Jump to content

கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எத்தினையோ கருத்து வேறுபாடு இருக்கலாம் ஆனாலும் நம் இரத்தம் களஉறவு  மீண்டு வர பிரார்த்திக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • Replies 264
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நிழலி

வணக்கம் ஜெயபாலன் அண்ணா,   மீண்டும் சுகமாக திரும்பி வந்ததையிட்டு மிக மகிழ்ச்சி.   எங்கும் கலகக்காரனாக அறியப்பட்ட உங்கள் விடுதலை மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. உங்கள் மீதான ஆயிரம் விமர்சனங்களுக்கும்

பகலவன்

அன்புள்ள கவிஞர் ஐயா ஜெயபாலன்,   நீங்கள் கைது செய்யப்பட்ட போது ஒரு கள உறவாக நான் எவ்வளவு வேதனைப்பட்டேனோ அதற்கும் அதிகமாக நீங்கள் விடுதலை செய்யப்பட்டதும் மகிழ்வடைந்தேன்.   ஒரு தமிழனை அதுவும் வெளிநாட்டு

புங்கையூரன்

கவிஞரே, அவசியமில்லாமல் மனிதர்களின் மனங்களைக் காயப்படுத்தக் வேண்டாம்!   நிழலியைப்பற்றிய உங்கள் பதிவு பற்றியே சொல்கின்றேன்!   உங்கள்  'விடுதலைக்கான' முகநூல் போராட்டத்தில் மிகவும் தீவிரமாக நிழலி ஈடுப

  • கருத்துக்கள உறவுகள்

4ஆம் இணைப்பு:-ஜெயபாலன் இராணுவப் புலனாய்வாரள்களால் கண்காணிக்கப்பட்டு - மாங்குளத்தில் கடத்தப்பட்டு பின் கைதனவரானார்

 

விசா விதிகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு உள்ளார்:- 4ஆம் இணைப்பு:-

jeyapalan_CI.jpg

 

நீண்ட இடைவெளியின் பின்னர் யாழ்.குடாநாட்டிற்கு சென்றிருந்த  ஜெயபாலன் யாழ். ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியிருந்தார். இந்நிலையில் அவரது நடமாட்டங்கள் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் பின் தொடரப்பட்டிருந்த நிலையில் அவர் யாழை விட்டு வெளியேறியிருந்தார். எனினும்; அவரை பின் தொடர்ந்த புலனாய்வாளர்கள் அவரை மாங்குளத்தில் வைத்து கடத்தியதாக தெரியவருகிறது. இந்தத் தகவல்கள் ஊடகங்களில் வெளிவந்த நிலையில் அவரை தாம் கைது செய்திருப்பதாகவும் விசா விதிகளை மீறி ஜெயபாலன் செயற்பட்டார் எனவும் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

விசா விதிகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு உள்ளார்:-

விசா விதிகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக இலங்கை காவற்துறை அறிவித்துள்ளது.

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு சென்றிருந்த ஜெயபாலன், இலங்கையில் இனங்களுக்கிடையே ஒற்றுமையை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் அவர் தற்போது தடுத்து வைக்கப்பட்டு இருக்கிறார் எனவும் கூறிய காவற்துறையினர், அடுத்த கட்ட நடவடிக்கைகளை குடிவரவு,குடியகல்வு துறை அதிகாரிகள் தீர்மானிப்பார்கள் எனவும்; அவர் தெரிவித்துள்ளனர்.

 

2ஆம் இணைப்பு:- கவிஞர் வ.ஐ.ச ஜெயபாலன் இலங்கை படையினரால் கைது:-

11:10am

கவிஞர் வ.ஐ.ச ஜெயபாலன் இலங்கை காவற்துறையால் கைதுசெய்யப்பட்டு உள்ளார்.

மாங்குளத்தில் உள்ள அவரின் தாயின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்த சென்ற போது இன்று  இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதனை அவரது உறவினர்கள் உறுதி செய்துள்ளனர்.  

நோர்வே குடியுரிமை பெற்ற வ.ஐ.ச ஜெயபாலன் தற்போது பெரும் பகுதி காலத்தை  தமிழகத்தில் கழித்து வந்தார்.

கடந்த வாரம் இலங்கை சென்ற அவர் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும்  பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.

