Jump to content

இருட்டு வேளையில் திருட்டுத்தனமாக செய்த செயல்; அந்த பழி முதல்வர் மீதே விழுந்துவிடும் : பழ.நெடுமாறன் பேட்டி


Recommended Posts

தஞ்சை விளார் கிராமத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றத்தின் பூங்கா மற்றும் சுற்றுச் சுவர் இடிக்கப்பட்டதை தடுத்த பழ.நெடுமாறன் உட்பட 82 பேர் திருச்சி சிறையில் அடைக்கப்ப ட்டனர்.     பழ.நெடுமாறன் உட்பட 82 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர். 

 

சிறையில் இருந்து வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம்,   ‘’முள்ளிவாய்க்கால் முற்றம் திறக்கக் கூடாது என்று பல்வேறு வழிகளில் முயன்று தோற்றுப்போய்,  ஏதாவது செய்ய வேண்டும் என்று,  இருட்டு வேளையில் திருட்டுத்தனமாக செய்த செயல்.  முதல்வருக்கு தெரியாமல் இது நடந்தி ருந் தால் இந்த இருட்டு அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அப்படி நடவடிக்கை எடுக்காத பட்சத்தில்  அந்த பழி முதல்வர் மீதே விழுந்துவிடும்.    இல்லை யென்றால் நீதிமன்றம் மூலமாக அந்த அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

 

நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, முன்பை விட அதிக சிறப்பம்சத்தோடு முள்ளியாய்க்கால் முற்றத் தின் இடிக்கப்பட்ட பகுதிகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

 

நன்றி நக்கீரன் .

http://www.lankasri.com/ta/link-33y6C232TS.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

ஜெயாவை பேசியவன் எல்லாம் லைனுக்கு வா ஓவர் . :D :D

 

இது வேறையா நடக்கட்டும் :(

Link to comment
Share on other sites

சத்தியமா ஈழத்தாய் இல்லையாம் கேட்டுக்குங்கோ .

 

ஜெயாவை பேசியவன் எல்லாம் லைனுக்கு வா ஓவர் . biggrin.pngbiggrin.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் அரசியலில் சகஜம். அம்மா ஆட்சியில் உள்ளவரை அடங்கிற இடத்தில அடங்கி ஆடிற இடத்தில ஆடித்தான் காரியம் சாதிக்கனுன்னா.. அதையே தான் செய்தாகனும்..! அதில தப்பில்லத் தானே..! இல்ல திமிரோட தான் நிற்பன் என்று அடம்பிடிச்சா உள்ள இருந்து களிதான் சாப்பிடனும். வெளில கூச்சல் போட்டவன் காயா பிரியாணி சாப்பிட்டிட்டுக்கிட்டு இருப்பான்.. அதுவும் நெடுமாறன் ஐயாவுக்குத் தெரியும்.


அம்மாவும் கைவைச்சுத் தான் பார்த்தா. விளைவு கொஞ்சம் விவகாரமா இருந்திச்சு. அடக்கி வாசிக்கிறா. அதில ஐயா தூண்டில் போட்டு காரியம் சாதிக்க நினைக்கிறார். இதில நக்கல் நளினத்திற்கு இடமில்லை. பாடிக் கறக்கிற மாட்டில பாடிக் கறக்கனும். ஆடிக் கறக்கிற மாட்டில ஆடிக்கறக்கனுன்னு பழமொழியே இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனின் மனம் நோகக்கூடாது என்பதற்க்காக இலங்கை கொடிபிடிச்சனான் என்ற நம்மடை பம்மந்தரை விட இது ஒண்றும் அவ்வளவு கேவலமில்லை அஞ்சரன் கூல் டவுன். 

Link to comment
Share on other sites

நெடுமாறன் அய்யா அவர்கள் அடுத்து முற்றத்தின் சுற்றுச்சுவரை இடிச்ச புல்டோசர் டிரைவரை கண்டிச்சு போராட்டம் நடத்த உள்ளார் என்பதை .அறிய தருகிறோம் .

