Jump to content

கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!


Recommended Posts

தாம் அதி புத்திசாலிகள் என்று நினைத்துக் கொண்டு மாறி மாறி முதுகு சொரியும் கூட்டத்தின் வண்டவாளாம் தண்டவாளம்  ஏறிக் கன நாளாச்சு என்று தெரியாமால் பூச்சுற்றும் நடிகர்கள் உண்மையில் அதி மடையர்கள்.    

Link to comment
Share on other sites

  • Replies 264
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நிழலி

வணக்கம் ஜெயபாலன் அண்ணா,   மீண்டும் சுகமாக திரும்பி வந்ததையிட்டு மிக மகிழ்ச்சி.   எங்கும் கலகக்காரனாக அறியப்பட்ட உங்கள் விடுதலை மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. உங்கள் மீதான ஆயிரம் விமர்சனங்களுக்கும்

பகலவன்

அன்புள்ள கவிஞர் ஐயா ஜெயபாலன்,   நீங்கள் கைது செய்யப்பட்ட போது ஒரு கள உறவாக நான் எவ்வளவு வேதனைப்பட்டேனோ அதற்கும் அதிகமாக நீங்கள் விடுதலை செய்யப்பட்டதும் மகிழ்வடைந்தேன்.   ஒரு தமிழனை அதுவும் வெளிநாட்டு

புங்கையூரன்

கவிஞரே, அவசியமில்லாமல் மனிதர்களின் மனங்களைக் காயப்படுத்தக் வேண்டாம்!   நிழலியைப்பற்றிய உங்கள் பதிவு பற்றியே சொல்கின்றேன்!   உங்கள்  'விடுதலைக்கான' முகநூல் போராட்டத்தில் மிகவும் தீவிரமாக நிழலி ஈடுப

நிழலி! இன்றைக்கு கவிஞர் நாடுகடத்தப்பட்டிருக்கிறார். அவர் என்றைக்காவது ஒருநாள் மீண்டும் தாயகம் செல்லுவதை நோக்கமாக கொண்டிருப்பார். இதற்கு சிலரை நோகடிக்காமல் இருப்பது அவசியம்தான். வேறு வழியில்லை.

கைது செய்யப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டு திரும்பி வந்தவர்கள், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பது போன்று இருக்கின்ற காலத்தில், கவிஞரால் அது பற்றி பேசவாவது முடிகிறது.

எங்கே ஆக்ரோசத்தை வெளிப்படுத்த வேண்டும், எங்கே நிதானத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார் என்றே எனக்கு படுகிறது.

 

சபேசன்,

 

கவிஞருக்கு என்றைக்காவது தாயகம் போக வேண்டி தேவை இருக்கும் என்பதையும் அதற்காக எவரையும் நோகடிக்காமல் இருக்கும் தேவை இருப்பதையும் புரிந்து கொள்கின்றேன். அவ்வாறு தேவை இருப்பவர் தன் விடுதலைக்கு உழைத்தவர்களுக்கு பெரிய நன்றி என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கலாம். பதிலாக மிக மோசமான மனித உரிமைகளை மீறியவர்களுக்கு நற்சான்றிதழ் கொடுக்கவேண்டி வந்த தேவை என்ன?

 

நீங்கள் சொல்வது போன்று, அங்கு கைது செய்யப்பட்டு பின் (காசு கொடுத்தோ கொடுக்காமலோ) விடுவிக்கப்பட்டவர்கள் பலரை எனக்குத் தெரியும். ஆனால் அவர்கள் விடுதலையாகி வந்து மெளனமாகி இருக்கின்றார்களே ஒழிய, தன்னை நல்லவிதமாக நடத்தினார்களோ என்றோ நெஞ்சு வலியால் அவதிப்பட்டு ஆஸ்பத்திரியில் படுக்க போகும் போது ஒருவர் தன்னை கொலை செய்ய முனைந்தாரென்றோ, கோத்தாவை விட அவர் கொடியவர் என்றோ அறிக்கை விடவில்லையே?