தாயின் நினைவு தினமான இன்று மாங்குளத்தில் உள்ள தாயின் சமாதியை பார்க்க சென்ற வேளை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வவுனியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் வவுனியா காவற்துறையில் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக தெரியவருகிறது.

 

இவரது கைது குறித்து நோர்வே தூதுவராலையத்தின் கவனத்திற்கு கொண்டுவந்திருப்பதாக உறவினர்கள் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்துள்ளனர்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99359/language/ta-IN/article.aspx

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் சுகமாக  வீடு திரும்பவேண்டுகின்றேன்

அவர் எமது சொத்து

சரி

பிழைகளுக்கு அப்பால்

அவர் பிடிபட்டிருப்பது சிங்களம் என்ற வெறியனிடம் என்பதை இங்கு கருத்து  எழுதும் எவரும் மறக்கவேண்டாம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தினையோ கருத்து வேறுபாடு இருக்கலாம் ஆனாலும் நம் இரத்தம் களஉறவு  மீண்டு வர பிரார்த்திக்கிறேன்.

 

நீங்கள் நினைக்கிற அளவுக்கு, பயப்படும் படியாக ஒன்றும் இல்லை, பெருமாள்.

எங்களது, "ஜெயபாலன் கைது மூலம்" ஒரு நாளில்... தமிழ் உலகப் பிரசித்தி பெற்று விட்டார் அவ்வளவுதான். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் நலமாக விடுதலையாகி வீடு  சேர வேண்டும்!

Link to comment
Share on other sites

அவர் விரைவில் விடுதலையாக வேண்டும். அவரின் கைது குறித்து கவலையோடு இருக்கும் அவரின் குடும்பத்தின் கவலைகளில் நானும் பங்கு கொள்கிறேன் .

 

என்ன இருந்தாலும் அவரும் ஒரு தமிழர். தமிழரின் அடையாளம். அவரை கைது செய்தது சிங்கள இராணுவம். அவரின் கைதையும் ஒரு ஊடக பிரச்சாரமாக முன்னெடுக்க  வேண்டும். அதுவும் உலக ஊடகங்களின் பார்வை இலங்கையை நோக்கி திரும்பி இருக்கும் இந்த தருணத்தில்.

 

இந்த இடத்தில் அவரை வசை பாடுதலும். அவரின் நிலைப்பாடு தொடர்பான விமரிசனங்களும் தவிர்க்கப்பட வேண்டும். அதை வெளிபடுத்த காலம் இருக்குது. இப்போ தனி ஒரு தமிழனுக்கு சிங்களவனால் பிரச்சனை என்றாலும் சேர்ந்து குரல் கொடுப்போம்.

 

 

Link to comment
Share on other sites

சிறிலங்காவில் சுதந்திரம் இருக்கு என்று எழுதிய சோபசக்தி முதல் வரை கருணாகரன் வரை வரை இதற்குப் பதில் சொல்ல வேண்டும். மேலும் இவர் அனந்தி உடன் எடுத்துக் கொண்ட படம் முகநூலெங்கும் உலாவியது. முகநூலைப் பார்த்தாலே புலனாய்வாளர்களுக்கு போதிய தகவல் கிடைத்திருக்கும். சிறிலங்காவின் சுதந்திரம் என்ன என்பதை இனிக் கருணாகரன் வந்து சொல்ல வேணும். சோபசக்தியும் இதற்க்கு ஒரு பொழிப்புரை எழுதுவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"ஊருக்கு சாத்திரம் சொல்லும் பல்லி தான், கூழ்ப் பானைக்குள்ளை விழுமாம்..."

என்னமா திங் பண்ணிறாங்க  .....

Link to comment
Share on other sites

பொயட் அவர்களின் கைதிற்கு கடும் கண்டனம் தெரிவிப்பதோடு உடனடியாக அவரை விடுதலை செய்யவேண்டும்....... இல்லையேல் சர்வதேச விசாரணையை இலங்கை அரசு எதிர்கொள்ள நேரிடும் பொயட் அவர்களின் நண்பர் நீதியமைச்சர் ஹக்கீம் அவரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் ஜெயபாலன் விரைவில் விடுதலை பெற வேண்டும்!

 

 

Link to comment
Share on other sites

கவிஞர் ஜெயபாலன் விரைவில் விடுதலை பெற வேண்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் ஜெயபாலன் விரைவில்... யாழ்களம் வரவேண்டும்.