Link to comment
Share on other sites

நெடுமாறன் பொய் சொல்றார் என்று எதை வச்சு கண்டுபிடிச்சீங்க அஞ்ச்? :D

Link to comment
Share on other sites

நெடுமாறன் பொய் சொல்றார் என்று எதை வச்சு கண்டுபிடிச்சீங்க அஞ்ச்? :D

 

ஐயோ இசை வேணாம் அழுதுடுவன் இது செய்தி நானு கண்டுபிடிக்க வில்லையாக்கும் :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுமாறன் ஐயாவை  கை  காட்டி பேசும் அளவுக்கு நாம்................... :(  :(  :(  :(

Link to comment
Share on other sites

நெடுமாறன் ஐயாவை  கை  காட்டி பேசும் அளவுக்கு நாம்................... :(  :(  :(  :(

 

வைகோவிடம் இருக்கும் துணிவு கூட ஐயாவிடம் இருக்கவில்லை வெளியில் வந்து விடும் அறிக்கை சொல்லுது அப்படி

அம்மாவை எதிர்க்க என்ன பயம் சுவரை இடிக்கும்போது ஒரு முதலவருக்கு தெரியாது என்று சொல்வது அடி முட்டாள்தனம் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைகோவிடம் இருக்கும் துணிவு கூட ஐயாவிடம் இருக்கவில்லை வெளியில் வந்து விடும் அறிக்கை சொல்லுது அப்படி

அம்மாவை எதிர்க்க என்ன பயம் சுவரை இடிக்கும்போது ஒரு முதலவருக்கு தெரியாது என்று சொல்வது அடி முட்டாள்தனம் .

 

 

 

நெடுமாறன்  =  அடிமுட்டாள் :(  :(  :(

நன்றி  கெட்டவன்  தமிழன் :(  :(  :(

Link to comment
Share on other sites

நெடுமாறன்  =  அடிமுட்டாள் :(  :(  :(

நன்றி  கெட்டவன்  தமிழன் :(  :(  :(

 

நிங்களா எடுக்கும் முடிவு இது .

 

தேசத்துக்கு உழைத்தவன் எல்லாம் ஒருநாளில் ஒரு மணித்தியாலத்தில் துரோகி ஆக்கும் எமக்கு இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை அண்ணே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிங்களா எடுக்கும் முடிவு இது .

 

தேசத்துக்கு உழைத்தவன் எல்லாம் ஒருநாளில் ஒரு மணித்தியாலத்தில் துரோகி ஆக்கும் எமக்கு இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை அண்ணே .

 

 

உங்கள் ஒவ்வொரு எழுத்தின் மூலமும்

உங்களை  நீங்களே

மிகவும் தாழ்த்திக்கொள்கின்றீர்கள்............. :(  :(  :(

நன்றி  வணக்கம்

Link to comment
Share on other sites

உங்கள் ஒவ்வொரு எழுத்தின் மூலமும்

உங்களை  நீங்களே

மிகவும் தாழ்த்திக்கொள்கின்றீர்கள்............. :(  :(  :(

நன்றி  வணக்கம்

 

இதில் என்ன இருக்கு அண்ணே தரம் தாழ்த்த கருத்து அவ்வளவுதான் இதில் முரண்பாடு நிச்சயம் இருக்கும் பொதுவெளியில் பலர் பலதரப்பட்ட கருத்துடன் இருப்பினம் எனக்கு பிடித்தது எனக்கு சரி என பட்டத்து மற்றவர்களுக்கு பிடிக்காது அதுக்காக எனது கருத்தை நான் முடக்க முடியாது .

 

எல்லா கருத்துக்களும் எதிர்கருத்தை கண்டிப்பா வைத்தே இருக்கும் அண்ணே இதில் தராதரம் என்பது எல்லாம் எங்களுக்கு நாங்கள் போட்டு வைத்து இருக்கும் ஒரு வட்டம் .

Link to comment
Share on other sites

வைகோவிடம் இருக்கும் துணிவு கூட ஐயாவிடம் இருக்கவில்லை வெளியில் வந்து விடும் அறிக்கை சொல்லுது அப்படி

அம்மாவை எதிர்க்க என்ன பயம் சுவரை இடிக்கும்போது ஒரு முதலவருக்கு தெரியாது என்று சொல்வது அடி முட்டாள்தனம் .

இங்கேதான் உங்கள் கற்பனை விஞ்சி நிற்கிறது.. தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து விடயங்களும் ஒரு முதல்வருக்குத் தெரிந்திருக்கும் என்கிற அவசியம் இல்லை.. ஒரு அதிகாரி நினைத்திருந்தாலே இவற்றை சாதிக்க முடியும்.

முதல் கட்டமாக குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்தல்; அடுத்த கட்டமாக இடித்தல்.. இப்பி நடந்திருக்கவும் சந்தர்ப்பம் உண்டு..

அதே நேரத்தில் ஜெயாவின் ஆசீர்வாதத்துடன் நடந்திருக்கவும் சந்தர்ப்பம் உண்டு. சிக்கலான இந்த விவகாரத்தில் ஜே இன்னும் எதையும் சொல்லவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

முன்பு ஒருமுறை திருச்சிக்கு ஒரு வட இந்தியர் மாவட்ட ஆட்சியராக வந்தார். கொஞ்சநாள் நகரத்தை ஆராய்ந்துவிட்டு ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றினார் (மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் வளாகத்தில்.)