 

 

எங்கே ஆக்ரோசத்தை வெளிப்படுத்த வேண்டும், எங்கே நிதானத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார் என்றே எனக்கு படுகிறது

 

 

 

பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் உயிரைக் குடித்தவர்கள் கையில் துப்பாக்கிகளுடன் நிற்கையில் அவர்கள் முன் நின்று "அம்மாவின் சமாதியைப் பார்க்க விடு அல்லது சுட்டுக் கொள்ளு" என்று ஆக்ரோசம் கொண்ட கவிஞர் பல்லாயிரம் மைல்கள் கடந்து அறிக்கை விடும் போது மட்டும் நிதானமாக இருக்கின்றார் என்பதை நம்பவேண்டும் என்கின்றீர்கள்.

Link to comment
Share on other sites

நிழலி! இன்றைக்கு கவிஞர் நாடுகடத்தப்பட்டிருக்கிறார். அவர் என்றைக்காவது ஒருநாள் மீண்டும் தாயகம் செல்லுவதை நோக்கமாக கொண்டிருப்பார். இதற்கு சிலரை நோகடிக்காமல் இருப்பது அவசியம்தான். வேறு வழியில்லை.

கைது செய்யப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டு திரும்பி வந்தவர்கள், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பது போன்று இருக்கின்ற காலத்தில், கவிஞரால் அது பற்றி பேசவாவது முடிகிறது.

எங்கே ஆக்ரோசத்தை வெளிப்படுத்த வேண்டும், எங்கே நிதானத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார் என்றே எனக்கு படுகிறது.

 

சபேசன் அப்படியாயின் உங்களின் அண்மைய கருத்துக்களும் இவ்வாறான உள் நோக்கம் கொண்டவையோ? உங்களின் தனிப்பட்ட நலங்களுக்காக உண்மைகளைப் பொய்களாக எழுதும் உங்களைப் போன்றவர்களின் எழுத்துக்கள்  எமது போராட்ட அரசியலுக்குத்  தேவையா என்று சிந்திக்க வேண்டி இருக்கிறது ?

Link to comment
Share on other sites

நாரதர்! நான் சில வேளைகளில் தேவை கருதி உண்மை பேசுவதை தவிர்த்திருக்கலாம். ஆனால் உண்மைகளை பொய்யென்று எழுதியது இல்லை. உண்மை என்றும் உண்மைதான்.

Link to comment
Share on other sites

யாழ் இணையத்திலை இன்னமும் உலக அரசியல் தெரியாத  றெம்ப அப்பாவிகள்  இருக்கிறாங்கள். :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் ஐயா யாழ்ப்பாணத்தில் சொன்ன கருத்து..

 

Link to comment
Share on other sites

"புலம்பெயர் மக்களின் தாயகப் பயணம்" என்பது தனிப்பட்ட நலன் மட்டும் அல்ல, அது ஒரு இனத்தின் நலன். அதனால் தாயகம் சென்று வருபவர்கள் சில இடங்களில் மௌனமாக இருப்பதையும், சமாளித்து போக முனைவதையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

Link to comment
Share on other sites

யாழ் இணையத்திலை இன்னமும் உலக அரசியல் தெரியாத  றெம்ப அப்பாவிகள்  இருக்கிறாங்கள். :lol: :lol:

 

உலக அரசியல், கவிஞர் ஐயாவின் அரசியல் என்பன தெரிந்திருந்தாலும் கவிஞர் ஐயா தனது கைதின் பின்னராவது மாறி தமிழ் மக்களுக்காக கதைக்க மாட்டாரா என பலர் எதிர்பார்த்திருந்தார்கள். (நிச்சயமாக நான் எதிர்பார்க்கவில்லை. அவர் மாறமாட்டார் எனவே நினைத்திருந்தேன்.)

தமிழ் மக்களுக்காக கதைக்க கூடிய ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அதை அவர் தவற விட்டு விட்டார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் ஐயா யாழ்ப்பாணத்தில் சொன்ன கருத்து..

