன் -20€
தமிழ்சூரியன் -20€

 

செவ்வந்தி , எதார்த்தன் தொடர்பு கொள்ளுங்கள். உங்களால் எவ்வளவு உதவ முடியும் என்ற விபரத்தை தந்தால் உதவியாக இருக்கும்.

 

பணம் அனுப்ப வேண்டிய விபரம் :-

நேசக்கரம் வங்கி விபரம்

 

யேர்மனியிலிருந்து அனுப்புவோருக்கு :-

NESAKKARAM e.V.55743 Idar-Oberstein
Konto-Nr. 0404446706
BLZ 60010070
Postbank Stuttgart

 

யேர்மனி தவிர்ந்த இதர நாடுகளில் இருந்து அனுப்புவதற்கு :-

NESAKKARAM E.V
A/C 0404446706
Bank code – 60010070
IBAN DE31 6001 0070 0404 4467 06
Swift code – PBNKDEFF
Postbank Stuttgart
Germany

பேபால் - nesakkaram@gmail.com

 

 Telephone: (Shanthy) +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418

நேசக்கரம்

முகவரி:
Nesakkaram e.V
Hauptstr – 210
55743 Idar-Oberstein
Germany

 

Link to comment
Share on other sites

செவ்வந்தி , எதார்த்தன் தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் உதவி பற்றி அறியத்தாருங்கள்.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

இம்மாணவர்களின் மேம்பாட்டிற்காக பையன் வாக்குறுதியளித்தபடி தைமாதத்துக்கான தனது பங்களிப்பு 20€ வழங்கிய உதவி கிடைக்கப்பெற்றது. இதுவரையில் கள உறவுகள் நவீனன், பையன் இருவரது உதவியும் கிடைக்கப்பெற்றுள்ளது.

Link to comment
Share on other sites

வணக்கம்!

50 யூரோக்களை இப் பணிக்கு அனுப்பியுள்ளேன். நானும் என் குடும்ப உறவுகளும் இத்தகய பணியை வேறு மாணவ மாணவியர்களுக்குச் செய்து வருகிறோம். உங்கள் முயற்சியும் தொடரட்டும். 

Link to comment
Share on other sites

அக்கா paypal மூலம் அனுப்பியிருக்கேன்.

செவ்வந்தி உங்கள் உதவி பேபாலில் கிடைத்தது. மிக்க நன்றிகள்.

Link to comment
Share on other sites

வணக்கம்!

50 யூரோக்களை இப் பணிக்கு அனுப்பியுள்ளேன். நானும் என் குடும்ப உறவுகளும் இத்தகய பணியை வேறு மாணவ மாணவியர்களுக்குச் செய்து வருகிறோம். உங்கள் முயற்சியும் தொடரட்டும். 

 