Link to comment
Share on other sites

மற்றது கவிஞர் அங்க சும்மா போக அவர் ஒன்றும் முட்டாள் இல்லை போறதுக்கு முதல் பலரை தொடர்பு கொண்டு தன்னோட பாதுகாப்பை உறுதி படுத்தி இருப்பார் குறிப்பா Muslim அமைச்சர்கள் பலரை சோ எனக்கு என்னமோ இந்த கைதில் பெருசா அனுதாபம் வரல்ல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி நான் பறப்படும் நேரம். நாளை நல்ல செய்தி வரட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞரின் கைது மிகவும் கவலையளிக்கின்றது. மக்களின் நலன்களில் அக்கறை கொண்டவர்களுக்கும், சிறிலங்கா அரசின் போக்கை விமர்சிப்பவர்களுக்கும் மகிந்த குடும்பத்தினர் சுதந்திரமாக நடமாடவோ கருத்துக்களைத் தெரிவிக்கவோ அனுமதிப்பதில்லை என்பதை அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கவிஞர் விரைவில் விடுதலை பெற்று வெளியே வருவார் என்று நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றது கவிஞர் அங்க சும்மா போக அவர் ஒன்றும் முட்டாள் இல்லை போறதுக்கு முதல் பலரை தொடர்பு கொண்டு தன்னோட பாதுகாப்பை உறுதி படுத்தி இருப்பார் குறிப்பா Muslim அமைச்சர்கள் பலரை சோ எனக்கு என்னமோ இந்த கைதில் பெருசா அனுதாபம் வரல்ல

 

எனக்கும் தான்...

கவிஞரா.. கொக்கா...

இராணுவத்தால்... கைது செய்யப் பட்டு, பொலிசாரிடம் ஒப்படைக்கிறார்களாம் என்று... செய்தியில் உள்ளது.

நல்ல, சனநாயக நாட்டில் தான் இது நடக்கும்.

வெள்ளை வானிலை... ஏத்தியிருந்தால், டக்ளசை சந்தேகப்பட்டிருந்து... கவலை தெரிவிப்பேன்.

ஆனபடியால்... கவலைக்கு, நோ... சான்ஸ்.

Link to comment
Share on other sites

Thirumurugan Gandhi

இலங்கை அரசு ஆக்கிரமிக்கப்பட்ட தமிழீழ பிரதேசத்தில் ஈழத்து கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனை கைது செய்திருக்கிறது. இலங்கையில் இலக்கியக் கூட்டம், மாநாடு நடத்தலாம் ஆனால் மக்கள் உரிமையைப் பற்றி பேசக்கூடாது என்கிறது பாசிச அரசு. வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய கைது இது.

அந்த முதியவரை நான் சன் தொலைக்காட்சியின் பேட்டியின் போது சந்தித்தேன்.. அமெரிக்க தீர்மானம் மூலமாக பாதுகாப்பாவது குறைந்தபட்சம் கிடைக்கும் அதனால் அதை ஆதரிக்கிறேன் என்றவர். அமெரிக்க தீர்மானம் நிறைவேறி இரண்டு முழுவருடங்கள் முடியவில்லை, இக்கவிஞரை கைது செய்திருக்கிறது பாசிச அரசு.

துன்புறுத்தல், சித்திரவதை என்பதை சர்வசாதாரணமாக செய்யும் இலங்கை அரசு அப்படியேதேனும் செய்திருமோ என்று அச்சம் எழுகிறது. ஒரு அரைமணி நேரம் தொலைக்காட்சி அரங்கில் முழுமையாக உட்காரவோ, பேசவோ அவரால் இயலாமல் இருப்பதை நேரில் கவனித்தேன். முதுமையும், உடல்நலக்குறைவும் உடைய ஒருவரை கைது செய்து எதை சாதிக்கப் போகிறார்கள் பாசிஸ்டுகள்.