 

 

ஐயாவின் இந்தப் பேச்சை முழுமையாகக் கேட்டேன். பல விடயங்களை சமகால யதார்த்தங்களோடு நின்று.. நியாயமாகவே பகிர்ந்து கொண்டிருப்பதாகத் தோன்றியது..! இருந்தாலும்.. இந்தியாவை மையப்படுத்தியே அவர் தமிழர்களின் உரிமையை தக்க வைக்க நினைக்கிறார்.. அதற்கு அப்பால் செல்ல பயப்படுகிறார்..!

Link to comment
Share on other sites

என்னுடைய பார்வையில் தமிழர்களும் முஸ்லீம்களும் இணைய வேண்டும் என்பது தமிழர்களின் நலனுக்கு ஆதரவான கருத்து.

முஸ்லீம்களை தூற்றி வருகின்ற கருத்துக்கள் தமிழர்களின் நலனுக்கு எதிரான கருத்துக்கள்.

"தமிழர்களுக்காக கதைப்பது" என்பதை எப்படிச் செய்ய வேண்டும் என்று யார் முடிவு செய்வது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமகால யதார்த்தச் சூழலை வைச்சுக் கொண்டு பார்க்கையில் சொல்லப்பட்ட விடயங்கள் சில நல்ல..நியாயமான நோக்கங்களை வெளிக்காட்டி இருந்தாலும்.... எதிர்காலம் பற்றிய இனங்காட்டல்கள் தெளிவாக இல்லை. மீண்டும் மீண்டும்.. இந்தியா என்ற எதிர்கால உலகிற்கு ஒவ்வாத ஒரு கூட்டமைப்பை (இந்தியாவுக்குள்ளேயே இன்று.. பல புடுங்குப்பாடுகள் உள்ளன.) மையப்படுத்தி பேசிக் கொண்டிருப்பதிலும் அர்த்தமில்லை..!

Link to comment
Share on other sites

என்னுடைய பார்வையில் தமிழர்களும் முஸ்லீம்களும் இணைய வேண்டும் என்பது தமிழர்களின் நலனுக்கு ஆதரவான கருத்து.

முஸ்லீம்களை தூற்றி வருகின்ற கருத்துக்கள் தமிழர்களின் நலனுக்கு எதிரான கருத்துக்கள்.

"தமிழர்களுக்காக கதைப்பது" என்பதை எப்படிச் செய்ய வேண்டும் என்று யார் முடிவு செய்வது?

 

தமிழர்களும் முஸ்லிம்களும் இணைய வேண்டும் என்பதற்கு குறுக்காக இலங்கை முஸ்லிம்கள் தான் உள்ளார்கள்.

இலங்கையிலுள்ள முஸ்லிம் தலைவர்கள் மட்டுமல்ல முஸ்லிம் பொதுமக்களிலும் பலர் (அனைவரும் அல்ல) தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறார்கள். அண்மையில் கமரூனுக்கு எதிராக முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் செய்ததை எதிர்த்து முகநூலில் சில இலங்கை முஸ்லிம்கள் கருத்து கூறியிருந்தார்கள். அடடா நல்லவர்களாக உள்ளார்களே என பார்த்து விட்டு அவர்கள் timeline க்கு போய் பார்த்தால் புலி எதிர்ப்பு, தமிழர் எதிர்ப்பு கருத்துகள் பல இருந்தது. ஆனாலும் அவர்கள் கமரூனுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை எதிர்த்து கருத்து கூறியிருந்தமைக்கு காரணம் சிங்களவர்களால் தமக்கு அநியாயம் நடக்கும் போது பேசாமல் மௌனமாக இருந்த முஸ்லிம் தலைவர்கள் இப்பொழுது மட்டும் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என கூறியிருந்தார்கள். (அரசாங்கத்துக்காக கதைக்கும் பலர் மத்தியில் தமது முஸ்லிம் மக்களை நினைத்து தன்னும் சிங்களவர்களுக்கு எதிராக கருத்து கூறியமைக்கு அவர்களை பாராட்ட தான் வேணும்.)