மிக்க நன்றிகள் பாஞ்ச்.நீங்கள் அனுப்பிய உதவி கிடைத்தது.நீங்கள் எற்கனவே செய்கிற பணியோடு எமது பணிக்கும் ஆதரவு தந்தமைக்கு மிக்க நன்றிகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொழும்பு மக்கள் செல்லமாக OGF  என அழைக்கும் இவ்விடத்தில் - எல்லாமுமே விலைதான்.  டிசைனர் வகைகள் வெளிநாட்டு விலையிலும், உணவு/உள்ளூர் பொருட்கள் வெளியில் விற்பதை விட இரு மடங்கு விலையிலும் இருந்ததாக நினைவு.  பல்கனியுடன் கூடிய உணவு/பார் பகுதி உண்டு. குடிமக்கள் சூரியன் மறைவதை ரசித்தபடி லாகிரி வஸ்தாதுகளை உறிஞ்சுகிறார்கள்.
    • 🤣 விட்டா தூக்கி கொண்டு போய் கோம்பையன் மணலில் வச்சிடுவியள் போல கிடக்கு🤣. இல்லை…காலமாகிய அம்மாவின் பென்சன் கணக்கு உண்மையில் மூடப்பட்டுவிட்டதை உறுதி செய்யச் சென்றேன். 
    • ஆறு பெண்கள் கலந்து கொண்டார்கள் என்று எழுதினால் குறைந்தா போய்விடும்
    • மட்டக்களப்பு: நிலப்பயன்பாடும் – சனத்தொகை வளர்ச்சியும் March 27, 2024 — அழகு குணசீலன் — மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவுகின்ற நிலத்தட்டுப்பாடு, குறைந்தளவான நிலப்பரப்பில் வாழ்கின்ற மக்கள் செறிவை -அடர்த்தியை அதிகரித்திருக்கிறது. இது வரையறுக்கப்பட்ட இயற்கை வளங்களுக்கும், வரையறுக்கப்படாத அல்லது கட்டுப்படுத்த முடியாத மக்கள் தேவைக்கும் இடையிலான சமநிலைத்தளம்பல். இந்த நிலையானது தேசிய இயற்கை வளங்களை – நீண்ட காலமாக சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப முகாமைத்துவம் செய்யத்தவறியதன் விளைவு. மனித சக்திக்கு அப்பாற்பட்டு இயற்கை வளங்களை அதிகரிக்கமுடியாத ஜதார்த்தத்தில், மனித சமூகம் தான் சார்ந்த சமூக, பொருளாதார வாழ்வியல் பண்புகளில் காலத்திற்கு ஏற்ப ஒரு நெகிழ்ச்சி போக்கை கைக்கொள்வதன் மூலமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்காவது இந்த பிரச்சினையை பின் போடமுடியும். இதற்கான கொள்கைவகுப்பு, அரசியல் நிர்வாக முகாமைத்துவம் மட்டக்களப்பில் இருக்கவில்லை. காலத்திற்கு ஏற்ற சமூக, பொருளாதார வாழ்வியல் பண்பியல் மாற்றத்தில் மட்டக்களப்பின் இன,மத, கலாச்சார, பண்பாட்டு பாரம்பரியங்கள் நெகிழ்ச்சியற்ற இறுக்கமான போக்கை கொண்டிருப்பது நிலநெருக்கடியை மேலும் ஊக்கப்படுத்துவதாக உள்ளது. மட்டக்களப்பின் சமூகக்கட்டமைப்பு சார்ந்த பொருளாதார வாழ்வியலில் பிரதான பொருளாதார நடவடிக்கைகளாக விவசாயம், மீன்பிடி, வியாபாரம் உள்ள நிலையில் மக்கள் அதற்கு பொருத்தமான இடத்தை பொருளாதார வாழ்வியல் சார்ந்து தெரிவு செய்கிறார்கள். இது மானியசமூதாயம் முதலான வரலாற்று போக்கு. கடற்றொழிலாளர்களை எவ்வாறு வயல்வெளிகளில் குடியேற்ற முடியாதோ அவ்வாறு நகரம்சார் வியாபார சமூகம் ஒன்றை கடற்கரைகளிலும், விவசாயம்சார் நிலங்களிலும் குடியேற்ற முடியாது. அதே வேளை மறுபக்கத்தில் மக்கள் தொகை அதிகரிப்பு சேவைகள் துறையில் பெரும் வீக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலமான வேலைவாய்ப்புகள் காரணமாக மக்கள் நகரம்சார்ந்து வாழவேண்டிய பொருளாதார கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வர்த்தக சமூகம் ஒன்று நுகர்வோர் இல்லாத அல்லது குறைவாக உள்ள நிலையில் எவ்வாறு வியாபாரம் செய்ய முடியும். விவசாயம், மீன்பிடி என்பனவும் இன்று தன்னிறைவு பொருளாதார