தமிழகத்தில் இருக்கும் இலக்கியவியாதிகள் தற்போதாவது வாய் திறப்பார்களா?... புலிப்பாசிசம் புலிப்பாசிசம் என்று பேரினவாத பாசம் பொங்கி வழிந்தவர்கள் இந்த மூத்த இலக்கிய நண்பருக்காகவாவது குரல் கொடுப்பார்களா? அல்லது எப்பொழுதும் போல தமது மனித உரிமை வியபாரம், டாக்குமெண்டரி வியாபாரம், எழுத்து-கட்டுரை-திரைக்கதை வியாபாரம் நடத்திவிட்டு காணாமல் நகருவார்களா?..

தொடர்ந்து குரல் கொடுப்போம். இந்தியமும், இலங்கையும் இணைந்து செய்யும் அராஜகத்தினை தட்டிக்கேட்போம். இனப்படுகொலையையே கண்டு கொள்ளாத இலக்கியவியாதிக் கூட்டம் சகபடைப்பாளிக்கு குரல் கொடுக்கும் எனத் தோன்றவில்லை. மனிதம் தொலைத்த படைபபாளிகள் என்ன செய்யப்போகிறார்கள் எனப் பார்ப்போம். நம்முடன் கைகோர்ப்பார்களா அல்லது எப்போதும் போல க்டந்து செல்லப்போகிறார்களா என்று...

வ.ஐ.ச.ஜெயபாலனின் பல கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கிறது. ஆனால் இலங்கை அரசிற்கு நம் அனைவரையும் தமிழன் என்று பார்ப்பதிலும், சிறை பிடிப்பதிலும், கொலை செய்வதிலும் எந்த பிரிவினையையும் செய்வதில்லை...

இலக்கியவாதிகள் வெறுத்தாலும் தமிழீழம் மட்டுமே கருத்து-படைப்பு சுதந்திரத்தினை உறுதி செய்யும். வியபாரிகளுக்கு காது கேட்கிறதா எனப்பார்ப்போம்.

FB

Link to comment
Share on other sites

 தன்னோட பாதுகாப்பை உறுதி படுத்தி இருப்பார் குறிப்பா Muslim அமைச்சர்கள் பலரை

 

இலங்கையில் முஸ்லிம் அமைச்சர்களுக்கு என்ன பலம் இருக்குது என்று நினைக்கின்றீர்கள் சுண்டல்?  அவர்கள் எல்லாம் பொம்மை அமைச்சர்கள். இலங்கை அரச பயங்கரவாதத்துக்கு எதிராக ஒரு சுண்டு விரலைக் கூட நீட்ட உரிமையற்றவர்களாகத்தான் அன்றும் இன்றும் இருக்கின்றார்கள்.

 

இந்த வாரம் நிந்தவூரில் அதிரடிப்படையினரின் அட்டகாசத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த முஸ்லிம் இளைஞர்கள் பலரை அதிரடிப்படையினரும், பொலிசாரும் கைது செய்துள்ளனர். அவர்களில் சிலர் எங்கு இருக்கின்றார்கள் என்று கூட தெரியவில்லை. முஸ்லிம் இளைஞர்களை கைதைக் கூட எதிர்க்க முடியாதவர்களாகத்தான் முஸ்லிம் அமைச்சர்கள் உள்ளனர். அஸ்வராலும், ஹக்கீமாலும் இலங்கை பேரினவாததுக்கு எதிராக எப்போது குரல் கொடுக்கினமோ அன்றே அவர்களுக்கும் இதே நிலைதான் வரும்.

வ.ஐ.ச.ஜெயபாலனின் பல கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கிறது. ஆனால் இலங்கை அரசிற்கு நம் அனைவரையும் தமிழன் என்று பார்ப்பதிலும், சிறை பிடிப்பதிலும், கொலை செய்வதிலும் எந்த பிரிவினையையும் செய்வதில்லை...

 

 

இது தான் யதார்த்தம்.

Link to comment
Share on other sites

விரைவில் விடுதலை செய்வார்கள் என்ற நம்பிக்கை இருந்தாலும் நாட்டிற்கு போன இடத்தில் ஆமி பொலிஸ் என்று அலைவதைப்போல அரியண்டம் வேறில்லை .

விடுமுறைக்கு போன இடத்தில் சும்மா ஒரு காச்சல் வந்தாலே விசர் வரும் .

Link to comment
Share on other sites

தனது தாயின் கல்லறை தரிசிக்கச் சென்ற கவிஞர் ஜெயபாலன் விரைவில் வெளியில் வரவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் விடுதலை செய்வார்கள் என்ற நம்பிக்கை இருந்தாலும் நாட்டிற்கு போன இடத்தில் ஆமி பொலிஸ் என்று அலைவதைப்போல அரியண்டம் வேறில்லை .