 

முஸ்லிம்கள் புலிகளுக்கும் தமிழர்களுக்கும் எதிராக தூற்றி கருத்து கூறினால் அது மட்டும் தமிழர்களின் நலன்களுக்கு நன்மை தரும் விடையமா என்ன? அவர்கள் செய்வதற்கு எதிராக உங்களை போன்றவர்கள் விமர்சனம் வைப்பதில்லை. தனியே தமிழர்களில் தான் பழி சுமத்துகிறீர்கள்.

 

இங்கு கவிஞர் ஐயா தமிழ் மக்களுக்காக எவ்வாறு கதைத்திருக்க வேண்டும் என்பது பற்றி பலர் கருத்து கூறி விட்டார்கள். அவர் அரசாங்கத்தை பற்றி நல்லறிக்கை கொடுப்பதை தவிர்த்து இலங்கை அரசாங்கத்தின் உண்மை தன்மையை கூறியிருக்க வேண்டும். இன்னும் பல மக்கள் அங்கு கைது செய்யப்பட்ட நிலையில் உள்ளார்கள். உலகம் மற்றும் ஊடகங்கள் தனது விடுவிப்புக்கு தலையிட்டது போல் அவர்கள் விடுவிப்புக்கும் தலையிட வேண்டும் என கோரியிருக்க முடியும். ஊடகங்களின் கவனத்தை பெறாத கைதுகள் பெரும்பாலும் கொலையில் முடிவடையும் சந்தர்ப்பமே உள்ளது இல்லாவிட்டாலும் சித்திரவதைக்குட்படுத்தப்படுவார்கள் என்பதையும் கூறியிருக்க முடியும். இனி அங்கு செல்வோரும் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்பதை தனது கைது நிரூபிக்கிறது என கூறியிருக்க முடியும். இவ்வளவையும் அவர் கூறாதது ஏன்? கூறாதது மட்டுமல்லாமல் அரசாங்கத்தை பற்றி நல்லறிக்கை கொடுத்திருக்கிறார். இவர் கைது செய்யப்பட்டார் என்றதும் அதை ஊடகங்கள், பல முக்கிய நபர்கள் அரசாங்கத்துக்கு எதிராக அதை பயன்படுத்தினார்கள். அப்படியானவர்கள் விடுதலையின் பின்னர் இவர் என்ன கூறுகிறார் என்பதை அறியவும் முயற்சிப்பார்கள்.

Link to comment
Share on other sites

ஜெயபாலன் யாரினதும் கைத்தடி அல்ல ,அவர் போக்கே அப்படிதான் .அது உண்மையா நடிப்பா என்று இன்றுவரை எனக்கு தெரியாது .

ஜெயபாலன் கனடா வந்திருந்த போது அடுத்தநாள் நடக்க இருக்கும் யாழ் இந்துவின் கலையரசி ஒத்திகைக்காக மண்டபத்தில் இருக்கும் போது ஒருவர் அவரை அங்கு கூட்டி வந்தார் .வழிய சென்று நான் அவருடன் கதைத்த போது என்னை எக்காலமும் தெரியாத மாதிரி நடந்துகொண்டார் (இப்படி பட்ட அனுபவங்கள் ஏராளம் இருக்கு ),ஆனால் அவரின் ஊரவர்களுடன் பழைய உறவுகள் எல்லாம் சொல்லி உறவாடினார் .இந்தியாவிலும் இப்படியான அனுபவங்கள் பல அவருடன் எனக்கு இருந்ததால் நான் அதை பெரிதாக எடுக்கவில்லை ,ஆனால் அவர் எதையும் செய்ய கூடியவர் தேவை என்றால் நடு வீதியில் படுத்திருந்து ஒப்பாரியும் வைப்பார்.