நடவடிக்கைகளாக இல்லாமல் வர்த்தக நோக்கிலான சந்தை பொருளாதாரமாக மாறிவிட்டன. அத்துடன் சமூகவளர்சிக்கு ஏற்ப சமூகசேவைகள் கல்வி, வைத்தியம், போக்குவரத்து மற்றும் நுகர்வு என்பனவற்றின் சமகால, எதிர்கால தேவைகருதி மக்கள் அவை இலகுவாகவும், தரமாகவும், தாராளமாகவும் கிடைக்கக்கூடிய இடங்களை வாழ்வதற்கு தெரிவு செய்கின்றனர். இந்த நிலை சனத்தொகை அடர்த்தியை குறிப்பிட்ட பகுதிக்குள் அதிகரிக்க காரணமாகின்றது . மக்கள் இயல்பாகவே சமூக , பொருளாதார வசதி வாய்ப்புகள் குறைந்த இடங்களில் வாழவும் ஆர்வம் காட்டுவதில்லை. இவை எல்லாம் அரசியல் பேசுகின்ற காரணங்களை விடவும் முக்கியமானவை. அரசியல் தனக்கு தேவையானதை பேசுகிறது. மக்கள் தமக்கு தேவையானதை, பொருத்தமானதை, வசதியானதை, விருப்பமானதை செய்கிறார்கள். மக்களுக்கு வழிகாட்ட முடியாத அரசியல்வரட்சி  குறுக்கு வழிகளை நாடுகிறது.  மட்டக்களப்பு மாவட்டத்தின் 346 கிராமசேவகர் பிரிவுகளில் 49 கிராமசேவகர் பிரிவுகள் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் நான்கு பிரதேச செயலகங்களுக்குள் உட்பட்டவை. மிகுதி 297 கிராமசேவகர் பிரிவுகள் தமிழ் மக்களை பெரும்பான்மையாக கொண்ட பத்து பிரதேச செயலகங்களுக்குள் அடங்குகின்றன. இதன் விகிதாசாரம் 6:1. மட்டக்களப்பு மாவட்டத்தின் 965 கிராமங்கள் இந்த  346 கிராமசேவகர் பிரிவுகளுக்குள் பங்கிடப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 65 கிராமங்களை முஸ்லீம் கிராமங்கள் என்று அடையாளப்படுத்தினாலும் 900 கிராமங்கள் தமிழ், சிங்கள கிராமங்கள். இதன் விகிதாசாரம் ஏறக்குறைய 15:1. இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கியமான விடயம் மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலப்பயன்பாட்டு பாணி. மாவட்டத்தின் மொத்த 2,854 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் காட்டுவள நிலங்கள் 40 வீதம். விவசாயநிலங்கள் 37 வீதம். ஆக, 75 வீதத்திற்கும் அதிகமான  நிலங்கள் இந்த இரண்டு தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்ற நிலையில் எஞ்சி இருப்பது 25 வீதத்திற்கும் குறைவான நிலப்பரப்பு மட்டுமே.  இந்த 25 வீதத்தில் பயன்பாடின்றி அல்லது பயன்பாட்டிற்கு பொருத்தமற்ற தரிசு நிலங்களாக உள்ள நிலப்பரப்பு 6வீதம். நீர்நிலைகள் 5வீதம், சதுப்பு நிலங்கள் 2வீதம்,  வீட்டு வசதி, வீட்டு தோட்டங்களுக்கான நிலம் 5வீதம். ஆக, இன்னும் விவசாயம் செய்யக்கூடிய, பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படாத நிலப்பரப்பு 5 வீதம் மட்டுமே உள்ளது. மேலும் விவசாய நிலங்கள் 37 வீதம் தனியாருக்கு சொந்தமானவை என்பதும், 40 வீதமான வனபரிபாலன, வனவிலங்கு புகலிட பாதுகாப்பு நிலங்கள்  அரச நிலங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாவட்டம் கொண்டுள்ள 120 கிலோமீட்டர் நீளமான கடற்கரையானது, கடற்கரையோர, சுற்றாடல் பாதுகாப்பு, உல்லாசப்பிரயாணத்துறை விருத்திக்கானது. உள்நாட்டு நீர்நிலைகளைப் பொறுத்தமட்டில் குளங்கள், வாவிகள், ஆறுகள்,தோணாக்கள்…. என்று 342 நீர்நிலைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந்த 342 இல் பத்துக்கும் குறைவான சிறிய நீர்நிலைகளே நான்கு முஸ்லீம் பிரதேச செயலகப் பிரிவிலும் உள்ளன. மிகுதி 330 க்கும் அதிகமானவை