ஒரு பிரபலமான புடவை கடையின் இரண்டாம் மாடி விதிகளை மீறி நகராட்சி எல்லைக்குள் துருத்திக் கொண்டிருந்தது. அதையும் இடிக்க நடவடிக்கை எடுத்தார்.

முதலில் பெட்டியுடன் ஆட்சியரை சந்திக்க முயன்ற முதலாளி அது சரிப்படாததால் பின்னர் அதே பெட்டியுடன் உள்ளூர் அரசியல்வாதிகளைச் சந்தித்தார்.

அப்போது கலைஞரின் ஆட்சி.. இடிப்பு முயற்சிகள் நிறுத்தப்பட்டன. ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

இப்போது சொல்லுங்கள். இடிக்கச் சொன்னவர் கலைஞரா அல்லது நிறுத்தச் சொன்னவர் கலைஞரா? :D

எனது அனுமானம் இது எதுவுமே அப்போது கலைஞரின் காதுகளை எட்டியிராது. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 முயன்ற முதலாளி அது சரிப்படாததால் பின்னர் அதே பெட்டியுடன் உள்ளூர் அரசியல்வாதிகளைச் சந்தித்தார்.

அப்போது கலைஞரின் ஆட்சி.. இடிப்பு முயற்சிகள் நிறுத்தப்பட்டன. ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

இப்போது சொல்லுங்கள். இடிக்கச் சொன்னவர் கலைஞரா அல்லது நிறுத்தச் சொன்னவர் கலைஞரா? :D

எனது அனுமானம் இது எதுவுமே அப்போது கலைஞரின் காதுகளை எட்டியிராது. :rolleyes:

 

இசை,

 

சின்னப் பிள்ளைதனமா இருக்குது உங்க கதை!.

 

கலைஞர் நேர காசு வாங்கிய பின் நிறுத்தப் பட்டிருந்தால் அது சந்தி நாறி இருக்கும்.

 

லோக்கல் ஆக்கள் மூலம் பெட்டி கலைஞரை போய் சேர்ந்த படியால் இடிபாடு நின்றது.

 

3 ஜி விடயத்தில் பெரிய அமௌண்டு என்று நேரா குடும்பமா கையை நீட்டி, மகள் உள்ளார போய் இருந்தது தெரியும் தானே!

Link to comment
Share on other sites

இசை,

இது எண்ணப் சின்னப் பிள்ளைதனமா இருக்குது உங்க கதை!.

கலைஞர் நேர காசு வாங்கிய பின் நிறுத்தப் பட்டிருந்தால் அது சந்தி நாறி இருக்கும்.

லோக்கல் ஆக்கள் மூலம் பெட்டி கலைஞரை போய் சேர்ந்த படியால் இடிபாடு நின்றது.

3 ஜி விடயத்தில் பெரிய அமௌண்டு என்று நேரா குடும்பமா கையை நீட்டி, மகள் உள்ளார போய் இருந்தது தெரியும் தானே!

நாதம்ஸ்.. அது என்னவாகவும் இருக்கலாம்.. :D நமக்கு தெரிய வருவது ஒரு சிறிய பாகமே என்பதையே சொல்லவந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனின் மனம் நோகக்கூடாது என்பதற்க்காக இலங்கை கொடிபிடிச்சனான் என்ற நம்மடை பம்மந்தரை விட இது ஒண்றும் அவ்வளவு கேவலமில்லை அஞ்சரன் கூல் டவுன். 

 

பெருமாள் சொன்னது கேட்டிச்சா....

ப்ளீஸ்... அஞ்சரன், கூல் டவுன். :)

Link to comment
Share on other sites

இங்கேதான் உங்கள் கற்பனை விஞ்சி நிற்கிறது.. தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து விடயங்களும் ஒரு முதல்வருக்குத் தெரிந்திருக்கும் என்கிற அவசியம் இல்லை.. ஒரு அதிகாரி நினைத்திருந்தாலே இவற்றை சாதிக்க முடியும்.

முதல் கட்டமாக குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்தல்; அடுத்த கட்டமாக இடித்தல்.. இப்பி நடந்திருக்கவும் சந்தர்ப்பம் உண்டு..

அதே நேரத்தில் ஜெயாவின் ஆசீர்வாதத்துடன் நடந்திருக்கவும் சந்தர்ப்பம் உண்டு. சிக்கலான இந்த விவகாரத்தில் ஜே இன்னும் எதையும் சொல்லவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

முன்பு ஒருமுறை திருச்சிக்கு ஒரு வட இந்தியர் மாவட்ட ஆட்சியராக வந்தார். கொஞ்சநாள் நகரத்தை ஆராய்ந்துவிட்டு ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றினார் (மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் வளாகத்தில்.)