புளொட் நிக்கேரவேட்டிய வங்கி கொள்ளை அடித்துவந்த நேரம் மிக துணிச்சலாக கொஞ்ச காசுக்காக புத்தளம் (கட்டுடைப்பு ) என்ற மிக முக்கிய புவியியல் கடற்கரையை காட்டி கொடுத்துவிட்டார்கள் என்று கத்தித்தீர்த்தார்.பலர் அன்று ஜெயபாலனுக்கு எதுவும் நடக்கலாம் என்று நினைத்தார்கள் .அதுதான் ஜெயபாலன் .

அவரின் இப்படியான  நிலைப்பாடு தெரிந்துதான் அவர் எந்த முக்கிய பதவிகளிலும் இருத்தப்படவில்லை .

வெறும் பொய்யான தேசியவாதியோ அல்லது துரோகியோ அல்லது சோரம் போனவரோ அல்ல அவர் ஒரு கலகக்காரனாக தன்னை கட்டிக்கொள்ள விரும்பும் ஒருவர் .

கவிஞராக எழுத்தாளராக நடிகராக அவர் பலரால் எட்டமுடியாத  உயரத்தில் தான் இருக்கின்றார் .இந்த கலகங்களை எல்லாம் அந்த உயரம் மறைத்துதான் விடுகின்றது .

Link to comment
Share on other sites

ஆயிரம் ஆயிரம் கருத்துக்கள் ,முரண்பாடுகள் ,இருந்தாலும் நான் கருத்துக்களம் மூலம் பழகிய ,பேசிய உறவு  துன்பம் என்னும் கொடூரத்தை தாண்டி வெளியே வந்ததை இட்டு மகிழ்ச்சியடைகிறேன் ..............உங்களுக்கு சமாதனாம் உண்டாவதாக .இறைவனுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

நாடு கடந்த அரசோ அது சார்ந்தவர்களோ இல்லை புலத்து தேசீயக் கோஸ்டிகளோ தமிழ்த்தேசீயத்தை வழிநடத்தக் கூடிய நிலையில் இல்லை. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் அது சார்ந்தவர்களும் அப்படியே. இதற்கெல்லாம் பிரதான காரணம் இவர்கள் அனைவரும் மையவாதச் சகதிக்குள் புதைந்து கிடப்பவர்கள். எக்காலத்திலும் தமிழர்களுக்கு துரும்பளவு நன்மையும் இவர்களால் ஏற்படாது. கவிஞர் ஜெயபாலன் போன்றவர்கள் இஸ்லாமியத்தமிழர்களின் ஐக்கியப்பாட்டை வலியுறுத்துகின்ற அதே வேளை இந்தியாவின் நல்லுறவை வளர்ப்பதிலும் கவனமாக இருப்பவர். இஸ்லாமியத் தமிழர்களின் ஐக்கியப்பாடும் இந்திய ஆதரவும் இன்றி தமிழர்களுக்கு விமோசனம் என்ற கற்பனைக்கே இடமில்லை. (மையவாதிகள் நல்லூரை சுற்றி 10 ஏக்கர் நிலத்தை தமிழீழமாக தந்தால் போதும் என்பர்கள். அவர்களுக்கு இவை புரியாது) அந்தவகையில் கவிஞர் ஜெயபாலன் போன்றவர்களே தற்போதைய சூழலில் தமிழ்த்தேசியத்தை வழிநடத்த முன்னெடுக்க சரியான நபர்கள். சரியான முறையில் சிந்திக்க வல்லவர்கள். அவர்கள் பணி தொடரவேண்டும். பேரினவாதிகளிடம் இருந்தும் மையவாதிகளிடம் இருந்தும் தமிழர்களின் விடுதலைநோக்கிய பயணம் தொடர்வது காலத்தின் கட்டாயம்.