விடுமுறைக்கு போன இடத்தில் சும்மா ஒரு காச்சல் வந்தாலே விசர் வரும் .

 

அடுத்த முறை போக முன்னமே.. போய் வாற நோக்கத்தைச் சொல்லிட்டால் மகிந்தரே ரெட் காப்பெட் போட்டு வரவேற்பார்..! ஏன் ஆமி பொலிஸ் கவலை..???! :rolleyes::o

வ.ஐ.ச.ஜெயபாலனின் பல கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கிறது. ஆனால் இலங்கை அரசிற்கு நம் அனைவரையும் தமிழன் என்று பார்ப்பதிலும், சிறை பிடிப்பதிலும், கொலை செய்வதிலும் எந்த பிரிவினையையும் செய்வதில்லை...

 

 

இதனை இப்போதாவது பொயட் உணர்ந்திருக்கனும்..! இல்லைன்னா..????! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஒரு முன்னால் தமிழீழ மக்கள் விடுதலைக் கழக முக்கியஸ்த்தர். வெளிப்படையாக இல்லாவிட்டாலும் புலிகளை விமர்சிப்பவர். இந்திய தமிழக அரசியலில் நண்பர்கள் பலரைக் கொண்டவர். சாதாரணத் தமிழர் ஒருவர் கைதுசெய்யப்பட்டால் நடக்கும் அநீதிகள் இவருக்கு நடக்க வாய்ப்புக் குறைவு. விரைவில் விடுதலை செய்யப்படுவார் என்பதுதான் எனது எண்ணம்.

 

இவர் ஒன்றும் புதுவை ரத்திணதுரை அல்லவே கைதுசெய்யப்பட்டுக் கொல்லப்பட??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு... பப்ளிக்குட்டி விவகாரம்.
பொயட் அண்ணா... நாளைக்கோ.. நாளைஇண்டைக்கோ.. வெளியில வந்து..
ஆனந்த விகடன், குமுதம், நக்கீரன் போன்ற பத்திரிகைகளில்... விலா வாரியான பேட்டி தருவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நல்ல கவிஞர், நண்பர்....விடுதலைபெற்று வெளியே வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. சில நாட்கள் விசாரணை என்று அலட்டுவார்கள்....இருப்பினும் தமிழர் என்பதற்காகவே அவர் இக்கைதிற்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பதை மறுக்க முடியாது.

Link to comment
Share on other sites

இலங்கையில் முஸ்லிம் அமைச்சர்களுக்கு என்ன பலம் இருக்குது என்று நினைக்கின்றீர்கள் சுண்டல்?  அவர்கள் எல்லாம் பொம்மை அமைச்சர்கள். இலங்கை அரச பயங்கரவாதத்துக்கு எதிராக ஒரு சுண்டு விரலைக் கூட நீட்ட உரிமையற்றவர்களாகத்தான் அன்றும் இன்றும் இருக்கின்றார்கள்.

 

இந்த வாரம் நிந்தவூரில் அதிரடிப்படையினரின் அட்டகாசத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த முஸ்லிம் இளைஞர்கள் பலரை அதிரடிப்படையினரும், பொலிசாரும் கைது செய்துள்ளனர். அவர்களில் சிலர் எங்கு இருக்கின்றார்கள் என்று கூட தெரியவில்லை. முஸ்லிம் இளைஞர்களை கைதைக் கூட எதிர்க்க முடியாதவர்களாகத்தான் முஸ்லிம் அமைச்சர்கள் உள்ளனர். அஸ்வராலும், ஹக்கீமாலும் இலங்கை பேரினவாததுக்கு எதிராக எப்போது குரல் கொடுக்கினமோ அன்றே அவர்களுக்கும் இதே நிலைதான் வரும்.

 

இது தான் யதார்த்தம்.

 

மிகவும் பிழையான கருத்து நிழலி.

அதிகாரங்களுக்கு எதிராக சுண்டு விரல் நீட்டமாட்டார்கள். அதனோடு இணைத்து போய் வெல்லும் திறமைதான் நீந்தவூரில் நடக்கிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.