தமிழ்மக்களின் விவசாயவாழ்விடங்களுக்கு உட்பட்டவை. அதிகமானவை விவசாய உற்பத்தி, மீன்பிடி, கால்நடை வளர்ப்போடு தொடர்பு பட்டவை. பட்டிருப்பு தொகுதி முற்று முழுதாகவும், மட்டக்களப்பு தொகுதியின் மேற்குகரை விவசாய உற்பத்தி பெருநிலப்பரப்பில்  99 வீதமும் வரலாற்று காலம் முதல் தமிழர் வாழ்விடங்கள். அதேபோன்று எழுவான்கரையில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி பிரதேசங்களை சார்ந்த நிலப்பரப்பில் முஸ்லீம் மக்களும், ஏனைய எழுவான் பகுதிகளை தமிழ்மக்களும் சேர்ந்து நிர்வகித்தும், வாழ்ந்தும் வருகின்றனர். குறிப்பாக மண்முனை, கோறளை, ஏறாவூர் பற்றுக்களில் பல பண்டைய சிறிய முஸ்லீம் கிராமங்கள் அங்கும், இங்கும் சிதறிக்கிடக்கின்றன.  இதில்  மன்னம்பிட்டி பிரதேச தமிழ், முஸ்லீம் பாரம்பரிய கிராமங்களும் அடங்கும். இந்த சிதறல் மன்னம்பிட்டி பிரதேசம் பொலனறுவை மாவட்டத்துடன் இணைக்கப்படும் வரை மகாவலி வரை நீண்டுகிடந்தது. அதே போன்று 1961 இல் அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டபோது மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஒருபகுதி அந்தமாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. உண்மையில் மட்டக்களப்பு மாவட்டம் தனது பூர்விக நிலப்பரப்பில் ஒரு பகுதியை வடமேற்காகவும், தெற்காகவும் இழந்து நிற்கிறது.  மட்டக்களப்பு மாவட்ட சனத்தொகை வளர்ச்சியை உற்று நோக்குகையில் பொதுவாக காணிப்பிரச்சினையை ஒரு பொதுவான காரணமாக கொள்ள முடியாது. ஆனால் சில தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் இது ஒரு சிறப்பு பிரச்சினை என்பதையும் மறுப்பதற்கில்லை. கடந்த நான்கு தசாப்தங்களை நோக்கினால் 1981 இல் 2,37,787 ஆக இருந்த தமிழர் சனத்தொகை 2012 இல் 3,82,300 ஆக அதிகரித்துள்ளது. இது சுமார் 1,50,000 பேரினால் அதிகரித்துள்ளது.  1981 இல் முஸ்லீம்களின் சனத்தொகை 78,829 இல் இருந்து 2012 இல் 1,33,844 ஆக உயர்ந்துள்ளது. இது சுமார் 50,00 பேரினால் அதிகரித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் சராசரி சனத்தொகை வளர்ச்சி ஏறக்குறைய ஒரு வீதமாக இருக்கின்ற நிலையில் இதை காணிநெருக்கடிக்கான முக்கிய காரணமாக சமகாலத்தில் கொள்ள முடியாது. இதனால் தான் வாழ்வியல் முறை, வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற சமூக, பொருளாதார காரணிகள் முக்கியம் பெறுகின்றன. இந்த வளர்ச்சிக்கு-தேவைக்கு சமாந்தரமாக காணி, வீடமைப்பு வசதிகள், சனத்தொகை செறிவை ஐதாக்குவதற்கான திட்டமிடல் நடவடிக்கைகள் தேசிய, மாகாண, மாவட்ட மட்டத்தில் செய்யப்படவில்லை. தமிழ்ஆயத அமைப்புக்களின் வன்முறையினால் வாழ்விடங்களை விட்டுவெளியே முஸ்லீம் மக்கள்  விரும்பினால் அந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டும். குறிப்பாக பாவற்கொடிச்சேனை, உறுகாமம் போன்றவற்றை குறிப்பிடலாம்.  அதேபோல் புல்லுமலை, தியாவட்டவான், புனானை போன்ற பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்களும் விரும்பினால் மீள்குடியேற வாய்ப்பளிக்கப்படவேண்டும். இங்கு இவர்கள் தங்கள் காணி உரிமையை உறுதிப்படுத்துவதற்கான விதிவிலக்கான நிர்வாக நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டியது அவசியம். இதற்கான வழிவகைகளை அரசியல் ஊடாகத்தேடாது “எங்கள் பங்கைத்தானே கேட்கிறோம்” என்பதால் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது. முஸ்லீம் தலைமைகள் “பங்கு” என்று எதைக் கருதுகிறார்கள்? மட்டக்களப்பு மாவட்ட மொத்த நிலப்பரப்பில், சனத்தொகை விகிதாசாரத்திற்குரியதா? இல்லை பாவனைக்குரியதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலப்பரப்பில் ஒரு பங்கா?  