Link to comment
Share on other sites

சண்டமாருதன் அண்ணா,

இலங்கை முஸ்லிம் தலைவர்கள் மற்றும் இந்தியாவை நம்பி எந்த பிரயோசனமும் இல்லை. இந்தியா மற்றும் உலகத்துக்கு அழுத்தம் கொடுத்து சாதிக்க நினைப்பவர்களால் தான் பிரயோசனம் உண்டு. அந்த வகையில் தமிழக மக்களின் வாக்குகள் தமக்கு தேவை எனின் அவர்கள் விரும்புவதை செய்வது போல் நடிக்க இந்தியா முயலும். அந்த நடிப்பால் கிடைக்கும் நன்மையை தமிழர்கள் பயன்படுத்த வேண்டும். இங்கு தமிழக மக்கள் மற்றும் அவர்கள் போராட்டம் முக்கிய வலுவாக உள்ளது.

அதேபோல் தமிழர்கள் அதிகளவில் உள்ள நாடுகள் தொடர்பில் தமிழர்களின் வாக்குகள் தமக்கு தேவை எனின் அவர்கள் விரும்புவதை சிறிதேனும் செய்ய வேண்டும் எனும் நிலையில் புலம்பெயர் மக்களின் போராட்டங்கள், அழுத்தங்கள் செல்வாக்கு செலுத்துகிறது. (சிலர் எதிர்பார்ப்பில்லாமல் தொடர்ச்சியாக குரல்கொடுத்து வருவதுமுண்டு.)

அதேபோல் இன்றைய உலக அரசியல் மாறி வருவதும் எமக்கு சாதகம்.

 

புலம்பெயர் அமைப்புகள், தமிழர்கள் ஏனோ தானோ என்றிருந்தால் இந்த உலகம் எம்மை பற்றி நினைத்து கூட பார்க்காது. அவ்வாறு இருப்பின் மகிந்தவுக்கு தமிழ் மக்களை மேலும் அழிக்க இன்னும் வசதி.

சும்மா புலம்பெயர் அமைப்புகள் மேல் காழ்ப்புணர்வில் எழுதி விட்டு ஜெயபாலன் ஐயாவை உயர்த்தி வைக்காதீர்கள். இவ்வளவு காலமும் அவர் முயற்சித்து அதனால் கிடைத்த நன்மை என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள உறவு ஜெயபாலன் அவர்கள் மீண்டும் நோர்வேக்கு திரும்பிவந்தது மகிழ்ச்சி. இனிமேல் தேவையில்லாமல் சிங்களதேசத்துக்கு செல்லவேண்டாம்.

Link to comment
Share on other sites

வலி. வடக்கிற்குச் சென்ற முதலமைச்சரை திருப்பி அனுப்பியது இராணும் news
வடக்கு மாகாண முதலமைச்சரும் இந்துக்குருமார்களும் இன்று வலி. வடக்கிற்குச் சென்றவேளை இராணுவத்தினரால் தடுக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.

வலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் வீடழிப்புகளுடன்  அங்குள்ள இந்து ஆலயங்களும் இடித்துடைக்கப்படுவதாக முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இன்று முதலமைச்சர் தலைமையில் இந்துகுருமார்கள் பார்வையிடுவதற்காக சென்ற வேளை மாவிட்டபுரம் பகுதியில் உள்ள காவலரணில் இருந்த இராணுவத்தினர் அவர்களை மேலும் செல்லவிடாது தடுத்து நிறுத்தியதுடன் திருப்பியனுப்பியும் உள்ளனர்.

இது தொடர்பாக  இந்துக்குருமார்கள் தெரிவிக்கையில், இராணுவத்தினரின் இவ்வாறான செயற்பாடுகள் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும்.

இதனால் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கங்களை ஏற்படுத்துவதாக கூறி வருகின்றமை அரசின் ஏமாற்று நாடகம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை வலி.வடக்கில் உயர்பாதுகாப்பு வலையத்தில் உள்ள மக்களுக்கு சொந்தமான வீடுகள் , ஆலயங்கள். பொதுக்கட்டடங்கள்  அனைத்தும் அண்மைக்காலமாக இடித்தழிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=840942475429565747#sthash.0jNNIkys.AM3Lu9FN.dpuf

 

முதலமைசருக்கு பாட்டு எழுத தெரியாது. அல்லது கத்த தெரியாது. அப்படியாயின் பாது காப்பு வலையத்துக்குள் விட்டிருப்பார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயபாலன் கனடா வந்திருந்த போது அடுத்தநாள் நடக்க இருக்கும் யாழ் இந்துவின் கலையரசி ஒத்திகைக்காக மண்டபத்தில் இருக்கும் போது ஒருவர் அவரை அங்கு கூட்டி வந்தார் .வழிய சென்று நான் அவருடன் கதைத்த போது என்னை எக்காலமும் தெரியாத மாதிரி நடந்துகொண்டார்

 

அட கொடுமையே...