ஒரு பிரபலமான புடவை கடையின் இரண்டாம் மாடி விதிகளை மீறி நகராட்சி எல்லைக்குள் துருத்திக் கொண்டிருந்தது. அதையும் இடிக்க நடவடிக்கை எடுத்தார்.

முதலில் பெட்டியுடன் ஆட்சியரை சந்திக்க முயன்ற முதலாளி அது சரிப்படாததால் பின்னர் அதே பெட்டியுடன் உள்ளூர் அரசியல்வாதிகளைச் சந்தித்தார்.

அப்போது கலைஞரின் ஆட்சி.. இடிப்பு முயற்சிகள் நிறுத்தப்பட்டன. ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

இப்போது சொல்லுங்கள். இடிக்கச் சொன்னவர் கலைஞரா அல்லது நிறுத்தச் சொன்னவர் கலைஞரா? :D

எனது அனுமானம் இது எதுவுமே அப்போது கலைஞரின் காதுகளை எட்டியிராது. :rolleyes:

 

உண்மையா இசை அப்படி நடக்குமா அப்ப எதுக்கு ஒரு அதிகாரம் உள்ள முதல்வர் .

 

ஒரு வேளை தலைவரின் தாய் திருப்பி அனுப்பபட்டது கருணாநிதிக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு இருக்கும் அல்லவா .

 

சும்மா டவுட்டுதான் கேட்டேன் .

 

Link to comment
Share on other sites

உண்மையா இசை அப்படி நடக்குமா அப்ப எதுக்கு ஒரு அதிகாரம் உள்ள முதல்வர் .

ஒரு வேளை தலைவரின் தாய் திருப்பி அனுப்பபட்டது கருணாநிதிக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு இருக்கும் அல்லவா .

சும்மா டவுட்டுதான் கேட்டேன் .

எனது அனுமானம்.. கலைஞருக்குத் தெரியாமலே அதுவும் நடந்திருக்கலாம்.. மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து 'சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம்' என்று அறிக்கை வந்தால் கியூ பிரிவு நடவடிக்கை எடுககும். ஒவ்வொன்றுக்கும் முதல்வரிடம் போக மாட்டார்கள். அப்படிப் போனால் முதல்வருக்கு வேறு வேலையே செய்யமுடியாது.

ஆனால் நடப்பவைக்கு முதல்வரே பொறுப்பு..! தவறு நடந்தால் வருத்தம் தெரிவித்து விசாரணைக்கு உத்தரவிடுவது இன்றியமையாதது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
    • இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும்.   சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள் குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்    
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • இந்தியாவுக்கு பிற‌க்கு சுத‌ந்திர‌ம் கிடைச்ச‌ நாடு Slovenia அந்த‌ நாட்டின் முன்னேற்ற‌ம் வாழ்த்தும் ப‌டி இருக்கு..................ப‌ல‌ விளையாட்டில் அவ‌ங்க‌ள் திற‌மைசாலிக‌ள்.................ப‌ல‌ நோய்க‌ளுக்கான‌ ம‌ருந்து க‌ண்டு பிடிப்ப‌தில் Slovenia திற‌மையான‌ நாடு................ ம‌னித‌க் க‌ழிவை ம‌னித‌னே அள்ளுவ‌து உண்மையில் அருவ‌ருக்க‌ த‌க்க‌து இந்த‌ தொழிநுட்ப‌ம் வ‌ள‌ந்த‌ இந்த‌ நூற்றாண்டில் ம‌னித‌க் க‌ழிவை சுத்த‌ம் செய்ய‌ எவ‌ள‌வோ வ‌ச‌திய‌ க‌ண்டு பிடித்து விட்டார்க‌ள்..............2018க‌ளில் தாயிலாந்தில் ம‌னித‌க் க‌ழிவு  வெளியில் வ‌ர‌ அந்த‌ அர‌சாங்க‌ள் ஒரு நாளில் இய‌ந்திர‌த்தை வைத்து எல்லாத்தையும் ச‌ரி செய்து விட்டார்க‌ள்................ஆனால் இந்தியாவில்? ஆம் நினைவு இருக்கு க‌ட‌லில் கொட்டிய‌ எண்ணைய‌ வாளி வைச்சு அள்ளினார்க‌ள் இது தான் மோடியின் டியிட்ட‌ல் இந்தியா கிலின் இந்தியா.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.