அல்லது தமிழ்த்தரப்பு வன்முறையினால் இடம்பெயர்ந்தவர்கள் மீளக்குடியேறுவதா? அல்லது தவறான வழியில் தனிநபர் காணிகள் எடுக்கப்பட்டிருந்தால் அதுவா?  அல்லது நீங்கள் பங்கு என்று குறிப்பிடுவது மலையும், காடும், கடலும் கொண்ட நிலப்பரப்பில் ஒரு பங்கா?   இந்த கேள்விகளுக்கு ஒரு பதில் இருந்தால் அதில் இருந்து நகரமுடியும். அவ்வாறு இல்லாமல் நஸீர் அகமட்டின் வார்த்தைகளை மீள உச்சரிப்பதாலோ, அவரின் மொத்த சனத்தொகை அடிப்படையிலான காணிப்பங்கீட்டை கோருவதனாலோ இதற்கு தீர்வு காண முடியாது. கல்முனை தமிழ் பிரதேச தரம் உயர்வுக்கு ஹரிஷ் போடுகின்ற தடைகளை முஸ்லீம் காங்கிரஸ் அரசியல் பயங்கரவாதம் என்று சொல்லலாமா…..?    https://arangamnews.com/?p=10587  
    • திருக்கோவில் வைத்தியசாலைக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது. March 28, 2024 (கனகராசா சரவணன்) திருக்கோவில் மரதன் ஓடிய 16 வயது மாணவன் உயிரிழந்தது தொடர்பாக  வைத்தியசாலைக்கு முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வைத்தியசாலைக்கு தேசம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக தலைமறைவாகி வந்த மேலும் 4 பேர் புதன்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். கடந்த திங்கட்கிழமை (11) ம் திகதி திருக்கோவில் மெதடிஸ்த மாகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியை முன்னிட்டு இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய திருக்கோவில் 3 ம் பிரிவு துரையப்பா வீதியைச் சேர்ந்த 16 வயதுடைய ஜெயக்குமார் விதுர்ஜன்; என்ற மாணவன் மயங்கிவீழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச் சம்பவத்தையடுத்து திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் கவலையீனமாக குறித்த மாணவன் உயிரிழந்தார் என குற்றம்சாட்டு தெரிவித்து வைத்தியசாலைக்கு முன்னால் ஒன்று திரண்ட பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட் நிலையில் வைத்தியசாலை மீது கல்வீச்சு தாக்குதல் நடாத்தியதில் கட்டிடத்தின் பல யன்னல் கண்ணாடிகள் உடைந்து தேசமடைந்ததுடன் வைத்தியசாலை பெயர்  பலகையை உடைத்து சேதப்படுத்தியதையடுத்தினர். இதனையடுத்து வைத்தியசாலைக்கு சேதம் விளைவித்த 35  பேரை இனங்கண்டு கொண்ட பொலிசார் பெண் ஒருவர் உட்பட 6 பேரை கடந்த 22ம் திகதி வெள்ளிக்கிழமை (22) கைது செய்து அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து அவர்களை எதிர்வரும் 4ம் திகதி வரையுமான 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் இதனை தொடர்ந்து தலைமறைவாகிவந்த 4 பேரை சம்பவதினமான இன்று கைது செய்துள்ளதையடுத்து இதவரை பெண் ஒருவர் உட்பட 11 பேரை கைது செய்துள்ளதாகவும் ஏனைய தலைமறைவாகியுள்ளவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.   https://www.supeedsam.com/198438/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.