நோர்த் புளொக்கிலிருந்து... சவுத் புளொக் வரைக்கும்,

சல்மான் கானிலிருந்து... சல்மான் ருஷ்டி, என்று எல்லோரும் அறிந்த அர்ஜூனை தெரியாது என்று சொன்ன ஜெயபாலனை, மிக வன்மையாகக் கண்டிக்கின்றேன். :D

Link to comment
Share on other sites

முஸ்லிம் மக்களோடு இணைந்து எக்கால கட்டத்திலும் வாழவே முடியாது. இதனை வாழ்ந்து அனுபத்தே கூறுகின்றோம் எமது வாழ்விடங்களை அபகரிப்பதும், அப்பாவி மக்களை பொருளாதார நெருக்கடிக்குள் சிக்க வைத்து அவர்களது வளங்களை சுரண்டுவதும், கலைகலாச்சார பண்பாட்டு விழுமியங்களை திட்டமிட்டு சீர்குலைப்பதும், வலிந்த பாலியல் துஷ்பிரயோகங்களும் என் இனத்தின் மீது முஸ்லிம் சமுகத்தினாலேயே அரங்கேற்றப்படுகின்றது. சும்மா ஆய்வு எழுதுபவர்களும், கவி வடிப்பவர்களுக்கும் தங்களின் இருப்பு கருதி எதையும் எழுத முடியும். யதார்த்தம் என்ற ஒன்று இருக்கின்றது. நல்லிணக்கம் பேசுபவர்களும் ஆய்வு பத்தி எழுதுபவர்களும் என் மக்களோடு வாழ்ந்து எழுதுங்கள் அப்போது தெரியும் உண்மை நிலை. மக்களுக்கான வாழ்வாதார, விழிப்புனர்வு, மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட எனக்கு அந்த மக்களுடன் வாழ்ந்து அவர்களின் மேம்பாட்டுக்கு உழைத்த எனக்கு, திட்டமிட்ட சீரழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டவர்களை மிக லவமாக களைந்த எனக்கு தெரியும் யதார்த்தம் எது என்று. தயவு செய்து மறுபடியும் நல்லிணக்கம் பேசி எம் மக்களை படுகுழியில் தள்ளாதீர்கள்! வேண்டும் என்றால் எமக்கான வலுவான சுழல் உருவாகும் இடத்து இதனை பற்றி சிந்திக்கலாம். அதுவரையும் எதுவுமே சாத்தியப்படாது.

 

 

 

Link to comment
Share on other sites

Poet அய்யா போனா போகுது ..புலி வாழ்க புலி தான் எல்லாம் புலி தான் சரி என்று கூவிட்டு போங்க உங்கட rating  யாழில் எப்பிடி எகிறும் என்று பாருங்க

 

Link to comment
Share on other sites

நடு வீதியில் படுதித்திருப்பது முன்பு சரியாக இருந்திருக்கலாம். தற்போது நடை பெறுவது அரக்கர் ஆட்சி. ஆயுத முனைக்கு முன்பு எதுவுமே செல்லா காசுதான். ஜெயபாலன் சினிமா நெறையவே பார்க்கிறார் சிங்கம் சூர்யா நெனைப்பில் நெஞ்சை நிமிர்த்தி சுடு பார்ப்பம் எண்டு கனவில் கத்‌தி இருப்பாரோ......காணாமல் போன உறவுகளையே கொச்சைப்படுத்திவிட்டார்....

Link to comment
Share on other sites

யாழ்க்கள நண்பர்களே, நான் பொறுப்பில்லாமல்பேசி என்னோடு தொடர்பு கொண்டவர்களையும் எனக்காக அலுவல் பார்த்தவர்களையும் ஆபத்துக்குள் மாட்டி விடமுடியாது. எனது இரண்டாவது அறிக்கை எழுதுமுன்னம் நான் என் தோழ தோழியர்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்த வேண்டும் என்பதை புரிந்துகொள்ளுங்கள். எங்கள் பண்ணைவீட்டை ஒரு அமைச்சர் அபகரிக்க திட்டமிட்டுள்ளார். அவரது சேட்டைகள் இங்கு ஒரு கிழைக்கதையாக உள்ளது. என் தோழ தோழியர் நலன்கருதி நான் ஒவ்வொரு வார்த்தையையும் பொறுப்புடன் பேசுவது முக்கியமாக உள்ளது.

நெடுக்காலபோவான் போன்றவர்கள் என்னை புரிந்துகொள்ளுகிற காலம் வரும்.  . 

Link to comment
Share on other sites

பொறுப்போடுதான் பேசுகின்றீர்கள்..... இலங்கை இராணுவத்தை காப்பாற்றும் பொறுப்போடு ஈழ தமிழர்களிற்கு எக்காலமும் விடிவே கிடைக்க கூடாது என்ற அதி உன்னத பொறுப்போடு.....

Link to comment
Share on other sites

யாழ்க்கள நண்பர்களே, நான் பொறுப்பில்லாமல்பேசி என்னோடு தொடர்பு கொண்டவர்களையும் எனக்காக அலுவல் பார்த்தவர்களையும் ஆபத்துக்குள் மாட்டி விடமுடியாது. எனது இரண்டாவது அறிக்கை எழுதுமுன்னம் நான் என் தோழ தோழியர்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்த வேண்டும் என்பதை புரிந்துகொள்ளுங்கள். எங்கள் பண்ணைவீட்டை ஒரு அமைச்சர் அபகரிக்க திட்டமிட்டுள்ளார். அவரது சேட்டைகள் இங்கு ஒரு கிழைக்கதையாக உள்ளது. என் தோழ தோழியர் நலன்கருதி நான் ஒவ்வொரு வார்த்தையையும் பொறுப்புடன் பேசுவது முக்கியமாக உள்ளது.

நெடுக்காலபோவான் போன்றவர்கள் என்னை புரிந்துகொள்ளுகிற காலம் வரும்.  .

வணக்கம்... கண்டதில் மகிழ்ச்சி.....!!!

உங்களின் உரையில் இருந்து ஒண்று மட்டும் எனக்கு புரிகிறது.... நீங்கள் மீண்டும் இலங்கை போக போகிறீர்கள் என்பதுதான் அது...

அப்போது நீங்கள் மீண்டும் கைது செய்யபட மாட்டீர்கள்... செய்யப்படாமல் இருக்க ஆவன செய்து கொண்டு இருப்பீர்கள்... !!!

உங்களுக்கு தமிழ் வெளிநாட்டு ஊடகங்கள் பெருமளவில் ஆதரவை தந்தன... அது ஜெயபாலன் எனும் தனிமனிதனுக்காக அல்ல... இலங்கை அரசின் அடக்கு முறையில் சிக்கிய ஒருவருக்கு... இதை நீங்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளும் காலம் வரும்...

அந்த அடக்கு முறையை மழுப்பும் போக்கானது உங்களுக்கான ஆதரவை மீளாய்வு செய்யும் நிலைக்கே எல்லாரையும் கொண்டு செல்லும் என்பதை புரிந்து கொள்ள உங்களால் முடியும் எண்று நம்புகிறேன்...

அதோடு தயவு செய்து புலிகளின் இராச தந்திரங்கள் போதாது பற்றி இங்கு இனி வகுப்பெடுக்காதீர்கள்... அது உங்களிடன் அறவே இல்லை ...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.